ஆம்பள விமர்சனம்

Rating:
3.0/5

-ஷங்கர்

நடிப்பு: விஷால், ஹன்சிகா, சந்தானம், பிரபு, ரம்யா கிருஷ்ணன், கிரண்
ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்
பிஆர்ஓ: ஜான்சன்
இசை: ஆதி
தயாரிப்பு: விஷால்
இயக்கம்: சுந்தர் சி

விமர்சனங்கள், அறிவுஜீவிகள், குறைகளை மட்டுமே பிரதானமாகப் பார்ப்பவர்கள் என யாரைப் பற்றியும் இயக்குநர் சுந்தர் சி கவலைப்பட்டதில்லை.

அவரைப் பொறுத்தவரை, பணம் கொடுத்துவிட்டு உள்ளே வரும் ரசிகர்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். 'நோ லாஜிக்.. ஒன்லி லாஃப்' என்பதுதான் அவர் பாணி. அதைத்தான் தன் அத்தனை படங்களுக்கும் அப்ளை செய்து வருகிறார்.

ஆம்பள விமர்சனம்

இந்த ஆம்பளயும் அப்படித்தான்.

படங்களில் பார்த்த, சொந்த பகையால் பிரிந்த குடும்பம் ஹீரோவால் ஒன்று சேரும் கதை.

பிரபுவுக்கு விஷால் உள்பட மூன்று மகன்கள். ஆனால் அப்பா விஜயகுமாரின் மரணம் பிரபு மீது கொலைப் பழியாக விழுகிறது. இதனால் தனது இரு மகன்களையும், மூன்று சகோதரிகளையும் பிரிகிறார். ஒரு கட்டத்தில் பிரிந்த மகன்களுடன் சேர்கிறார். தனது பிளாஷ்பேக்கைச் சொல்கிறார். இப்போது பிரபுவின் மூன்று தங்கைகளுக்கும் மூன்று மகள்கள். அவர்களை தனது மூன்று மகன்களுக்கும் கட்டி வைக்க ஐடியா தருகிறார். அதன்படி குடும்பம் ஒன்றாகச் சேர்வதுதான் ஆம்பள கதை.

ஆம்பள விமர்சனம்

அடிதடி, நகைச்சுவை, திகட்டத் திகட்ட க்ளாமர்.. இதுதான் ஆம்பள படம். கதை பழசு, காட்சிகள் கூட பழசுதான் என்றாலும், பார்ப்பவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அங்கே தப்பிக்கிறது படம்.

விஷால் மீண்டும் இந்தப் படத்தில் தன் பழைய மசாலா ரூட்டுக்குத் திரும்பியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் பார்ப்பவர்களுக்கே மூச்சு முட்டுகிறது, அவர் அடிப்பது! விட்டால் இனி தரையில் சண்டையே போட மாட்டார் போலத் தெரிகிறது.. அப்படிப் பறக்கிறார் மனிதர்.

சந்தானம் இந்தப் படத்திலும் கலக்குகிறார். அவர் இருக்கும் வரை படத்திலும் சரி, பார்வையாளர்கள் மத்தியிலும் சரி, கலகலப்புக்கு பஞ்சமே இல்லை. குறிப்பாக அவர் படிப்படியாக பதவி இறக்கம் செய்யப்படும் விதம், நல்ல கற்பனை ப்ளஸ் காட்சியமைப்பு!

ஆம்பள விமர்சனம்

ஹன்சிகா... ஆண்டவன் கொடுத்த உடல் அழகை வச்சிக்கிட்டு வஞ்சனை எதற்கு என்று படம் முழுக்க வாரியிறைத்திருக்கிறார். முன்னணி நடிகையாகவே தொடர அது போதாதா?

பிரபு, ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா, சதீஷ் என சுந்தர் படங்களுக்கே உரிய நட்சத்திரக் கூட்டம் இந்தப் படத்திலும் தொடர்கிறது. படத்தை ஜாலியாக நகர்த்த இவர்கள் பங்களிப்பு ரொம்பவே துணை நிற்கிறது.

வழக்கமாக வசனங்களில் காமெடியை மட்டுமே தூக்கலாக வைக்கும் சுந்தர் சி, இந்தப் படத்தில் கொஞ்சம் காமநெடியைக் கலந்துவிட்டார். ஏகத்துக்கும் இரட்டை அர்த்த வசனங்கள். குறிப்பாக ஹன்சிகாவின் உடல் அமைப்பை சந்தானம் கிண்டலடிக்கும் காட்சி.

ஆம்பள விமர்சனம்

அதேபோல, சண்டைக் காட்சிகளைப் பார்க்கும்போது பேரரசு அல்லது ஹரி படத்துக்கு வந்துவிட்டோமா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆல்பம் மூலம் வெளியில் தெரிந்த ஆதி இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர். சில பாடல்கள் கேட்க நன்றாகவே உள்ளன. பின்னணி இசையும் ஓகேதான்.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிதும் உதவியிருக்கிறது.

முதல் பாராவில் சொன்னதையே மீண்டும் படிக்க. ஒரு முறை பார்க்கத் தகுந்த படம்தான்!

 

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடிக்க மறுக்கும் நடிகை யாமி கௌதம்

மும்பை: நடிகை யாமி கௌதம் பாலிவுட்டில் கவனம் செலுத்துவதற்காக டோலிவுட், கோலிவுட் மற்றும் சாண்டல்வுட் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறாராம்.

கௌரவம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் நடிகை யாமி கௌதம். விக்கி டோனார் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான யாமிக்கு அங்கு நல்ல கிராக்கி உள்ளது. அதே சமயம் தமிழ், தெலுங்கு, கன்னட திரை உலகிலும் அவருக்கு மவுசு உள்ளது. இதனால் பல தயாரிப்பாளர்கள் அவரை அணுகி நடிக்க கேட்டால் கிடைக்கும் ஒரே பதில் முடியாது என்பது தான்.

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடிக்க மறுக்கும் நடிகை

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், ரவி தேஜா ஆகியோரின் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை கூட ஏற்க யாமி மறுத்துவிட்டாராம். அவரவர் பட வாய்ப்பு கிடைக்க மாட்டேன் என்கிறதே என்ற கவலையில் இருக்கையில் யாமி ஏன் இப்படி செய்கிறார் என்று நினைக்கிறீர்களா?

அவர் இந்த ஆண்டு பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளாராம். அதனால் பிற மொழி படங்களில் நடிக்க மறுத்து வருகிறார். அவர் நடித்துள்ள பத்லாபூர் இந்தி படம் வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸாக உள்ளது.

அவர் தற்போது ஆக்ரா கா தாப்ரா, ஜுனூனியாத் ஆகிய இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

 

'புலி' படக்குழுவினருக்கு பொங்கல் பரிசாக தங்க காசு, திருப்பதி லட்டு கொடுத்த விஜய்

சென்னை: பொங்கல் பண்டிகை அன்று விஜய் தனது புலி படக்குழுவினருக்கு தங்க காசு மற்றும் திருப்பதி லட்டு ஆகியவற்றை கொடுத்து அசத்தியுள்ளார்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் புலி. இதில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். சென்னையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் சில பாடல் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது.

'புலி' படக்குழுவுக்கு தங்க காசு, திருப்பதி லட்டு கொடுத்த விஜய்

இதையடுத்து புலி படக்குழுவினர் தற்போது தலக்கோணத்தில் தங்கி பணியாற்றி வருகின்றனர். படக்குழு பொங்கலுக்கு கூட விடுப்பு எடுக்காமல் வேலை செய்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை விஜய் புலி படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.

பண்டிகை தினத்தில் கூட வேலை பார்த்த படக்குழுவினர் 265 பேருக்கு விஜய் தங்க காசு மற்றும் திருப்பதி லட்டு கொடுத்து அசத்தியுள்ளார். விஜய் அளித்த அன்பு பரிசை பார்த்து படக்குழுவினர் நெகிழ்ந்துவிட்டனர்.

புலி படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். அவர் படத்தில் வரும் முதல் பாடலுக்கான ரெக்கார்டிங்கை முடித்ததும் அவரது இசையில் அசந்த தயாரிப்பாளர்கள் அவருக்கு தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ளனர்.

 

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத 'ஐ'- ஒன்இந்தியா வாசகர்கள் கருத்து!

சென்னை: 'ஐ' திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும், இயக்குநர் ஷங்கர் சொதப்பிவிட்டார் என்றும் 41 சதவீதம் ஒன்இந்தியா வாசகர்கள், கூறியுள்ள நிலையில், அருமையான படம் என்று 26.87 சதவீதம் பேர்தான் கூறியுள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் ஐ. பல ஆண்டுகால உழைப்புக்கு பிறகு இப்படம், கடந்த 14ம்தேதி திரைக்கு வந்தது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத 'ஐ'- ஒன்இந்தியா வாசகர்கள் கருத்து!

படத்தில் பிரமாண்டத்திற்கு பஞ்சமில்லை என்றபோதும், ஷங்கரின் வழக்கமான இயக்குநர் 'டச்' இல்லை என்று ரசிகர்கள் பலரும் குறைபட்டுக் கொண்டனர். சமூக கருத்துள்ள படங்களில் ஷங்கர் பின்னிபெடலெடுப்பார் என்றும், காதல் கதைக்களம் என்றால் ஷங்கர் தடுமாறுவது வழக்கம்தான் என்றும் சில நடுநிலை ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இன்னும் சில ரசிகர்களோ, ஷங்கர் படமா இது, ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா இப்படி உள்ளது என்று கருத்துக்களை ஆவேசமாக கூறிவருகின்றனர். சரி.. ஒன் இந்தியா வாசகர்களிடமே கருத்தை கேட்டுவிடுவோமே, அவர்களுக்குதான் உலக ஞானம் அதிகமாயிற்றே என்று நினைத்து, கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

ஐ திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. இதுவரை, 34 ஆயிரத்து 955 பேர் வாக்களித்துள்ளனர். அதில் மீண்டும், மீண்டும் பார்க்க வேண்டிய சூப்பர் படம் என்று 9393 பேர் தெரிவித்துள்ளனர். இது 26.87 சதவீதம் வாக்குகளாகும்.

எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று 9061 பேர் அதாவது, 25.92 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இது கிட்டத்தட்ட படம் பிடித்திருக்கிறது என்று சொல்வோரை சமன் செய்யும் அளவுக்கு உள்ளது. ஒரு பிரமாண்ட படத்திற்கு, அதுவும் ஷங்கர் இயக்கிய படத்திற்கு எதிராக இவ்வளவு பேர் வாக்களித்திருப்பதே படத்தின் சரிவை காண்பிப்பதாக உள்ளது.

இதில் இன்னும் சிலர், ஷங்கர் சொதப்பி விட்டார் என்று கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 5423. சதவீதத்தில் இது 15.51.

அதேநேரம் படத்தை பார்க்கவில்லை என்று சொன்னோர் எண்ணிக்கை 11,078 பேராகும். மொத்த 'வாக்காளர்களில்' இது 31.69 சதவீதமாகும்.

ஆக.. எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சொன்னோரும், ஷங்கர் சொதப்பிவிட்டார் என்று சொன்னோரும், ஐ படத்தின்மீதான அதிருப்தியில் உள்ளவர்கள் என்பது உறுதியாகிறது. இவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை, சுமார் 41 சதவீதமாகும். படம் பிடித்திருக்கிறது என்று சொன்னவர்கள் வெறும் 26.87 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பெரிசா எதிர்ப்பார்க்காதீங்க...- என்னை அறிந்தால் பற்றி கவுதம் மேனன் கமெண்ட்

அதிக எதிர்ப்பார்ப்புகளே சில படங்களுக்கு ஆபத்தாக அமைந்துவிடுவதை இப்போதல்லாம் பார்க்க முடிகிறது.

அப்படி ஒரு நிலை அஜீத்தை வைத்து தான் உருவாக்கியுள்ள பெரிசா எதிர்ப்பார்க்காதீங்க...- என்னை அறிந்தால் பற்றி கவுதம் மேனன் கமெண்ட்

அதனால் படம் பார்க்கும் ரசிகர்களை இப்போதிலிருந்தே தயார்ப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அஜீத் நடித்துள்ள இந்தப் படத்தைப் பார்க்க பெரிய எதிர்ப்பார்ப்புடன் வர வேண்டாம். இது ஒரு சிம்பிள் படம். வழக்கமாக அஜீத் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது இதில் இருக்காது," என்று குறிப்பிட்டுள்ளார்.

தனக்காக தேவையில்லாமல் எந்த காட்சியையும் திணிக்க வேண்டாம். ஸ்க்ரிப்ட்படி எடுங்கள் என்று ஏற்கெனவே கவுதமிடம் கூறியிருந்தாராம் அஜீத். அவரது பேச்சை மீறாமல் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், கதைக்கு என்ன தேவையோ அதைமட்டும் செய்திருக்கிறார் அஜீத் என்கிறார்கள்.

 

கல்யாண விசயத்தில் கன்பியூஸ் ஆன கும்கி

பத்தாப்பு படிக்கும் போதே படத்தில் நடிக்க வந்து பல படங்கள் ஹிட் அடித்த பச்சப்புள்ள கும்கிக்கு இப்போ குழப்பம் கூடிப்போச்சாம்.

சினிமாவில் டூயட் பாடுவது போல நிஜத்தில் யாருடனாவது டூயட் பாடுவீர்களா என்று கேட்டால் ஐயோ... நான் சின்னப்புள்ளையாக்கும் என்று சிணுங்குவார்.

இப்போது ப்ளஸ் டூ வரும் அவர் பருத்தி வீரனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவர் விடும் ஸ்டேட்மென்ட்கள் இன்னும் சின்ன புள்ளதான் என்பதை அடிக்கடி நிரூபிக்கின்றன.

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த புதிதில், தன் தேசத்து ஆள் ஒருவரைதான் திருமணம் செய்வேன் என்றார்.

பிறகு, திருமணமே செய்யப் போவதில்லை, அந்த நாட்டிய நடிகை மாதிரி இருக்கப் போகிறேன் என்றார். பச்சப்புள்ள அறியாம பேசுது என்று யாரும் இதனை கண்டு கொள்ளவில்லை.

சமீபத்திய பேட்டியில், கிசு கிசு பற்றியெல்லாம் கவலையில்லை. அதனை கண்டு கொள்ள மாட்டேன். சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்ப என்கிற ரீதியில் பேசியுள்ளார்.

புள்ள பக்குவப் பட்டிருச்சோ என்று யோசிக்கும் முன் மீண்டும் காதல் திருமணம்தான் செய்வேன். கண்டிப்பாக அவர் சினிமாவில் உள்ளவராக இருக்க மாட்டார் என திருமண தோசையை மீண்டும் திருப்பிப் போட்டிருக்கிறார்.

பாவம் கும்கி பெண்ணுக்கு என்ன ஆச்சு? திருமண விஷயத்தில் ஏன் இப்படி குழப்ப ஸ்டேட்மென்ட் விடுக்கிறார் என்று அவரது ரசிகர்கள் குழம்ப ஆரம்பித்துள்ளனர்.