கோச்சடையானை பொங்கலுக்கு வெளியிடலாம்... - மகளுக்கு ரஜினி அட்வைஸ்

சென்னை: கோச்சடையான் படத்தை தீபாவளி அல்லது டிசம்பர் 12-ல் வெளியிடாமல், பொங்கலுக்கே வெளியிடலாம் என சூப்பர் ஸ்டார் ரஜினி தன் மகளுக்கு அட்வைஸ் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கோச்சடையான்' ட்ரெய்லரை யூ டியூப்பில் இருபத்தோரு லட்சம் மக்கள் பார்த்ததால் மகிழ்ச்சியில் உள்ள சவுந்தர்யா, படத்தை முடிந்த வரை சீக்கிரமே வெளியிட முடிவு செய்து ரஜினியிடம் கேட்டுள்ளார்.

ஆனால் ரஜினி அதை ஒப்புக் கொள்ளவில்லையாம்.

காரணம் தீபாவளிக்கு என சில படங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. கமல் வேறு தன் விஸ்வரூபம் 2-ஐ தீபாவளிக்கு வெளியிடலாமா என யோசித்து வருகிறாராம்.

கோச்சடையானை பொங்கலுக்கு வெளியிடலாம்... - மகளுக்கு ரஜினி அட்வைஸ்

எனவே கோச்சடையானை தீபாவளிக்கும் வேண்டாம், தன் பிறந்த நாளன்றும் வெளியிட வேண்டாம். பொங்கலுக்கு வெளியிட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தினாராம்.

அக்டோபரில் ஆடியோ ரிலீஸ், நவம்பர் அல்லது டிசம்பரில் மேலும் ஒரு ட்ரைலர், ஜனவரியில் படம் என திட்டமிட்டுக் கொள்ளச் சொன்னாராம் ரஜினி.

படத்தை மெருகேற்ற வேண்டிய பணி இன்னும் கொஞ்சம் இருப்பதால் அப்பாவின் வார்த்தையை அமைதியாகக் கேட்டுக் கொண்டாராம் சௌந்தர்யா.

 

அரசியலில் ஈடுபடுவேன், நல்ல கட்சியில் சேர விரும்புகிறேன்: நமீதா

சென்னை: அரசியலில் அதிகம் ஆர்வம் உள்ளதாகவும், நல்ல அரசியல் கட்சியில் சேர விரும்புவதாகவும் நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.

நடிகை நமீதா சமூக சேவையில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். கண்தானம், ரத்ததான முகாம் உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் அண்மையில் கண் தானம் செய்வதை வலியறுத்தி சென்னையில் நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

அரசியலில் ஈடுபடுவேன், நல்ல கட்சியில் சேர விரும்புகிறேன்: நமீதா  

இது போன்ற சமூக சேவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நமீதா ஒரு பைசா கூட வாங்குவதில்லை. இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நமீதாவை புகழந்து தள்ளுகிறார்கள். வெளிநாடுகளில் தெருவுக்கு தெரு பெண்கள் கழிப்பிடங்கள் இருப்பது போன்று நம் ஊரிலும் பெண்கள் கழிப்பிடங்கள் இருக்க வேண்டும் என்று நமீதா ஆசைப்படுகிறார்.

இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் ஒரு கழிப்பிடத்தை கட்டி திறந்தும் வைத்தார். தன்னார்வ தொண்டு அமைப்புகள் உதவி செய்தால் இதே போன்று சென்னை நகர தெருக்களில் பெண்களுக்கான கழிப்பிடங்கள் கட்ட அவர் திட்டமிட்டார். ஆனால் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.

சமூக சேவை செய்கிறீர்களே அடுத்து அரசியலில் குதிப்பீர்களோ என்று கேட்டதற்கு, நமீதா கூறுகையில்,

எனக்கு அரசியலில் ஆர்வம் உள்ளது. நல்ல அரசியல் கட்சியில் சேர விரும்புகிறேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அரசியலில் ஈடுபடுவேன். இல்லை எனில் தொடர்ந்து சமூக சேவை செய்வேன் என்றார்.

 

ரூ. 2 கோடியிலிருந்து 5 கோடிக்கு 'ஜம்ப்' செய்த சிவகார்த்திகேயன்!

சென்னை: யாருக்கு எங்கே எப்போது சுக்கிர தசை அடிக்கும் என்று கணிக்க முடியாது, கோடம்பாக்கத்தில்.

ஓஹோ என வருவார் என கணிக்கப்பட்டவர்கள் காணாமல் போவதும், இவராவது தேறுவதாவது என ஒதுக்கப்பட்டவர்கள் ஓஹோவென வருவதும் இங்கு சகஜம்.

சிவகார்த்திகேயன் இரண்டாவது ரகம். மெரினா வந்த போது அவரை கண்டு கொள்ள ஆள் இல்லை. ஆனால் அந்தப் படம் எதிர்மறை விமர்சனத்திலேயே ஓரளவு ஓடிவிட்டது. மனம் கொத்திப் பறவைக்கும் இந்த நிலைதான்.

ரூ. 2 கோடியிலிருந்து 5 கோடிக்கு 'ஜம்ப்' செய்த  சிவகார்த்திகேயன்!

ஆனால் கேடிபில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் இரண்டும் ஹிட்டடிக்க, கோடிகளில் சம்பளம் கேட்கும் ஹீரோவானார். இப்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல வசூலைக் குவிக்க, அவர் மார்க்கெட் சூடாகிவிட்டது.

இதுவரை ரூ 2 கோடி வரை சம்பளம் பெற்றுவந்த சிவகார்த்திகேயனுக்கு இன்றைய மாரக்கெட் மதிப்பு ரூ 5 கோடியாம். இதை அவர் கேட்கிறாரோ இல்லையோ... தர தயாரிப்பாளர்கள் தயாராகவே உள்ளார்களாம்.

இப்போது, ரூ 10 கோடி பட்ஜெட்டில் படமெடுக்கக் காத்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

கரன்சில மட்டும் கவனமிருந்தா பத்தாது சிவா... கதையிலும் கவனமா இல்லேன்னா... ராமராஜனை நினைவிருக்கிறதா?

 

நம்மள இப்படி காமெடி பீஸாக்கிடுச்சே இந்த நடிகை: குமுறும் நடிகர்

சென்னை: இளம் நாயகி ஒருவர் மீது இளம் நடிகர் கடுப்பில் உள்ளாராம்.

கேரளாவில் இருந்து வந்து அடுத்தடுத்து பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அந்த டைம் நடிகை. அவருக்கும் இரண்டு எழுத்து நாயகனுக்கும் லவ்வோ லவ் என்று செய்திகள் வந்தன.

ஆனால் நாயகன் வீசிய காதல் வலையில் நடிகை சிக்கவில்லையாம். எப்படியும் சிக்காமலா போய்விடும் என்று நினைத்து நடிகர் வலை வீசிக் கொண்டே இருக்கிறாராம். இந்த நாயகனும், நாயகியும் இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்நிலையில் மூன்றாவதாக ஒரு படத்தில் ஜோடி சேர இருந்தார்கள்.

அவர்களை ஜோடியாக போட்டு படம் எடுக்கு ஒரு இயக்குனர் முடிவு செய்தார். இதையடுத்து நாயகியை அணுகி கதையை கூறியுள்ளார். கதையை கேட்ட நாயகியோ இரண்டு எழுத்து நாயகன் இதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று பெரிய சேட்டன் நடிகர் ஒருவரின் மகன் பெயரை பரிந்துரைத்துள்ளார். விளைவு தற்போது அந்த நாயகியுடன் சேட்டன் நடிகரின் மகன் தான் ஜோடியாக நடிக்கிறார்.

இது குறித்து கேள்விப்பட்ட இரண்டு எழுத்து நாயகன் இந்த நடிகை இப்படி நம்மை காமெடி பீஸாக்கிவிட்டதே என்று குமுறுகிறாராம்.

 

செக் மோசடி வழக்கு: நடிகை பிரீத்தி ஜந்தாவுக்கு எதிராக மும்பை கோர்ட் பிடிவாரண்ட்

செக் மோசடி வழக்கு: நடிகை பிரீத்தி ஜந்தாவுக்கு எதிராக மும்பை கோர்ட் பிடிவாரண்ட்

மும்பை: செக் மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட்டை மும்பை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தாவின் படங்களுக்கு வசனம் எழுதிய அப்பாஸ் டயர்வாலாவுக்கு அவர் ரூ.18.9 லட்சத்திற்கான செக்கை வழங்கியுள்ளார். ஆனால் அந்த செக்கை வங்கியில் அளித்த போது அது பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து பிரீத்தி மீது செக் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக பிரீத்தி நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவர் இன்று(12ம் தேதி) ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அவர் இன்றும் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்பு ஒரு முறை ஆஜராகாமல் அவர் ரூ.2,000 அபராதம் கட்டினார். மேலும் இந்த வழக்கில் அவர் நீதிமன்ற உத்தரவை 4 முறை அவமதித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எந்தப் படத்தையும் கடைசி நேரத்தில் தடை பண்ணக்கூடாது - பிரகாஷ் ராஜ்

எந்தப் படத்தையும் கடைசி நேரத்தில் தடை பண்ணக்கூடாது - பிரகாஷ் ராஜ்

சென்னை: எந்தப் படமாக இருந்தாலும் அதை கடைசி நேரத்தில் தடை பண்ணக் கூடாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

விகடன் மேடையில் வாசகர் ஒருவர், "கமலின் 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டபோது முதல் குரல் கொடுத்து உங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தீர்கள். ஆனால், விஜய் நடித்த 'தலைவா' படம் அதே மாதிரியான பிரச்னையில் சிக்கியபோது யாரும் குரல் கொடுக்கலையே... ஏன்?'' என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள பிரகாஷ் ராஜ், "தலைவா' படத்தை கடைசி நேரத்தில் தடை பண்ணக் கூடாதுனு ட்விட் செஞ்சு, முதல் ஆளா கருத்து சொன்னது நான்தான். 'விஸ்வரூபம்' படத்துக்கு ட்விட் பண்ணது உங்க கவனத்துக்கு வந்தது. 'தலைவா' படத்துக்கு ஆதரவாப் பேசினது உங்களை வந்து சேரலை. அதுக்கு நான் என்ன பண்றது?

இப்பவும் சொல்றேன், நாளைக்குப் படம் ரிலீஸ்னா, இன்னைக்கு வந்து 'நிறுத்துங்க'னு தடை போடாதீங்க. ஒரு தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் நஷ்டமும் பல பேரோட உழைப்பும் திருட்டு டி.வி.டி மூலமா திருடு போற கொடுமையும்தான் நடக்கும்!,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

எந்தப் படத்தையும் கடைசி நேரத்தில் தடை பண்ணக்கூடாது - பிரகாஷ் ராஜ்

எந்தப் படத்தையும் கடைசி நேரத்தில் தடை பண்ணக்கூடாது - பிரகாஷ் ராஜ்

சென்னை: எந்தப் படமாக இருந்தாலும் அதை கடைசி நேரத்தில் தடை பண்ணக் கூடாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

விகடன் மேடையில் வாசகர் ஒருவர், "கமலின் 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டபோது முதல் குரல் கொடுத்து உங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தீர்கள். ஆனால், விஜய் நடித்த 'தலைவா' படம் அதே மாதிரியான பிரச்னையில் சிக்கியபோது யாரும் குரல் கொடுக்கலையே... ஏன்?'' என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள பிரகாஷ் ராஜ், "தலைவா' படத்தை கடைசி நேரத்தில் தடை பண்ணக் கூடாதுனு ட்விட் செஞ்சு, முதல் ஆளா கருத்து சொன்னது நான்தான். 'விஸ்வரூபம்' படத்துக்கு ட்விட் பண்ணது உங்க கவனத்துக்கு வந்தது. 'தலைவா' படத்துக்கு ஆதரவாப் பேசினது உங்களை வந்து சேரலை. அதுக்கு நான் என்ன பண்றது?

இப்பவும் சொல்றேன், நாளைக்குப் படம் ரிலீஸ்னா, இன்னைக்கு வந்து 'நிறுத்துங்க'னு தடை போடாதீங்க. ஒரு தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் நஷ்டமும் பல பேரோட உழைப்பும் திருட்டு டி.வி.டி மூலமா திருடு போற கொடுமையும்தான் நடக்கும்!,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அனேகன் படப்பிடிப்பில், தனுஷிற்கு அறிவுரை சொன்ன நவரசநாயகன்

அனேகன் படப்பிடிப்பில், தனுஷிற்கு அறிவுரை சொன்ன நவரசநாயகன்

சென்னை: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அனேகன்'. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக அமிரா என்ற மும்பைப் பெண் அறிமுகமாகிறார்.

கல்பாத்தி எஸ்.அகோரம் வழங்கும் ‘ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. களவாணி, வாகை சூடவா, ஆரம்பம் படங்களில் பணியாற்றிய ஓம் பிரகாஷ், இந்த படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். கே.வி. ஆனந்தின் முந்தைய படங்களுக்கு பல ஹிட் பாடல்களை வழங்கிய ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திலும் இசையமைக்க உள்ளார்.

நெடுநாட்களுக்குப் பிறகு, இப்படத்தில் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். சமீபத்தில் இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப் பட்டன. கார்த்திக்குடன் நடித்த அனுபவம் குறித்து ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் தனுஷ்.

முதல்நாள் ஷூட்டிங்கில் கார்த்திக் இளமையான நடிப்பைப் பார்த்து அசந்து விட்டாராம் தனுஷ். கார்த்திக் பார்ப்பதற்கு கௌதமின் அப்பா போல் இல்லை, அண்ணன் போல் இருக்கிறார் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து, தனுஷிற்கு கார்த்திக் பின்வரும் அறிவுரை ஒன்றை வழங்கினாராம்.‘புத்திசாலித்தனமானவராக இருக்காதீர்கள், அப்படியும் நடிக்காதீர்கள். அப்படி இருந்தால் பார்ப்பவர்களுக்கு நீங்கள் போரடித்துப் போய் விடுவீர்கள்...' என தனது ட்வீட்டரில் கூறியிருக்கிறார் தனுஷ்.

 

2 நாட்களில் 2.1 மில்லியன் பேர் பார்த்த கோச்சடையான் டீசர்... இணையத்தில் புதிய சாதனை!

சென்னை: பொம்மை மாதிரி இருக்கு, கார்ட்டூன் ரஜினி, மொக்கை என்று ஒரு தரப்பினர் கமெண்ட் அடித்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2 நாட்களில் 2.1 மில்லியன் பேர் பார்த்த கோச்சடையான் டீசர்... இணையத்தில் புதிய சாதனை!  

கோச்சடையானுக்கு இப்போது வெளியாகியிருப்பது ட்ரைலர் அல்ல. படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் 30 செகன்ட் டீசர் மட்டும்தான்.

படத்தின் ட்ரைலர் இனிமேல்தான் வரவிருக்கிறது. இப்போது வெளியான டீசரே 21 லட்சம் பார்வையாளர்களை இந்த 48 மணி நேரத்துக்குள் சென்றடைந்திருக்கிறது. பிரமாண்ட ஹாலிவுட் படங்கள் கூட இத்தனை குறுகிய அவகாசத்தில் இவ்வளவு பார்வையாளர்களைச் சென்றடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு விமர்சனங்கள் இந்த டீசர் குறித்து கூறப்பட்டாலும், எப்படி இருக்கிறதென்று நாமும்தான் பார்ப்போமே என யுட்யூப் போய் பார்த்தவண்ணம் உள்ளனர் சினிமா விரும்பிகள்.

'5 நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை இந்த ட்ரைலர் சென்று சேரவேண்டும் என்பதை ரஜினி ரசிகர்கள் மனதில் கொள்ள வேண்டும்,' என சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இணைய பாவனையாளர்களிடையே ரஜினியின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு இது ஒரு குறியீடாகவும் பார்க்கப்படுகிறது.

{video}

 

மக்கள் விரும்பிக் கேட்டதால் இதயம் ஒரு கோயில.. பாடிய ராஜா!

கரூர்: கரூர் மக்கள் விரும்பிக் கேட்டதால் இதயம் ஒரு கோயில் பாடலைப் பாடி நெகிழ வைத்தார் இசைஞானி இளையராஜா.

கவிஞர் சினேகன் ஹீரோவாக நடிக்க, சினேகா, ஸ்ரேயா ஹீரோயின்களாக நடிக்க, புது இயக்குநர் அமுதேஸ்வர் இயக்கும் படம் ராஜராஜ சோழனின் போர்வாள்.

இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக மக்கள் முன்னிலையில் இந்தப் படத்துக்கு மெட்டமைக்க கரூருக்கு வந்தார் இளையராஜா. திருச்சியில் இருந்து கரூருக்கு காரில் படக்குழுவினருடன் வந்தார் அவர்.

மக்கள் விரும்பிக் கேட்டதால் இதயம் ஒரு கோயில்.. பாடிய ராஜா!

அவர் அருள்மிகு பசுபதீஸ்வரா சன்னதி முன்பு வந்த போது, கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் இளையராஜாவை பூ போட்டு வரவேற்றனர்.

அவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினர்.

பின்னர் படத்துக்காக ஒரு பாடலுக்கு மெட்டமைத்து, மக்கள் முன்னிலையிலேயே அதைப் பாடியும் காட்டினார். பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் ராஜாவிடம் ஒரு பாடல் பாடுமாறு கேட்டுக் கொண்டனர். உடனே கருவூரார் பற்றிய ஒரு பாடலை உருக்கமாகப் பாடினார்.

இதயக் கோயில் படத்தில் இடம்பெற்ற இதயம் ஒரு கோயில் பாடலைப் பாடுமாறு மீண்டும் கேட்டனர். உடனே சிரித்துக் கொண்டே, அந்தப் பாடலைப் பாட, மக்கள் கேட்டு ரசித்தனர்.

 

வாழ்நாளெல்லாம் நடிக்கும் எண்ணமில்லை: சொல்கிறார் இளம் நாயகி

சென்னை: ஒரு எழுத்து படம் மூலம் கோலிவுட் வந்த முன்னாள் நடிகையின் மகளுக்கு வாழ்நாள் முழுவதும் நடிகையாக இருக்க ஆசையில்லையாம்.

டோலிவுட்டில் அறிமுகமான அந்த முன்னாள் நடிகையின் உயர்ந்த மகள் ஒரு எழுத்து படம் மூலம் கோலிவுட் வந்தார். தெலுங்கு படம் ஊத்திக் கொண்டபோதும் தமிழில் அவர் நடித்த படம் ஹிட்டானது. இருப்பினும் அம்மணிக்கு ஏனோ தமிழகத்தில் மவுசு இல்லாமல் உள்ளது.

அடுத்ததாக தனது தாயின் குருவின் படத்தில் நடித்தார். அந்த படம் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் என்று நம்பினார். பாவம் படம் பப்படமாகிவிட்டது. அவருக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையாம். மேலும் நடிப்பு தான் வாழ்வாதாரம் என்றும் கூறிவிட முடியாது என்கிறார் அவர்.

அதனால் வாழ்நாள் முழுவதும் நடிகையாகவே இருக்கும் எண்ணமில்லையாம். அதற்காக நடிப்புக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்றும் எடுத்துக்கொள்ளக் கூடாதாம். நடிக்கும் வரை முழு ஈடுபாட்டோடு நடிப்பாராம்.

 

என்னது... தற்கொலைக்கு முயற்சித்தேனா.. அதெல்லாம் சும்மா! - சிந்து மேனன்

நடிகை சிந்துமேனன் தற்கொலைக்கு முயன்றதாக அவரது படத்துடன் பரபரப்பு செய்தி வெளியானது. தூக்க மாத்திரையை தின்று சாக துணிந்தார் என்றும் கூறப்பட்டது.

தமிழில் 'சமுத்திரம்', யூத், 'கடல் பூக்கள்', 'ஈரம்' படங்களில் நடித்தவர் சிந்து மேனன். தெலுங்கு மலையாள மொழிகளிலும் நடித்துள்ளார்.

என்னது... தற்கொலைக்கு முயற்சித்தேனா.. அதெல்லாம் சும்மா! - சிந்து மேனன்

சிந்து மேனனுக்கும் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ் இளைஞர் பிரபுவுக்கும் கடந்த 2010-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் சுபத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில்தான் அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் படத்துடன் சிலர் செய்தி வெளியிட்டனர்.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வெளியான செய்திக்கு சிந்துமேனன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘நான் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி அடிப்படை ஆதாரமற்றது. நான் லண்டனில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்,' என்றார்.

 

பவர் ஸ்டாரை வைத்து படம் எடுப்பதற்கு பதில் தற்கொலை செஞ்சுக்குவேன்: அமுதன்

பவர் ஸ்டாரை வைத்து படம் எடுப்பதற்கு பதில் தற்கொலை செஞ்சுக்குவேன்: அமுதன்

சென்னை: பவர் ஸ்டாரை வைத்து படம் எடுப்பதற்கு பதில் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று ரெண்டாவது படம் இயக்குனர் சி.எஸ். அமுதன் தெரிவித்துள்ளார்.

மிர்ச்சி சிவாவை வைத்து தமிழ்ப் படம் எடுத்து தமிழ்நாட்டையே கலக்கியவர் இயக்குனர் சி.எஸ். அமுதன். அவர் தற்போது விமல், ரம்யா நம்பீசன், ரிச்சர்ட், அரவிந்த் ஆகாஷ் ஆகியோரை வைத்து காமெடி படம் ஒன்றை எடுத்து வருகிறார். இது அமுதனின் இரண்டாவது படம் என்பதால் படத்தின் தலைப்பையும் ரெண்டாவது படம் என்றே வைத்துவிட்டார்.

இந்நிலையில் அமுதனிடம் ஒரு முன்னணி பத்திரிக்கை ஒன்று பவர் ஸ்டாரைப் பற்றி ஒரு கேள்வி கேட்டுள்ளது. அதாவது, பவர் ஸ்டார் உங்களை கடத்திச் சென்று வைத்துக் கொண்டு தன்னை வைத்து படம் எடுக்குமாறு மிரட்டினால் என்ன செய்வீர்கள் என்று அமுதனிடம் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர், வேறு வழியே இல்லை, தற்கொலை செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

 

ஹாரிபாட்டரின் ‘டோப்பி’: ரஷ்ய அதிபரை சித்தரிக்கிறதா? வழக்குத் தொடரும் வக்கீல்கள்

ஹாரி பாட்டர் சினிமாவில் வரும் ‘டோப்பி' என்ற கதாபாத்திரம் ரஷ்ய அதிபர் புடினை சித்தரிப்பதாக கூறி வழக்கறிஞர்கள் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

‘ஹாரி பாட்டர்' என்ற கதை பல பாகங்களாக சினிமா படமாக எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் அமோகமாக ஓடி வசூல் சாதனை படைத்தது. அதில், ‘டோப்பி' என்ற ஒரு கதாபாத்திரம் உள்ளது.

ஹாரிபாட்டரின் ‘டோப்பி’: ரஷ்ய அதிபரை சித்தரிக்கிறதா? வழக்குத் தொடரும் வக்கீல்கள்

வழுக்கை தலை, கூர்மையான மூக்கு, மின்னும் கண்கள், தளர்ந்து தொங்குகிற பெரிய காதுகள் என அவற்றின் உடல் உறுப்புகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அந்த உருவம் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ளதாக வக்கீல்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த கதாபாத்திரம் குறித்து எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் புடின் போலவே உள்ளதாக பலரும் கூறியுள்ளனர். எனவே ‘ஹாரிபாட்டர்' சினிமா படங்களை ‘வார்னர் பிரதர்ஸ்' நிறுவனம் விலைக்கு வாங்கி வினியோகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.