தமிழில் ஒரு ரவுண்டு வர வேண்டும், எல்லோருடனும் நடித்து கலக்க வேண்டும் என்று படு சூடாக பேசுகிறார் பிந்துமாதவி.
தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த புது தேவதை இந்த பிந்து மாதவி. முதல் படமான வெப்பம் படத்தில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணாக இவர் நடித்திருந்தார். முதல் படத்திலேயே இப்படி முரட்டுத்தனமான ரோலா, எப்படி ஏத்துக்கிட்டீங்க என்று கேட்டால், எனக்கு அந்தப் படத்தில் முதல் காட்சியே ஒரு லவ் சீன்தான். அந்த கேரக்டரை நான் விரும்பி ஏற்றுத்தான் நடித்தேன்.
அந்தக் கேரக்டருக்காக நான் நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது. சேலையைக் கட்டுவது, மேனரிசம், பாடி லாங்குவேஜ் என நிறைய கற்று அதைச் செய்தேன்.
என்னுடைய தெலுங்குப் படங்களைப் பார்த்த இயக்குநர் அஞ்சனா, தனது படத்தில் நடிக்குமாறு என்னைக் கேட்டார். நான்தான் பொருத்தமாக இருப்பதாகவும் அவர் கூறினார். எனக்கு சந்தோஷமாக இருந்தது, உடனே ஒப்புக் கொண்டேன் என்கிறார் பிந்து.
தெலுங்கில் ஐந்து படங்களை முடித்து விட்டாராம் பிந்து. இப்போது தமிழ் பக்கம் அவரது ஆர்வம் திரும்பியுள்ளதாம். தமிழில் நல்ல வாய்ப்புகளும் வருவதால் தமிழிலேயே நிலை கொள்ளவும் தீர்மானித்துள்ளாராம்.
இப்போது கழுகு படத்தில் நடித்து வருகிறேன். பின்னர் நகுலுடன் இணைந்து நடிக்கிறேன். தொடர்ந்து படங்கள் வருகிறது. நல்ல கதையாக தேர்வு செய்து நடிக்கப் போகிறேன் என்கிறார் பிந்து.
ஹைதராபாத்தில் பிறந்த பிந்து மாதவி என்ஜீனியரிங் படித்தவர், அதுவும் நம்ம வேலூர் விஐடியில் படித்தவராம். நடிப்பு என்பது இவரது ஆரம்ப கால லட்சியமாக இருந்துள்ளது. இதனால் இதற்காக முயற்சித்து வந்துள்ளார். முதலில் விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். பின்னர் தெலுங்கில் வாய்ப்பு வரவே அங்கு நடிக்க கிளம்பினார். தமிழில் நடிக்க ஆர்வமாக இருந்தவருக்கு தெலுங்கில்தான் முதல் வாய்ப்பு வந்ததால் அங்கு தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது தமிழும் அவருக்கேற்ற தட்பவெப்பத்திற்கு மாறியுள்ளதால் தமிழையும் பிடித்துக் கொண்டுள்ளாராம்.
பிந்துமாதவிக்கு அஜீத் என்றால் உயிராம். அஜீத் படம் என்றால் மாய்ந்து மாய்ந்து பார்ப்பாராம். எனக்கு அஜீத் மீது தனி கிரேஸே உண்டு என்று வெட்கப் புன்னகை பூத்து கண்ணடிக்கிறார் பிந்து மாதவி. அதேபோல சூர்யாவையும் பிடிக்குமாம்.
பரவாயில்லையே பிழைக்கத் தெரிந்தவராகத்தான் இருக்கிறார் பி.மாதவி
தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த புது தேவதை இந்த பிந்து மாதவி. முதல் படமான வெப்பம் படத்தில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணாக இவர் நடித்திருந்தார். முதல் படத்திலேயே இப்படி முரட்டுத்தனமான ரோலா, எப்படி ஏத்துக்கிட்டீங்க என்று கேட்டால், எனக்கு அந்தப் படத்தில் முதல் காட்சியே ஒரு லவ் சீன்தான். அந்த கேரக்டரை நான் விரும்பி ஏற்றுத்தான் நடித்தேன்.
அந்தக் கேரக்டருக்காக நான் நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது. சேலையைக் கட்டுவது, மேனரிசம், பாடி லாங்குவேஜ் என நிறைய கற்று அதைச் செய்தேன்.
என்னுடைய தெலுங்குப் படங்களைப் பார்த்த இயக்குநர் அஞ்சனா, தனது படத்தில் நடிக்குமாறு என்னைக் கேட்டார். நான்தான் பொருத்தமாக இருப்பதாகவும் அவர் கூறினார். எனக்கு சந்தோஷமாக இருந்தது, உடனே ஒப்புக் கொண்டேன் என்கிறார் பிந்து.
தெலுங்கில் ஐந்து படங்களை முடித்து விட்டாராம் பிந்து. இப்போது தமிழ் பக்கம் அவரது ஆர்வம் திரும்பியுள்ளதாம். தமிழில் நல்ல வாய்ப்புகளும் வருவதால் தமிழிலேயே நிலை கொள்ளவும் தீர்மானித்துள்ளாராம்.
இப்போது கழுகு படத்தில் நடித்து வருகிறேன். பின்னர் நகுலுடன் இணைந்து நடிக்கிறேன். தொடர்ந்து படங்கள் வருகிறது. நல்ல கதையாக தேர்வு செய்து நடிக்கப் போகிறேன் என்கிறார் பிந்து.
ஹைதராபாத்தில் பிறந்த பிந்து மாதவி என்ஜீனியரிங் படித்தவர், அதுவும் நம்ம வேலூர் விஐடியில் படித்தவராம். நடிப்பு என்பது இவரது ஆரம்ப கால லட்சியமாக இருந்துள்ளது. இதனால் இதற்காக முயற்சித்து வந்துள்ளார். முதலில் விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். பின்னர் தெலுங்கில் வாய்ப்பு வரவே அங்கு நடிக்க கிளம்பினார். தமிழில் நடிக்க ஆர்வமாக இருந்தவருக்கு தெலுங்கில்தான் முதல் வாய்ப்பு வந்ததால் அங்கு தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது தமிழும் அவருக்கேற்ற தட்பவெப்பத்திற்கு மாறியுள்ளதால் தமிழையும் பிடித்துக் கொண்டுள்ளாராம்.
பிந்துமாதவிக்கு அஜீத் என்றால் உயிராம். அஜீத் படம் என்றால் மாய்ந்து மாய்ந்து பார்ப்பாராம். எனக்கு அஜீத் மீது தனி கிரேஸே உண்டு என்று வெட்கப் புன்னகை பூத்து கண்ணடிக்கிறார் பிந்து மாதவி. அதேபோல சூர்யாவையும் பிடிக்குமாம்.
பரவாயில்லையே பிழைக்கத் தெரிந்தவராகத்தான் இருக்கிறார் பி.மாதவி