சசிகுமாருக்கு போட்டியான சசிகுமார்!

Porali Vs Naadodigal Makes Tv Channel

ஞாயிறுக்கிழமையன்று காலை நேர திரைப்படங்களை ஒளிபரப்புவதில் டிவி சேனல்களுக்கு இடையே போட்டி ஏற்படுவது வாடிக்கை ஒரு சேனலில் விஜய் படம் என்றால் அதற்கு போட்டி சேனலில் அதேபோல் விஜய் படத்தைப் போட்டு ரசிகர்களை அல்லாட விடுவார்கள். இந்த போட்டியில் இப்போது சசிகுமாரும் சிக்கிக்கொண்டார்.

விஜய் டிவியில் சசிகுமார் நடித்த போராளி திரைப்படம் ஒளிபரப்பானது. இது சில தினங்களுக்கு முன் சுதந்திர தினத்தன்று சிறப்பாக ஒளிபரப்பினர். மீண்டும் இந்த திரைப்படத்தினை ஞாயிறன்று மறு ஒளிபரப்பு செய்தனர்.

அதேசமயம் சன் டிவியில் ஞாயிறன்று காலையில் பெரும்பாலும் ஆங்கில டப்பிங் திரைப்படங்களை ஒளிபரப்புவது வழக்கம் இந்த வாரம் போராளிக்கு போட்டியாக சசிகுமார் நடித்த நாடோடிகள் திரைப்படத்தை ஒளிபரப்பினார். இதில் எந்த படத்தை பார்ப்பது என்று குழம்பிப்போனது என்னவோ ரசிகர்கள்தான்.

 

ஸ்ரீதேவியுடன் நடிக்க பணம் வாங்காத அஜீத்!

Ajith Refused Accept Payment English Winglish

சென்னை: ஸ்ரீதேவியுடன் நடிக்க பணம் வாங்க மறுத்த அஜீத், தனக்கான பகுதியை இலவசமாகவே, அதுவும் தன் சொந்த செலவில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

பல வருடங்களுக்குப் பிறகு நடிகை ஸ்ரீதேவி ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்' என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கிலும் ரிலீசாகிறது.

ஆங்கிலம் தெரியாத ஒரு குடும்பத் தலைவியின் அவஸ்தைகளே படத்தின் கதை. அக்டோபர் 5-ந்தேதி படத்தை ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்.

தமிழ் பதிப்பில் அஜீத்தை கவுரவ தோற்றத்தில் நடிக்க வைக்க விரும்பினர். அஜீத்தை அணுகி கேட்டபோது உடனடியாக சம்மதித்தார்.

மும்பையில் படப்பிடிப்புக்காக பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டன. இதில் நடிப்பதற்கு அஜீத்துக்கு கணிசமான தொகை சம்பளமாக கொடுக்க தயாரிப்பாளர் முன்வந்தார். மும்பை வந்து செல்வதற்கான விமான செலவுகள் ஓட்டலில் தங்கும் செலவு போன்றவற்றையும் தரத் தயாராக இருந்தனர்.

அதன்படி சென்னையிலிருந்து மும்பைக்குப் போய் நடித்துக் கொடுத்துவிட்டார் அஜீத்.

ஆனால் தனக்கு தரப்பட்ட சம்பளத்தை வாங்க மறுத்துவிட்டார். அதுமட்டுமல்ல, தனக்கான பயணச் செலவு, ஒட்டல் பில் அனைத்தையும் தானே ஏற்றுக் கொண்டார்.

பாலிவுட் தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் அவரை வியந்து பாராட்டியுள்ளனர்.

 

பணம் கேட்டு தமன்னாவை மிரட்டும் தயாரிப்பாளர்!

Bollywood Producer Threaten Tamanna   

ரொம்ப வருடங்களுக்கு முன் ரஜினி நடித்த ப்ரியா படத்தில், நடிகை ஸ்ரீதேவியுடன் ஆண்டு கணக்கில் ஒப்பந்தம் போட்டு பணம் கறப்பார் மேஜர் சுந்தரராஜன். கிட்டத்தட்ட அதே போன்ற சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார் முன்னணி நடிகை தமன்னா.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டில் சாந்து ஷா ரோஷன் செஹ்ரா என்ற படத்தில் தமன்னா அறிமுகமானார்.

அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சலீம் அக்தர் என்பவர் அப்போது தமன்னாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், 2005 முதல் 2010 வரை தமன்னா நடிக்கும் படங்களில் அவர் வாங்கும் சம்பளத்தில் 25 சதவீதத்தை தனக்கு தரவேண்டும் என்பது. இதுகுறித்த எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் தமன்னா கையெழுத்திட்டுள்ளாராம்.

இப்போது அந்த ஒப்பந்தத்தை தமன்னா மீறி விட்டதாக அவர் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் சலீம் அக்தர் கூறியுள்ளார்.

"தமன்னாவுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததுடன் மேற்கண்ட ஒப்பந்தமும் செய்து கொண்டோம். பின்னர் தமன்னா தென்னிந்திய சினிமாவுக்கு சென்று விட்டார். ஒப்பந்தம் பேசிய நான் அவரை தொடர்பு கொண்டபோதிலும் அவர் கண்டுகொள்ளவில்லை. ஒப்பந்தப்படி எனக்கு பணமும் தரவில்லை. தனது பெயரில் எழுத்துக்களையும் திருத்தம் செய்து கொண்டார்.

அவரது குடும்பப் பெயரான ‘பாட்டியா' வை விலக்கிவிட்டு வெறும் தமன்னா என கூறிக்கொள்கிறார். தற்போது இந்தியில் ‘ஹிம்மத்வாலா' என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். என்னோடு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு தமன்னா பதில் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நான் வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறேன்," என்று மிரட்டியுள்ளார்.

தமன்னா கேடி படத்தில் நடிக்க வந்தபோது தனக்கு 16 வயதுதான் என்று கூறியது நினைவிருக்கலாம். அப்படியெனில் இந்திப் படத்தில் இன்னும் முன்பாகவே அறிமுகமாகியிருப்பார். அப்போது அவர் வயது 14 அல்லது 15 இருக்கும்.

இந்த வயதில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது செல்லுமா...?

 

11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த விஜய்!

Vijay Hosts Free Wedding 11 Couples

வேலூர்: வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ரசிகர் மன்றங்கள் சார்பில் 11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்து, 51 சீர்வரிசைப் பொருள்களையும் வழங்கினார் விஜய்.

சத்துவாச்சாரி ரங்காபுரம் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவுக்கு நிர்வாகிகள் தியாகராஜன், அப்சரா பாலாஜி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் மாவட்ட தலைவர் வேல்முருகன் வரவேற்று பேசினார். மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்ட 11 ஜோடிகளுக்கு நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதா திருமாங்கல்யத்தை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தனர்.

திருமணம் முடிந்ததும் 11 ஜோடிகளுக்கு 51 வகையான சீர்வரிசை பொருட்களை விஜய் வழங்கினார்.

இதனையடுத்து மணமக்கள் குடும்பத்துடன் விஜய் புகைப்படம் எடுத்து கொண்டார். திருமணத்தில் மக்கள் இயக்கம் மாநில பொறுப்பாளர் ஆனந்த், செயலாளர் ரவிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நடிகர் விஜய்க்கு மேளதாளத்துடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

திருமண மண்டபம் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெரும் சிரமப்பட்டனர் போலீசார்.

 

நரேந்திர மோடியிடம் பாராட்டுப் பெற்ற தமிழ் சினிமா நடிகர் - டான்ஸ் மாஸ்டர்!

Tamil Actor Got Appreciation From Gujarat Cm

சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் பாராட்டுப் பெற்றிருக்கிறார் ஒரு தமிழ் நடிகர் கம் நடன இயக்குநர்.

அவர் பெயர் ஜிவி நந்தா. மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தின் நடன இயக்குநர் இவர்தான்.

சாதாரணமாக சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த இந்த இளைஞர், அகில இந்திய அளவில் அறியப்படுகிற நடனக் கலைஞராக வாய்ப்பு கிடைத்துள்ளது.

திறமைசாலியான இந்திய இளைஞர் என இவரை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உதாரணப்படுத்தும் அளவுக்கு சிறப்பு பெற்றவராக மாறியிருக்கிறார் நந்தா.

சிறு வயது முதல் நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட நந்தா, பதிமூன்று வயது முதல் நடனம் ஆடத் தொடங்கினார். ஜான் பிரிட்டோ நடன குழுவில் சேர்ந்து ஆடினார்.

குழுவில் தலைமை நடனக் கலைஞராக உயர்ந்த இவரது தனித்துவத்தை அமெரிக்க தூதரகம் அங்கீகரித்தது. மேற்கத்திய நடனத்தை விரிவாகக் கற்க வாய்ப்பளித்தது.

அமெரிக்காவின் கலாச்சார பரிவர்த்தனைகளில் வெளிநாட்டு திறமைசலிகளுக்கு அமெரிக்க கலைகளைக் கற்றுக் கொள்ள இடம் அளிக்கும் திட்டம் உள்ளது. அதன்படி இந்திய அளவில் மூவர் மட்டுமே வாய்ப்பு பெற்றனர். டெல்லி,மும்பையிலிருந்து தலா ஒருவர். சென்னையிலிருந்து நந்தா மட்டுமே, அதாவது இந்திய அளவில் தேர்வான முவரில் இவர் ஒருவர்.

பயிற்சி முடிந்து திரும்பிய நந்தா ஜான்பீட்டர் குழுவில் மீண்டும் இணைந்து ஆடி வந்தார் ஏராளமான மேடைநிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இவரிடம் விக்ரம் முதல் ஜெயம்ரவி, சிம்பு, தனுஷ் போன்ற பல நட்சத்திரங்களும் பயிற்சி பெற்றுள்ளார்கள்.

விஜய் டிவியின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா யார் ? போட்டியில் பங்கு பெற்றார். அப்போதுதான் செல்வராகவன் உதவியாளர் ராஜேஷ்லிங்கம் இயக்கிய 'புகைப்படம்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது .

நந்தாவின் திறமையைக் கேள்விப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, குஜராத் உருவான 50வது ஆண்டுவிழாவில் நடனம் வடிவமைத்துக் தரும்படி கேட்டார். அதன்படி 2000 நடனக் கலைஞர்கள் பங்கேற்க 2 லட்சம் பேர் முன்னிலையில் நடந்த அந்த நடன நிகழ்ச்சியை வடிவமைத்தார். அது மோடிக்குப் பிடித்து விட்டது. இவரை மேடைக்கு அழைத்த முதல்வர் மோடி 'நாட்டின் எதிர்காலம் இப்படிப்பட்ட இளைஞர்கள்தான்' என்ற பாராட்ட பார்வையாளர்கள் கரவொலியால் அதிர வைத்தனர்.

"வாடா போடா நண்பர்கள்' என்ற படத்திலும் நடித்துள்ளார்.

"நான் நடித்த இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் நிறைய கற்றுக் கொடுத்தது," என்கிறார் நந்தா.

'எனக்கு கதாநாயகன்,வில்லன் என்கிற பாகுபாடு இல்லை. நல்ல நடிகன் என்கிற நோக்கத்தில்தான் என் தேர்வு இருக்கும் என்னை வேலை வாங்கும்படியான இயக்குநரிடமே பணிபுரிய விருப்பம்' என்கிறார் ஜி.வி.நந்தா.

 

எனக்கு அழகான ஜோடி கிடைத்திருக்கிறது : கருணாஸ்

Karunas Produces Acts Ragalaipuram   

ரியல் லைப்பிலும் சரி, ரீல் லைப்பிலும் எனக்கு அழகான ஜோடிகளே கிடைக்கின்றனர் என்று திரைப்பட நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

ரம்ஜான் சிறப்பு நிகழ்ச்சியில் கருணாஸ் தயாரித்து நடிக்கும் ரகளைபுரம் படத்தின் சிறப்பு கண்ணோட்டம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை கிரேஸ் கருணாஸ் தொகுத்து வழங்கினார். சூட்டிங் ஸ்பாட், இசை ஒலிப்பதிவு கூடம் என ஒவ்வொரு இடமாக சென்று நிகழ்ச்சியை ஒளிபரப்பியது ரகளையாக இருந்தது.

காமெடியனோ, கதாநாயகனோ இனிமேல் தனக்கான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க இருப்பதாக தெரிவித்தார் கருணாஸ். கணவர் என்றும் பாராமல் கிண்டலும், கேலியுமாக கிரேஸ் கேட்ட கேள்விகளுக்கு கொஞ்சம் சீரியசாகவே பதில் சொன்னார் கருணா. என்னுடன் நடித்த கதாநாயகிகள் எல்லோருமே அழகான கதாநாயாகிகள். என் மனைவி கிரேஸ் உட்பட என்று கருணாஸ் கூறியதும் முகம் கொள்ளாத சிரிப்போடு வெட்கத்தில் சிவந்து போனார் கிரேஸ்.

கருணாஸ் உடன் ரகளைபுரம் படத்தில் நடித்த நடிகர்கள் கோவைசரளா, சிங்கம்புலி, ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். ரகளைபுரம் படத்தில் கருணாஸ் - கிரேஸ் தம்பதியரின் மகன் நடனமாடியுள்ளதோடு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய காமெடி படமாக இருக்கும் என்று உறுதியாக நம்புவதாக தெரிவித்தார் படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான கருணாஸ்.

 

யோகாவால் நல்ல 'ஷேப்'புக்கு வந்த 'ஸ்பைஸ் கேர்ள்' ஜெரி ஹாலிவெல்!

Geri Halliwell Is Finally Comfortable

லண்டன்: தீவிர யோகா, நல்ல உடற்பயிற்சி உள்ளிட்டவற்றால் தற்போது பழைய பொலிவுக்குத் தான் திரும்பியுள்ளதாக லண்டனைச் சேர்ந்த ஸ்பைஸ் கேர்ள் குழுவைச் சேர்ந்த ஜெரி ஹாலிவெல் கூறியுள்ளார்.

தனது பழைய பொலிவு தனக்கு மிகவும் விருப்பத்திற்குரியதாக இருப்பதாகவும் அவர் பெருமை பொங்கக் கூறியுள்ளார்.

இவருக்கு ஸ்பைஸ் கேர்ள்ஸ் குழுவில் ஜிஞ்சர் அதாவது இஞ்சி என்று செல்லப் பெயர் உண்டு. 2012 லண்டன் ஒலிம்பிக் நிறைவு விழாவின்போது நிகழ்ச்சியைக் கொடுத்த ஸ்பைஸ் கேர்ள்ஸ் குழுவில் இடம் பெற்றிருந்த இந்த இஞ்சி அழகி, அழகான உடையுடன் அட்டகாசமான டான்ஸைப் போட்டு அனைவரையும் வியக்க வைத்தார். இவ்வளவு ஸ்லிம்மாக மாறி விட்டாரே என்று அனைவரும் ஜெரியைப் பார்த்து வாய் பிளந்தனர்.

அவரது இந்த புதிய பொலிவுக்கு யோகாதான் முக்கிய காரணமாம். அதேபோல ஆரோக்கியமான சாப்பாடு, உடலுக்கேற்ற ஆடைகள் ஆகியவையும் கூட ஜெரியின் அழகுக்கு முக்கியக் காரணங்களாக கூறுகிறார்கள்.

 

முத்தம் தர 'சவுகரியமான' பெண்ணாக பிரியங்கா சோப்ரா தேர்வு!

Priyanka Chopra Voted More Kissable   

மும்பை: முத்தம் தருவதற்கு சவுகரியமான, சரியான பெண்ணாக பிரியங்கா சோப்ரா தேர்வாகியுள்ளார் ஒரு ஆன்லைன் கருத்துக் கணிப்பில்.

அழகான உதடுகள், முத்தமிடத் தூண்டும் கவர்ச்சி ஆகியவை காரணமாக பிரியங்கா சோப்ராதான் முத்தமிட விருப்பத்துக்குரிய பெண்ணாக திகழ்வதாக இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு முத்தமிட்டவர்கள்... அதாவது வாக்களித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரைத் தொடர்ந்து 2வது இடத்தில் ஐஸ்வர்யா ராயின் உதடுகளும், 3வது இடத்தில் கரீனா கபூரின் உதடுகளும் வருகின்றன.

திரைப்படங்களிலும் சரி, நிஜத்திலும் சரி முத்தமிடுவதில் புரட்சி படைத்தவர் பிரியங்கா சோப்ராதான். அக்னீபாத், பேஷன், 7 கூன் மாப், காமினே, அய்த்ராஸ் என பல படங்களில் இவருக்கு முத்தக் காட்சிகள் வைக்கப்பட்டன. லிப் லாக் காட்சிகளுக்குப் பெயர் போனவர் பிரியங்கா என்பதும் நினைவிருக்கலாம்.

உங்க கருத்து என்னவோ...?

 

புதிய சேனல் ஆரம்பிக்கிறார் சக்சேனா... பொங்கலன்று ஒளிபரப்பு தொடக்கம்!

Former Sun Tv Coo Hansraj Saxena Launch New Tv Channel

சென்னை: புதிதாக டிவி சேனல் தொடங்குகிறார் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. வரும் ஜனவரி 15 பொங்கலன்று இந்த சேனல் à®'ளிபரப்பைத் தொடங்கவிருக்கிறது.

சன் டிவியை பெரும் மீடியா சக்தியாக உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் சக்சேனா.

ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் தொடர்பாக எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டார் சக்சேனா. அவரது ஆதரவாளர்களும் சிறைக்குப் போனார்கள்.

பல மாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளியில் வந்த சக்ஸேனா மற்றும் அவரது ஆதரவாளர்களை, சன் டிவி வெளியில் அனுப்பிவிட்டது.

வெளியில் வந்த சக்சேனா, அய்யப்பன் உள்ளிட்டோர் இணைந்து சாக்ஸ் பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தை ஆரம்பித்து, படங்களைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த பேனரில் வரும் முதல் படம் சாருலதா. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடந்தது.

விழாவில் பேசிய சக்ஸேனா, சன் டிவி தனக்கு செய்த துரோகம் குறித்து முதல் முறையாகப் பேசினார்

தான் எவ்வளவோ விசுவாசமாக இருந்ததாகவும், சன் டிவி வளர்ச்சிக்காக பெரும்பாடு பட்டதாகவும், ஆனால் சிறையில் மாட்டிக் கொண்டு தவித்த நேரத்தில் தனக்கு எதுவும் செய்ய சன் டிவி நிர்வாகம் முன்வரவில்லை என்றும் அவர் கூறினார்.

"என்னைக் காப்பாற்ற எதுவும் செய்யாதது மட்டுமல்ல, நான் ஜாமீனில் வந்ததும் முதல்வேலையாக என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். இதை தாங்க முடியவில்லை," என்றார் சக்சேனா.

மேலும் அவர் கூறுகையில், "வரும் ஜனவரி 15, பொங்கல் அன்று புதிய தமிழ் தொலைக்காட்சியை ஆரம்பிக்கவிருக்கிறோம். இது முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்," என்றார்.

 

சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் மீனா, சுகன்யா

Meena Suganya Sun Tv Super Kudumbam

திரைப்பட நடிகைகள் மீனா, சுகன்யா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கும் புதிய ரியாலிட்டி ஷோ சன் தொலைக்காட்சியில் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி சின்னத்திரை நட்சத்திரங்கள் தங்களின் கலைத்திறமையை, தனித்திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது

பிரபலங்களாக உள்ள சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் ரியாலிட்டி ஷோக்களுக்கு தனியான வரவேற்பு உண்டு. விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில்தான் டி.ஆர்.பி ஐ அதிகரிப்பதற்காக அதிக அளவில் சின்னத்திரை நட்சத்திரங்களை பங்கேற்க வைப்பார்கள்.

கலைஞர் டிவியில் மானாட மயிலாட என்ற பெயரில் சின்னத்திரை நட்சத்திரங்களின் நடனம் இடம் பெறுவதைப் போல சன் டிவியில் புதிதாக சூப்பர் குடும்பம் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொடங்கியிருக்கின்றனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கஸ்தூரி, அத்திப்பூக்கள், முந்தானை முடிச்சு, இளவரசி, தென்றல் போன்ற பிரபல சீரியல்களின் நட்சத்திரப்பட்டாளங்கள் களம் இறங்கியுள்ளனர்.

நடனமோ, பாட்டோ, நடிப்போ அவரவர்க்கான தனித்திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிதான் சூப்பர் குடும்பம். இந்த நிகழ்ச்சியில் கலைஞர்களின் திறமைக்கு எற்ப மதிப்பெண்களை மனதார அள்ளி வழங்கும் நடுவர்களாக இசைஅமைப்பாளர் கங்கை அமரன், நடிகைகள் சுகன்யா, மீனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நிகழ்ச்சித் தொகுப்பாளர்களான காயத்ரி ஜெயராம், மமதி சாரி ஆகியோர் அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பமே அமர்க்களமாக அமைந்திருந்தது. சூப்பர் குடும்பத்திற்கு ஏற்ற பாடலை பாடி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். நடிக்கவும், நடனமாடவும் மட்டுமே தெரியும் என்று நினைத்திருந்த சுகன்யாவும் கொஞ்சும் குரலில் பாடி அசத்தினார். திருமணம், குழந்தை என்று மீடியாவை விட்டு ஒதுங்கியிருந்த மீனா புத்தம் புது மலராய் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரீ என்ட்ரீ கொடுத்துள்ளார். குடும்பப்பாங்கான நிகழ்ச்சி என்பதாலோ என்னவோ நடுவர்கள் மட்டுமல்ல தொகுப்பாளர்களும் புடவையில் பாந்தமாய் அழகாய் வந்திருந்தது

நிகழ்ச்சியின் சிறப்பம்சம். நடிக்க மட்டுமே தெரியும் என்று நினைத்திருந்த நடிகர்கள் எல்லாம், நடனம், பாடல், மிமிக்ரி, நடிப்பு என அசத்தி அதற்கேற்க மதிப்பெண்களை ஸ்கோர் செய்தனர். தென்றல் குடும்பத்தினர் 29 மதிப்பெண்களை பெற்று முதல் இடத்தில் உள்ளனர். முதல் நிகழ்ச்சியில் தனி நடத்தில் அசத்திய பூஜா சிறப்பு பரிசினை தட்டிச்சென்றார்.

சனிக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி கலைஞர்களின் திறமையைப் பொருத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.