ஏ.ஆர் ரஹ்மான் என்ன பாட்டு பாடணும்… ரசிகர்கள் தேர்வு செய்கிறார்கள்.

Ar Rahman S Thai Manne Vanakkam Concert

சென்னை: சென்னை நந்தனம் ஒம்.எம்.சி.ஏ விளையாட்டு மைதானத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ தாய் மண்ணே வணக்கம்' இசைக்கச்சேரி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் எந்த பாடலை முதலில் பாடவேண்டும் என்று எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள் என்று இசை ரசிகர்களை ஜெயாடிவி கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக செய்தியாளர்களை சந்தித்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

எப்பவும் ஹாலிவுட், இந்தின்னு இருக்கிறீங்க. எப்ப தமிழ் படங்களுக்கு அதிகமாக இசையமைக்கப் போறீங்க?

இப்பதான் கடல் முடிஞ்சுது. அடுத்து பரத்பாலா படம் பண்றேன். கோச்சடையான் வரப்போவுது. அது தவிர இன்னும் ரெண்டு படம் இருக்கு.

இந்திக்கு போனா, ஏன் தமிழ்நாட்டை விட்டு வர மாட்டேங்கிறீங்கன்னு கேட்கிறாங்க... என்று கூறிவிட்டு சிரித்தார்.

ஆஸ்கர் விருது ஏற்கனவே வாங்கிட்டீங்க. இதுக்கு பிறகும் வாங்குற எண்ணம் இருக்கா?

வீட்ல ரெண்டு இருக்கு. அது போதும்'.

சென்னையில் நடந்த திரைப்பட விழாவில் உங்க மகன் கீபோர்டு வாசிச்சார். அவரும் இந்த இசை நிகழ்ச்சியில் உங்களோட மேடை ஏறுவாரா?

இல்ல... அவர் இப்பதான் பிகினிங்ல இருக்கார் என்று பெருமிதத்தோடு சொன்னார்.

என்ன பாட்டு பாடணும்

'தாய் மண்ணே வணக்கம்' நிகழ்ச்சியை ஜெயா தொலைக்காட்சி நடத்தினாலும் சென்னையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இசைப்புயல் நடத்தும் கச்சேரி என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரோஜாவில் ஆரம்பித்து கடல் வரைக்கும் செலக்டிவாக முப்பது பாடல்களை பாடுகிற எண்ணம் இருக்கிறதாம். முக்கியமாக நாலைந்து பாடல்களை ரஹ்மானே பாடுகிறார். இதில் முதல் பாடலாக ஏ.ஆர்.ரஹ்மான் என்ன பாடலை பாடவேண்டும் என்று தேர்வு செய்யுமாறு ரசிகர்களுக்கு போட்டி அறிவித்துள்ளது ஜெயா டிவி. அதிக அளவில் ரசிகர்கள் தேர்ந்தெடுத்துள்ள பாடலை ஏ.ஆர். ரஹ்மான் பாட உள்ளார்.

 

கும்கி வெற்றிக்கு பார்ட்டி கொடுத்து பரிசளித்த லிங்குசாமி

Lingusamy Gifts Gold Chain Kumki Unit

சென்னை : ‘கும்கி' படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக அந்த படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி பார்ட்டி கொடுத்து தங்கசங்கிலி பரிசளித்துள்ளார்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள கும்கி திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமிமேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கும்கி படக்குழுவினருக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்தளித்தார். அப்போது கும்கி படத்தில் நடித்த நடிகர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் தங்கச் சங்கிலி பரிசளித்தார்.

இந்த நிறுவனத்தினர் தயாரித்த வழக்கு எண் 18/9 திரைப்படம் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பரிசு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக அந்த திரைப்படக்குழுவினரும் இந்த விருந்தில் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, கார்த்தி, பிரபு, ராம்குமார், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஜி.வி. பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அஜீத்தை அவரது ரசிகர்கள் நேசிக்கும் அளவுக்கு நாங்களும் நேசிக்கிறோம்: விஷ்ணுவர்தன்

We Love Ajith As Much As You Do

சென்னை: அஜீத் குமாரை நாங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்வோம் என்று இயக்குனர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.

அஜீத் குமார் விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. இந்த விபத்து குறித்த வீடியோவை பலர் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ வெளியிடப்பட்ட அன்று டுவிட்டரில் அதிகமாக ஷேர் செய்யப்பட்ட வீடியோ இது தான்.

இந்நிலையில் இது குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறுகையில்,

அஜீத்தின் ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். நீங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறீர்களோ நாங்கள் அவரை அந்த அளவு நேசிக்கிறோம். படப்பிடிப்பில் விபத்து எதுவும் ஏற்படாமல் இருக்கத் தேவையான நடிவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றார்.

அஜீத்துக்கு காயம் என்றதும் ரசிகர்கள் பதறியதைப் பார்த்து விஷ்ணுவர்தன் நெகிழ்ந்துவிட்டார். அடடா இவர்களுக்குத் தான் 'தல' மீது எவ்வளவு பாசம் என்று நினைத்துள்ளார்.

 

லக்ஷ்மி ராயிடம் ரசிகர்கள் சில்மிஷம்: மேலாடை கிழிந்தது!

Fans Misbehave With Lakshmi Rai   

புதுவை: புதுச்சேரியில் ஒன்பதுல குரு படப்பிடிப்பில் இருந்த நடிகை லக்ஷ்மி ராயிடம் ரசிகர்கள் சில்மிஷம் செய்ததில் அவரது மேலாடை கிழிந்தது.

பி.டி. செல்வகுமார் இயக்கத்தில் வினய், லஷ்மி ராய் நடித்து வரும் படம் ஒன்பதுல குரு. இந்த படத்தில் ஒரு டூயட் பாடலை புதுச்சேரியில் படமாக்கினர். ஷூடிட்ங் இடைவேளையில் லக்ஷ்மி ராயிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது கூட்டம் கூடியதுடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ரசிகர்கள் லக்ஷமி ராயிடம் சில்மிஷம் செய்தனர். இதில் அவரது மேலாடை கிழிந்தது. நிலைமை கையை மீறிச் செல்வதை உணர்ந்த படக்குழுவினர் ஓடிவந்து லக்ஷ்மி ராயை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டு லக்ஷ்மி ராய் அவரது ஹோட்டல் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படப்பிடிப்பில் நடிகைகளிடம் ரசிகர்கள் சில்மிஷம் செய்வது இது முதல் முறையன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பதுல குரு படத்தில் பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஞ்சலி, ச்தயன், மந்த்ரா மற்றும் ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

விஜய் இருந்தா ஆடமாட்டேன்: பிந்து மாதவி அடம்

Bindu Gets Scared Vijay

சென்னை: நடிகர் விஜய் இருந்தால் டான்ஸ் ஆட மாட்டேன் என்று பிந்து மாதவி அடம்பிடித்தாராம்.

சட்டம் ஒரு இருட்டறை ரீமேக் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

தனது உறவினர் ஸ்னேகா பிரிட்டோ இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படப்பிடிப்புக்கு விஜய் சென்றுள்ளார். அப்போது டான்ஸ் காட்சியை படமாக்கியுள்ளனர். விஜயைப் பார்த்ததும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த பிந்து மாதவி வெடவெடத்துப் போனாராம். அய்யய்யோ விஜய் எவ்வளவு பெரிய டான்சர், அவருக்கு முன்னால் நான் எப்படி ஆடுவது என்று திகைத்துவிட்டாராம்.

மேலும் விஜய் செட்டைவிட்டுப் போகும் வரை தான் டான்ஸ் ஆட முடியாது என்றும் தெரிவித்தாராம். ஆனால் விஜய் இடத்தைக் காலி செய்ய மறுத்து அங்கேயே இருந்துள்ளார். பின்னர் வேறு வழியின்றி பிந்து மாதவி ஆடியுள்ளார். அதைப் பார்த்து விஜய் நல்லாத் தானே ஆடுகிறீர்கள் அப்புறம் ஏன் பயம் என்று சொல்லிவி்ட்டு வந்துள்ளார்.

அடடா நான் நன்றாக டான்ஸ் ஆடுகிறேன் என்று விஜயே சொல்லிவி்ட்டாரே என்று பிந்து பூரித்துப்போயிருக்கிறார்.