விஸ்வரூபம் 2: கமலுக்கு முதலில் உதட்டுக்கு கீழ், தற்போது காலில் காயம்

சென்னை: விஸ்வரூபம் 2 படப்பிடிப்பின்போது கமல் ஹாஸனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

விஸ்வரூபம் படம் வெளியான கையோடு கமல் அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் மும்முரமாகிவிட்டார். படத்தின் 90 சதவீத ஷூட்டிங்கை முடித்துவிட்டதாக கமல் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். மீதமுள்ள வேலையையும் முடித்துவிட்டு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

விஸ்வரூபம் 2: கமலுக்கு முதலில் உதட்டுக்கு கீழ், தற்போது காலில் காயம்  

இந்நிலையில் சண்டை காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர். அப்போது கமல் இருக்கும் கார் மற்றொரு கார் மீது மோதும் முன்பு அவர் வெளியே குதிக்கும்போது அவரது காலில் காயம் ஏற்பட்டது. டூப் வேண்டாம் என்று கூறி கமல் தானாகவே சண்டைக் காட்சியில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக படப்பிடிப்பில் அவரது உதடுக்கு கீழ் காயம் ஏற்பட்டது. அதை அவர் பெரிதுபடுத்தவில்லை. படத்தில் நாயகிகளான பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியாவும் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளனர்.

அண்மையில் தான் விஸ்வரூபம் ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்தது.

 

இந்தியாவுக்கு வரும் சிட்டி ஆப் போன்ஸ்...

சென்னை: ஹாலிவுட் படமான தி மார்ட்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் - சிட்டி ஆப் போன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 30ம் தேதி இந்தியாவில் ரிலீஸாகிறது.

காசன்ட்ரா கிளேர் எழுதிய பிரபலமான தி மார்ட்டல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நாவைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

இந்தியாவுக்கு வரும் சிட்டி ஆப் போன்ஸ்...

இந்தப் புத்தகம் மிகவும் பிரபலமானது. கிட்டத்தட்ட 1.6 கோடி புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்தது. கடந்த 2 ஆண்டுகளாக விற்பனையில் முன்னணியில் உள்ள புத்தகமும் கூட.

ஹரால்ட் ஸ்வார்ட் இப்படத்தை இயக்கியுள்ளார். இளம் நடிகர்களான லில்லி காலின்ஸ், ஜேமி காம்பெல் போவர், ராபர்ட் ஷீஹான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தியாவுக்கு வரும் சிட்டி ஆப் போன்ஸ்...

அட்வென்ச்சர், பேன்டசி நிறைந்த அதிரடி ஆக்ஷன் படம் இது. இந்தப் படம் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் ஓடக் கூடியதாகும்.

கிளேரி பிரே என்ற சாதாரண டீன் ஏஜ் சிறுமி, தனது கடந்த காலம் குறித்து தெரிய வருகிறாள். தனது தாயைத் தேடிப் போகும் போகு பல சவால்களையும், அதிர்ச்சிகளையும் சந்திக்கிறார். அது அவளது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போடுகிறது. இதுதான் இப்படத்தின் கதைச் சுருக்கம்.
இது ஒரு சூப்பர் நேச்சுரல் திரைப்படமாகும். இப்படம் இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 30ம் தேதி திரையிடப்படுகிறது.

 

புகைப்படக்காரர் என்று நினைத்து பாதுகாவலரை பிடித்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்

புகைப்படக்காரர் என்று நினைத்து பாதுகாவலரை பிடித்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் புகைப்படக்காரர் என்று நினைத்து பாதுகாவலரை பிடித்துத் தள்ளியுள்ளார்.

ட்வைலைட் சீரிஸ் படங்கள் மூலம் பிரபலமானவர் ராபர்ட் பேட்டின்சன்(27). அவருடன் நடித்த கிறிஸ்டன் ஸ்டூவர்ட்டை காதலித்து பிரிந்துவிட்டார். இந்நிலையில் அவர் கிழக்கு ஹாலிவுட்டில் உள்ள ட்ரோபடோர் இரவுநேர கிளப்பிற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வெளியே வந்துள்ளார்.

காரில் ஏறச் சென்ற அவரை பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால் கடுப்பான அவர் திடீர் என்று ஒருவரின் முகத்தில் கையை வைத்து தள்ளிவிட்டார். இதில் அந்த நபரின் கண்ணாடி கீழே விழுந்தது. அவரை யாரை தள்ளிவிட்டாரோ அவர் கிளப்பின் பாதுகாவலர்.

இந்த சம்பவம் கிசுகிசு எழுதும் இணையதளத்தின் கேமராவில் பதிவாகி இருந்தது.

 

எல்லாம் நேரம்தான்!

ஒரு படம்தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஆனால் இயக்குநர்கள் ஒரேடியாக மொய்ப்பதால் அந்த நடிகையும் ஒரேடியாக சம்பளத்தினை உயர்த்திவிட்டாராம்.

இயக்குநர்கள் மட்டுமல்லாது இளம் நடிகர்களும் அந்த நடிகைதான் வேண்டும் என்று அடம் பிடிப்பதால் தனது நேரம் ஒர்க் அவுட் ஆகிவிட்டதாக நினைத்து சம்பளத்தை ஏற்றிவிட்டாராம் நாயகி. முழுதாக நாற்பது கேட்கிறார் நடிகையின் அப்பா.

இது நடிகைக்கு தெரியுமோ? தெரியாதோ? ஈ போல் மொய்க்கத் தொடங்கிய இயக்குநர்கள் பின்னங்கால் பிடறியில் பட ஓடுகின்கின்றனராம்.

எல்லாம் நையாண்டிதான் போங்கள்!

 

ரஜினி 38: கேட்ட அனைவரையும் பரவசப்படுத்திய ரஜினி பற்றிய 2 மணி நேரப் பேச்சு!!

ரஜினி 38: கேட்ட அனைவரையும் பரவசப்படுத்திய ரஜினி பற்றிய 2 மணி நேரப் பேச்சு!!

சென்னை: ஆகஸ்ட் 18... சரியாக 38 ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினி அறிமுகமான அபூர்வ ராகங்கள் படம் வெளியான தேதி இது.

இந்த நாளில் ரஜினியின் ஆரம்ப காலம், சினிமாவில் அவர் சந்தித்த போராட்டங்கள், சாதனைகள், தனிப்பட்ட வாழ்க்கை, ரசிகர்கள் பலம் என பல விஷயங்கள் குறித்தும் 2 மணிநேரம் அசத்தலாக உரையாற்றி, வந்திருந்தவர்களைப் பரவசப்பட வைத்தார் நடிகர் மோகன் ராம்.

சென்னை நகரம் உருவான தினத்தைக் கொண்டாடும் விதமாக ஆண்டு தோறும் சென்னையின் பாரம்பரியம் குறித்த சென்னை ஹெரிடேஜ் டாக் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ரஜினி 38

இதற்கு முந்தைய ஆண்டுகளில் மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய சாதனையாளர்கள் பற்றிய பேச்சு இடம்பெற்றது.

இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து நடிகர் மோகன் ராம் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ரஜினி திரையுலகில் அடியெடுத்து வைத்து 38 ஆண்டுகள் பூர்த்தியடையும் தினத்தன்றே இந்த பேச்சு இடம்பெற்றது இன்னொரு சிறப்பாகும்.

இதற்காக ரஜினியை ஏற்கெனவே நேரில் சந்தித்துப் பேசினார் மோகன்ராம். அப்போது இரண்டு நிமிட ஆடியோ பேட்டி ஒன்றையும் கொடுத்திருந்தார் சூப்பர் ஸ்டார்.

நேற்று சென்னை ஐடிசி சோழா கிராண்ட் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு ரஜினியின் குரு கே பாலச்சந்தர், சகோதரருக்கு நிகரான இயக்குநர் எஸ் பி முத்துராமன் உள்பட பலரும் வந்திருந்தனர்.

இரண்டுமணி நேரம்

நிகழ்ச்சியில் சுமார் இரண்டு மணி நேரம் பேசினார் மோகன் ராம். ரஜினியின் ஆரம்ப நாட்கள் தொடங்கி, இன்றைய சாதனைகள் வரை அற்புதமாகப் பேசினார். ரஜினியின் ஒவ்வொரு ரசிகரும் தவறவிடக்கூடாத பேச்சாக அமைந்தது அது. பேச்சின் இடையிடையே ரஜினி பற்றிய ஆடியோ - வீடியோ காட்சிகளை போட்டுக் காட்டி இன்னும் சுவாரஸ்யம் கூட்டினார் மோகன் ராம்.

தனது முதல் படத்தை ரஜினி பார்த்த அனுபவம்..

ரஜினி தன் முதல் படமான அபூர்வ ராகங்களை முதன் முதலில் பார்த்தது திநகர் பஸ் நிலையம் எதிரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில்தான்.

படம் முடிந்ததும், யாருக்காவது தன்னை அடையாளம் தெரிகிறதா... தன்னிடம் வந்து பேசுவார்களா என்ற எதிர்ப்பார்ப்புடன் நின்றாராம் ரஜினி. அப்போது ஒரு பத்து வயது சிறுமிதான் ரஜினியைத் தேடி வந்து, அங்கிள் நீங்கதானே அந்தப் படத்துல கடைசியா வந்தது?, என்று கேட்க, ரஜினிக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டதாம். சிறுமிக்கி ஒரு பாப்கார்ன் வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தாராம்!

ஸ்ரீதேவியை முகத்தில் துப்பச் சொன்ன ரஜினி

பதினாறு வயதினிலே படம்... ஒரு காட்சியில் வில்லன் ரஜினி முகத்தில் ஸ்ரீதேவி துப்புவதாக காட்சி. ஆரம்பத்தில் இருமுறை சோப்பு நுரையைத் தெளித்துப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அது ரஜினி முகத்தில் தெளிக்கப்பட்ட சில நொடிகளில் கரைந்துபோனது. உடனே ரஜினி, 'பரவால்ல.. ச்சும்மா துப்புங்க... உண்மையாகவே துப்புங்க" என்று சொன்னாராம். அதன் பிறகுதான் அந்தக் காட்சி சரியாக வந்ததாம். இந்தப் படத்தில் நடிக்கும்போது, ரஜினி ஏற்கெனவே தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 15 படங்களை முடித்துவிட்டிருந்தார்!

சென்னை எக்ஸ்பிரஸ்...

மோகன்ராம் தன் பேச்சை, சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாரூக்கான் எப்படி ரஜினிக்கு மரியாதை செலுத்தினார் என்ற குறிப்போடு முடித்தபோது எழுந்த கைத்தட்டல் அடங்க வெகு நேரமானது!

 

தலைவாவுக்கு நாளை ராஜ உபச்சாரம் தான்

சென்னை: தலைவா படப்பெட்டி ரதத்தில் வைத்து ஊர்வலமாக நாளை உதயம் தியேட்டருக்கு கொண்டு வரப்படுகிறது.

விஜய்யின் தலைவா படம் ஒரு வழியாக நாளை தமிழகத்தில் ரிலீஸ் ஆகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர். தலைவா படத்தின் ரீல்பெட்டியை ரதத்தில் வைத்து நாளை காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள உதயம் தியேட்டருக்கு கொண்டு வருகின்றனர்.

தலைவாவுக்கு நாளை ராஜ உபச்சாரம் தான்

தலைவா ரம்ஜானுக்கே வர வேண்டியது. ஆனால் தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள், நாடுகளில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தலைவா ரிலீஸாகும் குஷியில் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் விஜய்யை புகழ்ந்து ட்வீட் செய்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் படம் நிச்சயம் 100 நாட்கள் ஓடும் என்றும், திரையுலகில் ரஜினியைத் தவிர வேறு யாராலும் விஜய்யை அடித்துக்கொள்ள முடியாது என்றும் அவரது ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

 

கட்டுக்கதைகளுக்கு முடிவு கட்டிய மாண்புமிகு முதல்வருக்கு நன்றி - இது விஜய் பிஆர்ஓ அறிக்கை!!

கட்டுக்கதைகளுக்கு முடிவு கட்டிய மாண்புமிகு முதல்வருக்கு நன்றி - இது விஜய் பிஆர்ஓ அறிக்கை!!
சென்னை: தலைவா படம் குறித்து மீடியாக்களில் வந்த கட்டுக் கதைகளுக்கு பதிலடி தரும் விதமாக தலைவா படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுத்த மாண்புமிகு முதல்வருக்கு நன்றி என்று நடிகர் விஜய் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.

இன்று வெளியாகியுள்ள அந்த அறிக்கை (விஜய் பிஆர்ஓ பிடி செல்வகுமார் அனுப்பியுள்ள அறிக்கை, வரிக்கு வரி அப்படியே தருகிறோம்):

"தலைவா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 9-ம்தேதி வெளியாக வேண்டிய தலைவா திரைப்படம், சில அச்சுறுத்தல்கள் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை.

கடந்த பத்து தினமாக, நான், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

மீடியாக்களில் வந்த பல கட்டுக் கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, தலைவா திரைப்படம் சுமுகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

கட்டுக்கதைகளுக்கு முடிவு கட்டிய மாண்புமிகு முதல்வருக்கு நன்றி - இது விஜய் பிஆர்ஓ அறிக்கை!!

பல வேலைகளுக்கு நடுவிலும் இப்பிரச்சினைக்கு தீர்வு கண்ட மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னோடு பொறுமை காத்த ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தலைவா படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார். -பிடி செல்வகுமார், விஜய் பிஆர்ஓ.