விஸ்வரூபம் எடுக்கும் 'கத்தி'.. லண்டனில் விஜய்க்கு கருப்புக் கொடி காட்ட தமிழர்கள் ஆயத்தம்!

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பராக இருந்து வரும் அல்லிராஜா சுபாஸ்கரன், தயாரித்துள்ள கத்தி படத்தில் நடிக்க வேண்டாம் என்று பலமுறை கோரியும் கேட்காமல் நடித்த காரணத்திற்காக நடிகர் விஜய்க்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்த லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இலங்கையில் இயங்கி வரும் லைக்கா மொபைல் நிறுவனத்தின் அதிபர்தான் இந்த அல்லிராஜா. இவர் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. இவர்தான் கத்தி படத்தைத் தயாரித்துள்ளார்.

விஸ்வரூபம் எடுக்கும் 'கத்தி'.. லண்டனில் விஜய்க்கு கருப்புக் கொடி காட்ட தமிழர்கள் ஆயத்தம்!

இப்படம் குறித்த அறிவிப்பு வந்தபோதே உலகத் தமிழர்கள் மத்தியில் இதில் விஜய் நடிக்கக் கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் விஜய்யும் சரி, பட இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸும் சரி இதைப் பொருட்படுத்தவில்லை. படமும் கிட்டத்தட்ட முடிந்து விட்டது.

இந்தநிலையில் அல்லிராஜாவின் குடும்ப விழா லண்டனில் நடைபெறவுள்ளது. இதில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், நாயகி சமந்தா உட்பட கத்தி படத்தின் முக்கிய கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் லண்டன் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்கள் லண்டனுக்கு வரும்போது பெரும் போராட்டம் நடத்த இலங்கைத் தமிழர்கள் முடிவு செய்துள்ளனராம். விஜய் லண்டன் வந்தால் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டவும் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில், விஜய் செவ்வாய்க்கிழமை லண்டன் செல்கிறார். அங்கு 15 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளார். வழக்கமாக லண்டன் சென்றால், அங்குள்ள தனது மாமனார் வீட்டில்தான் தங்குவார். ஆனால் தற்போது இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு நிலவுவதால், இம்முறை அங்கு தங்காமல் அதிக பாதுகாப்பு கொண்ட ஹோட்டலில் தங்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

அசின் -சல்மான் காதல்... அதாவது பி.ஏ. என்ன சொல்றாருன்னா..!

மும்பை: சல்மான்கானிடம் அசின் வீடு எதையும் பரிசாக வாங்கவில்லை, அது பழைய கிசுகிசு என அசினின் உதவியாளர் விளக்கமளித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்த அசின், கஜினி படம் மூலம் இந்திக்கு சென்றார். அதனைத் சல்மான்கானுடன் ‘லண்டன் டிரீம்ஸ்' படத்தில் நடித்தார்.

பொதுவாக உடன் நடிக்கும் நடிகைகளுடன் சல்மான் பெயர் இணைத்து பேசப்படுவது வழக்கம். அந்தப் பேச்சுக்கு அசினும் தப்பவில்லை.

அசின் -சல்மான் காதல்... அதாவது பி.ஏ. என்ன சொல்றாருன்னா..!

லண்டன் ட்ரீம்ஸ்...

லண்டன் ட்ரீம்ஸ் படத்தின் போது, சல்மான் - அசின் இடையே காதல் உண்டானதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. காதல் பரிசாக பல கோடி மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கி அசினுக்கு சல்மான் பரிசளித்ததாகவும் கூறப்பட்டது.

3 படுக்கையறை வீடு...

இந்நிலையில், தற்போது கிக் படத்தில் இலங்கை நடிகை ஜாக்குலினுடன் நடித்து வருகிறார் சல்மான்கான். இப்போது ஜாக்குலினை சல்மான் காதலிப்பதாகவும், சமீபத்தில் ஜாக்குலின் குடியேறிய 3 படுக்கையறை கொண்ட வீடு சல்மானின் காதல் பரிசு என்றும் ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

லாஜிக்....

ஆனால், அத்தகவலை சல்மான் மறுத்தார். ஒரு படுக்கையறை வீட்டில் உள்ள நான் எப்படி, ஜாக்குலினுக்கு 3 படுக்கையறை வீட்டைப் பரிசளிப்பேன் என லாஜிக் விளக்கமளித்தார் சல்மான்.

காதல் பரிசுகள்...

சல்மானின் காதல் பரிசுக்கள் குறித்த சர்வேயில் மீண்டும் நினைவுக்கு வந்தார் அசின். அப்போது சல்மான் பரிசளித்த வீட்டில் அவ்வப்போது இருவரும் சந்தித்துக் கொள்வதாக செய்திகள் வெளியாயின.

மறுப்பு...

இந்நிலையில், தற்போது அத்தகவலை அசினின் உதவியாளர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அ ர் கூறுகையில், ‘அசினுக்கு சல்மான்கான் வீடு ஒன்றை பரிசாக கொடுத்தார் என்பது பழைய வதந்தி.

வதந்தி...

‘லண்டன் டிரீம்ஸ்' படத்தில் நடித்தபோது இது வெளியானது. இப்போது மீண்டும் அந்த வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். இதில் உண்மை இல்லை.

நண்பர்கள் தான்...

அசினும் சல்மான்கானும் நல்ல நண்பர்கள். அசினுக்கு சல்மான்கான் வீடு எதுவும் வாங்கி கொடுக்கவில்லை.

சட்டப்படி நிரூபணம்....

இதை சட்டப்படி தன்னிடம் உள்ள தஸ்தாவேஜுகள் மூலம் அவரால் நிரூபிக்க முடியும்' என இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.

 

ஷூட்டிங்கில் 'வேர்ல்டு ஹீரோ'வை பார்த்து மயங்கி விழுந்த இளம் ஹீரோயின்

சென்னை: நல்ல வில்லன் படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த கடல்ராணி நடிகை வேர்ல்டு ஹீரோவை பார்த்ததும் பயத்தில் மயங்கிவிட்டாராம்.

வேர்ல்டு ஹீரோ தனது நண்பரின் இயக்கத்தில் வில்லன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வேர்ல்டு ஹீரோ விஸ்வரூபம் எடுத்த படத்தில் நடித்த 2 நாயகிகள் உள்ளனர். அவர்கள் தவிர சுள்ளானின் கடல் ராணி நடிகையும் உள்ளார்.

கடல் ராணி நடிப்பில் அசத்துவார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் வில்லன் படப்பிடிப்பில் நடிகை முதன்முதலாக ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது வேர்ல்டு ஹீரோ அங்கு வந்துள்ளார். அவரை பார்த்த நடிகைக்கு பயத்தில் கை, கால் எல்லாம் நடுங்கி மயங்கி விழுந்துவிட்டாராம்.

இதை பார்த்த வேர்ல்டு ஹீரோ பதறிப்போய் ஓடி வந்து நடிகைக்கு மயக்கத்தை தெளிய வைத்துள்ளார். என்னை பார்த்து பயப்படாதீர்கள், தைரியமாக நடிக்க வேண்டும் என்று வேல்ர்டு ஹீரோ தைரியம் சொல்லி நடிகையை தேற்றியுள்ளார்.

அதன் பிறகு தான் கடல் ராணிக்கு பயம் தெளிந்ததாம்.

 

"ஹாரிபாட்டர் ஓநாய் மனிதன்" டேவிட் திடீர் மரணம்... பாலைவனத்தில் கிடந்த உடல்!

கலிபோர்னியா: ஹாரிபாட்டர் படத்தில் ஓநாய் மனிதனாக நடித்த டேவிட் லெஜினோ மர்மமான முறையில் பாலைவனம் ஒன்றில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் படமான ஹாரிபாட்டர் படத்தின் 3 பாகங்களில் ஓநாய் மனிதனாக நடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் லெஜினோ. 50 வயதான இவர் கலிபோர்னியா மாகாணத்தின் டெத் வேலி பகுதியில் உள்ள பாலைவனத்தில் சடலமாக கிடந்தார்.

'ஹாரிபாட்டர்' நடிகரின் உடல் பாலைவனத்தில் கண்டெடுப்பு!

தகவல் அறிந்ததும் ஹெலிகாப்டரில் சென்று அவரது உடலை காவல்துறையினர் மீட்டனர்.

பாலைவனப்பகுதியில் நீண்ட தூரப்பயணம் செய்த அவர் பாலைவனத்தின் கடுமையான வெப்பம் தாங்காமல் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

'ஹாரிபாட்டர்' நடிகரின் உடல் பாலைவனத்தில் கண்டெடுப்பு!

டேவிட் லெஜினோ நடிகராவதற்கு முன்பு, குத்துச்சண்டை வீரர் ஆக இருந்தார். தற்போது, இவர் நடித்துள்ள ஸ்வர்டு ஆப் வெஞ்சன்ஸ் என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

 

அடுத்த ஆண்டு ஃபெட்னா விழா சான் பிரான்சிஸ்கோவில்!

செயின்ட் லூயிஸ்: ஃபெட்னா எனப்படும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 28வது ஆண்டு விழா அடுத்த ஆண்டு ஜூலை மாதம் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடக்கிறது.

உலகெங்கும் தமிழர்கள் பரவிக் கிடக்கிறார்கள். தமிழர் இல்லாத நாடே இல்லை என்ற நிலை இன்றைக்கு வந்துவிட்டது. தமிழன் புலம் பெயர்ந்த காரணம் சோகமானதாக இருந்தாலும், சென்ற இடத்துக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில்தான் பெரும்பாலும் அவர்களின் செயல்பாடுகள் அமைகின்றன.

அடுத்த ஆண்டு ஃபெட்னா விழா சான் பிரான்சிஸ்கோவில்!

சென்ற இடத்துக்கு சிறப்பு சேர்த்தால் மட்டும் போதுமா... பிறந்த இனத்தின் பெருமை காக்க வேண்டாமா... அமுதத் தாய் மொழியான தமிழைக் காக்க ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற துடிப்பை மட்டும் ஒருபோதும் தமிழன் மறப்பதில்லை.

தாய்த் தமிழகத்திலிருந்து சென்றவராக இருந்தாலும், ஈழத்திலிருந்து பெயர்ந்தவராக இருந்தாலும், தமிழனின் அடிப்படை நோக்கத்தில் மாற்றமில்லை.

பிறந்த இனத்தின் பெருமை, அன்னைத் தமிழை அடுத்த தலைமுறைக்கும் பெருமை குறையாமல் கொண்டு செல்லுதல் என்ற லட்சியங்களை முன்னிறுத்தி ஆரம்பிக்கப்பட்டதுதான் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையான ஃபெட்னா.

அமெரிக்காவின் 52 மாகாணங்கள் மற்றும் கனடாவில் உள்ள 50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு இந்த ஃபெட்னா.

ஆண்டு தோறும் வெவ்வேறு அமெரிக்க நகரங்களில் இந்த அமைப்பின் ஆண்டு விழா சிறப்பாக நடந்து வருகிறது. தாயகத் தமிழர்களுக்கு தைத் திருநாள் என்றால், அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு ஃபெட்னா நடக்கும் நாளே திருவிழா எனலாம்.

இந்த ஆண்டு ஃபெட்னா நிகழ்ச்சி மிசௌரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்தது. ஜூலை 3-ம் தேதி தொடங்கி, 5-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சி தமிழர்களின் வாழ்வியலை, அடுத்த கட்ட நகர்வைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது.

ஃபெட்னாவின் அடுத்த ஆண்டு விழா, கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடக்கவிருக்கிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் ஒன்றான சான் பிரான்சிஸ்கோவில் இந்த விழா நடக்கவிருப்பது இதுவே முதல் முறை.

விழாவுக்கான ஏற்பாடுகளை இப்போதிலிருந்தே முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர் பேரவையின் தலைவரான நாஞ்சில் பீட்டர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் தில்லைக் குமரன் உள்ளிட்ட விழா குழுவினர்.

 

ஃபெட்னா தமிழ் குறும்படப் போட்டி - ஏதிலிகள், இரண்டாம் காதலுக்கு முதல் பரிசு!

செயின்ட் லூயிஸ்: பெட்னா 2014 தமிழ் குறும்படப் போட்டியில் ஏதிலிகள் மற்றும் இரண்டாம் காதல் ஆகிய படங்கள் முதல் பரிசு வென்றன.

செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த ஃபெட்னா தமிழ் விழாவையொட்டி, தமிழ்க் குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டது.

இயக்குநர் பாலு மகேந்திராதான் இந்தப் போட்டிக்கு நடுவராக இருந்து படங்களைத் தேர்வு செய்வதாக இருந்தார். ஆனால் அவர் மறைந்ததால், அந்தப் பொறுப்பை இயக்குநர் பாலா ஏற்றார்.

ஃபெட்னா தமிழ் குறும்படப் போட்டி - ஏதிலிகள், இரண்டாம் காதலுக்கு முதல் பரிசு!

பாலா - சுவாமி கந்தன்

போட்டிக்கு வந்திருந்த படங்களிலிருந்து சிறந்த பத்துப் படங்களை பாலா தேர்வு செய்து கொடுத்திருந்தார்.

இந்தப் பத்துப் படங்களில் முதல் மூன்று பரிசுக்குரிய படங்களை ஹாலிவுட்டில் படங்கள் இயக்கும் தமிழரான சுவாமி கந்தன் தேர்வு செய்தார் (தி சீக்ரெட் வில்லேஜ் படம் இயக்கியவர்).

குறும்படப் போட்டி முடிவுகள்:

முதல் பரிசு தலா 500 டாலர்கள்:

1. ஏதிலிகள்
2. இரண்டாம் காதல்

இரண்டாம் பரிசு: ( 3 குறும்படங்கள், தலா 200 டாலர்கள்)

1. என் உயிர் வாசுகி
2. முதுகெலும்பு
3. இடுக்கண்

மூன்றாம் பரிசு: ( 5 குறும்படங்கள், தலா 100 டாலர்கள்)

1. பாரதி
2. கனவே கலையாதே
3. கார்கில்
4. அந்நிய மண்ணில்
5. ஒரு பொண்ணு வேணும்

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசும், சான்றிதழும் விரைவில் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என ஃபெட்னா நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

முத்தழகு நடிகையின் காதல் தாய்க்குலம் தாக்குதல்

நடிகைகள் காதலில் விழுந்தாலே கவலைப்படுவது அம்மாக்கள்தான். வருமானம் போய்விடுமே என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும் வகையில்லாமல் சிக்கிவிடக்கூடாதே என்ற பதைப்பும் ஒரு காரணம்.

முத்தழகு நடிகை அந்த மலையாள நடிகரை தீவிரமாக காதலிப்பது உண்மைதான் என்றாலும் தாய்குலத்தின் வற்புறுத்தல் காரணமாகத்தான் மறுப்பு அறிக்கை விடுகிறாராம்.

"காதலிக்கிறதுதான் காதலிக்கிற டாப்புல இருக்கிற ஹீரோக்களை காதலிக்க கூடாதா" என்பதும் தாய்குலத்தின் ஆதங்கமாம்.

அதோடு நாலு படம் வந்துகிட்டு இருக்குற நேரத்துல சம்பாதிக்கிற வழிய பார்க்காம காதல் கீதல்னு அலைஞ்சா நீ பிள்ளையும் இல்லை நான் அம்மாவும் இல்லை என்றும் அம்மா சென்டிமெண்ட் ஆக தாக்குதல் நடத்தியுள்ளாராம். இதுவே முத்தழகு நடிகை காதலுக்கு மறுப்பு அறிக்கை விட வைத்துள்ளது.

ஆனாலும் இப்போ அம்மாவுக்கு தெரியாமல் காதலை வளர்க்கிறாராம் முத்தழகு நடிகை. கத்திரிக்கா முத்தினால் கடைத் தெருவுக்கு வராமலா போய்விடும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

 

வாயால் வந்த வினை... நம்பர் நடிகை மேல் ‘லீடர்’ நடிகரின் ரசிகர்கள் கோபம்!

சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சின்ன நம்பர் நடிகை, தனக்குப் பொருத்தமான நாயகர்கள் பற்றி ஒரு பட்டியல் வெளியிட்டார்.

அதன்படி, கோட்சூட் நடிகருடன் தனக்கு நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாகக் கூறிய நாயகி, லீடர் நடிகருக்கு ஐந்தாம் இடத்தை அளித்தார்.

ஏற்கனவே, அடுத்த உச்ச நடிகர் யார் என்ற பரபரப்பான போட்டி மேற்கூரிய இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே கொளுந்து விட்டு எரிகிறது. இந்நிலையில் அம்மணி கூறிய பட்டியலில் கோட் நடிகருக்கு முதலிடமும், லீடர் நடிகருக்கு கடைசி இடமும் அளிக்கப் பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நம்பர் நடிகை லீடர் நடிகரும் நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை தான். நல்ல கெமிஸ்ட்ரி இல்லாமலா தொடர்ந்து ஜோடி சேர்ந்து நடித்தார் என லீடர் நடிகரின் ரசிக்ர்கள் நடிகை மீது கோபத்தில் உள்ளார்களாம்.

நம்பர் நடிகை தற்போது கோட் நடிகருடன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெரியாமல் இப்படி உளறிக் கொட்டி லீடர் நடிகரின் பகைமையைச் சம்பாரித்து விட்டோமே என கவலைப் பட்டு வருகிறாராம் நடிகை.

 

கோடம்பாக்கத்துல அடுத்த காதல் கல்யாணம் இவங்களோடது தானாம்... நம்புவீங்களா, நீங்க நம்புவீங்களா?

சென்னை: விரல் நடிகரும், சின்னப்பூ நடிகையும் காதலை வெளிப்படுத்தியது போலவே சீக்கிரமாகவே அதற்கு முற்றுப் புள்ளியும் வைத்து விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஆனால், நம்பர் நடிகையுடனான காதல் மீண்டும் துளிர்த்து விட்டதாலேயே சின்னப்பூ நடிகையுடனான காதல் முறிந்து விட்டது என புதிய படக்குழுவினர் தெரிவித்தனர்.

அனால், இல்லையில்லை இருவரும் ஜோடி சேர்ந்து நடித்து வரும் இரண்டு புதிய படங்களின் பப்ளிசிட்டிக்காகவே இந்தக் காதல் டிராமா என குற்றம் சாட்டியவர்களும் உண்டு.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் நடந்த சம்பவம் சின்னப்பூ நடிகையின் முறிந்துபோய்விட்டதாக அறிவித்த காதல் குறித்த சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது.

அதாவது ப்ரியமான நடிகையிடம் விழாவைத் தொகுத்து வழங்கியவர், ‘கோடம்பாக்கத்துல அடுத்த காதல் கல்யாணம் எது? உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க" எனக் கேட்க, ப்ரியமான நடிகை டக்கென சின்னப்பூ நடிகையைக் கையைக் காட்டியிருக்கிறார்.

இந்தப் பதில் அங்கிருந்த அத்தனை பேரையும் சலசலப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இத்தனைக்கும் ப்ரியமான நடிகையின் அருகில் தான் சின்னப்பூ நடிகை அமர்ந்திருந்திருக்கிறார். அவர் இப்பதிலைக் கேட்டு கோபப் படுவார் என அனைவரும் எதிர்பார்க்க, சின்னப்பூ நடிகையோ வெட்கப் புன்னகை சிந்தியிருக்கிறார்.

ஊடகங்களுக்காகவும், பரபரப்பான செய்திகளில் அடிபட வேண்டும் என்பதற்காகவும் தான் இரண்டு பேரும் காதலை ஒளித்துவைத்து விளையாடுகிறார்களோ என்ற சந்தேகத்தை இச்சம்பவம் உண்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.