காரணம் இந்த இரு நடிகைகளும் ஒன்று சேர்ந்து விட்டால், சக ஹீரோக்கள், மற்ற ஹீரோக்கள் குறித்துதான் அதிகம் பேசுகிறார்களாம்.
பாவனா, பூர்ணாதான் அந்த இரு சிநேகித நடிகைகள். திருச்சூரைச் சேர்ந்த பாவனாவும், கொச்சியைச் சேர்ந்த பூர்ணாவும் நெருக்கமான சினேகிதகளாம். அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்ளக் கூடியவர்கள். அப்படிப் பேசும்போதெல்லாம் கிசுகிசுக்களைத்தான் அதிகம் பரிமாறிக் கொள்கிறார்களாம்.
தங்களுடன் நடித்த ஹீரோக்களைப் பற்றித்தான் விழுந்து விழுந்து பேசுவார்களாம். நமுட்டுச் சிரிப்புடன் ஹீரோக்களைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த தகவல்களை பரிமாறிக் கொள்ளும்போது அந்த இடமே படு கலகலப்பாகி விடுமாம்.
இவர்களின் வாயில் சிக்கித் தவிக்கும் ஹீரோக்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.
இதில் என்ன காமெடி என்றால் இவர்களைப் பற்றித்தான் நிறைய வதந்திகளும் உலா வந்தபடியே உள்ளது. பாவனாவை தெலுங்கு நடிகர்கள் சிலருடன் இணைத்து ஏற்கனவே ஏகப்பட்ட வதந்திகள் வந்துள்ளன. பூர்ணாவை தமிழ் நடிகர்கள் சிலருடன் இணைத்து அடுத்தடுத்து கிசுகிசுக்கள் வந்தவண்ணம் உள்ளன.
ஆனால் இவர்களோ அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் மற்றவர்களைப் பற்றி வம்பளந்து வருவதுதான் கோலிவுட்டின் ஹாட் டாபிக்குகளில் ஒன்றாக மாறியுள்ளது.