காட்சிகள் நீக்கம்.. மறு படப்பிடிப்பு... கிடைத்தது வஜ்ரம் படத்துக்கு யு!

காட்சிகள் மாற்றியமைக்கப்பட்ட பிறகு வஜ்ரம் படத்துக்கு யு சான்று அளித்துள்ளனர் தணிக்கைக் குழுவினர்.

பசங்க, கோலிசோடா ஆகிய வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் தற்போது நடித்து வரும் படம் ‘வஜ்ரம்'.

இப்படத்தில் கதாநாயகியாக பவானி ரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

காட்சிகள் நீக்கம்.. மறு படப்பிடிப்பு... கிடைத்தது வஜ்ரம் படத்துக்கு யு!

பைசல் இசையமைக்கும் இப்படத்திற்கு குமரேசன் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை அமைத்து எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கியிருக்கிறார். ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக பி.ராமு தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த மாதமே தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி யுஏ சான்றிதழ்தான் தர முடியும் என்று கறாராகக் கூறிவிட்டனர்.

காட்சிகள் நீக்கம்.. மறு படப்பிடிப்பு... கிடைத்தது வஜ்ரம் படத்துக்கு யு!

படத்திற்கு யு சான்றிதழ் பெற வேண்டும் என்பதில் கவனமாக இருந்த படக் குழு, சில காட்சிகளை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக வேறு காட்சிகளைப் படமாக்கி இணைத்து சென்சாருக்கு அனுப்பினர்.

இந்தக் காட்சிகளை அனுமதித்த தணிக்கை குழுவினர், படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இம்மாதம் 27ம் தேதி வஜ்ரம் வெளியாகிறது.

 

பிரபல இயக்குநர் ஆர்சி சக்தி மரணம்.. ரஜினி, கமலை இயக்கியவர்!

ரஜினி, கமல் போன்ற முக்கிய நடிகர்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஆர் சி சக்தி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76.

ரஜினிகாந்தை வைத்து தர்மயுத்தம், கமல் ஹாஸனை வைத்து உணர்ச்சிகள், லட்சுமி நடித்த தவம், வரம், ரகுவரன் நடித்த கூட்டுப் புழுக்கள், விஜயகாந்த் நடித்த மனக்கணக்கு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் ஆர்சி சக்தி.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே நடிப்பு மற்றும் திரைத் துறையில் நாட்டம் கொண்டிருந்தார். சுப்பு ஆறுமுகம் நடத்திய வில்லுப்பாட்டு குழுவில் சேர்ந்தார். பின்னர் அன்னை வேளாங்கன்னி படத்துக்கு திரைக்கதை எழுதினார்.

பிரபல இயக்குநர் ஆர்சி சக்தி மரணம்.. ரஜினி, கமலை இயக்கியவர்!

பின்னர் 1972-ம் ஆண்டு கமல் ஹாஸனை வைத்து உணர்ச்சிகள் படத்தை எழுதி இயக்கினார். முதல் படத்திலேயே சர்ச்சைக்குரிய விஷயத்தை எடுத்து படமாக்கி, விமர்சகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பினார்.

1978-ல் ஆர் சி சக்தி இயக்கிய மனிதரில் இத்தனை நிறங்களா படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதில் கமல் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.

அதே ஆண்டில் ரஜினியை வைத்து தர்மயுத்தம் படத்தை இயக்கி பெரும் வெற்றி கண்டார்.

லட்சுமியை வைத்து அவர் இயக்கிய சிறை படம் பெரும் வெற்றி பெற்றது. தமிழக அரசின் விருதையும் பெற்றது.

ஆர் சி சக்தி கடைசியாக இயக்கிய படம் பத்தினிப் பெண். 1993-ல் வெளியான இந்தப் படத்துக்கு தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதும் கிடைத்தன.

ஆர் சி சக்தி கடந்த ஆண்டுதான் தனது பவள விழாவைக் கொண்டாடினார். கமல் ஹாஸன் தலைமையில் இந்த விழா நடந்தது நினைவிருக்கலாம்.

சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உடற்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த ஆர் சி சக்தி, வட பழனியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று பிற்பகல் மரணமடைந்தார்.

அவருக்கு செஞ்சிலட்சுமி என்ற மனைவியும், செல்வம் என்ற மகனும், சாந்தி, மகேஸ்வரி ஆகிய மகள்களும், 5 பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.

அவருடைய உடல் விருகம்பாக்கம் சாய்நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச் சடங்குகள் நடக்கிறது.

 

கமலுக்குக் கிடைக்காட்டியும், கமல் பட டெக்னீஷியனுக்கு ஆஸ்கர் கிடைச்சிருச்சே!

சென்னை: கமல்ஹாசன் படத்து டெக்னீஷியன் ஒருவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை போல இதுவும் தற்செயலானதுதான்.

கமல்ஹாசனின் உத்தமவில்லன் படத்தின் சவுண்ட் மிக்ஸராக அதாவது ஒலிக் கலப்பாளராக பணியாற்றி வருபவர் கிரேக்மேன். இவர் ஒரு ரீரெக்கார்டிங் மிக்ஸர் ஆவார். உத்தமவில்லன் படத்திற்காக இவரை பிரத்யேகமாக அழைத்து வந்துள்ளனர். இவருக்குத்தான் தற்போது ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

கமலுக்குக் கிடைக்காட்டியும், கமல் பட டெக்னீஷியனுக்கு ஆஸ்கர் கிடைச்சிருச்சே!

இன்று அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் விப்ளாஷ் என்ற படத்துக்கு சில ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. அதில் ஒன்று சவுண்ட் மிக்ஸிங்குக்கான விருது. இவ்விருதை கிரேக்மேன், பென் வில்கின்ஸ், தாமஸ் கர்லி ஆகியோர் பெற்றுள்ளனர்.

இந்தியப் படம் ஒன்றுக்கு கிரேக்மேன் பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும். முதல் படத்தில் பணியாற்றும்போதே அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது உத்தமவில்லன் பட யூனிட்டை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.

என்னவோ போங்கப்பா, கமல் ஆஸ்கரை வேண்டாம் என்று கூறினாலும், ஆஸ்கர் விருது கமலை விடுவதாகத் தெரியவில்லை...!

 

தயாரிப்பாளர் சங்கத்தில் அம்மா அன்னம் அளிக்கும் திட்டம் - இளையராஜா தொடங்கி வைத்தார்

சென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று அம்மா அன்னதானத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் இசையமைப்பாளர் இளையராஜா.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு பசியோடு வருபவர்கள் வயிறார சாப்பிட இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு அறிவித்திருந்தார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் அம்மா அன்னம் அளிக்கும் திட்டம் - இளையராஜா தொடங்கி வைத்தார்

அதை இன்று செயல்படுத்திவிட்டார்.

இந்தத் திட்டத்துக்கு அம்மா அன்னம் அளிக்கும் திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதனை இளையராஜா தன் கையால் உணவு பரிமாறி தொடங்கி வைத்தார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் அம்மா அன்னம் அளிக்கும் திட்டம் - இளையராஜா தொடங்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, துணை தலைவர்கள் தேனப்பன், கதிரேசன், செயலாளர்கள் டி சிவா, ராதாகிருஷ்ணன், பொருளாளர் தியாகராஜன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்துடன் இந்தத் திட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

அம்மான்னா சும்மா இல்லடா...! - இளையராஜா பேச்சு

சென்னை: தயாரிப்பாளர் சங்க வளாகத்தில் இன்று அம்மா அன்னம் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த இளையராஜா, 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே.. என்று மட்டுமல்ல, அம்மான்னா சும்மா இல்லடா. என்றும் நான் பாடியிருக்கிறேன்," என்றார்.

தப்பா பாடிட்டானே பாரதி...

இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில், "தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியாருடைய வரிகளை கேட்கும்போதெல்லாம் தப்பாக பாடிவிட்டானே பாரதி, என்றுதான் நினைப்பேன்.

அம்மான்னா சும்மா இல்லடா...! - இளையராஜா பேச்சு

சாப்பாடுதானே போடணும்!

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் சாப்பாடு போடுவோம் என்று பாடியிருக்கணுமே தவிர, ஜெகத்தினை எதுக்கு அழிக்கணும்? சாப்பாடு போடுவதற்குத்தான் இங்கு இயற்கை காத்துக் கிடக்கிறதே. மழை பொழிந்தால் பயிர்கள் எல்லாம் விளைகின்றன.

அம்மான்னா சும்மா இல்லடா...! - இளையராஜா பேச்சு

பாராட்ட வேண்டிய திட்டம்

மழை பொழிந்தால் நிலம் ஈரமாகிறது. காய்ந்து போன பாறைகூட ஈரமாகிறது. அந்த ஈரம் நம்முடைய மனதில் இல்லையா? தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் உணவளிப்போம். இந்த திட்டம் உண்மையாகவே மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

பசியோடுதான் வந்தேன்

தயாரிப்பாளர்கள் சங்கம் ஒற்றுமையாக இருந்து ஒரு காரியத்தை செய்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். எல்லோரும் பசியோடுதான் வந்தோம். நானும் பசியோடுதான் வந்தேன். பசி என்றால் கலைப் பசியோடு வந்தோம்.

அந்த நட்பு அப்படியே இருக்கா?

பசி எங்களுக்கு துன்பத்தை தரவில்லை. சந்தோஷமாக இருந்தோம். இந்த பெயர், புகழ் எல்லாம் வந்த பின்னால் அந்த சந்தோஷம், நட்புரிமை எல்லாம் இப்போது இருக்கிறதா என்றால், இல்லை. அந்த பழைய ஆட்கள் செத்துப் போய்விட்டார்கள். பழைய நண்பர்கள் அல்லவா? அவர்களெல்லாம் அந்த குணங்களோடு அப்படியே இறந்து போய்விட்டார்கள்.

பணம், புகழ்தான் விஷம்

அது இறந்து போவதற்கு காரணமாக இருந்தது பெயரும், புகழும், பணமும் அத்தனையும். அப்படியான ஒரு புகழும், பெயரும் நமக்கு தேவையா? மனித உள்ளத்தை கொல்லக்கூடிய இந்த விஷம் நமக்கு தேவையா?

அம்மான்னா சும்மா இல்லடா...! - இளையராஜா பேச்சு

மகிழ்ச்சி தரும் ஒற்றுமை

தயாரிப்பாளார்களா நீங்கள்? நல்ல நடிகர்களை, இயக்குனர்களை, நல்ல கதைகளை, ரசிகர்களை, தியேட்டர் உரிமையாளர்களை, நல்ல இசையமைப்பாளர்களை தயாரிக்கிறீர்கள், எதை நீங்கள் தயாரிக்கவில்லை.

எல்லாவற்றையும் தயாரிக்கும் நீங்கள் ஒற்றுமையில்லாமல் இருந்து இப்போது ஒற்றுமையாக இணைந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒற்றுமையோடு மட்டுமில்லாமல், ஒரு முடிவு எடுத்தால் 100 சதவீதம் அதற்கு பின்னால் நின்று ஒத்துழைப்பு கொடுக்கும் அளவுக்கு நீங்கள் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

அம்மான்னா சும்மா இல்லடா

இந்த அம்மா அன்னம் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்க என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' என்று மட்டும் நான் பாடவில்லை. 'அம்மான்னா சும்மா இல்லடா...' என்றும் கூட நான் பாடியிருக்கிறேன்," என்றார்.

அம்மா அன்னம் அளிக்கும் திட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரால் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ராஜ்கண்ணு மகன் ஹீரோவாகும் களத்தூர் கிராமம்... இளையராஜா இசையமைக்கிறார்!

எஸ் ஏ ராஜ்கண்ணுவின் மகன் நாயகனாக அறிமுகமாகும் களத்தூர் கிராமம் என்ற கிராமியப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழ் திரையிசையில் கோலோச்சி வருபவர் இளையராஜா.

இன்றும் 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் அவர் இசையில் வெளியான ஷமிதாப் பெரும் வரவேற்பைப் பெற்றது. பாடல்களும் பிரபலமாகின.

ராஜ்கண்ணு மகன் ஹீரோவாகும் களத்தூர் கிராமம்... இளையராஜா இசையமைக்கிறார்!

தமிழில் சில தினங்களுக்கு முன்புதான் ஒரு மெல்லிய கோடு என்ற புதுப் படத்தில் இளையராஜா ஒப்பந்தமானார். இப்போது அடுத்து, களத்தூர் கிராமம் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் ‘தடையற தாக்க', ‘மீகாமன்' ஆகிய படங்களை இயக்கிய மகிழ்திருமேனியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிதுன்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இவர் 1977-ல் ரஜினி-கமல்-ஸ்ரீதேவி நடிப்பில் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய ‘16 வயதினிலே' படத்தை தயாரித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகன். ‘16 வயதினிலே' டிஜிட்டல் பதிப்பின் இயக்குனராகவும் மிதுன் குமார் பணியாற்றியுள்ளார்.

சரண் கே.அத்வைதன் இயக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். மேலும், ஆடுகளம் கிஷோர், ஏக்னா செட்டி, தருண் சத்ரியா மற்றும் முன்னணி கன்னட நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

தமிழ் மற்றும் கன்னடத்தில் இப்படம் வெளியாகிறது. முதல்கட்டப் படப்பிடிப்பு தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

இப்படத்தை ஏ.ஆர்.மூவி பாரடைஸ் நிறுவனம் சார்பில் சீனு ராஜ் தயாரிக்கிறார். இவருடன் ஸ்ரீஅம்மன் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஏ.ராஜ்கண்ணுவும் இணைந்து தயாரிக்கிறார்.

எஸ்ஏ ராஜ்கண்ணுவின் முதல் தயாரிப்பான பதினாறு வயதினிலே படத்துக்கு இளையராஜாதான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

'அந்த நிர்வாண செல்ஃபி படங்களில் இருப்பவர் ஸ்ரீதிவ்யாவா?'

லட்சுமி மேனன், ஹன்சிகா, ராதிகா ஆப்தே, வசுந்தரா என பிரபல நடிகைகளின் நிர்வாண வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் சமீப காலமாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் வெளியாகிவருகின்றன. இவை தங்களுடையவை அல்ல என சம்பந்தப்பட்ட நடிகைகள் மறுத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் பிரபல நடிகை ஸ்ரீதிவ்யாவின் நிர்வாண செல்ஃபி படங்கள் என்ற பெயரில் ஏராளமான புகைப்படங்கள் வாட்ஸ்ஆப்பில் வலம் வர ஆரம்பித்துள்ளன.

'அந்த நிர்வாண செல்ஃபி படங்களில் இருப்பவர் ஸ்ரீதிவ்யாவா?'

இந்தப் படங்களை ஸ்ரீதிவ்யாவே மிகவும் உற்சாகத்துடன் கண்ணாடி முன்னால் நின்று எடுப்பது போல அந்தப் படங்கள் காட்சி தருகின்றன.

இவை ஒட்டு வேலை செய்யப்பட்ட படங்கள் அல்ல... அவராகவே எடுத்துக் கொண்டவைதான்.. தவறுதலாக கசிந்துள்ளது என்று படங்களைப் பார்த்த புகைப்படக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுகுறித்து ஸ்ரீதிவ்யாவிடமிருந்து எந்த மறுப்போ புகாரோ இன்னும் வெளியாகவில்லை.

ஸ்ரீதிவ்யா தமிழில் முன்னணி நடிகையாக உள்ளார். சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த காக்கிச் சட்டை அடுத்த வாரம் வெளியாகவிருக்கிறது.

 

எதிர்ப்பார்த்ததைப் போலவே... பேர்ட்மேனுக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது!

லாஸ் ஏஞ்சல்ஸ்: எதிர்ப்பார்த்ததைப் போலவே, அலெஜான்ட்ரோ ஜி இனாரிட்டு இயக்கிய பேர்ட்மேன் படத்துக்கு இந்த ஆண்டின் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

பெருமை மிக்க இந்த விருதுக்காக அமெரிக்கன் ஸ்னிப்பர், பேர்ட்மேன், பாய்ஹூட், தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல், தி இமிடேஷன் கேம், விப்லாஷ், தி தியரி ஆப் எவ்ரிதிங் மற்றும் செல்மா ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டன.

இவற்றில் பேர்ட்மேன் படம் விருதினை வென்றது.

எதிர்ப்பார்த்ததைப் போலவே... பேர்ட்மேனுக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது!

கடந்த அக்டோபர் 27-ம் தேதி உலகெங்கும் வெளியானது பேர்ட்மேன் படம். 16.5 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 76.5 மில்லியன் ஈட்டியது.

மைக்கேல் கீட்டன் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் ஜாக் கலிபியனாகிஸ், எட்வர்டு நார்டன், எமி ரியான் உள்பட பலரும் நடித்திருந்தனர்.

சினிமாவுக்குள் சினிமா...

இந்தப் படத்தின் கதை சினிமாவுக்குள் சினிமா என்ற கருத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. பேர்ட்மேன் படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகர் மைக்கேல் கீட்டன் இதில், ரிக்கன் தாமஸ் என்ற முன்னாள் பேர்ட்மேன் ஹீரோவாகவே நடித்துள்ளார்.

ஒரு ரிட்டயர்ட் சூப்பர் ஹீரோ... முன்பு புகழ் மழையில் நனைந்த அவனால் இப்போது சும்மா இருக்க முடியவில்லை. மனசாட்சிக்கும் அவனுக்கும் வாக்குவாதம். இந்த உளவியல் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் சூப்பர் ஹீரோ, ஒரு நாடகத்தை எழுதி நடத்துகிறார். அந்த நாடகத்தில் நடிக்க வரும் ஒரு நடிகர் பின்னர் பெரும் புகழ் பெற்றுவிடுகிறான். ஒரு நாடக நடிகராகவும் தோற்றுப் போன சூப்பர் ஹீரோ அடுத்து என்ன செய்கிறார் என்பது மீதிக் கதை.

மைக்கேல் கீட்டனின் நடிப்பு படத்தில் பிரதானமாகப் பேசப்பட்ட ஒன்று. ப்ளாக் காமெடி என்று சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஒரு பதம் உலா வருகிறதல்லவா.. அந்த ப்ளாக் காமெடி வகைப் படம் இது!

 

சண்டமாருதம் திருட்டு சிடி விற்பனை... சிபிசிஐடியில் சரத்குமார், தாணு புகார்

சென்னை: தமிழகத்தில் சண்டமாருதம் திரைப்பட திருட்டு சி.டி. விற்பனையாவதைத் தடுக்கக் கோரி நடிகர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்கத்தினர் சி.பி.சி.ஐ.டி. போலீஸில் புகார் அளித்தனர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.தாணு, துணைத் தலைவர் எஸ்.கதிரேசன், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் நடிகர் ஆர்.சரத்குமார் ஆகியோர் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்தனர். அங்கு திருட்டு சி.டி. தடுப்புப் பிரிவு எஸ்.பி. ஜெயலட்சுமியை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

சண்டமாருதம் திருட்டு சிடி விற்பனை... சிபிசிஐடியில் சரத்குமார், தாணு புகார்

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

நடிகர் சரத்குமார் நடித்து அண்மையில் வெளியான "சண்டமாருதம்' திரைப்படம், "தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்"ஆகிய திரைப்படங்களில் திருட்டு சி.டி. மாநிலம் முழுவதும் விற்பனையாகி வருகிறது. இதனால் அந்தத் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள், படங்களில் நடித்த கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் கவலையடைந்துள்ளனர்.

இணைய தளங்களிலும் இந்தத் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதனால் தயாரிப்பாளர் நஷ்டமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சில சுயநலக்காரர்களால் திரைப்படங்கள் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதால், பல தயாரிப்பாளர்கள் திரைப்படத்துறையை விட்டு விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற நிலையால் திரைப்படத் துறை முழுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, திருட்டு சி.டி. தயாரிப்போரையும், விற்போரையும் கண்டறிந்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கலைப்புலி தாணு

இதன் பின்னர் தாணு செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருட்டு சி.டி.யை தயாரிப்போரையும், விற்போரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு எங்களது சங்கத்தின் மூலம் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளை மாவட்டந்தோறும் நியமித்துள்ளோம். இவர்கள் திருட்டு சி.டி. தயாரிப்போர், விற்போர் குறித்து தகவல் சேகரித்து காவல்துறைக்கு அளித்து வருகின்றனர். அந்த தகவலின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனி இயக்கம்

மேலும் திருட்டு சி.டி.யை ஒழிக்க காவல் துறையுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். அதேநேரத்தில் திருட்டு சி.டி. பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஆந்திரத்தில் உள்ளதுபோல தமிழகத்தில் திரைப்படத் துறையைச் சேர்ந்த அனைத்து தரப்பினரையும் சேர்த்து ஒரு இயக்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

சரத்குமார்

நடிகர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக காவல்துறை திருட்டு சி.டி.க்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் இன்னும் விரைவான, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் திருட்டு சி.டி.யை முழுமையாக ஒழிக்க முடியும்," என்றார்.