ஆர்யா,நடிகைகள் அனுஷ்கா,தமன்னா உட்பட 74பேருக்கு கலைமாமணி விருது

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-2485.jpg
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலை துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி ஆண்டு தோறும் ÒகலைமாமணிÓ எனும் மாநில அளவிலான விருதினை வழங்கிச் சிறப்பு செய்து வருகின்றது. விருது பெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் பொற்பதக்கம் வழங்கப்படுகிறது. 2008, 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளுக்கான கலைஞர்களைத் தேர்வு செய்து, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அப்பரிந்துரைகளையேற்று முதல்வர் கருணாநிதி அறிவிப்பு செய்துள்ளார்.

2008ம் ஆண்டுக்கான விருதுகள்: சசிரேகா பாலசுப்ரமணியன் (நாட் டியம்), காயத்ரி சங்கரன்(கர்நாடக இசை) வே.நாராயணப் பெருமாள்(கர்நாடக இசை) எம்.வி. சண்முகம்(இசைக் கலைஞர்), இளசை சுந்தரம்(இயற்றமிழ் கலைஞர்), பி.லெட்சுமி நரசிம்மன்(தவில் கலைஞர்), காளிதாஸ், திருமாந்திரை (நாதஸ்வரக் கலைஞர்). பிரேமா ஜெகதீசன்(நாட்டியம்), ரோபோ சங்கர்(சின்னத்திரை கலைஞர்), நாமக்கல் வேணுகோபால்(கிளாரிநெட்), திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி (நாதஸ்வரக் கலைஞர்கள்).

கவிக்கொண்டல் செங்குட்டுவன்(இயற்றமிழ் கலைஞர்), ச.சுஜாதா(நாட்டியம்), ராணி மைந்தன்( இயற்றமிழ் கலைஞர்), ஜி.கே. ராமஜெயம் (ஓவியக் கலை ஞர்), கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன்(இயற்றமிழ் கலைஞர்), தஞ்சை சுபாஷினி மற்றும் திருமதி ரமா (பரதநாட்டியக் கலைஞர்கள்), சி.வி. ரமேஸ்வர சர்மா(சமையல் கலைஞர்), திருமுருகன்( சின்னத்திரை இயக்கு நர்), பரத்வாஜ்(இசையமைப்பாளர்), ராஜீவ் மேனன்(ஒளிப்பதிவாளர்), சிற்பி குட்டப்பன் நாயர்(சிற்பக் கலைஞர்), தோஹா பேங்க் சீதாராமன்(பண்பாட்டுக் கலை பரப்புனர்). என்.எத்திராசன்(கலைப் பரப்புனர்), கருணாஸ் (நகைச்சுவை நடிகர்).

2009ம் ஆண்டுக்கான விருதுகள்:

காயத்ரி கிரீஷ் (கர்நாடக இசை), சேக்கிழார்(சின்னத்திரை வசனகர்த்தா), சாக்ஷி சிவா(சின்னத்திரை நடிகர்), மாளவிகா(சின்னத்திரை நடிகை), பூவிலங்கு மோகன்(சின்னத்திரை நடிகர்), எஸ்.முத்துராமலிங்கம் (கூத்துக் கலைஞர்), பி.முருகேஸ்வரி(கரகாட்டக் கலைஞர்), ரேவதி சங்கரன்(சின்னத்திரை நடிகை), தஞ்சை சின்னப்பொன்னு குமார்(கிராமியப் பாடகர்), எல். ஜான்பாவா(சிலம்பாட்டக் கலைஞர்), ரேவதி(வில்லுப்பாட்டுக் கலைஞர்), கே. கருப்பண்ணன்(ஒயிலாட்டக் கலைஞர்).

கே.ஏ. பாண்டியன்(நையாண்டி மேளக் கலைஞர்), எம். திருச்செல்வம்(நையாண்டி மேளக் கலைஞர்), சிவகங்கை வி.நாகு(நையாண்டி மேளக் கலைஞர்), டி.சேகர்(கிராமியக் கருவி இசைக் கலைஞர்), மு.இளங்கோவன்(கிராமியக் கலை பயிற்றுனர்), சா.கந்தசாமி(இயற்றமிழ்), ராஜேஷ் குமார்(இயற்றமிழ்), நாஞ்சில் நாடன்(இயற்றமிழ்), ரோகிணி (குணச் சித்திர நடிகை), சரண்யா (குணச் சித்திர நடிகை), சின்னி ஜெயந்த் (நகைச்சுவை நடிகர்).

2010ம் ஆண்டுக்கான விருதுகள்:

பொன்.செல்வ கணபதி(இயற்றமிழ்), பேராசிரியர் தே.ஞானசேகரன்(இயற்றமிழ்), டாக்டர் சு. நரேந்திரன் (இயற்றமிழ்), டாக்டர் தமிழண்ணல்(இயற்றமிழ்), திண்டுக்கல் ஐ.லியோனி (இலக்கியச் சொற்பொழிவாளர்), சொ. சத்தியசீலன்(சமயச் சொற் பொழிவாளர்), தேச.மங்கையர்க்கரசி(சமயச் சொற்பொழிவாளர்), டி.வி. கோபால கிருஷ்ணன்(இசை ஆசிரியர்), கே.என். சசிகிரண்(குரலிசைக் கலைஞர்), குடந்தை ஜெ. தேவிபிரசாத்(வயலின் கலைஞர்).
ஐ. சிவக்குமார்(மிருதங்க ஆசிரியர்), என்.எஸ்.ராஜம்(மிருதங்க கலைஞர்), ஸ்ரீனிவாசன்(வீணை கலைஞர்), ராஜேஷ் வைத்யா(வீணைக் கலைஞர்), திருவாரூர் எஸ். சாமிநாதன்(புல்லாங்குழல்), கே.வி. இராமானுஜம்(புல்லாங்குழல்), டாக்டர் தி.சுரேஷ் சிவன்(தேவார இசைக் கலைஞர்), கல்யாணி மேனன்(மெல்லிசைப் பாடகி), திருக்கடையூர் முரளிதரன்(நாதஸ்வரக் கலைஞர்), ரெட்டியூர் செல்வம்(தவில் கலைஞர்).

ஏ.ஹேம்நாத்(பரத நாட்டியம்), பிரசன்னா ராமசாமி(நாடகக் கலைஞர்), எப்.சூசை மாணிக்கம்(நாடக நடிகர்), ஆர்யா (திரைப்பட நடிகர்), அனுஷ்கா (திரைப்பட நடிகை), தமன்னா (திரைப்பட நடிகை). விருது வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி(ஞாயிற்றுக் கிழமை) மாலையில் நடைபெறும். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சின்னத் திரை விருதுகளும்&பாரதி விருது, எம்.எஸ். சுப்புலட்சுமி விருது, பாலசரஸ்வதி விருது ஆகியவைகளும் வழங்கப்படும். முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்குகிறார்.
 

ஆரண்ய காண்டத்துக்கு 53கட் டிரிபியூனல் செல்ல படக்குழு முடிவு

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-2490.jpg
‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்கு மறு ஆய்வுக்குழு 53 கட் கொடுத்துள்ளதால், டிரிபியூனலுக்கு செல்ல படக்குழு முடிவு செய்துள்ளது. எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் ‘ஆரண்ய காண்டம்’. இதில் ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா, யாஷ்மின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் முடிந்து தணிக்கைக்கு சென்றது. படத்தை பார்த்த தமிழக தணிக்கை அதிகாரிகள், படத்தில் வன்முறை அதிகமாக இருக்கிறது என்று சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். இதையடுத்து மறு ஆய்வுக்குழுவுக்கு படத்தை கொண்டு சென்றனர். படத்தை பார்த்த அவர்கள், 53 கட் கொடுத்துவிட்டு, ஏ சான்றிதழ் அளித்தனர். ‘இத்தனை கட் கொடுத்துவிட்டு ஏ சான்றிதழ் கொடுத்ததால் படக்குழுவினர் அதை வாங்க மறுத்துவிட்டனர். இதுபற்றி இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவிடம் கேட்டபோது, 1397967985 சர்வதேச தெற்காசிய திரைப்பட விழாவில் ஜூரி விருது வாங்கிய படம் இது. வசனங்களை மாற்ற வேண்டும் என்றும், வன்முறை அதிகமாக இருக்கிறது என்றும் 53 கட் கொடுத்தார்கள். இத்தனை கட் கொடுத்தால் படத்தின் கதையே மாறிவிடும். அத்தனை கட் கொடுத்துவிட்டு ‘ஏ’ சான்றிதழ்தான் தருவோம் என்கிறார்கள். இத்தனை கட் கொடுத்தபின் ஏ சான்றிதழை எப்படி ஏற்க முடியும்? அதனால் டிரிபியூனலுக்கு படத்தை அனுப்ப முடிவு செய்துள்ளோம்‘ என்றார்.

Source: Dinakaran
 

நயன்தாராவுக்கும் எனக்கும் அதிக வயது வித்தியாசம் இல்லை

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-2491.jpg
நயன்தாராவுக்கு அம்மாவாக நடிக்க, முதலில் தயங்கினேன் என்று மனிஷா கொய்ராலா கூறினார். ‘எலெக்ட்ரா’ என்ற மலையாள படத்தில் நயன்தாராவுக்கு அம்மாவாக நடித்துள்ளார் மனிஷா கொய்ராலா. இதில் நடித்தது பற்றி அவர் கூறியதாவது: ஆரம்பத்தில் இந்த கேரக்டரில் நடிக்க தயக்கம் இருந்தது. ஏனென்றால் நயன்தாராவுக்கும் எனக்கும் அதிக வயது வித்தியாசம் இல்லை. சில வருடங்கள் முன்னும் பின்னும் இருக்கும். அதனால் இது வொர்க் அவுட் ஆகுமா என்பது சந்தேகமாக இருந்தது. ஆனால், இயக்குனர் ஷ்யாம் பிரசாத் நம்பிக்கை அளித்தார். அதன்பிறகே ஈடுபாட்டுடன் நடித்தேன். இதில் என் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. நயன்தாராவும் நானும் அதிகமான காட்சிகளில் ஒன்றாக நடிக்கவில்லை. இருந்தாலும் நயன்தாரா இனிமையானவர். இந்தப் படத்தில் நடித்தபோது நான் ஆச்சர்யப்பட்ட நடிகர், பிரகாஷ் ராஜ். எந்தவொரு விஷயத்தையும் மிகவும் இயல்பாக செய்துவிடுகிற சிறந்த நடிகர் என்பதை இந்த ஷூட்டிங்கில் உணர்ந்தேன். தமிழில் தனுஷுக்கு மாமியாராக நடித்துள்ள ‘மாப்பிள்ளை’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதில் காட்சிக்கு காட்சி காமெடி இருக்கும். ‘எலெக்ட்ரா’ எதார்த்தமான படம் என்றால் ‘மாப்பிள்ளை’ கமர்சியல் படம்.
Source: Dinakaran
 

முத்துக்கு முத்தாக பாடல் வெளியீடு

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-2489.jpg
பாண்டியநாடு தியேட்டர்ஸ் சார்பில் தயாராகும் படம், ‘முத்துக்கு முத்தாக’. ராசு மதுரவன் இயக்குகிறார். கவிபெரியதம்பி இசையில் நா.முத்துக்குமார், நந்தலாலா, உமா சுப்பிரமணியன், ராசு மதுரவன் பாடல்கள் எழுதியுள்ளனர். இதன் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. மணிவண்ணன் வெளியிட, ஆர்.கே.செல்வமணி பெற்றார்.

விழாவில் சரண்யா பேசுகையில், ‘இதற்குமுன் ‘களவாணி’ படத்தில் நானும், இளவரசும் ஜோடியாக நடித்தோம். பொருத்தமான ஜோடி என்றார்கள். இந்தப் படத்திலும் நடித்துள்ளோம். மலையாள படங்களில், சின்ன கேரக்டர் கூட ரசிகர்கள் மனதில் நிற்கும்படி அமைந்திருக்கும்.

அதுபோல், இந்தப் படத்தில் நடித்த அனைவரும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள். எல்லா படத்திலும் நான், மகன்களுக்கு அம்மாவாகவே நடிக்கும் வாய்ப்பு அமைகிறது. நிஜத்தில் நான் இரு மகள்களுக்கு அம்மா. ஒரு படத்திலாவது மகளுக்கு அம்மா வேடத்தில் நடிக்க ஆசை’ என்றார்.
விழாவில் இளவரசு, நட்ராஜ், விக்ராந்த், ஹரீஷ், வீரசமர், பிரகாஷ், கஜினி, மோனிகா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை அருள்ராசன் தொகுத்து வழங்கினார்.
Source: Dinakaran
 

காதலர் குடியிருப்பில் உண்மை சம்பவம்

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-2487.jpg
வசிஷ்டா பிக்சர்ஸ் சார்பில் இந்துமதி தயாரிக்கும் படம், ‘காதலர் குடியிருப்பு’. அனீஷ், ஸ்ருதி, சரண்யா, அவினாஷ் நடிக்கின்றனர். ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கியுள்ளார். அடுத்த மாதம் 11&ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படம் பற்றி நிருபர்களிடம் ரமேஷ் கூறியதாவது:

‘குப்பி’க்கு பிறகு நான் இயக்கியுள்ள உண்மை சம்பவம், இந்தப் படம். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, பெங்களூரில் நடந்த சம்பவம் இது. உண்மை சம்பவத்தை படமாக்கும்போது, நிறைய கவனம் தேவை. நிஜ சம்பவங்களுக்கு மாறாக எதையும் மிகைப்படுத்தி சொல்ல முடியாது. காதலர்களின் நிஜ உணர்வுகளை யதார்த்தமாகப் பிரதிபலிக்கும் வகையில், படத்தை உருவாக்கியுள்ளேன். இதில் நடித்த அனைவரும் அந்தந்த கேரக்டராகவே மாறிவிட்டனர். பெங்களூரில் எந்தெந்த பகுதியில் சம்பவம் நடந்ததோ, அங்கு சென்று காட்சிகளை படமாக்கினேன். அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கும் வகையில், ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து சந்தனக்கடத்தல் வீரப்பன் கதையை படமாக்குகிறேன். பிறகு பிரபாகரன் கதையை இயக்குகிறேன்.
Source: Dinakaran
 

ரஜினி புதுப்படம் ராணா மார்ச்சில் படப்பிடிப்பு

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-2486.jpg
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ராணா; படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது. ஆக்கர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் ‘ராணா’ என்ற பெயரில் புதுப்படம் தயாரிக்கிறது. இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து, படையப்பா படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

இதில், ரஜினிகாந்த் 3 மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார். அவர் ஏற்கனவே மூன்று முகம் படத்தில் 3 வேடத்தில் நடித்தார். அதன்பின் இப்போது 3 வேடத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரத்தினவேலு ஒளிப்பதிவும். பட தொகுப்பை ஆன்டணியும் கவனிக்கின்றனர். டெக்னிக்கல் ஸ்பெஷல் எபக்ட்ஸ் விஷயங்களை சவுந்தர்யா ரஜினிகாந்த் கவனிக்கிறார்.
Source: Dinakaran
 

கடன் வாங்காமல் வாழ முடியாது :எத்தன் சொல்லும் கருத்து

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
‘களவாணி’ படத்தை அடுத்து, ஷெராலி பிலிம்ஸ் சார்பில், நசீர் தயாரிக்கும் படம் ‘எத்தன்’. விமல், சனுஷா ஜோடியாக நடிக்கிறார்கள். படத்தை இயக்கும் எல்.சுரேஷ் கூறியதாவது: கடன் வாங்காமல் இங்கு யாரும் வாழ முடியாது என்பதுதான் கதையின் மையக்கரு. படித்துவிட்டு பிசினஸ் பண்ண வேண்டும் என்று நினைக்கிறார் ஹீரோ விமல். அவரது அப்பா, தன்னை போலவே மகன் அரசு வேலைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறார். இதிலிருந்து விடுபட்டு பிசினஸ் பண்ணுவதற்காக பலரிடம் கடன் வாங்கி நஷ்டமடைகிறார் விமல். இவர் செய்யும் தவறால் ஹீரோயின் சனுஷாவும் பாதிக்கப்படுகிறார். பிறகு எப்படி இவர்கள் மீள்கிறார்கள் என்பது கதை. விமல் இதுவரை நடித்த யதார்த்தமான படங்களின் சாயலில் இதுவும் இருக்கும். சனுஷாவின் நடிப்பும் பேசப்படும் விதமாக இருக்கும். இந்தப் படத்துக்காக இசை அமைப்பாளர் தாஜ்நூர், வித்தியாசமான பாடல்களை அமைத்துள்ளார். கடன் வாங்குவது பற்றியும் கடன் வாங்கினால் ஏற்படும் அவஸ்தை பற்றியுமான பாடல் புதுமையாக இருக்கும். அதே போல மிமிக்ரி பாடல் ஒன்றும் இதில் இடம்பெற்றுள்ளது. அதுவும் வரவேற்கத்தக்கதாக இருக்கும். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. டப்பிங் பணி நடந்து வருகிறது. விரைவில் பாடல் வெளியீடு இருக்கும். இவ்வாறு சுரேஷ் கூறினார்.