அக்னி நட்சத்திரம் ரீமேக்கில் பிரபு - கார்த்திக் மகன்கள்?

Vikram Prabhu Goutham Karthik Agni Nakshathram Remake

எண்பதுகளின் இறுதியில் இளையராஜா இசையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற அக்னி நட்சத்திரம் படத்தை மீண்டும் ரீமேக் செய்கிறார்கள்.

அந்தப் படத்தில் கதாநாயகர்களாக நடித்த பிரபு - கார்த்திக் இருவரின் மகன்களையும் வைத்து இந்தப் படத்தை ரீமேக் செய்யப் போகிறார்கள் என்பதுதான் இதில் விசேஷம்.

அக்னி நட்சத்திரம் படத்தின் ரீமேக் உரிமையை பாலாஜி ரியல் மீடியாவின் ரமேஷ் பெற்றுள்ளார்.

பிரபு மகன் விக்ரம் பிரபு இப்போது கும்கி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும், அக்னி நட்சத்திரம் ரீமேக்கில் நடிக்க பேச்சு நடத்தி வருகிறார்கள். அதே போல, கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக் இப்போது மணிரத்னத்தின் கடல் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்த பிறகு அவரும் குழுவில் இணைந்து கொள்ள ஏற்பாடுகள் நடக்கின்றன.

இதுகுறித்து தயாரிப்பாளர் ரமேஷ் கூறுகையில், "பிரபு - கார்த்திக் மகன்களை வைத்து அக்னி நட்சத்திரம் ரீமேக் எடுக்க முயற்சித்து வருகிறோம். இப்போது இரு தரப்பிலும் பேசியுள்ளோம். விரைவில் விவரங்கள் தருவோம்," என்றார்.

அக்னி நட்சத்திரம் 1988-ம் ஆண்டு வெளியானது. இளையராஜாவின் இசையில் அத்தனைப் பாடல்களும் மெகாஹிட். குறிப்பாக நின்னுக்கோரி வர்ணமும் ராஜாதி ராஜனிந்த ராஜாவும் ஒலிக்காத இடமே இல்லை. இசையில் புது முயற்சியாக டெக்னோ இசையைக் கையாண்டிருந்தார் ராஜா.

ஆனந்த் தியேட்டர் உமாபதி வில்லனாக நடித்திருந்தார்.

இப்போது யாரை வைத்து வேண்டுமானாலும் படத்தை எடுத்துவிடலாம். ஆனால் அந்தப் பாடல்கள் ஏற்படுத்திய மேஜிக், மீண்டும் சாத்தியமாகுமா?

பார்க்கலாம்!!

 

துள்ளி விளையாடு படத்திற்காக பாடிய மிஷ்கின்!

Mysskin Turns Playback Singer Thull

விஜய் நடித்த ப்ரியமுடன், யூத், முரளி நடித்த வாட்டாக்குடி இரணியன், ஜித்தன், பெருமாள் போன்ற படங்களை இயக்கிய வின்சென் செல்வா அடுத்து இயக்கும் துள்ளி விளையாடு படத்துக்காக பின்னணி பாடினார் இயக்குநர் மிஷ்கின்.

'துள்ளி விளையாடு' படம் ஒரு காமெடி த்ரில்லர். படத்தின் நாயகனாக யுவராஜ் - நாயகியாக தீப்தி அறிமுகமாகிறார்கள்.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வின்சென்ட் செல்வா படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பது இதுதான் முதல் முறை.

ஜெயபிரகாஷ், சூரி, சிங்கமுத்து, சென்ராயன் (ரவுத்திரம் - வில்லன்) சூப்பர்குட் லஷ்மண், மதுரை சுஜாதா (நாடோடிகள்) மதன்பாபு என பிரபலங்கள் கைகோர்த்துள்ளனர்.

இந்தப் படத்தை ஆர்பி ஸ்டுடியோஸ் சார்பில் கோவிந்தராஜ் தயாரிக்கிறார். எஸ்கே பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

துள்ளி விளையாடு படத்தில் இயக்குனர் மிஷ்கின் ஒரு பாடல் பாடியுள்ளார்.
அம்மாடி ஆத்தாடி -இவா
வாலில்லா காத்தாடி டோய்
கையாள மை பூசுறா-அவா
கண்ணால பொய் பேசுறா..

என்று தொடங்குகிறது அந்தப் பாடல். வின்சென்ட் செல்வாவின் உதவியாளராக இருந்தவர்தான் மிஷ்கின் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இயக்குநர் வின்சென்ட் செல்வா கூறுகையில், "என்னோட எல்லா படங்களிலும் எனது உதவியாளராக இருக்கும்போது ட்ராக் பாடுவது ராஜா (மிஷ்கின்) தான்.

யூத், ஜித்தன் போன்ற படங்களில் இவர் பாடிய ட்ராக் தான் பின்னர் பாட்டானது. முகமூடி படபிடிப்பில் பிசியாக இருந்தபோது ஒரு குத்துப் பாட்டு இருக்கு.. பாடமுடியுமான்னு கேட்டபோது எங்க டைரக்டர் கூப்பிடுறார்ன்னு ஓடி வந்து பாடிக் கொடுத்தார் மிஷ்கின். யுவராஜ், வெண்ணிலா கபடிக்குழு சூரி, சென்றாயன் ஆகிய மூன்று பேரின் அறிமுகப்பாடலாக இது படத்தில் இடம் பெறுகிறது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அனுமதி வாங்கி படம்பிடித்தோம். செம ரகளையான இந்த பாடல் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் பேருந்தில் திண்டுக்கல் சுற்றி வர படமாக்கப்பட்டது.

என்னுடைய 'ஒயிட் லக்கான் கோழி ஒண்ணு கூவுது', 'ஆல்தோட்ட பூபதி நானடா', 'அ முதல் அக்கு தானடா', வரிசையில் மிஷ்கின் பாடிய இந்த பாடலும் பட்டையைக் கிளப்பும். மிஷ்கினுக்கு நன்றி," என்றார்.

 

கன்னடத் தயாரிப்பாளரின் படத்தில் விஜய்!

K Manju Produce Ilayathalapathy Vijay Movie

பெங்களூர்: பிரபல கன்னட திரைப்படத் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே.மஞ்சு முதல் முறையாக ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்க வருகிறார். அதில் நாயகனாக நடிக்கப் போகிறார் விஜய்.

பெங்களூரிலிருந்து வரும் தகவல்கள் இதைத் தெரிவிக்கின்றன. சமீபத்தில் கன்னட சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான புனீத் ராஜ்குமார், ஜீவா நடித்த முகமூடி படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்டார். அதில் விஜய்யும் கலந்து கொண்டார். அப்போது தமிழில் நேரடிப் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியிருந்தார் புனீத். இந்த நிலையில், கன்னடத் தயாரிப்பாளர் ஒருவரின் தமிழ்ப் படத்தில் விஜய் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் புனீத்தும் இடம் பெறுவாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

கன்னடத்தில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருப்பவர் கே.மஞ்சு. தமிழ்ப் படங்கள் பலவற்றை கர்நாடகத்தில் விநியோகிக்கும் உரிமையைப் பெற்றிருப்பவர் இவர். லேட்டஸ்டாக இவர் வாங்கிய படம் பில்லா 2. அதற்கு முன்பு விஜய்யின் வேலாயுதம் படத்தையும் இவர் வாங்கி விநியோகித்திருந்தார். இந்த நிலையில் விஜய்யை வைத்து தமிழில் ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறாராம் மஞ்சு.

விஜய்யின் காவலன் பட ரிலீஸின்போது விஜய்யை பெங்களூருக்கு வரவழைத்து, அவரை கன்னடத்தில் பேச வைத்து கன்னட மீடியாக்கள் மற்றும் மக்கள் மத்தியில் விஜய்க்குப் பெரும் பெயர் வாங்க முக்கியக் காரணமே மஞ்சுதான். மேலும் விஜய்க்கும், மஞ்சுவுக்கும் இடையே நல்ல நட்பும் இருக்கிறதாம். இதனால் மஞ்சு தன்னை அணுகியபோது உடனே ஓகே. சொல்லி விட்டாராம் விஜய்.

இதுகுறித்து மஞ்சு கூறுகையில், ஆரம்ப கட்ட அளவில் பேச்சுக்கள் உள்ளன. விஜய் சாருடன் பேசியுள்ளேன். நல்ல கதையைக் கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளார். அதுதொடர்பாக தற்போது தீவிரமாக பேசி வருகிறோம். இந்த வருட இறுதிக்குள் எல்லாம் முடிவாகி விடும் என்றார்.

அதேசமயம், விஜய் படத்தை தயாரிப்பதற்கு முன்பு இன்னொரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்கும் திட்டமும் மஞ்சுவிடம் உள்ளதாம். இதை இயக்கப் போவது சசிக்குமாராம். ஸ்கிரிப்ட் ரெடியாகி விட்டதாம். விரைவில் இது தொடங்குமாம். தமிழ், கன்னடனம், தெலுங்கு எனமூன்று மொழிகளில் இது நேரடியாக தயாராகிறதாம்.

 

மாத்ரு தேவோ பவா ரீமேக்கில் ஜெயபிரதா

Jayaprada Matru Devobhava S Remake

ஆந்திர மக்களின் நினைவில் என்றும் இருக்கும் தெலுங்கு படமான மாத்ரு தேவோ பவா போஜ்புரியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் கதாநாயகியாக நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயபிரதா நடிக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ஆகாசதூது என்ற படம் 1993ம் ஆண்டு தெலுங்கில் மாத்ரு தேவோ பவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கே. அஜய்குமார் இயக்கத்தில் மாதவி மற்றும் நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை கே.எஸ். ராமா ராவ் தயாரித்தார்.

19 ஆண்டுகள் கழித்து இந்த படம் போஜ்புரியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை தயாரித்து கதாநாயகியாக நடிப்பவர் நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயபிரதா. அவருக்கு ஜோடியாக முன்னணி போஜ்புரி நடிகர் மனோஜ் குமார் நடிக்கிறார். தினக் கபூர் இயக்குகிறார்.

அரசியலில் குதித்த பிறகு படங்களில் இருந்து சற்று விலகியே இருந்த ஜெயபிரதா இந்த படம் மூலம் மறுபிரவேசம் செய்கிறார். எதிர்காலத்தில் பல படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

 

விஜய்க்கு வில்லனாகிறாரா 'நான் ஈ' சுதீப்?

Sudeep Turns Baddie Vijay S Yohan

பெங்களூர்: விஜய் நடிக்கும் யோஹன் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க கன்னட முன்னணி நடிகரும், நான் ஈ படத்தில் அசத்தியவருமான சுதீப்பை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

திறமைகள் பல நிரம்பிய சுதீப் ஒரு வழியாக முழு அளவிலான தென்னிந்திய நடிகராக உருவெடுத்துள்ளார். கன்னடத்தில் மட்டுமே கலக்கி வந்த அவர் தற்போது நான் ஈ படத்தின் மூலம் நாடறிந்த நடிகராகி விட்டார்.

நான் ஈ மூலம் கிடைத்த புகழால் தற்போது தமிழில் நேரடியாக நடிக்கும் பட வாய்ப்புகள் சுதீப்பைத் தேடி வர ஆரம்பித்துள்ளன.

அதேபோல கன்னடம், தெலுங்கிலும் கூட அவரை நோக்கி ஏகப்பட்ட பட வாய்ப்புகள் பாய்ந்தோடி வருகின்றனவாம்.

அதில் முக்கியமானது கெளதம் மேனன் இயக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பாம். விஜய்தான் இதில் ஹீரோ. நீண்ட நாட்களாக கிடப்பி்ல உள்ள இப்படத்தை தூசி தட்டி கையில் எடுக்கிறார் கெளதம்.

இப்படத்தை முழுக்க முழுக்க நியூயார்க் மற்றும் பிற நாடுகளில் படமாக்குகிறார் கெளம் மேனன். இதில் ஒற்றன் வேடத்தில் வருகிறார் விஜய். இந்த நிலையில்தான் நான் ஈ படத்தைப் பார்த்த கெளதமுக்கு சுதீ்ப்தான் யோஹன் படத்திற்கு சரியான வில்லனாக இருப்பார் என்ற யோசனை தோன்றியதாம். இதுகுறித்து சுதீப்பிடமும் அவர் பேசியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் சுதீப் இதுகுறித்து உறுதியாக கூற மறுக்கிறார். இதை வதந்தி என்று கூட அவர் கூறுகிறார். தற்போது அவர் பச்சன் என்ற கன்னடப் படத்தில் பிசியாக இருக்கிறாராம். இதில் பாவனா நடிக்கிறார்.

 

ஜீ டிவில பவர் ஸ்டார் அண்ணன் வர்றார்லே, கண்டு ரசிங்க!

Powerstar Lukka Kikka

பவர்ஸ்டார் சீனிவாசன் பங்கேற்கும் நிகழ்ச்சி என்றாலே மீடியாக்களுக்கு கொண்டாட்டம்தான். பேட்டியோ, ரியாலிட்டி ஷோவோ, எதுவென்றாலும் அதற்கு தனி விளம்பரம் தேடிக்கொள்வதோடு நிகழ்ச்சியின் டிஆர்பியையும் ஏற்றிக்கொள்வார்கள். அப்படித்தான் நீயா, நானா நிகழ்ச்சியில் பங்கேற்று கோபிநாத்தை மட்டம் தட்டி தனக்கென்று புதிய ரசிகர்களை உருவாக்கினார் சீனிவாசன். கோவை சரளா நடத்தும் பாசப்பறவைகள் நிகழ்ச்சியில் குடும்பத்தோடு பங்கேற்று எதிலும் தான் ஸ்பெசல் என்று நிரூபித்தார்.

அதேபோல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ரோஜா நடத்தும் லக்கா, கிக்கா நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மீண்டும் மீடியா வெளிச்சத்தில் சிக்கியுள்ளார் சீனிவாசன். அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஆகஸ்ட் 13 ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் கடந்த வாரத்தில் இருந்தே அதற்கான விளம்பரம் போட ஆரம்பித்துவிட்டார்கள்.

தொண்டர்கள் புடைசூழ வரும் பவர்ஸ்டாருக்கு ஆளுயர மாலை போட்டு அமர்க்களப்படுத்திவிட்டனர். டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் சிறப்பு விருந்தினர் ஒருவருக்கு கட் வைப்பது அநேகமாக பவர்ஸ்டாருக்காகத்தான் இருக்கும்.

ரியாலிட்டி ஷோ, கேம்ஷோ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இப்போது சிறப்பு விருந்தினர்கள் என்ற பெயரில் சின்னத்திரை நடிகர்களோ, சினிமா நடிகர்களோ பங்கேற்கின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியும் அந்த வரிசையில் வந்து விட்டது. லக்கா கிக்கா நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாகவே சின்னத்திரை நட்சத்திங்கள்தான் பங்கேற்கின்றனர். அந்த வரிசையில் வரும் ஆகஸ்ட் 13 ம் தேதி பவர்ஸ்டார் சீனிவாசன் பங்கேற்றுள்ள நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

கண்டு ரசிங்க.... ஸ்டார்ட் மியூசிக் ....!

 

ஹாரிஸ் ஜெயராஜ் கச்சேரியுடன் சிங்கப்பூரில் மாற்றான் இசை வெளியீடு - 150 பேர் கொண்ட குழு பயணம்

Maattraan Audio Release Singapore Aug 09   

சென்னை: சூர்யாவின் மாற்றான் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக சிங்கப்பூரில் நடக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜின் இசைக் கச்சேரியுடன் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 150 பேர் கொண்ட படக்குழு மற்றும் கலைஞர்கள் சிங்கப்பூர் செல்கின்றனர்.

ஆகஸ்ட் 9-ம் தேதி (வியாழக் கிழமை) சிங்கப்பூர் எக்ஸ்போ ஹாலில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் ஹரிச்சரண், வேல்முருகன், விஜய்பிரகாஷ், விஜய் பாலகிருஷ்ணன், எம்கே பாலாஜி, சுசித்ரா, சுனிதா சாரதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மேலும் நிகழ்ச்சியின் இடையே நடிகைகள் மற்றும் நடனக் குழுவினரின் ஆட்டமும் உண்டு. இதில் நடிகைகள் பூர்ணா, நீது சந்திரா, தன்ஷிகா, ஜூலியா பயஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிருந்தா இவர்களுக்கு நடனப் பயிற்சி அளித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஸ்நேகா, பிரசன்னா, திவ்யா, சோனியா அகர்வால், காஜல் அகர்வால், இயக்குநர்கள் லிங்குசாமி, கவுதம் மேனன், ஹரி, ஏ எல் விஜய் மற்றும் மாற்றான் படக்குழுவினர் சிங்கப்பூர் செல்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு மொத்தம் 5000 பேர் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இங்கிட்டு தீபிகா, அங்கிட்டு கத்ரீனா: ஜமாய்க்கும் ரன்பிர் கபூர்

Katrina Spends Night With Ranbir Kapoor

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தனக்கு நடிகைகள் தீபிகா படுகோனே மற்றும் கத்ரீனா கைப் மீதுள்ள உணர்வு நட்பா, காதலா என்பதே புரியாமல் தவிக்கிறாராம்.

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் ஒரு காலத்தில் காதலர்களாக வலம் வந்தனர். பின்னர் காதல் கசந்து ஆளுக்கொரு பக்கம் சென்றுவிட்டனர். அதன் பிறகு தீபிகா தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவை காதலித்தார். அந்த காதல் திடீர் என்று முறிந்துவிட்டது. இந்நிலையில் தீபிகா மீண்டும் ரன்பிர் கபூருடன் சேர்ந்துவிட்டதாக பாலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

இதற்கிடையே சல்மான் கானைப் பிரிந்த நடிகை கத்ரீனா கைபும் ரன்பிருடன் நெருக்கமாக உள்ளார் என்று கூறப்படுகிறது. அண்மையில் ரன்பிரும், தீபிகாவும் சேர்ந்து கேங்ஸ் ஆப் வசீபூர் II என்ற இந்தி படம் பார்த்துள்ளனர். படம் முடிந்து தீபிகா கிளம்பியவுடன் ரன்பிர் வீட்டுக்கு கத்ரீனா வந்துள்ளார். அவர் வந்தபோது நள்ளிரவு 1.30 மணி. அன்றைய இரவை அவர் ரன்பிர் வீட்டிலேயே கழித்தார் என்று கூறப்படுகிறது.

நடிகைகள் அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோனே, கத்ரீனா கைப் என்று 3 பேருடன் நேரம் செலவிட்டு வருகிறார் ரன்பிர். கத்ரீனா ரன்பிரை தனது நண்பர் என்று சொல்லிக்கொண்டு நள்ளிரவில் எதற்காக அவரது வீட்டுக்கு சென்றார் என்று பலரும் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

நயன்தாரா படத்திலிருந்து இயக்குநர் பூபதி பாண்டியன் விலகல்!

Boopathy Pandiyan Walks Of Nayanthara Movie   

ஹைதராபாத்: நயன்தாரா - கோபிச்சந்த் நடிக்கவிருந்த பிரமாண்ட படமான ஜெகன் மோகன் ஐபிஎஸ்-லிருந்து விலகிக் கொண்டார் இயக்குநர் பூபதி பாண்டியன்.

திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை போன்ற படங்களை இயக்கியவர் பூபதி பாண்டியன்.

நயன்தாரா - கோபிச்சந்த் நடிக்க, ஜெகன் மோகன் ஐபிஎஸ் படத்தை இவர் இயக்கவிருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக தயாராகவிருந்தது இந்தப் படம்.

சில மாதங்களுக்கு முன் பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது இந்தப் படம்.

ஆனால் அதன் பிறகு எந்த முன்னேற்றமும் இல்லையாம். இதுகுறித்து இயக்குநர் பூபதி பாண்டியன் கூறுகையில், "ரொம்ப நாளா வெறும் டிஸ்கஷன்லயே இருந்தது இந்தப் படம். என்னுடைய ஸ்க்ரிப்டில் ஏகப்பட்ட மாறுதல் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. குறிப்பா கோபிசந்த் தன் இமேஜுக்கு ஏத்த மாதிரி இப்படி மாத்து, அப்படி மாத்துன்னு சொல்லிக்கிட்டே இருந்தது. எனக்கு நம்பிக்கை போயிடுச்சி. மனதளவில் பெரிய டார்ச்சரா இருந்தது. அதான் படத்திலிருந்து நான் விலகிக்கிட்டேன்..," என்றார்.

பூபதி பாண்டியன் விலகியதைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் ஸ்ரீவாஸ் இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பையும், வேறு à®'ரு தமிழ் இயக்குநரும் தமிழ்ப் பதிப்பையும் இயக்கப் போகிறார்களாம்.

'யாரை வச்சு வேணும்னாலும் இயக்கிக் கொள்ளட்டும். நான் என் ஸ்க்ரிப்டை கொடுத்தேன். அவர்கள் எக்கச்சக்க மாறுதல் செய்து, அது என் ஸ்க்ரிப்ட்தானா என கேட்குமளவுக்கு வைத்துவிட்டனர். விரைவில் வேறு படத்தை அறிவிப்பேன்," என்றார்.

 

'ஸ்டன்னிங் லுக்'கில் ஐஸ்வர்யா... மறுபடியும் சிக்கென்று மாறினார்!

மும்பை: ஐஸ்வர்யா ராய் மறுபடியும் தனது சிக் அழகைப் பிடித்து விட்டார். ஒரு நகைக் கடை விளம்பரத்திற்காக அவர் கொடுத்துள்ள போஸ் வெளியாகியுள்ளது. குழந்தை பெற்ற பிறகு குண்டாக காணப்பட்ட ஐஸ்வர்யா, இதில் முன்பை விட பொலிவாக, படு க்யூட்டாக, கம்பீரமாக காணப்படுகிறார்.

ஐஸ்வர்யாவுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் வழக்கமாக எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் உடல் மாற்றங்கள் ஐஸ்வர்யாவுக்கும் நிகழ்ந்தன. இதனால் அவர் குண்டாக காணப்பட்டார்.

ஆனால் தற்போது படு அழகாக அவர் மாறியுள்ளார். முன்பை விட பொலிவாக, தேவதை போல காணப்படுகிறார். உடம்பைக் குறைத்து சிக்கென்று மாறியுள்ள ஐஸ்வர்யா, ஒரு நகை விளம்பரத்திற்காக கொடுத்துள்ள விளம்பரப் படம் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

கடந்த 2 வராமாக இந்த விளம்பரப் படத்திற்காக நடித்து வருகிறாராம் ஐஸ்வர்யா. நாடு முழுவதும் டிவிகள் மற்றும் நாளிதழ்களில் இந்த விளம்பரம் வெளியாகிறது. ஐஸ்வர்யா விளம்பரப் படத்தில் நடித்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யாவை புகைப்படம் மற்றும் வீடியோப் படம் எடுத்த கிரண் தியோஹன்ஸ் கூறுகையில், ஜோதா அக்பர் படத்தின்போது நான் ஐஸ்வர்யாவுடன் இணைந்து பணியாற்றினேன். அப்போது பார்த்த அதே ஐஸ்வர்யாவையே இப்போதும் பார்க்கிறேன். அவருடைய அழகில் சற்றும் மாற்றம் இல்லை. மிகவும் தொழில் முறையிலான கலைஞர் அவர். ஒப்பற்ற திறமை படைத்தவர். அவர் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால், மற்றவர்கள் எல்லாம் அவருக்குப் பின்னால்தான். அப்படி ஒரு கவர்ச்சி அவரிடம் உள்ளது. ஐஸ்வர்யாவைப் போன்ற அழகான எந்தப் பெண்ணையும் இதுவரை நான் பார்த்ததில்லை என்றார்.

 

சட்டை போடாத சல்மானுடன் ஜோடி சேர துடிக்கும் சன்னி லியோன்!

Will Salman Khan Fulfill Sunny Leone   

மும்பை: பாலிவுட்டுக்கு சன்னி லியோன் வருவதற்கு முன்பு அவரது வேடத்தை செய்து வந்தவர் சல்மான் கான் தான். படத்தில் பாதி நேரம் சட்டை போடாமலேயே சிலம்பிக் கொண்டிருந்தார். இப்போது அவருக்குப் போட்டியாக சன்னி லியோன் வந்துவிட்டார். ஆனால் கொஞ்சம் போல சட்டை போடும் சன்னி லியோனுக்கு ரொம்பப் பிடித்தவர் சட்டையே போடாத சல்மான்தானாம் (அதானே, இனம் இனத்தோடதானே சேரும்).

யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து நடிக்க நான் தயார். ஆனால் என்னோட ஹீரோக்கள் லிஸ்ட்டில் டாப்பில் இருப்பவர் சல்மான்தான். எப்படியாவது அவருடன் சேர்ந்து விட வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசுகிறார் சன்னி.

சல்மானும், சன்னியும் ஜோடி சேர்ந்து நடித்தால் பார்க்கவே பரவசமாக இருக்கும் என்று பாலிவுட்டிலும் ஏற்றிப் பேசி வருகிறார்களாம். இதனால் சன்னிக்கு, சல்மானுடன் சேர வேண்டும் என்ற லட்சியம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறதாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என்னோட விருப்பப் பட்டியலில் முதலில் இருப்பவர் சல்மான் தான். நான் யாருடனும் சேர தயார். ஆனால் முதலில் சல்மானுடன் சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இது நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறேன் என்று பரவசத்துடன் கூறுகிறார் சன்னி.

பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவை சல்மான் தொகுத்து வழங்கியபோது கூட சல்மானுடன் டேட்டிங் போக விரும்புவதாக கூறியவர்தான் சன்னி. அதேபோல சல்மானும் கூட சன்னி மீது ஒரு பார்வையுடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. தனது படம் ஒன்றில் சன்னியை நடிக்க வைக்கவும் அவர் தீர்மானித்திருப்பதாகவும் கூறப்பட்டது. இருந்தாலும் அவசரப்படாமல், கொஞ்சம் பொறுமையாக இருக்க அவர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

பாலிவுட்டுக்கு எந்தப் புதுமுக நடிகை வந்தாலும் அவர்களை அரவணைத்து, கைட் போல வழிகாட்டி நடை போட வைப்பதில் சல்மான் கான் எப்போதும் துடிப்புடன் இருப்பார். இப்படித்தான் காத்ரீனா கைப், ஜரீன் கான், ஸ்னேகா உல்லால் என பலருக்கும் அவர் பாடிகார்ட் போல திகழ்ந்தார். இப்போது சன்னியையும் அவர் அரவணைப்பார் என்று பேசிக் கொள்கிறார்கள்.

அது சரி, 'சம்மர்' போனா அடுத்து 'சன்னி' வந்துதானே ஆக வேண்டும்...!

 

எஸ்ஏசி மீது நம்பிக்கையில்லை; பொதுக்குழுவைக் கூட்டுங்க - 194 தயாரிப்பாளர்கள் அறிக்கை

194 Producers Urge Convene General Body Meet

சென்னை: தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் மீது நம்பிக்கையில்லை. பொதுக்குழுவை கூட்டுங்கள், என்று கூறி 194 தயாரிப்பாளர்கள் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.

பட அதிபர்கள் கே.ராஜன், கலைப்புலி ஜி.சேகரன், ஜே.வி.ருக்மாங்கதன், கே.விஜயகுமார், கே.எஸ்.சீனிவாசன், கே.முருகன், ஜாகுவார் தங்கம், ஆர்.வடிவேல் உள்பட 194 பட அதிபர்கள் கூட்டாக ஒரு அறிக்கை விடுத்துள்ளனர்.

அதில், "எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில் உள்ள பட அதிபர்கள் சங்க நிர்வாகக்குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களது செயல்பாடு நேர்மையாக இல்லை. அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்கவோ, நீண்ட அடிப்படையிலான திட்டங்களை நிறைவேற்றவோ அவர்கள் முயற்சிக்கவில்லை.

பெப்சி தொழிலாளர்கள் ஊதியப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. ட்ரஸ்ட் நிதியும் முறையாக பராமரிக்கப்படவில்லை.

ஆகவே 30 நாட்களுக்குள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் தீர்மானத்தை நிகழ்ச்சி நிரலாகக் கொண்ட பொதுக்குழு ஒன்று ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் கூட்டப்பட வேண்டும்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

 

மறுபடியும் வீ்ணாவுக்கு கிரிக்கெட் காய்ச்சல் வந்துருச்சாம்!

Veena Malik Back With Cricket Fever

பாகிஸ்தான் அழகி வீணா மாலிக்குக்கு மறுபடியும் கிரிக்கெட் ஜூரம் பிடித்து ஆட்டத் தொடங்கியுள்ளதாம். இதனால், அவர் இந்தியா டிவியில் கிரிக்கெட் வர்னணையாளராக புது அவதாரமும் எடுத்துள்ளாராம்.

கிடைக்கிற கேப்பில் கில்லி ஆடுவது என்பதை வீணா மாலிக்கைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். எப்படியெல்லாம் செய்தால் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதைப் புரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்க கிடைக்கிற கேப்பில் கிடா வெட்டிக் கலக்கிக் கொண்டிருக்கிறார் வீணா.

இந்த நிலையில் இந்தியா, இலங்கை இடையிலான டுவென்டி 20 கிரிக்கெட் போட்டியின் வர்னணையாளராக மாறியிருக்கிறார் வீணா. இந்தியா டிவியில் அவர் முன்னாள் வீரர்களான சேத்தன் சர்மா, யோகராஜ் சிங், யஷ்பால் சர்மா, சஞ்சய் பரத்வாஜ், ராஜ்குமார் சர்மா ஆகியோருடன் இணைந்து கிரிக்கெட் கமெண்டரி கொடுக்கப் போகிறாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு கிரிக்கெட் என்றால் உயிர். அதை தொடர்ந்து பார்த்து வருகிறேன். இப்போது என் கையில் நிறையப் படங்கள் இருக்கின்றன. இருப்பினும் கிரிக்கெட் மீது கொண்ட காதலால் இந்தியா டிவியில் நான் நிகழ்ச்சி வர்னணையாளராக மாற ஒப்புக் கொண்டுள்ளேன் என்றார்.

கிரிக்கெட் போட்டி குறித்தும், வீரர்களின் ஆட்டம் குறித்தும் நிபுணர்களுடன் சேர்ந்து கருத்துக்களை அள்ளிக் கொட்டப் போகிறாராம் வீணா.

 

ஆடிமாதம் அம்மன் பாடல்களை போட்டு அசத்திய மானட மயிலாட டீம்

Aadi Month Special Devotional Songs

ஆடிமாதம் என்றாலே தொலைக்காட்சிகளில் பக்தி திரைப்படங்கள் களைகட்டும். அதுவும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாடல்களில் கூட பக்திரசம் சொட்டும். அம்மன் பாடல்கள் போட்டு வேப்பிலை வைத்து ஆடிக்கொண்டிருப்பார்கள். அதே பாணியை பின்பற்றி டிஆர்பி ரேட்டிங்களை ஏற்றிக்கொண்டது மானட மயிலாட டீம்.

நடனப்போட்டிக்காக அமைக்கப்பட்டிருந்த அரங்கில் அம்மன் சிலை செட் போடப்பட்டு கோவில் திருவிழா போல சீரியல் செட் செய்யப்பட்டிருந்தது.நடனப் போட்டியில் பங்கேற்ற சின்னத்திரை நட்சத்திரங்கள் ஆடியது அனைத்துமே அம்மன் பாடல்கள்தான். மஞ்சள், சிவப்பு புடவை கட்டிய பெண்கள் குலவை போட்டு, அக்னிச்சட்டி எடுத்து, தீ மிதித்து அமர்களப்படுத்திவிட்டனர். நிகழ்ச்சியைய் பார்த்து எத்தனைபேர் வீட்டில் சாமி வந்து ஆடினார்களோ தெரியாது.

நிகழ்ச்சியின் நடுவர்களான நடன இயக்குநர் கலா, நமீதா, குஷ்பு ஆகியோரின் உடை அலங்காரம் வித்தியாசமான கெட் அப்பில் இருக்க நிகழ்ச்சித்தொகுப்பாளகளின் உடையோ அதைவிட அமர்களமாக ஜிகு ஜிகு என்று இருந்தது. அதுவும் நடுவராக இருந்த குஷ்பு 'தாலி வரம்' என்ற பாடலுக்கு செய்த ஆக்ஷன் அட்டகாசம். பேசாமல் அவரே ஆடியிருக்கலாம். மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தீம் எடுத்து அதன் படி செட் அமைக்கப்பட்டிருக்கும். ஆடி மாதம் என்பதால் கடந்த ஞாயிறு அன்று அம்மன் பாடல்களைப் போட்டியாளர் தேர்தெடுந்தது ரசிக்கும் படியாக இருந்தது.

 

நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன்... - மீண்டும் புயல் கிளப்பும் சனா கான்

Sana Khan Firm On Her Comment About   

சென்னை: தென்னிந்திய நடிகைகளும்தான் தம்மடிக்கிறாங்க, குடிக்கிறாங்க... ஆனா வெளில தெரியறதில்லை, என்று சமீபத்தில் கூறி சர்ச்சையைக் கிளப்பியவர் நடிகை சனா கான்.

இப்போதும் தன் கருத்தில் உறுதியாக இருப்பதாகவும், இல்லாத ஒன்றை தான் சொல்லவில்லை என்றும் அவர் மீண்டும் கூறியுள்ளார்.

சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு உள்ளிட்ட படங்களில் நடித்த சனாகான் சமீபத்தில் சென்னையில் அளித்த பேட்டியில், "இந்தி நடிகைகளைவிட தென்இந்திய நடிகைகள் மது, சிகரெட் பழக்கத்துக்கு அதிகமாக அடிமையாகி உள்ளனர்... ஆனால் அது வெளியில் தெரிவதில்லை. மும்பை நட்சத்திர ஓட்டல்களில் பாலிவுட் நடிகைகள் மட்டுமல்ல, தென் இந்திய நடிகைகளும் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு தள்ளாடிப் போவதை பார்த்து இருக்கிறேன். எனக்கு அதுபோன்ற பழக்கம் எதுவும் கிடையாது," என்று பரபரப்பு பேட்டியளித்தார்.

இதற்கு நடிகைகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. த்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்டோர் சனாகானை கண்டித்து பேட்டி அளித்தனர். எச்சரிக்கையும் விடுத்தார்கள்.

ஆனால் இதற்காக சனா கான் தன் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் இதுகுறித்து கூறுகையில், "நான் தவறாக எதையும் பேசிவிடவில்லை. இல்லாத ஒன்றையா நான் சொன்னேன்....

மது, புகை பழக்கம் உள்ள நடிகைகள் பற்றிய உண்மையைதான் சொன்னேன். இன்றும் நடிகைகள் விருந்து நிகழ்ச்சிகளில் மது கிளாசை கையில் வைத்திருப்பது போன்ற படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த பழக்கத்தை அவர்கள் விடட்டும். மாறாக என் மீது பாய்வதில் என்ன நியாயம்? ஒரு உண்மையைச் சொன்னேன். அதற்காக என்னைத் திட்டுவது முறையல்ல," என்றார்.

 

வீட்டைவிட்டு ஓடிப்போய் அனன்யா ரகசிய திருமணம்!!

Ananya Elopes Marries Anchaneyan Secretly   

திருச்சூர்: வீட்டை விட்டு ஓடிப்போய் ஆஞ்சநேயனுடன் ரகசிய திருமணம் செய்து கொண்டார் நடிகை அனன்யா என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலை அனன்யாவின் தந்தையே பரப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடோடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனன்யா. 'சீடன்', 'எங்கேயும் எப்போதும்' படங்களிலும் நடித்துள்ளார். நல்ல நடிகை எனப் பெயரெடுத்த அவருக்கும், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயனுக்கும் காதல் மலர்ந்தது.

இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் பிப்ரவரி 3-ந்தேதி திருச்சசூரில் நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்தன.

அப்போது ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் அனன்யா பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து நிச்சயதார்த்தத்தை அவர்கள் ரத்து செய்தனர். அனன்யாவையும் வீட்டில் சிறை வைத்தனர்.

முதல் மனைவியை விவாகரத்து செய்ய முயற்சித்து வருவதாக ஆஞ்சநேயன் தெரிவித்தார். எற்கனவே திருமணமான விஷயம் அனன்யாவுக்கு தெரியும் என்றும் கூறினார்.

ஆனால் திருமணத்தை மறந்துவிட்டதாகக் கூறிவிட்ட அனன்யா, தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் அனன்யா தற்போது திடீரென வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் ஆஞ்சநேயனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு அவருடன் குடித்தனம் நடத்துவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அனன்யாவின் தந்தை கோபாலகிருஷ்ணன் கூறுகையில், "எனது மகள் அனன்யா வீட்டை விட்டு ஓடிவிட்டாள் என்பது உண்மைதான். அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. ஆஞ்சநேயலுவை திருப்பதியில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. தற்போது திருவனந்தபுரத்தில் கணவருடன் வசிப்பதாக கூறுகின்றனர். அனன்யா எங்களுக்கு செய்தது பெரிய துரோகம். ஆஞ்சநேயன் அவளுக்குப் பொருத்தமானரில்லை. என் மகளுக்கு சின்ன வயது. ஆஞ்சநேயனுக்கு வயது அதிகம். இது எங்கே போய் முடியப் போகிறதோ...," என்றார்.

 

ஐ படத்தில் விக்ரம் சம்பளம்ரூ 15 கோடி!!

Vikram Gets Rs 1 Cr I

சென்னை: ஷங்கர் இயக்கும் ஐ படத்தில் விக்ரமுக்கு சம்பளம் ரூ 15 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் விக்ரம். பத்தாண்டுகளுக்கு மேல் போராடி, சேது படத்துக்குப் பிறகு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் தமிழில். அதைக் கெடுத்துக் கொள்ள அவரே அவ்வப்போது மஜா, ராஜபாட்டை போன்ற குப்பைப் படங்களை செய்வதும் உண்டு.

ஆனாலும், அவரது நடிப்பு திறமை, ஆர்வம் அவரது இடத்தை இன்னும் அப்படியே வைத்துள்ளது.

இப்போது தமிழில் இரு பெரிய பட்ஜெட் படங்களில் அவர் நடித்து வருகிறார். ஒன்று தாண்டவம். வரும் செப்டம்பரில் இந்தப் படம் வரவிருக்கிறது.

அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ஐ. இந்தப் படத்துக்காக விக்ரம் பெறும் சம்பளம் ரூ 15 கோடி என்கிறார்கள். ஏற்கெனவே விஜய்யும் அஜீத்தும் இந்த சம்பளத்தைத் தாண்டிவிட்டார்கள். விக்ரம் இப்போதுதான் இந்த ரேஞ்சுக்கு வந்திருக்கிறார்.

ஐ படத்தின் பட்ஜெட் ரூ 85 கோடி என்கிறார்கள். விக்ரமுக்கு உள்ள ரசிகர்கள், படத்தின் தமிழ் - தெலுங்கு -இந்தி உரிமைகள் அனைத்தையும் கணக்கில் வைத்து இந்த அளவு பட்ஜெட் போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கூட்டிக் கழிச்சி, கணக்கு சரியா வந்தா ஓகே!

 

கோச்சடையான் - விஸ்வரூபம் ரீலீஸ் குறித்து ரஜினி - கமல் ஒப்பந்தம்?

No Rajini Kamal Pact On Kochadaiyaan

இந்த ஆண்டின் மெகா படங்களான கோச்சடையான் மற்றும் விஸ்வரூபம் ஆகியவற்றின் ரிலீஸ் குறித்து ரஜினியும் கமலும் ரகசிய ஒப்பந்தம் போட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரஜினியும் கமலும் சந்தித்ததாகவும், அப்போது கோச்சடையான் - விஸ்வரூபம் படங்களை ஒரே நேரத்தில் வெளியிடக் கூடாது என ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் சில பத்திரிகை மற்றும் இணைய தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

இதுகுறித்து கமல் தரப்பில் விசாரித்த போது, அவரது மீடியா தொடர்பாளர் இதனை உறுதியாக மறுத்தார்.

"ரஜினி சாரும் கமல் சாரும் சந்திக்க ஆயிரம் விஷயங்கள் உள்ளன. அது வேறு. ஆனால் தங்கள் படங்களின் வெளியீடு குறித்து ரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள் என்பதில் இம்மியளவும் உண்மையில்லை.

காரணம், கோச்சடையான ரஜினி சாரின் பிறந்த நாளான 12.12.12-ல் வெளியிட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். விஸ்வரூபமோ செப்டம்பர் அல்லது அக்டோபர் ஆரம்பத்தில் வெளியாகிவிடும். இதுதான் உண்மை. இதில் ரீலீஸ் தேதி குறித்து அவர்கள் ஏன் ஒப்பந்தம் போடப் போகிறார்கள்", என்றார்.

 

மாரடைப்பால் நடிகர் ராஜேஷ் மனைவி மரணம் - உடல் அடக்கம் இன்று நடக்கிறது

Actor Rajesh S Wife Passes Away

சென்னை: மாரடைப்பு காரணமாக நடிகர் ராஜேஷின் மனைவி சில்வியா நேற்று திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 49.

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மதுரைக்குச் சென்றிருந்தார் ராஜேஷ். மனைவி மரணம் அடைந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக விமானம் மூலம் சென்னை திரும்பினார். மனைவியின் உடலைப்பார்த்து அவர் கதறி அழுதார்.

ஜோன் சில்வியாவின் உடலுக்கு இயக்குநர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா, பாக்யராஜ், விக்ரமன், நடிகர்கள் கரண், ரமேஷ்கண்ணா, பீலிசிவம் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

அவருடைய உடல் அடக்கம், சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3-30 மணிக்கு நடக்கிறது.

மரணம் அடைந்த ஜோன் சில்வியாவுக்கு திவ்யா என்ற மகளும், திலீப் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் திவ்யாவுக்கு திருமணம் ஆகிவிட்டது.

திலீப்புக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.