பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி,கணவர் மீது ரூ.8லட்சம் மோசடி புகார்

Shilpa Shetty Raj Kundra Accused Fraud

ஜெய்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களான பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது ஒருவர் ரூ.8 லட்சம் மோசடி புகார் கொடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள கிரிக்கெட் அகாடமியின் புரமோட்டர் ஆனந்த் சிங். அவர் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் இர்பான் கான் ஆகியோர் மீது பொது இடங்களில் புகைப்பிடப்பதாக புகார் கொடுத்தார். இந்நிலையில் அவர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களான பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது புகார் தொடர்ந்துள்ளார்.

ஷில்பாவும் அவரது கணவரும் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் போட்டி தொடர்பாக தன்னிடம் இருந்து ரூ.8 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வரும் 14ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆனந்த் சிங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.

 

புழலில் இருந்து வேலூர் சிறைக்குப் போன பவர் ஸ்டார் சீனிவாசன்

Power Star Srinivasasan Shifted Vellore Prison

வேலூர்: மோசடி வழக்கில் கைதான நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னையில் பாபா டிரேடிங் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த சீனிவாசனிடம், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ரங்கநாதன் (60) தனது தொழிலை விரிவுபடுத்த ரூ.20 கோடி கடன் கேட்டார்.

50 லட்சம் ரூபாய் கமிஷன் கொடுத்தால் கடன் வழங்க ஏற்பாடு செய்வதாக சீனிவாசன் கூறியுள்ளார். இதை நம்பி சீனிவாசனிடம் ரூ.50 லட்சம் கமிஷன் பணத்தை ரங்கநாதன் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சீனிவாசன், 20 கோடி ரூபாய் கடன் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.

எனவே தாங்கள் கொடுத்த கமிஷன் பணத்தை திருப்பி கொடுக்கும்படி ரங்கநாதனின் மகன் சிவக்குமார் என்பவர் சீனிவாசனை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். பணத்தை கொடுக்க முடியாது என்று சீனிவாசன் கூறி மிரட்டியுள்ளார். இந்த புகாரின் பேரில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

வேலூருக்கு மாற்றம்

இதற்கிடையில், சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடந்த 26ம் தேதி நள்ளிரவு மாற்றப்பட்டுள்ளார்.

அவர் தற்போது வேலூர் மத்திய சிறையில் எச்.எஸ்,1 என்ற பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார்.

சாதாரண அறைதான்

பவர் ஸ்டார் சீனிவாசனை சந்திக்க மற்ற கைதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு முதல் வகுப்பு வசதிகள் கொடுக்கப்படவில்லை. சாதாரண வகுப்புக்கான அறையிலே அவர் தங்கியுள்ளார்.

படப்பிடிப்புகளுக்கு பாதிப்பு

பவர் கைதாகி சிறையில் இருப்பதால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரை புக் செய்துள்ள தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர். சுமார் நான்கு படங்கள் பவருக்காக காத்திருக்கிறதாம்.

ஜாமீன் கிடைக்குமா?

பவர் விரைவில் ஜாமீனில் வெளிவந்தால் மட்டுமே தங்கள் படங்களில் படப்பிடிப்புகளை நடத்த முடியும் என்று நான்கு இயக்குநர்கள் கூறி வருகின்றனராம். பல மோசடி வழக்குகள் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது கிளம்பி வருவதால் அவர் வருவாரா? அல்லது கேஸ் மேல் கேஸ் பாய்ந்து நிரந்தரமாக சிறையிலேயே தங்கிவிடுவாரா என்று யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

 

விஜய் பிறந்தநாளில் ‘தலைவா’ ரிலீஸ்

விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படம் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாள் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் - அமலாபால் கூட்டணியில் தயாராகி வரும் ‘தலைவா' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன. இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். அனைத்து பாடல்களும் முடிவடைந்துள்ளதால் மே மாதம் கேசட் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

thalaivaa release on vijay birthday   

தலைவா படத்தின் ரிலீஸ் எப்போது என்பதுதான் இப்போதைக்கு ரசிகர்களின் கேள்வி. அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பட்ட போஸ்ட் புரடெக்சன் வேலைகளை விரைவாக முடித்து, ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஜூன் 21ம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாள் வருகிறது. விஜய் பிறந்தநாள் பரிசாக அந்த படத்தினை ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் தனது ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை அளிக்கவேண்டும் என்பது விஜய் விருப்பமாம்.

 

மரியான் படத்தின் ‘நெஞ்சே எழு’ டீஸர்:ஒரே நாளில் 2.25லட்சம் ஹிட்

‘நெஞ்சே எழு'.... இது மரியான் படத்தில் வரும் ஒரு பாடல். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த இந்த பாடலில் 38 செகண்ட் டீஸர் தற்போது யுடியூப்பில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.

பரத்பாலா இயக்கத்தில் maryan nenjae ezhu song teaser crossed   நெஞ்சே எழு .... பாடலின் 38 செகண்ட் டீஸரை யு டியூப்பில் ஒரே நாளில் 2.5 லட்சம் பேர் கண்டு ரசித்து லைக் கொடுத்திருக்கிறார்களாம்.

இசையோடு, நெஞ்சே எழு பாடல் ரசிகர்கள் ரசிக்கும் விதமாக படமாக்கப் பட்டுள்ளதாம். இதனாலேயே ரசிகர்களிடையே பாடல் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்கின்றனர். நெஞ்சே எழு பாடலை கவிஞர் குட்டி ரேவதி எழுதியுள்ளார்.

மரியான் படத்தின் இசை பல்வேறு சாதனைகளை படைக்கும் என்கின்றனர் சோனி நிறுவனத்தார்.

மரியான் படத்தின் ‘நெஞ்சே எழு' டீஸர் - வீடியோ