நடிப்பு தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக பல நடிகர், நடிகையர் நிஜமாகவே அதுபோல செய்து பார்த்து பின்னர் நடிப்பார்கள். அந்த வரிசையில், பாலிவுட் நடிகை ஷெபாலி ஷா, தான் நடிக்கப் போகும் கேரக்டருக்காக ஒரு கைதியுடன் ஒரு நாளை செலவிட்டுள்ளார்.
குச் லவ் ஜெய்சா என்ற படத்தில் நடிக்கிறார் ஷெபாலி. இதில் ராகுல் போஸும் நடிக்கிறார். தலைமறைவு விசாரணைக் கைதியாக இப்படத்தில் நடிக்கிறார் போஸ். அவரை ஒரு காபி ஷாப்பில் வைத்து சந்திக்க நேரிடுகிறார் ஷெபாலி. இந்த சந்திப்பு இருவரது வாழக்கையையும் மாற்றிப் போடுகிறது.
இந்த வேடத்தில் நடிப்பதற்காக உண்மையிலேயே ஒரு விசாரணைக் கைதியை சந்தித்து கைதிகள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை அறிய விரும்பினார் ஷெபாலி. அதன்படி சிறை அனுமதியைப் பெற்று ஒரு விசாரணைக் கைதியை சந்தித்து அவருடன் நாள் முழுக்க கழித்துள்ளார்.
இதுகுறித்து ஷெபாலி கூறுகையில், எனக்கு கைதியுடன் பேசியபோது எந்தவிதமான பதட்டமும் ஏற்படவில்லை. மாறாக, இயல்புடன் அவரிடம் பேசினேன். அவருடைய குற்றப் பின்னணி குறித்தெல்லாம் நான் எதுவும் கேட்கவில்லை, அவரும் சொல்லவில்லை.
மாறாக சிறையில் சாப்பாடு எப்படி இருக்கிறது, அரசியல், சமூகம் உள்பட பல விஷயங்களையும் அவரிடம் கேஷுவலாக பேசினேன். ஒரு கைதியின் மன நிலை, எப்படிப் பேசுவார், எப்படி நடந்து கொள்வார் என்பதை அப்சர்வ் செய்ய அது எனக்கு உதவியது என்றார் ஷெபாலி.
குச் லவ் ஜெய்சா என்ற படத்தில் நடிக்கிறார் ஷெபாலி. இதில் ராகுல் போஸும் நடிக்கிறார். தலைமறைவு விசாரணைக் கைதியாக இப்படத்தில் நடிக்கிறார் போஸ். அவரை ஒரு காபி ஷாப்பில் வைத்து சந்திக்க நேரிடுகிறார் ஷெபாலி. இந்த சந்திப்பு இருவரது வாழக்கையையும் மாற்றிப் போடுகிறது.
இந்த வேடத்தில் நடிப்பதற்காக உண்மையிலேயே ஒரு விசாரணைக் கைதியை சந்தித்து கைதிகள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை அறிய விரும்பினார் ஷெபாலி. அதன்படி சிறை அனுமதியைப் பெற்று ஒரு விசாரணைக் கைதியை சந்தித்து அவருடன் நாள் முழுக்க கழித்துள்ளார்.
இதுகுறித்து ஷெபாலி கூறுகையில், எனக்கு கைதியுடன் பேசியபோது எந்தவிதமான பதட்டமும் ஏற்படவில்லை. மாறாக, இயல்புடன் அவரிடம் பேசினேன். அவருடைய குற்றப் பின்னணி குறித்தெல்லாம் நான் எதுவும் கேட்கவில்லை, அவரும் சொல்லவில்லை.
மாறாக சிறையில் சாப்பாடு எப்படி இருக்கிறது, அரசியல், சமூகம் உள்பட பல விஷயங்களையும் அவரிடம் கேஷுவலாக பேசினேன். ஒரு கைதியின் மன நிலை, எப்படிப் பேசுவார், எப்படி நடந்து கொள்வார் என்பதை அப்சர்வ் செய்ய அது எனக்கு உதவியது என்றார் ஷெபாலி.