'குடிகார அரசு ஊழியர்கள்....!' - தமிழக அரசுக்கு மம்முட்டி கோரிக்கை


அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்ல செயல்கள் செய்ய விரும்புகிறேன், என்றார் நடிகர் மம்முட்டி.

மலையாள நடிகர் மம்மூட்டி இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அவரிடம் எடுத்த எடுப்பிலேயே, ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி, தமிழகத்தில் நடிகர் விஜயகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வந்ததுபோல நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர்.

அவர் பதிலளிக்கையில், “நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ்” என்றார். மீண்டும் கேட்டபோது, “அரசியலில் எனக்கு ஆர்வமில்லை. இதை முன்பே பல முறை சொல்லிவிட்டேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறேன்.

ஏற்கனவே வழிகாட்டி என்ற அமைப்பை தொடங்கி பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் போதை விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறேன். எங்கள் வேண்டுகோளை ஏற்று கேரளாவில் குடித்து விட்டு அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களை போலீசார் கைது செய்கின்றனர்.

தமிழகத்திலும் கூட இந்த பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என்றார்.

 

தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நல்ல நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் பாவனா.


தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நல்ல நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் பாவனா.

ஆனால் தெலுங்குக்குப் போகிறேன் என்று போனவர், இப்போது காணாமலே போய்விட்டார். தமிழிலும் வாய்ப்பில்லை.

தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிக்க தனக்கு நல்ல வாய்ப்பை யாரும் தரவில்லையே என்கிறார் பாவனா.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தேவையில்லாத சில கிசுகிசுக்கள் எனது திரைவாழ்க்கையை மாற்றிவிட்டன.

தமிழில் நான் கடைசியாக நடத்த படம் அசல். அப்படத்துக்கு பின் சில வாய்ப்புகள் வந்தாலும், ஒன்றும் சொல்லிக் கொள்கிறமாதிரி அமையவில்லை. நல்ல வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள், சம்பளத்தை பெரிதாக கருதாமல் நடிக்கத் தயாராக உள்ளேன். ஆனால் ஒருபோதும் கவர்ச்சி- ஆபாச வேடங்களில் நடிக்க மாட்டேன்,” என்றார்.

அப்ப கஷ்டம்தான் போங்க!

 

கமர்ஷியல் படம் எடுங்க! - டைரக்டர்களுக்கு ஹரி யோசனை


இயக்குநர்கள் அனைவரும் கமர்ஷியம் படம் எடுத்து லாபம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் என்கிறார் இயக்குநர் ஹரி.

தனுஷ் நடித்த வேங்கை படத்தை முடித்துவிட்டு, வெளியீட்டுப் பணிகளில் பிஸியாக உள்ளார் ஹரி.

தொடர்ந்து வெறும் அடிதடி கமர்ஷியல் படங்களை மட்டும் எடுப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, “விருதுக்காக படங்கள் எடுப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. அதுபோன்ற படங்களை எடுத்து தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்தக் கூடாது.

எல்லா இயக்குனர்களும் கமர்ஷியல் படங்கள் எடுத்து எல்லோருக்கும் லாபம் சம்பாதித்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்த படத்தை சூர்யாவை வைத்து எடுக்கிறேன். அதுவும் பக்கா கமர்ஷியல்தான்”, என்றார்.

 

'ஓம் ஒபாமா'... சினிமாவில் ஒரு அரசியல் கலாட்டா!


ஓம் ஒபாமா…. இது மந்திரமல்ல, புதிதாக தயாராகும் தமிழ் சினிமாவின் தலைப்பு.

ஸ்ருத்திகா பவுண்டேஷன் தயாரிப்பில் ஜானகி விஸ்வநாதன் இயக்கும் படம் இது.

கேடாரபாளையம் எனும் ஊரைச் சேர்ந்த இரு அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்களின் தேர்தல் பிரச்சாரத்துக்காக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வருவதாக செய்தி பரவுகிறது. இதை நம்பும் மக்கள் ஒபாமாவுக்காக யாகம் பூஜை என அமர்க்களப்படுத்துகிறார்கள்.

பஞ்சாயத்து, தேர்தல் பிரசாரம், அரசியல் மோதல், காதல், ஊரின் நிதி நிலை, ஊடக ஆதிக்கம், மூட நம்பிக்கை போன்றவற்றுக்கு ஒரே முடிவாக அமைகிறது ஒபமாவின் வருகை.

இந்தக் கதையை காமெடியும் எள்ளலும் கலந்து உருவாக்கியிருக்கிறார்களாம்.

பால் ஜேகப் இசையமைத்துள்ளார். படத்தின் இயக்குநர் ஜானகி விஸ்வநாதன் ஏற்கெனவே தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆமிர்கான் படம் மீது வழக்கு தொடர ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் திட்டம்


டெல்லி: ஆமிர்கான் தயாரிப்பில் வெளியாகியுள்ள டெல்லி பெல்லி படத்தில் சான்ட்ரோ காரை கேவலப்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதுதொடர்பாக எங்களது சட்டக் குழு ஆலோசித்து வருகிறது. படத்தின் சில காட்சிகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். விரைவில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

ஆமிர்கானும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள டெல்லி பெல்லி படத்தில், சான்ட்ரோ காரை கிண்டலடிப்பது போலவும், அதை விமர்சிப்பது போலவும் காட்சிகள் உள்ளன. இது தங்களது நிறுவனத்தையும், தயாரிப்பையும் அவதூறு ஏற்படுத்தும் செயல் என்று ஹூண்டாய் நிறுவனம் கருதுகிறது.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தங்களை ஹூண்டாய் நிறுவனம் தொடர்பு கொள்ளவில்லை என்று ஆமிர்கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி பெல்லி படத்தில் ஆமிர்கானின் உறவினரான இம்ரான் கான் நடித்துள்ளார்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹூண்டாய் நிறுவன கார் சான்ட்ரோவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கவுண்டமணியின் தாயாரைச் சந்தித்த விஜய்!


வேலாயுதம் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு கோவை அருகே பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் புற கிராமங்களில் நடந்து வருகிறது.

சமீபத்தில் வல்ல கவுண்டபுரம் என்ற ஊருக்குப் போயிருக்கிறார்கள் விஜய்யும் படப்பிடிப்புக் குழுவினரும். இந்த கிராமத்தில் படப்பிடிப்புக்காக பெரிய கிணறு வெட்டியிருக்கிறார்கள்.

கிராமத்து மக்களுடன் ரொம்பவே ஒன்றிப் போன விஜய்க்கு இந்த கிராமம்தான் காமெடி கிங் கவுண்டமணியின் சொந்த ஊர் என்பது தெரிய வந்திருக்கிறது. உடனே கவுண்டரின் வீடு எங்கே உள்ளது என விசாரித்து தேடிப் போயிருக்கிறார்கள்.

அங்கே கவுண்டமணியின் பூர்வீக வீடு உள்ளது. இந்த வீட்டில்தான் கவுண்டமணியின் தாயார் இப்போதும் வசித்து வருகிறார்.

வீடு தேடி வந்த விஜய் மற்றும் படக்குழுவினரை அன்புடன் வரவேற்ற கவுண்டமணியின் தாயார், அவர்களை உபசரித்ததோடு, அந்த வீட்டில் படப்பிடிப்பு நடத்தவும் அனுமதி அளித்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கிராமத்து மக்களுக்கு நன்றி தெரிவித்த விஜய், அனைவருக்கும் பரிசு கொடுத்து அசத்தியுள்ளார். மேலும் படப்பிடிப்புக்காக வெட்டிய கிணற்றையும் கிராமத்து மக்களுக்கே பரிசாகக் கொடுத்துவிட்டு வந்துள்ளார். இப்போது அது 'வேலாயுதம் கிணறா'க பிரபலமாகிவிட்டது!
 

சாய்பாபா வேடத்தில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்!


புட்டபர்த்தி சாய்பாபாவின் மகிமை மற்றும் சர்ச்சைகளை உள்ளது உள்ளபடியே படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் பிரபல தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.

இதில் சாய்பாபா வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜை தேர்வு செய்துள்ளனர்.

பல கோடி பக்தர்கள் வணங்கி வந்த சாய்பாபா சமீபத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு நாடெங்கிலும் பக்தர்கள் உள்ளனர். தங்கள் வாழ்க்கையில் சாய்பாபா பல்வேறு அற்புதங்கள் செய்துள்ளதாக கூறி வழிபடுகின்றனர். அவை அனைத்தும் காட்சிபடுத்தப்படுகிறது.

சாய்பாபா மறைவுக்கு பிறகு அங்கிருந்த பணத்தை கடத்தியதாக மடத்து பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். இது போன்ற சர்ச்சைகளையும் இந்தப் படத்தில் வைக்கின்றனர். இந்தப் படத்தை அரசியல் பிரமுகரான ஹரிராம ஜோகையா தயாரிக்கிறார்.

படப்பிடிப்பை புட்டபர்த்தி ஆசிரமத்தில் நடத்த அனுமதி கேட்டுள்ளனர். அனுமதி கிடைக்காவிட்டால் அதுபோன்ற அரங்குகள் அமைத்து எடுக்கப் போகிறார்களாம்.
 

அப்பா ஸ்டைல் எனக்கு பிடிக்கும்!

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

அப்பா ஸ்டைல் எனக்கு பிடிக்கும்!

7/5/2011 11:39:21 AM

‘சக்கரகட்டி’ படத்தின் மூலம் அறிமுகமான பாக்யராஜின் மகன் சந்தனு, தன்னுடைய அப்பா ஸ்டைல் ஆசையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ஸ்டைலை மாற்றி நடித்தாலும் ஏதாவது ஒரு காட்சியில் அப்பாவின் ஸ்டைல் வந்துவிடுகிறது என்று கூறினார். ‘ஆயிரம் விளக்கு’ படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

கமர்சியல் படம் மட்டுமே இயக்குவேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கமர்சியல் படம் மட்டுமே இயக்குவேன்

7/5/2011 11:32:39 AM

'வேங்கை’ பட டைரக்டர் ஹரி கூறியது: பதுங்கி பாயும் குணம் கொண்டது வேங்கை. அதுபோல் ஹீரோ தனுஷ் பதுங்கி வில்லன் பிரகாஷ் ராஜை தாக்குவார். தனுஷ் தந்தையாக ராஜ்கிரண், காதலியாக தமன்னா நடிக்கின்றனர். இதுவரை பார்க்காத தனுஷை இதில் பார்க்கலாம். கிளைமாக்ஸில் அனைவரின் கண்களையும் கலங்க வைப்பார். எனது படங்கள் எல்லாமே கமர்சியல் பார்முலாவில்தான் இருக்கும். 'பருத்திவீரன்Õ, 'மைனாÕ போன்ற கதைகளை இயக்கத் தெரியாது. அவற்றைப் பார்த்து ரசிக்கத்தான் தெரியும். கமர்சியல் படம் இயக்குபவர்கள் குறைவாக உள்ளனர். இன்னும் நிறைய இயக்குனர்கள்  கமர்சியல் படம் இயக்க முன் வரவேண்டும். என்னைப் பொறுத்தவரை இயக்குனர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் வந்தேன். நடிக்கும் ஆசை கிடையாது. நடிக்க வரும் இயக்குனர்கள் நல்ல படங்களை இயக்கும் தகுதி உடையவர்கள்தான். நடிப்பு மோகம் வந்துவிட்டால் இயக்குவதில் கவனம் செலுத்த முடியாது. அதனால்தான் நான் எந்த காலத்திலும் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன். அதற்கான ஸ்கிரிப்ட் உருவாக்க 6 மாதம் தேவைப்படுகிறது. பிறகு ஷூட்டிங் தொடங்கும்.

 

ஆக்ஷன் வேடத்தில் அனுஷ்கா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆக்ஷன் வேடத்தில் அனுஷ்கா

7/5/2011 11:30:21 AM

'அருந்ததி’ படத்தில் ஆவியை அழிக்கும் வேடத்தில் நடித்த அனுஷ்கா, பின்னர் கிளாமர் வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். தற்போது 'ராம்பச்சோதாவரம்’ என்ற படத்தில் ஆக்ஷன் வேடத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் இப்படம் உருவாகிறது. இது பற்றி தயாரிப்பாளர் கிருஷ்ணமராஜு கூறும்போது, 'பாரவி இப்படத்தின் ஸ்கிரிப்ட் எழுதி உள்ளார். 1930ல் பிரிட்டிஷாரை எதிர்த்து போராடிய வீரப் பெண்ணைப் பற்றிய கதை. இக்கதையை அனுஷ்காவிடம் கூறியதும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். வீரமிக்க இளைஞர்களை தலைமை தாங்கி வழிநடத்தும் கதாபாத்திரம். சைதன்யா டான்டலுரி இயக்கம். மணிசர்மா இசையமைக்கிறார்’ என்றார்.

 

லிங்குசாமியின் புது தீர்மானம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

லிங்குசாமியின் புது தீர்மானம்!

7/5/2011 10:59:58 AM

வேட்டை பற்றி நாளுக்கு நாள் புது விஷயங்கள் நம்மை அடைகின்றன. அண்ணன், தம்பியாக மாதவனும், ஆர்யாவும் வேட்டையில் நடித்துள்ளனர். சமீரா ரெட்டியும், அமலா பாலும் அக்கா, தங்கை. அக்கா சமீரா மாதவனின் ஜோடி, தங்கை அமலா ஆர்யாவின் ஜோடி. படத்தின் கதையும் காட்சியும் யூனிவர்சல் தரம் என்பதால் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் படத்தை வெளியிட தீர்மானித்திருக்கிறார் லிங்குசாமி. மாதவனுக்கும், சமீராவுக்கும் இந்தி மார்க்கெட் உள்ளதும் இந்த முடிவுக்கு காரணமாம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு பிருந்தா சாரதி வசனம் எழுதியுள்ளார்.

 

வேலாயுதத்தில் என்ன ஸ்பெஷல்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வேலாயுதத்தில் என்ன ஸ்பெஷல்?

7/5/2011 10:57:23 AM

விஜய் படங்களில் அதிக எதிர்பார்ப்புடன் தயாராகும் படம் என்றால் அது வேலாயுதம்தான். ஜெயம் ராஜா இயக்கம், ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயா‌ரிப்பு, இரண்டு ஹீரோயின்கள்… கதையுடன் கமர்ஷியல் ச‌ரிவிகிதத்தில் கலந்திருப்பதாக பூ‌ரித்து‌ப் பேசுகிறார்கள். இதல் ராபின்ஹுட்டாக பல அதிரடி வேலைகள் செய்கிறாராம் விஜய். அத்துடன் விஜய் ஆண்டனியின் பாடல்களையும் சிலாகித் பேசுகின்றனர்.
லடாக்கில் சில காட்சிகளை எடுப்பதற்காக வேலாயுதம் யூனிட் லடாக்கில் முகாமிட உள்ளது. படப்பிடிப்பு முடியாவிட்டாலும் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதால் படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

இலியானாவின் மறுப்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இலியானாவின் மறுப்பு!

7/5/2011 10:52:22 AM

இலியானா இந்தியில் ரன்பிர் கபூருடன் நடிக்கிறார். அனுபவ் பாசு இயக்கும் இந்தப் படத்தில் இலியானாவுடன் இன்னொரு ஹீரோயினாக பி‌‌ரியங்கா சோப்ராவும் நடிக்கிறார். இரண்டு பேர் நடிப்பதால் எனக்குதான் முக்கியத்துவம் இருக்க சூண்டும் என்று இரு நடிகைகளும் தனித்தனியாக இயக்குனரை வலியுறுத்தியதாகவும், இலியானாவுக்கும் பி‌‌ரியங்கா சோப்ராவுக்கும் நடுவில் பனிப் போர் நடப்பதாகவும் மீடியாக்கள் எழுதின. வழக்கம் போல் இந்தச் சண்டையையும் இலியான மறுத்துள்ளார். பி‌‌ரியங்காவை இதுவரை நான் சந்திக்கவே இல்லை. அப்படியிருக்கும் போது சண்டை என்று எழுதுவது அபத்தமாக உள்ளது என்றிருக்கிறார் இலியானா.

 

ராஜபாட்டை படப்பிடிப்பு தொடருமா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ராஜபாட்டை படப்பிடிப்பு தொடருமா?

7/5/2011 10:48:21 AM

விக்ரம் நடிப்பில் சுசீந்திரன் இயக்கும் ராஜபாட்டை படத்தை தயா‌‌ரிக்கும் ரமேஷ்பாபுவை சமீபத்தில் ஆந்திர போலீஸ் சென்னையில் கைது செய்தது. இதனால் படப்பிடிப்பு தொடருமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ரமேஷ் பாபுவின் மகன்கள் பட வேலைகளை கவனித்துக் கொள்வார்கள் தனால் படப்பிடிப்பு தடைபடாது என உடனடியாக விளக்கம் வெளியிடப்பட்டது. இதையே விக்ரமும் கூறியிருக்கிறார். ஆனால் சென்னை சாலிகிராமத்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்த ராஜபாட்டை படப்பிடிப்பு கடந்த வாரத்தின் இறுதியில் நடக்கவில்லை. இதற்கான காரணம் தெ‌ரியவில்லை.

 

58 வது பிலிம்ஃபேர் விருது : விக்ரமுக்கு சிறந்த நடிகர் விருது!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

58 வது பிலிம்ஃபேர் விருது : விக்ரமுக்கு சிறந்த நடிகர் விருது!

7/5/2011 10:44:39 AM

தென்னிந்திய திரையுலகத்தின் மிக உயர்ந்த விருதாக கருதப்படும் 58 வது பிலிம்ஃபேர் விருதுகள் ஹைதராபாத்தில் வழங்கப்பட்டன. விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. தமிழின் சிறந்த படமாக ‘மைனா’ தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான விருதை ‘அங்காடித் தெரு’ இயக்குனர் வசந்தபாலன் தட்டிச் சென்றார். மற்ற விருதுகள் வருமாறு.

சிறந்த நடிகர் – விக்ரம்(ராவணன்)
சிறந்த நடிகை – அஞ்சலி(அங்காடித் தெரு)
சிறந்த துணை நடிகர் – பார்த்திபன்(ஆயிரத்தில் ஒருவன்)
சிறந்த துணை நடிகை – சரண்யா(தென்மேற்குப் பருவக்காற்று)
சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரஹ்மான்(விண்ணைத்தாண்டி வருவாயா)
சிறந்த பாடலாசி‌‌ரியர்- தாமரை(விண்ணைத்தாண்டி வருவாயா)
சிறந்த பாடகர்- கார்த்திக்
சிறந்த பாடகி – ஸ்ரேயா கோஷல்

 

செல்வராகவன் திருமண வரவேற்பு: கருணாநிதி நேரில் வாழ்த்து


சென்னை: சினிமா இயக்குநர் செல்வராகவன்-கீதாஞ்சலி திருமண வரவேற்பு, சென்னையில் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

இயக்குநர் செல்வராகவனுக்கும், சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்-பத்மினி ராமன் தம்பதிகளின் மகள் கீதாஞ்சலிக்கும் சென்னையில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள், மற்றும் நடிகர்-நடிகைகள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

செல்வராகவன்-கீதாஞ்சலி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நேற்று மாலை 6-30 மணிக்கு நடந்தது.

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். மணமக்கள் செல்வராகவன்-கீதாஞ்சலி இருவரும் கருணாநிதி காலில் விழுந்து ஆசி பெற்றார்கள்.

முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரும் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், மற்றும் நீதிபதிகள் கே.வெங்கட்ராமன், ஆர்.எஸ்.ராமநாதன், கே.கே.சசிதரன், வி.ராமசுப்பிரமணியன், வி.தனபாலன், டி.எஸ்.சிவஞானம், கே.பி.கே.வாசுகி, எம்.ஜெயச்சந்திரன், கே.என்.பாஷா, பால் வசந்தகுமார், பெரிய கருப்பன், கே.சந்துரு, கிருபாகரன், ராஜா, சிவகுமார், முருகேசன், மோகன்ராம், ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.மோகன், பாஸ்கரன், வி.ராமசாமி, ஏ.கே.ராஜன், என்.வி.பாலசுப்பிரமணியம்,

இயக்குநர்கள் கே.பாலசந்தர், மணிரத்னம், வசந்த், ஜெயேந்திரா, பட அதிபர்கள் எல்.சுரேஷ், ராம்குமார், கே.முரளிதரன், சாமிநாதன், எடிட்டர் மோகன், அல்லு அரவிந்த், மோசர்பேர் தனஞ்செயன், நடிகர்கள் ஜெயம் ரவி, பார்த்திபன், சுந்தர் சி, அப்பாஸ், நடிகைகள் சுஹாசினி, கவுதமி, கஸ்தூரி, மனோரமா, ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

மணமகள் கீதாஞ்சலியின் தந்தை பிஎஸ் ராமன், திமுக ஆட்சிக் காலத்தில் அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்தவர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கருணாநிதி கலந்து கொள்ளும் முதல் சினிமாக்காரர்கள் நிகழ்ச்சி இது.

பொதுவாக முன்பெல்லாம் கருணாநிதி வந்தால், முண்டியடித்துக் கொண்டு அவர் பக்கத்தில் நின்று போஸ் கொடுக்க ஆஜராகும் சினிமாக்காரர்கள், இந்த முறை அவரைப் பார்த்ததும் பம்மிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

பெற்றோர் சம்மதத்துடன் காதலரை மணக்கிறார் ஜெனிலியா


ஒரு வழியாக ஜெனிலியா - ரிதேஷ் தேஷ்முக் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் சம்மதம் சொல்லிவிட்டனர்.

எனவே கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு காதலரை கைப் பிடிக்கிறார் ஜெனிலியா.

பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஜெனிலியா. சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார். தெலுங்கிலும் இந்தியிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

ஜெனிலியாவும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் சில வருடங்களுக்கு ஒரு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

ரிதேஷ் தேஷ்முக் முன்னாள் மராட்டிய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன். ஜெனிலியா - ரிதேஷ் காதலுக்கு ஆரம்பத்தில் இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக ரிதேஷின் தந்தை காதலர்களை பிரிக்க கடும் முயற்சி செய்தார். ஆனாலும் அவர்கள் காதலில் உறுதியாக இருந்தனர். ரகசியமாக சந்தித்து வந்தார்கள்.

எனவே எதிர்ப்பை கைவிட்டு, சேர்த்து வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் விளைவு இத்தனை நாட்கள் ரகசியமாக சந்தித்து வந்த காதலர்கள் இப்போது பெற்றோர் அனுமதியுடன் பகிரங்கமாக ஜோடியாக சுற்றுகின்றனர்.

சமீபத்தில் கனடாவில் நடந்த ஐஃபா விழாவில் ரிதேசும் ஜெனிலியாவும் நெருக்கமாக உட்கார்ந்து இருந்தபோது ஜெனிலியாவின் தாயாரும் உடனிருந்தார்.

கைவசமுள்ள படங்களை ஜெனிலியா முடித்துக் கொடுத்ததும் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.
 

சினிமா படப்பிடிப்பில் திடீர் மோதல்; மாணவருக்கு அடி-உதை


செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பின் போது மோதல் ஏற்பட்டு சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக ஸ்டண்ட் மாஸ்டரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் நகுல் கதாநாயகனாக நடிக்கும் பெயர் சூட்டப்படாத சினிமா படப்பிடிப்பு நேற்று செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நடந்தது.

அப்போது செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சுமார் 150 பேர் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்தனர்.

அவர்களில் ஒரு பகுதியினர் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க சென்றனர். கமலக்கண்ணன் என்ற மாணவர் நடிகர் நகுலை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அவரை சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான சென்னை மதுரவாயலை சேர்ந்த செல்வம் கண்டித்தளார்.

இதற்கு மற்ற மாணவர்கள், 'அவர் சினிமாவில் தான் ஹீரோ, நிஜத்தில் இல்லை' என்று கூறினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்டண்ட் மாஸ்டர் செல்வம், மாணவர் கமலக்கண்ணனை அடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாணவர் கமலக்கண்ணன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரயில் மறியல்...

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் திடீரென ரயில் தண்டவாளத்தின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, டவுன் இன்ஸ்பெக்டர் பழனி, ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிநாதன் ஆகியோர் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

இச்சம்பவம் தொடர்பாக ஸ்டண்ட் மாஸ்டர் செல்வத்திடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ரயில் நிலைய படப்பிடிப்பில் ரகளை : நடிகர் நகுலனை கைது செய்யக் கோரி மாணவர்கள் திடீர் மறியல்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரயில் நிலைய படப்பிடிப்பில் ரகளை : நடிகர் நகுலனை கைது செய்யக் கோரி மாணவர்கள் திடீர் மறியல்!

7/5/2011 10:06:55 AM

நடிகர் நகுலன் ஹ¦ரோவாக நடிக்கும் வல்லினம் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் கடந்த 3 நாளாக செங்கல்பட்டு ரயில் ந¤லையத்தின் 8 பிளாட்பாரத்தில் நடந்து வந்தது. படத்தை இயக்குனர் அறிவழகன் இயக்கி வருகிறார். நேற்று 4 மணி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நகுலன், ஸடன்ட் மாஸ்டர், ஸ்டன்ட் நடிகர்கள் உட்பட 50 பேர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தனர். அப்போது சென்னை செல்வதற்காக செங்கல்பட்டு அரசு சட்ட கல்லூரி மாணவர்கள் 50 மேற்பட்டோர் ரயில் நிலையம் வந்தனர்.

 படப்பிடிப்பை பார்ப்பதற்காக 8வது பிளாட்பாரத்திற்கு வந்தனர். அங்கு நடித்துக் கொண்டிருந்த நகுலனிடம் ஆட்டோகிராப் கேட்டனர். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருக்கும்படி கூறியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி நகுலன், ஸ்டன்ட் மாஸ்டருடன் மாணவர்கள் வாய்த்தகராறு செய்தனர். தொடர்ந்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அதில், மணிவண்ணன் என்ற மாணவனின் சட்டை கிழிந்தது. சட்டக் கல்லூரி மாணவர்கள் என்றால் பயந்து விடுவோமா என்று அசிங்கமாகவும், தகாத வார்த்தைகளாலும் திட்டியதாக மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டி திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

நடிகர் நகுலன், ஸ்டன்ட் மாஸ்டரை கைது செய்ய வேண்டும், படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரி ரயில் நிலையத்தின் 3, 4, மற்றும் 5வது பிளாட்பாரத்தில் தண்டவாளத்தில் அமர்ந¢து மறியல் செய்தனர். இதனால் செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் வழியாக சென்னை பீச் வரை செல்லும் 3 மின்சார ரயில்கள் புறப்பட முடியவில்லை. ரயில்வே போலீசார் வந்து மாணவர்களிடம் பேச்சு நடத்தினர். உடன்பாடு ஏற்படவில்லை. மறியல் தொடர்ந்தது.

செங்கல்பட்டு ஏஎஸ்பி பொன்னி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, ரயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிநாதன் உள்ளிட்ட 50 போலீசார் மீண்டும் பேச்சு நடத்தினர். நகுலன், ஸ்டன்ட் மாஸ்டர் இருவரையும் கைது செய்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மாணவர்கள் உறுதியாக தெரிவித்தனர். நடவடிக்கை எடுப்பதாக ஏஎஸ்பி பொன்னி கூறினார். அதன்பேரில் ஸ்டன்ட் மாஸ்டரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.  இந்நிலையில் நகுலன் காரில் ஏறி செல்ல முயன்றார். அவரை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கெரோ செய்தனர். இதனால் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிநாதன் நகுலனை காவல் நிலையம் அழைத்து சென்றார்.

 

சக்சேனா கைது... பட்டாசு வெடித்து கொண்டாடிய சினிமாக்காரர்கள்!


சன் பிக்சர்ஸ், ஹன்ஸ் ராஜ் சக்சேனா, கலாநிதி மாறன் இவர்களை வானளாவப் புகழாத வாய்களே இல்லை எனும் அளவுக்கு இருந்தது நிலைமை, கடந்த 5 ஆண்டுகளில்.

எந்த சின்ன / பெரிய பட பூஜை அல்லது இசை வெளியீடாக இருந்தாலும் 'சாக்ஸ்' வந்தா நல்லாருக்கும் என்று கேட்பது வாடிக்கையாக இருந்தது.

ஆனால் இன்று அதே சினிமா உலகில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மோசடி வழக்கில் சக்சேனா கைது செய்யப்பட்டதை அறிந்ததும், பிலிம்சேம்பர் எனப்படும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நேற்று பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடியுள்ளனர் சினிமாக்காரர்கள்.

மாருதி பிலிம்ஸ் ராதாகிருஷ்ணன், ஆர்.வி. கிரியேஷன்ஸ் வடிவேலு தலைமையில் சென்னை பிலிம்சேம்பர் வளாகத்தில் கூடிய திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பிலிம்சேம்பர் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், "கடந்த 5 ஆண்டுகளாக சங்க பதவியை முறைகேடாக பிடித்தவர்கள், தயாரிப்பாளர்கள் நலனை காக்கத் தவறி குறிப்பிட்ட சேனல்களின் நலனில் அக்கறை செலுத்தி தமிழ் திரைப்பட துறையினரின் பலகோடி ரூபாய் நஷ்டத்திற்கு காரணமானவரும், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களையும் வஞ்சித்தவருமான சன் டி.வி. தலைமை நிர்வாகி சக்சேனாவை கைதுசெய்ததன் மூலம் தமிழ்த்திரையுலகம் சுதந்திர காற்றை சுவாசிக்க செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோடானுகோடி நன்றி," என்று கூறியுள்ளனர்.