சர்ச்சைக்குரிய பார்ட்டி மீண்டும் நடத்துகிறார் : கேத்ரினா!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
சர்ச்சைக்குரிய பார்ட்டி மீண்டும் நடத்துகிறார் : கேத்ரினா!

6/21/2011 3:41:57 PM

பாலிவுட் முன்னணி ஹீரோயின் கேத்ரினா கைப்புக்கு கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 16ம் தேதியை மறக்க முடியாது. அன்று தனது பிறந்த நாள் விழாவை தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார். பாலிவுட் ஸ்டார்கள் குவிந்தனர். ஷாருக்கான், சல்மான் கானும் விழாவில் கலந்துகொண்டனர். திடீரென்று இரண்டு கான்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் பார்ட்டியே அல்லோலப்பட்டது. சந்தோஷ பார்ட்டி, மோதலில் முடிந்ததில் அப்செட் ஆனார் கேத்ரினா.

சம்பவம் நடந்து 3 வருடம் ஆகிவிட்டது. இதுவரை ஷாருக், சல்மான் பேசிக் கொள்வதே இல்லை. இவர்கள் சண்டை காரணமாக கடந்த 3 வருடமாக பிறந்த நாள் பார்ட்டியை நடத்தாமல் இருந்தார் கேத்ரினா. இந்நிலையில் அடுத்த மாதம் வர உள்ள தனது பர்த்டேக்கு பார்ட்டி வைக்க முடிவு எடுத்திருக்கிறார். இது பற்றி அவரது நெருங்கிய தோழி ஒருவர் கூறும்போது, ÔÔபர்த்டே பார்ட்டி கலாட்டாவால் அதிர்ச்சி அடைந்த கேத்ரினா பார்ட்டி கொடுப்பதையே நிறுத்திவிட்டார். அந்த சம்பவத்தால் ஒரு வாரம் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். இப்போது பயத்திலிருந்து மீண்டிருக்கிறார். 'பர்த்டே பார்ட்டி வேண்டும்Õ என்று சக ஹீரோ, ஹீரோயின்கள் கேட்பதால் அவர்களது விருப்பத்தை தட்டிக் கழிக்க விரும்பவில்லைÕÕ என்றார். பார்ட்டிக்கு ஷாருக்கான், சல்மான் கானுக்கும் அழைப்பு விடுக்க உள்ளாராம் கேத்ரினா.




 

கிசு கிசு - நடிகர் இயக்குனர் திடீர் மோதல்!

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நடிகர் இயக்குனர் திடீர் மோதல்!

6/21/2011 3:43:09 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

தம்பி இயக்குனரோடு கில்லி நடிகரு சேர இருந்த படம் கிடப்புக்கு போகுதாம்... போகுதாம்... நடிகருக்கு இயக்குனர் எழுதிய கதை பிடிக்கலையாம்... பிடிக்கலையாம்... இதனால நடிகருக்கும் இயக்குனருக்கும் லேசா முட்டிக்கிச்சாம்... முட்டிக்கிச்சாம்... இதனால சேர்ந்து படம் பண்ணக்கூடாதுனு ரெண்டு பேரும் முடிவு பண்ணியிருக்காங்களாம்... பண்ணியிருக்காங்களாம்...

சைக்கோ கதையை எடுத்து வாங்கி கட்டிக்கிட்ட மேனன் இயக்குனரு, மறுபடியும் ரொமான்ஸ் கதைக்கு மாறிட்டாராம்... மாறிட்டாராம்... ஜீவமான நடிகரோடு டீம் செட் பண்றவர், மறுபடியும் ஹாரிசான இசையோடு இணையுற முயற்சில இருக்காராம். அடிக்கடி போன்லயும், நேரத்தை ஒதுக்கி நேர்லயும் சந்திச்சு கதைய பற்றி இசைகிட்ட டிஸ்கஷன் நடத்துறாராம்... நடத்துறாராம்...

தானே ஹீரோவா நடிச்சு, படம் இயக¢கினாரு ரஞ்சித நடிகரு. திரும்ப ஹீரோ ஆசை வாட்டி வதைக்குதாம்... வதைக்குதாம்... ஆனா, பைனான்ஸ்தான் பெரிய பிரச்னையா இருக்காம். நடிச்சு, இயக்கிய படங்கள் எல்லாமே அவுட் ஆனதால, நடிகரை பார்த்தாலே பைனான்சியருங்க எஸ் ஆகுறாங்களாம்... ஆகுறாங்களாம்...




 

கமல் படத்தில் ஸ்ரேயாவுக்கு பதில் இஷா?


கமல் ஹாஸன் நடித்து இயக்கும் புதிய படம் விஸ்வரூபத்தில் ஸ்ரேயா நீக்கப்பட்டு அவருக்குப் பதில் இஷா ஷெர்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமலின் விஸ்வரூபம் படத்தில் சோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் இன்னொரு நாயகியாக முதலில் ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் இப்போது ஸ்ரேயா வேண்டாம் என கமல்ஹாஸனே கூறிவிட்டதாகத் தெரிகிறது. ஸ்ரேயாவுக்கு கதக் நடனம் எதிர்பார்த்த அளவுக்கு வராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விஸ்வரூபம் யூனிட்டைச் சேர்ந்த ஒருவர் கூறினார். ஆனால் எதனால் அவர் இந்த முடிவுக்கு வந்தார் என்று வெளிப்படையாக கூறவில்லை.

இப்போது ஸ்ரேயாவுக்கு பதில் இஷா ஷெர்வானியை ஒப்பந்தம் செய்துள்ளாராம். இந்த இஷா ஏற்கெனவே லக் பை சான்ஸ் மற்றும் கிஸ்னா படங்களில் நடித்தவர்.

டெலிபோட்டோ பிலிம்ஸ் தயாரிக்கும் விஸ்வரூபம் படத்துக்கு சங்கர் - எஸான் - லாய் இசையமைக்கிறார்கள். ஆகஸ்டில் படப்பிடிப்பு துவங்குகிறது.
 

கோடீஸ்வரி பட்டியலில் இடம்பெற்ற அனுஷ்கா!


வருஷத்துக்கொரு முறை நடிகர் நடிகைகளின் சம்பளப் பட்டியல் என்று குத்துமதிப்பாக ஒரு விவரம் வெளியாவதுண்டு. இதற்கு ஆதாரம் என்ன, யார் இந்த தகவல்களைத் தந்தார்கள் என்றெல்லாம் கேட்டுவிடக் கூடாது.

கறுப்பு வெள்ளை என கலர் கலராக நடிகர் நடிகைகள் வாங்கும் தொகைகளின் விவரங்களை அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட வரையில் தொகுத்துத் தருகிறோம்.

இன்றைய தேதிக்கு நம்பர் ஒன் நடிகை என்றால் அனுஷ்காதான். அம்மணி வாங்கும் சம்பளம் ரூ 1.5 கோடியாம் தெலுங்கில். தமிழிலும் கிட்டத்தட்ட அதே தொகை கொடுக்கத் தயாராக உள்ள தயாரிப்பாளருக்கு, கால்ஷீட் தருவதில் முன்னுரிமை உண்டு!

இந்த சம்பளம் தவிர்த்து, அன்பளிப்புகள், பரிசுகளும் உண்டு. அவை கணக்கில் வராதவை!

இவருக்கு இணையாக சம்பளம் பெறும் இன்னொரு நடிகை கையகல இடுப்பழகி இலியானா. இவர் தமிழில் நடிக்க 1.75 கோடி வரை பேசி, ஷங்கருக்காக பெரிய மனது பண்ணி 1.5 கோடிக்கு ஒப்புக் கொண்டாராம்.

முன்பு த்ரிஷாவும் இதே சம்பளம்தான் வாங்கிக் கொண்டிருந்தார். இப்போது மார்க்கெட் கொஞ்சம் டல்லடிக்கும் நிலையிலும் ரூ 1.40 கோடி வரை வாங்கிவிடுகிறாராம். சம்பள விஷயத்தை அவரது அம்மா கறாராகப் பார்த்துக் கொள்வதால் அந்த டென்ஷனே த்ரிஷாவுக்கு இல்லையாம்!

இரண்டாம் நிலையில் வரும் நடிகைகள் அசின், ஜெனிலியா மற்றும் தமன்னா. மூவருமே ஒரு கோடி பட்டியலில் உள்ளனர். சிறுத்தை வரும் வரையில் தமன்னாவின் மார்க்கெட் ஏக பிஸி. ஆனால் அந்தப் படத்துக்குப் பின் காணாமலே போய்விட்டார் தமன்னா. ஆனாலும் அவருக்கான வாய்ப்புகள் இப்போதும் வாசல் கதவைத் தட்டிக் கொண்டுதான் உள்ளன. வரவிருக்கும் வேங்கையில் அம்மணிக்கு சம்பளம் ரூ 1 கோடி என்கிறார்கள் கோலிவுட்டில்.

அசின் பாலிவுட் சீன் காட்டியே, ரூ 1 கோடி இலக்கிலிருந்து இறங்காமல் உள்ளார். ஜெனிலியா காணாமல் போகவேண்டிய நேரத்தில் கை கொடுத்து, ஒரு கோடி சம்பளமும் கொடுத்திருப்பவர் விஜய். இதில் கொடுமை என்னவென்றால், வேலாயுதம் பட நாயகி ஹன்ஸிகாவுக்கே சம்பளம் 30 லட்சம்தானாம்!

மூன்றாவது நிலையில் உள்ள நாயகிகளில் அமலா பால், ஓவியா, டாப்ஸி உள்ளிட்டோர் வருகின்றனர். இவர்களின் சம்பளம் ரூ 20 முதல் 30 லட்சம் வரை, படத்துக்கேற்ப வாங்கிக் கொள்கிறார்கள்.
 

ரஜினியை சிங்கப்பூரில் சந்தித்து நலம் விசாரித்த சிரஞ்சீவி!


சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பார்க்க சிங்கப்பூர் போனார் நடிகரும் காங்கிரஸ் பிரமுகருமான சிரஞ்சீவி.

ரஜினியின் நீண்ட கால நண்பர் சிரஞ்சீவி. உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ரஜினி, சமீபத்தில் டிஸ்சார்ஜ் ஆகி இப்போது சிங்கப்பூரிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

அவர் அடுத்த 15 தினங்களில் சென்னைக்கு வந்துவிடுவார் என்று கூறப்படும் நிலையில், அவரை சிங்கப்பூருக்கே சென்று நலம் விசாரித்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி.

இரு தினங்களுக்கு முன் சிங்கப்பூர் சென்ற சிரஞ்சீவி, ரஜினி தங்கியுள்ள வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்துப் பேசியுள்ளார்.

ரஜினி நலமாக உள்ளதாகவும், விரைவில் சென்னைக்கு வர ஆர்வமாக உள்ளதாகவும் சிரஞ்சீவி தெரிவித்தார்.
 

பெரிய இயக்குனர்கள் படத்தில் நடிக்க ஆசை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பெரிய இயக்குனர்கள் படத்தில் நடிக்க ஆசை!

6/21/2011 12:47:26 PM

செல்வராகவனிடமிருந்து விவாகரத்து வாங்கிய பிறகு வானம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ எண்டரி கொடுத்த சோனியா அகர்வால், தற்போது நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். இதுபற்றி அவர் கூறும் போது, தற்போது நிறைய படங்களில் நடிக்க முயிற்சி எடுத்து வருகிறேன். கவுதம் வாசுதேவ் மேனன், பாலா இயக்கத்தில் நடிக்க மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன் என்றார்.

 

மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ கார்த்திக் மகன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ கார்த்திக் மகன்?

6/21/2011 12:40:44 PM

பொன்னியின் செல்வன் படம் கைவிடப்பட்ட பிறகு, பல்வேறு கதைகளை யோசித்து வந்தார் மணிரத்னம். இனி இதிகாசக் கதைகள் இல்லை என்பதால், புதிய கதையை தேர்வு செய்துள்ளாராம். இந்தப் புதிய படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களில் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கும் ஒருவர். இன்னொரு ஹீரோவாக ஆர்யா அல்லது மகேஷ்பாபுவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறுகிறார்கள்.

 

ரசிகர்கள் கண்தானம் செய்ய விஜய் வேண்டுகோள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரசிகர்கள் கண்தானம் செய்ய விஜய் வேண்டுகோள்!

6/21/2011 12:35:51 PM

நடிகர் இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அவர் தனது ரசிகர்களுக்கு கண்தானம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் எனது பிறந்தநாளை ஏழை-எளியவர்களுக்கு நற்பணி செய்யும் நாளாக கொண்டாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் இயக்கத்தை சேர்ந்த 100 பேர் சென்னையில், என் முன்னிலையில் கண்தானம் செய்கிறார்கள். தமிழகம் எங்கும் என்னை நேசிக்கும் அனைவரும் கண்தானம் செய்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றார்.

 

அமிதாப்பிற்கு உடல்நிலை பாதிப்பு!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

அமிதாப்பிற்கு உடல்நிலை பாதிப்பு!

6/21/2011 12:29:11 PM

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெஞ்செரிச்சல், தொண்டை வலி காரணமாக உடலில் சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த கோளாறுகள் காரணமாக தன்னால் தொடர்ந்து நிற்க முடியாத நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது தனக்கு கவலை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

 

திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு மீண்டும் தலைவர் ஆனார் பாரதிராஜா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு மீண்டும் தலைவர் ஆனார் பாரதிராஜா!

6/21/2011 12:05:40 PM

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா, பொதுச்செயலாளராக அமீர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக பாரதிராஜா தலைவராக இருந்தார். அவருடைய பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, 2011-13ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல், நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. பாடலாசிரியர் பிறைசூடன் தேர்தலை நடத்தி வைத்தார். தலைவர் பதவிக்கு பாரதிராஜா மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எஸ்.முரளி போட்டியிட்டார். பொதுச்செயலாளர் பதவிக்கு அமீர், அப்துல் மஜித் போட்டியிட்டனர். 4 இணை செயலாளர்கள் பதவிக்கு 10 பேர்களும், 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 34 பேர்களும் போட்டியிட்டனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு சேரன், சமுத்திரக்கனி, பொருளாளர் பதவிக்கு எஸ்.பி.ஜனநாதன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் 2,100 பேருக்கு மேல் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் நேரில் வந்து ஓட்டு போட்டவர்களின் எண்ணிக்கை 1,279. நேற்று முன்தினம் இரவு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால், அனைத்து முடிவும் ஒரே நேரத்தில் தெரிய வேண்டும் என்று நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தலைவராக பாரதிராஜா வெற்றிபெற்றார். அவர் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 1,003. தபால் ஓட்டுகள் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை. பொதுச்செயலாளராக அமீர் வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 901. தபால் ஓட்டு எண்ணப்படவில்லை. இணைச் செயலாளர்களாக பிரபு சாலமன் (905), எஸ்.எஸ்.ஸ்டான்லி (716), தம்பிதுரை (696), வேல்முருகன் (655) வெற்றிபெற்றனர். நிருபர்களிடம் பேசிய அமீர், 'எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு வாக்களித்த இயக்குனர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இயக்குனர்கள் சங்கத்தில் ஏற்பட்டுள்ள ஒற்றுமை குறித்து சந்தோஷமாக இருக்கிறது. பொதுச்செயலாளராக வெற்றிபெற்ற நான், சிறப்பாக செயலாற்றுவேன். அடுத்தமுறை போட்டியிட மாட்டேன்' என்றார்.

 

கருப்புக்கு மூன்று கதாநாயகிகள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கருப்புக்கு மூன்று கதாநாயகிகள்!

6/21/2011 12:03:06 PM

கஞ்சா கருப்பு ஹீரோவாக நடிக்கும் படம் ‘மன்னர் வளைகுடா’. கஞ்சா கருப்பு இதில் மீனவராக வருகிறார். கடலும் கடல் சார்ந்த களமும் என்பதால் ராமேஸ்வரத்தில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். இயக்குனர் தனசேகரனிடம் மீனவர் பிரச்சனையை ஆழமாக சொல்ல வேண்டும் என்ற முனைப்பு இருக்கிறது. காமெடி நடிகர்களுக்கிருக்கும் ஒரே பிரச்சனை கதாநாயகி. மூன்று பேருமே புதுமுகங்கள் என்பதால் கஞ்சா கருப்புக்கு அப்படியொரு பிரச்சனை எழவேயில்லை.

 

மலேசியாவில் எம்ஜிஆர் சிலை: திறந்து வைக்கிறார் சத்யராஜ்!


சென்னை: மலேசியாவில் நிறுவப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் எம்ஜிஆரின் உருவச்சிலையை நடிகர் சத்யராஜ் வரும் ஜூன் 25-ம் தேதி திறந்து வைக்கிறார்.

ஐந்தரை அடி உயர வெண்கலச் சிலை இது. கும்பகோணத்தில் உருவாக்கப்பட்டது. சரவணன் ஸ்தபதி, கணேஷ் ஸ்தபதி ஆகியோர் இந்தச் சிலையை உருவாக்கியுள்ளனர்.

மலேசியாவின் பேரக் மாநிலம் உலுசபெத்தாங் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்படுகிறது. மலேசிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவரும் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான கோ சூ கூன் தலைமை வகிக்கிறார்.

இந்த விழாவில் எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்படக் கண்காட்சியும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. கண்காட்சியில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய அரிய பொருள்கள் இடம்பெறுகின்றன.

மலேசியாவில் கோலாலம்பூரில் இந்தியாவைச் சேர்ந்த விவேகானந்தருக்கு மட்டுமே சிலை இருக்கிறது. இவரையடுத்து, இந்தியத் தலைவர் ஒருவருக்கு மலேசியாவில் சிலை நிறுவப்படும் பெருமை எம்.ஜி.ஆருக்குக் கிடைத்துள்ளது.

ஜூன் 25 ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்தச் சிலை திறப்பு விழாவில் திரைப்பட நடிகர்கள் மயில்சாமி, வின்சென்ட் அசோகன், எம்.ஜி.ஆர். நற்பணி அமைப்பின் தலைவர் தாமோதரன் ஆகியோருடன் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் பங்கேற்கிறார்கள்.

 

'நிற்க கஷ்டமாக உள்ளது!' - உடல் நிலை பாதிப்பால் அமிதாப் அவதி


பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரே தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

நெஞ்செரிச்சல், தொண்டை வலி காரணமாக உடலில் சோர்வு ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.

அமிதாப் பச்சன் உடல் ரீதியாக பெரும் பிரச்சினைகளைச் சந்தித்தவர். 1982-ல் கூலி படப்பிடிப்பின்போது அவரது வயிற்றில் பெரிய அளவில் அடிபட்டது. உயிருக்குப் போராடிய அவரை கஷ்டப்பட்டு மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டனர்.

பின்னர் 2005-ல் மீண்டும் அவரது உடல் நிலை பெரும் பாதிப்புக்குள்ளானது. 1 ஆண்டு வரை ஆனது அவர் சாதாரண நிலைக்குத் திரும்ப.

இப்போது மீண்டும் நெஞ்செரிச்சல், வயிற்றுக் கோளாறு மற்றும் தொண்டையில் வலி காணப்படுவதாக அவர் தனது பிளாகில் எழுதியுள்ளார். இந்த கோளாறுகள் காரணமாக தன்னால் தொடர்ந்து நிற்க முடியாத நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமிதாப் நடித்துள்ள புத்தா என்ற படம் வரும் ஜூலை 1-ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கான விளம்பர பணிகளில் தீவிரமாக இருந்தார் அமிதாப். இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது தனக்கு கவலை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

 

வேங்கை: கைவிட்டது சன்!!


தனுஷின் அடுத்த படமான வேங்கையை முதலில் வெளியிடுவதாக இருந்த சன் பிக்சர்ஸ் இப்போது பின் வாங்கிவிட்டது.

எந்திரனுக்குப் பின் சன் பிக்சர்ஸ் கடைசியாக வெளியிட்ட படங்களில் வசூல் ரீதியாக எந்தப் படமும் தேறவில்லை, விருதுகளைக் குவித்த ஆடுகளம் உள்பட.

கடைசியாக வெளியான மாப்பிள்ளை மற்றும் எங்கேயும் காதல் இரண்டுமே தோல்வியைத் தழுவின.

இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் தனது வெளியீடுகளை சத்தமில்லாமல் குறைத்துக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் வாங்க ஒப்புக் கொண்ட பாலாவின் அவன் இவன் படத்திலிருந்து பின் வாங்கிய சன் பிக்சர்ஸ், இப்போது தனுஷின் வேங்கை படத்திலிருந்தும் விலகிக் கொண்டது. இத்தனைக்கும் படத்தின் இசை வெளியீடு கூட சன் டிவி ஸ்டுடியோவில்தான் நடந்தது.

இப்போது படத்தின் தயாரிப்பாளரான பாரதி ரெட்டியே நேரடியாக களமிறங்கியுள்ளார். திரையரங்குகளை இவரே நேரடியாக ஒப்பந்தம் செய்து வருகிறார்.

ஹரி இயக்கத்தில் தனுஷ் – தமன்னா நடித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். ஜூலை 7-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

 

மேக்கப்மேன்களுடன் நடிகை ஆண்ட்ரியா மோதல்: படப்பிடிப்பு நிறுத்தம்


பிரச்சினைக்குரிய நடிகைகள் பட்டியலில் முன்னணியில் உள்ளவர் நடிகை ஆண்ட்ரியா. தன்னைப் படம் எடுக்கக் கூடாது என முன்பு பத்திரிகைப் புகைப்படக் காரர்களுடன் மோதிய அவர், இப்போது மேக்கப்மேன்களுடன் மோத ஆரம்பித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, ராஜேஷ் இயக்கிவரும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் முக்கிய வேடத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.

ஆனால் இந்தபர் படத்தில், ஹன்சிகா மோத்வானிதான் கதாநாயகி.

இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று நடந்தது.

படப்பிடிப்புக்கு ஆண்ட்ரியா, டெல்லியை சேர்ந்த ஒரு பெண் மேக்கப் கலைஞரை அழைத்து வந்தார். இதற்கு, தமிழ் மேக்கப்மேன்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

சங்க சட்டதிட்டத்தின்படி, இங்குள்ள மேக்கப்மேனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஆண்ட்ரியாவிடம் வற்புறுத்தினார்கள். அதற்கு ஆண்ட்ரியா சம்மதிக்காததால், ‘மேக்கப்மேன்கள்’ அவரை சுற்றிலும் நின்றபடி, முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

வட இந்திய மேக்கப் மேன் இல்லாமல் தன்னால் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது என்று கத்திய ஆன்ட்ரியா, தரையில் உட்கார்ந்து போராட்டம் செய்துள்ளார்.

இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த பிரச்சினையில் வெளிநாட்டில் உள்ள உதயநிதி ஸ்டாலின் உடனடியாக தலையிட்டார். படப்பிடிப்பு குழுவினர் மூலம் ஆண்ட்ரியாவுக்கும், மேக்கப்மேன்களுக்கும் சமாதானம் செய்து வைத்தார்.

வட இந்திய மேக்கப் மேனும் அனுப்பப்பட்டார். அதன்பிறகு, படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது.