தம்பி நடிகர் படத்தில் ஆட்டம் போட மறுத்த தளபதி நடிகர்

சென்னை: தனது தம்பி நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட தளபதி நடிகர் மறுத்துவிட்டாராம்.

தளபதி நடிகரை போன்று அவரது சித்தி மகனும் ஹீரோவானார். ஆனால் கிரிக்கெட்டில் ஜொலிக்கும் அவரால் திரை உலகில் ஜொலிக்க முடியவில்லை. இருப்பினும் வரும் வாய்ப்புகளில் நல்லதாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தம்பி நடிகருக்காக ஆட மறுத்த தளபதி நடிகர்

இந்நிலையில் தளபதியின் தம்பி நடிகர் புதிதாக ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த படத்தை தயாரிப்பவர்கள் அதை விளம்பரப்படுத்த ஒரு பாட்டுக்கு ஆடுமாறு தளபதி நடிகரை அணுகி கேட்டார்களாம். தம்பி படமாச்சே ஆடுவார் என்று நினைத்து கேட்டவர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சமாம்.

காரணம் தம்பியாக இருந்தும் அவர் படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட தளபதி நடிகர் மறுத்துவிட்டாராம். இதனால் தம்பி நடிகர் மனம் நொந்து போயுள்ளார். இதை பார்த்த அவரின் நண்பர்களான 4 ஹீரோக்கள் நண்பேன்டா நாங்கள் இருக்கிறோம், கலங்காதே என்று கூறி ஒரு பாடலுக்கு ஆடினார்களாம்.

என்ன சொந்தமாக இருந்தாலும் என் நண்பர்கள் போல வருமா என்று தம்பி நடிகர் நெகிழ்கிறாராம்.

 

சீரியல் இயக்குநர் பாலாஜி தற்கொலை... உறவுகள் தொடரை இயக்கியவர்

உறவுகள் தொடரின் இயக்குநரும், அரசி தொடரின் சில பகுதிகளை இயக்கியவருமான பாலாஜி யாதவ் தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பாலாஜி இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

பாலாஜி யாதவ் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

 

அப்பா பேரு கஸ்தூரி ராசா.. மகன் தனுஷ் ஒரு "டீக்கடை ராசா"!

சென்னை: வேலையில்லாப் பட்டதாரி படத்தைத் தொடர்ந்து வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு ‘டீக்கடை ராசா' எனப் பெயர் வைக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

அனேகன், ஷமிதாப் என இந்தாண்டுத் துவக்கமே தனுஷிற்கு வெற்றி முகமாகத் தான் இருந்தது. அதனைத் தொடர்ந்து மிகக் குறுகிய காலத்தில் மாரி படப்பிடிப்பும் முடிந்து விட்டது.

அப்பா பேரு கஸ்தூரி ராசா.. மகன் தனுஷ் ஒரு

தற்போது தனுஷ் வேல்ராஜ் இயக்கத்தில் படமொன்றில் நடித்து வருகிறார். ஏற்கனவே தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி வெற்றிப் படத்தைத் தந்தவர் வேல்ராஜ் என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். தனுஷின் வுண்டார்பார் தயாரிக்கிறது.

இந்தப் படத்திற்கு டீக்கடை ராஜா எனப் பெயர் வைக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் பாடலின் ஒரு வரியில், ‘டீக்கடை ராஜா நாங்க' என வரும். அதில் இருந்தே இந்தப் படத்தலைப்பு எடுக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஒருவேளை இந்தத் தலைப்பு படத்திற்கு வைக்கப் பட்டால், நிச்சயம் 30 சதவீத வரிச்சலுகைக் கிடைக்காது. ஏனெனில் தலைப்பில் வரும் டீ ஆங்கில வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.

 

விழுந்து, விழுந்து சிரிக்கும் 'வின்னர்' திரைப்படத்தை எடுத்த தயாரிப்பாளரின் கதி தெரியுமா?

சென்னை: 'வின்னர்' திரைப்படத்து காட்சிகளை மக்கள் விழுந்து, விழுந்து ரசிக்கும் நிலையில், அதன் தயாரிப்பாளர் ராமச்சந்திரனோ, பணத்தை இழந்துவிட்டு, திரைப்படங்களில் சிறு, குறு வேடங்களில் நடித்து வருகிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..

விழுந்து, விழுந்து சிரிக்கும் 'வின்னர்' திரைப்படத்தை எடுத்த தயாரிப்பாளரின் கதி தெரியுமா?

வைகை புயல் வடிவேலு நடித்த திரைப்படங்களில் முக்கியமான 'வின்னர்'. சுந்தர் சி இயக்கிய, இப்படத்தில் பிரசாந்த், கிரண், நம்பியார், வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் வடிவேலு ஏற்றிருந்த கைப்புள்ள கதாப்பாத்திரம், இப்போதும் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைப்பது. ஆனால், இந்த படத்தின் தயாரிப்பாளர் ராமச்சந்திரன், பணத்தையெல்லாம் இழந்துவிட்டு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். அப்படியானால், வின்னர் தோல்வி படமா என்ற கேள்வி எழும். ஆனால், பெயருக்கு ஏற்பவே, வின்னர் வெற்றி படம்தான் என்பதுதான் இதில் வியப்பு.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவரான ராமச்சந்திரன் கூறுகையில், "சொத்து, நிலங்களை விற்று படம் தயாரிக்கதான் சென்னை வந்தேன். ஆனால், 2 கோடியில் முடிய வேண்டிய படம் ரூ.4 கோடிக்கு எகிறிவிட்டது. ஆனால், அந்த படத்துக்கு ரூ.2 கோடிதான் மதிப்பு என்று வினியோகஸ்தர்கள் கூறிவிட்டனர். எனவே நஷ்டமாகிவிட்டது.

வின்னர் பட காட்சிகளை டிவிகளில் போட்டா ரசிகர்கள் சிரிக்கிறார்கள். எங்கள் வீட்டில் டிவியை ஆப் செய்துவிடுகிறோம். நஷ்டத்துக்கு பிறகு, சிறு, குறு வேடங்களில் நடித்து வருகிறேன். இதுவரை 70 படங்களி் நடித்துவிட்டேன்" என்று கூறும் ராமச்சந்திரன், மீண்டும் படம் தயாரிக்க வரப்போவதாகவும் நம்பிக்கையோடு கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘கள்ளப்படம்' படத்தில் ஒருகாலத்தில் சினிமா தயாரிப்பாளராக இருந்து, இப்போது தெருவில் திரிந்து கொண்டிருப்பவரான கேரக்டரிலும், இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நண்பேன்டா - விமர்சனம்

Rating:
2.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம், ஷெரீன், பூஜா, ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், மனோபாலா, ஷாயாஜி ஷிண்டே

ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியம்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின்

இயக்கம்: ஏ ஜெகதீஷ்

'என் படம் ஒரு கல் ஒரு கண்ணாடியைத்தான் ரீமேக் செய்துள்ளேன்', என்று நண்பேன்டா படம் பற்றி உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் கூறினார். அது தன்னடக்கமெல்லாம் இல்லை, உண்மைதான் என்பது படம் பார்த்தபோது புரிந்தது!

இந்தப் படத்துக்கு கதையெல்லாம் எதுக்கு... காமெடியா சீன் பண்ணலாம். அதை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம் என நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

நண்பேன்டா - விமர்சனம்

எந்த வேலைக்கும் போகமல், மாதாமாதம் ஒன்றாம் தேதியானதும் திருச்சிக்குப் போய் தன் நண்பன் சந்தானத்தின் 'சம்பளத்தை' ஆட்டயப் போடுபவர் உதயநிதி.

அப்படி ஒரு முதல் தேதியன்று, 'ஒரு பெண்ணை ஒரு நாளில் மூன்று முறை வெவ்வேறு இடங்களில் பார்த்தால், அவள் உனக்குத்தான்' என அம்மா சொன்ன ஜோசியத்தை நம்பி திருச்சிக்குக் கிளம்புகிறார் உதயநிதி. நயன்தாராவைப் பார்க்கிறார். காதல் கொள்கிறார். அன்றே வெவ்வேறு இடங்களில் மூன்று முறை நயன்தாராவைப் பார்த்துவிட, திருச்சியிலேயே டேரா போட்டு, நயன் மனசில் குடியேற முயல்கிறார். அந்த முயற்சி கிட்டத்தட்ட வெற்றி பெறும் நேரத்தில், நயன்தாரா மகா சீரியஸாகச் சொல்லும் ப்ளாஷ்பேக் ஒன்றைக் கேட்டு பகபகவென சிரித்து வைக்க, கோபத்தில் காதலுக்கே குட்பை சொல்கிறார் நயன்தாரா.

நண்பேன்டா - விமர்சனம்

அந்த நேரம் பார்த்து, வில்லன் ஸ்கார்ப்பியோ சங்கர் எனும் ராஜேந்திரன், ஒரு லோன் விவகாரத்தில் நயன்தாராவைக் கொல்லப் பார்க்கிறார். ஒரு எதேச்சையான சேஸிங்கில் ராஜேந்திரனே கொல்லப்பட, பழி சந்தானம், உதயநிதி மீது விழுகிறது. கொலைப் பழியிலிருந்து எப்படி தப்புகிறார்கள், உதயநிதி - நயன்தாரா எப்படி இணைகிறார்கள் என்பதெல்லாம் சொல்லாமலே உங்களால் யூகிக்க முடியும் க்ளைமாக்ஸ்!

நண்பேன்டா - விமர்சனம்

படத்தின் 50 சதவீத காட்சிகள், ஓகே ஓகே பாணிதான். அதில் சரவணன் - பார்த்தா என்றால், இதில் சத்யா - சிவக்கொழுந்து.. வேலையில்லாத வெட்டியில்லாத உதயநிதி, நண்பன் சந்தானத்தின் செலவில் ஜாலி பண்ணுவது, காதலியை தொடர்ந்து வெறுப்பேற்றுவது, நண்பனை காதலியுடன் சேர்த்து வைத்துவிட்டு, தன் காதலியுடன் சேர்த்து வைக்குமாறு கேட்பது... என ஒரு கல் ஒரு கண்ணாடி நண்பேன்டாவிலும் ரிபீட்டாகிறது.

நண்பேன்டா - விமர்சனம்

உதயநிதிக்கு கடந்த இரு படங்களிலும் கண்ணாமூச்சு காட்டிய நடிப்பும் சரி, நடனமும் சரி.. இந்தப் படத்தில் பிடிபட்டுவிட்டது. முகம், உதடுகளை மட்டும் கொஞ்சம் ப்ரெஷ்ஷா வைத்துக் கொண்டால் பார்க்க நன்றாக இருக்கும். கடைசி பாடலில் நயன்தாராவுடன் செம ஆட்டம். ரசிக்க வைக்கும் அளவுக்கு ஆடியிருக்கிறார்.

சந்தானத்துடன் அவரது காமெடி ரசிக்க வைத்தாலும், அது சரவணன் - பார்த்தா அளவுக்கு இல்லை.

நண்பேன்டா - விமர்சனம்

சந்தானத்துக்கு கிட்டத்தட்ட ஓகேஓகே காஸ்ட்யூம், ஒப்பனை. அவருக்கு ஜோடி ஷெரீன். கொஞ்ச நாளைக்கு இந்த ஜோடி 'ஓடும்' என்றுதான் தெரிகிறது.

நண்பேன்டா - விமர்சனம்

நயன்தாரா படம் முழுக்க நிறைந்து நிற்கிறார். பார்ப்பவர் மனங்களிலும்தான். ஆனால் அவருக்கான ப்ளாஷ்பேக் என ஒன்றைச் சொல்கிறார்களே.. அதற்கு இன்னும் மெனக்கெட்டிருக்கலாம் இயக்குநர். இதைவிட சந்தானத்தின் காதல் ப்ளாஷ்பேக் கொஞ்சம் பரவாயில்லை

எப்போதும் நயன்தாராவின் கூடவே வரும் அந்தப் பெண்ணுக்கு நடிக்க பெரிய வாய்ப்பில்லை. ஆனால் ரசிக்கும்படி இருக்கிறார்!

ஷாயாஜி ஷிண்டே, சித்ரா லட்சுமணன், ராஜேந்திரன், மனோபாலா என பலரும் ஏற்ற வேடத்தை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

நண்பேன்டா - விமர்சனம்

பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜின் இசை இரண்டுமே படத்தைக் காப்பாற்ற உதவுகின்றன. அதே நேரம் முணுக்கென்றால் ஒரு டூயட்டுக்கு நயனும் உதய்யும் வெளிநாடு கிளம்பிப் போய்விடுவது, அலுப்பாக இருக்கிறது.

யாருக்கும் அத்தனை சுலபத்தில் கிடைக்காத மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் கிடைத்திருக்கிறது அறிமுக இயக்குநர் ஜெகதீஷுக்கு. அதை வைத்து இன்னும் சுவாரஸ்யமான ஒரு காமெடிப் படத்தைத் தந்திருக்கலாம். அந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டார் இயக்குநர்!

 

ஓ காதல் கண்மணி இசை... தனக்குப் பிடித்த 'இருட்டில்' வெளியிடும் மணிரத்னம்!

மணிரத்னம் இயக்கி வரும் ஒ காதல் கண்மணி படத்தின் இசையை இன்று நள்ளிரவு வெளியிடுகிறார்கள்.

இந்தப் படத்தில் துல்கர் சல்மான்-நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மணிரத்னம் தன்னுடைய சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார்.

ஓ காதல் கண்மணி இசை... தனக்குப் பிடித்த 'இருட்டில்' வெளியிடும் மணிரத்னம்!

இப்படத்தின் புகைப்படங்கள், டீசர், மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி விட்டன. ஆடியோவை ஏப்ரல் 4-ந் தேதி வெளியிடப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று நடு இரவு 12 மணிக்கு இணையத்தில் இப்படத்தின் பாடலை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே என்னை அறிந்தால் படத்தின் இசை - ட்ரைலரும் கூட இப்படித்தான் வெளியாகின.

ஓ காதல் கண்மணி படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சிம்ரன் அன்ட் சன்ஸ்... - இயக்குநர் - தயாரிப்பாளராக அவதாரமெடுத்த சிம்ரன்

பத்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் ரசிகர்களையெல்லாம் தன் இடுப்பாட்டத்தில் கிறங்கடித்த சிம்ரன் இப்போது இயக்குநர் - தயாரிப்பாளர் அவதாரமெடுத்துள்ளார்.

அதற்காக நடிப்பதை நிறுத்தவில்லை அவர். இப்போதும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடித்துக் கொண்டுதான் உள்ளார் அவர்.

சிம்ரன் அன்ட் சன்ஸ்... - இயக்குநர் - தயாரிப்பாளராக அவதாரமெடுத்த சிம்ரன்

நடிப்பு ஒரு பக்கம்.. மறுபக்கம் திரைப்பட தயாரிப்பு மற்றும் இயக்கம் என முடிவெடுத்துள்ள அவர், ‘சிம்ரன் அண்ட் சன்ஸ்' என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதன் லோகோவையும் தற்போது வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சிம்ரன் கூறும்போது, "எனது சினிமா ஆர்வம் என் வாழ்வில் பெரும் முக்கிய இடத்தை கொண்டது. என் கணவர் தீபக் உடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்க அதுவே காரணமாக இருந்தது.

சிம்ரன் அன்ட் சன்ஸ்... - இயக்குநர் - தயாரிப்பாளராக அவதாரமெடுத்த சிம்ரன்

நான் நடிகையாக இருந்த அனுபவமும், எனது சின்னத்திரை நிகழ்ச்சிகளை தயாரித்த அனுபவமும் இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் எண்ணத்திற்கு உறு துணையாய் இருந்தது. எனது இந்த முயற்சிக்கு பெரிதும் உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

சிம்ரன் அன்ட் சன்ஸ்... - இயக்குநர் - தயாரிப்பாளராக அவதாரமெடுத்த சிம்ரன்

இந்த வருடம் இரண்டு படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இரு வித்தியாசமான வித்தியாசமான கதைக் களத்தை உடையதாய் இருக்கும் அந்தப் படங்கள். எனது முயற்சிகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவுண்டு. தயாரிப்பாளர், இயக்குனர் என்ற எனது இந்த முயற்சியையும் அனைவரும் ஆதரிக்கும் வேண்டும்," என்றார்.

 

வாடி ராசாத்தி... புதுசா... இளசா... ரவுசாப் போவோம்... !

சென்னை: திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை ஜோதிகா தற்போது 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் திரும்பி வந்துள்ளார்.

ஜோதிகாவைப் போலவே திருமணத்தால் நீண்ட காலத்திற்குப் பிறகு மலையாளப் பட உலகிற்கு திரும்பி வந்த மஞ்சு வாரியாருக்கு நல்ல ஓப்பனிங் கொடுத்தது ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ' படம். அப்படத்தின் தமிழ் ரீமேக் தான் 36 வயதினிலே.

வாடி ராசாத்தி... புதுசா... இளசா... ரவுசாப் போவோம்... !

இப்படத்தை ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யாவே தயாரிக்கிறார். இப்படத்தில் ஜோதிகாவிற்கு ஜோடியாக ரகுமான் நடிக்கிறார்.

மலையாளத்தில் இந்தப் படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸே தமிழிலும் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பெண்களை மையப்படுத்தி படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது அப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் வரிகளைக் கேட்கும் போதே, படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் புரட்சிகரமாக இருக்கப் போகிறது என்பது சொல்லாமலேயே புரிகிறது.

இதோ அப்பாடலின் வரிகள் உங்களுக்காக....

வாடி ராசாத்தி... புதுசா... இளசா... ரவுசாப் போவோம்

வாடி வாலாட்டி... வரியா... புலியா... தனியா திரிவோம்...

ஊரே யாருனு கேட்டா... உம்பேர மைக்கு செட்டு போட்டு உறுமிக் காட்டு...

காட்டு... காட்டு... காட்டு... காட்டு...

தங்கமுனு ஊரு உன்ன மேல தூக்கி வைக்கும்...

திண்டுக்கல்லு பூட்டு ரெண்டு மாட்டி பூட்டி வைக்கும்...

விட்டு வாடி ராசாத்தி... உன்ன நீயே காப்பாத்தி...

ராசாத்தி.. ராசாத்தி... ராசாத்தி...

நீ வாடி ராசாத்தி... அட வாடி ராசாத்தி...

பொட்டப்புள்ள போக உலகம் பாதை போட்டு வைக்கும்...

முட்டுச்சந்து பாத்து அந்த ரோடு போயி நிக்கும்...

படங்காட்டும் ஏமாத்தி... கலங்காத ராசாத்தி...

ராசாத்தி... ராசாத்தி... ராசாத்தி...

நீ வாடி ராசாத்தி... அட வாடி ராசாத்தி...

இவ்வாறு அந்தப் பாடல் முடிகிறது.

உண்மையிலேயே ராசாத்தியாகத் தான் இப்பாடலில் வலம் வருகிறார் ஜோதிகா.

இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் 6ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

எல்லாருக்குமே ஆசை, இந்தப் படத்தை ரீமேக் செய்ய... யார் பர்ஃபெக்டா செய்வாங்க?

ஆண்பாவம்... 26 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சக்கைப் போடு போட்ட படம். நினைத்து நினைத்துச் சிரிக்க வைத்த காட்சிகள், காதுகளில் தேன் பாய்ச்சிய பாடல்கள், மிக அருமையான ஒளிப்பதிவு... இப்படி அனைத்து வகையில் நல்ல படம் என்றால் அது ஆண்பாவம்தான்.

தன் குருநாதர் கே பாக்யராஜ் எடுத்த தூறல் நின்னு போச்சு பாணியில், ஆனால் முழுக்க முழுக்க காமெடியாக இந்தப் படத்தை எடுத்திருப்பார் பாண்டியராஜன்.

எல்லாருக்குமே ஆசை, இந்தப் படத்தை ரீமேக் செய்ய... யார் பர்ஃபெக்டா செய்வாங்க?

எத்தனையோ பழைய தமிழ்ப் படங்களை ரீமேக் செய்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தை மட்டும் இதுவரை யாரும் ரீமேக் செய்யவில்லை.

ஏன்.. படத்தை உருவாக்கிய பாண்டியராஜனுக்கே, தன் மகன் ப்ருத்வியை வைத்து இந்தப் படத்தை ரீமேக் பண்ணும் ஆசையிருக்கிறது.

ஆனால் விகே ராமசாமி மாதிரி ஒரு நடிகர், கொல்லங்குடி கருப்பாயி மாதிரி அச்சு அசலான பாட்டி வேண்டுமே என்று நினைப்பு வர, அமைதியாகிவிட்டார் பாண்டியராஜன்.

இப்போது இந்தப் படத்தை ரீமேக் செய்யும் ஆசை வந்திருக்கிறது ஒரு நடிகருக்கு. அவர் உதயநிதி ஸ்டாலின்.

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த ஆண்பாவம் ரீமேக் ஆசையைச் சொன்னார்.

"இப்போ வெளியாகிற நண்பேன்டா படமே கிட்டத்தட்ட ஒரு கல் ஒரு கண்ணாடியின் ரீமேக்தான். எனக்கு 'ஆண் பாவம்' படத்தை ரீமேக் செய்ய ஆசை. படம் முழுக்க காமெடி இருக்கும். பாண்டியராஜன் சார், பாண்டியன் சார், வி.கே ராமசாமி சார்-னி அத்தனை கேரக்டர்களும் அருமையா இருக்கும். பாண்டியராஜன் கேரக்டர்ல நடிக்க ஆசைதான்... பார்க்கலாம்," என்றார்.

ஒருவேளை அப்படி ரீமேக் செய்தால், எந்தக் கேரக்டருக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள், யார் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என்று உங்களால் பொருத்திப் பார்க்க முடிகிறதா?

 

புருஷனுக்கு வெள்ளித் திரையில் பஞ்ச் வைத்த முன்னாள் மனைவி...!

திருவனந்தபுரம்: முன்னொரு காலத்தில் மல்லுவுட்டில் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை இவர். தன் பட நாயகனையே கணவராக மாற்றிக் கொண்ட இவர் சினிமாவிலிருந்து விலகி குடும்பத்தலைவியானார்.

பத்தாண்டுகளுக்கும் மேலான குடும்ப வாழ்க்கையில் திடீர் விரிசல் விழ, கணவரை சட்டரீதியாகப் பிரிந்து தற்போது மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் செய்துள்ளார்.

புருஷனுக்கு வெள்ளித் திரையில் பஞ்ச் வைத்த முன்னாள் மனைவி...!

இந்நிலையில், கணவர் மீதான தனது கோபத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் தனது புதிய படத்தில் கணவரைத் தாக்கி பல வசனங்களை நடிகை பேசியுள்ளாராம்.

பொதுவாக தனக்கு போட்டியான நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களைத் தாக்கி தான் பெரும்பாலான பஞ்ச்கள் படங்களில் இடம் பெறுவது வழக்கம். ஆனால், அவற்றிலிருந்து வேறுபட்டு தனது முன்னாள் கணவருக்கு பஞ்ச் வசனங்கள் மூலம் தாக்கி பேசியுள்ளார் இந்த நடிகை.

தற்போது நடிகையின் இந்த வசனங்கள் தான் அங்கு பட்டிதொட்டி எங்கும் பரபரத்துக் கிடக்கிறதாம். மனைவிக்குப் பதிலடி தரும் விதமாக கணவரும் தனது அடுத்த படத்தில் தாக்குதல் வசனங்களை வைக்க தயார் ஆகி விட்டாராம்.

இவர்களது செயலைப் பார்த்து குடும்ப சண்டை முதலில் கோர்ட்டுக்கு போனது, இப்போது திரைக்கும் வந்துவிட்டதா என்று சிலர் நக்கலடிக்கின்றனர்.

 

'எலி' வடிவேலுவுடன் நான்... ஏன்?.. சதா விளக்கம்

சென்னை: நடிகர் வடிவேலு ஜோடியாக எலி படத்தில் நடிப்பதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்துள்ளார் நடிகை சதா.

அஜீத், விக்ரம், ஜெயம் ரவி, மாதவன் என தமிழில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சதா. தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாததால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சதாவைப் பார்க்க முடியவில்லை.

'எலி' வடிவேலுவுடன் நான்... ஏன்?.. சதா விளக்கம்

இந்நிலையில், தற்போது வடிவேலு ஜோடியாக எலி படத்தில் நடித்து வருகிறார் சதா. தெனாலிராமன் படத்தை யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார்.

வடிவேலு ஜோடியாக நடிப்பது குறித்து சதா கூறுகையில், ‘படத்தின் கதையும், புதுவிதமான எனது கதாபாத்திரமும் கவர்ந்ததால் இதில் நடிக்க சம்மதித்தேன்‘ எனத் தெரிவித்துள்ளார்.

1960களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அடுத்துள்ள பின்னி மில் வளாகத்தில் நடக்கிறது. இதற்காக ஜொலிக்கும் வீடு, பழமையான வீடு, வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்பட்ட அரங்குகளை தோட்டா தரணி அமைத்திருக்கிறார். 15 நாட்களுக்கும் மேலாக மும்பை நடன கலைஞர்கள், நடன இயக்குனர் தாராவின் நடன அமைப்பில் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

ஏப்ரலில் படப்பிடிப்பு முடிந்து மே மாதத்தில் படம் திரைக்கு வர உள்ளது.

 

உருக்கமான உண்மைச் சம்பவப் பின்னணியில் வரும் நெருக்கம்!

மிக நெருக்கமான அன்போடு அமைதியாக வாழ்ந்து வரும் தம்பதிகள் வாழ்க்கையில், ஒரு சமயத்தில் அந்த நெருக்கமே எதிரியாக மாறுகிறது. அது என்பதை ஒரு உண்மைச் சம்பவத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்டுள்ள படம்தான் நெருக்கம்.

கதாநாயகனாக அஸ்வினி கார்த்திக், கதாநாயகிகளாக விதர்ஷா, சனா நடிக்க, சசி இயக்கியிருக்கிறார். படத்தின் கடைசி காட்சி வரை ஒருவித த்ரில் இருப்பதுடன்

உருக்கமான உண்மைச் சம்பவப் பின்னணியில் வரும் நெருக்கம்!

காதலுடன் கூடிய நகைச்சுவைக் காட்சிகளும் இருக்கின்றன. ஒரு நல்ல பொழுது போக்கு நிறைந்த படமாகவும் வந்திருக்கிறது, என்கிறார் சசி.

குற்றங்கள் எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் அதை எதிர்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் வேண்டும் என்பதை உணர்த்தும் படமாகவும் இந்தம் படம் இருக்கும் என்கிறார் அவர்.

உருக்கமான உண்மைச் சம்பவப் பின்னணியில் வரும் நெருக்கம்!

முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி இருக்கும் நெருக்கம் படம் தமிழக கேரள எல்லைப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.

 

சன்னி இருக்கும் இடத்தில் "சன்"னுக்கு என்ன வேலை?!

சீசனுக்கேற்றார் போல படம் தயாரி்ப்பில் நம்மவர்கள், அதாவது பாலிவுட்காரர்கள் ரொம்ப விவராமானவர்கள்தான்.

தற்போதைய கடும் கோடைகாலத்துக்கேற்ற ஒரு கவர்ச்சிகரமான படத்தை எடுத்து களத்தில் இறக்கியுள்ளனர்.

கோடை காலத்தை சமாளிக்க சரியான நாயகி சன்னி லியோன்தான்.. எனவே அந்த அடிப்படையில் இப்படத்தில் அவர்தான் நடித்துள்ளார்.

சன்னி இருக்கும் இடத்தில்   

ராம்கபூர், எவ்லின் சர்மா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் சன்னியும் இருக்கிறார்.

சம்மருக்கேற்ற ஜில் ஜில் படமாக இது வெளியாகிறது.

இதில் இடம் பெறும் சன்னி லியோன் படங்களைப் பார்த்தால் சமமருக்கே வியர்த்து போய் விடும்.

பாடல் காட்சியில் அவர் காட்டியுள்ள கவர்ச்சி சன்லைட்டையே கூச வைக்கும்..!

சும்மா சொல்லக் கூடாது... சன்னி இருக்கும் இடத்தில் சன்னுக்கு வேலை இல்லைதான்!


 

அடுத்த தியேட்டர் மூடல்... குடியிருப்பாக மாறுகிறது திருவான்மியூர் ஜெயந்தி!

அடுக்குமாடி குடியிருப்பாக மாறும் திரையரங்குகளின் பட்டியலில் திருவான்மியூரில் உள்ள ஜெயந்தி திரையரங்கமும் இபபோது சேர்ந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் சென்னையில் உள்ள பல திரையரங்குகள் அடுக்குமாடி குடியிருப்பாகவும், வணிக வளாகங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

அடுத்த தியேட்டர் மூடல்... குடியிருப்பாக மாறுகிறது திருவான்மியூர் ஜெயந்தி!

ஜெமினி பாலம் அருகில் இருந்த சன், அண்ணா சாலையில் இருந்த எல்பின்ஸ்டோன், வெலிங்டன், அலங்கார், ஆனந்த், சபையர் வளாகம், பாரகன், ப்ளாஸா, கெயிட்டி, சித்ரா என ஏகப்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன.

அதேபோல வட சென்னையின் பிரபல அரங்குகள் புவனேஸ்வரி, பாண்டியன், கிரவுன், ராக்ஸி, வாணி, வசந்தி போன்ற அரங்குகளும் மூடப்பட்டுவிட்டன.

திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதுதான் இதற்கு முக்கிய காரணம். மேலும் ஒப்பீட்டளவில் திரையரங்கு மூலம் வரும் வருமானத்தை விட, திருமண மண்டபங்கள் அல்லது குடியிருப்புகள் கட்டி விற்பதன் மூலம் வரும் வருவாய் பல மடங்கு அதிகம்.

சமீபத்தில்தான் பிரபலமான சாந்தி தியேட்டர் வளாகம் மூடப்பட்டது. விரைவில் அங்கு நான்கு திரைகளுடன் கூடிய மல்டிப்ளெக்ஸ் வருகிறது.

அடுத்து திருவான்மியூரில் எல்.பி. சாலையில் உள்ள ஜெயந்தி திரையரங்கம் மூடப்படுகிறது. அந்த அரங்கம் உள்ள 14 சென்ட் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது ஒலிம்பியா நிறுவனம்.

 

கிருஷ்ணாவை கிரகணம் பிடிச்சா என்ன ஆகும்? வருகிறது ஒரு புதுப்படம்!

வரிசையாக நான்கு புதுப்படங்களுக்கு அடுத்தடுத்து பூஜை போட்டுள்ளது பிவிபி நிறுவனம். இப்போது லேட்டஸ்டாக அந்த நிறுவனம் பூஜை போட்டுள்ள படம் கிரகணம்.

அறிமுக இயக்குனர் இளன் இயக்கும் இந்தப் படத்தின் நாயகனாக கிருஷ்ணா நடிக்கிறார்.

புதுமுகம் நந்தினி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். கருணாஸ், கருணாகரன் 'கயல்' சந்திரன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கிருஷ்ணாவை கிரகணம் பிடிச்சா என்ன ஆகும்? வருகிறது ஒரு புதுப்படம்!

படம் குறித்து இளன் கூறுகையில், ‘கிரகணம்' கோள்களின் இடமாற்றம் என்று சிலரும், ஒவ்வொரு மனிதனின் நல்லதும், கேட்டதும் இதை மையாமாகக் கொண்டே அமைகிறது என்று சிலரும் நம்புவதுண்டு. அந்த வகையில் சந்திர கிரகணத்தால் சிலரது வாழ்க்கையில் ஏற்படும் நல்லது கெட்டதை சுவாரஸ்யமாக சித்தரிக்கும் முயற்சிதான் ‘கிரகணம்'. பிவிபி சினிமா தயாரிப்பில் என்னுடைய முதல் படத்தி இயக்குவதில் மிக சந்தோஷமாக உள்ளது. படபிடிப்பு மிக விரைவில் ஆரம்பமாக உள்ளது," என்றார்.

கிருஷ்ணாவை கிரகணம் பிடிச்சா என்ன ஆகும்? வருகிறது ஒரு புதுப்படம்!

முழுக்க முழுக்க இளைஞகர்களை கொண்டுள்ளது 'கிரகணம்' படக் குழு. ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். சுந்தர மூர்த்தி இசையமைக்கிறார்.

இன்று ஏவிஎம்மில் நடந்த படத்தின் பூஜையில் படக்குழுவினருடன் இயக்குனர் விஷ்ணுவர்தன், நடிகர் பாபி சிம்ஹா, தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜ், சிவா, தனஞ்செயன், சிவி.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

என்னோட டான்ஸ் எப்படி இருக்கு...- இந்திப் பட ஷூட்டிங்கில் பிரெட் லீ கலாட்டா!

மும்பை: பாலிவுட்டில் தயாராகும் படத்தில் நடித்து வரும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெட் லீ ஷூட்டிங்கில் அதகளம் செய்து வருகிறாராம். என் டான்ஸ் எப்படி இருக்கு என்று கதாநாயகியை கலாய்த்துள்ளார் பிரெட் லீ.

கிரிக்கெட் களமானாலும், ஷூட்டிங் தளமானாலும் எனக்கு ஒன்றுதான் என்பது போலத்தான் படப்பிடிப்பில் அவர் நடந்து கொண்டாராம். தனது முதல் இந்திப் படத்தை ரொம்பவே ரசித்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.

இந்தியா-ஆஸ்திரேலிய கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு அன்இந்தியன் (Unindian) என்று தலைப்பிட்டுள்ளனர்.

என்னோட டான்ஸ் எப்படி இருக்கு...- இந்திப் பட ஷூட்டிங்கில் பிரெட் லீ கலாட்டா!

இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. அடுத்த கட்ட ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது. மும்பையில் நேற்று நடந்த பாடல் காட்சி ஷூட்டிங்கின்போது இந்திய பாணி உடைகள் அணிந்து, ஹீரோயின் தனிஷ்தா சட்டர்ஜியுடன் குஷியாக நடனமாடி படக் குழுவினரை திக்குமுக்காடச் செய்தாராம்.

என்னோட டான்ஸ் எப்படி இருக்கு...- இந்திப் பட ஷூட்டிங்கில் பிரெட் லீ கலாட்டா!

இது போதாதென்று தனி்ஷ்தாவிடம் 'என்னோட டான்ஸ் எப்படி இருக்கு...உங்கள விட நான் நல்லா ஆடறேன் இல்ல!' என்று கருத்து கேட்கவும் தவறவில்லை.

என்னோட டான்ஸ் எப்படி இருக்கு...- இந்திப் பட ஷூட்டிங்கில் பிரெட் லீ கலாட்டா!

அன்இந்தியன் படம் முழுக்க முழுக்க காமெடிப்படமாக உருவாகியுள்ளது. சலீம் சுலைமான் இசை அமைக்க, அனுபமா சர்மா இயக்குகிறார்.

 

திருட்டு விசிடி எப்படி வருது தெரியுமா? இதோ இந்த வழியாத்தான்!

சென்னை: கோலிவுட்காரர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருவது, திருட்டு விசிடியைத் தடுத்து நிறுத்தக் கோரிதான். ஆனால் அரசுகள் பல மாறினாலும் இந்த திருட்டு விசிடி மட்டும் ஒழிக்க முடியாததாக உள்ளது.

திருட்டு விசிடி பல இடங்களில் தயாராகின்றன. முன்பெல்லாம் வெளிநாடுகளிலிருந்து வருவதாகக் கூறப்பட்டது. இப்போது உள்நாட்டிலும் சில தியேட்டர்களில் வைத்தே தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் தயாரிக்கப்பட்டு ரயிலில் பார்சல் மூலம் தமிழகத்துக்கு சிடிக்கள் கடத்தப்படுவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருட்டு விசிடி எப்படி வருது தெரியுமா? இதோ இந்த வழியாத்தான்!

வழக்குகள்.. கைதுகள்

மாநில குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் திருட்டு சி.டி. தடுப்புப் பிரிவு கடந்த மாதம் வரை திருட்டு சி.டி. தயாரித்து மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 390 வழக்குகள் பதிவு செய்து 390 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 1.44 கோடி மதிப்புள்ள 27,500 திருட்டு சி.டி.க்களை பறிமுதல் செய்தனர்.

கடந்த ஆண்டு 5,875 வழக்குகள் பதிவு செய்தனர். இதேபோல கடந்த 2013-இல் 2,664 வழக்குகளும், 2012-இல் 2,621 வழக்குகளும், பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருபுறம் திருட்டு சி.டி. தயாரிப்போரும், விற்போரும் கைது செய்யப்பட்டாலும், மறுபுறம் அதன் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

திருட்டு சி.டி. விற்பனைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக இப்போது ஏற்பட்டு வரும் தொழில்நுட்பத்துறையின் அபரிமிதமான வளர்ச்சி, திரையரங்குகளின் கட்டண உயர்வு, ஒரிஜினல் சி.டி. போன்றே தரத்துடன் கிடைப்பது, குடிசைத் தொழிலாக திருட்டு சி.டி.யை தயாரிப்பது, காவல்துறையின் அலட்சியப் போக்கு என பல காரணங்கள் கூறப்படுகின்றன.

போலி நிறுவனங்கள்:

ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, சிலர் திருட்டு சி.டி. தயாரித்து விற்பனை செய்வதையே பெரிய வணிக நிறுவனம் போல செயல்படுத்துகின்றனர். இவர்கள் சில திரைப்படங்களின் உரிமத்தை மட்டும் பெற்றுக் கொண்டு,பெரும்பாலான தமிழ் திரைப்படங்களின் சி.டி.யை போலியாகத் தயாரித்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

இந்த வகை திருட்டு சி.டி. கும்பல், காவல்துறையினர் கண்டறிய முடியாத அளவுக்கு தங்களது தொழிலை நேர்த்தியாக செய்வதாக திருட்டு சி.டி. ஒழிப்பு பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் சென்னை பெரியமேடு, சிந்தாதிரிப்பேட்டை மூவிலேண்ட் என்ற நிறுவனத்தில் சென்னை பெருநகர காவல்துறையின் திருட்டு சி.டி. ஒழிப்புப் பிரிவு போலீஸôர் திடீர் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் அங்கு ரூ. 1.30 கோடி மதிப்புள்ள திருட்டு சி.டி.க்கள் மட்டுமன்றி, உரிமம் இல்லாமல் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பழைய தமிழ் திரைப்படங்களின் சி.டி.க்களும் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

டெல்லியிலிருந்து...

இது தொடர்பாக, அங்கு பிடிபட்ட இருவரிடம் போலீஸôர் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியடைய வைத்தன. அங்கு பிடிபட்ட அனைத்து சி.டி.களும் டெல்லியில் தயாரிக்கப்பட்டவை என்பதோடு, பிரபல ஆடியோ, விடியோ சி.டி. தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆர்டரின்பேரில் சி.டி.க்களை தயாரித்து வழங்கும் தொழிற்சாலையிலேயே, இந்த சி.டி.களையும் தயாரித்திருப்பது தெரியவந்தது. இதனால் அந்த சி.டி., ஒரிஜினல் சி.டி.யில் இருக்கும் தரத்தில் இருப்பதையும் அவர்கள் தெரிந்து கொண்டனர்.

டெல்லியில் தயாரிக்கப்படும் திருட்டு சி.டி.களை அந்தக் கும்பல், டெல்லியில் சென்னை வரும் ரயிலில் பார்சல் சேவை மூலம் எவ்வித சிரமமும் இன்றி பல ஆண்டுகளாகக் கொண்டு வந்திருப்பதும் தெரியவந்தது.

அதிகாரிகள் உடந்தை.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

இந்தக் கும்பல் மீது ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போலீஸôர் நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும், டெல்லியில் திருட்டு சி.டி. தயாரித்துக் கொடுக்கும் நிறுவனமும், ரயிலில் பார்சல் மூலம் திருட்டு சி.டி. கடத்துவதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளும் நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளனர்.

இதன் விளைவாக, இரண்டு ஆண்டுகளில் இந்தக் கும்பல் முன்னைக் காட்டிலும் துணிச்சலுடன் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என தென் மாநிலங்கள் முழுவதும் தங்களது பிடியை விஸ்தரித்துள்ளதாக அந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

ஒரிஜினல் சிடி தயாரிக்கும் இடத்திலேயே...

மேலும் இந்தக் கும்பலைப் போன்ற மேலும் பல நபர்கள், டெல்லியில் இருந்து ஒரிஜினல் சி.டி. தயாரிப்பு நிறுவனங்களிலேயே, திருட்டு சி.டி.க்களை தயாரித்துக் கொண்டு வருவதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

இதன் அடுத்தகட்டமாக அந்தக் கும்பலை கையும் களவுமாக கைது செய்வதற்குரிய நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பிரச்னையில், திருட்டு சி.டி. தயாரித்து விற்போர் மட்டுமன்றி அவர்களுக்கு உறுதுணையாகவும், உடந்தையாகவும் இருப்பவர்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திரைத் துறையினரின் வேண்டுகோளாக உள்ளது.