ரஜினிக்கு தனது சிறுநீரகத்தை தானமாக தருவதற்காக ரசிகர் தற்கொலைக்கு முயற்சி

Tags:



கோயம்பத்தூர்: நடிகர் ரஜினிகாந்த்துக்கு தனது சிறுநீரகத்தை தானமாக தருவதற்காக ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற செயல் கோவையில் நடந்துள்ளது.

ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைய வேண்டிய ரசிகர்கள் பல்வேறு வகைகளில் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர். கோவிலில் தங்கத் தேர் இழுப்பது, அன்னதானம், கூட்டுப் பிரார்த்தனை என ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் ரஜினிக்கு தனது சிறுநீரகத்தை தானம் தருவதற்காக தற்கொலைக்கு முயன்றுள்ள செயல் கோவையில்நடந்துள்ளது.

கோவை, குறிச்சி, சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் ரஜினி ராஜா ஆரோக்கியசாமி. 40 வயதாகும் இவர் தீவிர ரஜினி ரசிகர். அப்பகுதி ரஜினி ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். ரஜினிகாந்த்துக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப் போவதாக செய்திகள் வெளியானதால் பெரும் சோகமடைந்தார் ஆரோக்கியசாமி. இதையடுத்து அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அவர் தற்கொலைக்கு முயன்றார்.

அவர் மயங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் ஆரோக்கியசாமியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர் உயிர் தப்பினார். பின்னர் அவர் கூறுகையில், எனது சிறுநீரகங்களை ரஜினிக்கு தானமாக கொடுப்பதற்காகவே நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறினார் ஆரோக்கியசாமி.

 

'செட்டில்' ஆனாரா பூர்ணா?

Tags:



நடிகை பூர்ணா கல்யாணம் செய்து கொள்ளாமலேயே இல்லற பந்தத்தில் மூழ்கி விட்டதாக கோலிவுட் முழுவதும் பரபரப்பாக பேசிக் கொள்ளப்படுகிறது.

கேரளாவிலிருந்து இடம் பெயர்ந்து வந்த ஏராளமான நடிகைகளில் பூர்ணாவும் ஒருவர். கேரளாவிலிருந்து வந்த இறக்குமதி நடிகைகள் பெரிய அளவில் தமிழில் போணியாகி வரும் நிலையில் பூர்ணா மட்டும் இதுவரை ஸ்டார் அந்தஸ்தைப் பெறாமல் இருக்கிறார். இத்தனைக்கும் சிறப்பான நடிப்பு ஒத்துழைப்பை வழங்கும் நடிகைகளில் அவரும் ஒருவர் என்கிறார்கள்.

முன்னணிக்குத்தான் வரவில்லையே தவிர வதந்திச் செய்திகளில் நிறையவே அடிபடுகிறார் பூர்ணா. ஆரம்பத்தில் அவரை பரத்துடன் இணைத்துப் பேசினார்கள். பின்னர் நகுலுடன் இணைத்துப் பேசினார்கள். வெளிநாட்டுக்கு ஷூட்டிங் போனபோது நகுல் தனது ஸ்வெட்டருக்குள் பூர்ணாவை அணைத்து வைத்து குளிரைக் குறைத்தார் என்று கூட கூறினார்கள்.

இந்த நிலையில் தற்போது நடிகர் ஆதியுடன் இணைத்து பூர்ணா பலமாக கிசுகிசுக்கப்படுகிறார். இருவரும் சேர்ந்து ஒரே ஒரு படத்தில் நடித்தார்கள். ஆனால் பெரிய அளவில் இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வேகமாக பரவி வருகின்றன. இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள், கணவன் மனைவி போல வாழ்கிறார்கள் என்று கூட கூறுகிறார்கள்.

இருவரும் காதலிப்பதாக முன்பு செய்திகள் வெளியானபோது அதை இருவருமே மறுத்தனர். இந்த நிலையில் இருவரும் தற்போது கணவன், மனைவி போல குடித்தனம் நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது நிஜமான கல்யாணத்தில் போய் முடியுமா அல்லது பாதியில் பிடுங்கிக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் இவர்கள் இருவரையும் பற்றித் தெரிந்தவர்கள்.

 

பார்க்கணும் போல இருக்கு!

Tags:



சுறா என்ற பெரிய தோல்விப் படத்தைக் கொடுத்து அத்தனை காலமாக சேர்த்து வைத்திருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்ட எஸ்.பி. ராஜகுமார் தற்போது முற்றிலும் வித்தியாசமான கதையுடன், முழு நீள காமெடிக் கதையுடன் பார்க்கனும் போல இருக்கு என்ற படத்துடன் திரைக்கு வருகிறார்.

பொன்மனம், என் புருஷன் குழந்தை மாதிரி, என் உயிர் நீதானே, கார்மேகம், அழகர் மலை என பல படங்களை இயக்கியவர் ராஜ்குமார். விஜய்யை வைத்து சுறா என்ற அதிரடிப்படத்தைக் கொடுத்தவர். காமெடியில் கலக்கக் கூடியவரான ராஜ்குமார், விஜய் படத்தில் பெரும் சறுக்கலை சந்தித்தார். இத்தனைக்கும் அப்படத்தில் வடிவேலு இருந்தும் படம் போணியாகவில்லை.

இந்த நிலையில் மீண்டும் முழு நீளக் காமெடிக்குத் திரும்பியுள்ளார் ராஜ்குமார். இருப்பினும் இந்த முறை அவரது ஆஸ்தான காமெடியன் வடிவேலு படத்தில் இல்லை. மாறாக கஞ்சா கருப்புவுடன் கை கோர்த்துள்ளார். இப்படத்தில் நாயகன் பரதன் புதுமுகம், நாயகி கீத்திகாவும் புதுமுகம்.

முத்துக்காளை, ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன் ஆகியோரும் படத்தில் உள்ளனர். படத்தில் மும்பையைச் சேர்ந்த பூஜா என்பவர் குத்துப் பாட்டுக்கு செம கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளாராம். பொள்ளாச்சி, ஊட்டி, வால்பாறையில் வைத்துப் படத்தை சுட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் எனது வழக்கமான காமெடியைப் பார்க்கலாம் என்று கூறும் ராஜ்குமார், இது சற்று வித்தியாசமான படமாக இருக்கும், அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாக்கியுள்ளேன் என்கிறார்.

பார்க்கிற மாதிரி இருந்தா சரிதான்…!

 

கிசு கிசு - நடிகை மூட் அவுட். இசைக்கு பயம்!

Tags:

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நடிகை மூட் அவுட். இசைக்கு பயம்!

6/1/2011 12:47:10 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

தேவியான இசை திடீர்னு சம்பளத்தை உயர்த்தி கேட்டாரு... கேட்டாரு... இதனால சில வாய்ப்புகளை இழந்துட்டாரு. இப்படியே விட்டா மார்க்கெட் சர்ராயிடும்ன்னு பயந்த இசை, சம்பளம் அதிகம் கேட்கிறதா புரளி கிளப்புறாங்க நம்பாதீங்கன்னு ஸ்டேட்மென்ட் விடுறாராம்... விடுறாராம்...

என் படத்துல மழை நடிகை நடிக்கலேன்னு பஞ்சு வீர ஹீரோ சொன்னதை கேட்டும், உலக ஹீரோ படத்துக்கு ஸ்டோரி கேட்டாங்கன்னு வந்த தகவலாலும் நடிகை மூட் அவுட் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்... Ôஎன்னை படத்துக்கு புக் பண்ணிட்டு, நீக்கிட்ட மாதிரியும் கதை கேட்டு நான் நடிக்க மறுத்த மாதிரியும் சீன் கிரியேட் பண்றாங்கÕன்னு கோபமா சொல்றாராம்... சொல்றாராம்...

துபாய்ல உலகத்தோட பெரிய கட்டிடத்துல வீடு வாங்கியிருக்காரு மலையாள லால் நடிகரு. விஷயம் கேள்விப்பட்டு நம்மூர் ஹீரோக்களுக்கும் அங்கே வீடு வாங்க ஆசை வந்துருச்சாம்... வந்துருச்சாம்... லால் நடிகருக்கு போன் பண்ணி அங்கே வீடு வாங்குறது சம்பந்தமா விவரங¢கள் கேட்குறாங்களாம்... கேட்குறாங்களாம்...




 

செகண்ட் ஹீரோயினா? நோ கால்ஷீட் : ஹன்சிகா முடிவு!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

செகண்ட் ஹீரோயினா? நோ கால்ஷீட் : ஹன்சிகா முடிவு!

6/1/2011 12:45:36 PM

ஹன்சிகா மோத்வானி கூறியது: ‘மாப்பிள்ளை’, ‘எங்கேயும் காதல்’ இரண்டு படங்களும் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது. தற்போது ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு அமைந்த வேடங்கள் திருப்தியாகவும் நடிக்க வாய்ப்புள்ளவையாகவும் அமைந்துள்ளது. தமிழ், தெலுங்கு எந்த மொழியாக இருந்தாலும் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டிருந்தால் இந்நேரம் ஒரு டஜன் படங்களை தாண்டி இருக்கும். வரும் வாய்ப்புகளில் நல்ல கதாபாத்திரங்களாக தேர்வு செய்து ஒப்புக்கொள்கிறேன். அப்படி ஒப்புக்கொள்ளும் வேடங்கள் ரசிகர்களை கவருமா என்று யோசித்துதான் முடிவு செய்கிறேன். தெலுங்கில் தில் ராஜு தயாரிப்பில் சித்தார்த்துடன் நடிக்கும் படம், ராமுடன் நடிக்கும் 'காண்டிரீகாÕ படங்களில் எனது வேடம் சிறப்பாக அமைந்துள்ளது.

 

"நூர் இல்ல கோகினூர்" : தாஜ்நூர்!

Tags: nbsp, quot quot


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

‘நூர் இல்ல கோகினூர்’ : தாஜ்நூர்!

6/1/2011 12:19:13 PM

'வம்சம்', 'எத்தன்' படங்களுக்கு இசையமைத்தவர் தாஜ்நூர். ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றியவர். 'மல்லுக்கட்டு', 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி', 'ஓம்', 'தந்திரன்' படங்களுக்கு இசையமைப்பதில் பிஸியாக இருக்கிறார். 'வம்சம்', 'எத்தன்' பாடல்களைக் கேட்டுவிட்டு பாராட்டினார் ஏ.ஆர்.ரகுமான். அவரிடம் இருந்து வந்தவன் என்றாலும் அந்த பாராட்டு நூறு விருதுக்கு சமம். சமீபத்தில் வாலி, 'மல்லுக்கட்டு'க்கு பாடல்கள் எழுதினார். அப்போது என் டியூன்களைக் கேட்டவர்,  'நீ நூர் இல்லய்யா, கோகினூர்' என்று பாராட்டினார். இவர்களின் வாழ்த்துகள், என்னை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து, ரசனையான பாடல்களை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்கிறார் தாஜ்நூர்.

ரீமிக்ஸ் பாடல்களை விரும்புகிறீர்களா?

ரீமிக்ஸ் பாடலுக்கு நான் எதிரி. என்னிடம் வரும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ரீமிக்ஸ் பாடலுக்கு இசையமைக்கும்படி வற்புறுத்தியது இல்லை. ஏற்கனவே பிரபலமான ஒரு பாடலை, இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப மாற்றி இசையமைப்பதில் அப்படி என்ன திறமை இருக்கிறது? அதைவிட, புதிய பாடலை வித்தியாசமான இசையுடன் கலந்து கொடுக்க தயார்ப்படுத்திக் கொள்ளலாமே.

குத்துப்பாடல்கள் பற்றி..?

மக்கள் விரும்புகிறார்கள், கொடுக்கிறோம். ஆனால், குத்துப்பாடல்களுக்கு ஆயுள் குறைவு. மெலடி பாடல்கள் காலம் கடந்தும் நிற்கும். இதற்குமுன் சினிமாவில் சாதித்த ஜாம்பவான்களின் மெலடி பாடல்கள் பலவற்றை உதாரணமாக சொல்லலாம். இன்னொரு விஷயம், குத்துப்பாடல்கள் ஒரு இசையமைப்பாளரை உடனே உச்சத்துக்கு அழைத்துச் சென்று, ரசிகர்களிடம் பிரபலமாக்கி விடும். மெலடி பாடல்கள் மெதுவாகத்தான் ஒருவரை அடையாளம் காட்டும். ஆனால், அந்த அடையாளம் நிலையாக இருக்கும். 'வம்சம்' படத்தில் இடம்பெற்ற 'மருதாணி' பாடலும், 'எத்தன்' படத்தில் வரும் 'மழையுதிர் காலம்' பாடலும் எனக்கு அப்படியொரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது.

நடித்திருக்கிறீர்களாமே?

'மல்லுக்கட்டு' படத்தில் இடம்பெறும் திருமண விழா பாடலில், திரையுலக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் காட்சி இடம்பெறுகிறது. அதில் நடிக்க என்னை அழைத்தனர். போய் வந்தேன். நடிக்கவில்லை.

'வாய்ஸ் பேங்க்' தொடங்க போகிறீர்களாமே?

உண்மைதான். ரசிகர்களின் ரசனை அவ்வப்போது மாறுகிறது. அவர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் விதத்தில், புதுமையான குரல்வளம் கொண்ட பாடகர், பாடகிகளை அறிமுகம் செய்ய ஆர்வமாக இருக்கிறேன். தகுதியும், திறமையும் வாய்ந்த புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக, 'வாய்ஸ் பேங்க்' என்ற 'குரல் வங்கி' தொடங்க உள்ளேன்.

 

மீண்டும் படம் இயக்குகிறார் பிரதாப் போத்தன்

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மீண்டும் படம் இயக்குகிறார் பிரதாப் போத்தன்

6/1/2011 12:15:08 PM

நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன், தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். விளம்பர படங்கள் இயக்கி வரும் அவர், மீண்டும் படம் இயக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் தயாரித்து இயக்கும் முயற்சியில் இருக்கிறேன். அதற்கான திரைக்கதையை முடித்திருக்கிறேன். இன்றைய டிரண்டுக்கு ஏற்ற வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மலையாள ஹீரோவும், தமிழ் ஹீரோவும் இணைந்து நடிப்பார்கள். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.




 

விருது படங்களில் நடிக்க பிரியா ஆனந்த் ஆசை!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விருது படங்களில் நடிக்க பிரியா ஆனந்த் ஆசை!

6/1/2011 12:12:11 PM

’180′ படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார், பிரியா ஆனந்த். படம் பற்றி அவர் கூறியதாவது: தமிழில் ‘வாமனன்’, ‘புகைப்படம்’ படங்களில் நடித்தேன். தெலுங்கில் ‘லீடர்’ படத்தில் அறிமுகமானேன். அங்கு வரவேற்பு கிடைத்தது. அதில் என் நடிப்பை பார்த்து தமிழ், தெலுங்கில் உருவாகும் ’180′ பட வாய்ப்பு. இதில் வெளிநாட்டில் வாழும் இந்திய பெண்ணாக நடிக்கிறேன். நான் பங்கேற்ற காட்சிகள் நியூயார்க்கில் நடந்தது. அங்கு ஷூட்டிங் நடந்ததை மறக்க முடியாது. இந்தப் படம் மூலம் சித்தார்த்தும் இயக்குனர் ஜெயந்திராவும் என்னை வேறொரு இடத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். விருது படங்களில் நடிப்பீர்களா என்கிறார்கள். ஏன் நடிக்க கூடாது? தெலுங்கில் அதிகமாக கமர்சியல் படங்கள்தான் எடுக்கப்படுகின்றன. ரசிகர்கள் எதை விரும்புகிறார்களோ, அதை கொடுக்கிறார்கள். தமிழ், மலையாளத்தில் பரீட்சார்த்த முறையிலான படங்கள் வெளியாகின்றன. அதனால்தான் தமிழ், மலையாள படங்களுக்கு அதிக விருதுகள் கிடைக்கிறது. அப்படியொரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால், கண்டிப்பாக நடிப்பேன்.

 

தனுஷுக்கு ஜெயலலிதா வாழ்த்து

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தனுஷுக்கு ஜெயலலிதா வாழ்த்து

6/1/2011 12:09:37 PM

முதல்வர் ஜெயலலிதாவை, தனுஷ் நேற்று சந்தித்து பேசினார். அப்போது 'ஆடுகளம்' படத்துக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தேர்வு பெற்றதற்காக அவருக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். சன் பிக்சர்ஸ் வெளியிட்ட 'ஆடுகளம்' படத்துக்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இதில் நடித்த தனுஷ், சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறார். இந்நிலையில், நேற்று கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவை தனுஷ் சந்தித்து பேசினார். அவருடன் 'ஆடுகளம்' படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், எடிட்டர் கிஷோர், தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோரும் சென்றிருந்தனர். முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவுக்கு தனுஷ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தேசிய விருது பெற்றதற்காக தனுஷ், வெற்றிமாறன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். ரஜினி உடல்நிலை பின்னர் நிருபர்களிடம் தனுஷ் கூறும்போது, 'ஆடுகளம்' படத்துக்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. இதற்காக முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்தும் விசாரித்தார்' என்றார்.

 

வேறு இடத்தில் சிக்கிய பாஸ்போர்ட்: துபாய் போக முடியாமல் அசின் தவிப்பு

Tags:


மும்பை: துபாயில் நடக்கும் ரெடி படத்தின் பிரிமீயரில் அசின் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. அவரது பாஸ்போர்ட் வேறு ஒரு இடத்தில் முடங்கியுள்ளதால் அசின் கலக்கத்தில் உள்ளார்.

சல்மான் கான்-அசின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ரெடி. இந்த படம் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. இதற்கிடையே இன்று துபாயில் ரெடி படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையடப்படுகிறது. இதில் சல்லுவுடன் ஜோடி போட்டுப் போகலாம் என்று அசின் கனவு கண்டு கொண்டிருந்தார். கனவு பலிக்காமல் போய்விடும் போலிருக்கிறது.

அசின் சஜித நாதியாத்வாலாவின் ஹவுஸ்புல் 2 என்ற படத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதற்கான படபிடிப்பு லண்டனில் நடக்கவிருக்கிறது. லண்டன் செல்ல விசா வாங்குவதற்காக அசின் தனது பாஸ்போர்ட்டை தயாரிப்பு நிர்வாகிகளிடம் கொடுத்தார். ஆனால் அது இன்னும் அவர் கைக்கு வந்து சேரவில்லை.

இதற்கிடையே துபாயில் நடக்கும் பிரிமீயர் ஷோவுக்கு போக முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். கடைசி நிமிடத்தில் பாஸ்போர்ட் கிடைத்தாலும் துபாய்க்கு பறக்க தயாராக இருக்கிறார். தற்போது அவருடைய ஒரே பிரார்த்தனை பாஸ்போர்ட் கிடைக்க வேண்டும் என்பது தான்.

அய்யோ பாவம்!
 

யோகாவினால் புகைப்பழக்கத்தை விடமுடியும் – சமீரா

Tags:


பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று சமீரா ரெட்டி வற்புறுத்தியுள்ளார். புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தனது ரசிகர்களை அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுவாகவே பாலிவுட் நடிகர், நடிகையர்கள் புகைப்பழக்கத்தை வாழ்க்கையின் ஒரு அங்கமாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர். திரைப்படங்களிலும் ஸ்டைலாக சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம் பெறுவதும் வாடிக்கை.

ஆனால் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் அறிமுகமான சமீரா ரெட்டி புகைப்பழக்கம் இல்லாதவர். இவர் தமிழில் அசல், நடுநிசி நாய்கள் படங்களில் நடித்துள்ளார்.

உடற்பயிற்சி

புகைக்கு எதிராக இவர் அளித்துள்ள பேட்டியில் பெண்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடவேண்டும், எனக்கு அந்த பழக்கம் இல்லை. கடின உடற்பயிற்சிகள், நல்ல உணவு பழக்க வழக்கங்கள் இருந்தாலே இந்த பழக்கத்தை நிறுத்தி விடலாம் என்று தெரிவித்துள்ளார்.

எனது நண்பர்கள் பலர் சிகரெட் பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கின்றனர். அதை ஒரேயடியாக நிறுத்திவிட வேண்டும், இல்லாவிட்டால் உயிரை பறித்துவிடும்.

யோகா, மூச்சை இழுத்து விடும் பயிற்சி போன்றவற்றால் கூட புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி விடலாம் என்றும் சமீரா ரெட்டி கூறியுள்ளார்.
 

விஜய்யின் மக்கள் இயக்கத்தில் ஐக்கியமாகும் சோனா

Tags:


கவர்ச்சி பெருங்கடல் நடிகை சோனா, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேர முடிவு செய்துள்ளாராம்.

வரலாறு காணாத கவர்ச்சி காட்டி நடித்தவர் சோனா. இப்போது உடம்பு தாறுமாறாக பெருத்துப் போய் விட்டதால் முன்பு போல அதிகப் படங்களில் சோனாவைக் காண முடியவில்லை. கடந்த திமுக ஆட்சியின்போது கனிமொழி என்ற பெயரில் படத்தைத் தயாரித்தார். இந்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அதிமுக ஆட்சிக்கு நெருக்கமானவரான விஜய்யுடன் தன்னை இணைத்து செயல்பட அவர் முடிவு செய்துள்ளார். அதாவது விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேரப் போகிறாராம்.

இன்று சோனாவுக்குப் பிறந்த நாள். இதை வித்தியாசமான முறையில் அவர் ஸ்டார் ஹோட்டலில் கொண்டாடினார். அதாவது நடிகர் விஜய்யின் ரசிகர்களின் குழந்தைகளை வரவழைத்து அவர்கள் மத்தியில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார் சோனா.

பிறகு செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எனக்கு விஜய்யைப் பிடிக்கும். நான் விஜய்யின் ரசிகை. எனவேதான் விஜய் ரசிகர்களின் குழந்தைகளுக்கு மத்தியில் நான் பிறந்த நாள் கொண்டாடினேன். விரைவில் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேரப் போகிறேன். அவரது அரசியல் நடவடிக்கைகளை ஆதரிப்பேன்.

பிறகு எனது வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப் போகிறேன். அதற்கான முன்னேற்பாடுகள் ஜரூராக நடக்கிறது. தமிழ் தவிர இந்தி, தெலுங்கிலும் இதை வெளியிடுவேன். எனது கேரக்டரில் நடிக்க நடிகையைத் தேர்வு செய்து வருகிறேன் என்றார் சோனா.

சோனாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்றால் ... சென்சார் அனுமதி கிடைக்குமா!!??
 

பொது இடத்தில் 'குப் குப்'-சல்மானுக்கு 'ஃபைன்'

Tags:


பொது இடத்தில் வைத்து தம் அடித்ததற்காக நடிகர் சல்மான் கானுக்கு போலீஸார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

பொது இடங்களில் புகை பிடிக்க இந்தியாவில் தடை உள்ளது. இருப்பினும் இதை தம் அடிப்பவர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. பிரபலங்களே கூட பொது இடங்களில் தம் அடிப்பது சகஜமாகி விட்டது. முன்பு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து புகை பிடித்தார் ஷாருக் கான். இந்த நிலையில் சல்மான் கான் பொது இடத்தில் புகை பிடித்ததாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.

பாட்டியாலாவில் உள்ள ஒரு இடத்தில் பாடிகார்ட் படத்தின் இந்தி திரைப்படப் படப்பிடிப்பு நடந்தது. இதில் சல்மான் கான் பங்கேற்று நடித்தார். இதற்காக அங்கு வந்துள்ள சல்மான் ஸ்டார் ஹோட்டலில் தங்கியுளள்ளார். நேற்று ஹோட்டலை விட்டு வெளியே வந்த அவர் தனது உதவியாளரிடமிருந்து சிகரெட்டை வாங்கி பற்ற வைத்து புகையை இழுத்து வெளியே விட்டார்.

அங்கு நின்றிருந்த போலீஸார் இது பொது இடம் இங்கு புகை பிடிக்கக் கூடாது. மீறி புகைத்துள்ளதால் 200 ரூபாய் அபராதம் விதிக்கிறோம் என்று கூறி பணத்தை வசூலித்து விட்டனர்.

நேற்று உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு நாள் கொண்டாடப்பட்டது. அந்த நாளில் சல்மான் கான் புகை விட்டு சிக்கி அபராதம் கட்டியது குறிப்பிடத்தக்கது.
 

ஹோட்டலில் விபச்சாரம் செய்ய முயன்றதாக கன்னட நடிகை கைது

Tags:


ஹோட்டலில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட முயன்றதாக கூறி கன்னட நடிகை ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அந்த நடிகைக்கு வயது 29. சில கன்னடப் படங்களிலும், 3 டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் தெரிவிக்கவில்லை. இவர் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட முயன்றதாக கூறி கைது செய்துள்ளனர். அவருடன் 40 வயது பெண்மணி ஒருவரும், மேலும் இருவரையும் போலீஸார் பிடித்துள்ளனர். அந்தப் பெண்மணி புரோக்கரா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் விபச்சாரத்திற்கு துணை புரிந்து ஏற்பாடு செய்தார் என்று கூறப்படுகிறது. இவரும் ஒரு டிவி நடிகைதான்.

சம்பந்தப்பட்ட ஹோட்டலில் விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்து அங்கு விரைந்தபோது மேற்கண்ட அனைவரும் அங்கிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போதுதான் அனைவரையும் போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
 

கிளாமர் என்பது உடையில் இல்லை : ஆண்ட்ரியா!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கிளாமர் என்பது உடையில் இல்லை : ஆண்ட்ரியா!

6/1/2011 11:51:09 AM

கதைக்கு தேவை என்றால் கிளாமராக நடிப்பதில் தவறில்லை என்று ஆண்ட்ரியா கூறினார். தற்போது அஜீத்தின் 'மங்காத்தா' படத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா கூறியதாவது: தமிழில் பாடகியாக அறிமுகமானேன். 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் நடிகை ஆக்கினார் கவுதம் மேனன். இதையடுத்து செல்வராகவன், 'ஆயிரத்தில் ஒருவன்' வாய்ப்பை கொடுத்தார். பாடலோடு நடிப்பும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தெலுங்கில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடிய, 'ஜாரா ஜாரா' என்ற பாடல் பெரிய ஹிட் ஆனது. இருந்தாலும் தெலுங்கில் அதிக பாடல் வாய்ப்புகள் வரவில்லை. தெலுங்கில் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா என்கிறார்கள். அதில் என்ன இருக்கிறது? 'அருந்ததி' போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களும் தெலுங்கில் வருகின்றன. தெலுங்கில் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். கிளாமராக நடிப்பீர்களா என்கிறார்கள். ஒரு இயக்குனர் நினைத்தால் உடல் முழுவதும் உடை அணிந்திருந்தால் கூட, அதை ஆபாசமாக காண்பிக்க முடியும். கிளாமர் என்பது உடையில் இல்லை. படமாக்கும் விதத்தைப் பொறுத்தது அது. கதைக்கு தேவை என்றால் கிளாமராக நடிப்பதில் தவறில்லை. இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார்.

 

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை : 10 நாளில் ரஜினி டிஸ்சார்ஜ்!

Tags: nbsp


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை : 10 நாளில் ரஜினி டிஸ்சார்ஜ்!

6/1/2011 10:49:29 AM

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை; இன்னும் 10 நாளில் அவர் சென்னை திரும்புவார் என்றும் நடிகர் தனுஷ் தெரிவித்தார்.  கடந்த ஆண்டுக்கான பிலிம்பேர் சினிமா விருது விழா, அடுத்த மாதம் 2ம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் நேற்று இரவு நடந்தது. இதில் பங்கேற்ற தனுஷ், நிருபர்களிடம் கூறியதாவது:

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது உடல்நிலை தேறி வருகிறார். விரைவில் அவர் முற்றிலும் குணமடைந்து, ரசிகர்களை சந்திப்பார். ரஜினிகாந்த்  சிங்கப்பூருக்கு சுற்றுலா வந்த மாதிரி, உற்சாகமாக இருக்கிறார். தான் நடித்த படங்களை பார்த்து ரசிக்கிறார். மருத்துவமனை வளாகத்தில் வாக்கிங் செல்கிறார்.

'ஆடுகளம்' படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இவ்விஷயத்தை அறிந்த அவர், 'தேசிய விருது உனக்கு கண்டிப்பா கிடைக்கும்னு நம்பினேன். அது கிடைத்து விட்டது' என்று சொன்னார். மூன்று நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்று டாக்டர்கள் சொன்னார்கள். நாங்கள்தான் இன்னும் ஒரு வாரமாவது  சிங்கப்பூர் மருத்துவமனையில் தங்கி இருக்கட்டும் என்று சொன்னோம். எங்கள் அன்புக்கட்டளையை ஏற்றுக் கொண்டார். மருத்துவமனையில் ரஜினி தியானம் செய்கிறார்.

 எப்போதும் போல் உற்சாகமாக சிரித்துப் பேசுகிறார். ஜோக்குகள் சொல்கிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை என்று டாக்டர்கள் சொல்லி விட்டனர். இன்னும் 10 நாளில் ரஜினி பூரண குணமடைந்து சென்னை திரும்புவார். சிங்கப்பூர் மருத்துவமனை குறித்து, மும்பையில் இருந்து அமிதாப்பச்சன் எனது மாமியார் லதா ரஜினிகாந்திடம் தகவல் சொன்னார். மேலும், லட்சக்கணக்கான நல்ல உள்ளங்கள்,

 ரஜினி விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். அவரைப் பற்றி வெளியாகும் வதந்திகளை, அவரது உயிரினும் மேலான ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தனது உடல்நிலை குறித்து, ரஜினியிடம் இருந்து விரைவில் ரசிகர்களுக்கு அறிக்கை வர உள்ளது. சென்னை திரும்பிய பின், மீண்டும் சினிமாவில் நடிப்பது பற்றி அவர் சொல்வார். 'ராணா' படத்தின் ஷூட்டிங் கண்டிப்பாக நடக்கும். இப்போது என் கவனம் முழுவதும்  அவர் மீது மட்டுமே இருக்கிறது. அவரை பார்ப்பதற்காக இன்று அல்லது நாளை மீண்டும் நான் சிங்கப்பூர் செல்ல இருக்கிறேன் என்றார் தனுஷ்.

 

இன்னும் பத்தே நாளில் ரஜினிகாந்த் வீடு திரும்பி விடுவார்-தனுஷ்

Tags:


நடிகர் ரஜினிகாந்த் இன்னும் பத்து நாட்களில் குணமடைந்து வீடு திரும்பி விடுவார் என்று அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை தேவையில்லை. இதுதொடர்பாக வெளியான செய்திகள் தவறு.

நன்றாகச் சாப்பிட்டு, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட்டு வருகிறார். தியானம் செய்கிறார். மூன்று நாளிலேயே அவர் வீடு திரும்பலாம் என சிங்கப்பூர் மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் முழுமையான ஓய்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்தினர்தான் இன்னும் ஒரு வாரத்துக்கு அவர் மருத்துவமனையிலேயே இருக்கும் முடிவை எடுத்துள்ளனர்.

இன்னும் 10 நாளில் நடிகர் ரஜினி சென்னை திரும்பவில்லையென்றால், அவர் சுற்றுலாவில் இருக்கிறார் என்று ரசிகர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ராணா படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொள்வது குறித்து ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும் என்றார் தனுஷ்.
 

58வது பிலிம்பேர் விருதுப் போட்டியில் எந்திரன், அங்காடித்தெரு, மைனா, மன்மதன் அம்பு

Tags:


58வது பிலிம்பேர் விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்ப் படப் பிரிவில் எந்திரன், மன்மதன் அம்பு, மைனா, அங்காடித்தெரு உள்ளிட்ட படங்கள் இடம் பெற்றுள்ளன.

விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்கள், கலைஞர்கள் விவரம்:

சிறந்த திரைப்படம்

ஆயிரத்தில் ஒருவன்
அங்காடித்தெரு
எந்திரன்
மதராசப்பட்டணம்
மைனா
விண்ணைத் தாண்டி வருவாயா

சிறந்த இயக்குநர்

கெளதம் மேனன்
பிரபு சாலமன்
செல்வராகவன்
ஷங்கர்
வசந்த பாலன்
விஜய்

சிறந்த நடிகர்

ஆர்யா -மதராசப்பட்டணம்
கார்த்தி - பையா, ஆயிரத்தில் ஒருவன்
ரஜினிகாந்த் - எந்திரன்
சிம்பு - விண்ணைத் தாண்டி வருவாயா
சூரியா - சிங்கம்
விக்ரம் - ராவணன்

சிறந்த நடிகை

அமலா பால் - மைனா
அஞ்சலி - அங்காடித் தெரு
நயன்தாரா - பாஸ் என்கிற பாஸ்கரன்
ரீமா சென் - ஆயிரத்தில் ஒருவன்
தமன்னா - பையா
திரிஷா - விண்ணைத் தாண்டி வருவாயா

சிறந்த துணை நடிகர்

மாதவன் - மன்மதன் அம்பு
பார்த்திபன் - ஆயிரத்தில் ஒருவன்
பிரகாஷ் ராஜ் - சிங்கம்
பிருத்விராஜ் - ராவணன்
சந்தானம் - பாஸ் என்கிற பாஸ்கரன்
தம்பி ராமையா - மைனா

சிறந்த துணை நடிகை

ஆண்ட்ரியா - ஆயிரத்தில் ஒருவன்
கரோல் பால்மர் - மதராசப்பட்டணம்
மனோரமா - சிங்கம்
சங்கீதா - மன்மதன் அம்பு
சரண்யா - தென் மேற்குப் பருவக் காற்று

சிறந்த இசையமைப்பாளர்

ஏ.ஆர்.ரஹ்மான் - எந்திரன்
ஏ.ஆர்.ரஹ்மான் - விண்ணைத் தாண்டி வருவாயா
ஜி.வி.பிரகாஷ் - ஆயிரத்தில் ஒருவன்
ஜி.வி.பிரகாஷ் - மதராசப்பட்டணம்
யுவன் ஷங்கர் ராஜா - பையா
யுவன் ஷங்கர் ராஜா - நான் மகான் அல்ல

சிறந்த பாடலாசிரியர்

நா முத்துக்குமார் - அங்காடித் தெரு
நா. முத்துக்குமார்- மதராசப்பட்டணம்
தாமரை - விண்ணைத் தாண்டி வருவாயா
வைரமுத்து - எந்திரன்
வைரமுத்து - ராவணன்

சிறந்த பின்னணிப் பாடகர்

தனுஷ் - ஆயிரத்தில் ஒருவன்
கார்த்திக் - ராவணன்
ராகுல் நம்பியார் - பையா
உதித் நாராயணன் - மதராசப்பட்டணம்
விஜய் பிரகாஷ் - விண்ணைத் தாண்டி வருவாயா
யுவன் ஷங்கர் ராஜா - நான் மகான் அல்ல

சிறந்த பின்னணிப் பாடகி

ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா தனுஷ் - ஆயிரத்தில் ஒருவன்
சின்மயி - எந்திரன்
சைந்தவி - பையா
ஷ்ரேயா கோஷல் - அங்காடித் தெரு
சுசித்ரா - சிங்கம்
 

எனது நிறுவனத்தில் 2ஜி ஊழலில் சிக்கிய கரீம் மொரானி முதலீடு செய்யவில்லை-ஷாருக் கான்

Tags:


மும்பை: எனக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள திரைப்பட தயாரிப்பாளரும், சினியுக் நிறுவன அதிபருமான கரீம் மொரானிக்கும் தொழில் ரீதியிலான உறவுதான் உள்ளதே தவிர, அவர் எனது ரெட் சில்லீஸ் நிறுவனத்தில் எந்தவிதமான முதலீடுகளும் செய்யவில்லை என்று கூறியுள்ளார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான்.

சினியுக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் அதிபராக இருக்கிறார் கரீம் மொரானி. இந்த நிறுவனம் 1983ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தித் திரைப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. சன்னி தியோல் நடித்த தாமினி, ஆமிர்கான் நடித்த ராஜா ஹிந்துஸ்தானி உள்ளிட்ட எட்டு படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

கலைஞர் டிவிக்கு டிபி ரியாலிட்டி மூலம் வந்த ரூ. 200 கோடி பணம், சினியுக் நிறுவனத்தின் மூலமாகத்தான் கிடைத்தது. இதை கடன்தொகை என்று கலைஞர் டிவி கூறுகிறது. ஆனால் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற நிறுவனம் டிபி ரியாலிட்டி என்பதால், இது ஸ்பெக்ட்ரம் ஊழலில் பரிமாறப்பட்ட லஞ்சப் பணம் என்பது சிபிஐயின் வாதம்.

இதன் காரணமாகத்தான் கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் கைதாகியுள்ளனர். தற்போது நீண்ட இழுபறிக்குப் பின்னர் கரீம் மொரானியும் கைதாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த சர்ச்சையில் ஷாருக் கானின் பெயரும் அடிபட ஆரம்பித்துள்ளது. அவரது ரெட் சில்லீஸ் நிறுவனத்தில் கரீம் மொரானி முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

படத் தயாரிப்பு தவிர பாலிவுட் திரைப்பட நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து தருகிறது சினியுக். 2009ம் ஆண்டு பெமினி மிஸ் இந்தியா நிகழ்ச்சியையும் இது நடத்தியது.

டிவி ஷோக்கள், கல்யாண விழாக்கள், 2008, 2009 ஐபிஎல் நிறைவு விழாக்களையும் இந்த நிறுவனம் நடத்தியுள்ளது.

பாலிவுட்டிலேயே மிகப் பெரிய பெரும் பணக்கார தயாரிப்பாளர்களாக கரீம் மொரானியும், அவரது தம்பி அலி மொரானியும் விளங்குகின்றனர்.

கரீம் மொரானிக்கும், ஷாருக் கானுக்கும் இடையிலான தொடர்புகள் இப்போது சர்ச்சையாகியுள்ளன. கரீம் மொரானியின் மகள் ஸோயா, ஷாருக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவம் தயாரித்துள்ள ஆல்வேஸ் கபி கபி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.

அதை விட முக்கியமாக ஷாருக்கானின் கனவுப் படமான ரா ஒன் படத்தின் செயல் தயாரிப்பாளர்களில் கரீம் மொரானியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு ஒரு நாள் முன்புதான் கரீம் மொரானி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மொரானியுடன் தன்னை இணைத்துப் பேசப்படுவது குறித்து ஷாருக் கான் கூறுகையில்,

எனக்கும் மொரானி குடும்பத்தினருக்கும் இடையே திரைப்படம் தொடர்பான தொடர்புகள் மட்டுமே உள்ளன. அதேசமயம், எனது ரெட் சில்லீஸ் நிறுவனத்தில் மொரானி எந்த முதலீட்டையும் செய்யவில்லை. சட்டம் தனது கடமையைச் செய்யும். 2ஜி விவகாரத்தில் பாலிவுட் நடிகர்களை இழுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

ஷாருக் தவிர, மொரானிக்கும் தங்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து சில பாலிவுட் நடிகர்கள் தாங்களாகவே முன்வந்து விளக்கம் அளித்துள்ளனர். சல்மான் கான் இதுகுறித்துக் கூறுகையில், கரீம் மொரானி நடத்தும் ஷோக்கள், நிகழ்ச்சிகளில் நான் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவர் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர். சட்டம் இப்போது தனது கடமையை செய்து வருகிறது. அதுதான் அவர் குற்றவாளியா, இல்லையா என்பதை நிரூபிக்கும் என்றார்.

விவேக் ஓபராய் கூறுகையில், எனக்கு கரீம் மொரானி்யைத் தெரியும். அவர் நல்ல மனிதர். என்னுடன் அவருக்கு நீண்ட கால திரைத் தொடர்புகள் உள்ளன என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஷாருக் கானை உரிமையாளராகக் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும், கரீம் மொரானிக்குப் பங்கு இருப்பதாக ஒரு செய்தி கூறுகிறது.