த்ரிஷாவை நெகிழ்த்திய விளம்பரம்... விதவைத் திருமணத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம்!

த்ரிஷாவை நெகிழ்த்திய விளம்பரம்... விதவைத் திருமணத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம்!

ஒரு நகைக்கடை விளம்பரம், த்ரிஷாவை நெகிழ்த்தியதோடு, ஒரு சீரியஸான பிரச்சினைக்காக பிரச்சாரமும் செய்ய வைத்துள்ளது.

சமீபத்தில் ஒளிபரப்பாகிவரும் அந்த விளம்பரத்தில், ஒரு விதவைப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் மணமகன், அந்தப் பெண்ணின் இளம் மகளையும் தன் மகளாகவே ஏற்றுக் கொள்கிறான்.

இதைப் பார்த்து நெகிழ்ந்த த்ரிஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் இது போன்ற விதவைத் திருமணங்களுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார்.

தனது ரசிகர்கள் இதுபோன்ற திருமணங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விளம்பரத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டாவது திருமணம் குறித்து தனது ஆழமான கருத்தை பதிவு செய்ததோடு தனது ரசிகர்களுக்கும் பெண்களின் இரண்டாவது திருமணத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

பெண்கள் ஆண்களின் இரண்டாம் திருமணத்தை ஏற்றுக் கொள்வதுபோல, ஆண்களும் பெண்களின் இரண்டாம் திருமணத்தை ஏற்பதுதான் சிறந்தது என அவர் கூறியுள்ளார்.

 

அஜீத் என்னுடைய ஜார்ஜ் க்ளூனி: குஷ்பு

சென்னை: சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் அஜீத் குமார் தான் தன்னுடைய ஜார்ஜ் க்ளூனி என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் ஹீரோக்கள் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடிப்பது சகஜம். ஆனால் நம் நாட்டில் எந்த உட்டானாலும் எத்தனை வயதானாலும் ஹீரோக்கள் டை அடித்து கருப்பு முடியுடன் நடிப்பது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தில்லாக நடித்து வருகிறார் அஜீத் குமார். அவரை ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியுடன் சிலர் ஒப்பிட்டுள்ளனர்.

அஜீத் என்னுடைய ஜார்ஜ் க்ளூனி: குஷ்பு

இந்நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஆரம்பம் படம் அருமையான பொழுதுபோக்கு படம். அஜீத் அருமையாக உள்ளார். அவரின் குளோசப் ஷாட்டை பார்த்த போதெல்லாம் என் இதயத்துடிப்பு அதிகரித்தது. அவர் என்னுடைய ஜார்ஜ் க்ளூனி என்று தெரிவித்துள்ளார்.

 

'இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு உங்க 22 வயசுன்னே சொல்லிக்கிட்டிருப்பீங்க!'

'இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு உங்க 22 வயசுன்னே சொல்லிக்கிட்டிருப்பீங்க!'

வேலூர்: இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு 22 வயசுன்னே சொல்லிக்கிட்டிருப்பீங்க என்று நடிகர் விஷாலை மடக்கினர் நிருபர்கள்.

பாண்டிய நாடு வெற்றியை திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாடி வருகிறார் விஷால்.

வேலூரில் ஒரு திரையரங்கில் ரசிகர்களைச் சந்தித்துவிட்டு, நிருபர்களிடம் பேசினார்.

"என்னுடைய தொழில் நடிப்பது. என்னுடைய தெய்வமாகிய ரசிகர்களை சந்திக்க தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன்," என வழக்கமாக ஆரம்பித்தவரிடம், 'உங்களுடைய திருமணம் எப்போது?' என்று நிருபர்கள் கேட்டனர்.

எனக்கு இப்போதுதான் 22 வயதாகிறது. இன்னும் நாட்கள் இருக்கின்றன. அதன் பின்னர் திருமணம் செய்வேன்,' என்றார்.

4 ஆண்டுகளுக்கு முன்னரும் 22 வயதுதான் என்றீர்கள். இப்போதும் 22 வயது என்றால் எப்படி? என்று நிருபர் மடக்கியபோது, அருகில் இருந்த இயக்குநர் சுசீந்திரன் 'இன்னும் 4 ஆண்டுகள் கழித்தாலும், இவர் அதே வயதைத்தான் கூறுவார்,' என்றார் தமாஷாக.

 

அஜீத் என்னுடைய ஜார்ஜ் க்ளூனி: குஷ்பு

சென்னை: சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் அஜீத் குமார் தான் தன்னுடைய ஜார்ஜ் க்ளூனி என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் ஹீரோக்கள் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடிப்பது சகஜம். ஆனால் நம் நாட்டில் எந்த உட்டானாலும் எத்தனை வயதானாலும் ஹீரோக்கள் டை அடித்து கருப்பு முடியுடன் நடிப்பது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தில்லாக நடித்து வருகிறார் அஜீத் குமார். அவரை ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியுடன் சிலர் ஒப்பிட்டுள்ளனர்.

அஜீத் என்னுடைய ஜார்ஜ் க்ளூனி: குஷ்பு

இந்நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஆரம்பம் படம் அருமையான பொழுதுபோக்கு படம். அஜீத் அருமையாக உள்ளார். அவரின் குளோசப் ஷாட்டை பார்த்த போதெல்லாம் என் இதயத்துடிப்பு அதிகரித்தது. அவர் என்னுடைய ஜார்ஜ் க்ளூனி என்று தெரிவித்துள்ளார்.

 

5 பெண்களை திருமணம் செய்து நகை, பணம் பறித்த சினிமா இயக்குனர்

குமரி: 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய வாச்சாத்தி பட இயக்குனர் ஐஸ்டஸ் ரவி கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே இருக்கும் நெய்யூரைச் சேர்ந்தவர் ஐஸ்டஸ் ரவி(43). அவர் பனிமலர்கள், வாச்சாத்தி போன்ற படங்களை இயக்கியுள்ளார். அவர் தக்கலை அருகே உள்ள சித்திரங்கோட்டையைச் சேர்ந்த அனிதா பால்நேசம் என்ற பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் ரவியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதால் அனிதாவுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர் விசாரித்ததில் பூதப்பாண்டி அருகே உள்ள கீரிப்பாறை சுருளக்கோட்டைச் சேர்ந்த ஷீபா என்ற செல்வகுமாரியை மணந்தது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அனிதாவும், ஷீபாவும் சேர்ந்து ரவியின் லீலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடிவு செய்தனர்.

ரவியின் லீலைகள் குறித்து அவர்கள் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் விசாரணையை துவங்கினர். சென்னையில் இருந்த ரவியை வரவழைக்க அவருடன் அனிதாவின் குழந்தையை பேச வைத்தனர். குழந்தையின் பேச்சை கேட்டு ரவி திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலயைத்தில் வந்திறங்கிய ரவியை அனிதா மற்றும் ஷீபா ஆகியோர் கூட்டாக வரவேற்று காரில் குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர்.

வரும் வழியில் களியக்காவிளையில் வைத்து ரவியை மார்த்தாண்டம் மகளிர் போலீசார் கைது செய்தனர். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது அவர் பல திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளார்.

ரவி முதலில் பனச்சமூடு பகுதியைச் சேர்ந்த சைலஜாவையும், அதன் பிறகு கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த பிந்துவையும் மணந்துள்ளார். பின்னர் சித்திரங்கோட்டையைச் சேர்ந்த அனிதாவையும், கேரள மாநிலம் திருமலையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரையும் திருமணம் செய்துள்ளார். இத்தனை திருமணம் செய்த அவர் 5வதாக சுருளக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷீபாவையும் மணந்துள்ளார்.

இது தவிர தற்போது அவர் மேல்மருவத்தூரில் வசிக்கும் பூஜா என்ற இளம் பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஜாலியாக பேசி பெண்களை மயக்குவதில் ரவி வல்லவர். அவ்வாறு தன் பேச்சில் மயங்கிய பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறித்துள்ளார்.

 

விஜய் அடிக்கடி எந்த பாடலை ஹம் செய்கிறார் தெரியுமா?

சென்னை: விஜய் ஜில்லா படத்திற்காக தான் பாடிய பாடலை தான் அடிக்கடி ஹம் செய்து கொண்டிருக்கிறாராம்.

விஜய் தான் நடித்து வரும் ஜில்லா படத்தில் கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடலை ஸ்ரேயா கோஷலுடன் சேர்ந்து பாடியுள்ளார். இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். இமான் இசையில் பாடல் அருமையாக வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய் அடிக்கடி எந்த பாடலை ஹம் செய்கிறார் தெரியுமா?

இந்நிலையில் விஜய் தற்போதெல்லாம் கண்டாங்கி கண்டாங்கி பாடலை தான் ஷூட்டிங்ஸ்பாட்டில் ஹம் செய்கிறாராம். ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

துப்பாக்கியை அடுத்து ஜில்லா படத்தில் விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் காஜல் அகர்வால்.

 

கார்த்தியின் புதிய படத்தை இயக்குகிறார் சாந்த குமார்

கார்த்தியின் புதிய படத்தை இயக்குகிறார் சாந்த குமார்

அத்தனை பெரிய ஹிட் கொடுத்துவி்ட்டு சாந்தமாக இருந்த அவர் இப்போது புதிய படம் இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்.

இந்தப் படத்தின் ஹீரோ, எப்படியாவது அடுத்து ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ள கார்த்தி.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் ‘பிரியாணி' மற்றும் ‘அட்டக்கத்தி' ரஞ்சித் இயக்கும் ‘காளி' படங்களுக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் இது.

முழுக்க முழுக்க மாறுபட்ட கதைகளத்துடன் இந்த படத்தை இயக்கவிருக்கிறார் சாந்தகுமார். இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

கார்த்தி இப்போது நடிக்கும் அனைத்துப் படங்களுமே ஸ்டுடியோ கிரீன் தயாரிப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.