உன் சமையல் அறையில்... இளையராஜாவின் இசைதான் ஹைலைட்!- பிரகாஷ்ராஜ்

சென்னை: உன் சமையல் அறையில் படத்தில் இளையராஜாவின் இசைதான் ஹைலைட்டாக இருக்கும் என படத்தின் இயக்குநரும் ஹீரோவுமான பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் - சிநேகா நடிக்கும் புதிய படம் உன் சமையல் அறையில். மலையாளத்தில் வந்த சால்ட் அன்ட் பெப்பர் படத்தின் ரீமேக் இது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தனித் தனிப் படமாக இது உருவாக்கப்படுகிறது.

உன் சமையல் அறையில்... இளையராஜாவின் இசைதான் ஹைலைட்!- பிரகாஷ்ராஜ்

மூன்று படங்களையும் பிரகாஷ்ராஜே இயக்குகிறார். ஹீரோவாகவும் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். மூன்று மொழிகளுக்கும் தனித்தனியாக இசையமைக்கும் ராஜா, பாடல்களையும் தனித்தனியாகவே போட்டுக் கொடுத்துள்ளாராம்.

உன் சமையல் அறையில்... இளையராஜாவின் இசைதான் ஹைலைட்!- பிரகாஷ்ராஜ்

இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறுகையில், "இந்தப் படத்தின் ஸ்பெஷல் இளையராஜாவின் இசை. மிகச் சிறந்த பாடல்களை, பின்னணி இசையை இளையராஜா அமைத்துள்ளார். மூன்று மொழிகளுக்கும் தனித்தனிப் பாடல்கள். வரும் மார்ச்சில் இசை வெளியீட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளேன்," என்றார்.

 

எப்ப பார்த்தாலும் நான் தான் கிடைச்சேனா?: குமுறும் நடிகை

சென்னை: சிங்கத்தின் தற்போதைய நாயகி தன்னை பற்றி வரும் வதந்திகளால் கடுப்பாகியுள்ளாராம்.

லிங்கமான இயக்குனரின் படத்தில் சிங்கத்திற்கு ஜோடியாக டோலிவுட்டின் முன்னணி நடிகை நடித்து வருகிறார். அம்மணி பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் களைப்பு ஏற்பட்டதாலும், சக்திவாய்ந்த விளக்கு வெளிச்சத்தில் நின்று படப்பிடிப்பில் வேலை பார்த்ததாலும் அவரது உடல் நிலை சற்று பாதிக்கப்பட்டு 2 நாட்கள் ஓய்வெடுத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தோல் வியாதி தீவிரமாகிவிட்டது என்று செய்திகள் வந்தன. இதை பார்த்த நடிகை கடுப்பாகிவிட்டாராம்.

ஒன்று யாருடனாவது காதல் என்று வதந்தியை பரப்புகிறார்கள் இல்லை என்றால் தோல் வியாதி என்று கூறுகிறார்கள். ஒரு மனுஷிக்கு களைப்பு ஏற்பட்டு ஓய்வெடுக்கக் கூட கூடாதா என்று குமுறுகிறாராம்.

 

இடம் பொருள் ஏவல்... விஜய் சேதுபதிக்கு ஜோடியான மனீஷா!

முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார் வழக்கு எண், ஆதலால் காதல் செய்வீர் படங்களில் நடித்த மனீஷா யாதவ்.

பந்தா இல்லாத நடிகை என்ற பெயரைப் பெற்று மனீஷாவுக்கு அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் வருகின்றன.

சமீபத்தில் இவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் நன்றாகப் போனது. நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.

இடம் பொருள் ஏவல்... விஜய் சேதுபதிக்கு ஜோடியான மனீஷா!

அடுத்து ஜன்னல் ஓரம் படத்தில் நடித்தார். இப்போது பட்டயக் கெளப்பணும் பாண்டியா படத்தில் நடித்து வருகிறார்.

இப்போது லிங்குசாமி தயாரிக்க, சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு நடிக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மனீஷா.

மனிஷாவைப் பொருத்தவரை இது பெரிய திருப்பு முனைதான். படப்பிடிப்பு கொடைக்கானலில் மார்ச் மாதம் தொடங்குகிறது.

 

சூது கவ்வும் சிம்ஹா - அதிதி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்!

சென்னை: சூது கவ்வும் படத்தில் நடித்த சிம்ஹா மற்றும் அதிதி நடிக்கும் புதிய ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்.

ஜீரோ ரூல்ஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் டாக்டர் எல்.சிவபாலன் மற்றும் காபி சினிமாஸ் இணைந்து தயாரித்து வழங்கும் புதிய திரைப்படம் 'உறுமீன்'.

சூது கவ்வும் சிம்ஹா - அதிதி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்!

இது ஒரு ஆக்ஷன், திரில்லர் கதை. இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். அச்சு இசையமைக்கிறார். ஸ்ரீசரவணன் ஜி.மனோகரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சூது கவ்வும் சிம்ஹா - அதிதி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்!

சூதுகவ்வும், நேரம், ஜிகர்தண்டா திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக அதிதி நடிக்கிறார்.

முக்கியமான கதாபாத்திரத்தில் காளி, வெங்கட், கலையரசன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முன்னனி நடிகர் ஒருவருடன் பேச்சு நடத்தி வருகின்றனர். இப்படத்தின் பூஜை இன்று ஜீரோ ரூல்ஸ் அலுவலகத்தில் நடந்தது. தயாரிப்பாளர் சிவி குமார் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இதில் கலந்து கொண்டனர்.

சூது கவ்வும் சிம்ஹா - அதிதி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் உறுமீன்!

கார்த்திக் சுப்பாராஜ் கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார். இப்படப்பிடிப்பு மார்ச் மாதம் 5-ஆம் தேதி சென்னையில் தொடங்கி, கோவை, ஹைதரபாத் ஆகிய இடங்களில் நடக்கிறது.

 

சூரியத் தொலைக்காட்சியை விட்டு வெளியேறும் சித்தி?

சென்னை: லோக்சபா தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக முடிவெடுத்துள்ள சித்தி விரைவில் சூரியத் தொலைக்காட்சியை விட்டு வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.

சித்தி மூலம் சேனலில் நுழைந்த அவர் படிப்படியாக ப்ரைம் டைமில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்.

நாட்டாமை கணவரின் கட்சி ஆளுங்கட்சியை ஆதரித்த போதும் சீரியல்களை ஒளிபரப்புவதை நிறுத்தவில்லை சூரியச் சேனல்.

லோக்சபா தேர்தலில் தற்போது 40 தொகுதிகளிலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக நாட்டாமை அறிவித்துவிட்டார். சித்தியும் அவருடன் சுற்றுப்பயணம் செய்யப் போகிறாராம்.

இதனால் சூரியச் சேனலில் சித்தி நிறுவனத்தின் சார்பில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சீரியல்கள் நிறுத்தப்படுமா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.

மனைவி பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் அதற்கு ஈடாக ரூ 50 கோடி வேண்டும் என்று இலை தரப்பிடம் நாட்டாமை கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எதற்கு அவ்வளவுப் பணம் என்று கேட்டதற்கு, மனைவி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், சூரிய டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களையும் நிறுத்தி விடுவார்கள். அதனால் கடுமையான நிதி இழப்பு ஏற்படும். அதை ஈடு செய்யும் விதமாக, பணம் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு தலைமையோ இலை டிவியில ப்ரைம் டைம் ஸ்லாட் தருகிறோம் என்று கூறியதாகவும், சூரிய டிவி அளவுக்கு இலை டிவியில் டிஆர்பி ரேட்டிங் கிடையாது. அதனால, பணமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டாராம் நாட்டாமை. அதற்கு அதிமுக தலைமையோ பார்க்கலாம் என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டாராம்.

சூரிய டிவிக்கும் சித்திக்கும் இடையே கிட்டத்தட்ட 15 வருடத்திற்கும் மேலாகவே நட்பு உள்ளது. தொழில் வேறு அரசியல் வேறு என்று முடிவு செய்வார்களா? அல்லது சீரியல்களை உடனடியாக நிறுத்தி விடுவார்களா? என்பது போகப் போகத் தெரியும்.

 

மக்களவைத் தேர்தலில் ஆதரவு யாருக்கு? - ரஜினி ரசிகர்கள் ஆலோசனையா?

மக்களவைத் தேர்தலில் ஆதரவு யாருக்கு? - ரஜினி ரசிகர்கள் ஆலோசனையா?

சென்னை: மக்களவைத் தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது குறித்து ரஜினி ரசிகர்கள் சென்னையில் கூடி ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் சேலத்திலும் கூடி ஆலோசனை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த செய்திகளை ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் மறுத்துள்ளது.

ரஜினி வாய்ஸ்

தேர்தலுக்குத் தேர்தல் ரஜினி வாய்ஸ் குறித்து அரசியல் கட்சிகள், பத்திரிகைகள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருப்பது வழக்கம்.

1996, 1998, 2004- தேர்தல்களில் மட்டும் இந்தக் கட்சிக்கு ஆதரவு என ரஜினி வாய்ஸ் கொடுத்தார். ஆனால் அதன் பிறகு, ரசிகர்கள் தங்கள் விருப்பப்பட்ட கட்சிக்கு வாக்களிக்கலாம் என்று கூறிவிட்டார்.

இதனால் ரசிகர்களை வளைப்பதில் திமுக, அதிமுக இரண்டுமே தீவிரமாக வேலை பார்ப்பது வழக்கும். குறிப்பாக திமுக.

பாஜக கோரிக்கை

கடந்த சட்டமன்ற தேர்தலில் நல்லாட்சி அமைக்கும் கட்சிக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் ரஜினி எந்த கட்சியை ஆதரிப்பார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. நரேந்திர மோடியுடன் நெருக்கமான நட்பு கொண்ட அவர், பாஜகவுக்கு ஆதரவு ஆதரவு தெரிவிக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது.

பாஜகவினரும் ரஜினியின் ஆதரவை மேடை தோறும் கோரி வருகின்றனர்.

சென்னையில்

இந்நிலையில்தான் தமிழகம் முழுவதிலும் இருந்து ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள், ரஜினி ரசிகர் மன்ற பட்டதாரிகள் பேரவை, இளைஞர் பேரவையினர் ஆகியோர் சென்னையில் கூடி தேர்தலில் ஆதரவு யாருக்கு என ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின.

கூட்டத்தில், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்து சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அடுத்து சேலம்

மேலும் சென்னையை அடுத்து சேலத்தில் கூட்டம் நடத்தி ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தீர்மானம் நிறவேற்றி ரஜினியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

மறுப்பு

ஆனால் இந்த தகவல்களை அடியோடு மறுத்துள்ளனர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற சென்னை நிர்வாகிகள். இதுகுறித்து சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ராமதாஸிடம் கேட்டபோது, "இப்படியொரு நிகழ்வு நடக்கவே இல்லை. தேர்தல் குறித்து எந்த முடிவையும் தலைவர்தான் எடுப்பார். ரசிகர்கள் எடுக்க முடியாது. இப்படியொரு கூட்டம் எங்கே நடந்ததென்று எங்கள் யாருக்கும்தெரியாது. சேலம் மாவட்ட நிர்வாகிகளைக் கேட்டபோது, அப்படியொரு நிகழ்ச்சியை நடத்தும் திட்டம் இல்லை என்றுதான் சொன்னார்கள். யாராவது தனிப்பட்ட முறையில் பேசினார்களா என்று தெரியவில்லை. அதிகாரப்பூர்வமான நிர்வாகிகள் யாருக்கும் இதுபற்றிய தகவலே இல்லை," என்றார்.

 

இன்று ரஜினி - லதா 34வது திருமண நாள்! - வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி - லதா தம்பதியரின் 34வது திருமண நாளுக்கு வாழ்த்துச் சொல்ல ரசிகர்கள் திரண்டனர்.

திரையுலகில் பிற நடிகர்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் உதாரணமாகத் திகழும் தம்பதியர் ரஜினிகாந்த் - லதா.

இருவருக்கும் கடந்த 1981-ம் ஆண்டு இதே நாளில் திருப்பதியில் திருமணம் நடந்தது. நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் சிலரைத் தவிர வேறும் யாருக்கும் திருமணத்துக்கு அழைப்பு தரவில்லை.

இன்று ரஜினி - லதா 34வது திருமண நாள்! - வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள்

பத்திரிகையாளர்கள் நிச்சயம் வரவேகூடாது என பிரஸ் மீட் வைத்தே கூறிவிட்டார். அப்படியும் மீறிச் சென்ற பத்திரிகையாளரைக் கடுமையாக எச்சரித்து அனுப்பினார் ரஜினி.

அதன் பிறகு சென்னையில் அனைவரையும் அழைத்து திருமண வரவேற்பு நடத்தினார்.

ரஜினி பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், திரையுலகைத் தீர்மானிக்கும் சக்தியாக அவர் திகழ்ந்தாலும், குடும்பத்தைப் பொருத்தவரை ஒரு எளிய தலைவனாக, மனைவிக்கு மரியாதை கொடுத்து, அதற்கேற்ப நடக்கும் ஒரு கணவனாக, பிள்ளைகளுக்கு அன்பான தகப்பனாகத் திகழ்கிறார்.

இந்த ஆண்டு திருமணம், அடுத்த ஆண்டு விவாகரத்து, அதற்கடுத்த சில மாதங்களில் மறு திருமணம்.. என்பதே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை முறையாகிவிட்ட இந்த திரையுலகில்... ரஜினி- லதா உதாரணத் தம்பதியராகத் திகழ்கின்றனர்.

இந்த ஆண்டு இருவருக்கும் திருமணமாகி 33 ஆண்டுகள் முடிந்து, 34 ஆவது ஆண்டு பிறக்கிறது. ஆண்டு தோறும் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 மட்டுமல்ல, திருமண நாளான பிப்ரவரி 26-ம் தேதியும் வாழ்த்துச் சொல்ல அவர் வீட்டுக்கு ரசிகர்கள் செல்வது வழக்கம். அவர்களை வரவேற்று இனிப்பு வழங்குவார் லதா ரஜினிகாந்த்.

இந்த ஆண்டும் ஏராளமான ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காலையிலிருந்து ரஜினிக்கும் லதாவுக்கும் மலர்க் கொத்துகள், பரிசுகள் கொடுத்து வாழ்த்துக் கூறி வருகின்றனர். அவர்களை வரவேற்று நன்றி கூறி இனிப்பு வழங்கினார் லதா ரஜினி.