நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாஸன்!

Shuthi Slips The Swimming Pool   

இந்திப் படப்பிடிப்பிபோது நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்து காயமடைந்தார் பிரபல நடிகை ஸ்ருதிஹாஸன்.

இந்தியில் பிரபு தேவா இயக்கத்தில் ராமைய வஸ்தாவய்யா என்ற படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாஸன். ஒரு காட்சியைப் படமாக்கும்போது இயக்குநர் பிரபுதேவாவுடன் பேசிக் கொண்டே நடந்து வந்தபோது சட்டென்று நீரில் வழுக்கி விழுந்தார் ஸ்ருதி.

அவருக்கு காலில் லேசான அடியும், சுளுக்கும் ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

பூரண ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அடுத்த நாள் வழக்கம் போல ஷூட்டிங்குக்கு வந்தார் ஸ்ருதி.

ராமையா வஸ்தாவைய்யா படத்தில் கிரிஷ் குமார், சோனு சூட், ரந்திர் கபூர், பூனம் தில்லான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரபு தேவா இயக்குகிறார்.

 

குறும்பட இயக்குனர் புஸ்கின் ராஜா இயக்கும் 'நே'

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் நிறைய அர்த்தமுள்ள வரவுகள் தெரிய ஆரம்பித்துள்ளன. திரைப்படம் உருவாக்குவதை ஒரு தொழிலாக கருதாமல் அனுபவமாக எண்ணி வருபவர்கள் இவர்கள். குறிப்பாக யாரிடமும் உதவியாளராக இல்லாமல் குறும்படங்கள் செய்து, பின் நேரடியாக திரைக்கு வருபவர்கள் இந்த படைப்பாளிகள்.

இந்தப் பட்டியலில் இடம்பெற வருகிறார் புஸ்கின் ராஜா. இவர் இயக்க இருக்கும் முதல் படத்துக்கு 'நே' என்று தலைப்பிட்டுள்ளார். இது ஒரு க்ரைம் த்ரில்லர்.

nay crime thriller from debutant debutant director
அது என்ன நே? நேயம், அன்பு, ஈரம், இரக்கம் என இதற்கு பல அர்த்ததங்கள் இருந்தாலும், எந்த வித அன்பும் இரக்கமும் ஈரமும் இல்லாமல் வாழ்கிற சிலர் பற்றிய கதைதான் நே என்கிறார் இயக்குநர்.

'தினசரி பத்திரிக்கைகளை புரட்டினால் நம் கண்ணில் வித விதமான குற்ற செயல்கள் படுகின்றன. சிறுவர்கள் செய்யும் குற்றங்கள், தகாத உறவுகள், பாலியல் குற்றங்கள் பல தினம் தினம் நடக்கின்றன. அப்படி கேள்வி பட்ட எங்கோ நடந்த சம்பவங்கள்தான் கதையின் அடிப்படை. மூன்று பேர் சம்பந்தப்பட்ட மூன்று சம்பவங்களின் தொகுப்புதான் இந்த த்ரில்லர் கதை," என்கிறார் புஸ்கின் ராஜா.

பொதுவான திரைக்கதை நெறிகளை பின்பற்றாமல் அதை உடைக்கும் வகையில் புதிய திரைக்கதை மொழியை உருவாக்க முயற்சித்து உள்ளாராம் புஸ்கின் ராஜா. இவர் இதற்கு முன்பு ஆக்க்ஷன் (Action) என்னும் குறும்படத்தை இயக்கி சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றது.

இவர் யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாதவர் என்பது மிகவும் குறிப்பிடதக்கது
இந்தப் படத்துக்கு சாரு நிவேதிதா வசனம் எழுதுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் செழியனின் சகோதரர் வீரகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மாபியா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

ஜெனீவாவில் தில்லுமுல்லு, சுட்டகதை, நளனும் நந்தினியும் இசைவெளியீட்டு விழா!

சென்னை: வேந்தர் மூவிஸ் தயாரித்த தில்லு முல்லு உள்பட 3 படங்களின் இசை வெளியீட்டு விழா சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடக்கிறது. அத்துடன் எதிர்நீச்சல் படத்தின் வெற்றி விழாவையும் ஜெனீவாவில் நடத்துகின்றனர்.

வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் படம் ‘தில்லு முல்லு'. இது ரஜினி நடித்த ‘தில்லு முல்லு' படத்தின் ரீமேக். சிவா, இஷா தல்வார் நடித்துள்ளனர், பத்ரி இயக்கியுள்ளார்.

மேலும் சுட்டகதை, நளனும் நந்தினியும் ஆகிய இரு படங்களை வேந்தர் மூவீஸ் வாங்கி வெளியிடுகிறது.

3 tamil movies audio launch at geneva

இந்த மூன்று படங்களின் இசை வெளியீட்டை சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நடத்துகின்றனர்.

வேந்தர் மூவிஸ் வாங்கி வெளியிட்ட ‘எதிர்நீச்சல்' படம் படத்தின் வெற்றி விழாவையும் அத்துடன் சேர்த்து நடத்துகின்றனர்.

ஜெனீவாவில் உள்ள விக்டோரியா அரண்மனையில் ஜூன் 1 ம் தேதி இவ்விழா நடக்கிறது. இதில் இத்தாலிய கலைஞர்களின் நடன நிகழ்ச்சி மற்றும் தமிழ் பாடகர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

இவ்விழாவுக்கு பாரிவேந்தர் தலைமை தாங்குகிறார். தனுஷ், சிவகார்த்தி கேயன், பிரியா ஆனந்த், சிவா, பிரகாஷ்ராஜ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 

ஸ்ரீ சங்கரா டிவியில் ஸ்ரீ ராகவேந்திர விஜயம்…

தமிழகத்தில் அவதரித்து, தரணி போற்றும் ஜகத்குருவாய், மஹாபிரபுவாய், வந்தாரை வாழ வைக்கும் வள்ளலாய், நோய் தீர்க்கும் மருத்துவராய், ஏகாந்த புருஷராய் மந்த்ராலயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளுக்கான பிரத்யேக நிகழ்ச்சி ஸ்ரீ ராகவேந்திர விஜயம்.

மகான் ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்த இடம், வளர்ந்த இடம், படித்த இடம், வாழ்ந்த இடம், வாழ்கிற இடம் மட்டுமின்றி அவரின் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் இந் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ஒரு மிருத்திகா பிருந்தாவன தரிசனம், மந்த்ராலய தரிசனம், பக்தர்களின் அனுபவங்கள், ஆன்மீக அறிஞர்களின் உரை, பிரபலமானவர்களுடன் உரையாடல்கள் இடம்பெறுகின்றன .

sri ragavendra vijayam on sri sankara tv

உலகில் உள்ள அனைத்து பிருந்தாவனங்களையும், வாரமொரு பிருந்தாவனமாக ஒளிபரப்பி, ஸ்ரீ ராகவேந்தரரின் புகழை, பாமரனும்

அறிந்து துன்பமில்லா வாழ்வு பெற, நல்வாழ்விற்கு வழிகாட்டும் ஆன்மீக நிகழ்ச்சி......

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிரும் இரவு 8.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒளிபரப்பாகிறது ஸ்ரீ ராகவேந்திர விஜயம்.

 

மாணவியைக் கடத்த முயன்ற வழக்கு: முன்ஜாமீன் கேட்டு சனா கான் மனு!

Sana Khan Seeks Anticipatory Bail

மும்பை: மாணவியைக் கடத்த முயன்ற வழக்கில் தேடப்படும் நடிகை சனா கான், முன் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார்.

பிரபல நடிகை சனா கான் தன் உறவுக்கார இளைஞர் காதலித்த 15 வயதுப் பெண்ணைக் கடத்த தூண்டுதலாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சனா கானின் உறவினரான நாவெட், சான்பாடாவைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவியைத் திருமணம் செய்ய தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். இதனால், அவருடனான தொடர்பை மாணவி துண்டித்தார்.

கடந்த ஏப்ரல் 30ம் தேதி மாலை, டியூஷன் முடித்து வீட்டுக்கு மாணவி திரும்பி கொண்டிருந்தபோது, சனா கானின் உறவுக்கார இளைஞனும் அவன் நண்பர்களும் மாணவியை காரில் கடத்த முயன்றனர்.

மாணவி அவர்களிடமிருந்து தப்பித்து வீட்டுக்கு வந்தபோது, அங்கு சனா கான் மாணவியின் தாயாருடன் கோபமாக வாக்குவாதம் செய்து தொண்டிருந்தாராம்.

இது பற்றி போலீசில் மாணவியின் தாயார் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார், நாவெட், அவருடைய நண்பர்களை கைது செய்தனர். சனா கானை தேடி வந்தனர்.

ஆனால் சனா கானுக்கு சல்மான்கான் உள்ளிட்ட பெரும் புள்ளகள் ஆதரவளித்தனர். சல்மானின் மென்டல் படத்தில் சனாதான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்குமாறு மும்பை நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் சனா கான்.

 

விஜய்யிடம் பிரியாணியுடன் சென்று வெறுங்கையுடன் திரும்பிய வெங்கட்

Venkat Prepared Biriyani Vijay

சென்னை: பிரியாணி படத்தின் கதையை இயக்குனர் வெங்கட் பிரபு முதலில் விஜய்யிடம் தான் தெரிவித்துள்ளார். அவர் மறுத்த பிறகே அந்த வாய்ப்பு கார்த்திக்கு சென்றுள்ளதாம்.

வெங்கட் பிரபு அஜீத் குமாரை வைத்து மங்காத்தா படத்தை எடுத்து ரிலீஸ் செய்தார். படமும் ஹிட்டானது. அதன் பிறகு அவர் பிரியாணி என்ற படத்தை இயக்க தயாரானார். அவர் பிரியாணி கதையை முதலில் இளைய தளபதி விஜய்யிடம் தான் தெரிவித்தாராம். ஆனால் விஜய் அதில் நடிக்க ஒப்புக் கொள்ளாததால் அந்த வாய்ப்பு கார்த்திக்கு சென்றுள்ளது.

கார்த்திக்கு கதை பிடிக்கவே அவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மங்காத்தா ஷூட்டிங்கின்போது அஜீத் படக்குழுவினருக்கு பிரியாணி செய்து கொடுத்ததால் தனது படத்திற்கு வெங்கட் பிரியாணி என்று பெயர் வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் படத்தின் கதைக்கும் பிரியாணி என்ற பெயருக்கும் தொடர்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

விஜய் மட்டும் ஒப்புக் கொண்டிருந்தால் அடுத்தடுத்து 2 பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்த பெருமை வெங்கட் பிரவுக்கு கிடைத்திருந்திருக்கும்.

 

தீயா வேலை செய்யணும் குமாரு Vs தில்லு முல்லு

வரும் ஜுன் 14-ம் தேதி இரண்டு பெரிய படங்கள் வெளியாகின்றன. இரண்டுமே காமெடி படங்கள், ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ள படங்கள்.

முதல் படம் தீயா வேலை செய்யணும் குமாரு. சித்தார்த், ஹன்சிகா மற்றும் சந்தானம் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் சுந்தர் சி. இதற்கு மேல் அறிமுகமே தேவையில்லை இந்தப் படத்துக்கு. சுந்தர் சி என்ற வார்த்தையே படத்தின் மினிமம் கியாரண்டிதான்!

theeya velai seyyanum kumaru vs thillu mullu    | தில்லு முல்லு  

யுடிவி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு க்ளீன் யு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

அடுத்த படம் தில்லு முல்லு. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த க்ளாஸிக் காமெடிப் படமான பழைய தில்லுமுல்லுவின் ரீமேக் இது.

வேந்தர் மூவீஸ் தயாரிப்பான இந்தப் படத்தில் சிவா, பிரகாஷ் ராஜ், இஷா தல்வார் நடித்துள்ளனர்.

இந்த இரண்டு படங்களும் ஜூன் 14-ம் தேதியை குறிவைத்து களமிறங்கத் திட்டமிட்டுள்ளன. ஆனால் விநியோகஸ்தர்களோ வேறு மாதிரி கணக்குப் போடுகின்றனர். இரண்டுமே பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ள காமெடிப் படங்கள். இரண்டையும் ஒன்றாக இறக்குவதைவிட, ஒரு வாரம் முன்னே பின்னே களமிறக்கினால் பலமாக கல்லா கட்டலாமே என்பதுதான் அந்தக் கணக்கு!