கோலிவுட்டில் தனுஷின் தம்பியும் ஹீரோ தான் தெரியும்ல?

சென்னை: கோலிவுட்டில் தனுஷின் தம்பியும் ஹீரோ தான் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

தனுஷுக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். அவரும் இயக்குனராக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கோலிவுட்டின் இளம் ஹீரோக்களில் தனுஷின் தம்பியும் ஒருவர் என்பது உங்களுக்கு தெரியுமா?

கோலிவுட்டில் தனுஷின் தம்பியும் ஹீரோ தான் தெரியும்ல?

யாரப்பா அது என்று கேட்கிறீர்களா? அது நம்ம எஸ்டிஆர் என்ற சிம்புவே தான். என்ன தனுஷின் தம்பி சிம்புவா என்று நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது. இதை நாங்கள் சொல்லவில்லை தனுஷே தெரிவித்துள்ளார். என் அண்ணன் செல்வராகவன் படத்தில் என் தம்பி சிம்பு நடிக்கிறார். வாழ்த்துக்கள் சகோதரர்களே என்று தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் சிம்புவை தம்பி என்று அழைத்துள்ளது பெரிய விஷயமா என்றால் ஆமாம் என்பதே பதில். ஒரு காலத்தில் எலியும், புலியுமாக இருந்தவர்கள் அவர்கள். பின்னர் பொது நிகழ்ச்சிகளில் பார்த்தால் பிறருக்காக சிரிக்க மட்டும் செய்தார்கள்.

அதன் பிறகு கட்டிப்பிடித்து நட்பு பாராட்டினார்கள். ஒரே துறையில் இருக்கும் 2 ஹீரோக்கள் எதிரிகளாக இருந்து சகோதரர்களாக மாறியுள்ளது நல்ல விஷயம். கீப் இட் அப் தனுஷ்.

 

இயக்குநர் கார்வண்ணன் மரணம்... எம்ஜிஆர் கையால் ஆட்டோ பெற்றவர்!

இயக்குநர், நடிகர் கார்வண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 55.

பாலம், புதிய காற்று, மூன்றாம்படி, தொண்டன் உள்பட 6 படங்களை இயக்கியவர் கார்வண்ணன். இவர் சில படங்களைத் தயாரித்துமிருக்கிறார்.

இவர் எடுத்த அனைத்துப் படங்களுமே புதிய விஷயங்களை மையப்படுத்தியிருக்கும்.

பாலம் படத்தில்தான் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதல் முறையாக சினிமாவில் நடித்தார்.

இயக்குநர் கார்வண்ணன் மரணம்... எம்ஜிஆர் கையால் ஆட்டோ பெற்றவர்!

கார்வண்ணனின் புதிய காற்று படத்தைத் தழுவி வந்த படம்தான் இயக்குநர் ஷங்கரின் இந்தியன் என்பார்கள்.

கார்வண்ணனின் இளமை பின்னணி மிகுந்த சுவாரஸ்யமானது. அவர் நந்தனம் கல்லூரியில் எம்ஏ படித்தபோது, அன்றைய முதல்வர் அமரர் எம்ஜிஆர் கையால் பரிசு பெற்றிருக்கிறார்.

பின்னொரு நாள் சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த முதல்வர் எம்ஜிஆர் பார்வையில் அவர் பட்டுவிட, காரை நிறுத்தி, தன் உதவியாளரை அனுப்பி கார்வண்ணனை அழைத்து வரச் சொன்னாராம் எம்ஜிஆர். அவரை தன் காரில் ஏற்றிக் கொண்டு, பரிசு பெறும் அளவு நன்றாகப் படித்த மாணவனான நீ, இப்போது என்ன செய்கிறாய் என விசாரித்தாராம். வேலையில்லாமல் அலைந்து கொண்டிருப்பதை கார்வண்ணன் சொன்னதும், முகவரியை வாங்கிக் கொண்டு இறக்கிவிட்டாராம்.

அடுத்த சில தினங்களில் அன்றைய போக்குவரத்து துறை அமைச்சர் முத்துசாமி மூலம் ஒரு புதிய ஆட்டோவைக் கொடுத்தனுப்பியுள்ளார் எம்ஜிஆர். படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும்வரை அந்த ஆட்டோவை ஓட்டி பிழைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1990-ல் திரைப்பட இயக்குநரானார் கார்வண்ணன். அப்போது எம்ஜிஆர் அமரராகிவிட்டிருந்தார்.

அந்த ஆட்டோவை இப்போதும் வீட்டுக்கு முன் நிறுத்தி வைத்திருக்கிறார் கார்வண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்வண்ணன் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடக்கின்றன.

 

இரட்டை வேடம் போடும் நீத்து சந்திரா!

கொஞ்ச நாள் தமிழ் சினிமாவில் காணாமல் போயிருந்த நீத்து சந்திராவை மீண்டும் லைம் லைட்டில் கொண்டு வந்தது என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா வீடியோதான்.

கடைசியாக அவர் நடித்த பெரிய படம் அமீரின் ஆதி பகவன். வேறு படங்களே இல்லாத நிலை. இப்போது பெரிய படம் ஒன்றில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இரட்டை வேடம் போடும் நீத்து சந்திரா!

‘எல்லாம் அவன் செயல்', ‘என் வழி தனி வழி' ஆகிய படங்களை இயக்கிய ஷாஜி கைலாஸ், இந்த இரண்டு படங்களின் ஆர்.கே. இணையும் புதிய படத்தில்தான் நீத்து இரட்டை வேடம் போடுகிறார்.

இப்படத்திற்கு ‘வைகை எக்ஸ்பிரஸ்' என்று பெயர் வைத்துள்ளனர். இதன் பூஜை வருகிற 16-ந் தேதி ஏ.வி.எம். திரையரங்கில் நடைபெறவிருக்கிறது. இனியா, சுஜா வாருணி, கோமல் சர்மா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தை ஆர்.கே. பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

 

பறக்கப் பறக்க பயமா இருந்துச்சுடா பரமா... அந்தரங்கத்தில் மிதந்த ராய் லட்சுமி!

சென்னை: ஸ்கைடைவிங் பண்ணிய அனுபவத்தை நினைத்து இன்னமும் சிலிர்த்துக் கொண்டிருக்கிறார் நடிகை ராய் லட்சுமி. ப்ளைட்டில் இருந்து ஸ்கைடைவிங்கிற்காக குதித்த போது, ‘ஒரு நிமிடம் செத்துப் பிழைத்தது போன்று இருந்ததாம் அவருக்கு

விமானத்தில் இருந்து 15ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து, பாராசூட் மூலம் தரை இறங்குவது தான் ஸ்கைடைவிங். உலகத்தின் அத்தனை சாகசங்களையும் செய்து விட வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறாராம் ராய் லட்சுமி.

பறக்கப் பறக்க பயமா இருந்துச்சுடா பரமா... அந்தரங்கத்தில் மிதந்த ராய் லட்சுமி!

அதன்படி, இந்த புது வருஷத்தை த்ரில்லோடு ஆரம்பிக்க நினைத்து, வெற்றிகரமாக ஸ்கைடைவிங் முடித்துத் திரும்பியிருக்கிறார். ஸ்கைடைவிங் போது தான் மெர்சலான அனுபவத்தை, ராய் லட்சுமி விகடனுக்கு பேட்டியாக அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :-

தனி விமானம்...

ஸ்கைடைவிங் பண்றதுக்காக எல்லாரும் துபாய் போனோம். எங்க குடும்பத்துல நிறைய பேர் ஸ்கைடைவிங் பண்ணலாம்னு முடிவு பண்ணினதால, எங்களுக்கே எங்களுக்குனு தனி விமானம் புக் பண்ணோம்.

ஏ டு இசட் செக்கிங்...

ஸ்கைடைவிங் பண்ற நாள் அன்னைக்குக்கு முதல்ல உடம்பை ஏ டு இசட் டாக்டர் செக் பண்ணினார். அந்த டெஸ்ட்ல பாஸ் பண்ண பிறகு, பக்கம் பக்கமா நிறைய டாக்குமெண்ட்ஸ்ல கையெழுத்து வாங்கினாங்க.

தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோ...

அது எல்லாத்தையும் படிக்கணும்னா, முழுசா ஒரு வாரம் ஆகும். அத்தனை அக்ரிமெண்ட். என்னென்னமோ எழுதியிருக்கே... தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமா?னு பயமாக் கூட இருந்தது. அப்புறம் தனி பிளைட்ல ஏத்திட்டாங்க.

பயம்...

டைவிங் சூட், பெல்ட் எல்லாம் கட்டிக்கிட்டு பிளைட்ல ஏறி உட்கார்ந்தோம். அதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை பிளைட்ல போயிருந்தாலும், அப்போ பிளைட் பறக்க ஆரம்பிச்சப்ப பயம் வயித்தை அடைக்குது.

ரசிக்க முடியாத அழகு...

பிளைட் உயரத்துக்குப் போக போக துபாயின் அழகும், உயர உயரமான கட்டடங்களும் கலர்புல் ட்ரீட்டா இருந்தது. ஆனா, ஸகைடைவிங் பயத்துல அதையெல்லாம் எங்களால ரசிக்க முடியலை.

வெறும் காத்து தான் வந்தது....

இத்தனைக்கும் எங்கக் கூட வந்த ஸ்கைடைவிங் பயிர்சியாளர்கள் எங்க பயத்தைப் போக்க ரொம்ப கேஷுவலா பேசிட்டே வந்தாங்க. ஆனா எங்களுக்கோ பேப்பப்பேனு வெறும் காத்து தான் வந்துச்சு.

பேய் அறைஞ்ச மாதிரி...

அவங்கள்ல ஒருத்தர், ‘கமான் கமான் எல்லாரும் போட்டோ எடுத்துப்போம். யாரும் மிஸ் ஆகக்கூடாது. ஏன்னா இது நம்ம கடைசி போட்டோவாக் கூட இருக்கலாம்'னு சொல்லி சிரிச்சார் பாருங்க...பேய் அறைஞ்ச மாதிரி ஆகிருச்சு. ‘ஹேய் சும்மா கலாட்டா பண்ணினேன். கூல்னு சிரிச்சார்.

யார் பர்ஸ்ட்...

குதிக்க வேண்டிய இடம் வந்ததும், யார் முதல்ல குதிக்கப் போறாங்கனு கேட்டாங்க. அக்கா, பிரண்ட்ஸ் எல்லாரும் என்னை முதல்ல தள்ளி விட்டாங்க.

உயிர்பயம்...

அப்போ கிரவுண்ட்ல இருந்து 15 ஆயிரம் அடி உயரத்துல பறந்துட்டு இருந்தது விமானம். அப்போக் கூட எனக்கு பெரிய பயம் இல்லை. ஆனா, விமானத்தின் கதவைத் திறந்ததும் ‘ஜோஷ்ஷ்..'னு அவ்வளவு வேகமா காத்து உள்ளே வந்துச்சு பாருங்க... உயிர் பயம் என்னனு அப்பத்தான் தெரிஞ்ஸது.

அப்படி ஒரு காற்று...

அடிக்கற காத்துல முகச்சதைகள் எல்லாம் மேலயும், கீழயும் போகுது. எதையும் சரியாப் பார்க்கக் கூட முடியலை. கதவுகிட்ட என்னைத் தள்ளிட்டுப் போய் நிப்பாட்டினாங்க.

ப்ளீஸ்... ஒரு 5 நிமிஷம்...

நான் கதவை இறுக்கமாப் பிடிச்சுட்டு, ‘ப்ளீஸ்... ப்ளீஸ்...அஞ்சு நிமிஷம், அப்புறம் குதிக்கறேன்'னு சொல்றேன். ‘அஞ்சு நிமிஷத்துல மனசு மாறிடுவீங்கனு சொல்லி என்னைத் தள்ளியே விட்டுட்டாங்க.

காப்பாத்துங்க... காப்பாத்துங்க

தள்ளி விட்டுட்டாங்கனு நம்பவே முடியலை. பார்த்தா வானத்துல இருந்து கீழே விழுந்துட்டு இருக்கேன். ‘அய்யோ... காப்பாத்துங்க.. காப்பாத்துங்க'னு அலறிட்டே இருக்கேன். ம்ஹூம் எதுவும் வேலைக்கு ஆகலை.

கூல்... கூல்....

அப்போ, ‘கூல்... கூல்...னு காதுகிட்ட ஒரு சத்தம். பார்த்தா எங்க ஸ்கைடைவிங் பயிற்சியாளர். அவர் என்னைத் தன்னோட கட்டிக்கிட்டுத் தான் குதிச்சிருக்கார், அது எனக்குத் தெரியலை.

தலைகீழ் பயணம்...

பூமியை நோக்கி விர்ர்னு தலைகீழா விழுந்துட்டே இருக்கோம். ரத்தம் எல்லாம் தலைக்கு வந்திருச்சு, முழுசா ஒரு நிமிஷம் கழிச்சுத்தான், நிதானத்துக்கே வர முடிஞ்சது.

ஜாலி...

அப்புறம் ரெண்டு நிமிஷம் கழிச்சு பறவை மாதிரி கை- கால்களை அசைச்சு ஒரு மாதிரி கண்ட்ரோலா பறக்க ஆரம்பிச்சேன். பயம் குறைஞ்சு ஜாலியா ரசிக்க ஆரம்பிச்சேன்.

துபாயின் அழகு...

அந்த உயரத்துல இருந்து துபாய் பனைமரம் போல விரிஞ்சு கிடக்கும் அழகைப் பார்க்கணுமே... சான்ஸே இல்லைங்க. அஞ்சு நிமிஷம் கழிச்சு அந்தரத்துல பறக்கிறோம்னே தோணலை.

அரைமணி நேரப்பயணம்...

அப்படியே பறவையின் இறகு மாதிரி மிதக்க ஆரம்பிச்சிட்டோம். அப்புறம் பாராசூட் விரிச்சு கொஞ்சநேரம் பறந்தோம். அரைமணி நேரத்துல லேண்ட் ஆனோம்.

கால் தான் பிரேக்...

நிலத்துல கால் பதிச்ச பிறகும் பாராசூட் பறந்துட்டே இருந்தது. 300 மீட்டர் வரைக்கும் கால்ல பிரேக் அடிச்சுட்டே போய்த்தான் நிறுத்த முடிஞ்சது.

இன்னொரு தடவை...

அந்த நிமிஷம், ‘இன்னொரு தடவை ஸ்கைடைவிங் பண்ணக் கூடாது'னு தோணுச்சு. ஆனா, இப்போ யோசிச்சா திரும்ப எப்போ ஸ்கைடைவிங் பண்ணுவோம்னு இருக்கு.

அதுக்கும் மேலே...

இதுக்கு முன்னாடி ஸ்கூபாடைவிங், பங்கி ஜம்பிங் எல்லாம் பண்ணியிருக்கேன். ஆனா, ஸ்கைடைவிங் அதுக்கும் மேலே...' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

அண்ணன் செல்வராகவன் இயக்க தம்பி சிம்பு நடிக்கிறார்... அறிவித்தார் தனுஷ்

சென்னை: செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இதை தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சிம்புவுக்கும் தனுசுக்கும் சண்டை என்று டுவிட்டரில் அவர்களின் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்க, ஆனால் நண்பேண்டா ரேஞ்சுக்கு செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக், டுவிட்டரில் போடுகின்றனர் சிம்பும், தனுசும்.

இரண்டு ஆண்டுகளாகவே சிம்புவின் படம் எதுவும் வராமல் இருக்கும் நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை செல்வராகவனின் தம்பி தனுஷ் இயக்க இருக்கிறார்.

அண்ணன் செல்வராகவன் இயக்க தம்பி சிம்பு நடிக்கிறார்... அறிவித்தார் தனுஷ்

தோல்வியில் துவண்ட செல்வா

‘இரண்டாம் உலகம்' தோல்விக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவனை எந்த ஹீரோவும் திரும்பி பார்க்கவில்லை. அவருடைய படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லை.

சிம்புக்கு காதல் கதை

ஆனாலும் விடாமுயற்சியில் விறுவிறுப்பான ஒரு காதல் கதையை தயார் செய்து, அதில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நடித்த சிம்பு-த்ரிஷாவை ஜோடியாக்கி புதிய படம் ஒன்றை இயக்க முயற்சி மேற்கொண்டார் செல்வராகவன். படத்துக்கு கூட அலைவரிசை என்று தலைப்பு வைத்தனர்.

கைவிடப்பட்ட படம்

கடந்த ஆண்டு ஏப்ரல் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் படம் குறிப்பிட்ட தேதியில் ஆரம்பிக்கப்படவில்லை. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, காரணம் எதுவும் சொல்லாமலேயே படத்தை கைவிட்டனர்.

தனுஷ் தயாரிப்பில் சிம்பு

இந்நிலையில் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கவிருப்பது இப்போது உறுதியாகியுள்ளது. இதை தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தம்பி சிம்பு

இதுகுறித்து தனுஷ் தனது டுவிட்டரில் கூறியதாவது, ''அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி சிம்பு நடிக்க இருக்கிறார். இந்தப் படம் மிக சிறப்பானதாக அமையும். சகோதரர்களுக்கு வாழ்த்துகள்'' என்று அதில் தெரிவித்துள்ளார்.

கட்டாயத்தில் செல்வா

செல்வராகவன் இயக்கிய சமீபத்திய படங்கள் பாக்ஸ் ஆஃபீசில் வெற்றி பெறாததால், இப்படத்தை ஒரு வெற்றிப்படமாக தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் செல்வராகவன், அதற்கேற்ற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி செய்திருக்கிறாராம்.

சிம்புவும் உற்சாகம்

செல்வராகவனுடன் அடுத்த படத்தில் இணைந்துள்ளதை சிம்புவும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். செல்வராகவனும் மகிழ்ச்சியாக இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.

கதாநாயகி திரிஷாவா?

செல்வராகவன் - சிம்பு இணையும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தின் நாயகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் யார் என்பது பற்றிய விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் அலைவரிசை படத்தில் ஒப்பந்தமான த்ரிஷாவும், யுவனும் படத்தில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

நயன்தாரா நடித்த பேய் படம் மாயாவை வாங்கியது ராம நாராயணன் நிறுவனம்

பேய் படங்களாகப் பார்த்து வாங்கி வெளியிடும் ராம நாராயணனின் தேனாண்டாள் நிறுவனம், அடுத்து நயன்தாரா பேயாக நடித்துள்ள மாயா படத்தை வாங்கியுள்ளது.

பொட்டான்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பிரபு மற்றும் பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கும் படம் இந்த மாயா. அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

நயன்தாரா நடித்த பேய் படம் மாயாவை வாங்கியது ராம நாராயணன் நிறுவனம்

முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா - ‘நெடுஞ்சாலை' ஆரி, ‘வல்லினம்' அம்ஜத், ரோபோ சங்கர், கருணாஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

நைட் ஷோ

முதலில் படத்துக்கு ‘நைட் ஷோ' என்ற தலைப்பிட்டிருந்தனர். ஆனால் இந்த தலைப்பு நயன்தாராவிற்கு நெருடலை ஏற்படுத்தியதாம். பின்னர் ‘ஆரம்பம்' படத்தில் நயன்தாராவின் கேரக்டரான ‘மாயா'வையே படத்துக்கு டைட்டிலாக்கி விட்டார்கள்.

இறுதிக் கட்டத்தில்

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டிரைலரும் வெளியாகவிருக்கிறது.

தேனாண்டாள்

இதனிடையே ‘மாயா'வின் தமிழக வெளியீட்டு உரிமையை ராம நாராயணின் ‘ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஏற்கெனவே அரண்மனை, பிசாசு போன்ற பேய் படங்களையும் இந்நிறுவனமே வாங்கி வெளியிட்டது. அதேபோல், அருள்நிதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘டிமான்டி காலனி' படத்தின் வெளியீட்டு உரிமையையும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனமே கைப்பற்றியிருக்கிறது.

ஏற்கெனவே ஒரு மாயா

தொடர்ந்து பேய்ப் படங்களை வெளியிட்டு கல்லா கட்டி வரும் இந்நிறுவனம் தற்போது ‘மாயா'வையும் வெளியிடவிருக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் 1999ல் நெப்போலியன், நக்மாவை வைத்து ‘மாயா' என்கிற பெயரிலேயே இதே தேனாண்டாள் பிலிம்ஸ் ஒரு படத்தை தயாரித்து வெளியிட்டது. ஒரே பெயர் கொண்ட இன்னொரு படத்தை அதே நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

 

சினிமாக்காரன் சாலை-7: 'மாப்ள… தொவச்சி கிழிச்சித் தொங்கவிட்டுட்டமில்ல…'

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

'அஞ்சான்' ரிலீஸாகியிருந்த சமயம். கத்துக்கிட்ட மொத்த வித்தையையும்' என்ற மூன்று வார்த்தைகளை தமிழ் மொழியின் அகராதியிலிருந்தே தூக்கிவிட அல்லது இல்லாமல் பண்ணிவிட தன்னுடைய மொத்த சொத்தையும் விற்கத் தயாராக இருந்தார் இயக்குநர் லிங்குசாமி. அந்த மூன்று வார்த்தைகளும் அவரை விடாமல் துரத்தித் துரத்தி பல இரவுகள் தூங்க விடாமல் தொந்தரவு செய்துகொண்டே இருந்தன.

தற்செயலாக 'அஞ்சான்' எப்படிப்பட்ட படம் என்ற ஒரு நேர்காணலுக்கு 'கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இந்தப் படத்துல இறக்கி வச்சிருக்கேன்' என்று பதிலளித்திருந்தார். அதை வைத்து இணைய விமர்சகர்கள் பண்ணிய பகடிகள் கோடிகளில் இருக்கும். ஒரு அப்பாவி மனிதனை ஒரே நேரத்தில் லட்சம் கொசுக்கள் கடித்தால், துடிக்காமல் என்னதான் செய்ய முடியும்.

இது லிங்குவுக்கென்றில்லை. மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் என்று ஒருத்தர் விடாமல் சகட்டுமேனிக்கு சினிமாவில் உள்ள அனைவரும் டிசைன் டிசைனாய் கலாய்க்கப்படுகிறார்கள். ‘ஐ' படத்தை 'ஆய்' என்று இரண்டே எழுத்துக்களில் விமர்சனம் எழுதிவிட்டு எள்ளி நகையாடுகிறார்கள். அவ்வளவு உழைப்பை செலுத்திவிட்டு, இப்படி ஒரு விமரிசனம் படித்தால்..'சீய்' என்று ஆகிவிடாது?'.

சினிமாக்காரன் சாலை-7: 'மாப்ள… தொவச்சி கிழிச்சித் தொங்கவிட்டுட்டமில்ல…'

இவர்களை விடுங்கள் கேப்டன் எவ்வளவு பெரிய ஆள்? முட்டுச்சந்துல நின்னுக்கிட்டு கெட்டகெட்ட வார்த்தைகள்ல கிண்டல் பண்றானுங்க' என்ற சைபர் கிரைமில் புகார் கொடுக்கும் அளவுக்குப் போய்விட்டார்.

'திருட்டு வி.சி.டிக்காரர்களை விட இப்போது சினிமாக்காரர்கள் அதிகம் பயப்படுவது இந்த இணைய விமர்சகர்களுக்குத்தான். 'படத்தைப்பத்தி எதுவுமே எழுதாம இருக்கிறதா இருந்தா படத்தின் என்.எஸ்.சி. ஏரியாவை எழுதித் தந்துவிட தயாராக இருக்குமளவுக்கு சினிமாக்காரர்கள் இவர்களுக்குப் பயப்படுகிறார்கள் என்று சொன்னாலும் அது அதிகமில்லை.

மனுச ஜீவராசிகளில் தற்போது இவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதாவது இணையங்களில் சினிமா விமரிசனம் எழுதுகிறவர்கள். மொத்த மக்கள் தொகையில், 'அம்மாவின் வயிற்றில் இருக்கும் குழந்தைகள், எல்.கே.ஜி. யூ.கே.ஜி. படிப்பவர்கள் மற்றும் இணையமென்றால் என்னவென்று அறியாதவர்கள் தவிர்த்து தற்போது அனவருமே சினிமா விமரிசனம் எழுதுகிறவர்களோ' என்று ஐயமும் அச்சமும் ஒருசேர கொள்ள வேண்டியதிருக்கிறது.

ஒரு படம் ரிலீஸாகத் தயாராக இருக்கும்போதே அந்தப்படம் குறித்து மனசில் கொஞ்சம் விதவிதமாக டைப் பண்ண ஆரம்பித்துவிடுவார்கள் போலிருக்கிறது.

இந்த விமரிகர்களை பொதுவாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. சாஃப்ட்வேர் நிறுவனங்களில் லட்ச ரூபாய்க்கு அருகிலோ அதைத் தாண்டியோ சம்பளம் வாங்கிக் கொண்டு காலாட்டிக்கொண்டே சினிமா விமரிசனம் எழுதுகிறவர்கள்.

2. வாய்ப்பு கிடைத்திருந்தால் மிஷ்கினையும்,கவுதம் மேனனை விடவும் தன்னால் சிறப்பாக படம் இயக்கிவிட முடியும் என்று கருதுகிற மேதாவி ப்ளாக்கர்கள்.

3. வேறு வேலை வெட்டி எதுவுமின்றி முகநூலிலும் மற்ற இணையங்களிலும் ‘லூஸ்மோஷன்' போல் சதா படங்கள் பற்றி எதையாவது கழிந்துகொண்டே இருப்பவர்கள்.

நான்காவதாய் சாரு நிவேதிதா போல் ஒரு குட்டி இனம். தனக்கு வசனம் எழுதவோ, நடிக்கவோ வாய்ப்பு தருவதாய் இருந்தால் முரட்டு ஜால்ரா அடிப்பது. இல்லையென்றால் சவட்டித் தள்ளுவது.

இந்த விமர்சகர்கள் பொதுவாக படங்களை மூன்று வகைகளாக பிரித்துக்கொள்கிறார்கள்.

1.படம் எப்படியிருந்தாலும் ஆதரித்து சுருதி பேதமாய் ஜால்ரா அடிப்பது.

2. படம் எப்படியிருந்தாலும் அறுத்துக் கிழித்து தொங்கவிடுவது.

3.அப்படி ஒரு படம் ரிலீஸானதே இல்லை போல் முற்றிலும் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது.

மேற்படி மூன்று செயல்களுக்குமே, அவர்கள் பாஷையிலேயே சொல்வதானால் அவர்களிடம் 'தட்டையான காரணங்கள்' சில இருக்கும்.

ஒன்று குறிப்பிட்ட நடிகர் அல்லது இயக்குநரின் ரசிகராயிருப்பார்கள். அல்லது அந்தப் படத்தில் இவரது நண்பரொருவர் ஜுனியர் ஆர்டிஸ்டாய் கூட்டத்தோடு கூட்டமாய் தலைகாட்டியிருப்பார். இப்படி அல்ப காரணங்களே போதுமானது ஆதரிப்பதற்கு.

இப்படி ஆதரிப்பதால் அந்தப்படம் பெரும் ஓட்டம் ஓடி ஜூனியர் ஆர்டிஸ்டான நண்பர் சீனியர் ஆர்டிஸ்டாகி எதிர்காலத்தில் அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கும் அளவுக்கு தனது விமர்சனம் பலம் வாய்ந்தது என்பது சம்பந்தப்பட்டவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

சினிமா விழாக்களில், சமீப காலங்களில் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் நடிகர்களும்,' நூத்துக் கணக்கானவங்க ரத்தம் சிந்த உழைச்சி, கோடிகள்ல செலவு பண்ணி படம் எடுக்குறோம். ஃபேஸ்புக்குல விமர்சனம் எழுதுறேங்குற பேர்ல ஒரே வரியில 'படம் மரண மொக்கை'ன்னு கமெண்ட் அடிச்சிட்டுப் போயிடுறாங்க' என்று சதா புலம்பித்தள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதற்கு ‘கருத்துச் சுதந்திரம்'... 'ஒழுங்கா படம் எடுத்தா நாங்க ஏன் கலாய்க்கிறோம்.' 'மொக்கைப்படத்தை மொக்கைன்னு எழுதாம பொக்கேவா குடுக்க முடியும்?' என்கிற ரீதியில் இருக்கின்றன இணைய விமர்சனப் போராளிகளின் பதில்கள்.

சரிதான்.. கருத்துச் சுதந்திரம்... யாரும் எதுவும் சொல்லலாம் எழுதலாம்தான்.

ஆனால் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். விமர்சனம் எழுதுகிறவர்களில் ஒரு பத்து சதவிகிதம் பேராவது தியேட்டருக்குப் போய் படம் பார்த்துவிட்டு எழுதுகிறீர்களா? ஒருத்தர் எழுதிய விமர்சனத்தைப் படித்து விட்டு, வெரைட்டியாய் வாந்தி எடுப்பவர்களே இவர்களில் அதிகம். உதாரணம் என்னை அறிந்தால். அந்தப் படம் வெளியாகும் முன்பே, விமர்சனம் என யாரோ ஒருவர் முந்திய நாள் இரவில் எழுதி பேஸ்புக்கில் பதிவிட்டதை அப்படியே ஊடகங்களில் சிலரும் பயன்படுத்திய கூத்தைப் பார்க்க முடிந்தது. அதாவது படம் பார்க்காமலே விமர்சனம்.

'நான் அஜீத் ரசிகன் தான். ஆனால் விஜய் படம் நன்றாக இருந்தால் படம் சிறப்பு என்றுதான் எழுதுவேன்' என்று சொல்லக் கூடிய நடுநிலையாளர் ஒருவராவது இருக்கிறார்களா?'

முகநூலில் சற்றும் வெட்கமின்றி, இவர்களின் சம்பாஷனை பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது...

‘மாப்ள இப்பத்தான் 'அநேகன்' டி.வி.டி. வந்துச்சி. 5.1 ஆடியோல சூப்பர் ப்ரிண்ட். ஜஸ்ட் தர்ட்டி ருபீஸ்டா'...

‘போடா லூஸுப் பயலே. அதே 5.1 ல திருட்டு வி.சிடி.யில படம் வந்துடுச்சிடா. 30 ரூபாய வேஸ்ட் பண்ணிட்டியே?'

‘அடடா. வட போச்சே?...அப்ப லேட் பண்ணாம நம்ம பயலுக எல்லாருக்கும் லிங்க் அனுப்பிரு. இன்னும் ஒரு மணி நேரத்துல அறுத்து கிழிச்சி தொங்கவிட்டுருவோம். நாம எழுதுறத படிச்சிட்டு ஒருபய தியேட்டர் பக்கம் போகக் கூடாது'.

இந்தக் கூட்டத்தை என்ன செய்யலாம். சினிமாவை நிஜமாக நேசிக்கிற நியாயவான்கள் சொல்லட்டும்!

பின்குறிப்பு : இந்தக் கட்டுரை சினிமா விமரிசனம் எழுதும் அனைவருக்கும் பொருந்தாது. ரெகுலர் பத்திரிகையாளர்களை விட நியாயமாக, எழுத்து நேர்த்தியாக வியக்கும் வண்ணம் சினிமா விமரிசனம் எழுதும் ஒரு சிலரும் இணையத்தில் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் இந்தக் கட்டுரையை படிக்க நேராமல் இருந்து விட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!

(தொடர்வேன்...)

தொடர்புக்கு: muthuramalingam30@gmail.com

 

தனுஷின் அனேகன் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சி- வசனம் நீக்கம்!

தனுஷின் தனுஷின் அனேகன் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சி- வசனம் நீக்கம்!

எனவே, இந்த ஆட்சேபனைக்குரிய வசனத்துடன் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும். அந்த வசனத்தை நீக்கிய பின்னரே, தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன், ‘சர்ச்சைக்குரிய வசனத்தை ஆனேகன் படத்தில் இருந்து, அந்த படத்தின் இயக்குநரே முன்வந்து நீக்கிவிட்டார்' என்று கூறினார்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, ‘அனேகன் படம் வெள்ளிக்கிழமை (இன்று) வெளியாகுகிறது. மனுதாரர் அந்த படத்தை பார்த்து விட்டு, சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டு விட்டதா? வேறு ஏதாவது வசனங்கள் இடம் பெற்றுள்ளதா? என்பதை இந்த கோர்ட்டுக்கு தெரிவிக்கலாம். வழக்கு விசாரணையை 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்' என்று உத்தரவிட்டார்.

 

பலத்த பாதுகாப்புடன் வெளியாகிறது “மெசெஞ்சர் ஆப் காட்” – ஹரியானாவில் உச்சகட்ட பாதுகாப்பு

சண்டிகர்: சீக்கியர்களை அவமதிக்கும் வகையிலும், இளைஞர்களுக்கு மூட நம்பிக்கையை போதிக்கும் வகையிலும் படமாகியுள்ளதாக சர்ச்சைக்கு உள்ளான மெசெஞ்சர் ஆப் காட் திரைப்படம் பலத்த எதிர்ப்புக்களுக்கிடையே இன்று வெளியாகின்றது.

பலத்த பாதுகாப்புடன் வெளியாகிறது “மெசெஞ்சர் ஆப் காட்” – ஹரியானாவில் உச்சகட்ட பாதுகாப்பு

தேரே சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம்சிங் என்பவர் தயாரித்து நடித்துள்ள படம் மெசேஞ்சர் ஆப் காட். இத்திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் கடந்த மாதம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும் சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடும் எதிர்ப்புகளுக்கிடையே இத்திரைப்படம் இன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் ரிலீசாக உள்ளதையடுத்து இரு மாநில தியேட்டர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முக்கிய இடங்களில் பாரா மிலிட்டரி படையும் குவிக்கப்பட்டு படம் ரிலீசாகும் தியேட்டர் உள்ள நகரங்களில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

 

நான் எப்போதுமே இயக்குநரின் நடிகன்தான்! - 25 படங்களை முடித்த ஷாம் பேட்டி

நேற்றுத்தான் பார்த்தது போலிருக்கிறது... '12பி' படத்தில் மீசை அரும்புகிற வயதுப் பையனாக இளமைத் துள்ளலுடன் 2002ல் அறிமுகமான ஷாம், இன்று 25வது படத்தை முடித்திருக்கிறார்.

ஷாமின் 25வது படம் 'புறம்போக்கு'. இந்த 13 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என வளர்ந்து பரந்து பட்ட அனுபவங்களுடன் இன்று பக்குவப் பட்ட நடிகராக நிமிர்ந்து நிற்கிறார். காலம் அவருக்குப் பல அனுபவங்களையும் முதிர்ச்சியையும் வழங்கியிருக்கிறது.

நான் எப்போதுமே இயக்குநரின் நடிகன்தான்! - 25 படங்களை முடித்த ஷாம் பேட்டி

இனி ஷாமுடன் பேசுவோம்...

உங்களின் 25வது படம் வரை வந்து விட்டீர்கள். எப்படி உணர்கிறீர்கள் இப்போது?

என்னால் நம்பக் கூட முடியவில்லை. 'புறம்போக்கு' என் 25வது படம். காலம் வேகமாக ஓடுகிறது. 13 ஆண்டுகள் ஓடி விட்டன.. எவ்வளவு அனுபவங்கள்.. எவ்வளவு ரகசியங்கள்.. எவ்வளவு பரவசங்கள்.. எல்லாமும் காலம் கொடுத்தவை.

'12பி' படத்தில் சிறு பையனாக நுழைந்தேன். இந்த சினிமாவால் நான் கற்றுக் கொண்டவை ஏராளம். பெற்றுக் கொண்டவை அதிகம்.

என் சினிமா வாழ்க்கையில் ஜீவா சாரின் அறிமுகம் முக்கியமான கட்டம். அதே போல எஸ்.பி.ஜனநாதன் சாரின் 'இயற்கை எனக்கு முக்கியமான படம். தேசியவிருது பெற்ற படம். அதே ஜனா சாரின் இயக்கத்தில் 25 வது படம் 'புறம்போக்கு' அமைந்துள்ளது. இது மகிழ்ச்சியும் பெருமையும் தரும் அனுபவம்தான்.

நான் எப்போதுமே இயக்குநரின் நடிகன்தான்! - 25 படங்களை முடித்த ஷாம் பேட்டி

இதுவரை நடித்த 25 படங்களில் ஜீவா, வஸந்த், ஜனநாதன், பிரியதர்ஷன், எம்.ராஜா போன்ற எத்தனை இயக்குநர்கள். எத்தனை அனுபவங்கள். '6' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் ஆனேன். அந்தப் படம் பார்த்து விட்டு விளையாட்டுப் பிள்ளை போல இருந்த ஷாம் அர்ப்பணிப்புள்ள நடிகராகியிருக்கிறார் என்று ஊடகங்கள் பாராட்டியது பெரிய லாபம். இந்த நேரத்தில் என் வளர்ச்சியைப் பார்க்க ஜீவா சார் இல்லையே என்கிற வருத்தம். ஏக்கம் எல்லாம் இருக்கிறது. அவரை நான் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். இப்போது அவர் இருந்தால் சந்தோஷப்படுவார்.

'புறம்போக்கு' அனுபவங்களைச் சொல்லுங்க...

ஜீவா சாருக்குப்பின் மீண்டும் 2 வது பட வாய்ப்பு ஜனா சார் இயக்கியதில் மகிழ்ச்சி. மக்களின் நாடித் துடிப்பு தெரிந்தவர் அவர். பலதுறை ஞானம் உள்ளவர். அவர் இயக்கத்தில் மீண்டும் நடித்தது நிச்சயமாக எனக்கு மறக்க முடியாதது. ஒரு கதாநாயகன் என்றால் 10 பேரை அடித்துதான் உருவாக்க வேண்டும் என்பதில்லை. ஜனாசார் அவ்வளவு அழகாகச் செதுக்குவார். ஒரு கேரக்டரை எப்படி வடிவமைப்பது என்பது அவருக்கு கை வந்த கலை. அவர் பேசினால் மணிக்கணக்கில் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நான் பிகாம் படித்தது பற்றி எனக்கே சந்தேகம் வரும். அந்த அளவுக்கு அவரிடம் தெரிந்து கொண்டு இருக்கிறேன்.

'புறம்போக்கு' படத்தைப் பொறுத்தவரை நான். ஆர்யா, விஜய்சேதுபதி மூன்று பேரும் இணைந்து நடித்திருக்கிறோம்.

நான் எப்போதுமே இயக்குநரின் நடிகன்தான்! - 25 படங்களை முடித்த ஷாம் பேட்டி

உங்கள் கேரக்டர் எப்படி?

என் கேரக்டரின் பெயர் மெக்காலே. எனக்கு சட்டம்தான் முக்கியம். சட்டத்தின் ஆட்சிதான் என் கொள்கை. சட்டத்தை யாருக்காகவும் எந்தக் கருத்துக்காகவும் வளைக்காதவன். அப்படித்தான் என் கேரக்டர் இருக்கும்.

மூன்று பேரில் யாருக்கு எப்படிப்பட்ட வாய்ப்பு?

மூன்றும் மூன்றுவித தனிப்பட்ட குணங்கள் கொண்ட பாத்திரங்கள். அவரவர் பார்வையில் அவரவர் செய்வது சரி. யாரும் கெட்டவர் இல்லை. இது தான் வியப்பூட்டும் விஷயம். நாங்கள் 3 பேரும் இயக்குநரின் மூன்று பாத்திரங்களை ஆளுக்கொன்றாக சுமந்திருக்கிறோம். மூன்று பேரும் சம வாய்ப்பாக பங்கிட்டுக் கொண்டோம். படப்பிடிப்பில் 60 நாட்கள் இணைந்து பணியாற்றியது மகிழ்வான நாட்கள்.

ஆர்யா ,விஜய் சேதுபதியுடன் உங்கள் நட்பு எப்படி?

ஆர்யா என்னுடன் 'உள்ளம் கேட்குமே' படத்தில் அறிமுகமானவர். அவர் என் தம்பி போன்றவர். என்னை அண்ணன் என்றே அழைப்பவர். என்னுடன் அறிமுகமான ஆர்யா இன்று வளர்ந்து இருப்பதில் ஒரு சகோதரன் போல எனக்குள் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு. அன்று முதல் அதே அன்பையும் மதிப்பையும் அளிப்பவர். அவருடன் நடித்தது மகிழ்ச்சி.

தன் தனிப்பட்ட பாணி நடிப்பின் மூலம் விஜய் சேதுபதி இன்று வளர்ந்திருக்கிறார். அவரது 'பீட்சா' , 'சூதுகவ்வும்' நான் ரசித்த படங்கள். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. அவருடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. எங்கள் வீட்டுக்கு பலமுறை வந்திருக்கிறார். பிரியாணி சாப்பிட்டிருக்கிறார்.

நான் எப்போதுமே இயக்குநரின் நடிகன்தான்! - 25 படங்களை முடித்த ஷாம் பேட்டி

படப்பிடிப்பு நாட்களில் நாங்கள் 3 பேரும் ஒரே கேரவனில்தான் இருந்தோம். லஞ்ச், டின்னர் எல்லாம் ஒன்றாகவே சாப்பிட்டிருக்கிறோம்.

அந்த அளவுக்கு எங்களுக்குள் நல்ல அன்பும் நட்பும் புரிதலும் இருந்தன. படப்பிடிப்பு முடிந்ததும் ஒருவரை ஒருவர் தவறவிட்ட ஏக்கம் வருத்தம் வந்துவிட்டது எங்களுக்கு.

'12பி' அனுபவம், 'புறம்போக்கு'அனுபவம் ஒப்பிட முடியுமா?

'12பி' பட அனுபவம், அடடா அது ஒரு மறக்க முடியாத அனுபவம். அதை எப்படி விளக்குவது? கனவு போன்ற ஒரு அனுபவம். கனவு கையில வந்து அமர்வது போன்ற பரவசம் அது. அப்போது அனுபவமில்லாத பையன் நான். இப்போது காலம் நிறையவே கற்றுக் கொடுத்து இருக்கிறது. 'புறம்போக்கு'அனுபவம் வளர்ந்து முதிர்ச்சிக்குப் பின் கிடைத்துள்ளது. இதுவரை 12பி ஷாம் என்றவர்கள் இனி 'புறம்போக்கு' ஷாம் என்பார்கள்.

'புறம்போக்கு' என்பது தரக்குறைவான வார்த்தை அல்லவா... ?

தரக் குறைவாகப் பேசப்படும் வார்த்தையாக இருக்கலாம். ஆனால் உண்மையில் 'புறம்போக்கு' என்பது தரக்குறைவான வார்த்தை அல்ல. படத்தில் அதற்கு இயக்குநர் சரியான விளக்கத்தை சொல்லியிருக்கிறார். படம் வெளியான பிறகு அந்த வார்த்தை குறித்த எல்லாருடைய பார்வையும் கருத்தும் மாறும்.

பிற மொழிகளில் நடித்த அனுபவம் எப்படி?

தெலுங்கில் இயக்குநர் சுரேந்தர் ரெட்டியின் 'கிக்' என்கிற படத்தில் அறிமுகமாகி எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அங்கு எனக்கு 'கிக் ஷாம்' என்றே பெயர் வந்துவிட்டது. சுரேந்தர் ரெட்டியின் படங்களில் தொடர்ந்து நடிக்கிறேன். அவரது . 'ரேஸ் குர்ரம்' எனக்கு நல்ல பெயர் தந்தது.

தெலுங்கில் இதுவரை 5 படங்கள் முடித்து விட்டேன். கன்னடத்தில் அண்மையில் வந்துள்ள 'தனனம் தனனம்' பெயர் சொல்லும் படமாக அமைந்தது. கவிதா லங்கேஷ் இயக்கியிருந்தார். ரம்யா, ரக்ஷிதா நடித்திருக்கின்றனர்.

2015ல் உங்கள் திட்டம்?

நல்ல தொடக்கமாக 2015ல் 'புறம்போக்கு' வரவிருக்கிறது. அடுத்து 'குப்பி' இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் தமிழ், கன்னடத்தில் தயாராகும் ஒரு படம் நடிக்கிறேன். இதில் அர்ஜுனுடன் நடிக்கிறேன். நாகராஜ் என்கிற புதியவர் இயக்கத்தில் மதுரை பின்னணிக் கதை கொண்ட ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன். இப்படி 4 படங்கள் வரிசையாக உள்ளன.

நீங்கள் எப்படிப்பட்ட நடிகராக வளர ஆசை?

சினிமா என்பது இயக்குநரின் மீடியம்தான். நான் என்றைக்கும் இயக்குநரின் நடிகராக இருக்கவே விரும்புகிறேன். என்றுமே இயக்குநர் கையில் என்னை ஒப்படைக்க தயாராக இருப்பவன் நான்.

 

திருமலையில் சாமி கும்பிட்டார் நடிகர் ஜீவா

திருப்பதி : திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா புதன்கிழமை காலை வழிபட்டார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜீவா, ஏழுமலையானை தரிசிக்க ஜீவா செவ்வாய்க் கிழமை இரவு திருமலைக்கு வந்தார்.

திருமலையில் சாமி கும்பிட்டார் நடிகர் ஜீவா

இரவு திருமலையில் தங்கிய அவர், புதன்கிழமை காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவருக்கு அர்ச்சகர்கள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர்.

திருமலையில் சாமி கும்பிட்டார் நடிகர் ஜீவா

விரைவில் அவர் புதிய படம் தொடங்க உள்ளதால், அதற்கு முன் சாமி தரிசனம் செய்ய வந்ததாகத் தெரிவித்தார்.