சிம்பு... ஒரு ப்ளேபாய் சாமியாராகி சம்சாரியாகும் கதை!

Simbu From Playboy Family Man

சரியோ தவறோ... படம் நடிக்கிறாரோ இல்லையோ... தன்னைப் பற்றிய செய்தி எப்போதும் மீடியாவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வதில் கில்லாடி சிம்பு.

அவரது படங்கள் படு சொதப்பலாக இருந்தாலும் கூட ஏதாவது ஒரு சர்ச்சையையோ பரபரப்பையோ கிளறிவிட்டுவிடுவார்.

நடிக்க ஆரம்பித்த புதிதில் அறிமுக நடிகை முதல் கும்மென்று இருக்கும் அனுபவசாலி நடிகைகள் வரை அனைவருடனும் கிசுகிசுக்கப்பட்டவர் சிம்பு!

அதை அவர் மறுக்கவில்லை. அதைவிட முக்கியம் அவர் அப்பா டி ராஜேந்தர், 'அவருக்கு வாலிப வயசு... அப்படித்தான் இருப்பார்," என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.

திடீரென்று சில மாதங்களாக ஆன்மீகவாதியாக வேடம் தரித்தார் சிம்பு. செம ரெஸ்பான்ஸ். எங்கும் அவரது இளம் துறவுக் கோலம்தான் செய்தி.

அதுவும் ஒரு குறுகிய காலம்வரைதான் நீடித்தது. இப்போது தடாலடியாக திருமணத்துக்கு அவர் தயாராவதாகவும், அவரைத் திருமணம் செய்யும் மணப் பெண் பெயரை அறிவிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தி நகரில் சிம்பு கட்டியிருக்கும் புதிய வீட்டின் திறப்பு விழாவுக்குப் பிறகு இந்தப் பெயரை வெளியிடப் போகிறாராம்.

தன்னுடன் வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடித்த ஹன்சிகாதான் சிம்புவின் கைப்பிடிக்கப் போகும் காதலி என அதற்குள் யூகங்கள் றெக்கை கட்டி முளைத்துள்ளன.

 

விவாகரத்தா?: குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இருக்கிறோம்- நடிகர் அல்லு அர்ஜுன்

I M Not Divorcing My Wife Allu Arjun

ஹைதராபாத்: தான் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக வந்த தகவல்களில் உண்மையில்லை என்று தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் சினேகா ரெட்டி என்பவரை காதலித்து கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்நிலையில் அவர் சினேகாவை விவாகரத்து செய்யப் போவதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்த செய்திகளில் சிறிதும் உண்மையில்லை என்று அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நானும், சினேகாவும் ஒருவரையொருவர் பார்த்த நாளில் இருந்து கண்மூடித்தனமாக காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமண வாழ்க்கை பிரச்சனை இன்றி சென்று கொண்டிருக்கிறது. நானும், என் மனைவியும் சந்தோஷமாக உள்ளோம். இன்னும் சில ஆண்டுகள் கழித்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றார்.

 

துருவ நட்சத்திரத்தில் சூர்யா ஜோடி த்ரிஷாவா... அமலாவா?

Trisha Or Amala Who Will Shake Leg With Surya

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படமான துருவ நட்சத்திரத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்றும் அவருடன் அமலா பாலும் நடிக்கக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அறிமுகமாகி பத்தாண்டுகள் கடந்த பிறகும் இன்னும் பரபரப்பான கதாநாயகியாகவே திகழ்கிறார் த்ரிஷா.

துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டாலும், படத்தின் நாயகி யார் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை இயக்குநர் கவுதம் மேனன்.

இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மரியான் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த மார்க் கோனின்க்ஸ் காமிராவைக் கையாள்கிறார். இவருக்கு பெரும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

கதாநாயகியாக இயக்குநர் மற்றும் ஹீரோவின் முதல் சாய்ஸே த்ரிஷாதானாம். ஏற்கெனவே மவுனம் பேசியதே, ஆறு போன்ற படங்களில் சூர்யாவுடன் நடித்தவர்தான் த்ரிஷா.

இன்னொரு பக்கம் அமலா பாலுடனும் பேசி வருகிறார்களாம். இருவரையுமே நாயகியாக்கினால் என்ன என்றும் பேசப்பட்டு வருகிறதாம்.

இந்தப் படத்தில் ஏற்கெனவே சிம்ரனும் முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

 

கமலுடன் ஜோடி சேரும் 'குத்து' ரம்யா?

Divya Spandana Front Runner Kamals Next

சென்னை: கமல் இயக்கி, நடிக்கவிருக்கும் புதிய படத்தில் காஜல் நடிக்க மறுத்ததை அடுத்து திவ்யா ஸ்பாந்தனாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி, நடிக்கும் படத்திற்கு உத்தம வில்லன் என்று பெயர் வைக்கப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்குமாறு காஜல் அகர்வாலை கேட்டனர். அவரோ டேட்ஸ் இல்லை என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் காஜலுக்கு பதிலாக திவ்யா ஸ்பாந்தனா அல்லது லேகா வாஷிங்டனை நடிக்க வைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிலும் திவ்யாவுக்கு தான் முக்கியத்துவமாம். இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் துவங்குகிறது.

கமல் இயக்குவதால் தனது படத்தில் நடிக்கப் போகும் நடிகர், நடிகைகளை அவர் கவனமாக தேர்வு செய்து வருகிறாராம். சிம்பு, தனுஷ், சூர்யாவுடன் நடித்த திவ்யாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தால் ஜாக்பாட் தான்.

 

சிரஞ்சீவியின் மச்சான் மகன் விவாகரத்து?.. ஆந்திராவில் பரபரப்பு

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக ஆந்திர பட உலகில் கிசு கிசு பரவியுள்ளது.

அல்லு அர்ஜுன் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மச்சான் அல்லு அரவிந்த்தின் மகன் ஆவார்.

அல்லு அர்ஜுனுக்கு கடந்த 2011-ல் திருமணம் நடந்தது. சினேகா ரெட்டி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடம் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினார். தற்போது அல்லு அர்ஜுன் சினேகா ரெட்டி இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவியுள்ளது.

allu arjun divorce his wife

தற்போது இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து தனியாக வசிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி தெலுங்கு பட உலகிலும், அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

அல்லு அர்ஜுன் நடித்த 'இட்டற மயிலத்து' என்ற தெலுங்கு படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அவரது விவாகரத்து செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


 

டூப் போடாமல், கயிறு கட்டாமல் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த இயக்குநர் மிஷ்கின்!

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ஒரு சண்டைக் காட்சியில் ஓடும் ரயிலிருந்து கீழே குதித்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். இதற்காக அவர் எந்த இடத்திலும் டூப்பைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லோன் வுல்ஃப் என்று சொந்தப் பட நிறுவனம் தொடங்கியுள்ள இயக்குநர் மிஷ்கின், இளையராஜா இசையில் ஓநாயும் ஆட்டுக் குட்டியும் படத்தைத் தயாரித்து இயக்கி வருகிறார்.

இதில் ஓநாயின் குணம் கொண்ட மனிதன் வேடத்தில் இயக்குநர் மிஷ்கினும், ஆட்டுக்குட்டியைப் போன்ற சாது கேரக்டரில் வழக்கு எண் பட ஹீரோ ஸ்ரீயும் நடிக்கின்றனர்.

director mysskin jumped from running train

இந்தப் படத்துக்காக சமீபத்தில் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அதில் ஓடும் ரயிலிலிருந்து இயக்குநர் மிஷ்கின் குதிக்க வேண்டும். ரயில் கொஞ்சம் வேகமாக ஓடும். தண்டவாளத்தில் நிறைய மின்சாரக் கம்பங்கள் வேறு இருந்தன.

எனவே இந்தக் காட்சியை டூப் வைத்து எடுக்கலாம் என ஸ்டன்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் கூறினாராம். ஆனால் காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என கறாராக சொல்லிவிட்ட மிஷ்கின், டூப் போடாமல், கயிறு கட்டாமல், கிரீன் மேட் உபயோகிக்காமல் இந்தக் காட்சியில் ரயிலிலிருந்து குதித்து பிரமிக்க வைத்துள்ளார்.

இது குறித்து ஜெகன் கூறுகையில், "மிஷ்கின் இதற்காக எந்தப் பயிற்சியும் எடுக்கவில்லை. எங்களுக்கு பயமாகத்தான் இருந்தது.

ஆனால் முதல் டேக் திருப்திகரமாக இல்லாததால் மீண்டும் ஒரே டேக் குக்கு போய் இந்த காட்சியை வெற்றிகரமாக எடுத்து முடித்தார் மிஷ்கின்.

இந்த காட்சி மிக சிறப்பாக வந்துள்ளது. மிஷ்கின் உழைப்பை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது துணிச்சலுக்கும் அர்பணிப்புக்கும் நான் தலைவணங்குகிறேன். இவருடன் பணிபுரிவதை நான் பெருமையாகவும் கௌரவமாகவும் கருதுகிறேன்," என்றார்.

 

கருப்பை புற்றுநோய் தடுப்பூசி போட்ட நடிகை சமந்தா... விழிப்புணர்வு பிரச்சாரம்

Samantha Gets Cervical Cancer Vaccination
சென்னை: நடிகை சமந்தா கருப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி போட்டுக் கொண்டதாக டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. அழகோடு, ஆரோக்கியத்திலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறார்.

சமந்தா சமீபத்தில், கருப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு ஊசி மருந்தினை எடுத்துக்கொண்டதாக தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதோடு பெண்கள் அனைவரும் இந்த நோய் குறித்த விழிப்புணர்ச்சியுடன் செயல்படவேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் தகவல் வெளியிட்டுள்ளார்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயினால் இந்தியாவில் மட்டும், வருடத்திற்கு 80,000 பெண்கள் இறந்துபோவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்தால் இந்த நோயினை முழுமையாகக் குணப்படுத்த முடியும். இந்நோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களும் அரசினால் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. இப்போது நடிகை சமந்தாவும் கருப்பை புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.

நடிகை ஹன்சிகா மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தூதராக செயல்பட்டு வரும் நிலையில் சமந்தா கருப்பை புற்றுநோய் பற்றி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற 'சிங்கம்'

Singam Participates Neengalum Vellalam Oru Kodi

சென்னை: சூர்யா தான் ஒரு காலத்தில் நடத்திய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

சூர்யா விஜய் டிவியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியை நடத்தினார். அந்த நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் சூர்யாவுக்கு பதில் பிரகாஷ் ராஜ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

பிரகாஷ் ராஜ் வந்த பிறகு இந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசன், கௌதமி, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் சூர்யா இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இது குறித்து பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் சூர்யா. இந்த இளம் நடிகர் மற்றும் அவரின் அகரம் பவுன்டேஷன் நபர்களுடன் அருமையான தருணங்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் சூர்யா எவ்வளவு வென்றார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

 

கமலின் அடுத்த படத் தலைப்பு 'உத்தம வில்லன்?'

Kamal Next Movie Title Uthama Thalaivan

இந்தப் படம் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாக ஆரம்பித்துள்ளது. இந்தப் படத்தை ரூ 45 கோடி பட்ஜெட்டுக்குள் எடுத்துவிடும் திட்டத்தில் உள்ளனர். அவ்வை சண்முகி மாதிரி முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக இதனை எடுக்கிறார்களாம்.

படத்துக்கான பணிகள் துவங்கியுள்ளன. கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார்.

முதல் முறையாக கமலுடன் கைகோர்க்கிறார் நடிகர் விவேக். படத்தின் தலைப்பு குறித்து பல தககவல்கள் வெளியாகியுள்ளன. நகைச்சுவைப் படம் என்பதால் உத்தம வில்லன் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த செய்தியை கமல் தரப்பில் யாரும் உறுதிப்படுத்தவில்லை.

ஏற்கெனவே சர்வாதிகாரி, தலைவன் இருக்கிறான் உள்பட பல தலைப்புகளை கமல் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

 

வாலிப ராஜா... கழட்டி விடப்பட்ட பவர் ஸ்டார்!

Power Star Dropped From Vaaliba Raj

கண்ணா லட்டு தின்ன ஆசையா கூட்டணி மீண்டும் இணைகிறது, வாலிப ராஜா படத்துக்காக. ஆனால் இதில் பவர் ஸ்டார் மிஸ்ஸிங். சந்தானம் - சேது - விசாகா சிங் மட்டும்தான் இந்தப் புதிய கூட்டணியில்.

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் வெற்றியின் காரணமாக பவர் ஸ்டார் பல படங்களில் ஒப்பந்தமானார். தான் படு கேவலமாக கலாய்க்க ஒரு காமெடி பீஸ் வேண்டும் என்பதற்காகவே பவர் ஸ்டாரை பல படங்களில் சிபாரிசு செய்தார் சந்தானம்.

அப்படி ஒப்பந்தமான படங்களில் ஒன்றுதான் வாலிப ராஜா.

ஆனால் பவர் ஸ்டார் ஒரு மோசடி ராஜா என்பது அம்பலமாகி அவர் சிறைவாசத்தை அனுபவித்து வருவதால், சத்தமில்லாமல் அவரைக் கழட்டிவிட்டார் சந்தானம்.

சேது, விசாகாவை மட்டும் கூட்டணி சேர்த்துக் கொண்டு வாலிப ராஜாவை ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் படத்தில் மனோதத்துவ டாக்டராக நடிக்கிறாராம் சந்தானம்.

'கோ', 'மாற்றான்' ஆகிய படங்களில் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சாய் கோகுல் ராம்நாத் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வாங்ஸ் விஷன் தயாரிக்கும் இந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகியும் உண்டு. சித்ரா லட்சுமணன், தேவதர்ஷினி, ஜே.பி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

 

தீபாவளி ஸ்பெஷலாக வருகிறது ரஜினியின் கோச்சடையான்!!

Rajini Kochadaiyaan Come As Diwali Special

கோச்சடையான் திரைப்படத்தை தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் என்றாலே, படம் தொடங்குவதற்கு பல மாதங்கள் முன்பே பரபரப்பு எகிறிவிடும்.

இதற்கு கோச்சடையானும் விலக்கல்ல. ஆரம்பத்தில் கோச்சடையான் எந்த மாதிரி படம் என்பதில் பலருக்கும் குழப்பம் இருந்ததது. எனவே எதிர்ப்பார்ப்பும் இல்லாமலிருந்தது. ஆனால் பரபரப்பான செய்திகளுக்குப் பஞ்சமில்லை. இதுவும் கூட நல்லதுதான் என்றே ரஜினியும் கருதினார்.

ஆனால் அவரது படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதால், தலைவரின் அடுத்த படம் என்ன என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். கோச்சடையான் சர்வதேசத் தரத்தில் உருவாகியுள்ளதாக இயக்குநர் சௌந்தர்யா உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து கூறிவருவதால், அவதார், டின் டின் ரேஞ்சுக்கு இப்போது எதிர்ப்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீடு இதோ அதோ என தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. மூன்று ஸ்டில்கள் தவிர ரசிகர்களுக்கு படத்தின் தோற்றம் குறித்து எதுவும் தெரியாது. ஆனாலும் இந்த மாதத்துக்குள் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகிவிடும் என்று கோச்சடையான் தரப்பில் கூறப்பட்டுள்ளதால், ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே கோச்சடையான் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதாகவும் படத்தின் புரமோஷன் வேலைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

படத்தின் டீஸர், 'மேக்கிங் ஆஃப் கோச்சடையான்', டிரெய்லர், பாடல்கள் உருவான விதம், கோச்சடையான் செல்போன் என இதுவரை எந்தப் படத்துக்கும் செய்யாத அளவு விளம்பரங்கள் இனி அணி வகுக்கப் போகின்றனவாம்.

தீபாவளியன்று கோச்சடையான் ரிலீஸ் செய்து ரசிகர்களை டபுள் தீபாவளி கொண்டாட வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.

 

அதெல்லாம் எனக்கு சரிபட்டு வராது: நித்யா மேனன்

No Need Act Like That Nithya Menon

ஹைதராபாத்: ஆடை குறைப்பெல்லாம் தனக்கு சரிபட்டு வராது என்றும், அப்படி நடிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளாராம் நித்யா மேனன்.

வெப்பம், 180 ஆகிய படங்களில் நடித்த நித்யா மேனன் தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கில் பிசியாக இருக்கிறார். கன்னடப் படங்களிலும் கவனம் செலுத்துகிறார். ஆனால் எந்த மொழியில் நடித்தாலும் சரி கவர்ச்சிக்கு அவர் தடா போட்டுள்ளார். நடிப்பை வைத்தே ரசிகர்களை கவர விரும்புகிறார்.

அவர் குட்டையாக இருக்கிறார், சற்று பூசினாற் போல் இருக்கிறார், கவர்ச்சியாக இல்லை என்று வரும் விமர்சனங்களை அவர் கண்டுகொள்வதே இல்லையாம். தெலுங்கில் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டுகையில் நித்யா கவர்ச்சியே வேண்டாம் என்கிறார். அதையும் மீறி யாராவது அவரிடம் கொஞ்சம் கவர்ச்சியில் தாராளம் காட்டலாமே என்றால் அவர்களை எரிப்பது போன்று பார்க்கிறாராம்.

ஆடையை குறைத்து நடிப்பதெல்லாம் எனக்கு சரிபட்டு வராது. அப்படி நடிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. நல்ல கதாபாத்திரங்கள் மட்டும் தான் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளாராம் நித்யா.