சன் பிக்சர்ஸின் எங்கேயும் காதல் மே 6 ல் ரிலீஸ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சன் பிக்சர்ஸின் எங்கேயும் காதல் மே 6 ல் ரிலீஸ்!

4/23/2011 9:57:20 AM

சன் பிக்சர்ஸ் வெளியிடும், 'எங்கேயும் காதல்' படம், மே மாதம் 6-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி, சுமன், ராஜு சுந்தரம் உட்பட பலர் நடித்துள்ள படம், 'எங்கேயும் காதல்'. பிரபுதேவா பிரமாண்டமாக இயக்கியுள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இதன் பாடல்கள் வெளியான நாள்முதலே மெகா ஹிட்டாகியுள்ளன. இதன் படப்பிடிப்பு முழுவதும் பிரான்ஸ் நாட்டில் நடந்துள்ளது. இதுவரை அங்கு படம் பிடிக்காத பல புதிய லொகேஷன்களில் பிரபுதேவா ஷூட்டிங் நடத்தியுள்ளார்.

படம் பற்றி பிரபுதேவா கூறும்போது, 'இது எளிமையான காதல் கதைதான். ஆனால், இதன் திரைக்கதை புதியதாகவும் பரபரப்பாகவும் இருக்கும். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இந்தப் படம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களின் புருவங்களை உயர வைப்பதாக இருக்கும். ஹாரிஸ் இசையில் ஒவ்வொரு பாடலும் ஆர்ப்பாட்டமாக வந்துள்ளது. அந்தப் பாடல்களுக்கான நடன அமைப்பிலும் வித்தியாசம் காட்டியுள்ளோம்' என்றார். மிகப் பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் மே 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது.





Source: Dinakaran
 

ராதா மகள் என்ற பின்னணி வேண்டாம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ராதா மகள் என்ற பின்னணி வேண்டாம்

4/23/2011 10:15:26 AM

முன்னாள் ஹீரோயின் ராதாவின் மகள் கார்த்திகா, தமிழில் 'கோ' மூலம் அறிமுகமாகியுள்ளார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 'கோ' படம் பார்க்கும்போது என்னை புதுமுக நடிகையாக பாருங்கள். ராதா மகள் என்று பார்க்காதீர்கள். அவரோடு என்னை ஒப்பிடாதீர்கள். ராதா மகள் என்ற பின்னணி அறிமுகத்துக்கு உதவலாம். ஆனால் நான் என் சொந்த திறமையால்தான் நிலைத்து நிற்க முடியும். 20 வருடங்களுக்கு முன்பே அம்மா நீச்சல் உடையிலும், கவர்ச்சியாகவும் நடித்து விட்டார். கதைக்கு தேவையென்றால் நானும் அதுபோன்று நடிப்பேன். அம்மாவும் பெரியம்மா அம்பிகாவும் தனித்தனியாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இருவரையும் பார்த்து வளர்ந்தவள் என்பதால் இருவரின் திறமையையும் என்னிடம் பார்க்கலாம். தென்னிந்திய மொழிகளில் நடித்தாலும் தமிழில் நடிப்பதையே பெருமையாக கருதுகிறேன்.





Source: Dinakaran
 

தமிழகம் முழுவதும் 1 லட்சம் மரக்கன்றுகள் : அமைப்பு தொடங்கினார் விக்ரம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழகம் முழுவதும் 1 லட்சம் மரக்கன்றுகள் : அமைப்பு தொடங்கினார் விக்ரம்!

4/23/2011 10:13:51 AM

தமிழிகம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட, பச்சைப்புரட்சி என்ற அமைப்பை விக்ரம் தொடங்கியுள்ளார். இதுபற்றி நிருபர்களிடம் விக்ரம் கூறியதாவது: நான் ஐ.நா சபையின் மனித குடியேற்ற திட்ட பிரிவின் இளைஞர் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். உலக ரீதியில் இது எனக்கு முக்கியமான பதவி. உலகம் முழுவதும் 4 பேர் இதற்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஆசிய நாடுகள் சார்பில் நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி. கென்யா, நைரோபியில் 23வது நிர்வாக குழு கூட்டம் கடந்த 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடந்தது. அதில் கலந்துகொண்டேன். இன்று (நேற்று) எர்த் டே. சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்ததான் ஆசியாவிலிருந்து என்னைத் தேர்வு செய்துள்ளனர்.

இதுபற்றி எனது விக்ரம் பவுண்டேஷன் மற்றும் சஞ்சீவினி அறக்கட்டளை அமைப்புகள் மூலம், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். விக்ரம் பவுண்டேஷன் மூலம் கண் அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை உட்பட பல நல்ல காரியங்கள் செய்து வருகிறோம். நான் நடிகனாக இருந்தாலும் சமூக சேவகனாக இருக்கவும் ஆசை. இன்றைய சூழலில் பச்சைப்புரட்சி மிகவும் முக்கியம். நம்மால் முடிந்த அளவில் நம் பகுதியில் ஒரு செடியாவது நட வேண்டும். அது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்கின்ற பெரிய உதவியாகும். இதன் முதல்கட்டமாக இன்று (நேற்று) ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 100 மரக்கன்றுகள் நட்டோம். விரைவில் இதை விரிவுபடுத்தி எனது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் உதவியுடன் தமிழகம் முழுவதும் 1 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். இதற்காகவே 'பச்சைப்புரட்சி' அமைப்பு தொடங்கியுள்ளோம். தவிர 'கற்க கசடற' என்ற அமைப்பும் தொடங்க உள்ளோம். இதன் மூலம் குடிசைப் பகுதி சிறுவர்களுக்கு உரிய கல்வி அளித்திட உதவி செய்து, அவர்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். இவ்வாறு விக்ரம் கூறினார்.





Source: Dinakaran
 

அரவான் படத்துக்காக 18-ம் நூற்றாண்டு கிராமம் செட்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அரவான் படத்துக்காக 18-ம் நூற்றாண்டு கிராமம் செட்!

4/23/2011 10:01:38 AM

அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் படம் 'அரவான்'. இதில் ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி, கரிகாலன் உட்பட பலர் நடிக்கிறார்கள். பின்னணி பாடகர் கார்த்திக் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். 18-ம் நூற்றாண்டு தமிழர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக இது உருவாகிறது. இதற்காக, மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டியில் உள்ள ஓவா மலையில் பழங்கால தமிழர்களின் கிராமத்து செட் அமைத்து பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இயக்குனர் வசந்தபாலன் கூறியதாவது:

போர்காலத்தில் பாண்டியர்கள் மறைந்து வாழ்ந்த பகுதியாக, ஓவா மலை குறிப்பிடப்படுகிறது. இங்கு இதுவரை எந்தப் படத்தின் ஷூட்டிங்கும் நடத்தப்பட்டதில்லை. பழமையின் புனிதம் மாறாமல் இந்த மலை பல வகை மூலிகைகளுடன் இன்றும் அப்படியே இருக்கிறது. சுமார் 250 ஏக்கரில் இருக்கும் இந்த மலையினுள் குகைகள், சுனைகள், சமணப்படுகைகள் ஏராளமாக உள்ளன. தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த மலையில் ஏராளமான வரலாற்று சுவடுகள் இருக்கின்றன. இதை இன்னும் ஆய்வு செய்தால் புதிய செய்திகள் கிடைக்கலாம். இந்த மலையில் 80 லட்சம் ரூபாய் செலவில் பழங்கால தமிழர்களின் கிராமம் செட் அமைத்து படமாக்கியுள்ளோம். விஜய் முருகன் அமைத்துள்ள அந்த செட் பேசப்படுவதாக இருக்கும். ஐரோப்பிய படங்களைப் பார்க்கும்போது இருக்கும் புதுமையும், ரிச்சும் இந்த மலையில் கிடைத்துள்ளது. ஷூட்டிங் நடக்கும்போது ஏதாவது ஒரு மூலிகை செடி, உரசி மயங்கி விழுந்தவர்கள் 15 பேர். அவர்களை மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். இவ்வாறு வசந்தபாலன் கூறினார்.





Source: Dinakaran
 

போராளியில் ஸ்வாதி, வசுந்தரா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
போராளியில் ஸ்வாதி, வசுந்தரா

4/23/2011 9:59:52 AM

சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் 'போராளி' படத்தில் ஸ்வாதி, வசுந்தரா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் சசிகுமார் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் 'போராளி'. இதை சமுத்திரக்கனி இயக்குகிறார். இந்தப் படத்தில், 'குறும்பு' அல்லரி நரேஷ், 'சுப்ரமணியபுரம்' ஸ்வாதி, வசுந்தரா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இன்னொரு ஹீரோயினை தேடி வருகின்றனர். ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொரு மனிதனுக்கு பிரச்னைதான். அந்த பிரச்னைகளை எதிர்கொள்ளுவது எப்போதும் போராட்டமாகத்தான் இருக்கிறது. இதை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இது ஈழத்து பின்னணியை கொண்ட கதை என்று வந்த தகவலை, சசிகுமார் மறுத்தார்.





Source: Dinakaran