நடிகர் திலீப் வீடு- அலுவலகங்களில் வணிகவரி அதிகாரிகள் ரெய்டு- ரொக்கம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல்!

நடிகர் திலீப் வீடு- அலுவலகங்களில் வணிகவரி அதிகாரிகள் ரெய்டு- ரொக்கம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல்!

கொச்சி: பிரபல மலையாள நடிகர் திலீப்பின் கொச்சி வீடு மற்ரும் அலுவலகங்களில் வணிக வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது திலீப் வீட்டில் இருந்து ரூ.13 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ஏராளமான ஆவணங்கள், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் திலீப்.

நிதி நிறுவனம்

திலீப்பின் சகோதரர் அனூர் கொச்சியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மீது தொடர் புகார்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து நேற்று இந்த நிதி நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திலீப் வீட்டில்

அடுத்து கொச்சியில் உள்ள திலீப்பின் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று வணிகவரி மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

சோதனை நடந்து கொண்டிருந்த போதே திலீப்பை உடனடியாக வணிகவரித் துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு அதிகாரிகள் கூறினர். அதற்கு திலீப் தனக்கு சில வேலைகள் இருப்பதால் விசாரணைக்கு வர முடியாது என்றும், தனக்கு அவகாசம் தர வேண்டும் என்றும் கேட்டார். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர்.

விசாரணை

இதையடுத்து திலீப் உடனடியாக வணிகவரித்துறை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பல மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரவு 10 மணிக்குத் தான் விசாரணை முடிந்து அவர் வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது கூடியிருந்த செய்தியாளர்கள் முன்பு திலீப் பேசுகையில், "எனது வீட்டில் இருந்து ஏராளமான ரொக்கப் பணம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது.

வெறும் 350 டாலர்கள்தான்

சாலக்குடியில் நான் கட்டி வரும் தியேட்டர் செலவுக்கு வங்கியில் இருந்து பணம் எடுத்து வைத்திருந்தேன். அதைத் தான் அதிகாரிகள் எடுத்தனர். அவர்களுக்கு உரிய விளக்கம் கொடுத்துள்ளேன். எனது மைத்துனர் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார். அவர் கொடுத்த 350 அமெரிக்க டாலர்களைத்தான் அதிகாரிகள் எடுத்தனர். இதுதொடர்பாகவும் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளேன்.

நான் கடந்த 18 ஆண்டுகளாக சினிமா உலகில் இருக்கிறேன். எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போலத்தான். நான் எதையும் மறைத்தது கிடையாது," என்றார்.

 

நண்பர்கள், ரசிகர்களிடம் பேசாதே - ஸ்ருதிக்கு அம்மா சரிகா கட்டுப்பாடு

சர்வ சுதந்திரமாக சுற்றித் திரிந்த ஸ்ருதி ஹாஸனுக்கு சில அன்புக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறாராம் அம்மா ஸ்ருதிஹாஸன்.

காரணம், சமீபத்தில் அவர் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல் முயற்சி.

இனி இதுபோன்ற தாக்குதல்கள் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெரிந்த திரைத்துறை நண்பர்கள், ரசிகர்களுடன்கூட போனிலோ நேரிலோ பேசத் தடை விதித்துள்ளாராம் சரிகா.

நண்பர்கள், ரசிகர்களிடம் பேசாதே - ஸ்ருதிக்கு அம்மா சரிகா கட்டுப்பாடு

எதுவாக இருந்தாலும் ஸ்ருதியை அவரது மேனேஜர் மூலம் மட்டுமே அணுக வேண்டும் என்பது சரிகாவின் கண்டிப்பான புதிய உத்தரவு.

அதேபோல, இனி தனியாக வசிப்பதும் ஆபத்து என்பதால், சகல பாதுகாப்புடன்கூடிய புதிய வீட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளாராம் சரிகா.

பாந்த்ரா வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்கு குடிபோக தயாராகிறார். தன் மகள் விஷயத்தில் முன்னாள் மனைவியின் கட்டுப்பாடுகளை அமைதியாக அனுமதித்துவிட்டாராம் கமல்.

 

குணமடைந்தார் இளையராஜா- இன்று அல்லது நாளை வீடு திரும்புகிறார்!

குணமடைந்தார் இளையராஜா- இன்று அல்லது நாளை வீடு திரும்புகிறார்!

இசையானி இளையராஜா இன்று அல்லது நாளை மருத்துவமனையில் இருந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 23ம் தேதி இசைஞானி இளையராஜா நெஞ்சுவலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய இதயத் துடிப்பை கண்காணித்த மருத்துவர்கள் இளையராஜாவுக்கு லேசான மாராடைப்பு இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து அவருக்கு "ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துவந்த இளையராஜா நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இளையராஜா இப்போது தன் அறைக்குள்ளேயே நடமாட ஆரம்பித்துள்ளார்.

தற்பொழுது பூரண குணமாகியுள்ளதால் இன்றோ அல்லது நாளை காலையோ டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

ஆக்ஷன் ஹீரோவாக மாறிய சிவகார்த்திகேயன்!

இதுவரை ஜாலி, கேலி, ஆட்டம், பாட்டு என தோன்றி வந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார், மான் கராத்தே படம் மூலம்.

இந்த ஆண்டு அதிக வெற்றிப் படங்கள் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன். எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் நல்ல வசூல் கிடைத்தது.

ஆக்ஷன் ஹீரோவாக மாறிய சிவகார்த்திகேயன்!

குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ரூ 25 கோடிக்கு மேல் குவித்து பெரும் லாபத்தை அள்ளிக் கொடுத்தது.

இதன் மூலம் பாக்ஸ் ஆபீஸில் முன்வரிசை நாயகர்களில் இடம் பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்போது அவர் நடித்து வெளிவரவிருக்கும் படம் மான் கராத்தே. இதில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஹன்சிகா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். சந்தர்ப்ப சூழல் அவரை எப்படி தாதாவாக மாற்றுகிறது என்பதுதான் கதை.

இந்தப் படம் ரூ 20 கோடிக்கு விற்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் புதிய படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறாராம் சிவகார்த்தி.

 

தலையிலேயே ‘குட்டி’ மகனுக்கு நடிப்பு சொல்லித் தரும் தலைவர் அப்பா

சென்னை: பலத்த ஆரவாரத்துடன் மகனை திரை உலகிற்கு அறிமுகப் படுத்தும் விழா நடத்திய தலைவர் அப்பா, தற்போது படு அப்செட்டில் இருக்கிறாராம். காரணம் மகனுக்கு ‘சார் போஸ்ட்' சொல்லக் கூட கஷ்டமாக உள்ளது தானாம்.

இதனை வெளியில் சொன்னால் மகனின் எதிர்காலம் பாதிக்கும் என கருதும் அப்பா நடிகர், பெரிய கதாநாயகி தேடிக் கொண்டிருக்கிறோம் என வெளியே பில்டப் கொடுத்து விட்டு, உள்ளே மகனுக்கு நடிப்புப் பயிற்சிப் பட்டறை நடத்திக் கொண்டிருக்கிறாராம்.

அதேபோல், மகனின் அறிமுக விழாவிற்கு வந்திருந்த தம்பி நடிகரை நழுவ விடாமல் அருகில் அமர்த்திக் கொண்டாராம் தலைவர். வீண் அரசியல் சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பாத தம்பி, விழாவில் இருந்து எப்படி நழுவுவது என்பதிலேயே குறியாக இருந்தாராம்.

 

நட்சத்திர கிரிக்கெட் துணைத் தூதராக சஞ்சிதா ஷெட்டி!

சென்னை: நட்சத்திரக் கிரிக்கெட்டின் சென்னை அணிக்கு துணைத் தூதராக சஞ்சிதா ஷெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

சி.சி.எல்.எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இந்தப் போட்டியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். விரைவில் 4வது ஆண்டு சி.சி.எல்.போட்டிகள் நடக்கவிருக்கிறது.

நட்சத்திர கிரிக்கெட் துணைத் தூதராக சஞ்சிதா ஷெட்டி!

சென்னை, புனே, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இப்போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

ஏற்கெனவே சென்னை அணிக்கு நடிகை த்ரிஷா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது நடிகை சஞ்சிதா ஷெட்டியும், சென்னை அணியின் துணை விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொள்ளைக்காரன், சூது கவ்வும், த வில்லா போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜில்லாவில் டாப் மோகன் லால்தான்... மகிழ்ச்சியுடன் விட்டுக் கொடுத்த விஜய்!

ஜில்லா படத்தின் டைட்டில் மற்றும் சம்பளம் போன்றவற்றில் முதலிடம் மோகன் லாலுக்கு தருமாறு கேட்டுக்கொண்டாராம் நடிகர் விஜய்.

ஜில்லாவில் முதல் முறையாக மோகன் லாலும் விஜய்யும் நடித்துள்ளனர்.

மோகன்லால் சீனியர். மலையாளத்தில் அவர் முதல் நிலை நடிகர். ஆனால் தமிழில் அவரை விட விஜய்க்குதான் முக்கியத்துவம்.

ஆனாலும் மோகன்லாலின் சீனியாரிட்டி மற்றும் அவர் மீது தான் வைத்துள்ள மரியாதையைக் காட்டும் வகையில், படத்தில் அவருக்கே முதலிடம் தருமாறு விஜய்யே இயக்குநர் நேசன் மற்றும் தயாரிப்பாளரைக் கேட்டுக் கொண்டாராம்.

ஜில்லாவில் டாப் மோகன் லால்தான்... மகிழ்ச்சியுடன் விட்டுக் கொடுத்த விஜய்!

டைட்டிலில் யார் படத்தை முதலில் போடுவது என்ற குழப்பத்தில் இயக்குநர் தவித்தபோது, 'அது ஒரு மேட்டரே இல்ல. அவர் அனுபவம்தான் என் வயசு. எனவே மோகன் லால் பெயரை முதலிலும் என் பெயரை அடுத்ததாகவும் போடுங்க,' என்று கேட்டுக்கொண்டாராம்.

அதேபோல சம்பளம் தரும் விஷயத்தில் விஜய்க்கு அதிகமாகத் தந்து, மோகன் லாலுக்கு குறைவாகத் தருவதா என்று யோசித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி.

இதுகுறித்து அவர் விஜய்யிடம் வெளிப்படையாகப் பேசியபோது, ஒன்றும் பிரச்சினையில்லை... அவருக்கே என்னைவிட அதிக சம்பளம் கொடுங்க. அதுதான் அவரைப் போன்ற கலைஞர்களுக்கு நாம் செய்யும் மரியாதை," என்றாராம்.

இந்த இரண்டு விஷயங்களையும் கேள்விப்பட்டு இனிய அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார் மோகன்லால். காரணம் அவரது இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் அவர் பெறும் முதல் அதிக சம்பளம் இதுவே. மலையாளத்தில் என்னதான் பெரிய படம் என்று சொன்னாலும், அதன் பட்ஜெட் மிஞ்சிப் போனால் ரூ 15 கோடிதான் (எகா - பழஸிராஜா). லட்சங்களில் சம்பளம் பெற்று வந்த மம்முட்டி - மோகன் லால் இப்போதுதான் கோடிகளில் வாங்க ஆரம்பித்துள்ளனர்.

இதில் ரஜினி, கமலுக்குப் பின் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவான விஜய்யை விட அதிக சம்பளம் என்றால் யோசித்துப் பாருங்கள்..!

 

விஷாலுக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்

ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் படத்திற்கு ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷால் தயாரித்து நடித்த ‘பாண்டியநாடு' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ‘நான் சிகப்பு மனிதன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் லட்சுமி மேனன், ஜெகன், சுந்தர் ராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விஷாலுக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்

விஷால் தயாரிக்கும் இந்த படத்தை திரு இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். யு.டிவி நிறுவனம் வெளியிடுகிறது.

‘நான் சிகப்பு மனிதன்' படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கவிருக்கும் படத்தை நடித்து தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஷால். படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசனிடம் பேசி ஒப்பந்தம் செய்து இருக்கிறார்களாம்.

‘நான் சிகப்பு மனிதன்' குறுகிய கால தயாரிப்பு தான் என்பதால், விரைவில் ஹரி - விஷால் - ஸ்ருதிஹாசன் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

 

500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் குள்ளமணி காலமானார்

500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் குள்ளமணி காலமானார்

சென்னை: உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் குள்ளமணி நேற்றிரவு காலமானார்.

கரகாட்டக்காரன், பில்லா, இணைந்த கைகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் குள்ளமணி. தற்போது 65 வயதாகும் குள்ளமணி கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று இரவு 9 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

அன்னாருடைய உடல் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள மரமடக்கி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப் படுகிறது.

மறைந்த நகைச்சுவை நடிகர் குள்ளமணிக்கு ராணி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள்.

 

அறிவித்தபடி வெளிவரவில்லை ஜில்லா ட்ரைலர்!

சென்னை: கிறிஸ்துமஸ் நாளில் விஜய்யின் அறிவித்தபடி வெளிவரவில்லை ஜில்லா ட்ரைலர்!  

இந்த ட்ரைலரை ரசிகர்களுக்கு விஜய் தரும் தீபாவளிப் பரிசு என்று வர்ணித்திருந்தனர். ஆனால் எதிர்ப்பார்த்த பரிசு கிடைக்காததால் ஏமாற்றத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

பொங்கலுக்கும் முன்பே ஜனவரி 10-ம் தேதி இந்தப் படம் வெளியாகவிருக்கும் நிலையில், இன்னும் படத்தின் ட்ரைலரே ரெடியாகவில்லையா என்ற கேள்வி எழ ஆரம்பித்துள்ளது.

இந்தப் படத்தில் விஜய் - மோகன் லால், காஜல் அகர்வால் நடித்துள்ளனர். இமான் இசையமைக்க, ஆர்டி நேசன் இயக்கியுள்ளார்.

எப்படியும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் படத்தின் ட்ரைலரை வெளியிட்டுவிடுவோம் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜில்லா குழு.

 

நடிகர் விவேக்குக்கு ‘பசுமை காவலர்’ விருது!

நடிகர் விவேக்குக்கு ‘பசுமை காவலர்’ விருது!

சென்னை: நடிகர் விவேக்குக்கு பசுமைக் காவலர் விருது வழங்கினார் நீதிபதி ஜோதிமணி.

பதிவுத் துறையின் ஓய்வு பெற்ற கூடுதல் தலைவர் ஆ.ஆறுமுக நயினார் ‘ரியல் எஸ்டேட் குற்றங்கள்' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணாசாலையில் உள்ள காஸ்மோ பாலிடன் கிளப்பில் நேற்று இரவு நடைபெற்றது.

ஆ.ஆறுமுக நயினார் எழுதிய மற்றொரு புத்தகமான ‘ஸ்டாம்ப் லாஸ் தமிழ்நாடு' என்ற புத்தகத்தின் 3-வதுபதிப்பை நீதிபதி ப.ஜோதிமணி வெளியிட்டார். அதை நடிகர் விவேக் பெற்றுக்கொண்டார்.

பின்னர் நடிகர் விவேக்குக்கு ‘பசுமை காவலர்' என்ற விருதை நீதிபதி ப.ஜோதிமணி வழங்கினார்.

விழாவில் நீதிபதி ப.ஜோதி மணி பேசுகையில், ''மரங்கள் அழிவதால்தான் மழை பெய்ய மறுக்கிறது. மரம் மண்ணரிப்பை தடுக்கும். மலைச்சரிவையும் தடுக்கும். எனவே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சொன்னபடி நடிகர் விவேக் மரங்களை நட்டுவருகிறார். இது பெரிய சமூகப்பணியாகும்.

நடிகர் விவேக் 25 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார் அதற்காக அவரை பாராட்டுகிறேன்," என்றார்.

நடிகர் விவேக் பேசுகையில், ''முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அன்பு வேண்டுகோளின்படி தமிழ்நாட்டில் மரக்கன்றுகளை நட்டு வருகிறேன். இதுவரை 21 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு முடித்துள்ளேன். 1 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்று அப்துல்கலாம் கூறியிருக்கிறார்.

நான் மரக்கன்றுகளை நடுவதை ஊக்கப்படுத்தி இந்த விழாவில் எனக்கு ‘பசுமை காவலர்' விருது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதை தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர் நீதிபதி ப.ஜோதிமணி வழங்கி உள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தீர்ப்பாயத்தில் இருக்கும் நீதிபதி தந்தது மகிழ்ச்சியாக, பெருமையாக உள்ளது. இந்த விருது எனக்கு ஊக்கம் அளிக்கிறது,'' என்றார்.

 

உங்க வாய்ப்பெல்லாம் சிவகார்த்திகேயனுக்குப் போகுதாமே!- தனுஷை ஏற்றிவிட்ட நாரதர்கள்!

உங்க வாய்ப்பெல்லாம் சிவகார்த்திகேயனுக்குப் போகுதாமே!- தனுஷை ஏற்றிவிட்ட நாரதர்கள்!

வார்த்தைக்கு வார்த்தை சிவகார்த்திகேயனை தன் தம்பி என்று புகழ்ந்து வந்த தனுஷ், இப்போதெல்லாம் அப்படிச் சொல்வதில்லையாம்.

காரணம் இருவருக்குமிடையிலான நட்பில் விழுந்த விரிசல்தான் என்கிறார்கள்.

கலக்கப் போவது யார் நிகழ்ச்சியில் அறிமுகமாகி, டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக கலக்கிய சிவகார்த்திகேயன் மெரினாவில் முக்கிய பாத்திரத்தில் அறிமுகமானார்.

அடுத்து தனுஷுடன் 3 படத்தில் நடித்தார். மனம் கொத்திப் பறவையில் தனி ஹீரோவாக வந்தார். ஆனால் இந்த மூன்று படங்களிலும் அவருக்குக் கிடைக்காத வெற்றி, தனுஷ் தயாரித்த எதிர்நீச்சலில் கிடைத்தது.

இருவரும் அண்ணன் - தம்பி எனும் அளவுக்கு பழகி வந்தனர். தனுஷ் வெளியில் சிவகார்த்திகேயனை தன் தம்பி என்றுதான் கூறுவார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடர்ந்து இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஒருபுறம் சிவகார்த்திகேயன் வேகமாக வளர, அவரை வளர்த்துவிட்ட தனுஷின் நிலையோ இறங்குமுகமாகத்தான் உள்ளது. இந்த ஆண்டில் தனுஷ் நடித்து வெளிவந்த மரியான், நய்யாண்டி இரண்டு படங்களுமே மாபெரும் தோல்விப் படங்களாக அமைந்தன.

முன்பு சிவகார்த்திகேயன் படத்தில் கவுரவ வேடத்தில் வந்து தனுஷ் புரமோட் பண்ணார். இப்போது நிலைமை தலைகீழ். தனுஷின் அடுத்த படமான வேலையில்லா பட்டதாரியில் கவுரவ வேடத்தில் வந்து தனுஷுக்கு பப்ளிசிட்டி தர வேண்டிய அளவுக்கு வளர்ந்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

இதை தனுஷிடம் ஓதும் விதத்தில் ஓதி, புகைச்சலைக் கிளப்பியுள்ளார்களாம் கோடம்பாக்க நாரதர்கள். 'உங்களுக்கு வரவேண்டிய கதைகள்தான் இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பது. நீங்களே உங்களுக்கு போட்டியாக ஒருத்தரை உருவாக்கிட்டீங்களே.. சினிமாவில் இந்த விஷயத்தில் சொந்தத் தம்பியாகவே இருந்தாலும் உஷாரா இருக்கணும்,' என்று சொல்லிவைத்திருக்கிறார்கள்.

விளைவு, தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவை உண்டாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ், சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் ஒரு படம் தயாரிக்க இருந்தார். இப்போது அதுபற்றி எந்த இறுதி முடிவும் எடுக்காமல் உள்ளாராம்.

 

மூன்று நாட்களில் மூன்று மில்லியன் டாலர்கள்: அமெரிக்காவில் தூம் 3 சாதனை

வாஷிங்டன்(யு.எஸ்): ஆமிர்கான், அபிஷேக் பச்சன் நடித்த தூம் 3 திரைப்படம் அமெரிக்காவில் புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரையிலும் வட அமெரிக்காவில் வெளியான இந்தியப் படங்களிலேயே, வெளியான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய முதல் மூன்று நாட்களில், தினம்தோறும் 1 மில்லியன் டாலர்கள் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. திங்கட்கிழமை 450 ஆயிரம் டாலர்கள் வசூலாகியுள்ளது.

மூன்று நாட்களில் மூன்று மில்லியன் டாலர்கள்: அமெரிக்காவில் தூம் 3 சாதனை

அமெரிக்காவில் இந்தியில் மட்டுமே வெளியாகியிருந்தாலும், தமிழ், தெலுங்கு மற்றும் அனைத்து மொழி பேசும் இந்தியர்களும் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள். முதல் மூன்று நாட்களில் பெரும்பாலான ஊர்களில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆனது குறிப்பிடத்தக்கது.ஒவ்வொரு தியேட்டரிலும்(மல்டிப்ளக்ஸ்) மூன்று நான்கு திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது.

மூன்று நாட்களில் மூன்று மில்லியன் டாலர்கள்: அமெரிக்காவில் தூம் 3 சாதனை

தூம் 3 படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் அமெரிக்காவின் சிகாகோ நகரிலும், க்ளைமாக்ஸ் காட்சி பிரசித்து பெற்ற ஹூவர் டேமிலும் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

 

நய்யாண்டி பிரச்சினை எனக்கு நல்லதாகவே முடிந்துள்ளது! - நஸ்ரியா

‘நய்யாண்டி' படத்தில் ‘டூப்' நடிகையை வைத்து தொப்புள் காட்சியைப் படமாக்கி விட்டதாக எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் ஸ்டேஷன் வரை போன நஸ்ரியா, அதுகுறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு நஸ்ரியாவை படங்களில் ஒப்பந்தம் செய்ய இயக்குநர்கள் தயங்கி வருகின்றனர்.

இனி அப்படியெல்லாம் பிரச்சினை கிளப்ப மாட்டேன் என்று இயக்குநர்களைச் சந்தித்து உறுதி கூறி வருகிறார் நஸ்ரியா.

நய்யாண்டி பிரச்சினை எனக்கு நல்லதாகவே முடிந்துள்ளது! - நஸ்ரியா

இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த திருமணம் என்னும் நிக்காஹ் படத்தின் செய்தியாளர் சந்திப்புக்கு வந்தார் நஸ்ரியா. இவர்தான் அந்தப் படத்தின் நாயகி.

எடுத்த எடுப்பிலேயே அவரிடம், நய்யாண்டி சர்ச்சையில் பட வாய்ப்புகளை இழந்துவிட்டதாக சொல்கிறீர்களே... என்று கேட்டனர் பத்திரிகையாளர்கள்.

இதற்கு பதிலளித்த அவர், "இது திருமணம் எனும் நிக்காஹ் பட நிகழ்ச்சி. இங்கு இந்தப் படம் தொடர்பாக மட்டுமே கேளுங்க," என்றார்.

பின்னர், இதே கேள்வியை அவரிடம் தனியாக கேட்டபோது, "நான் எந்த படத்தில் இருந்தும் நீக்கப்படவில்லை. ஒப்பந்தமான படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சர்ச்சை காரணமாக நல்ல பட வாய்ப்புகளை இழந்து விட்டதாகவோ என்னை புறக்கணிப்பதாகவோ கருதவில்லை. ‘நய்யாண்டி' படத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் எனக்கு சாதகமாகவே அமைந்துள்ளன.

என் குணம் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. நான் எந்த மாதிரி கேரக்டரில் நடிப்பேன் எதில் நடிக்க மாட்டேன் என நய்யாண்டி படசர்ச்சை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. டைரக்டர்கள் என்னை புதுப்படங்களில் நடிக்க அணுகும்போது என் கேரக்டர் மற்றும் காட்சி விவரங்களை விளக்கமாக கூறிவிடுகின்றனர். படப்பிடிப்பு துவங்கிய பிறகு எந்த சிக்கலும் ஏற்படவில்லை," என்றார்.

 

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் பிரியாணி செம வசூல்!

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்காவில் நாற்பது திரைகளில் வெளியான அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் பிரியாணி செம வசூல்!  

சமீபத்தில் வெளியான படங்களோடு ஒப்பிடுகையில் தமிழ் சினிமாவில் இது புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

19 திரைகளில் மட்டுமே வெளியான என்றென்றும் புன்னகை 27 ஆயிரம் டாலர்களை வசூலித்துள்ளது.

திங்கள் கிழமை 16 திரைகளில் பிரியாணி 4100 டாலர்களும், 11 திரைகளில் என்றென்றும் புன்னகை 3700 டாலர்களும் வசூலித்துள்ளன.

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் பிரியாணி செம வசூல்!

ஒரே நேரத்தில் அமெரிக்காவில் வெளியான இந்த இரண்டு படங்களையும் ஆத்மஸ் (ATMUS) எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பார்த்தவர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களினால் என்றென்றும் புன்னகை வசூல் அதிகரித்து வருவதாகவும் அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

பொங்கலுக்கு வீரம் மற்றும் ஜில்லா ஆகிய இரண்டு படங்களையும் ஆத்மஸ் எண்டெர்டெயின்மண்ட் நிறுவனமே அமெரிககாவில் வெளியிடுகிறது.

 

இளையராஜா மூன்று நாள்களில் வீடு திரும்புகிறார்!

இளையராஜா மூன்று நாள்களில் வீடு திரும்புகிறார்!

இசைஞானி இளையராஜாவின் இதய ரத்தக் குழாய்களில் இருந்த இரு அடைப்புகள் நீக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்து வரும் இளையராஜா, இன்னும் மூன்று தினங்களில் வீடு திரும்புகிறார்.

இதனால் அவரது மலேசிய இசை நிகழ்ச்சி தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜா வருகிற 28-ந் தேதி மலேசியாவில் நடைபெறும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்கான ஒத்திகை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் பிற்பகல் இந்த ஒத்திகையில் இளையராஜா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் லேசான அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஆபரேஷன் செய்யாமல் டாக்டர்கள் அகற்றினர்.

இதையடுத்து நேற்று காலை வரையிலும் அவசர சிகிச்சை பிரிவிலேயே இளையராஜா அனுமதிப்பட்டிருந்தார். பிற்பகலில் அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை தேறி வருகிறது.

இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பிலேயே இளையராஜா இருப்பார் என்றும், அதன் பிறகே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

 

புத்தாண்டு கொண்டாட்டங்கள்... நட்சத்திர ஓட்டல்களில் குத்தாட்டம் போடத் தயாராகும் நடிகைகள்!

சென்னை: புத்தாண்டு வந்தாலே போதும்... நட்சத்திர ஓட்டல்களில் கவர்ச்சிக் குத்தாட்டம் போடத் தயாராகிவிடுவது நடிகைகள் வழக்கம்.

சில நடிகைகளுக்கு அவர்கள் பெறும் ஒரு படத்தின் சம்பளத்தையே சன்மானமாகத் தருவதுண்டு.

நடிகைகளின் கவர்ச்சி ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே சரக்கடித்தபடி விருந்து சாப்பிடுவதுதான் இப்போதைய புத்தாண்டுக் கொண்டாட்டம்.

இந்தி நடிகர், நடிகைகள் புத்ததாண்டு நிகழ்ச்சிகளில் கோடிகளில் சன்மானம் வாங்குகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள்... நட்சத்திர ஓட்டல்களில் குத்தாட்டம் போடத் தயாராகும் நடிகைகள்!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சென்னை நட்சத்திர ஓட்டலில் 7 நிமிடம் நடனம் ஆடுகிறார். இதற்காக ரூ.6 கோடி சம்பளம் பேசியுள்ளாராம்.

நடிகை சார்மி தெலுங்கில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். அவரை புத்தாண்டில் நடனம் ஆட வைக்க ஒரு ஓட்டல் நிர்வாகம் ரூ.18 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.

ஸ்வேதா பாசு ரூ.7 லட்சத்துக்கு ஆடுகிறார்.

தமன்னா, காஜல் அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தாவிடமும் புத்தாண்டு நடனம் ஆட பேச்சுவார்த்தை நடக்கிறது.

அவர்கள் ஆடும் ஓட்டல்களின் விபரம் வெளியாகவில்லை.

 

தலைமுறைகள் படம் பார்த்தார் ரஜினி... பாலுமகேந்திரா, சசிகுமாருக்குப் பாராட்டு!

தலைமுறைகள் படம் பார்த்தார் ரஜினி... பாலுமகேந்திரா, சசிகுமாருக்குப் பாராட்டு!

தனக்குப் பிடித்த படங்களை உடனுக்குடன் பாராட்டிவிடுவது ரஜினி வழக்கம்.

சமீபத்தில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான ‘தலைமுறைகள்' படத்தையும் பார்த்தார் ரஜினி.

இந்தப்படம் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தாத்தாவாக பாலுமகேந்திராவும். பேரனாக மாஸ்டர் கார்த்திக்கும் நடித்திருக்கிறார்கள். சசிகுமார் தனது ‘கம்பெனி புரடக்‌ஷன்' சார்பாக படத்தை தயாரித்திருக்கிறார்.

படம் பார்த்து முடித்ததுமே இயக்குனர் பாலுமகேந்திராவையும் சசிகுமாரையும் போனில் அழைத்து நீண்டநேரம் பாராட்டியதோடு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தமிழுக்கு மிகப் பெரிய மரியாதை செய்துவிட்டீர்கள் என்று அவர் தனது பாராட்டில் தெரிவித்தார்.

28 வருடங்களுக்கு முன்பு பாலுமகேந்திரா இயக்கத்தில் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

ஆனால் ரஜினி நடித்த முள்ளும் மலரும் உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திரா இருந்துள்ளார்.