குளச்சல் கடலில் தத்தளித்த படகு... கடலில் கவிழ்ந்த தனுஷ்,அப்புக்குட்டி

Danush Appukutty Drowned Kolachal Sea Rescued

குளச்சல்: பரத்பாலா இயக்கும் மரியான் படத்தின் ஷூட்டிங்கின்போது, மீனவராக தனுஷ் நடித்தபோது படகு கடலில் கவிழ்ந்ததில் அவரும், நடிகர் அப்புக்குட்டியும் தண்ணீரில் கவிழ்ந்து விட்டனர். இருப்பினும் இருவரையும் மீனவர்கள் சேர்ந்து மீட்டு விட்டனர். அதனால் இருவரும் தப்பி விட்டனர்.

இப்போதுதான் கடல் என்ற படத்தை எடுத்து ஒய்ந்தார் மணிரத்தினம். படமும் தியேட்டர்களை விட்டு வெகு வேகமாக வெளியேறி விட்டது. இந்த நிலையில் மீனவர் வேடத்தில் தனுஷ் நடித்து வரும் படம்தான் மரியான்.

பரத்பாலா இயக்குகிறார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்திற்காக, கடலுக்குள் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டார் இயக்குனர் பரத்பாலா.

அதன்படி ஒரு படகில் தனுஷ், அப்புக்குட்டி இருவரையும் அமர்த்தி கடலுக்குள் சென்று படமாக்கினார். அப்போது அவர்கள் அமர்ந்திருந்த படகு தீடிரென வீசிய பலத்த காற்றால் தலைகீழாக கவிழ்ந்தது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், பாதுகாப்புக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து இருவரையும் காப்பாற்றினார். இரு நடிகர்களுக்கும் காயம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அமிதாப்பின் அரசியல் அதிரடி ‘சத்யாகிரஹா’ ஆரம்பம்

Amitabh Bachchan Starts Shooting Satyagraha

போபால்: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கும் சத்யாகிரஹா படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு போபால் நகரில் நேற்று தொடங்கியது. மகன் அமிதாப், மருமகள் ஐஸ்வர்யா, பேத்தி ஆரத்யா ஆகியோர் முதல்நாள் படப்பிடிப்புக்கு வந்து உற்சாகப்படுத்தினார்களாம்.

தமது அடுத்த படம் சினிமா வாழ்வில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று அமிதாப் பச்சன் அடிக்கடி சொல்லிவந்தார். இப்போது அந்த எதிர்பார்ப்பிற்குரிய படமான சத்யாகிரஹா தொடங்கியுள்ளது. அரசியல் படமான இதில் வயதான கெட் அப் உடன் வருகிறார் அமிதாப். இந்த படத்தை பிரகாஷ் ஜா இயக்குகிறார்.

பிரகாஷ் ஜா இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடித்த ஆரக்ஷான் படம், 2011-ல் வெளியானது. அதுவும் ஒரு சமூக-அரசியல் கதை. அரசு வேலைகளுக்கு ஜாதி அடிப்படையில் இடது ஒதுக்கீடு செய்வது தொடர்பான படம், அந்தப் படம் சில மாநிலங்களில் அரசியல் ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இப்போது, அதே டைரக்டர்-ஹீரோ ஜோடி, சேர்ந்துள்ளனர். ‘சத்யாக்கிரஹா' என்ற பெயரோடு அரசியல் படம் எடுப்பதால், சர்ச்சைகள் எழப்போவது உறுதி! என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர்.

சத்யாகிரஹா படத்தில் அமிதாப் தவிர அஜய் தேவ்கான், கரீனா கபூர், அர்ஜூன் ராம்பால் ஆகியோர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஜவுளிக்கடை 'அம்பாசடர்' ஆனார் ரிச்சா கங்கோபாத்யாயா!

Richa Becomes Textile Shop Brand Ambassador   

நடிகை ரிச்சா கங்கோபாத்யாயா, ஜவுளி வாங்கலையோ ஜவுளி என்று ஆந்திர மாநில ரயில் நிலையங்களிலும், பஸ் ஸ்டாண்டுகளிலும் டிவி பெட்டிகளில் கூவினாலும் கூவலாம்...காரணம், அவர் ஜவுளிக்கடை ஒன்றின் பிராண்ட் அம்பாசடராகி விட்டாராம்.

ஒஸ்தி உள்பட 2 படங்களில்தான் தமிழில் நடித்தார் ரிச்சா. ஆனால் மார்க்கெட் சுத்தமாக கிடைக்கவில்லை. ஆள் நன்றாக இருந்தாலும் கூட வாய்ப்பு ஏனோ வரவில்லை. தெலுங்கில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நடித்துக் கொண்டிருக்கிறார் ரிச்சா. இருந்தாலும் அங்கும் கவலைக்கிடமான நிலைதான்.

சமீபத்தில் இவரது நடிப்பில் மிர்ச்சி என்ற படம் வெளியானது. இதுவாவது கை கொடுக்குமா என்பது தெரியவில்லை. இந்தநிலையில் தற்போது ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பிரபல ஜவுளிக்கடையின் பிராண்ட் அம்பாசடராகியுள்ளார் ரிச்சா.

இதற்காக அவருக்கு பல லட்சத்தை அந்தநிறுவனம் கொட்டிக்கொடுத்துள்ளதாம். இதையடுத்து அந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் நடிக்கப் போகிறார் ரிச்சா. அவை டிவிகளில் ஒளிபரப்பாகுமாம்.

எப்படியோ பிசியா இருந்தா சரிதான்...

 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாலிவுட் திருவிழா!

Zee Cine Awards 2013 Telecast Zee Tamil Tv

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திரைப்பட விருது விழா இன்று மாலை 4.30 ஒளிபரப்பாகிறது.

திரைப்பட விழாக்கள் கொண்டாட்டமானவை, கலர்புல்லானவை... நட்சத்திரப்பட்டாளங்கள் பங்கேற்கும் அந்த நிகழ்ச்சிக்கு தனி மவுசுதான்.

தொலைக்காட்சி வரலாற்றில் 20 வருடங்களை கடந்துள்ள ஜீ தொலைக்காட்சி நிறுவனம், இந்திய சினிமாவின் 100-வது ஆண்டு நிறைவு விழாவையட்டி ஜீ விருது வழங்கும் நிகழ்ச்சியை மும்பையில் நடத்தியது. இதில் பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் ஷாருக்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப், பிரியங்கா சோப்ரா உள்பட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்று விருதுகளை அள்ளிச் சென்றனர்.

இந்த விருது நிகழ்ச்சியை அபிசேக் பச்சன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமும் உண்டு. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

 

அது எனக்கு சரிப்பட்டு வராது... லட்டு புகழ் விசாகா சிங்

I Am Not Fit Glamour Says Visaka Singhhttps

சென்னை : கவர்ச்சியாக நடிப்பது எனக்கு சரிப்பட்டு வராது என்று லட்டு தின்ன ஆசையா புகழ் விசாகா சிங் கூறியுள்ளார்.

‘பிடிச்சிருக்கு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான விசாகா சிங் நீண்ட நாட்களுக்குப் பின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஏன் இந்த இடைவெளி என்றால் அவர் இந்திக்கு போய்விட்டு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறாராம்.

தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' பட வாய்ப்பு வந்தது. ஆடிஷனில் தேர்வான பிறகு நடித்தேன். இந்தப் படம் தமிழக ரசிகர்களிடம் என்னை அதிகளவு கொண்டு சேர்த்திருக்கிறது.

என்னைப் பார்ப்பவர்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா என்கிறார்கள். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடித்திருந்தேன். அது முகம் சுழிப்பது போல் இருக்காது. அது மாதிரியாக நடிப்பேன். அதிக கிளாமராக என்னால் நடிக்க முடியாது. இவ்வாறு விசாகா சிங் கூறினார்.

வெளியிடங்களுக்கு செல்லும்போது என்னை அடையாளம் கண்டு பேசுகிறார்கள். பாராட்டுகிறார்கள். இந்தப் படத்தை தொடர்ந்து இன்னும் சில வாய்ப்புகள் வந்திருக்கிறது. அதில் நல்ல கதாபாத்திரமாக தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்றார்.

இப்படி சொன்னா தமிழ் ரசிகருங்க ஏத்துக்கணுமே விசாகா.

 

வங்கதேசத்தில் இந்தி கார்ட்டூன் சேனலுக்கு தடை!

Bangladesh Bans Cartoons Halt Hindi Invasion

டாக்கா: வங்கதேசத்தில் இந்தி கார்டூன் சேனல்கள் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் தாய்மொழியாக பெங்காலி மொழி உள்ளது. இதை கற்க சிறுவர்கள் கஷ்டப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்த போது, டிவிக்களில் ஒளிபரப்பப்படும் இந்தி நிகழ்ச்சிகளில் சிறுவர்கள் ஆர்வம் காட்டுவதாகவும், பலர் இந்தியை கற்றுக் கொள்வதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து, இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட ஜப்பானின் டோரிமன் கார்டூன் நிகழ்ச்சிக்கு அரசு தடை விதித்துள்ளது.

டோரிமன் என்பது ரோபோ பூனை. இது 22ம் நூற்றாண்டில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு உதவுவது போல கார்ட்டூன் தொடராக ஒளிபரப்பப்பட்டு பிரபலமானது.

இதுகுறித்து வங்கதேச தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஹசனுல் ஹக் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் பேசுகையில், சிறுவர்கள் தவறான வழியில் செல்வதை அரசு விரும்பவில்லை. அவர்களுடைய கற்றல் சூழ்நிலைக்கு பாதிப்பு வரக்கூடாது என்றார்.

எனவே, டிஸ்னி, டிஸ்னி எக்ஸ்டி, போகோ போன்ற கார்டூன் சேனல்களை ஒளிபரப்ப கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிலையும் இதுபோல தமிழ்பேசும் கார்டூன்களுக்கு தடை விதித்தால் நல்லது என்று பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகின்றனர். நம் ஊரிலும் கார்டூன் சேனலுக்கு தடை வருமா?

 

டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

No More Double Meaning Dialogue Future Says Santhanam

ஹீரோக்களுக்கு தோழன் என்றால் கூப்பிடு சந்தானத்தை என்று கூறும் அளவிற்கு பிஸியாகிவிட்டார் நகைக்சுவை நடிகர் சந்தானம். பல படங்கள் ஓடினாலும் சில படங்கள் கவிழ்த்து விடத்தான் செய்துள்ளன. அதற்கு சமீபத்திய உதாரணம் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் டபுள் மீனிங் டயலாக்தானாம்.

இது சந்தானத்தை மட்டுமல்ல கார்த்திக்கும் சேர்த்துக் குழிபறித்துவிட்டதுத்தான் சோகம். இதனால் உஷாராவிட்ட சந்தானம் இனி டபுள் மீனிங் டயலாக்குகளை பேசுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

அவரின் இந்த முடிவுக்கு தலைவன் படத்தின் ஹீரோ பாஸ்கர்தான் காரணமாம். தலைவன் படத்தில் பாஸ்கரும், சந்தானமும் ஜோடி போட்டு நகைச்சுவையில் கலக்கியிருக்கின்றனராம். முந்தைய படங்களைப் போல இல்லாமல் இந்தப் படத்தின் நகைச்சுவையில் ஒரு நாகரீகம் வெளிப்பட்டிருக்கிறதாம்.

தலைவனில் சந்தானம் கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோ என்கிறார்கள். காமெடி சீன்களில் பாஸ், மற்றும் சந்தானம் வரும் காட்சிகளில் சிரித்து சிரித்து வயிற்றுவலி உத்தரவாதம் என்றும் சொல்கிறார்கள்.

‘பாஸ்' அரசியலில் இருந்தபோது சிலருக்கு வயிற்றைக் கலக்க வைத்தார். இப்போது, வயிறு வலிக்க சிரிக்கவும் வைக்கிறாராம். படம் வந்தால்தான் தெரியும்.

அரசியல் பின்னணியில் இருந்து நடிக்க வந்த ‘தி.மு.க.' உதயநிதி ஸ்டாலினுக்கும், ஒரு கல் ஒரு கண்ணாடியில் கை கொடுத்தவர் சந்தானம்தான். தற்போது ‘அ.தி.மு.க.' பாஸ் வரும்போது கூட கைகொடுப்பதும் சந்தானம்தான்.