பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும்- டாப்ஸி வலியுறுத்தல்

சென்னை: நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த மிகக் கடுமையான தண்டனை மட்டுமே ஒரே தீர்வு என்று கூறியுள்ளார் நடிகை டாப்ஸி.

நாடு முழுக்க அன்றாடம் நிகழ்ந்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து கோபமடைந்துள்ள டாப்சி, இதுகுறித்து கூறுகையில், "பாலியல் பலாத்கார குற்றங்கள் தினசரி அதிகரித்து வருவது வேதனையைத் தருகிறது. சிறுமிகளை பெரும்பாலும் குறிவைக்கிறார்கள் இந்த கொடூர மனம் படைத்தவர்கள்.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும்- டாப்ஸி வலியுறுத்தல்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

நீதிமன்றத்தில் இவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் தாமதமானால் மேலும் இதுபோன்ற வன்முறைகள் அதிகரிக்கவே செய்யும்.

நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை விரைவாக விசாரணைகளை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். அதிகமான அபராதமும் விதிக்க வேண்டும். அப்போது தான் சமூகத்தில் கற்பழிப்பு குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்.

தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் தருகிறது," என்றார்.

 

பெங்களூருவில் கத்தி படத்தை திரையிட விடாமல் தடுத்த கன்னட அமைப்பினர்

பெங்களூரு: கன்னட ராஜ்யோத்சவா தினத்தன்று பெங்களூரு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருந்த கத்தி, நியூ இயர் போன்ற பிற மொழி படங்களை கன்னட அமைப்பினர் பாதியிலே நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1ம்தேதி கர்நாடக மாநிலம் உதயமான ராஜ்யோத்சவா தினம் கொண்டாடப்பட்டது. அன்றையதினம் கர்நாடக ரக்ஷனவேதிகே என்ற கன்னட அமைப்பினர் பெங்களூருவிலுள்ள சில மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்குள் புகுந்து, அங்கு ஓடிக்கொண்டிருந்த கன்னட மொழி அல்லாத படங்களை இடையிலேயே நிறுத்தி ரசிகர்களை வெளியே கிளம்புமாறு கூறினர்.

பெங்களூருவில் கத்தி படத்தை திரையிட விடாமல் தடுத்த கன்னட அமைப்பினர்

ஏனெனில் ராஜ்யோத்சவா தினத்தன்று எங்கும், எதிலும் கன்னடம் மட்டுமே பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பது கன்னட அமைப்புகளின் கோரிக்கையாகும். எப்.எம்.களிலும் வேறு மொழி பாடல்களை ஒலிபரப்ப அவர்கள் விடவில்லை.

பிரவீன் ஷெட்டி தலைமையிலான கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பினர் ராஜாஜிநகரிலுள்ள பிவிஆர் சினிமாஸ், கன்னிங்காம் ரோட்டிலுள்ள சிக்மா மால் மற்றும் மக்ராத் ரோட்டிலுள்ள கருடா மால் ஆகியவற்றுக்குள் சென்று அங்கு ஓடிய படங்களை நிறுத்தினர். சிக்மா மாலில், கத்தி திரைப்படத்தையும், பிவிஆர் சினிமாசில் ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் படத்தையும் இவர்கள் நிறுத்தி ரசிகர்களை வெளியேற கூறினர்.

இதையடுத்து பட கட்டணத்தை தியேட்டர் நிர்வாகங்கள் திருப்பிக் கொடுத்தன. கர்நாடக ரக்ஷனவேதிகே நிர்வாகி ஒருவர் கூறுகையில், நவம்பர் மாதம் முழுவதுமே கர்நாடக திரையரங்குகளில் கன்னட படங்களை மட்டுமே திரையிட வேண்டும் என்றார்.

 

அஜீத்துக்கு வந்த "ஷகீலா" சிக்கல்.. பேஸ்புக்கில் கிளப்பி விட்டுட்டாங்கப்பா!

சென்னை: நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு கடந்த வாரம் அஜீத்தின் 55வது படத்தின் டைட்டில், ‘என்னை அறிந்தால்' என அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர்

கௌதம்மேனம் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் இப்படத்தில் த்ரிஷா, அனுஷ்கா என இரண்டு நாயகிகள். அஜீத்தின் 55வது படம் இது என்பதால் இதுவரை இப்படத்தை தல 55 என்றே குறிப்பிட்டு வந்தனர்.

கடந்த வாரம் தான் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. என்னை அறிந்தால் என்ற தலைப்பு வெளியிடப்பட்ட சில நொடிகளிலேயே சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

அஜீத்துக்கு வந்த

ஷகிலா படம்...

இந்நிலையில், இப்படத் தலைப்பு ஷகிலா நடிப்பில் வெளியான படத்தின் தலைப்பு என பேஸ்புக்கில் சிலர் கிளப்பி விட்டுள்ளனர்.

ஏ படம்...

இப்படத்தில் கவர்ச்சி நடிகை ஷகீலாவுடன், ரேஷ்மாவும் இணைந்து நடித்துள்ளது போன்று போலியாக ஒரு போஸ்டரையும் அவர்கள் இணைத்துள்ளனர்.

ஏ சர்டிபிகேட்....

அதில், இப்படம் சென்சார் போர்டில் சுத்தமான "ஏ" சர்டிபிகேட் பெற்றது. பி கிரேட் படம் இது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கலாய்ச்சி பை...

கூடவே, இந்தத் தலைப்பை வைக்கத்தான் இத்தனை பில்டப்பா என பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஷகீலா பட போஸ்டருடன் அவர்கள் கமெண்ட் வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.

மனவருத்தம்...

இத்தகைய போலி போஸ்டர்களால் காத்திருந்து கிடைத்த பட டைட்டில் சந்தோஷத்தைக் கொண்டாட முடியாமல் அஜீத் ரசிகர்கள் மன வருத்தத்தில் உள்ளனராம்.

எப்படியெல்லாம் சிக்கல் வருதுப்பா ஹீரோக்களுக்கு!

 

த்ரிஷா - ராணா பிரிவுக்கு நானா காரணம்? - கன்னட நடிகை மறுப்பு

த்ரிஷா - ராணா காதல் முறிவுடன் என்னைத் தொடர்புபடுத்துவது சரியல்ல என்று கன்னட நடிகை ராகிணி கூறியுள்ளார்.

திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் மிக நெருக்கமாக இருந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் திடீரென இருவரும் பிரிந்துவிட்டதாகவும், இந்த காதல் முறிவுக்கு கன்னட நடிகை ராகிணி திவேதிதான் காரணம் என்றும் செய்திகள் பரவின.

த்ரிஷா - ராணா பிரிவுக்கு நானா காரணம்? - கன்னட நடிகை மறுப்பு

ராகிணி திவேதியும் ராணாவலும் நெருக்கமாகப் பழகுவது த்ரிஷாவுக்குபத் தெரிய வந்ததால்தான் இந்த பிரிவு நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

இதனை ராகிணி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தdரிஷாவுக்கும் ராணாவுக்கும் இடையே உள்ள பிரச்சினை அவர்கள் சொந்த விஷயம்.

அதில் என்னை இணைத்து வதந்திகள் பரப்புவது வருத்தமாக இருக்கிறது. ராணாவுக்கும் எனக்கும் காதல் இல்லை. இதுபோன்ற வதந்திகளை யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. தயவுசெய்து இதை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

 

என்னை அறிந்தால் கிளைமாக்ஸை ரகசியமாக 'ஷூட்' பண்ணும் கௌதம்

சென்னை: என்னை அறிந்தால் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளை ரகசியமாக படமாக்க கௌதம் மேனன் முடிவு செய்துள்ளாராம்.

அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அஜீத் இருவேறு கெட்டப்புகளில் இருக்கும் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படப்பிடிப்பு இன்னும் 4 வாரங்கள் நடக்க உள்ளது.

அஜீத் பட கிளைமாக்ஸை ரகசியமாக 'ஷூட்' பண்ணும் கௌதம்

அஜீத்

கௌதம் மேனன் தனது படத்தின் ஹீரோவான அஜீத்துக்கே கிளைமாக்ஸ் என்னவென்பதை கூறாமல் வைத்திருந்தார்.

கிளைமாக்ஸ்

அண்மையில் தான் அஜீத்திடம் அவர் கிளைமாக்ஸ் காட்சியை விவரித்தார். அஜீத்துக்கு கிளைமாக்ஸ் மிகவும் பிடித்துவிட்டதாம்.

ரகசியம்

கிளைமாக்ஸ் காட்சிகளை ரகசியமாக படமாக்க முடிவு செய்துள்ளாராம் கௌதம் மேனன். க்ளைமாக்ஸ் பற்றிய தகவல் கசிந்துவிடாமல் இருக்கவே இந்த ஏற்பாடாம்.

அனுஷ்கா

கௌதம் அனுஷ்கா, அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகளை ரகசியமாக படமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அக்டோபர் 2015-ல் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படம்!

‘ஸ்கைஃபால்' படத்திற்கு பிறகு அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படம் வரும் அக்டோபர் 2015ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்புபவை ஜேம்ஸ்பாண்ட் வரிசைப் படங்கள். இப்போது டேனியல் க்ரெய்க் ஜேம்ஸ்பாண்டாக நடித்து வருகிறார்.

அக்டோபர் 2015-ல் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படம்!

ஸ்கைஃபாலுக்குப் பிறகு அடுத்த பாண்ட் படம் எப்போது என எதிர்ப்பார்த்து வந்தனர். அந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. நவோமி ஹாரிஸ் நாயகியாக நடிக்கிறார். ‘ஸ்கைஃபால்' படத்தின் இயக்குநர் சாம் மெண்டிஸ் இயக்குகிறார்.

‘ஸ்கைஃபால்' படத்திற்கு திரைக்கதை எழுதிய ஜான் லோகன், நீல் பர்விஸ், மற்றும் ராபர்ட் பர்விஸ் ஆகியோர் இப்படத்திற்கும் திரைக்கதை எழுதுகிறார்கள். படத்தின் டீஸர் என யூ டியூப்பில் வெளியான டீஸர் அதிகாரப்பூர்வ டீஸர் அல்ல என சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த டேனியல் தெரிவித்துள்ளார்.

'' 'பாண்ட் 24' படத்தின் படப்பிடிப்புகள் முதற்கட்டத்தில் உள்ளன. மேலும் ‘பாண்ட் 24' மற்றும் 25, இரண்டும் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.

இதில் ‘பாண்ட் 24' அமெரிக்க நாடுகளில் அக்டோபர் 24, 2015ம் தேதியும் , உலக அளவில் நவம்பர் 6, 2015ம் தேதியும் வெளியாகும்.

அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் டீஸரை இந்த வருட இறுதிக்குள் எதிர்பார்க்கலாம் '' என டேனியல் கிரெய்க் தெரிவித்துள்ளார்.


 

நான் யாரையும் காதலித்து கைவிடவில்லை, என்னை தான்...: நடிகர் ரன்வீர் சிங்

மும்பை: என்னை காதலித்தவர்கள் தான் என்னை பிரிந்து சென்றார்களே தவிர நான் யாரையும் கைவிடவில்லை என நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்தார்கள். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். அனுஷ்கா தற்போது கிரிக்கெட் வீர்ர விராத் கோஹ்லியை காதலித்து வருகிறார்.

நான் யாரையும் காதலித்து கைவிடவில்லை, என்னை தான்...: நடிகர் ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இதை ரன்வீர் ஒப்புக் கொண்டுள்ள போதிலும், தீபிகா ஒப்புக் கொள்ளவில்லை.

இந்நிலையில் தான் நடித்துள்ள கில் தில் படப் பாடல் அறிமுக விழாவில் கலந்து கொண்ட ரன்வீர் சிங் கூறுகையில்,

கில் தில் படமும் ராம் லீலா போன்று ஹிட்டாகும் என்று நம்புகிறேன். நான் கோவிந்தாவின் படம் பார்த்து வளர்ந்தவன். அவரால் தான் நான் நடிகன் ஆனேன். நான் அவரின் தீவிர ரசிகன். என் வாழ்வில் நான் யாரையும் காதலித்து கைவிடவில்லை. நான் தான் கைவிடப்பட்டுள்ளேன் என்றார்.

 

ஐ சாதனையை முந்த முடியாத லிங்கா

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள ஐ திரைப்பட டீசரை விட மிக குறைந்த பேரே ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள லிங்கா டீசரை யூடூப்பில் பார்த்துள்ளனர்.

2013ல் வெளியிடப்பட்ட 'கோச்சடையான்' படத்தின் டீசர் ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 'லிங்கா' படத்தின் டீசர் அது வெளியான ஒரு நாளைக்குள் ஒன்பது லட்சம் வியூஸ் மட்டுமே தாண்டியிருந்தது.

ஐ சாதனையை முந்த முடியாத லிங்கா

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'ஐ' படத்தின் டீசர் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு ஒரே நாளில் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பார்க்க வைத்தது.

ஆனால், 'லிங்கா' டீசரால் 'ஐ' படத்தின் அந்தச் சாதனையை முறியடிக்க முடியவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஹிட் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் உருவாக்கியுள்ள லிங்கா படத்தால், 'ஐ' டீசரைப் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையில் பாதியைக் கூடத் தொட முடியவில்லை.

ரசிகர்கள் நடிகர்களுக்காக மட்டுமின்றி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பிற காரணங்களாலும் டீசர்களை ஆர்வமுடன் பார்வையிடுகின்றனர் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. ஐ டீசர் ஹாலிவுட் படத்துக்கு இணையாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகு வந்த லிங்கா உள்ளிட்ட படங்களின் டீசர்கள் அந்த பெஞ்ச்மார்க்கை எட்ட முடியவில்லை என்பதே இதற்கு காரணம்.

 

நடிகைக்கு ஐஸ் வைத்து 'லீடர்' பட வாய்ப்பை பெற்ற சுள்ளான் இயக்குனர்

சென்னை: நயன நடிகைக்கு ஐஸ் வைத்து லீடர் நடிகரின் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளாராம் அந்த 3 எழுத்து இளம் இயக்குனர்.

பார்ப்பதற்கு சுள்ளான் போன்று இருக்கும் அந்த 3 எழுத்து இயக்குனர் பிக்கப் டிராப் நடிகர், நயன நடிகையை வைத்து படம் எடுத்தார். அந்த படம் ஹிட்டானது. படப்பிடிப்பின்போது இயக்குனர் நயன நடிகையை அக்கா அக்கா என்று அழைத்து பாச மழை பொழிந்தாராம்.

அதன் பிறகு அவரது திருமண நிச்சயதார்த்தத்தை முன்நின்று நடத்தி வைக்குமாறு கேட்டதில் நடிகை நெகிழ்ந்துவிட்டாராம். தற்போது இயக்குனர் தனது நடிகை அக்காவின் பரிந்துரையின்பேரில் தான் லீடர் நடிகரை அடுத்து இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளாராம்.

நடிகை லீடரை அணுகி என் தம்பி படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும். நான் உங்களுக்கு ஜோடியாக நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்டதும் நடிகர் சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது அவர் ஒப்புக் கொண்டுள்ள பேன்டஸி படத்தை முடித்த பிறகு சுள்ளான் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.

தம்பி ரொம்பவே தெளிவு தான்.

 

24 மணி நேரத்துக்குள் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது லிங்கா டீசர்!

வெளியான 24 மணி நேரத்துக்குள் 1 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் ரஜினியின் லிங்கா டீசரைப் பார்த்துள்ளனர்.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் காத்திருந்த லிங்கா படத்தின் முதல் டீசர் நேற்று முன்தினம் மாலை யுட்யூபில் வெளியானது.

24 மணி நேரத்துக்குள் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது லிங்கா டீசர்!

ஒரே நேரத்தில் பல லட்சம் ரசிகர்கள் இந்த டீசரைப் பார்க்க ஆரம்பித்ததால் யூட்யூப் தளமே திணறியது. எத்தனைப் பேர் பார்த்தார்கள் என்ற views count-ஐ தற்காலிகமாக நிறுத்திவிட்டது.

டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே சில லட்சம் பார்வையாளர்கள் பார்த்திருந்த நிலையில், யூட்பிலிருந்து அந்த வீடியேவை, தயாரிப்பாளரான ராக்லைன் என்டர்டெயின்மென்ட் நீக்கிவிட்டது.

டீசரின் கடைசியில் வரும் லிங்கா போஸ்டரை நீக்கிவிட்டு மீண்டும் யூட்யூபில் பதிவேற்றனர். இந்தப் புதிய லிங்க்தான் அதன் பிறகு பார்வையாளர்களுக்குக் கிடைத்தது. இந்த புதிய லிங்கில் மட்டும் லிங்கா டீசரை 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

கோச்சடையான் படத்தின் போஸ்டர் டீசரும் முதல் நாளில் ஒரு மில்லியனைத் தொட்டது நினைவிருக்கலாம்.

 

எஸ்எஸ்ஆர் உருவப் படம் திறப்பு.. சரத்குமார் பங்கேற்பு

சமீபத்தில் மறைந்த எஸ்எஸ்ஆர் எனும் எஸ்எஸ் ராஜேந்திரனின் உருவப் படத்தை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்தவர், லட்சிய நடிகர் எனப் புகழப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

எஸ்எஸ்ஆர் உருவப் படம் திறப்பு.. சரத்குமார் பங்கேற்பு

பிறகு சிகிச்சை பலனின்றி அக்டோபர் 24-ம் தேதி காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இவரது இறுதி சடங்கில் ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

மறைந்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இல்லத்தில் இவரது திருவுருவப் படத்தை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் நடிகர் சங்க நிர்வாகிகள் ராதாரவி, வாகை சந்திரசேகர், விஜயகுமார், சத்யராஜ், கே.என்.காளை, எம்.என்.கே.நடேசன் மற்றும் எஸ்.எஸ்.ஆர் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர்.