கத்தி பிரச்சினை... கமிஷனர் அலுவலகத்தில் பல மணி நேரம் காத்திருக்கும் அய்ங்கரன் கருணா! - எக்ஸ்க்ளூசிவ்

சென்னை: லைகா நிறுவனத்தின் கத்தி படம் தீபாவளிக்கு வெளியாவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்துப் பேச கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்ட அய்ங்கரன் நிறுவனத்தின் கருணாமூர்த்தி, பல மணி நேரமாக அலுவலகத்திலேயே காத்திருக்கிறார்.

கத்தி படத்தை லைகா நிறுவனத்தின் பெயரை எடுத்துவிட்டு வெளியிடுமாறு தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மீறி வெளியிட்டால் பெரும் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு, விடுதலைப் சிறுத்தைகள், மாணவர் அமைப்புகள் எச்சரித்துள்ளன.

கத்தி பிரச்சினை... கமிஷனர் அலுவலகத்தில் பல மணி நேரம் காத்திருக்கும் அய்ங்கரன் கருணா! - எக்ஸ்க்ளூசிவ்

மேலும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் விநியோகஸ்தர்களை நேரில் அழைத்து, படத்தை வெளியிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடப் போவதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல் முருகன் கூறியுள்ளார்.

கத்தியை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று அறிக்கை வெளியிட்டார்.

இன்னொரு பக்கம், கத்தி வெளியீடு குறித்தும், டிக்கெட் முன்பதிவு குறித்தும் லைகா நிறுவனம் விளம்பரங்களை வெளியிட்டு வந்தது.

இந்த சூழலில், படத்தை வெளியிடுவது, அதையொட்டி எழுந்துள்ள சூழல் குறித்துப் பேச சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்துக்கு படத்தின் இணை தயாரிப்பாளரான அய்ங்கரன் கருணாமூர்த்தியை வரவழைக்கப்பட்டார்.

அவரிடம் லைகா நிறுவனத்தின் பெயரை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு லைகா மற்றும் அய்ங்கரன் தரப்பு மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து மேற்கொண்டு பேசலாம் எனக் கூறி கருணாமூர்த்தியை கமிஷனர் அலுவலகத்திலேயே காத்திருக்க வைத்துள்ளனர்.

கத்தி படத்து இன்று முதல் டிக்கெட் முன்பதிவு என்று அறிவித்திருந்தனர். ஆனால் எந்த அரங்கிலும் முன்பதிவு தொடங்கவில்லை. அதேநேரம், தமிழகத்தில் வெளியாகாவிட்டாலும் பரவாயில்லை, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் படத்தை 22-ம் தேதி வெளியிடுவதில் உறுதியாக உள்ளதாம் லைகா.

 

"திவ்ய"மான சொதப்பலால் தீயாய் கொதிக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்!

சென்னை: வானம் கலர் ரிப்பன் பாடல் இடம் பெற்ற ஒரே படத்தில் நடித்ததன் மூலமே முன்னணி நடிகை அந்தஸ்தைப் பெற்ற நடிகை இவர்.

மலையாள வரவான இவரின் அழகு தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்ததன் கைமேல் பலனாக நிறைய படங்களில் நடித்து வருகிறார் நடிகை. அடுத்தடுத்து தனது படங்கள் வெளியானால் தன் மார்க்கெட் இன்னும் ஏறும் என எதிர்பார்ப்பில் நடிகை இருக்கிறாராம்.

இதனால், துணிச்சலாக தற்போது நடித்து வரும் படங்களின் தயாரிப்பாளர்களிடம் ஆயிரத்து எட்டு கண்டிசன்களைப் போடுகிறாராம். குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டலில் தான் தங்குவேன், இந்த சாப்பாடு தான் சாப்பிடுவேன் என கறாராகச் சொல்லி விடுகிறேன்.

இது போக, புதிய படங்களுக்காகத் தன்னை அணுகும் படத் தயாரிப்பாளர்களிடன் இவ்வளவு சம்பளம் கொடுத்தால் தான் கால்ஷீட், இல்லையென்றால் நடையைக் கட்டுங்கள் எனக் கூறி வருகிறாராம்.

ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டு அடுத்த படத்தில் அடி வாங்கியோர் ஆயிரம், அது தெரியாமல் இந்த சின்னப் பெண் இப்படி நடந்து கொள்கிறாரே என அவரது வளர்ச்சியில் அக்கறை காட்டும் சிலர் வருத்தத்துடன் கூறுகிறார்கள்.

தற்போது ஐந்து படங்களில் நடித்து வரும் நடிகை கால்ஷீட் விசயத்திலும் சொதப்பி வருவதாக படக் குழுவினர் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.