கோர்ட் தீர்ப்பு வரட்டும்… கல்யாணம் பண்ணிக்கிறேன்: சல்மான்கான்

Salman Khan Makes His Wedding Announcement

டெல்லி: தன் மீதான வழக்குகளில் தீர்ப்பு வெளியானபின்னரே திருமணம் செய்து கொள்வது பற்றி யோசிக்க முடியும் என்று பாலிவுட் நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார்.

திரைப்படமோ, டிவியோ சல்மான்கான் வருகிறார் என்றாலே அங்கே பரபரப்பு பற்றிக்கொள்கிறது. இப்போது சல்மான்கானின் தபாங் 2 திரைப்படம் வசூலில் பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்த வெற்றிக்கொண்டாட்டம் ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார் சல்மான்கான்.

கசந்த காதல்கள்

46 வயதாகி விட்டது. கடந்த 20 வருடங்களில் எத்தனையோ காதல்களை கடந்திருக்கிறார் சல்மான்கான். ஐஸ்வர்யாராய், கத்ரீனா கைப் என பல நடிகைகளுடன் காதலில் சிக்கி அது பின்னர் முறிந்து போய்விட்டது. காதல் சர்ச்சைகளைப் போலவே மான்வேட்டை, வாகனவிபத்து வழக்குகளும் அவரை விடாமல் துரத்தி வருகிறது. அதனால்தான் அவர் திருமணம் பற்றி நினைக்காமல் இருக்கிறாராம்.

நம்பிக்கை இருக்கிறது.

டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்க வந்த சல்மான்கானிடம் அவருடைய திருமணம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கோர்ட்டுகளில் என் மீது வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் தீர்ப்பு வெளிவந்த பிறகே திருமணம் பற்றி யோசிப்பேன் என்றார். இரு வழக்குகளில் இருந்தும் விடுதலையாவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சிறை செல்ல வேண்டுமே?

ஒருவேளை தீர்ப்பு எனக்கு எதிராக வந்தால், நான் சிறை செல்ல வேண்டியது இருக்கும். சிறை சென்றால் வெளிவந்த பிறகே திருமணம் செய்வேன். தீர்ப்பு வெளிவரும் முன்பே நான் திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில், தீர்ப்பு எனக்கு பாதகமாக அமைந்தால் எனது மனைவி குழந்தையுடன் வந்து என்னை சிறையில் சந்திக்க வேண்டியது இருக்கும் இல்லையா? அது நன்றாக இருக்காது. எனவேதான் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் என்றார்.

13 ஆண்டுகால வழக்கு

1999-ம் ஆண்டு ஜோத்பூரில் நடந்த படப்பிடிப்பு நிகழ்ச்சியின்போது மான் வேட்டையாடியதாக சல்மான்கான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணை ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதேபோல மும்பையில் 2002-ம் ஆண்டு அவர் ஓட்டிச் சென்ற வாகனம் மோதி ஒருவர் இறந்தார். இது குறித்த வழக்கு விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 13 வருடங்களாக வழக்கு விசாரணைக்காக நீதிமன்ற படியேறி வருகிறார் சல்மான்கான்.

தீர்ப்பிற்காக நீங்க காத்திருக்கலாம்.. ஆனால் வயதும், இளமையும் காத்திருக்குமா என்பதை சல்மான்கான் புரிந்து கொள்வாரா? என்று ஆதங்கப்படுகின்றனர் அவருடைய ரசிகர்கள்.

 

ஆண்டின் இறுதி வாரம்... ரிலீசுக்கு தயாராகும் அரை டஜன் படங்கள்

6 Movie Hit Screens This Week   

இந்த 2012-ம் ஆண்டின் கடைசி வாரம் இதுதான். இந்த வாரத்தில் மட்டுமே 6 படங்களுக்கு மேல் ரிலீசுக்குத் தயாராகின்றன.

வருகிற 28-ந்தேதிதான் ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை. அன்றைய தினம் சமர், அகிலன், பத்தாயிரம் கோடி, பாரசீக மன்னன், மன்சூரலிகானின் லொள்ளு தாதா, அகிலன் ஆகிய 6 படங்கள் ரிலீசாகவிருக்கின்றன. பத்தாயிரம் கோடி என்ற படமும் இதில் சேரும் என்று தெரிகிறது.

இவற்றில் சமர் படத்தில் விஷால் - த்ரிஷா நடித்துள்ளனர். திரு இயக்கியுள்ளார். விஷால் பெரிதாக நம்பிக் கொண்டிருக்கும் ஆக்ஷன் - காதல் படம்.

இதைத்தவிர மற்ற படங்கள் அனைத்துமே சின்ன பட்ஜெட் படங்கள். எப்படியாவது அரசின் சலுகையைப் பெற்றுவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சில தியேட்டர்களில் மட்டுமே வெளியாகவிருக்கின்றன.

வரும் ஜனவரி மாதம் பொங்கல் சீஸன் என்பதால், அதற்கு முன்பே சில படங்கள் ஜனவரி முதல்வாரத்தில் வெளியாகவிருக்கின்றன.

 

ஹே.... ரஜினிக்கு கதை ரெடி பண்ணிட்டாராம் பேரரசு!!

Perarasu Scripted Story Rajini   

ரஜினிக்கு கதை ரெடி பண்ணிட்டேன். அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்தக் கதையை அமைத்திருக்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு தருவாரா ரஜினி சார்? என்று கேட்டுள்ளார் இயக்குநர் பேரரசு.

கோலிவுட்டில் ரொம்ப காலமாக இருக்கும் ட்ரெண்ட், 'ரஜினி சார் மட்டும் ரெடின்னா... அவருக்கு அசத்தலாக ஒரு கதை வச்சிருக்கேன்' அல்லது 'ரஜினி சார்கிட்ட ஒரு ஒன்லைன் சொல்லியிருக்கேன்.. பேசலாம்னு சொல்லியிருக்கார்" என்று இயக்குநர்கள் சொல்லிக் கொள்வதுதான்.

இப்படிச் சொல்லிக் கொண்டவர்கள் பட்டியல் ரொம்பப் பெரியது. ஆனால் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால்... இவர்களில் ஒருவருடன் கூட ரஜினி படம் பண்ணவில்லை என்பதுதான்!!

இப்போது இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருப்பவர் பேரரசு. சமீபத்தில் இவர் கொடுத்த திருத்தணி பார்த்த பாதிப்பில் சில ரசிகர்கள் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவே இனி பார்க்க வேணாம் மக்கா என்று பின்னங்கால் பிடறியில் பட ஓடிவிட்டார்கள்.

இனி பேரரசுவின் நிலை கேள்விக்குறியாகிவிட்ட சூழலில், ஒரு பப்ளிசிட்டி பிட்டைப் போட்டுள்ளார் (விஜய்யோட ஆஸ்தான இயக்குநராச்சே!)

ரஜினிக்காக ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளதாகவும், அது ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறுகையில், "நான் ரஜினிக்காக ஏற்கனவே திரைக்கதையும் தயாரித்து விட்டேன். அந்த கதைக்கு செங்கோட்டை என பெயரிட்டுள்ளேன் . இந்த படம் ரஜினிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதுமட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்," என்றார்.

கடவுளே கடவுளே!

 

சமந்தா சம்பளம் கிர்ர்ர்.... ரூ 1.25 கோடியானது!

Samantha Now Gets Rs 1 25 Cr   

கோலிவுட், டோலிவுட் இரண்டிலுமே இப்போது அதிகப்படியான சம்பளம் வாங்கும் நடிகை என்ற 'பெருமை'... வேறு யார்.. இன்றைய கனவுக் கன்னி சமந்தாவுக்குப் போயிருக்கிறது.

சமந்தாவின் லேட்டஸ்ட் சம்பளம் ரூ 1.25 கோடி. தெலுங்கில் இப்போது அவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள புதிய படத்துக்கு இந்த சம்பளம் தரப்பட்டுள்ளது.

நயன்தாரா, தமன்னா, த்ரிஷா, அனுஷ்கா போன்றவர்கள்தான் இதுவரை தமிழ், தெலுங்கில் அதிக சம்பளம் பெற்று வந்தனர். இப்போதும் இவர்கள் ஒரு கோடி ப்ளஸ் சம்பளமாகப் பெறுகின்றனர்.

ஆனால் இந்த தொகையை எட்ட அவர்கள் நிறைய படங்களில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் சமந்தா நான்கைந்து படங்களில் அந்த ரேஞ்சுக்கு வந்துவிட்டார்.

இவரது சம்பளத்தை உயர்த்தியதில் இருவருக்கு முக்கியப் பங்குண்டு. ஒருவர் தில் ராஜு மற்றொருவர் பெல்லம் கொண்டா சுரேஷ். முதல் தயாரிப்பாளர் ரூ 1 கோடி வரை சமந்தாவுக்கு கொடுத்தார்.

அடுத்தவர் இப்போது 1.25 கோடி தர ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடிக்கிறார் சமந்தா.

தமிழில் அடுத்து ஒப்பந்தமாகும் படத்துக்கு சமந்தாவின் சம்பளம் இதுதானாம்!

 

விஸ்வரூபத்திற்கு ரூ.1,000 கொடுத்து படம் பார்க்கையில் கரண்ட் போச்சுனா?

Kamal Sir Your Fans Have Doubt

சென்னை: விஸ்வரூபம் படத்தைப் பார்க்க டிடிஎச்சுக்கு ரூ.1,000 கட்டி படம் பார்க்கையில் மின்வெட்டு ஏற்பட்டால் என்ன செய்வது என்று தமிழக ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

கமல் ஹாசனின் விஸ்ரூபம் படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் 8 மணிநேரத்திற்கு முன்பு டிடிஎச்சில் ரிலீஸ் செய்யப்படும் என்று படத்தின் நாயகன் கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.

பல்வேறு நிறுவனங்கள் விஸ்வரூபத்தை ஒளிபரப்ப ஆர்வம் காட்டியபோதும் ஏர்டெல் நிறுவனம் படத்தின் டிடிஎச் உரிமையைப் பெற்றுள்ளது. இதனால் வீடுகளில் ஏர்டெல் டி.டி.எச் வைத்திருப்பவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டர்களில் ரிலீசாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே தங்கள் வீடுகளில் உள்ள டி.விக்களில் காண முடியும். ஏர்டெல் டி.டி.எச். சேவையில் விஸ்வரூபம் சினிமா பார்ப்பதற்காக சந்தாதாரர்கள் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே விஸ்வரூபம் படம் ஒளிபரப்பு இணைப்பு கிடைக்கும்.

இப்பொழுது தமிழக ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. மாநிலத்தில் 12 மணிநேரத்திற்கு மேல் மின்தடை செய்யப்படுகிறது. இந்நிலையில் ரூ.1,000 கட்டி படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் மின்தடை ஏற்பட்டுவிட்டால் படம் அவ்வளவு தானா என்று அவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 2 மணிநேரத்திற்கு மேல் ஓடும் படத்தை தமிழக ரசிகர்களால் நிச்சயம் தொடர்ந்து பார்க்க முடியாது. ஏனென்றால் ஒரு மணிநேரம் மின்சாரம் இருந்தால் அடுத்த ஒரு மணிநேரம் இருக்காது.

கமல் சார் இந்த சந்தேகத்தை நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும். மின்தடையில்லா நேரத்தில் படத்தை வெளியிட நினைத்தால் அது நடக்காத காரியம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!

Neeya Naana Talk Show Discussion About

கசக்கிப் பிழியும் கார்ப்பரேட் நிறுவன பணிச்சுமையால் கணவன் மனைவி இடையே இணக்கமான நிலை மறைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது உண்மைதான் என்று கூறும் வகையில் அமைந்திருந்தது நீயா நானாவில் பேசியவர்களின் கருத்து.

தமிழ்நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகைக்குப் பின்னர் கை நிறைய சம்பளம்... கார்... சொந்த வீடு என இளம் வயதிலேயே இன்றைக்கு பலரும் செட்டில் ஆகிவிட்டனர். கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பதனால் சமூகத்தில் என்னுடைய மதிப்பு அதிகரிக்கிறது என்பது ஒரு சிலர் கூற்று. இது வசதியாக இருக்கிறது என்று ஒரு சிலர் கருதினாலும் கார்ப்பரேட் கலாச்சாரம் சிலருக்கு புழுக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த புழுக்கம் ஏற்படுத்திய மன உளைச்சல் தாங்காமல் வேலையை விட்டவர்கள் அதிகம்.

கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களும், வேலை பார்த்து அந்த சிரமம் தாங்காமல் வேலையை விட்டவர்களும் விஜய் டிவியில் இந்த வாரம் ஞாயிறு இரவு ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர்.

நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் கிடைக்கும் வசதியும், ஐந்து இலக்கச் சம்பவமும் ஆச்சரியமளிக்கக் கூடியதுதான். சில மாதங்களிலேயே தன்னுடைய தேவைகள் எளிதில் நிறைவேறும் என்று கூறினர் ஒரு தரப்பினர்.

ஆனால் கார்ப்பரேட் நிறுவன வேலை என்பது புழுக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால் குடும்பம், குழந்தைகளை கூட கவனிக்க முடியாது. பணத்தின் பின்னர் ஓடவேண்டியிருப்பதால் மனைவி குழந்தைகளைக்கூட மறக்கவேண்டியிருக்கிறது என்றனர் மற்றொரு தரப்பினர்.

நிகழ்ச்சியில் பேசிய ஒருவர், தனக்கு மாதம் இரண்டு லட்சம் ரூபாய் தர தயாராக இருந்த கார்ப்பரேட் நிறுவன வேலையை உதறிவிட்டு விவசாயம் பார்ப்பதாக கூறினார்.

அதேபோல் கார்ப்பரேட் நிறுவன வேலையை உதறிய ஒரு தம்பதியினர் பேசியது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருந்தது. லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும், கார்ப்பரேட் நிறுவனப் பணிச்சூழல் ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக கணவரிடம் இருந்து ஒரு முத்தம் கூட பெறமுடியாது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஒரு மனைவி. இதன் காரணமாகவே அந்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாக விவசாயத்தொழில் செய்வதாக கூறினார்.

வொய்ட் காலர் ஜாப் என்ற கார்ப்பரேட் நிறுவன வேலையை உதறிவிட்டு விவசாயத்தை தொட்டேன். இப்போது என்னுடைய உடைகள்தான் அழுக்காகியிருக்கிறது. ஆனால் என்னுடைய மனம் வெள்ளையாக இருக்கிறது என்றார் அவர்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். ஆனால் விவாகரத்துக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் நிச்சயமாகின்றன என்று கார்ப்பரேட் பணியினால் குடும்பங்கள் பிளவுபடுவதைக்கூறினார் ஒருவர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சிறப்பு விருந்தினர் திரு சோம. வள்ளியப்பன், கார்ப்பரேட் நிறுவனங்களினால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு என்று தெரிவித்தார். நாம் எந்த அளவிற்கு நேரத்தை பிரித்து பணி புரிகிறோம். விடுமுறையை எவ்வாறு திட்டமிட்டு செலவிடுகிறோம் என்பதைப் பொருத்து கார்ப்பரேட் நிறுவனங்களில் மகிழ்ச்சியாக பணிபுரியும் என்றும் கூறினார் அவர்.

நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு சிறப்பு விருந்தினர் திருமுருகன் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஜனநாயகம் என்பது கிடையாது என்று குற்றம் சாட்டினார். அதைவிட முக்கியமான விசயம் கார்ப்பரேட் நிறுவனங்களில் மனிதநேயம் என்பதை பார்க்க முடியாது. பணியாளர்களின் சத்துக்களை உறிஞ்சிவிட்டு கடைசியில் சக்கையாக துப்பிவிடும் என்று கூறினார். அடிப்படை கோட்பாடு என்பதையும் எதிர்பார்க்க முடியாது என்றார் திருமுருகன். நிறுவனம் கார்ப்பரேட். இங்கே மனிதநேயம் கிடையாது என்றார்.

கார்ப்பரேட் நிறுவனங்களில் நல்ல அமைப்பு இருக்கிறது. ஆனால் அதில் பணிபுரியும் மனிதர்கள்தான் அந்த அமைப்பினை உடைக்கின்றனர். இதுதான் பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாகிறது என்று கூறினார் நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத்.

எந்த பணியாக இருந்தாலும் அதில் சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும். இரண்டையும் சமாளித்து திறம்பட பணிபுரிபவர்கள் ஒருசிலர்தான். கார்ப்பரேட் நிறுவனங்களில் கிடைக்கும் வசதிக்காக சிலர் காலம் முழுவதும் சிலர் அங்கு பணிபுரிகின்றனர். கடைசி வரைக்கும் பணத்தின் பின்னால் ஓட வேண்டிய அவசியமில்லை என்று நினைப்பவர்கள் அதிலிருந்து வெளியேறிவிடுகின்றனர்.

உங்க அனுபவம் எப்படி? நீங்க என்ன நினைக்கிறீங்க?

 

பேசாம கோலிவுட்டுக்கே போயிடலாமா: யோசனையில் அசின்

Asin Thinking About Returning Kollywood   

மும்பை: பாலிவுட்டில் செட்டிலான நடிகை அசின் மீண்டும் கோலிவுட்டுக்கே போய்விடலாமா என்று பலத்த யோசனையில் உள்ளாராம்.

நடிகை அசின் கோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். அப்போது நம்ம முருகதாஸ் சூர்யாவை வைத்து எடுத்த கஜினியை இந்தியில் ரீமேக் செய்தார். மனிதர் அசினையே இந்தி கஜினிக்கும் ஜோடியாக்கினார். அப்படி பாலிவுட் சென்ற அசின் அங்கேயே செட்டிலாகிவிட்டார். பாலிவுட்டின் நம்பர் 1 ஹீரோயின் நான் தான், நான் தான் முதன்முதலில் ரூ.100 கோடி வசூல் படத்தில் நடித்த நடிகை என்றெல்லாம் அவர் தெரிவித்தார்.

ஆனால் பாவம் அவர் பேச்சை யாரும் கேட்ட மாதிரியே இல்லை. இந்நிலையில் அக்ஷய் குமாருடன் அவர் நடித்த கிலாடி 786 படம் ரிலீஸாகி நல்ல வசூலை அள்ளியது. அந்நேரம் பார்த்து ஆமீர் கானின் தலாஷ் ரிலீஸான உடன் கிலாடி படுத்துவிட்டது. என்ன தான் முட்டி மோதினாலும் கோலிவுட்டில் இருந்த மாதிரி இங்கு இல்லையே என்று அவர் நினைக்கிறாராம்.

பாலிவுட் வந்து பென்சில் மாதிரி குச்சியாகி இத்தனை சாதனைகள் புரிந்தும் கேட்பார் இல்லையே பேசாமல் கோலிவுட்டுக்கே திரும்பிவிட்டால் என்ன என்று அவர் பலத்த யோசனையில் உள்ளாராம். அப்போ இன்னும் சில நாட்களில் அசினை தொடர்ந்து தமிழ் படங்களில் பார்க்கலாமோ?