ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத துறை சினிமா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த ஏஎல்எஸ். வீரய்யா எழுதிய 'சினிமாவும் நானும்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் கவிஞர் வாலி பேசியதாவது: வியர்வை சிந்தி உழைப்பவன்தான் சினிமாவில் வளர முடியும். காக்காய் பிடிப்பவன் வளர முடியாது. ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத துறை சினிமா. இதில் ஒழுக்கமாக இருப்பவர்கள் எஸ்.பி.முத்துராமன் போன்ற சிலர்தான். சினிமாவில் வெற்றியை மண்டைக்குள் கொண்டு போகக் கூடாது. தோல்வியை மனசுக்குள் கொண்டு போகக் கூடாது. எவ்வளவு வளர்ச்சி வந்தாலும் மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்.
திரையுலகைப் பொறுத்தவரை மழை விழுந்தாலும், மாடு சிறுநீர் கழித்தாலும் எந்த மாற்றமும் அடையாத பாறைபோல் உறுதியாக இருக்க வேண்டும். சினிமாவுக்கு வருவதற்கு நாடக அனுபவம் வேண்டும். சினிமாவே செல்லுலாய்டு வடிவிலிருக்கும் நாடகம்தான். ரயில்வே வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தவர் நாகேஷ். 'உன் முகத்தை கண்ணாடியில் பார்த்திருக்கிறியா, எந்த தைரியத்தில் சினிமாவுக்கு வந்த?' என்று அவரிடம் நான் கேட்டிருக்கிறேன். பிற்காலத்தில் அவர் வருகைக்காக எம்.ஜி.ஆர், சிவாஜியெல்லாம் 4 மணி நேரம் காத்திருந்த காலம் உண்டு.
'கண்ணதாசன் 4 ஆயிரம் பாடல்தான் எழுதி இருக்கிறார். நீங்கள்(வாலி) 15 ஆயிரம் பாடல் எழுதி இருக்கிறீர்களே..' என்று என்னிடம் சிலர் சொல்வதுண்டு. அவர் 54 வயது வரைதான் வாழ்ந்தார். எனக்கு 80 ஆகிவிட்டது. அவர் உயிரோடு இருந்திருந்தால் 20 ஆயிரம் பாடல்கள் எழுதி இருப்பார். அவர் எழுதிய 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்ற புத்தகம் வாழ்க்கை நெறிகளை விளக்கும். எனக்கு அதிகாரம் இருந்தால் அந்த புத்தகத்தை கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் பாட நூலாக்கி இருப்பேன். இவ்வாறு வாலி பேசினார்.


Source: Dinakaran
 

அசின் பிறந்த நாள்:கேக் ஊட்டி சல்மான் கான் வாழ்த்து!

Asin and Salman Khan
மும்பையில் பிறந்தநாள் கொண்டாடிய அசினுக்கு, சல்மான்கான் கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அசினுக்கு இன்று 25வது பிறந்த நாள். காலையிலேயே பிறந்த நாள் நிகழ்ச்சிகள் தொடங்கிவி்ட்டன. மும்பையில் அசின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி, போனிகபூர் தம்பதிகள் குடும்பத்தோடு வந்து வாழ்த்தினர்.
தொடர்ந்து இரு படங்களில் அசினுடன் ஜோடியாக நடித்த நடிகர் சல்மான்கானும் வந்திருந்தார். பிறந்த நாள் கேக் ஊட்டி, அசினுக்கு அவர் வாழ்த்துத்தெரிவித்தார்.
இந்தி நடிகர்கள் ஷாகித் கபூர், நீல் நிதின் முகேஷ், தபு ஆகியோரும் வாழ்த்தினர். விஜய், சூர்யா போன்றோர் டெலிபோனில் வாழ்த்தினர்.
பிறந்தநாளையொட்டி அசினுக்கு ஏராளமான பரிசு பொருள்கள் குவிந்தன. பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி அசின் கூறுகையில், “பிறந்தநாளை எனது பெற்றோருடன் கொண்டாடுவதையே விரும்புகிறேன். இந்த முறை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எனது பள்ளி, கல்லூரி தோழிகள் தன்யா, ரோஸ் இருவரும் எனது பிறந்தநாளுக்காக இரு தினங்களுக்கு முன்பே இங்கு வந்து விட்டனர். ரொம்ப சந்தோஷமாக பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.
இந்த பிறந்த நாளுக்கும் வழக்கம்போல பரிசுகளை அளித்தனர் என் பெற்றோர். கூடவே பர்த்டே ஸ்பெஷலாக கேரள உணவான அப்பம், அவல் பாயசம் என அசத்திவிட்டனர்…” என்றார்.
 

பாவனா கையில் கன்னடம் மட்டும்!

Bhavana
ஒரு நேரத்தில் படு பிசியாக நடித்து வந்த பாவனாவிடம் இப்போது கன்னடப் படங்கள் சிலவற்றைத் தவிர வேறு எதுவுமே இல்லையாம். இருந்தாலும் விசனப்படாமல் இருக்கும் படங்களில் நடித்து வருகிறாராம்
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து, அங்கிருந்து தெலுங்கில் புகழ் பெற்று, பிறகு மூன்று மொழிகளிலும் மாறி மாறி நடித்து வந்த பிசி நடிகை பாவனா. மூன்று மொழிகளிலும் அவர் பெயர் சொல்லும்படியாக பல படங்கள் அமைந்தாலும் கூட முன்னணி நடிகையாக பெரிய அளவுக்கு வர முடியவில்லை.
இப்போது சுத்தமாக அவருக்கு எந்த மொழியிலும் படம் இல்லையாம். கன்னடத்தில் மட்டுமே சில வாய்ப்புகள் உள்ளனவாம். அதில் மட்டும்நடித்துக் கொண்டிருக்கிறாராம் பாவனா. ஆனால் அதுகுறித்து அவரிடம் கவலை இல்லை.
நல்ல படத்திற்காக காத்திருக்கிறேன். இது பாவனாவின் சிறந்த படம் என்று சொல்லும்படியான படமாக அது அமைய வேண்டும். அது முடித்த பிறகுதான் கல்யாணம் மற்றதெல்லாம். அதுவரை கல்யாணத்திற்கு நான் அவசரப்படவில்லை.
நான் கவர்ச்சியை நம்பவில்லை. தேவையில்லாமல் கவர்ச்சியை காட்டி ரசிகர்களுக்கு மோகத் தீயை மூட்ட விரும்பவில்லை. நல்ல கதை இருப்பவர்கள், நான் நடித்தால் சிறப்பாக இருக்கும் என நினைப்பவர்கள் என்னிடம் வருகிறார்கள். அப்படிப்பட்ட கதையைத்தான் நான் எதிர்பார்க்கிறேன் என்கிறார் பாவனா.
பாவனா பேசுவதே சித்திரம் போலத்தான் இருக்கிறது!
 

‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படப்பிடிப்பில் ரகளை!

Karan and Anjali
குலசேகரத்தில் நடந்த நடிகர் கரணின், ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படப்பிடிப்பில் மர்ம கும்பல் புகுந்து ரகளை செய்ததால் படப்பிடிப்பு நிறுத்தபட்டது.
வடிவுடையான் இயக்கும் இப்படம், குமரி மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவமாம். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இன்று ஷூட்டிங் ஆரம்பித்த உடனே, திடீரென்று மர்ம கும்பல் ஒன்று புகுந்தது. அந்த கும்பலில் இருந்தவர்கள் படப்பிடிப்பு குழுவினரை கடுமையாக தாக்கினர். “எங்க ஊர் கதையை எப்படி நீ படமெடுக்கலாம்” என்று கூறிக்கொண்டே இயக்குநர் வடிவுடையானின் காரையும் அடித்து நொறுக்கினர். படத்தின் ஹீரோ கரண் உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தால் படப்பிடிப்பு பாதியில் நின்றுவிட்டது. தாக்குதல் குறித்து படப்பிடிப்பு குழுவினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
 

நமீதா கடத்திய கார் டிரைவர் :திருச்சியில் பரபரப்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் ரசிகர்களின் கவர்ச்சிக்கன்னியாக திகழும் நமீதா நமீதா. திருச்சி விமான நிலையத்திலிருந்து கடத்தப்பட்டார். சினிமாவில் நடித்த நேரம் போக மீதி நேரங்களில், நமீதா பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொள்கிறார்.
அழைப்பு
முன்னாள் கதாநாயகனும், மூத்த நடிகருமான எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்று நமீதாவுக்கு அழைப்பு வந்தது. அந்த விழாவில் கலந்துகொள்ள நமீதாவும் அவருடைய மானேஜர் ஜானும் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றனர்.
டிரைவர் உடையில்…
அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியதும், டிரைவருக்கான சீருடை அணிந்த ஒரு இளைஞர் ஓடிவந்து வரவேற்றார். “கரூர் நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்துச்செல்ல என்னைத்தான் அனுப்பி இருக்கிறார்கள்” என்று நமீதாவிடம் கூறினார். அதை நம்பி நமீதாவும் அவருடைய காரில் ஏறினார். உடனே காரை மின்னல் வேகத்தில் அந்த இளைஞர் ஓட்டிச் சென்றார்.
அதிர்ச்சி
நிஜமாகவே நமீதாவை வரவேற்று அழைத்துச்செல்ல வந்திருந்த டிரைவர், இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், நமீதாவை ஏற்றிச் சென்ற காரை பின்தொடர்ந்தார். இந்த சம்பவம் பற்றி அவர், விழா குழுவினருக்கு `செல்போன்’ மூலம் தகவல் கொடுத்தார். அதை தொடர்ந்து விழா குழுவினர் கரூரில் இருந்து ஐந்தாறு கார்களில் திருச்சியை நோக்கி விரைந்தார்கள். நமீதாவை ஏற்றி வந்த காரை வழியிலேயே மடக்கினார்கள். நமீதாவை கடத்த முயன்ற போலி டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள்.
ரசிகர்
போலீசில் பிடிபட்ட அந்த போலி டிரைவரின் பெயர், பெரியசாமி (வயது 26) திருச்சியை சேர்ந்தவர். அவர் நமீதாவின் தீவிர ரசிகர் என்றும், நமீதா மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக அவரை தன் காரில் அழைத்து சென்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Source: Dinakaran
 

நமீதாவை கடத்த முயன்றது ஏன்? பரபரப்பு பின்னணி தகவல்கள்!!

Namitha sizzles in Indra Vizha

நடிகை நமீதாவை கார் டிரைவர் கடத்த முயன்ற விவகாரத்தில் பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி விமான நிலையத்தில் இந்த சம்பவத்‌தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவி்ல்லை என்று நமீதா கூறியிருக்கிறார். தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் நடிகை நமீதாவுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்து வருவதால் மானாட மயிலாட போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், ‌பொது நிகழ்ச்சிகளிலும் அதிக அளவில் கலந்து கொள்கிறார். சினிமாவில் 30 நாள் 50 நாள் கால்ஷீட் கொடுத்து கஷ்டப்பட்டு நடிப்பதை விட, பொது நிகழ்ச்சிகளில் ஒரு மணிநேரம், ‌2 மணி நேரம் கலந்து கொண்டாலே லட்சங்களில் சம்பளம் கிடைக்கிறது என்பதால் அவர் பொது நிகழ்ச்சிகளில் அதிக ஈடுபாட்டுடன் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் மூத்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்று நமீதாவுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நமீதா தனது மேனேஜருடன்‌ சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றார். திருச்சி விமான நிலையத்தில் டிரைவருக்கான சீருடை அணிந்த ஒரு இளைஞர், ``கரூர் நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்துச்செல்ல என்னைத்தான் அனுப்பி இருக்கிறார்கள் என்று நமீயிடம் கூறியிருக்கிறார். நமீதாவும் அதை நம்பி காரில் ஏறினார்.

கார் மின்னல் வேகத்தில் புறப்பட்டது. சினிமா நடிகை என்பதால் மெதுவாக சென்றால் ரசிகர்கள் மொய்த்து விடுவார்கள் எனவேதான் வேகமாக செல்கிறேன் என்று அந்த டிரைவர் கூறியிருக்கிறார். இதற்கிடையில் நமீதாவை அழைத்துச் செல்வதற்காக வந்த உண்மையான டிரைவர், நமீதா வேறு காரில் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக விழாக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். நமீதாவை அழைத்து சென்ற மர்ம நபர் யார் என தெரியாமல் விழாக்குழுவினர் குழம்பினார்கள். நமீதா கடத்தப்பட்டது பற்றி அங்கிருந்த முக்கிய பிரமுகர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து விழாக்குழுவை சேர்ந்தவர்கள் 6 கார்களில் திருச்சி‌க்கு விரைந்தனர். நமீதாவை ஏற்றி வந்த காரை அவர்கள் பார்த்து மறி்த்து நிறுத்தினர். நமீதாவை கடத்த முயன்ற மர்ம ஆசாமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் பெரியசாமி (26) என்றும், திருச்சியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. நமீதாவை கடத்தியது ஏன்? என்று போலீசார் அவரிடம் கேட்டதற்கு, தான் நமீதாவின் தீவிர ரசிகன். அவர் கரூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக திருச்சி வருதாக கேள்விப்பட்டேன். நமீதாவை நேரில் பார்த்து பேச வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஒரு ரசிகனாக அவர் முன்னால் போய் நின்றால் பேச மாட்டார் என்பதால், கார் டிரைவர் வேடத்தில் அவரிடம் சென்று பேசினேன். அவரும் அதை நம்பி காரில் ஏறினார். அவரை பத்திரமாக கரூரில் கொண்டு வந்து விட வேண்டும் என்றுதான் நினைத்தேன். அதனால்தான் கரூர் நோக்கி வந்தேன். அதற்குள் விழாக்குழுவை சேர்ந்தவர்கள் வந்து என்னை மடக்கி விட்டனர். ஆனாலும் நமீதாவுடன் ஒரே காரில் சென்றது சந்தோஷமாக இருக்கிறது, என்று கூறியிருக்கிறார். ‌போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடந்த சம்பவம் குறித்து நமீதா கூறுகையில், திருச்சி விமான நிலையத்துக்கு கார் அனுப்பி வைப்பதாக விழாக்குழுவினர் தெரிவித்திருந்தனர். அதனால்தான் அந்த டிரைவரை உண்மையான டிரைவர் என்று நம்பி காரில் ஏறினேன். விழாக்குழுவினர் வந்து அந்த காரை மறித்தபோதுதான் உண்மை நிலவரமே எனக்கு தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் ரொம்ப அதிர்ச்சியாகி விட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னமும் மீளவில்லை, என்றார். இந்த கடத்தல் முயற்சி சம்பவத்தால் விழாக்குழுவினரிடையே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் நமீதா நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை புறப்பட்டு சென்றார்.
 

குளுகுளு ஆன கடு கடு வடிவேலு!

http://s.chakpak.com/se_images/84601_-1_564_none/vadivelu-wallpaper.jpg

காமெடி நடிகர்கள்  வடிவேலுவும், சிங்கமுத்துவும் நிலமோசடி விவகாரத்தில் மோதிக் கொண்ட சம்பவத்துக்கு பிறகு வடிவேலு ரொம்பவே மாறி விட்டார் என்கிறார்கள் கோடம்பாக்கத்துவாசிகர். முன்பெல்லாம் சூட்டிங் ஸ்பாட்டில் கடு கடுவென இருக்கும் வடிவேலு சமீப காலமாக குளுகுளுவென கூலாக இருக்கிறாராம். காரணம் என்னவாம்? சிங்கமுத்துவுடனான மோதலுக்குப் பிறகு வைகைப்புயல் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் குறிப்பிடும்படி இல்லையாம். அதிலும் சுந்தர் சி.யுடன் சண்டை போட்டு வந்தபிறகு வின்னர், தலைநகரம் மாதிரியான பேசப்படும் அளவுக்கு காமெடி எதுவும் ஒர்க்-அவுட் ஆகவில்லை. தனுஷூடன் முறைத்துக் கொண்டதால் ‌வாய்ப்புகள் வேறு நடிகருக்கு போகிறது. இதையெல்லாம் கூட்டிக் கழித்து பார்த்த வடிவேலு, சமீப காலமாக சினிமா வட்டாரத்தில் விறைப்பாக நடந்து கொள்வதை குறைத்துக் கொண்டிருக்கிறாராம். அதேநேரம் தனது காமெடிக் குழுவுவினரிடம் ஒரே மாதிரியான, சலித்துப் போன காமெடியாய் இல்லாமல் புதுசு புதுசா யோசித்து மக்களை சிரித்து ரசிக்க வைக்கும் காமெடியை உருவாக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
 

ஐங்கரனுடன் மோதிய பச்சான் டைரக்டர்!

Pachan clashes with Ayngaran
களவாடிய பொழுதுகள் என்ற பெயரில் படம் இயக்கி வரும் பச்சான் டைரக்டருக்கும், அந்த படத்தை தயாரிக்கும் ஐங்கரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாம். ஒருவழியாக இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் படத்தை பார்த்த தயாரிப்பு தரப்பிற்கு திருப்தி இல்லியாம். அந்த காட்சிகளை மட்டும் ரீ-ஷூ‌ட் பண்ணலாம் என்ற ஐங்கரனின் ஐடியாவை தட்டிக் கழித்து விட்டாராம் பச்சான். நான் என்ன நினைக்கிறேனோ அதுதான் படம். அதுல கருத்து சொல்றதுக்கோ, திருத்தம் சொல்றதுக்கோ ஒருத்தருக்கும் உரிமையில்லை. வேணும்னா இப்படியே ரிலீஸ் பண்ணுங்க. இல்லைன்னா விலை எவ்வளவுன்னு சொல்லுங்க. நானே படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணிக்கிறேன் என்றாராம். நல்லதா போச்சு என்று விலை சொன்ன நிறுவனத்திடம் பணத்தை அப்புறமா வாங்கிக்கோங்க என்று அவர் சொல்லியிருக்கிறார். பள்ளிக்கூடம் போன்ற தரமான படங்களை இயக்கிய பச்சான் இப்படி வம்பு பண்ணுவார்னு எதிர்பார்க்கலை என்று புலம்பிக் கொண்டிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.