நடிகர்கள் குரங்குகளாக மாறிவருகின்றனர்: கரீனா கபூர்

Kareena Kapoor Thinks Actors Are Becoming   

மும்பை: நடிகர்கள் குரங்குகளைப் போல் மாறி வருகின்றனர் என்று பாலிவுட் நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.

மனதில் தோன்றுவதை சற்றும் யோசிக்காமல் பட்டென்று போட்டு உடைப்பவர்களில் பாலிவுட் நடிகை கரீனா கபூரும் ஒருவர். நடிகர், நடிகைகள் தங்கள் படங்களை விளம்பரப்படுத்த பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்கின்றனர். அங்குள்ள மால்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்கள் படங்களை விளம்பரப்படுத்துகின்றனர்.

இது குறித்து கரீனா முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு கூறுகையில்,

நடிகர்கள் தற்போது குரங்குகளைப் போல் மாறி வருகிகன்றனர். உயரமான கட்டிடங்களில் இருந்து தங்கள் படங்கள் பற்றி விளம்பரம் என்ற பெயரில் அலறுகின்றனர். தபாங் 2 படம் நன்றாக வந்துள்ளது. அதை விளம்பரம் செய்தாலும், செய்யாவிட்டாலும் மக்கள் நிச்சயம் பார்ப்பார்கள். பிரகாஷ் ஜாவின் சத்யாகிரஹா படத்தில் பத்திரிக்கையாளராக வருகிறேன். ஆனால் அதில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி கேட்கமாட்டேன். ஆமீர் கானுடன் நான் நடித்துள்ள தலாஷ் படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தை விளம்பரம் செய்யும் எண்ணம் இல்லை என்றார்.

நடிகர்களை குரங்குகள் என்று கரீனா கூறியது கேட்டு அவர்கள் என்ன பதில் அளிக்கப் போகிறார்களோ!

 

யாருக்கு தெரியும் - சினிமா விமர்சனம்


Rating:
3.0/5

-எஸ் ஷங்கர்

நடிப்பு: கலாபவன் மணி, ஜெயப்பிரகாஷ், சஞ்சனா சிங், அச்சுத குமார், அக்ஷதா, தர்மா, திலீப் ராஜ், ஹாரிஸ் ராஜ், நிஷான்

இசை: கண்ணன்

பிஆர்ஓ: ஏ ஜான்

தயாரிப்பு: ஸ்ரீதர் (அருபேரா ஆர்ட் வெஞ்ச்ரா )

கதை, திரைக்கதை, இயக்கம்: ஸ்ரீதர்


ஒரு சில படங்கள் பார்க்க ஆரம்பித்த பத்து நிமிடங்கள் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் விழிக்க நேரிடம்... ஆனால் க்ளைமாக்ஸ் நெருங்கும்போது படத்துக்குள் நம்மையும் அறியாமல் போய்விட்டிருப்போம்.

அப்படி ஒரு த்ரில்லர் படம் யாருக்குத் தெரியும்.

yaarukku theriyum review   
Close
 
படம் ஆரம்பிக்கும்போது, குடோன் மாதிரி ஒரு இடத்தில் ஒருவன் மயக்கம் தெளிந்த நிலையில் திணறிக் கொண்டிருக்கிறான். இன்னொருவன் நாற்காலியில் கட்டுண்டு கிடக்கிறான். மூன்றாமவன் தரையில் ரத்தம் வழிய கிடக்கிறான்.

அடுத்த சில நிமிடங்களில், இன்னொருவன் ஒரு அறையிலிருந்து வருகிறான். அடுத்த காட்சி நகர, ஒரு பெண்ணும் ஆணும் மயக்கம் தெளிந்து எழுகிறார்கள்.

இந்த ஏழு பேருக்கும் தாங்கள் எப்படி அங்கே வந்தோம் என்பது நினைவில் இல்லை. தாங்கள் யார் என்பதும் தெரியவில்லை. வெளியே போகலாம் என்றால் அந்த இடம் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.

இவர்கள், ஏன் அங்கே வந்தார்கள்? எப்படி மயங்கினார்கள்? தங்களைப் பற்றி அறிந்து, எப்படி வெளியில் செல்கிறார்கள்? என்பதுதான் மீதிக் கதை.

ஆரம்பத்தில் கொஞ்சம் குழப்பியடித்தாலும், காட்சிகள் நகர நகர, ஒவ்வொரு முடிச்சும் அவிழ அவிழ, ஒரு துப்பறியும் நாவலின் சுவாரஸ்யம் வந்துவிடுகிறது.

தெரிந்த முகம் என்று பார்த்தால், கலாபவன் மணி, ரியாஸ்கான், சஞ்சனா மற்றும் ஜெயப்பிரகாஷ்தான். மற்றவர்கள் புதுமுகம் என்றாலும் சின்சியராக நடிக்க முயற்சித்திருக்கிறார்கள். குறிப்பாக பணத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் அந்த குடிகாரன் பாத்திரத்தில் வரும் அச்சுத குமார்!

ஹீரோயின் என்று தனியாக யாருமில்லை. சஞ்சனா சிங்கும், புதுமுகம் அக்ஷதாவும்தான் படத்தில் வரும் மொத்த பெண் பாத்திரங்களே.

தமிழ்ப் படம் கண்ணனின் இசையும், மகேஷ் கே தேவின் ஒளிப்பதிவும் படத்தின் சஸ்பென்ஸைக் காப்பாற்றும் அளவுக்கு உள்ளன. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை.

ஆரம்பக் காட்சிகளில் இன்னும் கூட அமெச்சூர்த்தனத்தைக் குறைத்திருக்கலாம் இயக்குநர். குறிப்பாக இரு முறை பேக்டரிக்கு வரும் போலீசார், கேட்டைக் கூட திறக்காமல் அப்படியேவா திரும்பிப் போவார்கள்?

குடிக்கும்போது நண்பர்களுக்குள் ஸ்டேடஸ் பிரச்சினை வர, அது பெரிய பிரச்சினையாக மாறுவதை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தின் நீளம் குறைவு என்பது இன்னொரு பெரிய ஆறுதல். நிச்சயம் ஒரு முறை பார்க்கக் கூடிய படம்தான்!

 

'கிரான்ட் பிராண்ட் ரஜினி': பிஸினஸ் மேனேஜ்மென்ட்டில் கலக்கும் இன்னுமொரு ரஜினி புத்தகம்!

ரஜினி எனும் பெயரை சத்தமின்றி பெரிய அளவில் வியாபாரமாக்கி வருகிறார்கள், வர்த்தக உலகில்.

grand brand rajini brand management
Close
 
இந்தியாவின் மிகப் பெரிய பிராண்ட் எதுவென்று மேனேஜ்மென்டில் உள்ள யாரைக் கேட்டாலும் கண்ணை மூடிக் கொண்டு ஒருவரது பெயரை உச்சரிப்பார்கள்... அது சூப்பர் ஸ்டார் அல்லது ரஜினி!

வர்த்தக உலகில் முக்கியமான மந்திரம்... பிராண்ட். அதை உருவாக்குவது அத்தனை சாதாரண விஷயமல்ல.

ஒரு நல்ல பிராண்ட் எப்போது மார்க்கெட்டில் அழியாப் புகழ், நம்பகத் தன்மையுடன் நிலைக்கும்?

நேர்மை, நீடித்த பயணம், நிலைத்தன்மை... இந்த மூன்றும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்!

சினிமா உலகில் அப்படி ஒரு பிராண்ட் ஆக இன்றைக்குத் திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இதனை விளக்கும் வகையில் கிரான்ட் பிராண்ட் ரஜினி எனும் பெயரில் ஒரு புதிய புத்தகம் வெளியாகியுள்ளது. இதனை எழுதியிருப்பவர்கள் பிசி பாலசுப்பிரமணியம் மற்றும் ராம் என் ராமகிருஷ்ணன் ஆகியோர். ரஜினி என்ற கலைஞர் எப்படி இந்தியாவின் இணையற்ற பிரான்ட் ஆகத் திகழ்கிறார் என்பதை அவரது சினிமா வாழ்க்கையை மையப்படுத்தி எழுதியிருக்கிறார்கள்.

இவர்களில் பிசி பாலசுப்பிரமணியம் ஏற்கெனவே ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை மையப்படுத்தி பஞ்ச் தந்திரம் எனும் பெயரில் புத்தகம் வெளியிட்டு புகழ்பெற்றவர். மாட்ரிக்ஸ் பிசினஸ் சர்வீஸஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மற்றொருவர் ராம் என் ராமகிருஷ்ணன் ஒரு ஆடிட்டர்.

பிலிப்கார்ட்டில் இந்தப் புத்தகம் தள்ளுபடி விலையில் ரூ 105-க்கு கிடைக்கிறது.

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

 

அஜீத் மனைவி ஷாலினிக்கு இன்று பிறந்தநாள்: வயது 32

சென்னை: நடிகர் அஜீத் குமாரின் மனைவி ஷாலினி இன்று தனது 32வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ajith s better half turns 32 today
Close
 
ஷாலினி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக 80 படங்களில் நடித்துள்ளார். வளர்ந்த பிறகு ஹீரோயினான ஷாலினி அமர்க்களம் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அஜீத்தை மணந்த பிறகு ஷாலினி சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டார். அவர்களுக்கு அனோஷ்கா என்ற 4 வயது மகள் உள்ளார்.

ஷாலினி நடிக்காவிட்டாலும் தற்போது பேட்மின்டன் போட்டிகளில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலந்து கொண்டு பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். இரட்டையர் பிரிவில் ஷாலினியின் ஜோடியான பிரியா அண்மையில் மிர்சி சிவாவை மணந்தார். பிரியாவுக்கும் இன்று தான் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாலினியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. எங்கள் 'தல'யின் மனைவி ஷாலினி அக்காவுக்கும், எங்கள் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் மனைவி பிரியா அக்காவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று நடிகர் பிரேம்ஜி அமரன் டுவீட் செய்துள்ளார்.

 

நித்யானந்தா செஞ்சதுல தப்பே இல்லையாம்... சொல்கிறார் வடிவேலுவிடம் ஆட்டய போட்ட சிங்கமுத்து!

Singamuthu Backs Nithyananda

'நித்யானந்தா என்ன தப்பு பண்ணிட்டாரு? எல்லாரும் செய்றதைத்தான் அவரும் பண்றாரு. விஸ்வாமித்திரர்ல இருந்து செஞ்சது தானே. நித்யானந்தா மேல புகார்கள் வந்த பிறகு நானே பிடதியில போய்ப் பிரசங்கம் பண்ணினேன்..'

-இப்படி திருவாய் மலர்ந்திருப்பவர் சிங்கமுத்'தானந்தா!

ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில்தான் இப்படி அவர் கூறியுள்ளார்.

அந்தப் பேட்டியில், நீங்கதான் ஆன்மீகத்துல ஈடுபாடுள்ளவராச்சே, நித்யானந்தா செஞ்சது சரிதானா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு சிங்கமுத்து தந்துள்ள பதிலைப் பாருங்கள்:

''நித்யானந்தா என்ன தப்பு பண்ணிட்டாரு? எல்லாரும் செய்றதைத்தான் அவரும் பண்றாரு. விஸ்வாமித்திரர்ல இருந்து செஞ்சது தானே. நித்யானந்தா மேல புகார்கள் வந்த பிறகு நானே பிடதியில போய்ப் பிரசங்கம் பண்ணினேன்.

அங்கே பல ஆன்மிகவாதிகளின் வரலாற்றைச் சொல்லி 'நித்யானந்தா செஞ்சது தப்பே இல்லை'னு பேசினேன். இருந்தாலும் நித்யானந்தாவைத் தனியாப் பார்த்து,

'ரஞ்சிதா விவகாரம் உண்மையா?'னு கேட்டேன். பிடதி ஆசிரமத்துக்குள்ள சுத்திட்டு இருந்த ஆயிரக்கணக்கான இளம்பெண்களைக் காட்டி 'இவங்களைவிடவா ரஞ்சிதா அழகு? அவர் ஆஸ்துமா பிரச்னையால் இங்கு வந்தார். குணப்படுத்தினேன். அதில் இருந்து ஆசிரமத்துக்கு வந்து சேவை செய்ய ஆரம்பித்துவிட்டார்'னு சொன்னார்!'

 

பாலிமர் டிவியில் சாப்பாட்டு ராமன் ருசியான நிகழ்ச்சி

Polimer Tv Cookery Show Sappatu Raman

சமைப்பது எப்படி ஒரு கலையோ அதேபோல சாப்பிடுவதும் ஒரு கலைதான். டிவிகளில் சமையல் நிகழ்ச்சிகளில் சமைப்பதை ஒளிபரப்புவார்கள். ஆனால் பாலிமர் டிவியில் சாப்பாட்டு ராமன் என்ற நிகழ்ச்சயில் சாப்பிடுவதை ஒளிபரப்புகின்றனர். சுவையான சாப்பாடு கிடைக்கும் இடங்களுக்குச் சென்று சாப்பிட்டு அதன் சுவையை நேயர்களுக்கு விளக்குகிறார் நிகழ்ச்சி நடத்துனர் ஜேக்கப்.

ஸ்டார் ஹோட்டல் முதல் மெஸ்வரை இவர் சுவைத்துப் பார்க்காத உணவே இல்லை. பாரம்பரிய உணவுகளில் தொடங்கி சைவம், அசைவம் என அனைத்து வகை உணவுகளையும் ஒரு கை பார்க்கிறார் இந்த சாப்பாட்டு ராமன். சமையலின் சுவைக்கான பாரம்பரியம் பற்றி ஹோட்டல் நிறுவனர்கள் நேயர்களுக்கு டிப்ஸ் தருகின்றனர்.

நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியில் விவிஐபிக்களின் சமையல் இடம்பெறுகிறது. இதில் திரையுலக பிரமுகர்கள், சின்னத்திரை மற்றும் சினிமா நட்சத்திரங்கள் வீடுகளில் சமைப்பதை சுவைத்து நேயர்களுக்கு சொல்கிறார் ஜேக்கப். இசை அமைப்பாளர் ஆதித்யன் வீட்டில் கொத்தமல்லி ப்ரைடு ரைஸ் செய்து காண்பித்தார். அதை ஜேக்கப் சாப்பிடும்போதே பார்ப்பவர்களுக்கும் பசிக்க ஆரம்பித்துவிடுகிறது. சமைப்பதை பார்த்து சலித்துப்போனவர்கள் கொஞ்சம் சாப்பிடுவதையும் பார்க்கலாம்.

 

முதல் முறையாக சொந்தக் குரலில் பின்னணி பேசும் நயன்தாரா!

Nayan Dub Her Own   

ஹைதராபாத்: ஒரு தெலுங்குப் படத்துக்காக முதல் முறையாக சொந்தக் குரலில் பேசுகிறார் நடிகை நயன்தாரா.

காதலில் பல கை மாறினாலும் நயனின் மார்க்கெட் தமிழிலும் தெலுங்கிலும் உச்சத்தில் உள்ளது.

தெலுங்கில் இப்போது கிருஷ்ணம் வந்தே ஜகத்குரு என்ற படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்த மெகா பட்ஜெட் படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசுகிறார் நயன்தாரா. தனது கேரக்டருக்கு விருதுகள் கிடைக்கும் என நயன் எதிர்ப்பார்ப்பதாலேயே இந்த முடிவாம். இதனால் தெலுங்கில் பேசுவதற்கு ஆசிரியர்கள் வைத்து விசேஷ பயிற்சி எடுத்தார்.

இந்தி மற்றும் தமிழிலும் இப்படத்தை டப் செய்து வெளியிடுகின்றனர்.

ஏற்கெனவே ஸ்ரீராமராஜ்யம் படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஆந்திர அரசின் விருது பெற்றவர் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

 

அட்ரஸ் இல்லாமலிருந்த மணிரத்னத்துக்கு வாய்ப்பு கொடுத்தது என் தவறு! - கோவைத் தம்பி

Kovai Thambi Blasted Manirathnam

சென்னை: 'யாரென்றே தெரியாமலிருந்த மணிரத்னத்துக்கு இதயக் கோயில் பட இயக்குநர் வாய்ப்பு கொடுத்தது என் தவறுதான்' என்று கொந்தளித்துள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோவைத் தம்பி.

சமீப காலமாக பேட்டி என்ற பெயரில் எக்கச்சக்கமாக உளற ஆரம்பித்துள்ளார் மணிரத்னம். இதனால் அவர் ரொம்ப மினி ரத்னமாக மாறி, திரையுலகினரின் வெறுப்பைச் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார்.

எழுபதுகளின் இறுதியில் தான் பார்த்த மோசமான படங்கள் காரணமாக, தமிழ் சினிமாவைக் காப்பாற்ற இயக்குநர் அவதாரமெடுத்தேன் என்று முன்பு கூறியிருந்தார்.

இப்போது 28 ஆண்டுகளுக்கு முன், மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவைத்தம்பி தயாரித்து, இளையராஜா இசையில் வெளியான படம் இதயக் கோயில் படத்தை மட்டமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த படம் தொடர்பாக சமீபத்தில் ஒரு வார பத்திரிகையில் வெளிவந்த மணிரத்னம் பேட்டியில், ‘‘நான் டைரக்டு செய்த படங்களில் மிகவும் மோசமான படம், இதயக்கோவில். என்னை அறியாமல் அந்த கதைக்குள் சிக்கிக்கொண்டேன்'' என்று கூறியிருந்தார்.

இதைப் படித்ததும் கொதித்துப் போயுள்ளார் படத்தைத் தயாரித்த கோவைத் தம்பி.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது. அவர் என்னை நேரில் பார்த்தது போலவும், இந்த கதைக்குள் அவரை அறியாமல் சிக்கிக்கொண்டது போலவும், மிகவும் மோசமான படம் ‘இதயக்கோவில்' என்றும் 28 ஆண்டுகளுக்கு பின்பு கூறியிருக்கிறார்.

கொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா படங்களைத் தந்தது தமிழக மக்களுக்கு தெரியும். எத்தனையோ இளைஞர்கள் இருக்க, தவறான வழிகாட்டுதலால் மணிரத்னத்தை ‘இதயக்கோவில்' இயக்குநர் ஆக்கியது என் தவறுதான். அன்று முதல் மதர்லேண்ட் பிக்சர்சுக்கு இறங்குமுகமாக மாறியதுதான் உண்மை.

எனக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது ஏன் என்பது மணிரத்னத்தின் மனசாட்சிக்கு தெரியும்.

அந்த படத்தில் எனக்கு மூன்று படத்துக்கான செலவு வைத்தார் இந்த மணிரத்னம். சினிமா தெரியாமல், அதைப் படமாக்கும் விதம் தெரியாமல் காட்சிகளை அவர் பாட்டுக்கு சுட்டுத்தள்ளியது என் பொருளாதாரத்தையே சுட்டு பொசுக்கியது. என்னைப் பொறுத்தவரை, ‘இதயக்கோவில்' வெற்றிப் படம்தான். ஆனால் அதற்கு காரணம் மணிரத்னம் அல்ல.

திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய ‘இருவர்' படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என் நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

மணிரத்னம் அவர்களே... நீங்கள் வழக்கம்போல பேசாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது!

 

நடிகை வித்யாபாலன் திருமணம்... யுடிவி சித்தார்த் ராய் கபூரை மணக்கிறார்!

Vidya Balan Likely Marry Utv Honcho On December

மும்பை:நடிகை வித்யா பாலனுக்கும் யுடிவியின் சித்தார்த் ராய் கபூருக்கும் வரும் டிசம்பர் 14-ம் தேதி திருமணம் நடக்கிறது.

‘பரினீதா', ‘பா', ‘கஹானி', ‘தி டர்ட்டி பிக்சர்' உள்பட பல படங்களில் நடித்தவர், வித்யாபாலன்.

‘தி டர்ட்டி பிக்சர்' படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றவர். பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ் பெண்ணான இவருக்கும், யு.டி.வி. நிறுவனத்தின் நிர்வாகி சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இவர்கள் காதலுக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, திருமணம் முடிவாகி இருக்கிறது.

வித்யாபாலன் - சித்தார்த் ராய் கபூர் திருமணம் டிசம்பர் 14-ந் தேதி மும்பையில் நடக்கிறது.

இந்த திருமணம் வித்யா பாலன் குடும்ப வழக்கப்படி தமிழ் முறைப்படியும், சித்தார்த் ராய் கபூரின் குடும்ப வழக்கப்படி பஞ்சாபி முறைப்படியும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்டமான திருமண வரவேற்புக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

 

சோனாவுக்கு நாங்க இருக்கோம்.. வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்த பெண்கள் இயக்கம்!

Women Forum Extends Support Sona

சென்னை: ஆண்களை இழிவுபடுத்திப் பேசிய சோனாவுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என்று பெண்கள் பாதுகாப்பு சங்கம் முன்வந்துள்ளது.

செக்ஸ் விஷயத்தில் ஆண்களை துடைத்துப் போடும் டிஸ்யூ பேப்பராக மட்டுமே தான் உபயோகிப்பதாக நடிகை சோனா பேட்டியளித்திருந்தார். இதனைக் கண்டித்து ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் சோனா வீட்டில் முற்றுகை போராட்டம் நடத்தி கைதாகியுள்ளனர்.

இப்போது போராட்டம் நடத்திய ஆண்களை எதிர்த்து, பெண்கள் சங்கம் களமிறங்கியுள்ளது.

இதுகுறித்து ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்க தலைவரும் மனித உரிமை கழக சர்வதேச அமைப்பு மகளிர் அணி நிர்வாக செயலாளருமான கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகை சோனா வீட்டில் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. ஆண்கள் பற்றி அவதூறாக பேசவில்லை என்று சோனா மறுத்து விட்டார். வருத்தமும் தெரிவித்து விட்டார். அதன்பிறகும் அவருக்கு எதிராக போராடுவது முறையல்ல.

அதுவும் ஒரு பெண்ணை கண்டித்து அவர் வீட்டில் இத்தனை ஆண்கள் குவிந்து கோஷம் போடுவது ஏற்ககூடியது அல்ல. சூர்யா படத்தில் பெண்களை நம்பி கெட்டுபோனவர் பலர் என்று பாடல் வந்துள்ளது. தனுஷ், சிம்பு படங்களிலு2ம் பெண்களுக்கு எதிரான பாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதை நாங்கள் சினிமாவாக பார்க்கிறோம். எனவேதான் எதிர்த்து போராட்டங்களில் ஈடுபடவில்லை.

சோனா இழிவாக பேசி இருப்பதாக கருதினால் கோர்ட்டுக்கு செல்லலாம். அதை விடுத்து ஒரு பெண் என்றும் பாராமல் கண்டன போராட்டங்கள் நடத்துவது அவரது வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆண்களுக்கு சங்கம் தேவையில்லை. பெண்கள்தான் சமூகத்தில் பல வகைகளில் பாதிக்கப்படுகின்றனர். சோனாவை மிரட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். போராட்டம் தொடருமானால் சோனாவுக்கு பெண்கள் இயக்கம் பாதுகாப்பு அளிக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கவுதம் மேனன் படம் : சமந்தா நடுக்கம்

Gautham Menon's film: Samantha jitter கவுதம் மேனன் பட ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க சமந்தாவுக்கு பயம் அதிகரித்துள்ளதாம். 'பாணா காத்தாடி" பட ஹீரோயின் சமந்தாவுக்கு 'நான் ஈ வெற்றிபடமாக அமைந்தது. இதையடுத்து மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. தோல் நோய் பாதிப்புக்குள்ளான அவர் இரண்டு படங்களிலிருந்தும் விலகினார். நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தார். ஏற்கனவே நடித்து வந்த 'நீதானே என் பொன் வசந்தம் படத்தின் ஷூட்டிங் சமந்தாவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அவர் குணம் அடைந்ததும் அதன் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். இப்படம் வரும் டிசம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க சமந்தாவுக்கு பயமும் கூடிக்கொண்டே போகிறதாம். இப்படத்தை பற்றி சமீபகாலமாக தொடர்ச்சியாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வருகிறார். இதுபற்றி அவர் நேற்று குறிப்பிட்டுள்ள தகவலில், 'நீ தானே என் பொன்வசந்தம் டிசம்பர் 14ல் ரிலீஸ். அதற்கான நாள் நெருங்க நெருங்க நடுக்கம் கூடிக்கொண்டே போகிறது. நிச்சயம் அப்படத்தை நீங்கள் (ரசிகர்கள்) விரும்புவீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
 

சிங்கள மொழியில் டப் ஆகும் தமிழ் படம்

Is a Tamil film dubbed in Sinhala language தமிழில் உருவாகும் 'கபடம் படம் சிங்கள மொழியில் டப் ஆகிறது. சச்சின், வங்காள பெண் அங்கனா ராய் நடிக்கும் படம் 'கபடம். இப்படத்தை ஜோதி முருகன் இயக்குகிறார். அவர் கூறியது: செல்வராகவன், சிம்புதேவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். இருவரது பாணியும் வெவ்வேறு கோணம் கொண்டது. இப்படத்தை பொறுத்தவரை அவர்களது பாணியிலிருந்து மாறி ஸ்கிரிப்ட் அமைத்துள்ளேன். 'கபடம் காதல் சஸ்பென்ஸ் கதையாக உருவாகி இருக்கிறது.

ஜோடி ஒன்றுக்கிடையில் ஏற்படும் கலாசார பாகுபாடு அவர்கள் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்ற கருவை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டிருக்கிறது. யாதுமாகி படத்தில் நடித்த சச்சின் ஹீரோ. அங்கனா ராய் ஹீரோயின். சோழா பொன்னுரங்கம் தயாரிக்கிறார். சதீஷ்குமார் இசை அமைக்கிறார். இப்படத்தின் ஹீரோ சச்சின் இலங்கையில் பிறந்தவர். தமிழ்நாட்டில் வளர்ந்தார். ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றியவர். கபடம் படம் தெலுங்கில் கபடா என்ற பெயரில் ரிலீஸ் ஆக உள்ளது. இவ்வாறு ஜோதி முருகன் கூறினார். இப்படம் சிங்கள மொழியில் டப்பிங் ஆகிறது என்று பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

கிசு கிசு - ஹீரோயின் விஷயத்தில் ஹீரோ தலையீடு

Kodmbakkam Kodangi நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

கோலிவுட்டோ டோலிவுட்டோ இயக்கம் முடிவு செஞ்ச பிறகும் ஹீரோயின் விஷயத்தில் தலையிடுகிறாராம் சித்தாத்த ஹீரோ. இப்படி நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்காங்களாம். கோலிவுட்டில் கண்ட நாள் படத்துல நடிச்ச ரெஜினாவான ஹீரோயின் டோலிவுட்டில் புக் ஆனாராம். ஆனா சித்தாத் ஹீரோ தலையீட்டால் தன்னுடைய வாய்ப்பு வேற ஹீரோயினுக்கு போயிடுச்சின்னு புலம்புறாராம்... புலம்புறாராம்...

கல்யாணம் முடிஞ்ச கையோட தேனிலவுக்கு போவாருன்னு சிவ ஹீரோவோட பிரெண்ட்ஸுங்க எதிர்பாத்தாங்களாம்... எதிர்பார்த்தாங்களாம்... ஆனா கையில படங்கள வச்சிட்டு ஊருக்குபோனா ஷூட்டிங் பிரேக்காகும். இருக்கற போட்டில வேற ஹீரோவ தேட ஆரம்பிச்சிட்டாங்கன்னா சான்ஸ் நழுவிடும்னு தேனிலவு திட்டத்த கைவிட்டுட்டாராம்... கைவிட்டுட்டாராம்... அவுட்டோருக்கு கௌம்பனா அங்கேயே தேனிலவ வச்சிக்கலாம்னு ஹீரோ முடிவு பண்ணிட்டாராம்... பண்ணிட்டாராம்...

கன் படத்துக்கு வந்த பிரச்னைய பாத்த வேல்டு ஹீரோ தன் படத்துக்கு எதிர்ப்பு வராதளவுக்கு சீனுகள மாத்துறாராம்... மாத்துறாராம்... ஏற்கனவே படத்துக்கு சென்சார், சர்டிபிகேட் கொடுத்துருச்சாம். ஆனாலும் பிரச்னை கௌம்பும்னு நெனக்கற சீனுகளை மட்டும் சேஞ்ச் பண்ணிட்டு அதுக்கு புதுசா பர்மிஷன் வாங்க பிளான் பண்ணிருக்காராம்... பண்ணிருக்காராம்...
 

3 மொழியிலும் கவனம் : காஜல் அகர்வால் முடிவு

3 language Attention: Kajal Agarwal results நடித்து வரும் 3 மொழிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்துவேன் என்றார் காஜல் அகர்வால். விஜய்யுடன் நடித்த 'துப்பாக்கி, இந்தியில் நடித்த 'சிங்ஹம் மற்றும் டோலிவுட்டில் நடித்த படங்களுக்கு பின், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் காஜல். இந்தியில் அக்ஷய் குமாருடன் நடித்து வரும் புதிய படத்தை தவிர வேறு படங்களை ஏற்கவில்லை. அதே போல் டோலிவுட்டில் ஒரு படம் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழில் வரும் வாய்ப்புகளுக்கு சம்மதம் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்.

திடீரென சம்பளத்தை காஜல் உயர்த்தி கேட்பதால் தயாரிப்பாளர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். இதனால் அவர் படங¢களை ஏற்க தயங்குவதாக சொல்லப்படுகிறது. புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாதது பற்றி அவரது தரப்பில் கூறும்போது, 'ஒரு சில இயக்குனர்களுடன் கதைகள் கேட்டு வருகிறார் காஜல். இன்னும் ஒரு வாரத்துக்குள் பெரிய படமொன்றை ஒப்புக்கொள்ள உள்ளார். வரும் வாய்ப்புகள் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளும் எண்ணமில்லை. ஆனாலும் தொடர்ந்து 3 மொழிகளிலும் கவனம் செலுத்துவார் என்றனர்.
 

டிசம்பர் 14-ம் தேதி வித்யா பாலனுக்கும் யுடிவியின் சித்தார்த் ராய் கபூருக்கும் திருமணம்

Vidhya balan Will marry SRK At dec 14 நடிகை வித்யா பாலனுக்கும் யுடிவியின் சித்தார்த் ராய் கபூருக்கும் வரும் டிசம்பர் 14-ம் தேதி திருமணம் நடக்கிறது.

'பரினீதா', 'பா', 'கஹானி', 'தி டர்ட்டி பிக்சர்' உள்பட பல படங்களில் நடித்தவர், வித்யாபாலன்.

'தி டர்ட்டி பிக்சர்' படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றவர். பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ் பெண்ணான இவருக்கும், யு.டி.வி. நிறுவனத்தின் நிர்வாகி சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இவர்கள் காதலுக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, திருமணம் முடிவாகி இருக்கிறது.

வித்யாபாலன் - சித்தார்த் ராய் கபூர் திருமணம் டிசம்பர் 14-ந் தேதி மும்பையில் நடக்கிறது.

இந்த திருமணம் வித்யா பாலன் குடும்ப வழக்கப்படி தமிழ் முறைப்படியும், சித்தார்த் ராய் கபூரின் குடும்ப வழக்கப்படி பஞ்சாபி முறைப்படியும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்டமான திருமண வரவேற்புக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
 

தமிழில் பேசுவதில் சந்தோஷம் - பெங்களூரில் இஷா தியோல் பேட்டி

சென்னை: எப்போதும் என் தாய்மொழியான தமிழில் பேசுவதைத்தான் நான் விரும்புகிறேன். என் வீட்டில், என் பணியாளர்களிடம் தமிழில்தான் பேசுகிறேன், என்கிறார் நடிகை இஷா தியோல்.

நடிகை ஹேமமாலினியின் மகள் இஷா தியோலும், அவருடைய கணவர் பரத் தக்தானியும் ஒரு நகைக்கடை விளம்பரத்துக்காக பெங்களூர் வந்தார்கள்.

அப்போது இஷா தியோல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், " திருமண வாழ்க்கையை நான் சந்தோஷமாக அனுபவிக்க விரும்புகிறேன். சினிமா வாய்ப்புகளை ஒப்புக் கொண்டால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாமல் போகும். எனவே சில மாதங்கள் நான் ஓய்வாக இருக்க விரும்புகிறேன்.

ஆனால் நடிப்பு என் ரத்தத்தில் ஊறிப் போனது. எனவே தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன். கொஞ்ச நாள் கழித்து நல்ல வாய்ப்புகள் ஏதும் வந்தால் மீண்டும் நடிப்பேன்.

தமிழில்தான் பேசுகிறேன்...

பெங்களூர், எனக்கு பிடித்த நகரங்களில் ஒன்று. அதேபோல நான் எப்போதும் என் தாய்மொழியான தமிழில்தான் பேசுகிறேன். என் கார் டிரைவர்களிடம் தமிழில்தான் பேசுகிறேன். மொழி புரியாமல், என் கணவர் என்னை ஆச்சரியமாக பார்க்கிறார். ‘எனக்கும் தமிழ் கற்றுக் கொடுங்கள்' என்று டிரைவர்களிடம் அவர் கேட்கிறார்,'' என்றார்.

அடடா கேக்க நல்லா இருக்கே..!

 

பாக்யராஜ் படம் பார்க்கணுமா? 11 மணிக்கு சன் டிவி பாருங்க!

Sun Tv Celebrates K Bhagyaraj Week

சன் டிவியில் இந்தவாரம் பாக்யராஜ் வாரம் தொடங்கியுள்ளது. இரவு 11 மணிக்கு நடித்த தூறல் நின்னு போச்சு, மௌனகீதங்கள் போன்ற பிரபலமான படங்களை ஒளிபரப்புகின்றனர்.

இயக்குநர் கே. பாக்யராஜ் படங்களுக்கு என்று தனி ரசிகர் வட்டம் உண்டு. ஆண் ரசிகர்களைப் போல பெண் ரசிகர்களும் அதிகம் உண்டு. அவருடைய ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு சமாச்சாரம் இருக்கும். இன்றைக்கும் டிவியில் பாக்கியராஜ் படம் போட்டால் அது ரசித்து பார்ப்பவர்கள் அதிகம் உள்ளனர். அந்த அளவிற்கு அவருடைய படத்தின் திரைக்கதையும், கதாபாத்திரங்களும் ரசிக்கும் படியாக இருக்கும்.

சன் டிவியில் இந்தவாரம் இரவு 11 மணிக்கு பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள் ஒளிபரப்புகின்றனர். இன்று இரவு ருத்ரா, புதன்கிழமை இரவு தூறல் நின்னு போச்சு படம் ஒளிபரப்பாகிறது.

1982லேயே வரதட்சணை கொடுமை பற்றி கூறிய படம் 'தூறல் நின்னு போச்சு'. நம்பியாரை வில்லான பார்த்த தமிழ் ரசிகர்கள் இதில் வித்தியாசமான கெட்டப்பில் பார்த்திருப்பார்கள். இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனவை. நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத படம் இது. வியாழக்கிழமை இரவு இன்று போய் நாளை வா என்ற நகைச்சுவை படமும் வெள்ளிக்கிழமை இரவு அந்த காலத்தில் சூப்பர் ஹிட்டான மௌனகீதங்கள் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. மௌனகீதங்கள் படத்தில் பாக்யராஜ், சரிதா ஜோடி கெமிஸ்ட்ரி சூப்பர் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. தினசரி 11 மணிக்கு தூக்கம் வராமல் இருந்தால் பாக்யராஜ் படங்களை பார்த்து ரசியுங்களேன்.