ஒருவழியாக வனயுத்தம் படத்திற்கான தடை விலகி ரிலீஸ்க்கு தயாராகி வரும் நிலையில் படம் வெளியானால் இஸ்லாமியர்கள் கொதிப்பார்கள் என்று கூறியுள்ளார் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி.
வனயுத்தம் படத்தின் கதையின்படி, வீரப்பனின் அண்ணன் மாதையன் தமிழக போலீஸால் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்படுகிறார். அதே கோவை சிறையில், குண்டு வெடிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மதானியும் இருக்கிறார்.
மாதையன், மதானியிடம்15:16:28 உதவி கோர, "நிச்சயம் உதவி செய்கிறோம். எங்கள் ஆட்கள்தான் வெடிகுண்டு வெடிக்க வைப்பதில் கில்லாடிகள் ஆச்சே" என்கிறார் மதானி. இந்த காட்சிகளால், இஸ்லாமியர்கள் கொதித்து எழுவார்கள்... பாருங்கள்" என்கிறார் முத்துலட்சுமி.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட மதானி, 1998-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி, கோவை சிறையில் அடைக்கப்பட்டார். மதானியை விடுதலை செய்யக் கோரி தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன.
2006 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், அப்பாவி சிறைவாசிகளின் விடுதலையை முன்னிலைப்படுத்தி த.மு.மு.க போன்ற தமிழக முஸ்லிம் அமைப்புகள் தேர்தலை எதிர்கொண்ட விதமும், மதானி உள்ளிட்ட பலரது விடுதலைக்கு வழிவகுத்தது. குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒன்பதரை ஆண்டுகால சிறை வாழ்கையை முடித்துக் கொண்டு, 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி, விடுதலையாகி வெளியே வந்தார் மதானி.
இவரை ஒரு கதாபாத்திரமாக வனயுத்தம் படத்தில் காண்பிக்கிறார்கள் என்கிறார், முத்துலட்சுமி! அதுவும், கோர்ட்டாலேயே நிரூபிக்க முடியாத வெடிகுண்டு பற்றி பேசும் கேரக்டர்! அதுதான் இஸ்லாமியர்களை கோபப்பட வைக்கும் என்கிறார். இன்னும் எத்தனை தடை இருக்கோ தெரியலையே... பாவம் படைப்பாளிகள்.