குத்துப் பாட்டு + கெட்ட வில்லி... இப்போதைக்கு இதுதான் காஜலின் ஆசை!

சென்னை: காஜல் அகர்வாலுக்கு குத்தாட்டம் போட, வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது.

குத்துப் பாட்டு + கெட்ட வில்லி... இப்போதைக்கு இதுதான் காஜலின் ஆசை!  

ஹீரோயினாக நடித்து வரும் காஜலுக்கு திடீர் என்று வித்தியாசமான ஆசை ஏற்பட்டுள்ளது. தற்போது பல படங்களில் குத்தாட்டப் பாடல்கள் உள்ளது. இந்நிலையில் காஜலுக்கு குத்தாட்டம் போட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.

மேலும் அவர் வில்லத் தனமான கதாபாத்திரங்களில் நடிக்கவும் விரும்புகிறார். குத்துப்பாட்டு, வில்லத்தனமாக கதாபாத்திரங்களுக்கு ஹீரோயின் தேடும் தயாரிப்பாளர்களே, இயக்குனர்களே உங்களை காஜல் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஹீரோவுடன் டூயட் பாடிப் பாடி காஜலுக்கு போர் அடித்துவிட்டது போன்று. அது தான் வித்தியாசமாக நடிக்க முடிவு செய்துள்ளார்.

 

என்னை அடித்து துன்புறுத்துகிறார்: கணவர் மீது ரஜினி, கமல் ஹீரோயின் போலீசில் புகார்

மும்பை: பிரபல நடிகை ரதி அக்னிஹோத்ரி தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்திய ஹீரோயின் ரதி அக்னிஹோத்ரி. பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படம் மூலம் ஹீரோயின் ஆன ரதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

பாலிவுட் சென்ற ரதி 1985ம் ஆண்டு அனில் விர்வானி என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். அவரது மகன் தனுஜ் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

என்னை அடித்து துன்புறுத்துகிறார்: கணவர் மீது ரஜினி, கமல் ஹீரோயின் போலீசில் புகார்

இந்நிலையில் ரதி மும்பை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தனது கணவர் மீது சனிக்கிழமை புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

என் கணவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்துகிறார். அவரின் கொடுமையை தாங்க முடியவில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது கணவர் அடித்ததால் தனது கையில் ஏற்பட்ட காயத்தையும் போலீசாரிடம் காண்பித்துள்ளார்.

இது குறித்து துணை கமிஷனர் எஸ். ஜெயகுமார் கூறுகையில்,

அண்மை காலமாக அனிலின் வியாபாரம் நல்லபடியாக போகவில்லை. அதனால் அவர் தனது மனைவியிடம் கோபமாக நடந்திருக்கலாம். ரதியின் புகாரின்பேரில் அனில் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

 

‘மர்ம மனிதன்’ ஆகிறார் விக்ரம்?

சென்னை: ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு ‘மர்ம மனிதன்' எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘ஐ' படத்தைத் தொடர்ந்து விக்ரம் தற்போது விஜய் மில்டனின் ‘பத்து எண்றதுக்குள்ள' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும் பசுபதி மற்றும் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

‘மர்ம மனிதன்’ ஆகிறார் விக்ரம்?

இப்படத்தைத் தொடர்ந்து, ‘அரிமா நம்பி' இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படமும், கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க உள்ளார் விக்ரம். கௌதம் மேனன் படம் ஜூனில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக வரும் ஏப்ரல் மாதம் ஆனந்த் சங்கரின் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது.

இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் பிரியா ஆனந்த் என இரண்டு நாயகிகள்.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘மர்ம மனிதன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தத் தலைப்பை வேறு யாரும் பதிவு செய்து வைக்காவிட்டால், இந்தத் தலைப்பையே இறுதியாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.