இயக்குநர் பாக்யராஜ் வீட்ல விசேஷங்க..!

இயக்குநர் -நடிகர் பாக்யராஜ் மகனும், பிரபல நடிகருமான சாந்தனுவுக்கும், டிவி தொகுப்பாளினி கீர்த்திக்கும் வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி திருமணம் நடக்கிறது.

இதுகுறித்து இன்று மீடியாவுக்கு தன் கைப்பட பாக்யராஜ் எழுதியுள்ள கடிதம்:

அன்பு பத்திரிகையாளர்கள நண்பர்களுக்கு, பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதியரின் பணிவான வணக்கம்.

Director Bagyaraj's son to wed TV anchor Keerthi`

ஒரு இனிய நற்செய்தி. எங்க 'வீட்ல விசேஷங்க'. ஆம்! எங்கள் புதல்வன் சாந்தனு என்கிற சோனுவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது.

எங்கள் பெண் சரண்யா, சற்றுப் பொறுத்து திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறிவிட்டதால், வீட்டில் முதல் திருமணம் சாந்தனுவுக்கு நடக்கவுள்ளது.

பெண்ணின் வீட்டாரும் நமது கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. பிரபல நடனக் கலைஞர் ஜெயந்தி - விஜயகுமார் தம்பதிகளின் கீர்த்தியே மணமகள்.

ஆகஸ்ட் 21-ம் நாள் கோவிலில் திருமணமும், 22-ம் நாள் மாலை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வும் நடைபெற உள்ளது.

விரைவில் அழைப்பிதழுடன் முறைப்படி அனைவரையும் அழைக்க உள்ளோம்."

 

16 வயதினிலே நாயகனுக்கு 36 வயதினிலே நாயகி சவால்!

சென்னை: உத்தமவில்லன் திரைப்படம் ரிலீசாகும் அன்று ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கிய வைராஜா வை திரைப்படம் வெளியாகிறது. அடுத்த வாரமே, ஜோதிகா நடிப்பில் 36 வயதினிலே படமும் ரிலீஸ் ஆகிறது.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய திரைப்படம் 16 வயதினிலே. அப்படத்தின் நாயகன் கமல்ஹாசன், நடித்து, ரமேஷ் அரவிந்த் இயயக்கத்தில் மே 1ம் தேதி ரிலீசாக போகும் படம் உத்தம வில்லன்.

16 வயதினிலே நாயகனுக்கு 36 வயதினிலே நாயகி சவால்!

இந்த படத்துக்கு போட்டியாக அதே நாளில் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், கவுதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை திரைப்படம் வெளியாகிறது. அதற்கு அடுத்தவாரம், அதாவது மே 8ம்தேதி ஜோதிகாவின் மறு பிரவேச படமான 36வயதினிலே ரிலீஸ் ஆகிறது.

கமல் படத்துக்கு, ஜோதிகா படம்தான் டஃப் ஃபைட் தரும் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கின்றனர். 16 வயது நாயகனுக்கு 36 வயதினிலே போட்டியாக மாறப்போகிறது. இதில் யார் ஜெயிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

பிரபாகரனின் தம்பிகள் நாங்கள், தப்பாகப் படமெடுப்போமா? - 'கங்காரு' சுரேஷ் காமாட்சி

உலகுக்கே கலாச்சாரம் கற்றுத் தந்த தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரனின் தம்பிகள் நாங்கள். எப்படிப் படமெடுக்க வேண்டும் என்று யாரும் எங்களுக்கு சொல்லித் தரத் தேவையில்லை. கங்காரு படத்தைப் பார்க்காமலே கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களை என்னவென்று சொல்வது, என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

கங்காரு படத்துக்கு தடைகோரி ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் படத்தை இயக்கிய சாமி, இதற்கு முன்பு சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியிருப்பதால், இந்தப் படமும் அந்த மாதிரிதான் இருக்கும் என்று யூகத்தின் அடிப்படையில் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பிரபாகரனின் தம்பிகள் நாங்கள், தப்பாகப் படமெடுப்போமா? - 'கங்காரு' சுரேஷ் காமாட்சி

அந்த வழக்கு விசாரிக்க உகந்ததுதானா என்பதை முடிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படமும் இன்று வெளியாகிவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒரு படத்தைப் பார்க்காமலேயே, அதன் கதை, காட்சிகள் என்னவென்று தெரியாமலேயே படத்துக்குத் தடை கோரும் போக்கு இன்று அதிகரித்துவருகிறது. என் கங்காரு படத்துக்கு எதிராகவும் அப்படி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கங்காரு படம் அண்ணன் தங்கைப் பாசத்தை புதிய பரிமாணத்தில் சொல்லியிருக்கும் படம். துளி கூட ஆபாசமற்ற, சுத்தமான படம் என்று தணிக்கைக் குழுவால் யு சான்றளிக்கப்பட்ட படம்.

பிரபாகரனின் தம்பிகள் நாங்கள், தப்பாகப் படமெடுப்போமா? - 'கங்காரு' சுரேஷ் காமாட்சி

படத்தைப் பார்த்த அத்தனைப் பேரும் பாராட்டுகிறார்கள். ஆனால் படத்தையே பார்க்காமல், இவர்களாக ஒரு கருத்தை கற்பனை செய்து கொண்டு படத்துக்கு தடை கேட்கிறார்கள். இது என்ன வகை நியாயம்?

உறவின் பெருமையையும் மேன்மையையும் சொல்லும் படம்தான் இந்த கங்காரு.

உலகுக்கே கலாச்சாரத்தைக் கற்றுத் தந்தது தமிழினம். அந்த தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரனின் தம்பிகள் நாங்கள். எப்படி திரைப்படம் எடுக்க வேண்டும் என எங்களுக்கு யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. பிரபாகரனின் தம்பிகளால் கலையுலகம் தலை நிமிருமே தவிர, இம்மியளவு தலைகுனிவு கூட ஒருநாளும் நேராது!

-இவ்வாறு அந்த அறிக்கையில் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

 

விவேக்கை காப்பியடித்துப் பேசினேன்! - சிவகார்த்திகேயன்

மான் கராத்தே படத்தில் வரும் வசனம் ஒன்றை விவேக்கை காப்பியடித்துதான் நான் பேசினேன் என்றார் சிவகார்த்திகேயன்.

நேற்று நடந்த பாலக்காட்டு மாதவன் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றுப் பேசியதாவது:

"விவேக் சாருக்கு நான் பள்ளி பருவத்திலிருந்து பரம ரசிகன். அவர் படம் பார்த்து வளர்ந்தவன் நான். அவரது காமெடிக் காட்சிகளை ஒன்று விடாமல் வீட்டில் போட்டுப் பார்ப்பேன். விவாதம் எல்லாம் வரும். அப்போது அவர் ஒரு காட்சியிலாவது கடவுள் இல்லை என்று கூறியிருக்கிறாரா இல்லையே என்பேன்.

விவேக்கை காப்பியடித்துப் பேசினேன்! - சிவகார்த்திகேயன்

அவரது பாதிப்பு நிச்சயம் எனக்குள் இருக்கும். அது தவிர்க்க முடியாதது. அந்த அளவுக்கு என்னைப் பாதித்தவர் அவர்.

அவரது சீர்திருத்தக் கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. அவரைப் போலவே எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் மூட நம்பிக்கை இல்லை.

விவேக்கை காப்பியடித்துப் பேசினேன்! - சிவகார்த்திகேயன்

கல்லூரிக் காலங்களில் மாணவிகள் அவரை ஒரு கதாநாயகன் போலப் பார்ப்பார்கள். அவர் மீது அவ்வளவு அபிமானம் வைத்து இருப்பார்கள். 'குஷி' படத்தில் அவர் ஓபனிங் காட்சியில் வந்த போது கைதட்டினார்கள். திருச்சி ராஜா கலையரங்கத்தில் 1350 பேரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். அப்போது அதில் நானும் ஒருவன்.

எப்படியும் என் காமெடிக் காட்சிகளில் அவரது பாதிப்பு நிச்சயம் இருக்கும். உள்ளுக்குள் அதுதானே இருக்கிறது. மான் கராத்தே' படத்தில் வரும் அந்த 'ரத்தி அக்னி ஹோத்ரி' டின் பீர் வசனம் எல்லாம் பாராட்டப்படுகிறது. ஆனால் அது எப்போதோ அவர் பேசியதை நான் காப்பியடித்ததுதான். அவர் விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.

 

கத்தி காயம் முதல் கல்யாணம்வரை.. ஆதர்ஷ தம்பதி அஜித்-ஷாலினிக்கு இன்று 15வது திருமண நாள்!

சென்னை: நடிகர் அஜித் வாழ்க்கையில் இப்போது அத்தனையும் சந்தோஷம்தான். மகன் பிறப்பு, மகனுக்கு பெயர் சூட்டுதல் என்று அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளுக்கு நடுவே, இதோ, இன்று தனது 15வது திருமண நாளில் காலடி எடுத்து வைத்துள்ளார் இந்த காதல் மன்னன்.

"மனம் விரும்பும் காதலியே, மனைவியாக வரும்போது, வாழ்க்கை இன்ப வரமாகும்" என்ற 'இளைய தளபதி' நடிகரின் திரைப்படப் பாடல் வரிகள், இந்த 'தல' நடிகருக்கு மிக பொருந்தும்.

அமர்க்களம் படத்தில் ஷாலியுடன் பழகும்போது மலர்ந்த காதல், இன்றுவரை அமர்க்களமாகவே போய்க் கொண்டுள்ளது. சினிமா வட்டாரத்தில் ஆதர்ஷ தம்பதிகள் என்று பெயரெடுத்த ஒரு சிலருக்கான பட்டியலில், இந்த தம்பதிகளும் இடம் உண்டு.

கத்தி காயம் முதல் கல்யாணம்வரை.. ஆதர்ஷ தம்பதி அஜித்-ஷாலினிக்கு இன்று 15வது திருமண நாள்!

"நான் ஒரு காட்டாறு மாதிரியான மனிதன். எதையோ தேடி அருவியாக விழுந்து, பாறைகளில் மோதி, தேவை இல்லாமல் பல விஷயங்களைச் சுமந்து கொண்டு இருக்கிறேன். இப்போதான் எனக்கான கடலை தேடிக் கண்டுபிடித்துச் சங்கமம் ஆகிறேன். இந்த கடல் என்னைக் கட்டுப்படுத்தவும், சாந்தப்படுத்தவும் உறுதுணையாக இருக்க ஆசைப்படுகிறேன்" என்று ஷாலினி குறித்த தனது காதல் பற்றி முன்பொருமுறை பேட்டியளித்தார் அஜித்.

எத்தனை தீர்க்க தரிசனமான வார்த்தைகள். காட்டாறுபோல பாய்ந்து, மனதில் பட்டதை பேசியதால், அவரை வீழ்த்த காத்திருந்தவர்கள் கிளப்பிய சர்ச்சைகள்தான் எத்தனை..ஆனால், ஷாலினி என்ற ஒரு பக்குவப்பட்ட பெண்மணி அஜித்தின் வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு, அந்த காட்டாறு சமுத்திரத்தின் உள்ளே கலந்து, ஆழ்கடலின் அமைதியை தந்துகொண்டுள்ளது. இன்று, அவர் ஏதாவது பேசமாட்டாரா, எந்த தொலைக்காட்சியாலாவது தோன்ற மாட்டாரா என்று ரசிகர்கள் மட்டுமின்றி, அவரை வீழ்த்த வாய்ப்பு தேடியவர்களும், வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறார்களே. அது ஷாலினி என்ற மூன்றெழுத்து மந்திரத்தால் அல்லவா சாத்தியமாயிற்று.

தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக தமிழக மக்களால் பார்க்கப்படும், ஷாலினியை திருமணம் செய்ததன் மூலம், 'நான் தமிழ்நாட்டு மருமகன்' என்றார் அஜித். ஆனால், இன்று தமிழ் ரசிகர்களோ அவரை 'தல'மகனாக்கி, தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். அத்தனை, அஜித் ரசிகர்களுக்கும் ஷாலினி இன்று, அன்னைக்கு சமமான அண்ணியாகிவிட்டார்.

அமர்க்களம் பட சூட்டிங்கில், ஷாலினி கையில் கத்தி பட்டு ரத்தம் வந்த நிலையில், பதறிப்போய், துடிதுடித்து, ஒரு மருத்துவ குழுவையே ஸ்பாட்டுக்கு வரவைத்தார் அஜித். அடுத்தவருக்கு ஒன்றென்றால், தனக்கு வந்த துன்பம் போல பதறும் நல்ல மனிதராக இருக்கிறாரே என்று நினைத்து இதயம் இளகியது ஷாலினிக்கு.. ஆனால் கத்தி காயத்தை பற்றி கொஞ்சம் கூட கவலையின்றி 'ஜஸ்ட் லைக் தட்' என்று எடுத்துக்கொண்ட ஷாலினியை பார்த்து, அஜித்துக்கு ஒரு ஆர்வம் பற்றிக் கொண்டது. அதுதான் காதல் விதை விழுந்த இடம்.

ஒருவர் பதறுபவர், மற்றொருவர் பக்குவப்பட்டவர். இரு துருவங்களுக்குள் ஈர்ப்பு வருவது இயல்புதானே. ஒருவர் மிருதங்கமும், இன்னொருவர் வீணையும் வாசித்தால்தானே கச்சேரி களைகட்டும். அப்படித்தான், தற்போது அஜித் வாழ்வில் கச்சேரி களைகட்டிக் கொண்டுள்ளது. இப்போதுதான் திருமணம் செய்ததை போல இருந்தது.... இன்றோடு 15வது ஆண்டு திருமண நாளில் ஆதர்ஷ அஜித் தம்பதி காலடி எடுத்து வைத்துள்ளது.

அனௌஷ்கா, ஆத்விக்.. பெண்-ஆண் என இரு குழந்தைகள் இந்த திருமணத்தின் பொக்கிஷ பரிசுகள். வழக்கம்போல, ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் தங்கள் நாயகனை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அதேபோன்ற வழக்கத்துடன், அமைதியாக ரசித்துக்கொண்டுள்ளார் இந்த ஆசை நாயகன்.

 

கொலவெறிக்கு முதல் வாழ்த்து சொன்னவரே விவேக்தான்! - அனிருத்

எனது கொலை வெறி.. பாடலுக்கு முதல் வாழ்த்துச் சொன்னவரே நடிகர் விவேக்தான் என்றார் இசையமைப்பாளர் அனிருத்.

விவேக் நாயகனாக நடித்த பாலக்காட்டு மாதவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று, முதல் சிடியைப் பெற்றுக் கொண்ட அனிருத் பேசுகையில், "நான் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். அதற்கு காரணங்கள் இரண்டு உண்டு. முதலில் அந்தப் பாடல் பிடித்திருந்தது. இரண்டாவது விவேக் சார் எனக்குப் பிடித்தவர்.

கொலவெறிக்கு முதல் வாழ்த்து சொன்னவரே விவேக்தான்! - அனிருத்

நான் முதலில் இசையமைத்த கொலவெறி பாடலுக்கு யார் யாரோ பாராட்டினார்கள். அமிதாப் முதல் பிரதமர் வரை அந்தப் பாடல் சென்றடைந்தது.

ஆனால் திரையுலகிலிருந்து முதலில் வந்த வாழ்த்து விவேக் சாரிடமிருந்துதான். அதுவும் ஒரு டிவி நிகழ்ச்சியிலிருந்தபடி எனக்கு போன் செய்து பாராட்டினார். அதை நான் என்றுமே மறக்க மாட்டேன். அந்த அன்புக்காகத்தான் இன்று இங்கு வந்திருக்கிறேன்," என்றார்.

 

ஷங்கர்-விஜய் கூட்டணியை முறிந்த ஒரு போன் கால்!

சென்னை: விஜய் நடிக்க வேண்டிய திரைப்படத்தை ரஜினிகாந்த்தின் ஒரு போன் கால் பறித்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம் நண்பன். இது ஹிந்தி திரைப்படமான 3இடியட்ஸ் ரீமேக்காகும். எனவே ஷங்கரின் நேரடி இயக்கத்தில், ஒரு படத்தில் நடிக்க விஜய் விரும்பினார். இதற்காக ஷங்கரும் ஸ்க்ரிப்ட் தயார் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

Did Rajinikanth phone call snatc away a Movie from Vijay?

இந்த படத்தில் வில்லன் வேடத்தில் விக்ரமை நடிக்க வைக்கலாம் என்று ஷங்கர் திட்டமிட்டிருந்தாராம். ஆனால், லிங்கா திரைப்படம் சரியாக போகாத நிலையில், மீண்டும் ஷங்கருடன் மாஸ் கூட்டணி வைக்க திட்டமிட்ட ரஜினிகாந்த், போன் மூலம் ஷங்கருக்கு தகவல் கூறியுள்ளார்.

இதையடுத்து தனது பிளானை மாற்றிய ஷங்கர், ரஜினி இமேஜுக்கு தக்கபடி திரைக்கதையை மாற்றியதாக கூறப்படுகிறது. எனவே இப்படத்தில், கமலை வில்லனாக நடிக்க கேட்டுள்ளார் ஷங்கர். ஆனால், அவர் மறுக்கவே, மீண்டும் தனது பழைய பிளான்படி விக்ரமை வில்லன் கேரக்டரில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.

 

ஓவரா ஆடுறானே... ‘ஒல்லி பெல்லி’ மீது கெட்ட கோபத்தில் "இனிஷியல்"!

சென்னை: தமிழில் இருந்து சென்று பாலிவுட்டில் வெற்றிகளைக் கொடுத்து வருகிறார்கள் ஆட்ட இயக்குநரும், இன்ஷியல் இயக்குநரும்.

தமிழில் வெளியான் சைலண்ட் சாமியார் படத்தைத் தற்போது சூப்பரின் நாயகியை வைத்து இந்தியில் இயக்கி வருகிறார் இன்ஷியல் இயக்குநர். இந்தப் படவேலையில் அடிக்கடி தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறாராம் ஆட்ட இயக்குநர்.

ஓவரா ஆடுறானே... ‘ஒல்லி பெல்லி’ மீது கெட்ட கோபத்தில்

சமீபகாலமாக சூப்பர் நாயகியும், ஆட்ட இயக்குநரும் விடிய விடிய பேசிக் கொள்கிறார்கள், எனவே இருவரும் காதலில் விழுந்திருக்கலாம் என்ற பேச்சு பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் தீயாய் பரவிக் கிடக்கிறது.

தற்போது அந்த உரிமையில் தான் ஆட்ட இயக்குநர் சூப்பர் நாயகியின் படத்தில் தலையிடுகிறார் எனக் கூறப்படுகிறது. ஆனால், ஆட்டத்தின் இந்த ஆட்டத்தை இன்ஷியலால் பொருத்துக் கொள்ள முடியவில்லையாம்.

இதனால், ஆட்ட இயக்குநரின் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் இன்ஷியல்.

 

6 ஆயிரம் கோடிக்கு மேல் குவித்த பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 7.. அடுத்த பாகம் ஆரம்பமாகிறது!

பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 7' வசூலில் புதிய சாதனைப் படைத்து வருகிறது.

உலகமெங்கும் இந்தப் படம் ரூ 6 ஆயிரத்து 329 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், தற்போது அதன் தொடர்ச்சியாக ‘பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 8' வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6 ஆயிரம் கோடிக்கு மேல் குவித்த பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 7.. அடுத்த பாகம் ஆரம்பமாகிறது!

யுனிவர்சல் ஸ்டூடியோஸ், அமெரிக்காவின் லாஸ் வேகாசில் உள்ள ‘சீசர்' அரண்மனையில் ‘சினிமா கான் 2015' என்ற விழாவினை நேற்று ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கலந்து கொண்ட நடிகர் ‘வின் டீசல்' இதுவரை நீங்கள் பார்த்திருக்காத வகையில் சிறப்பான ஒரு படத்தைக் கொடுக்க போகிறோம் என்று தொடங்கி பலத்த கைதட்டல்களுக்கிடையில் பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தின் 8 வது பாகம் வெளியாகுமென்று அறிவித்தார்.

2017-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ரிலீசாகும் என்று ரிலீஸ் தேதியையும் விழா மேடையிலேயே அறிவித்துள்ளார்.

முன்னதாக இந்த ஏழாவது பாகம்தான் கடைசி என்று அறிவித்திருந்தனர். இப்போது அடுத்தடுத்த பாகங்கள் தொடரும் என்ற அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

விக்ரம் பிரபு படத்துக்கு ரஜினி படத் தலைப்பு.. இளையராஜா இசை!

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்துக்கு ரஜினி நடித்த படமான தனிக்காட்டு ராஜா தலைப்பைச் சூட்டியுள்ளனர்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் ரஜினி நடித்த படம் தனிக்காட்டு ராஜா. டி ராமாநாயுடு தயாரிப்பில், ரஜினி, ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்தார். படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

விக்ரம் பிரபு படத்துக்கு ரஜினி படத் தலைப்பு.. இளையராஜா இசை!

'வெள்ளக்கார துரை' படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்' படத்திலும், ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் ‘வாகா' படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப் படங்களை அடுத்து புதிதாக ஒரு படத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ‘மஞ்சப்பை' நவீன் ராகவன் இயக்கவிருக்கிறார். பொழுதுபோக்கு படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

விரைவில் தொடங்கவுள்ள இப்படத்திற்கு ‘தனிகாட்டு ராஜா' என பெயர் வைத்துள்ளனர். 1982-ல் வெளியான அந்தப் படத்திற்கும் இளையராஜாதான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அற்பனுக்கும் கையில் மௌஸ் கிடைத்தால், அவன் பிடிக்கத்தான் செய்வான்! - கமல்

சுஹாசினியின் மவுஸ் பேச்சுக்கான எதிர்வினை இப்போதைக்கு முடியாது போலிருக்கிறது.

ஓ காதல் கண்மணி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றபோதி, சுஹாசினி, "எப்படி தகுதியுள்ளவர்கள்தான் படத்தில் நடிக்க முடியுமோ, ஒளிப்பதிவு பண்ண முடியுமோ, ரஹ்மான் மாதிரி மியூசிக் தெரிஞ்சவங்கதான் மியூசிக் பண்ண முடியுமோ அதேமாதிரி எழுதத் தெரிஞ்சவங்கதான் விமரிசனம் எழுதணும். இப்போ கம்ப்யூட்டர் உலகத்துல, மவுஸ் மூவ் பண்ணத் தெரிஞ்சவங்க எல்லாம் எழுத்தாளராயிட்டாங்க," என்றார். சுஹாசினியின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அற்பனுக்கும் கையில் மௌஸ் கிடைத்தால், அவன் பிடிக்கத்தான் செய்வான்! - கமல்

இந்நிலையில், சுஹாசினியின் கருத்து குறித்து வார இதழ் ஒன்றுக்கு கமல் பதிலளித்துள்ளார். "மௌஸ் பிடிக்கிறவங்க எல்லாரும் விமர்சனம் பண்றாங்க. தகுதி உள்ளவங்கதான் விமர்சனம் பண்ணணும்' என்று சுஹாசினி சொல்லி இருக்காங்களே என்று கமலிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:

"அப்போ டிக்கெட் போட்டு அத்தனை பேருக்கும் கொடுக்காதீங்க. அற்பனுக்கும் கையில் மௌஸ் கிடைத்தால், அவன் பிடிக்கத்தான் செய்வான். ஏன்னா, மௌஸ் அவனுடையது. குடை அவனுடையது போல. அதை ஒண்ணும் பண்ண முடியாது. விமர்சனத்தைத் தடுக்கவும் கூடாது. சுஹாசினியுடைய கருத்தை தவறு எனச் சொல்லவில்லை. அதுவும் ஒரு கருத்து. அவ்வளவுதான்!'' என்று கூறியிருக்கிறார்.

 

ஐஸ்வர்யா தனுஷை கவர்ந்த கொக்கு குமாரு!

சென்னை: வை ராஜா வை படத்தில் தனுஷ் கொக்கி குமாராக நடித்துள்ளது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.

3 படம் மூலம் இயக்குனர் ஆனவர் ஐஸ்வர்யா தனுஷ். தற்போது வை ராஜா வை படம் மூலம் மீண்டும் நம்மை சந்திக்க வருகிறார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி நடித்துள்ள வை ராஜா வை படம் வரும் மே 1ம் தேதி ரிலீஸாகிறது.

எனக்கு பிடித்த கொக்கு குமாரு: மனம் திறக்கும் ஐஸ்வர்யா தனுஷ்

இந்நிலையில் படம் பற்றி ஐஸ்வர்யா கூறுகையில்,

வை ராஜா வை என் முதல் படமான 3ல் இருந்து வித்தியாசமானது. 3 படம் காதலை மையமாக வைத்து சீரியஸானது. ஆனால் இது ஜாலியான கமர்ஷியல் படம். இந்த படத்தில் தனுஷ் கௌரவத் தோற்றத்தில் கொக்கி குமாராக வருகிறார். அவர் நடித்த கதாபாத்திரங்களில் எனக்கு பிடித்தவற்றில் கொக்கி குமாரும் ஒன்று.

எனக்கு பிடித்த கொக்கு குமாரு: மனம் திறக்கும் ஐஸ்வர்யா தனுஷ்

அத்தகைய கொக்கி குமாரு கதாபாத்திரத்தை மீண்டும் திரையில் கொண்டு வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. வை ராஜா வை படத்தை தெலுங்கில் டப் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.

 

இந்திக்குப் போகிறது காஞ்சனா 2!!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் படம் 'காஞ்சனா 2' இந்தியிலும் வெளியாகவிருக்கிறது.

சமீபத்தில் வெளியான காஞ்சனா 2-க்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 7 வயது சிறுமி முதல் 70 வயதான பாட்டி தோற்றம் வரை பல்வேறு கெட்டப்புகளில் நடித்த லாரன்ஸூக்கு பாராட்டுகள் குவிகின்றன.

இந்திக்குப் போகிறது காஞ்சனா 2!!

மேலும் முனி - 3 (காஞ்சனா 2) படத்தின் மாபெரும் வசூல் சாதனை இந்தியா முழுக்க எதிரொலிக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், லாரன்ஸை மாஸ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்திய நாகர்ஜுனா மற்றும் வெங்கடேஷ், ராணா மற்றும் பிரபல நட்சத்திரங்கள் லாரன்ஸூக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கிறார்கள்.

படம் தெலுங்கில் இம்மாதம் 24 ஆம் தேதி (நாளை) பலத்த எதிர்பார்ப்புடன் படம் வெளியாகிறது. மேலும் இதே படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

பைரேட்ஸ் ஆப் கரீபியன்... ஜாக் ஸ்பேராவின் முதல் பார்வை டீசர் வெளியீடு!

பைரேட்ஸ் ஆப் கரீபியன் படத்தில் நடிக்கும் புகழ்பெற்ற ஜாக் ஸ்பேரோவின் முதல் தோற்றப் படம் இன்று வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் 'பைரேட்ஸ் ஆப் கரீபியன் - டெட் மென் டெல் நோ டேல்ஸ்'.

இந்தப் படத்தின் கதாநாயகனான கேப்டன் ஜாக் ஸ்பேரோவின் தோற்றம், ஸ்டைல் அனைத்தும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுபவை.

பைரேட்ஸ் ஆப் கரீபியன்... ஜாக் ஸ்பேராவின் முதல் பார்வை டீசர் வெளியீடு!

கேப்டன் ஜாக்காக, சற்றே கிறுக்குத்தனம் கொண்டவராக நடித்தவர் ஹாலிவுட் நடிகர் ஜானி டேப். மிகவும் சாதாரண நடிகராக இருந்த அவர், பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் தொடர் படங்களில் நடித்த பிறகு புகழின் உச்சத்துக்குப் போய்விட்டார்.

இதுவரை 4 பாகங்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தின் 5-வது பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தின் முதல் புகைப்படத்தை அதன் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பேரோவை, இருவர் பெரிய கயிற்றால் கட்டியப்படி இருக்க, அவர் தனது வழக்கமான குறும்பு பார்வையுடன் உள்ளார்.

இப்படம் இந்த ஆண்டு கோடையில் வெளியாகவிருக்கிறது.