வானத்துக்கு யு/ஏ சான்றிதழ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வானத்துக்கு யு/ஏ சான்றிதழ்

4/26/2011 10:43:21 AM

சிம்பு நடிப்பில் வரும் 29ஆம் தேதி வெளிவரும் வானம் படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. தெலுங்கில் வேதம் என்ற பெய‌ரில் ஹிட்டான படத்தையே தமிழில் வானம் என்ற பெய‌ரில் எடுத்துள்ளனர். சிம்புவுடன் பரத், அனுஷ்கா, பிரகாஷ்ரா‌ஜ், வேகா, சோனியா கேர்வால் என ஏராளமானோர் நடித்துள்ளனர். யுவன் இசை. படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள் காட்சிகள் எதிலும் கை வைக்காமல் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். கிளவுட் நைன் படத்தை வெளியிடுகிறது.





Source: Dinakaran
 

ரிலீசுக்கு தயாராகும் வேலாயுதம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரிலீசுக்கு தயாராகும் வேலாயுதம்!

4/26/2011 10:31:28 AM

இளைய தளபதி விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தை அவரது பிறந்த நாளன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளார் ரவிச்சந்திரன். விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்ஸிகா நடித்துள்ளனர். பாண்டியராஜன், சரண்யா மோகன், சந்தானமும் படத்தில் உண்டு. ஜெயம் ராஜா இயக்கியுள்ளார். படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இது குறித்து ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறுகையில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தில் பால்காரராக நடித்துள்ளார் விஜய். ஜெனிலியா பெண் பத்திரிகை நிருபராகவும், ஹன்ஸிகா விஜய்யின் காதலியாகவும் நடித்துள்ளனர். 5 பாடல்கள், 6 அதிரடி சண்டைகள் இடம்பெற்றுள்ளன. விஜய்யின் பிறந்த நாளன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.





Source: Dinakaran
 

பாலக்காட்டில் நடிகர் பிருத்விராஜ் திடீர் திருமணம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாலக்காட்டில் நடிகர் பிருத்விராஜ் திடீர் திருமணம்!

4/26/2011 10:10:22 AM

கேரளாவில் மலையாள முன்னணி நடிகர் பிருத்விராஜ். இவர், நந்தனம் என்ற மலையாள படத்தில் அறிமுகமாகி, ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் கனாகண்டேன், மொழி, ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் உருமி என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்துள்ளார். ராவணன் படத்தில் நடித்த போது, பிருத்விராஜிடம்  மும்பையில் உள்ள பிபிசி தொலைக்காட்சி சார்பில் பிரதிக்ஷா என்ற பெண் நிருபருக்கும், பிருத்விராஜூக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானபோது பிருத்விராஜ் மறுத்து வந்தார். ஆனாலும், பிரதிக்ஷா என்ற சுப்ரியாமேனனுடன் நெருங்கி பழகி வந்தார். மே 1ம் தேதி அவர்கள் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், திடீரென நேற்று நடிகர் பிருதிவிராஜ் - சுப்ரியா மேனன் திருமணம் நடந்தது. சுப்ரியா மேனனின் சொந்த  ஊரான பாலக்காடு தேக்குறிச்சியில் நடந்த திருமணத்தில் பிருத்விராஜ் தாயார் மல்லிகா சுகுமாரன், அண்ணனும் நடிகருமான இந்திரஜித் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மே 1ம் தேதி  கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.





Source: Dinakaran
 

ரானாவில் மொத்தம் ஏழு முன்னணி நடிகைகள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரானாவில் மொத்தம் ஏழு முன்னணி நடிகைகள்

4/26/2011 12:00:14 PM

ரானாவில் மொத்தம் ஏழு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். இதில் மூன்று பேர் ர‌ஜினிக்கு ஜோடி. இந்த மூவ‌ரில் முக்கியமானவர் தீபிகா படுகோன். இவரும், ர‌ஜினியும் இடம்பெற்ற போட்டோ ஷூட் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த போட்டோ ஷூட் ர‌ஜினிக்கு அத்தனை திருப்தி அளிக்கவில்லை. ரானா ச‌ரித்திரப் படம். போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்டப் படங்களில் தீபிகாவின் தோற்றம் அதனை பிரதிபலிக்கும் வகையில் இல்லையாம். இதனால் தீபிகாவின் தோற்றத்தை ச‌ரித்திர காலத்துக்கேற்ப மாற்றி மீண்டுமொருமுறை போட்டோ ஷூட் நடத்தப்படலாம் என்கிறார்கள்.





Source: Dinakaran
 

சிம்புவை கோபப்படுத்திய கோ?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிம்புவை கோபப்படுத்திய கோ?

4/26/2011 10:59:11 AM

சிம்பு நடித்திருக்க வேண்டிய படம் 'கோ'. ஆனால் சில காரணங்களால் கோ-விலிருந்து விலகினார் சிம்பு. சிம்புக்கு பதில் ஜீவாவை ஒப்பந்தம் செய்தார் கே.வி.ஆனந்த். இந்த மாற்றம் பலரது மனதில் கேள்வியை விதைத்தது. சிம்பு இடத்தில் ‌‌ஜீவாவா? இந்த கேள்விக்கு அடித்து பதில் சொல்லியிருக்கிறார் ‌ஜீவா. கே.வி.ஆனந்தின் கோ ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. படத்தின் ‌ரிசல்ட் நன்றாக இருக்கவே தனது மனதை அகலத் திறந்திருக்கிறார் ஆனந்த். ஆனந்தை பாராட்டும் எல்லோரும் ‌ஜீவாவையும் பாராட்டுகிறார்கள். ‌ஜீவா ஒரு நல்ல ஸ்டைலிஷான நடிகர். ராம், கற்றது தமிழ், ஈ, சிவா மனசுல சக்தி படங்களில் அவரோட நடிப்பு எனக்குப் பிடிக்கும். கோ பட கேரக்டருக்கு அப்படியே ஆப்டாகப் பொருந்தியிருக்கிறார் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் கே.வி.ஆனந்த். படத்தை மிஸ் பண்ண சிம்புக்கு தற்போது படத்தின் வருத்தத்தை தந்திருக்கிறதாம். படத்தின் தான் நடித்திருந்தால் தன்னுடைய கேரியரில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும்  என  தற்போது சிம்பு புலம்பி வருவதாக செய்திகள் வருகின்றன.





Source: Dinakaran
 

பவர் சோப் விளம்பரங்களில் தமன்னா வர தடை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பவர் சோப் விளம்பரங்களில் தமன்னா வர தடை

4/26/2011 12:07:09 PM

பவர் சோப் விளம்பரங்களில் நடிகை தமன்னாவின் படங்களையோ, வீடியோக்களையோ பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த பவர் சோப் நிறுவனம், சென்னை தி.நகரைச் சேர்நத் ஜே அன்ட் டி கம்யூனிகேஷன் மூலமாக தனது நிறுவனத் தயாரிப்புகளுக்கு பிராண்ட் அம்பாசடராக செயல்பட அணுகியது. இதையடுத்து 2008ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இதுதொடர்பாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2009ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.

ஆனால் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் எனது அனுமதியின்றி எனது படங்களை தனது விளம்பரங்களில் அது பயன்படுத்தி வருகிறது. இதை தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார் தமன்னா. இதை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியம், வருகிற ஜூன் 8ம் தேதி வரை பவர் சோப் விளம்பரங்களில் தமன்னாவின் படங்கள், வீடியோ கிளிப்பிங்குகளைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.





Source: Dinakaran
 

நார்வே சர்வதேச திரைப்பட விழாவில் ஆடுகளத்துக்கு அமோக வரவேற்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நார்வே சர்வதேச திரைப்பட விழாவில் ஆடுகளத்துக்கு அமோக வரவேற்பு!

4/26/2011 10:41:37 AM

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ஆடுகளம் படத்துக்கு நார்வேயில் நடந்து வரும் தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் அமோக வரவேற்பை தந்திருக்கிறார்கள் ரசிகர்கள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆடுகளம் இரண்டாவது முறையும் திரையிடப்பட்டது. பொல்லாதவனுக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கிய படம் ஆடுகளம். தனுஷ், தாப்ஸீ நடித்திருந்தனர். கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் பிரமாதமான கேரக்டர் ஒன்றில் வாழ்ந்திருந்தார். இந்தப் படத்தை நார்வே வாழ் தமிழர்கள் மிகவும் ரசித்தனர். முதல்முறை பார்க்க முடியாதவர்கள் கேட்டுக் கொண்டதற்காக இரண்டாவது முறையும் படம் திரையிடப்பட்டது.





Source: Dinakaran