தடையை தாண்டி வென்ற “ஃபினிக்ஸ் பெண்கள்”

இன்றைய பெண்களுக்கு அவர்கள் வெற்றிபெற பல்வேறு தடைகள் உள்ளன. தடைகளை தாண்டி வெற்றி பெற்ற பெண்களை பேட்டி கண்டு ஒளிபரப்புகின்றனர் நியூஸ் 7 தொலைக்காட்சியில்.

தடையை தாண்டி வென்ற “ஃபினிக்ஸ் பெண்கள்”

ஒரு இலக்கை அடைவது அல்லது ஒரு துறையில் சாதனை புரிவது என்பது மிகக் கடினமான ஒன்று. அதுவும் பெண்கள் என்றால் மிகக் கடினம் ஏனெனில் குடும்பம், சமூகம் என பல காரணிகள் அவர்களுக்கு தடையாக இருக்கிறது அதையும் மீறி வெற்றி பெற்ற, பெறுகிற பெண்களை நோக்கிய பயணம்தான் "ஃபினிக்ஸ் பெண்கள் நிகழ்ச்சி".

தடையை தாண்டி வென்ற “ஃபினிக்ஸ் பெண்கள்”

அந்த வகையில் ஆசியாவின் முதல் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரியை முதல் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தோம், அமைப்புசாரா தொழிலாளர் இயக்கத்தை சேர்ந்த கீதா அவர்களை இரண்டாவது நிகழ்ச்சியிலும், மாதவிடாய் ஆவணப்பட இயக்குநர் கீதா அவர்களை இந்த வார நிகழ்ச்சியிலும் அறிமுகம் செய்ய உள்ளனர். இவர்களைப் போலவே சுவாரசியமான பெண்கள் பலரை அடையாளம் கண்டு மக்களுக்கு அறிமுகம் செய்கின்றனராம்.

நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மாலை 5.30 மணிக்கும் ,மறுஒளிபரப்பு செவ்வாய்கிழமை 3.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

 

காதலி எல்லி அவர்முக்கு பாடிகார்ட்ஸை பணியமர்த்திய சல்மான் கான்?

மும்பை: நடிகர் சல்மான் கான் தனது காதலி என்று கிசுகிசுக்கப்படும் நடிகை எல்லி அவ்ரமை பாதுகாக்க பாதுகாவலர்களை பணியமர்த்தியுள்ளாராம்.

49 வயதாகும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே உள்ளார். திருமணம் எப்போது பாய் என்று கேட்டால் சிரித்துவிட்டு குழந்தை பெற்றுக் கொள்ள மட்டும் ஆசையாக உள்ளது என்று கூறி கேட்டவர்களை ஆஃப் செய்துவிடுகிறார்.

தெரியுமா?: சல்மான் கான்ல, அவர் காதலி எல்லி அவ்ரம்ல....

சல்மான் கானின் காதலி என்று ஒரு பெரிய்ய்ய்ய பட்டியலே போடலாம். அத்தனை பேர் இருந்தனர். இந்நிலையில் மிக்கி வைரஸ் வைரஸ் படம் மூலம் பாலிவுட் வந்த வெளிநாட்டு நடிகை எல்லி அவ்ரம் சல்மான் கான் நடத்திய பிக் பாஸ் - 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர்களுக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சல்மான் கானின் தற்போதைய காதலி எல்லி என்று பாலிவுட்டே கிசுகிசுத்தது கிசுகிசுக்கிறது.

பிக் பஸ் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து எல்லியை தனது பாதுகாப்பில் வைத்துள்ளாராம் சல்மான். மகாராஷ்டிரா மாநிலம் பான்வெலில் உள்ள தனது பண்ணை வீட்டில் எல்லியை தங்க வைத்துள்ளாராம் சல்மான். அவர் அடிக்கடி அங்கு சென்று அந்த நடிகையை பார்த்து வருகிறாராம்.

இந்நிலையில் சல்மான் எல்லியை பாதுகாக்க பாதுகாவலர்களை பணியமர்த்தியுள்ளார். எல்லி மும்பைக்கு வர விரும்பியதால் பந்த்ரா பகுதியில் வீடு பார்த்தும் கொடுத்துள்ளார். மும்பையில் அவரை பாதுகாக்க தான் அந்த பாதுகாவலர்கள் குழுவாம்.

 

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சமந்தா... தடியடி நடத்தி மீட்ட போலீஸ்... ஹைதராபாத்தில் பரபரப்பு!

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவிற்குச் சென்ற நடிகை சமந்தா, எதிர்பாராதவிதமாக ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். பின்னர், ரசிகர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார் நடிகை சமந்தா.இவர் தமிழில் தற்போது விக்ரம் ஜோடியாக 10 எண்றதுக்குள்ள, சூர்யா ஜோடியாக 24 மற்றும் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சமந்தா... தடியடி நடத்தி மீட்ட போலீஸ்... ஹைதராபாத்தில் பரபரப்பு!

இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்றிருந்தார் சமந்தா. நகைக்கடை திறப்பு விழாவில் சமந்தா கலந்து கொள்ளும் தகவல் அறிந்து முன்கூட்டியே ரசிகர்கள் நகைக்கடையைச் சுற்றி திரண்டிருந்தனர். எனவே, பாதுகாப்புக்காக போலீசார் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.

ஆனால், காரில் இருந்து இறங்கிய சமந்தாவைப் பார்க்க முண்டியடித்த ரசிகர்கள் தடுப்பை மீறி வந்து, சமந்தாவிடம் கைகுலுக்க முயற்சித்தனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் சிக்கினார் சமந்தா.

இதையடுத்து ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி சமந்தாவை மீட்டு அழைத்து சென்றனர்.

கூட்டத்திலிருந்து வெளியே வந்த சமந்தா, ரசிகர்களைப் பார்த்து புன்னகைத்தபடியே கை அசைத்தார். பின்னர் நகைக்கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த சமந்தா, அங்கிருந்த விதவிதமான நகைகளை எடுத்து தனது கழுத்தில் அணிந்து அழகு பார்த்தார்.

 

சிம்பு படத்தில் தலையை விட்டால் இப்படி புலம்பித்தான் ஆகணும்!

உரலுக்குள் தலையைவிட்டால் பழமொழி சிம்பு விஷயத்தில் நூறு சதவீதம் உண்மையாகிவிடுகிறது.

அவர் படத்தைத் தயாரிக்கும் அல்லது இயக்கும் அல்லது உடன் நடிக்கும் யாரும் பிரச்சினையில் சிக்கிக் கொள்கின்றனர்.

சிம்பு படத்தில் தலையை விட்டால் இப்படி புலம்பித்தான் ஆகணும்!

உதாரணங்கள் எக்கச்சக்கம். இப்போதைக்கு இயக்குநர் பாண்டிராஜ்.

சிம்புவை இயக்கப் போகிறார் பாண்டி என்று செய்தி வெளியானது, 'மாட்னார்டா இந்தாளு' என்றுதான் கமெண்ட்கள் பறந்தன.

சிம்பு படத்தில் தலையை விட்டால் இப்படி புலம்பித்தான் ஆகணும்!

ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேரும் படம் என்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.

விறுவிறுவென படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே, கவுதம் மேனன் பாதியில் விட்டுச் சென்ற ‘அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார். அது தவிர, ‘வாலு' படத்தை வெளியிடுவதற்கான பணிகளிலும் மும்முரம் காட்டினார், இது நம்ம ஆளு அப்படியே நின்றுவிட்டது.

இன்னொரு பக்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் சிம்புவின் தம்பி குறளரசனோ, இசைப் பணியில் ஏகப்பட்ட தாமதம் செய்து வருகிறாராம். இன்னும் ட்ரைலருக்குக் கூட இசையமைத்துத் தரவில்லையாம். இதை வெளிப்படையாகவே புலம்பித் தீர்த்தார் பாண்டிராஜ்.

சிம்பு படத்தில் தலையை விட்டால் இப்படி புலம்பித்தான் ஆகணும்!

இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், "எல்லா படமுமே நல்ல படமா வரவேண்டும் என்றுதான் உழைக்கிறோம். ஆனால், சிலது நல்ல படமா அமையுது, சிலது நல்ல பாடமா அமையுது. சிலது ஏடாகூடமா அமையுது. எதுவுமே அமையனும்..," என 'ஜென்' நிலைக்குப் போய்விட்டார். என்று டுவிட் செய்துள்ளார்.

இந்த புலம்பல் சிம்புவுக்குத் தெரியாததல்ல.. ஆனால் அவரும் வம்படியாக அமைதி காக்கிறார்.

 

ஓ காதல் கண்மணி திருமணத்தை கொச்சைப்படுத்துகிறதா?

திருமண முறையையே கொச்சைப்படுத்துகிறது மணிரத்னம் படம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பேதும் சொல்லாத மணிரத்னம், என் படம் ரிலீசான பிறகு பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

ஓ காதல் கண்மணி திருமணத்தை கொச்சைப்படுத்துகிறதா?  

இந்தப் படத்தின் இசை வெற்றி விழாவில் பங்கேற்ற மணிரத்னத்திடம், இந்தப் படத்தில் நீங்கள் திருமண முறையையே கொச்சைப்படுத்தி இருப்பதாகவும், அதனால்தான் யு சான்று கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறதே? என்று கேட்டபோது, "படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். என் மொழி சினிமா படத்தில்தான் கதையை கூறுவேன். வேண்டுமென்றே எதையும் திணிக்க மாட்டேன்," என்று பதில் கூறினார்.

ஆனால் மணிரத்னம் சொல்லாமல் மறைத்ததை, அந்த விழாவுக்கு வந்த வைரமுத்து வெளிப்படுத்திவிட்டார்.

வைரமுத்து கூறுகையில், "மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி' கலாச்சார அதிர்ச்சியை உருவாக்குகிற படம். மேல்நாட்டு தாக்கத்தால் கலாசாரங்கள் மாறுகின்றன. வரும் காலத்தில் திருமண முறை இருக்குமா என்ற சந்கேங்கள் எழுந்துள்ளது. அந்த வகையில் பரிசோதனை முயற்சியாக இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது," என்றார்.

இருபது ஆண்டுகளாக கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கும் வெற்றியை அடைய, இந்த கலாச்சார அதிர்ச்சி மணிரத்னத்துக்கு உதவுமா.. பார்க்கத்தானே போகிறோம்!

 

நிகழ்ச்சி ஒன்றுக்கு ஊதா கலரு கவுனில் படுகவர்ச்சியாக வந்த லிசா ஹேடன்

மும்பை: மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த பாலிவுட் நடிகை லிசா ஹேடன் முழு நீள கவுன் அணிந்தபோதிலும் முன்னழகில் பெருமளவும், முதுகையும் காட்டிய வண்ணம் வந்திருந்தார். கவர்ச்சியான ஆடையாக இருந்தாலும் அது அவருக்கு அழகாக இருந்தது.

பாலிவுட் நடிகையும், மாடலுமானவர் லிசா ஹேடன். கங்கனா ரனாவத் நடித்த க்வீன் படத்தில் விஜயலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் கவர்ச்சியாகவும், அழகாகவும் நடித்திருந்தார் லிசா. தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவரும் அவர் படங்களிலும் சரி, பொது நிகழ்ச்சிகளிலும் சரி பார்ப்பவர்கள் அதிசயிக்கும் வண்ணம் கவர்ச்சியாகவே உடை அணிவார்.

நிகழ்ச்சி ஒன்றுக்கு ஊதா கலரு கவுனில் படுகவர்ச்சியாக வந்த லிசா ஹேடன்

அவரது உடல்வாகிற்கு அது பொருத்தமாக உள்ளது என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் லிசா. அந்த நிகழ்ச்சிக்கு நீல நிற கவுன் அணிந்து வந்திருந்தார்.

முன்னழகில் பெருமளவும், முதுகையும் காட்டியபடி வந்திருந்தார் லிசா. இருப்பினும் அவரது ஆடை பார்க்க அறுவறுப்பாக இல்லை. அவர் கவர்ச்சிக்கு மட்டும் அல்ல மனதில் தோன்றும் கருத்துகளையும் துணிச்சலாக தெரிவிப்பதற்கு பெயர் போனவர்.

அவரை யாராவது வம்புக்கு இழுத்தால் முகத்தில் பொளேர் என்று அறையாத குறையாக பதில் அளித்து தன்னை இழிவுபடுத்துபவர்களை அடக்குவார்.

 

மவுசை நகர்த்த தெரிஞ்சவங்கெல்லாம் விமர்சனம் பண்றாங்களே...! - சுகாசினி திடீர் ஆவேசம்

மவுசை நகர்த்தத் தெரிஞ்சவங்கெல்லாம் சினிமா விமர்சனம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இதை அனுமதிக்கக் கூடாது என்று நடிகை சுகாசினி ஆவேசமாகப் பேசினார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓ காதல் கண்மணி' படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மணிரத்னம், பாடலாசிரியர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகை சுஹாசினி, நாயகன் துல்கர் சல்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மவுசை நகர்த்த தெரிஞ்சவங்கெல்லாம் விமர்சனம் பண்றாங்களே...! - சுகாசினி திடீர் ஆவேசம்

அப்போது சுகாசினி பேசும்போது, ‘‘ஒரு திரைப்படத்தை விமர்சிக்க பத்திரிகையாளர்களாகிய உங்களுக்குத்தான் உரிமையுண்டு.

ஏன்னா உங்களுக்கு அனுபவம் இருக்கு. அதற்கான தகுதியுமிருக்கு.

ஆனால் இப்போவெல்லாம் சோஷியல் மீடியாவில் எல்லாருமே விமர்சனம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. கம்ப்யூட்டர் மவுஸை நகர்த்தத் தெரிஞ்சவங்க எல்லாரும் விமர்சனம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.

இதையெல்லாம் பத்திரிகையாளர்களாகிய நீங்க அனுமதிக்கக் கூடாது. இதை தடுக்கணும். இனி பத்திரிகையாளர்கள் மட்டும்தான் சினிமா விமர்சனம் செய்யணும்,'' என்றார் சுஹாசினி.

அப்படியெல்லாம் ஒரேயடியாச் சொல்ல முடியாதுங்க.. பணம் கொடுத்து படம் பாக்கிற அத்தனை பேரும் ஏதோ ஒரு வகையில் விமர்சகர்தான்!

 

டப்பிங் சீரியல்கள்... பெப்சி - சின்னத்திரை கலைஞர்கள் ஏப் 15-ல் வேலை நிறுத்தம்

தொலைக்காட்சிகளில் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்புவதை நிறுத்தக் கோரி வரும் ஏப்ரல் 15-ம் தேதி பெப்சி மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

டப்பிங் சீரியல்கள்... பெப்சி - சின்னத்திரை கலைஞர்கள் ஏப் 15-ல் வேலை நிறுத்தம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை தொடர் இயக்குநர் பாலாஜி யாதவ், சென்னையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவர் கடன் பிரச்சினையின் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரிய வந்தது. மேலும், தற்போது தொலைக்காட்சிகளில் வேறு மாநிலத்தில் நெடுந்தொடர்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பபடுவதால், சின்னத்திரை கலைஞர்கள் வேலை இல்லாமல் கஷ்ட்டப்படுவதாகவும், பாலஜி யாதவின் மரணமும் அப்படி நேர்ந்ததுதான் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து, டப்பிங் தொடர்களை இனி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு, நேற்று சென்னை பிரசாத் லேபில், பாலாஜி யாதவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தியது. அத்துடன் இனி தமிழ் டிவிகளில் டப்பிங் தொடர்கள் ஒளிபரப்புவதற்கும் கண்டனம் தெரிவித்தது.

டப்பிங் சீரியல்கள்... பெப்சி - சின்னத்திரை கலைஞர்கள் ஏப் 15-ல் வேலை நிறுத்தம்

மேலும், டப்பிங் சீரியல்களை எதிர்க்கும் விதமாக வரும் ஏப்ரல் 15ஆம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தையும் அறிவித்துள்ளது.

அதன்படி நாளை மறுநாள் (ஏப்.14) தமிழகம் முழுவதும் சின்னத்திரை சம்மந்தமான படப்பிடிப்புகள், டப்பிங் உள்ளிட்ட எந்த வேலைகளும் நடைபெறாது, என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெப்சி அமைப்பும் பங்கேற்கிறது.

மேலும் மொழி மாற்றத் தொடர்களை தொடர்ந்து ஒளிபரப்பும் சேனல்கள், நிறுவனங்களுக்கு எதிராகவும் போராட்டம் நடக்கும் என்று பெப்சி அறிவித்துள்ளது.

நேற்று பிரசாத் லேபில் நடைபெற்ற சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் கண்டன போராட்ட கூட்டத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி, நடிகை குட்டி பத்மினி, நடிகை நளினி, பூவிலங்கு மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டார்கள். பெப்சி சார்பில் அதன் தலைவர் ஜி சிவாவும் கலந்து கொண்டார்.

 

நடிகை ரியாசென்னின் மும்பை வீட்டில் தீ விபத்து... நூலிழையில் உயிர் தப்பினார்!

மும்பை: நடிகை ரியாசென்னின் மும்பை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், அவர் நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

முன்னாள் இந்திப்பட நடிகை மூன்மூன் சென். இவரது மகள் ரியாசென். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால், தமிழில் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை. தற்போது இந்தியில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக ரியாசென் உள்ளார்.

நடிகை ரியாசென்னின் மும்பை வீட்டில் தீ விபத்து... நூலிழையில் உயிர் தப்பினார்!

ரியாசென் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாய் மூன்மூன்சென்னுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு தனது தாயுடன் ரீமாசென் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவர்களது வீட்டில் தீப்பிடித்தது. கட்டில், மெத்தை, மரச்சாமான்கள் தீயில் கொழுந்து விட்டு எரியத் தொடங்கின. தீ மளமளவென பக்கத்து வீட்டிற்கும் பரவத் தொடங்கியது.

சுதாரித்து எழுந்த ரியாசென்னும், மூன் மூன் சென்னும் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து உயிர் தப்பினர்.

தீ விபத்து குறித்து தீயணைப்பு போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதுகுறித்து ரியாசென் கூறும்போது, படுக்கை அறையில் உள்ள ஏர்கண்டிஷனரில் தீ பிடித்து வீட்டில் பரவி உள்ளது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார்.

 

'சோனாக்ஷியின் ஆபாச வீடியோ'... இணையத்தில் தீயாய் பரவுது!

தினசரி யாராவது ஒரு பிரபல நடிகையின் நிர்வாண, ஆபாசப் படங்கள் வெளியாவது இணையத்தில் வாடிக்கையாகிவிட்டது.

முன்பெல்லாம் இப்படி வீடியோ வெளியானால் அதிர்ச்சியடைந்த நிலைமை மாறி, யார் அந்த நடிகை, எங்கே அந்த வீடியோ என்று தேட ஆரம்பித்துவிட்டதால், இந்த மாதிரி வீடியோக்கள் வருவதும் அதிகரித்துவிட்டது.

'சோனாக்ஷியின் ஆபாச வீடியோ'... இணையத்தில் தீயாய் பரவுது!

கடந்த சில தினங்களாக அப்படி பரபரப்பாக வலம் வரும், பகிரப்படும் வீடியோ சோனாக்ஷி சின்ஹாவுடையது.

ஒரு ஆணுடன் படுக்கையில் சோனாக்ஷி ஆபாசமாக இருப்பது போல அந்த வீடியோவில் உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு "ஆபாச வீடியோவில் இருப்பது சோனாக்சி சின்ஹாவா அல்லது மார்பிங் செய்யப்பட்ட போலி படமா?" என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

இதே கேள்வியை சோனாக்சி சின்ஹாவிடமும் கேட்டபோது, "அந்த வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல. எனவே அந்த வீடியோவை நான் பொருட்படுத்தவில்லை," என்றார் சிம்பிளாக.

‘லிங்கா' படத்தில் ரஜினி ஜோடியாக சோனாக்சி சின்ஹா நடித்தார். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘அகிரா' இந்தி படத்தில் நடத்து வருகிறார். இது தமிழில் வந்த ‘மெளன குரு' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.