5 ஆண்டுகாலமாக நடக்கும் ஆபாச நடன வழக்கு... மல்லிகா ஷெராவத் ஆஜராக வதோரா கோர்ட் சம்மன்

Mallika Sherawat Summoned Court Obscenity

வதோரா: பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக 5 ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் ஆபாசன நடன வழக்கில் குஜராத்தின் வதோரா நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருக்கிறது.

2007ஆம் ஆண்டு மும்பையின் ஜே டபிள்யூ மரியத் ஹோட்டலில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் மல்லிகா ஷெராவத் கலந்து கொண்டார். அங்கு அவர் ஆபாச நடனம் ஆடியதாக புகார் எழுந்தது. அதனால் அவர் மீது ஐபிசி 294-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரோடா பார் அசோசியேசன் தலைவர் நரேந்திர திவாரி வழக்குத் தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு கீழ்நீதிமன்றம் , மேல் நீதிமன்றம் என இழுத்தடிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகாலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடைசியாக வதோரா நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து வதோரா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் வரும் ஏப்ரல் 20-ந் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று மல்லிகா ஷெராவத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

 

மீண்டும் ஒரே மேடையில் ரஜினி - கமல்!

Rajini Kamal Appear Again On Stage

பிரபு மகன் விக்ரம் பிரபுவுக்காக மீண்டும் ஒரு முறை மேடையேறுகிறார்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலக நாயகன் கமல் ஹாஸனும்.

சில மாதங்களுக்கு முன்பு கும்கி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று, விக்ரம் பிரபுவை வாழ்த்தினர் இருவரும்.

அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது. இப்போது படம் நூறு நாள்களைத் தாண்டிவிட்டது.

இந்த வெற்றி விழாவையும் ரஜினி - கமல் தலைமையில் கொண்டாட விரும்பி, இருவருக்கும் அழைப்பிதழையும் வைத்துள்ளார் தயாரிப்பாளர் லிங்குசாமியும், ஹீரோவின் தந்தை பிரபுவும்.

கமல் வர ஒப்புக் கொண்டுள்ளாராம். ரஜினியும் வருவார் என்ற நம்பிக்கையுடன் விழா ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

கடந்த முறை, விழாவுக்கு ரஜினியை அழைத்த போது முதலில் வர மறுத்துவிட்டார். அழைப்பிதழில் அவர் பெயரையும் விழாக் குழுவினர் போடவில்லை.

ஆனால் கடைசி நேரத்தில் மின்னலாய் மேடையில் தோன்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்த முறையும் அதே போல செய்வார் சூப்பர் ஸ்டார் என்று எதிர்ப்பார்க்கின்றனர் பிரபுவும் லிங்குவும்.

 

தொனாலிராமனைத் தொடர்ந்து 'ஆப்ரிக்காவில் வடிவேலு' - இயக்குகிறார் கேஎஸ் ரவிக்குமார்

முழு வீச்சில் மீண்டும் களமிறங்கிவிட்டார் வடிவேலு. அதுவும் காமெடியனாக அல்ல.. முழுமையான கதாநாயகனாக.

சட்டமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு ஆண்டுகள் 'அரசியல்' அஞ்ஞாதவாசத்துக்குப் பிறகு, இப்போது தெனாலிராமன் என்ற படத்தில் நடிக்கிறார் வடிவேலு. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவராஜ் இயக்குகிறார்.

இதற்குப் பிறகு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முழுமையான காமெடிப் படம் ஒன்றில் நடிக்கிறார் வடிவேலு. இந்தப் படத்துக்கு ஆப்ரிக்காவில் வடிவேலு என்று தலைப்பிட்டுள்ளனர்.

ks ravikumar direct vadivelu

இதனை வடிவேலு சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இப்போது இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில், "வடிவேலுவுக்காக ஒரு கதை கேட்டேன். ரஜினி சார் பயோகிராஃபி எழுதின காயத்ரி சொன்ன கதை அது.

கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. வடிவேலுவும் கதையைக் கேட்டுட்டு வந்து என்னைப் பார்த்தார். 'பண்ணலாமாண்ணே'னு கேட்டாரு. சரின்னு சொல்லிட்டேன்.

இது பிரமாண்டமான படமா இருக்கும். இந்தப் படத்துக்கு சினிமாவை சினிமாவாப் பார்க்கிற தயாரிப்பாளர்கள் வேணும். வந்தா, பிரமாதமா பட்டையைக் கிளப்பலாம்," என்றார்.

படம்: விகடன்

 

பெண்கள் படும் கஷ்டங்களை படமாகச் சொல்லும் 'இரு கில்லாடிகள்'

Iru Killadigal Is Womens Day Special

பெண்கள் படும் பாடுகளை மையமாக வைத்து ஷான் பிலிம்ஸ் 'இரு கில்லாடிகள்' எனும் பெயரில் படம் தயாரிக்கிறது.

டென்மார்க் ஷான் என்பவர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பயாஸ் என்பவர் ஹீரோவாகவும், புதுமுகம் சுவாதி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர்.

நாம் வாழும் இந்த உலகில், ஆணுக்கு சற்றும் சளைக்காத பெண் இனம் படும் துயங்கள், அதைத் தீர்க்கும் வழிகள் ஆகியவற்றை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

அறிவுமதி, மதிவதனன் பாடல்களை எழுதியுள்ளனர். அறிவுமதி எழுதிய,

"பெண்ணென்ன ஆண்களின் தின்பண்டமா,
வெறும் சுயமற்ற முகமற்ற சதைப் பிண்டமா.?
உயரத்தில் பெண்ணென்ன தரைமட்டமா?
அவர் கருவறைச் சாத்திட உயிர் கிட்டுமா?

பாடல் பெண் இனத்தை கவுரவப்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கதை, வசனம், இசை, தயாரிப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புகளை டென்மார்க் ஷான் ஏற்றுள்ளார்.

மகளிர் மாதமான இந்த மார்ச்சில் படம் வெளியாகிறது.

 

துள்ளி விளையாடு இசையை வெளியிட்டார் விஜய்

Vijay Releases Thulli Vilayadu Audi   

துள்ளி விளையாடு படத்தின் முதல் இசை குறுந்தகட்டை வெளியிட்டார் நடிகர் விஜய்.

ப்ரியமுடன் படம் மூலம் நடிகர் விஜய்க்கு பெரிய பிரேக் கொடுத்தவர் வின்சென்ட் செல்வா.

தொடர்ந்து யூத், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன், பெருமாள் என வித்தியாசமான படங்களைத் தந்தவர். த்ரில்லர் கதைகளை கையாள்வதில் தேர்ந்தவரான இவர் இப்போது கையிலெடுத்திருப்பது துள்ளி விளையாடு என்ற காமெடி கலந்த த்ரில்லர் கதையை.

படத்தின் நாயகனாக யுவராஜ் என்ற இளைஞரையும் அவருக்கு ஜோடியாக தீப்தியையும் அறிமுகம் செய்கிறார் வின்சென்ட் செல்வா. இவர்களுடன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஜெயபிரகாஷ், சூரி, சிங்கமுத்து, சென்ராயன் (ரவுத்திரம் - வில்லன்) சூப்பர்குட் லஷ்மண், மதுரை சுஜாதா (நாடோடிகள்) மதன்பாபு என பிரபலங்கள் கைகோர்த்துள்ளனர்.

இந்தப் படத்தை ஆர்பி ஸ்டுடியோஸ் சார்பில் கோவிந்தராஜ் தயாரித்துள்ளார் . எஸ்கே பூபதி ஒளிப்பதிவு செய்ய வின்சென்ட் செல்வாவின் ஃபேவரிட் இசையமைப்பாளரான ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோவை நடிகர் விஜய் மும்பையில் தலைவா படப்பிடிப்பின்போது வெளியிட்டார். இயக்குனர் வின்சென்ட் செல்வா, நாயகன் யுவராஜ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தயாரிப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடும் ஸ்ரீகாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

'எனக்கு வெற்றிப் படத்தைக் கொடுத்த உங்களுக்கு இந்த படம் பெரிய வெற்றியைத் தரட்டும்,' என இயக்குனர் வின்சென்ட் செல்வாவிற்கு தனது வாழ்த்தை தெரிவித்தார் இளையதளபதி.

 

பெண் இயக்குநர் நந்தினியின் புதிய படம் ‘கொலை நோக்கு பார்வை’!

Nandhini Come Up With Next Kolai Nokku Paarvai

இரு ஆண்டுகளுக்கு முன் திருதிரு துரு துரு என்றொரு படம் வந்தது நினைவிருக்கலாம்.

இந்தப் படத்தை இயக்கிய நந்தினி, தனது அடுத்த படத்துக்கு கொலைநோக்குப் பார்வை என்று பெயரிட்டுள்ளார்.

இது முழுக்க முழுக்க துப்பறியும் திரைக்கதையை மையமாக வைத்து உருவாக்கப்படும் படமாகும்.

மகளிர் தினமான இன்று தன் படத்தை அறிவித்துள்ளார் நந்தினி. ஆனால் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.

இப்படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கிறார். இந்நிறுவனம் தயாரிக்கும் 4-வது படம் இதுவாகும்.

ஏற்கெனவே இந்நிறுவனம் நளனும் நந்தினியும், சுட்டகதை, கரு.பழனியப்பன் இயக்கும் புதிய படம் என ஏற்கெனவே 3 படங்களை தயாரித்து வருகிறது.

5 வது படமாக சிபிராஜ் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறது.

முதல் முயற்சியிலேயே தொடர்ந்து 5 படங்களோடு லிப்ரா நிறுவனம் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

"நிறைய புதுமுகங்களை உற்சாகப்படுத்த வேண்டும், நியாயமான பட்ஜெட்டில் நிறைவான படம் பண்ண வேண்டும்," என்ற ஆர்வம்தான் இத்தனை படங்களைத் தயாரிக்கத் தூண்டியுள்ளது என்கிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.

 

ஜப்பானில் ரஜினிக்குக் கிடைத்த வரவேற்பு சல்மானுக்கும் கிடைக்குமா?

Salman Khan Is Releasing His Ek Tha Tiger In Japan

இந்திய சினிமா வர்த்தகத்துக்கு புதிய கதவுகளைத் திறந்த வைத்த பெருமை சூப்பர் ஸ்டாரின் படங்களையே சேரும்.

சூப்பர் ஸ்டார் நடித்த முத்து ஜப்பானில் வெளியாகி பட்டையைக் கிளப்பியது நினைவிருக்கலாம். ஜப்பான் நாட்டுப் பாராளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கே, தனது உரையில் ரஜினியைக் குறிப்பிடும் அளவுக்கு முத்து புகழ்பெற்றது.

அங்கு ஏராளமான ரஜினி ரசிகர் மன்றங்கள் உள்ளன. முத்துவுக்குப் பின்னர் ரஜினியின் பாட்ஷா உள்ளிட்ட படங்களை மறு வெளியீடு செய்தனர் வெளிநாடுகளில்.

ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியானது ரஜினியின் பாபாதான்.

அதன் பிறகு, வந்த சந்திரமுகி, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கொரியா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

ஆனால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை எனும் அளவுக்கு வெளிநாடுகளில் பரபரப்பான வசூலைக் குவித்தது சிவாஜி - தி பாஸ். அந்த சாதனையை தொடர்ந்து வந்த எந்திரன் முறியடித்தது. சமீபத்தில் எந்திரன் படத்தை ஜப்பானில் மிக அதிக அளவு அரங்குகளில் வெளியிட்டனர். ஹாலிவுட் படங்களைவிட அதிக அரங்குகளில் வெளியிட்டு, ஒரு திருவிழா மாதிரி கொண்டாடினர்.

ரஜினியின் படங்கள் செய்த வசூல் சாதனை, மற்ற படங்களையும் வெளிநாட்டு மார்க்கெட்டுக்குக் கொண்டு செல்ல வைத்தது.

இந்தி, தமிழ், தெலுங்குப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல லாபம் பார்த்தன.

இப்போது இந்தி நடிகர் சல்மான்கான், தனது படம் ஒன்றை ஜப்பானில் வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே வெளியாகி நல்ல வசூலைக் குவித்த அவரது ஏக்தா டைகர் படம்தான், நேற்று ஜப்பானில் வெளியாகியுள்ளது.

ரஜினி படங்களுக்குக் கிடைக்கும் வெற்றி தன் படங்களுக்கும் ஜப்பானில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் சல்மான்கான்.

ரஜினி படங்களுக்குப் பிறகு ஜப்பானில் வெளியாகும் இந்தியப் படம் சல்மான்கானுடையதுதான்.

 

கோச்சடையானுக்குப் பின் ராணாவைக் கையிலெடுக்கிறார் ரஜினி - கேஎஸ் ரவிக்குமார் தகவல்

Raana Will Be Take Off After Kochadaiyaan Says Ks Ravik

கோச்சடையானை வெளியிட்ட பிறகு ராணாவை ஆரம்பிக்கலாம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்லியிருப்பதாக இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கோச்சடையானுக்குப் பிறகு கேவி ஆனந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்றார்கள். இதனை ஈராஸ் நிறுவனமும் அறிவித்தது.

ஆனால் கே வி ஆனந்த் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் ராணா பற்றிய பேச்சுகள் கிளம்பியுள்ளன.

ராணா படம் மட்டும் எடுக்கப்பட்டால், தமிழ் சினிமாவின் உச்சகட்ட பொழுதுபோக்குப் படமாக அமையும் என ரஜினியே தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

இப்போது படம் குறித்து கேஎஸ் ரவிக்குமாரும் பேசியுள்ளார். படத்தின் இயக்குநர் இவர்தான்.

தனது அடுத்த படங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "கோச்சடையான்' முடிந்த பிறகு 'ராணா' ஆரம்பிப்பது குறித்து பேசலாம்னு ரஜினி சார் சொல்லிட்டார்.

'பஞ்சதந்திரம் பார்ட் 2'னு பேச்சு வந்தது. ஆனா, அதிகாரபூர்வமா கமல் சார் தரப்பில் இருந்து யாரும் பேசலை," என்றார்.

கேஎஸ் ரவிக்குமார் இப்போது சாமி படத்தை இந்தியில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார். அந்தப் படம் முடிந்ததும் வடிவேலு படத்தை எடுக்கிறார். பின்னர்தான் ராணாவைத் தொடங்குவார்கள் என்று தெரிகிறது.

 

ஐஸ்வர்யா ராய் மகளுக்காக துபாயில் ரூ.54 கோடியில் ஓஹோன்னு ஒரு பங்களா

Aishwarya Rai Daughter Aaradhya Bachchan 54 Crore Gift

மும்பை: பெண் குழந்தை பிறந்தாலே உடனே புதிதாக நகை வாங்குவாங்கள். எல்.ஐ.சி பாலிசி போடுவார்கள். ஆனால்

ஐஸ்வர்யா ராய் தனது மகளுக்காக துபாயில் ஆடம்பர பங்களா ஒன்றினை வாங்கியிருக்கிறார்.

அந்த சொசுகு பங்களாவின் விலை அதிகமில்லை. ஜஸ்ட் 54 கோடி ரூபாய்தான் என்கின்றனர். ஆராத்யாவிற்கு இப்போதுதான் ஒரு வயது நிறைவடைந்துள்ளது.

பிறக்கும் போதே தங்கக் கரண்டியோடு பிறந்த இந்த பாப்பா, இப்போது 54 கோடி ரூபாய் பங்களாவிற்கு சொந்தக்காரியாகியுள்ளது. துபாய்க்குப் போனால் ஜாலியாக தங்கி பொழுதை கழிக்க இந்த பங்களாவை வாங்கியிருக்கின்றனராம்.

குட்டிப்பாப்பாவுக்கு இன்னும் என்ன பிடிக்கும் என்று ஐஸ்வர்யாவைக் கேட்டால்,ஜிதேந்திராவின் பாடல்கள் பிடிக்கும் என்கிறார். கொடுத்து வச்ச பாப்பாதான்!

 

கோச்சடையான் நாயகி தீபிகாவிடம் மன்னிப்பு கேட்ட ஷாருக்கான்?

When Shah Rukh Khan Upsets Deepika Padukone

மும்பை: சென்னை எக்ஸ்பிரஸ் படப்பிடிப்பின்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தீபிகா படுகோனேவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் ரோஹித் ஷெட்டியின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து வருகின்றனர். தீபிகாவும் இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் காதலிப்பதாக பேச்சாகக் கிடக்கிறது. ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறக்கவில்லை. இந்நிலையில் இந்த செய்தி காற்றோடு சேர்ந்து ஷாருக்கான் காதில் விழுந்துள்ளது.

இதையடுத்து அவர் ரன்வீர் சிங்குடன் தீபிகாவை சேர்த்து பேசி கிண்டலடித்து வந்துள்ளாராம். முதலில் கண்டுகொள்ளாத தீபிகா பின்னர் கடுப்பாக்கிவிட்டாராம். அவர் எரிச்சலடைந்ததை உணர்ந்த ஷாருக் சாரி தீபிகா என்று மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுகிறது.

தீபிகாவின் காதல் வாழ்க்கை பற்றி பலரும் பேசுவது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.