தமிழ் ஸ்டன்ட் கலைஞர்களுடன் மோதல்- சல்மான் படத்துக்கு ரூ 25 கோடி நஷ்டம்!

Fefsi Deadlock Salman Khan Film Loses 25 Crore

மும்பை: சல்மான் கானின் மென்டல் படஷூட்டிங்கில் பெப்சி அமைப்பின் ஸ்டன்ட் கலைஞர்களுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கடந்த 12 நாட்களாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மென்டல் படத்துக்கு ரூ 25 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறியுள்ளார் சல்மானின் தம்பி சோஹைல் கான்.

மென்டல் படத்தில் பெப்சி அமைப்பைச் சேர்ந்த 50 சதவீத ஸ்டன்ட் கலைஞர்களை பயன்படுத்தவில்லை, பாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட குறைவான சம்பளம்தான் வழங்குகிறார்கள் என்று குற்றம்சாட்டி பெப்சி அமைப்பினர் படப்பிடிப்பைப் புறக்கணித்தனர்.

இதையடுத்து இரு பாலிவுட்டும் கோலிவுட்டும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதுபற்றி பெப்சி நிர்வாகிகள் மும்பை சென்று நடத்திய பேச்சுவார்த்தையும் பலனளிக்கவில்லை.

இதுபற்றி மென்டல் தயாரிப்பாளர் சோஹைல் கான் கூறுகையில், "தென்னிந்திய ஸ்டன்ட் மாஸ்டர்தான் இப்படத்துக்கு நியமிக்கப்பட்டார். அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கான்பெடரேஷன் விதிப்படி 70 சதவீதம் ஸ்டன்ட் கலைஞர்களை அந்த அமைப்பிலிருந்து பயன்படுத்த வேண்டும், 30 சதவீதம் பிற கலைஞர்களை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பெப்சியோ தங்கள் அமைப்பிலிருந்து 50 சதவீதம் பேரைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி, ஷூட்டிங்கைப் புறக்கணித்துவிட்டனர். இதுதான் பிரச்சினை...," என்றார்.

அகில இந்திய திரைப்பட சம்மேளன தலைவர் தர்மேஷ் திவாரி கூறுகையில், "மார்ச் 2013 ல் செய்த ஒப்பந்தப் படி நடக்கவில்லை பெப்சி. திரும்ப திரும்ப 50 சதவீத கலைஞர்களை பெப்சியிலிருந்தே எடுக்க வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள்," என்றார்.

இந்த நிலையில் சில தயாரிப்பாளர்கள் தென்னிந்திய ஸ்டன்ட் மாஸ்டர்களை தங்கள் படத்திலிருந்து நீக்கி விட்டு பாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்களை நியமிக்க ஆரம்பித்துள்ளார்களாம்.

 

நடிகை ரேவதி- சுரேஷ் மேனன் விவாகரத்து

Actress Revathi Get Divorce

நடிகை ரேவதிடைரக்டர் சுரேஷ் மேனன் தம்பதியினருக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் முறைப்படி விவாகரத்து அளித்து உத்தரவிட்டது.

நடிகை ரேவதிக்கும், கேமராமேனும், டைரக்டருமான சுரேஷ் மேனனுக்கும், 1986ல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பின்னர் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரேவதி பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சுரேஷ்மேனன் தயாரித்த புதியமுகம் படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

27 ஆண்டுகால மணவாழ்க்கையில் அவர்கள் குழந்தைகள் எதுவும் இல்லை. இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள, குடும்ப நல கோர்ட்டில்கடந்த 2012ம் ஆண்டு அக்டோபரில், இருவரும் மனுத் தாக்கல் செய்தனர்.

ஆறு மாதங்களுக்குப் பின், இவ்வழக்கு, நீதிபதி, ராஜா சொக்கலிங்கம் முன், ஏப்ரல் 6ம் தேதி விசாரணைக்கு வந்தது. நடிகை ரேவதியும், சுரேஷ் மேனனும் ஆஜராயினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி இன்று இருவருக்கும் பரபஸ்பர விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

 

என் படத்தில் நடிக்க நடிகர்கள் மறுக்கின்றனர்: இயக்குனர் சேரன் வருத்தம்

Actors Keep Me At Bay Cheran

சென்னை: என் படத்தில் நடிக்க நடிகர்கள் மறுக்கின்றனர் என்று இயக்குனர் சேரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சேரன் ஜே.ஜே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற பெயரில் படம் ஒன்றை இயக்குகிறார். இதில் நாயகனாக சர்வானந்த், நாயகியாக நித்யா மேனன், காமெடியனாக சந்தானம் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

அப்போது சேரன் பேசியதாவது,

ஆட்டோகிராப் படத்தில் நடிக்குமாறு பலரை அணுகினேன். அவர்கள் மறுத்ததால் கோபத்தில் நானே நடித்துவிட்டேன். அதைத் தொடர்ந்து தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்களில் நடித்தேன். என்னதான் நடித்தாலும் படம் இயக்க வேண்டும் என்ற அரிப்பு இருந்தது. அதனால் தான் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை இயக்குகிறேன்.

நான் பார்த்த பல சம்பவங்களின் பாதிப்பு தான் இந்த படம். தற்போதைய இளைஞர்களுக்கு தேவையான விஷயங்கள் இந்த படத்தில் இருக்கும். காமெடிக்கு சந்தானம் உள்ளார். இந்த படத்தை துவங்கும்போது பல நடிகர்கள் பிசியாக இருந்தனர். இன்னும் சில நடிகர்களுக்கு இந்த படத்தில் நடிக்க இஷ்டம் இல்லை. அதனால் கதையை கேட்காமலேயே நிராகரித்துவிட்டனர்.

ஆட்டோகிராப் படத்தை ஆரம்பித்தபோது வந்தது போன்று கோபம் வந்தது. இந்நிலையில் சர்வானந்த் கதைக்கு பொறுத்தமாக இருந்ததால் அவரிடம் கதை சொன்னேன். உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். நித்யா மேனனும் கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். நாயகியை நாயகன் தவறாக பார்க்காத கதை. படத்தை முடித்துவிட்டோம். என் முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் இது மாடர்னாக இருக்கும் என்றார்.

 

லயோலா கல்லூரி கட்டிட நிதிக்காக சூர்யா, ஜெயம் ரவி பங்கேற்கும் கலை விழா!

Call Alma Mater Loyolites Sing Dance

சென்னை: கல்லூரியின் வணிகவியல், பொருளியல் துறையின் கட்டட நிதிக்காக நடத்தப்படும் கலை நிகழ்ச்சியில் சூர்யா, ஜெயம் ரவி மற்றும் பல பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் இயக்கம் சார்பில், அன்றும் இன்றும் என்றும் லயோலாவின் கல்லூரிப் பாதை என்ற பெயரில் கலை விழா வரும் 28-ஆம் தேதி லேடி ஆண்டாள் கலையரங்கில் நடைபெறவுள்ளது.

இது குறித்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இயக்குநர் சேவியர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

கல்லூரியின் வணிகவியல், பொருளியல் துறையின் கட்டட நிதிக்காக இந்த கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், ஆலப்ராஜ், பின்னணி பாடகி சுசித்ரா, பாடகர் ராகுல் நம்பியார் உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பாடுகின்றனர்.

ஜான் பிரிட்டோ குழுவினருடன், நடிகர்கள் ஜெயம் ரவி, அருண் விஜய், ஆனந்த் பாபு, சாந்தனு பாக்யராஜ் நடனமாடவுள்ளனர்.

பவர் ஸ்டார் சீனிவாசன், தம்பி ராமையா, ஈரோடு மகேஷ், அப்புக்குட்டி ஆகியோர் பங்குபெறும் நகைச்சுவை நிகழ்ச்சியை சின்னி ஜெயந்த் தொகுத்து வழங்கவுள்ளார்.

கலைத் துறைகளில், நடிப்பு, தயாரிப்பு, நடனம், இசை, நகைச்சுவை, இயக்கம் என தங்களுக்கென தனித்தன்மையை ஏற்படுத்திக் கொண்ட லயோலா கல்லூரி மாணவர்களுக்கு லயோலா அவார்ட்ஸ் ஆஃப் எக்ஸலென்ஸ் ஃபார் மீடியா ஆர்ட்ஸ் என்ற விருதுகள் வழங்கப்படவுள்ளன.

நடிகர்கள் ராதாரவி, சரத்குமார், பிரபு, வெங்கடேஷ், விஷால், விக்ரம், சூர்யா, எஸ்.ஜே. சூர்யா, அரவிந்த்சாமி, விஜய் ஆண்டனி, சிபிராஜ், சக்தி, பாஸ்கி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் மற்றும் விவரங்களுக்கு 9551815065 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

கமல்ஹாஸன் நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்கித் தயாரிக்கிறார் என்று செய்திகள் கிளம்பியுள்ளன.

Kamal Join Hands With Lingusamy

கமல்ஹாஸன் நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்கித் தயாரிக்கிறார் என்று செய்திகள் கிளம்பியுள்ளன.

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் முயற்சிகளில் தீவிரமாக உள்ளார் கமல்ஹாஸன்.

இந்தப் படத்துக்குப் பிறகு ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஒரு படம் செய்து கொடுப்பார் என்று கூறப்பட்டது. இன்னொரு பக்கம், அவரது ஹாலிவுட் பட முயற்சிகளையும் இந்த ஆண்டு இறுதியில் மேற்கொள்வார் என்று கூறி வந்தனர்.

ஆனால் எதுவும் உறுதியான தகவல்களாக இல்லாத நிலையில், இப்போது புது பரபரப்பு கிளம்பியுள்ளது.

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க, லிங்குசாமி இயக்கும் படத்தில் கமலிடம் பேச்சு நடத்தியுள்ளனர்.

கமலும் இதில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அக்ஷய் குமார் நடித்த ஒரு இந்திப் படத்தை ரீமேக் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கமல் அதை விரும்பாததால் புதிய கதையை சொன்னாராம் லிங்குசாமி.

கமலுக்கும் கதை பிடித்துப் போனதால், ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

4 கோடிக்கு மேல் கடன் - பிரபல சினிமா எடிட்டர் விஷம் குடித்தார்!

சென்னை: ரூ 4 கோடிக்குமேல் கடன் சுமை ஏறிவிட்டதால், சமாளிக்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார் பிரபல சினிமா படத் தொகுப்பாளர் (எடிட்டர்) ஜெயச்சந்திரன்.

விஜயகாந்த் நடித்த உழவன் மகன் படத்தில் தொடங்கி, ஏராளமான தமிழ்ப் படங்களுக்கு படத் தொகுப்பாளராகப் பணியாற்றியவர் ஜெயச்சந்திரன், விஜயகாந்த் நடித்த பெரும்பாலான படங்களின் எடிட்டரும் இவர்தான்.

தமிழக அரசிடம் 5 முறை சிறந்த படத் தொகுப்புக்கான விருதினைப் பெற்றவர் ஜெயச்சந்திரன்.

சொந்தமாக விஜயகாந்த் நடித்த மனித தர்மம், இந்தப் படை போதுமா?, தங்கப்பாப்பா போன்ற படங்களைத் தயாரித்தார்.

ஆனால் இதில் ஒருபடம் கூட ஓடவில்லை. இதனால் அவருக்கு கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்துவந்தது. கிட்டத்தட்ட ரூ 4 கோடியைத் தாண்டிவிட்டதாம் இந்தக் கடன்.

கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடி அதிகரித்ததால், தற்கொலை செய்ய விஷம் குடித்துள்ளார் ஜெயச்சந்திரன்.

இதைக் கண்டுபிடித்துவிட்ட அவர் மனைவி தேவி, உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஜெயச்சந்திரனை சேர்த்துள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தாலும், நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயச்சந்திரன் தந்தை கோவிந்தசாமியும் அக்காலத்தில் பெரிய படத்தொகுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோச்சடையான் ரஜினி புதிய ஸ்டில்... வெளியிட்டார் சௌந்தர்யா!

சென்னை: ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்த கோச்சடையான் படத்தில் ரஜினியின் புதிய ஸ்டில்லை நேற்று வெளியிட்டார் படத்தின் இயக்குநரான சௌந்தர்யா.

இந்தப் படத்தில் தந்தை - மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. அதாவது அவதார் படத்தைப் போல ரஜினியை மோஷன் கேப்சரிங் செய்து அவரது புதிய உருவத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

soundarya releases new still rajini from kochadaiyaan   
ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த நடிகரை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அப்படியெல்லாம் பார்க்க வசதியான தொழில்நுட்பம் இது. கோச்சடையானில் ரஜினியை மிக மிக இளமையாக, 6 பேக் உடல் அமைப்புடன் காட்டியுள்ளனர்.

இதுவரை இந்தப் படத்திலிருந்து இரண்டு ஸ்டில்களை மட்டுமே இயக்குநர் சௌந்தர்யா வெளியிட்டிருந்தார்.

இப்போது மூன்றாவது ஸ்டில்லை நீண்ட இடைவெளிவிட்டு ரிலீஸ் செய்துள்ளார். இந்த புதிய ஸ்டில் வெளியானதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. சமூக இணையதளங்களில் நேற்றிலிருந்து இந்த ஸ்டில்தான் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

 

ஆல் இன் ஆல் அழகுராஜாவில் ஒரே டேக்கில் நடித்து அசத்தும் காஜல்

Kajal Stuns In Azhagu Raja Team

சென்னை: ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் ஒரே டேக்கில் நடித்து அசத்துகிறாராம் காஜல் அகர்வால்.

கார்த்திக்கு பொருத்தமான ஜோடி என்று பேசப்படும் நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். கார்த்தியும், காஜலும் முதன்முதலாக ஜோடி சேர்ந்த படம் நான் மகான் அல்ல. அந்த படத்தில் அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி பேசப்பட்டது. இதையடுத்து அவர்கள் தற்போது ஆல் இன் ஆல் அழகுராஜாவில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

ஆல் இன் ஆல் அழகுராஜா படக்குழுவை காஜல் அசத்தியுள்ளாராம். அம்மணி ஒரே டேக்கில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறாராம். நான் மகான் அல்ல படம் தான் சரியாகப் போகவில்லை, இந்த படமாவது இந்த ஜோடிக்கு கை கொடுக்கிறதா என்று பார்ப்போம்.

காஜல் கார்த்தி படம் தவிர விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.