நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் விஜய் டிவியின் ‘அடையாளம்’

Adaiyalam Vijay Tv Be Nostalgic

நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் ‘ அடையாளம்' என்ற புதிய நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கியுள்ளது. சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, உங்களில் யார் பிரபுதேவா, அது இது எது, கலக்கப்போவது யாரு, நீயா நானா, குற்றம் நடந்தது என்ன, பெரிதினும் பெரிது கேள், என பலரும் பாராட்டும் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்திய விஜய் டிவி கலைஞர்களை அடையாளப்படுத்தும் புதுமையான நிகழ்ச்சியை ஒளிபரப்பிவருகிறது. தன்னுடைய நிகழ்ச்ச்சிகளின் மூலம் அறிமுகமானவர்களையும் தலை சிறந்த கலைஞர்களாகவும், தொகுப்பாளர்களாகவும் உலகிற்கு உணர்த்தும் நிகழ்ச்சி அது.

சந்தானம், சிவகார்த்திகேயன், ஜீவா, கோபினாத், ஜெகன், திவ்யதர்ஷினி, தீபக், ரம்யா, மகாபா ஆனந்த், பாவனா, சின்மயி, கல்யாணி, ரிஷி என பல்வேறு தொகுப்பாளர்களின் ஆரம்பகால கலைவாழ்க்கையிருந்து இன்று வரை இவர்கள் கலை உலகில் பயணித்த விதம், அதில் இவர்கள் கண்ட அனுபவங்கள், வெற்றிகள் போன்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை 'அடையாளம்' நிகழ்ச்சி மூலம் காணலாம்.

நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் மேற்கண்டவர்களுடன் விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடிய நட்சத்திரங்கள் மற்றும் தங்கள் திறமைகளை உலகிற்கு வெளிக்காட்டி அதன் மூலமாக மக்களின் அபிமான நட்சத்திரங்களாகிய நபர்கள் பற்றியும் அடையாளம் நிகழ்ச்சியில் தெரிந்துகொள்ளலாம்.

விஜய் டிவியின் நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் மதியம் 1230 மணிமுதல் 2.30 மணிவரை ஒளிபரப்பாகிறது.

 

கிராமங்களில் அதிக நற்பணிகள் செய்யும் நிர்வாகிகளுக்கு விருந்து, பரிசு! - விஜய்யின் அதிரடித் திட்டம்

Vijay Honours His Fan Club Functionaries

தனது மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளில் அதிக நற்பணிகள், குறிப்பாக கிராமப் பகுதிகளில் அதிக நற்பணிகள் செய்வோருக்கு ஊக்கப் பரிசு வழங்கினார் நடிகர் விஜய்.

விஜய்யின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தொடர்ந்து பல்வேறு நற்பணிகளைச் செய்து வருகின்றனர். விஜய் பிறந்த நாள், அவரது படங்கள் வெளியாகும் நாட்களில் மட்டுமல்லாமல், இயற்கைப் பேரிடர்களின் போதும் அவர்கள் தங்களால் ஆன பணிகளை மக்களுக்குச் செய்கின்றனர்.

இத்தகைய பணிகளை அவர்கள் மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும், குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக அளவு மக்களுக்கு நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

நற்பணிகளில் ஈடுபட்டுள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களை தனது ஜேஎஸ் கல்யாண மண்டபத்துக்கு வரவழைத்தார் விஜய். அதிக நற்பணிகள் செய்த ரசிகர்களுக்கு செயின் மற்றும் மோதிரங்களைப் பரிசளித்தார்.

அனைவருக்கும் பிரியாணி விருந்து வழங்கியதோடு, நீண்டநேரம் அனைவருடனும் பேசி, அறிவுரை வழங்கினார்.

ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை முழுமையாகக் கவனிக்க வேண்டும் என்றும், அதன்பிறகே மன்ற பணிகளைக் கவனிக்க வேண்டும் என்றும் கூறிய அவர், அடுத்த ஆண்டும் ரசிகர்களுக்கு இதுபோல விருந்தும் பரிசளிப்பும் தொடரும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்ஏ சந்திரசேகரன், மாநிலப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த், செயலாளர் ரவிராஜா, பிஆர்ஓ பிடி செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

திருமதிகளின் செல்லப்பிள்ளை நான்: சஞ்சீவ்

Actor Anchor All Round Tirumathi

சின்னத்திரையில் திருமதி செல்வம் தொடரில் ஹீரோ, மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என பன்முகம் காட்டும் சஞ்சீவ் இன்றைக்கு திருமதிகளின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார். பத்தாண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் நடித்துவரும் சஞ்சீவ் தனது பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் படியுங்கள்.

மஞ்சுளா விஜயகுமார் எனக்கு உறவினர் என்பதால் சிறுவயதிலேயே சினிமாத்துறைக்கு வந்துவிட்டேன். என்னுடைய அக்கா சிந்து திரைப்படங்கள், டிவி தொடர்களில் நடித்திருக்கிறார். ஆஸ்துமா பிரச்சினையினால் திடீரென்று இறந்து போய்விட்டார். அவர் மெட்டி ஒலி தொடரில் நடித்த போது எனக்கும் அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரையில் முதன்முதலாக மெட்டி ஒலி தொடரில் இளங்கோ கதாபாத்திரம் என்னை அடையாளப்படுத்தியது. இயக்குநர் திருமுருகன்தான் எனக்குள் இருந்த நடிகனை கண்டுபிடித்தார். இயக்குநர் சி.ஜெ. பாஸ்கர் என்னை செதுக்கினார்.

திருமதி செல்வம் தொடரில் வரும் செல்வம் கதாபாத்திரம் ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. முதல் ஆறுமாதம் இயக்குனர் உதவியால்தான் சிறப்பாக நடித்தேன். அதன்பிறகு நானே செல்வமாக ஒன்றிவிட்டேன். இப்போது எல்லாம் யாராவது செல்வம்ன்னு கூப்பிட்டால் கூட திரும்பிப் பார்க்கிறேன். அது தான் இந்தத் தொடரில் எனக்குக் கிடைத்த அனுபவம்.

முன்பெல்லாம் என்னைப் பார்க்கிறவர்கள் நல்லா நடிக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். "திருமதி செல்வம்' வந்த பிறகு நிலைமை அப்படியே மாறி எல்லோரும் என்னைப் பாராட்டுவதோடு நின்று பேசவும் விரும்புகிறார்கள். "திருமதி செல்வ'த்தின் மூலமாக திருமதிகளின் செல்லப்பிள்ளையாகிவிட்டேன்.

"மானாட மயிலாட' நிகழ்ச்சி முழுக்கமுழுக்க கமர்ஷியலான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியைக் பொறுத்தவரை நான் முதல் முறையாகத் தொகுத்து வழங்குகிறேன். என் நண்பன் தீபக் கொடுத்த ஊக்கத்தால்தான் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறேன்.

என்னை முதல்ல இந்நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்காகத்தான் கூப்பிட்டார்கள். எனக்கு நடனம் வேண்டாம்ன்னு சொன்னேன். அதனால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பொறுப்பைக் கொடுத்தார்கள். இன்று விருது வாங்குகிற அளவுக்கு எனக்கும் ஓர் இடம் கிடைத்திருக்கிறது.

நானும் நடிகர் விஜயும் ஒன்றாக படித்தவர்கள். அதனால் விஜய் நடித்த பத்ரி, நிலாவே வா, புதியகீதை உள்ளிட்ட படங்களில் நானும் நடித்திருக்கிறேன். பூ பறிக்க வருகிறோம் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். சீரியலில் நடிப்பதற்கு நேரம் சரியாக இருப்பதால் தற்போதைக்குப் படங்கள் எதிலும் நடிக்கவில்லை.

என் மனைவி ப்ரித்தி. சின்னதிரை நடிகை என்பதால் என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு, "இது நல்லா இருக்கு, இந்த இடத்துல இன்னும் கொஞ்சம் நல்லா செய்திருக்கலாம்'னு சொல்லுவார். அவர் எனக்கு ரொம்ப உதவியாகவும், ஊக்கமாகவும் இருக்கிறார். எங்களின் செல்லமகள் லயாதான் இப்போது எங்கள் உலகமே என்று கூறிவிட்டு சீரியலில் நடிக்க தயாரானார் செல்வம்.

 

சன்னி லியோனின் ஜிஸ்ம் 2 போஸ்டர்களை அகற்ற மும்பை மேயர் உத்தரவு

Jism 2 Posters Too Hot Bmc Orders Removal   

மும்பை: ஆபாச படங்களில் நடிக்கும் சன்னி லியோனின் முதல் பாலிவுட் படமான ஜிஸ்ம் 2வின் போஸ்டர்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதால் மாநகரப் பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றுமாறு மும்பை மேயர் சுனில் பிரபு உத்தரவிட்டுள்ளார்.

ஆபாச படங்களில் நடிப்பவர் கனடா வாழ் இந்தியரான சன்னி லியோன்(31). பிக் பாஸ் ரியாலி்ட்டி ஷோவுக்காக இந்தியா வந்த அவர் இங்கு மிகவும் பிரபலமாகிவிட்டார். இதையடுத்து பாலிவுட் நடிகையும், இயக்குனருமான பூஜா பட்டின் ஜிஸ்ம் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திலும் அவர் கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.

இதையொட்டி மும்பை மாநகரப் பேருந்துகள் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் அப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் மும்பையில் மாகரப் பேருந்துகள் உள்பட பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர்கள் மி்கவும் ஆபாசமாக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. வித்யா சவான் மும்பை மாநகராட்சியில் புகார் கொடுத்தார்.

இது குறித்து மேயர் சுனில் பிரபு கூறுகையில்,

ஜிஸ்ம் 2 பட போஸ்டர்கள் மிகவும் ஆபாசமாக உள்ளன என்று எம்.எல்.ஏ. சவான் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து நான் மும்பை மாநகரப் பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை உடனே அகற்ற உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

 

யாரோட துணையும் இல்லாம பாலிவுட்ல ஜெயிச்சிருக்கேன்! - சொல்கிறார் அசின்

Asin Enjoys Her Top Place In Bollywood   

மும்பை: சொந்தக் காலில் முன்னேறி, இந்தியில் முன்னணி நடிகை ஆகியிருக்கிறேன் என்கிறார் நடிகை அசின்.

ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகை என்று இந்தியில் ஒதுக்கப்பட்டவர் அசின். ஆனால் இன்று அவர் நடித்த படங்கள் மூன்று அடுத்தடுத்த ரூ 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதால், முன்னணி நடிகையாக பார்க்கப்படுகிறார்.

சமீபத்தில் அசின் நடிப்பில் வந்த போல்பச்சன் படமும் ரூ 100 கோடிக்கு மேல் வசூல் பார்த்துள்ளது.

கரீனாகபூர் நடித்த ‘3 இடியட்ஸ்', ‘கோல்மால் 3‘, ‘பாடிகார்ட்', ‘ராஜன்' படங்களும் ரூ.100 கோடி வசூலித்தன. கரீனா கபூருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில அசின் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பார்வை இப்போது தன்னை நோக்கித் திரும்பியிருப்பதால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடும் அசின், இதுபற்றிக் கூறுகையில், "இத்தனை நாள் எனது இடம் குறித்து எனக்கே திருப்தி இல்லை.

ஆனால் இப்போது நம்பிக்கை பிறந்திருக்கிறது. எனக்கு எவ்வளவு படங்களில் நடிக்கிறேன் என்ற எண்ணிக்கை முக்கியமல்ல. திருப்தியாக வேலை பார்க்க வேண்டும். அதுதான் முக்கியம். இந்தி திரையுலகில் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்தது சந்தோஷமாக இருக்கிறது.

சினிமாவில் எனக்கு பாதுகாவலர்களோ, உறவினர்களோ ஆண் நண்பர்கள் யாரும் இல்லைா.

யாரோட தயவும் இல்லாம எனது சொந்த காலில்தான் வளர்ந்திருக்கிறேன். தென்னிந்திய நடிகைகளை இந்தி ரசிகர்கள் இதுபோல் ஏற்றுக் கொள்வது அபூர்வம். என் விஷயத்தில் அந்த அபூர்வம் நிகழ்ந்திருப்பது கடவுள் ஆசீர்வாதம்," என்றார்.

 

சன்னி லியோனும், வினோத பழக்கமும்

Sunny Leone S Strange Obsession   

மும்பை: ஜிஸ்ம் 2 படத்தில் நடித்துள்ள ஆபாச நடிகை சன்னி லியோன் அடிக்கடி தண்ணீரால் காலை கழுவிக் கொண்டே இருப்பாராம்.

ஆபாச படங்களில் நடிக்கும் கனடா வாழ் இந்தியரான சன்னி லியோன் பிக்ஸ் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் இந்தியாவில் பிரபலமானார். இதையடு்தது அவருக்கு பாலிவுட் நடிகையும், இயக்குனருமான பூஜா பட்டின் ஜிஸ்ம் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே கவர்ச்சி காட்டத் தயங்காத பாலிவுட் நடிகைகளுக்கு மத்தியில் இந்திக்கு வந்துள்ள சன்னி தன் பங்கிற்கு கன்னாபின்னா என்று கவர்ச்சியாக நடித்துள்ளார்.

சரி, நம்ம மேட்டருக்கு வருவோம். சன்னி லியோனுக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உள்ளதாம். அவர் அடிக்கடி தண்ணீரில் காலை கழுவிக் கொண்டே இருப்பாராம். முதலில் இதைப் பார்த்த ஜிஸ்ம் 2 படக்குழுவினர் சன்னிக்கு என்ன ஆச்சு. இப்படி அடிக்கடி கால் கழுவுகிறாரே என்று நினைத்துள்ளனர். அதன் பிறகு அவர்களுக்கு பார்த்து பார்த்து பழகிவிட்டதால் கண்டுகொள்ளவில்லை.

ஒவ்வொரு காட்சிக்கும் இடையே சில சமயம் 15 முதல் 20 நிமிடத்திற்கு ஒரு முறை கூட காலில் தண்ணீர் ஊற்றி கழுவுவாராம். இயக்குனர் பிரேக் என்று சொன்னால் அடுத்த நிமிஷம் சன்னி காலைக் கழுவச் சென்றுவிடுவாராம். அவரின் இந்த வினோத பழக்கத்தை வைத்தே படக்குழுவினர் சன்னியை கிண்டலடித்துள்ளனர்.

 

அடடா... வட போச்சே!

Trisha Shock Over Prabhu Deva S Decision   

ரொம்ப கடுப்பிலும் அதிர்ச்சியிலும் இருக்கிறாராம் நடிகை த்ரிஷா.

பின்னே.. இந்தியில் எப்படியும் தன்னை மீண்டும் நிலைநிறுத்தும் என்று எதிர்ப்பார்த்த படத்திலிருந்து திடீரெனத் தூக்கியடித்தால்... என்னதான் செய்வார்?

தெலுங்கில் பிரபு தேவா இயக்கிய முதல் படம் ‘நு ஒஸ்தனன்டே நேனொ ஒத்தன்டனா' . த்ரிஷாதான் நாயகி.

இதே படம் தமிழில் உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் என்ற பெயரில் வெளியாகி வெற்றி கண்டது. இதிலும் த்ரிஷாதான் நாயகி.

இப்போது இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் பிரபுதேவா. அதிலும் திரிஷா நாயகியாக நடிப்பார் என கூறப்பட்டது. திரிஷா பொருத்தமாக இருந்ததால் அவரையே தேர்வு செய்ய பிரபுதேவா திட்டமிட்டு இருந்தாராம். விஷயத்தைக் கேள்விப்பட்டு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தார் த்ரிஷா.

காட்டா மீட்டாவில் கோட்டை விட்டதை பிரபு தேவா படத்தில் பிடித்துவிடலாம் என்பது அவர் கணக்கு.

ஆனால் திடீரென பிரபு தேவாவின் பார்வை கமல் மகள் ஸ்ருதி பக்கம் திரும்பிவிட்டதாம். இதனால் திரிஷா அதிர்ச்சியாகியுள்ளார்.

சமீபத்தில் நடந்த இரவு விருந்து ஒன்றில் நயன்தாராவும், திரிஷாவும் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டினர். அதன்பிறகு தொடர்ந்து இருவரும் நெருக்கமான தோழிகளாக மீடியாவுக்கு பேட்டிகளும் அளித்து வருகின்றனர்.

இதனால் கோபமடைந்துதான் த்ரிஷாவைக் கழட்டிவிட்டார் பிரபு தேவா என ஒரு பக்கம் செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.

இதுக்காகவெல்லாமா வாய்ப்பு தர மறுப்பாங்க?!

 

மாண்டலின் ராஜேஷ் ஆல்பம் வெளியிட்ட கமல்.. முகம்கொள்ளா மகிழ்ச்சியுடன் மீரா ஜாஸ்மின்!

Meera Jasmine At Mandolin Rajesh Album Release

மாண்டலின் ராஜேஷின் இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில், அவருடன் ஜோடியாகக் கலந்து கொண்டார் நடிகை மீரா ஜாஸ்மின்.

மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேஷுக்கும் மீரா ஜாஸ்மினுக்கும் நீண்ட நாட்களாக காதல் என்ற பேச்சு மீடியாவில் இருந்துவருகிறது.

ஆனால் அதை சில சமயம் மறுப்பதும், சில சமயம் வெளிப்படையாகக் காட்டுவதுமாகக் கண்ணாமூச்சி ஆடி வந்தார்கள் இருவருமே.

திடீரென்று ஒரு நாள் இருவரும் சேர்ந்து வசிப்பதாக செய்தி வெளியானது. மற்றொரு நாள் இருவருக்கும் கடும் சண்டை என்றார்கள்.

இந்த நிலையில், ராஜேஷின் இசை ஆல்பம் ‘Following My Heart' வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. சத்யம் சினிமாவில் நடந்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஆல்பத்தை வெளியிட்டு வாழ்த்தினார் நடிகர் கமல்ஹாஸன். முதல் சிடியை விக்குவிநாயக்ராம் பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவின் முக்கியமான இன்னொரு விருந்தினராக வந்திருந்த மீரா ஜாஸ்மின், ராஜேஷுடன் ஜோடியாக மேடையில் நின்று போஸ் கொடுத்தார்.

காதலை உறுதி செய்தார் மீரா...

இந்த ஆல்பத்தில் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னர் மீரா ஜாஸ்மின் நிருபர்களிடம் பேசினார். அவர் கூறும்போது, "நிறைய சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை இல்லை. மனசுக்கு பிடித்த சில படங்களில் மட்டும் நடித்தால் போதும் என்று நினைக்கிறேன். இப்போது, மலையாளத்தில் தற்போதைய கேரளா அரசியலை மையப்படுத்தி எடுக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்.

இந்த ஆல்பத்தில் நான் நடிப்பதற்காக ராஜேஷ் என்னை அணுகியபோது, முதலில் நான் மறுத்தேன். இருந்தாலும், நான்தான் இந்த ஆல்பத்தில் நடிக்க வேண்டும் என ராஜேஷ் பிடிவாதமாக இருந்ததால் அவருக்காக நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆல்பம் மிகவும் நன்றாக வந்துள்ளது," என்றார்.

ராஜேஷூடன் காதலா? இருவரும் சேர்ந்து வசிப்பதாகக் கூறப்படுவது குறித்து? கேட்டபோது, "ராஜேஷை நான் அதிகமாக காதலிக்கிறேன். அது உண்மைதான், ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்வது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை," என்றார்.

 

'தம்'மடித்த வழக்கில் தீர்ப்பு - ரூ 100 அபராதத்தோடு தப்பித்தார் ஷாரூக்!

Shahrukh Khan Escapes With Rs 100 Fine Smoking Public

ஜெய்ப்பூர்: பொது இடத்தில் புகைப் பிடித்த வழக்கில் நடிகர் ஷாரூக்கானுக்கு ரூ 100 அபராதம் விதித்து ஜெய்ப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 8-ந் தேதி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்தது.

அப்போது, கொல்கத்தா அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் ஸ்டேடியத்தில் புகை பிடித்ததாக கூறி, அவர் மீது ஆனந்த் சிங் என்பவர் ஜெய்ப்பூர் கூடுதல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு எஸ்.சி.கோதரா, பொது இடத்தில் புகை பிடித்த குற்றத்திற்காக நடிகர் ஷாருக்கானுக்கு ரூ.100 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த தொகையை ஷாருக்கான் தனது வக்கீல் மூலம் செலுத்துவதற்கு அவர் அனுமதி அளித்தார்.

இந்தத் தொகை, ஷாரூக்கான் வாங்கும் சிகரெட் பாக்கெட்டின் விலையைவிட குறைவுதான் என்று தீர்ப்பைக் கேட்ட பின் பலரும் கமெண்ட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

 

'நமக்கு சீரியல்.... அவனுக்கு மட்டும் சில்வர் ஸ்கிரீனா?'

இந்த கிசுகிசுவுக்கு க்ளூவே கிடையாதுங்க. தயவு செஞ்சு நேர்ல கூட கேட்டுடாதீங்க… பழமொழி சொன்னா அனுபவிக்கணும்ங்கிற நம்ம கமல் ஸ்டைல்ல சொல்றேன்… படிச்சிட்டு மண்டைய குழப்பிங்கங்க!

அவர் ஒரு இளம் நடிகை. ஆரம்பப் படம் சொதப்பல். அடுத்தது தற்கொலைப் படம். படம் சுமாரான சொதப்பல். ‘இருந்தாலும் நல்லா நடிச்சுதே… கண்ணு சும்மா பேசுதே’ என்று பாராட்டித் தள்ளினார்கள் படம் பார்த்தவர்கள். பத்திரிகையாளர்கள் பார்வை ரொம்பவே அவர் பக்கம் பாய்ந்தது.

திடீரென்று நடிகையைப் பற்றி எங்கும் செய்தி. சிவப்பு சிவப்பாய் உடைகள் அணிந்து அலைபாயும் கூந்தலோடு பளீர் புன்னகையில் ஜொலித்தார் நடிகை.

ஒரு நாள் திடீரென்று எல்லாம் நின்றுபோனது. நடிகையைப் பற்றிய கிசுகிசு ‘தெரியுமா சேதி’ என நிருபர்கள் மத்தியில் பரவினாலும், அது பேனா முனை வரை வரவே இல்லை.

விசாரித்தால் நடிகையைச் சுற்றியிருக்கும் அன்புப் பிடி அப்படி ஒரு பவர்புல் பிடியாம்!

செல்வாக்கு மிக்க அந்த ‘பலதொழில்’ அதிபர், நகரின் பிரதான ஏரியாவில் தனியாக ஒரு வீட்டையே நடிகையின் கண்ணழகுக்கு எழுதி வைத்துவிட்டாராம். ‘நடிப்புக்கு மெல்ல மெல்ல குட்பை சொல்…, உடனே சொன்னா சந்தேகப்படுவானுங்க’ என்று உத்தரவாம்.

விஷயத்தை எப்படியோ தெரிந்து கொண்ட இன்னொரு தொழில் அதிபருக்கு செம காட்டமாம். ‘நாம இவ்ளோ பெரிய பாரம்பரியமிக்க அதிபரா இருக்கோம்… நமக்கு டிவி சீரியல் ரேஞ்சுக்குதான் மாட்டுது.. அவனுக்கு மட்டும் சில்வர் ஸ்கிரீன் எப்படிய்யா சிக்கிச்சு. உடனே போடுறோம் அடுத்த பட பூஜையை..’, என புலம்புகிறாராம்!

திரும்பவும் சொல்றேன்… சில ‘காஸிப்’களை அனுபவிக்கணும்.. ஆராயக்கூடாது!!

 

துப்பாக்கிக்கு ஆதரவாக பிலிம்சேம்பர் பதில் மனு - வழக்கு ஒத்தி வைப்பு - தொடரும் சிக்கல்!

Vijay S Thuppakki Is Still Trouble    | விஜய்  

சென்னை: விஜய்யின் துப்பாக்கி படத் தலைப்புக்கு ஆதரவாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம்சேம்பர்) பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால் இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.

விஜய் நடித்து வரும் `துப்பாக்கி’ என்ற படத்தின் தலைப்புக்கு தடை கேட்டு நார்த் ஈஸ்ட் பிலிம் நிறுவனத்தின் உரிமையாளர் சி.ரவிதேவன், சென்னை 2-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், ‘துப்பாக்கி’ படத்தின் தலைப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை ரத்து செய்யக்கோரி துப்பாக்கி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி திருமகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கின் 5-வது எதிர் மனுதாரரான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தென்னிந்தியாவில் திரைப்படம் தயாரிக்கும் நபர்கள் எங்கள் அமைப்பில் உறுப்பினராக உள்ளனர். அவர்கள் தயாரிக்கும் படத்தின் தலைப்பை பதிவு செய்வது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பணியாகும்.

ஒரு தலைப்பை உறுப்பினர்கள் பதிவு செய்யும்போது, அதுபோன்ற தலைப்பு முன்பு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என சரிபார்க்கப்படும். தலைப்பு பதிவு செய்யப்பட்ட பின்னர், 6 மாதத்துக்கு ஒரு முறை தலைப்பை புதுப்பிக்க வேண்டும். இந்த தலைப்பு பதிவு செய்வது எல்லாம் காப்புரிமை சட்டத்தின்படி கிடையாது. ஆனால், இந்த நடைமுறைகள் சுய ஒழுங்குமுறைகளின்படி பின்பற்றப்படுகிறது.

மனுதாரர் `கள்ளத்துப்பாக்கி’ என்ற தலைப்பை பதிவு செய்தார். ஒருவர் பதிவு செய்த தலைப்பின் முன்பகுதி அல்லது பின்பகுதியை வேறு உறுப்பினர்களும் பதிவு செய்யும் நடைமுறைகள் உள்ளன.

‘கிராமம்’ என்ற தலைப்பை ஒருவர் பதிவு செய்துள்ளார். மற்றொருவர் `திருட்டு கிராமம்’ என்று பதிவு செய்துள்ளார். அதேபோல `ஆதி’, ‘ஆதிசிவம்’ என்று பல தலைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ரவிதேவன் தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்,” என்று குறிப்பிட்டிருந்தனர்.

தடை நீடிப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், வழக்கு விசாரணையை 3-ந் தேதிக்கு (நாளை) தள்ளி வைத்தார். அதுவரை ‘துப்பாக்கி’ படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

 

விருந்தில் நடந்த விஷயங்களை வெளியில் சொல்ல முடியுமா? - தமன்னா

Tamanna Refuses Reveal Her Party Secrets With Dhanush   

சென்னை: சமீபத்தில் நடந்த தனுஷின் பிறந்த நாள் விழாவில் செம குஜாலாக ஆட்டம் போட்டவர் நடிகை தமன்னா.

தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் மட்டுமல்ல, தனுஷுக்கும் தமன்னாவுக்கும் கூட கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸெல்லாம் ஏகத்துக்கும் ஒர்க் அவுட் ஆனதால், இருவரும் தங்கள் நட்பை ‘மெட்ராஸ் சிமெண்ட்’ போடாத குறையாக இறுக்கமாக்கிக் கொண்டுள்ளார்களாம்.

அந்த உறவின் உரிமையில், ஐஸ்வர்யாவை விட ஒரு படி அதிகமாகப் போய் பார்ட்டியில் அன்பைப் பொழிந்தாராம் அம்மணி.

இருவரும் அடிக்கடி காதருகில் கிசுகிசுப்பாக தெலுங்கில்தான் மாட்லாடிக் கொண்டார்களாம்.

அப்படி என்னதான் பேசினீர்கள்… தனுஷ் அப்படியென்ன ஸ்பெஷல் என்று சிலர் கேட்டதற்கு தமன்னா கூறிய பதில் இது:

தனுஷ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரொம்ப சுதந்திரமாக உணர்ந்தேன். மறக்கமுடியாத விருந்து அது.

‘வேங்கை’ படத்தில் இருந்து நானும் தனுஷும் நெருக்கமான நண்பர்கள் (அதைச் சொல்லணுமா!)

தனுஷ் அற்புதமான சிறந்த மனிதர். எந்த வேலையாக இருந்தாலும், அதை மீறி கலந்து கொள்வேன். அவர் பிறந்த நாளில் என்னால் பங்கேற்காமல் இருக்க முடியாது. இருவரும் நிறைய விஷயங்கள் பற்றி பேசினோம். ரொம்ப உணர்வுப் பூர்வமான நிகழ்வுகள் அவை. விருந்தில் நடந்த விஷயங்கள் பற்றி சொல்ல முடியுமா?,” என்றார்.

பார்றா… உடம்பெல்லாம் மச்சம்ங்கிறது இதானா?!

 

எமிதான் வேண்டும் என விக்ரம் சிபாரிசு செய்தாரா?

I M Not Recommending Amy Shankar Mo

சென்னை: ஐ படத்தில் எனக்கு ஜோடியாக எமியைத்தான் போட வேண்டும் என சிபாரிசு செய்யவில்லை என நடிகர் விக்ரம் கூறினார்.

விக்ரம் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம், `தாண்டவம்.’ ஏஎல் விஜய் இயக்கும் இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை ஐநாக்ஸில் நடந்தது.

அப்போது விக்ரம் உள்ளிட்ட தாண்டவம் படக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். விக்ரம் கூறுகையில், “இது ஒரு மாறுபட்ட படம். எனக்கு இதில் இரட்டை வேடங்கள் என்று சொல்ல முடியாது. இரட்டை வேடங்கள் போல் தோன்றும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். `ரா’ (உளவுப்பிரிவு) அதிகாரியாக நடிக்கிறேன்.

படத்தில் எனக்கு இரண்டு ஜோடி. முதல் பாதியில் எமிஜாக்சன் வருவார். இரண்டாம் பாதியில் அனுஷ்கா வருவார். இருவருக்குமே சமமான கேரக்டர்கள். அருமையாக நடித்துள்ளனர்.

தமிழ் பட உலகின் மிக சிறந்த டைரக்டர்களில் விஜய்யும் ஒருவர். இனிமையான மனிதர். நல்ல நண்பர். நல்ல சகோதரர். தயாரிப்பாளர்களின் டைரக்டர்,” என்றார்.

உங்களுக்கும், எமிஜாக்சனுக்கும் முத்த காட்சி இருக்கிறதா? என்ற கேள்விக்கு, “இந்த படத்தில் இல்லை. வேண்டுமானால் ஷங்கரிடம் சொல்லி, `ஐ’ படத்தில் வைக்க சொல்கிறேன்”, என்றார்.

‘ஐ’ படத்துக்கு எமிஜாக்சனை நீங்கள்தான் சிபாரிசு செய்தீர்களாமே?, என்ற கேள்விக்கு, ‘எமிஜாக்சன் லண்டனை சேர்ந்தவர். `ஐ’ படத்துக்கு அவர் தேவைப்பட்டார். அதனால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். நான் சிபாரிசு செய்யவில்லை”, என்றார்.

ஏற்கனவே `காசி’ படத்தில் கண்பார்வையற்றவராக நடித்து இருந்தீர்கள். மீண்டும் இந்த படத்தில் பார்வையற்றவராக நடிக்கிறீர்கள். இரண்டும் ஒரே மாதிரி இருக்காதா?, என்ற கேள்விக்கு, “மம்முட்டி 35 படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார்.

நான், `காசி’ படத்தில் மட்டும் பார்வையற்றவராக நடித்தேன். அந்த படத்தின் கதாபாத்திரத்துக்கும், இந்த படத்தின் கதாபாத்திரத்துக்கும் நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறேன். இன்னும் 5 படங்களில் கூட கண்பார்வையற்றவராக, ஐந்து விதமாக என்னால் நடிக்க முடியும்,” என்றார் விக்ரம்.

இயக்குநர் விஜய்

இயக்குநர் விஜய் கூறுகையில், “இந்தப் படத்தில் ஒரு கேரக்டர் பார்வையற்ற, ஆனால் எதையும் எளிதில் உணர்வால், ஒலியலைகளால் புரிந்து கொண்டு, பார்வைக் குறைபாடே தெரியாமல் வாழ்கிற ஒரு பாத்திரம். அதை விக்ரம் அருமையாகச் செய்துள்ளார். இந்தப் பாத்திரம் நிஜத்தில் உள்ள ஒரு கேரக்டர். படத்தின் இசை வெளியீட்டின் போது அவரை நேரில் வரவழைக்க முடிவு செய்துள்ளோம்,” என்றார்.

நடிகை எமி ஜாக்சனும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். தமிழ்ப் படத்தில் நடிப்பதை பெருமையாகக் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

 

சூதாட்ட கப்பலில் ப்ரியாமணிக்கு மட்டும் அனுமதி!

Priyamani Visits Casino Pride Goa   

கோவா: கோவாவின் மாண்டோவி ஆற்றில் நிறுத்தப்பட்டுள்ள பிரபல சூதாட்ட கப்பலான காஸினோ பிரைடில், நடிகை பிரியாமணிக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பொதுவாக கேஸினோக்கள் எனப்படும் சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதியில்லை.

எனவே கோவா அரசு, சுற்றுலா என்ற பெயரில் சூதாட்டத்தை நிலத்தில் அனுமதிக்காமல், நீரில் மிதக்கும் கப்பல்களில் அனுமதிக்கிறது. மாண்டோவி ஆற்றில் நிறுத்தப்பட்டுள்ள பிரமாண்ட கப்பலான கேஸினோ பிரைட், ஒரு பெரிய சூதாட்ட விடுதி எனலாம்.

பொதுவாக இந்தக் கப்பலில் சினிமா படப்பிடிப்பு போன்றவற்றை அனுமதிப்பதில்லையாம். ஆனால் பிரியாமணிக்காக அனுமதித்தார்களாம்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் ஜோடியாக ப்ரியாமணி நடிக்கும் லட்சுமி எனும் படத்தின் ஷூட்டிங் இந்த சூதாட்டக் கப்பலில் வைத்து எடுக்கப்பட்டது. கப்பலின் அழகிய உள் அலங்கார வேலைப்பாடுகளையும் படமாக்கிக் கொண்டார்களாம்.

இந்தக் கப்பலில் நடந்த படப்பிடிப்பு ரொம்ப உற்சாகமாகவும் புதுமையாகவும் இருந்ததாக ப்ரியாமணி தெரிவித்தார்.

 

ஒரு கோடியைக் கூட வசூலிக்காத பில்லா 2 ! - கடுப்பில் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள்

Billa 2 Flops At The Us Uk Box Office   

லண்டன்: அஜீத்தை கிங் ஆப் ஓபனிங் என்று வர்ணிப்பது அவரது ரசிகர்களின் விருப்பமான விஷயம்.

உண்மையில் ரஜினிக்குப் பிறகு, அவர் படத்துக்குதான் தமிழகத்தில் அதிக நாள் ஓபனிங் என்பதும் உண்மைதான்.

ஆனால் பில்லா 2 எல்லாவற்றையும் சொதப்பிவிட்டது. தமிழகத்தில் இரண்டாவது வாரமே டல்லடித்துப் போயின திரையரங்குகள். வேறு படங்களை மாற்று ஒப்பந்த முறையில் திரையிட்டு வந்தனர்.

இப்போது வெளிநாட்டில் இந்தப் படம் என்ன வசூலித்தது என்ற விபரம், அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது.

அதன்படி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒரு கோடி ரூபாயைக் கூட வசூலிக்க முடியாமல் படுதோல்வியைத் தழுவியுள்ளது பில்லா 2.

தமிழ்ப் படங்களைப் பொறுத்தவரை, அமெரிக்காவும், பிரிட்டனும் முக்கியமான சென்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத் படங்களிலேயே இந்த இரு நாடுகளிலும் அதிக தியேட்டர்களில் வெளியானது பில்லா 2தான்!

பிரிட்டனில்..

பில்லா 2 முதல்வாரம் ஈட்டிய தொகை ரூ 61.20 லட்சம். பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் 20 அரங்குகலில் படம் வெளியானது.

அமெரிக்காவில்...

அமெரிக்காவில் 31 அரங்குகளில் இந்தப் படத்தை வெளியி்ட்டனர். அங்கு மொத்தம் ரூ 64 லட்சத்தை மட்டுமே இந்தப் படம் வசூலித்துள்ளது. இது மங்காத்தாவின் வசூலைவிட மிகக் குறைவு.

மொத்தம் மூன்று வாரங்களில் அமெரிக்காவில் 90 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்த நிலையில், தூக்கப்பட்டுள்ளது பில்லா 2. பிரிட்டனில் இன்னும் குறைவாக, ரூ 79 லட்சத்துடன் தூக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.

இத்தகவல்களை, பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படம் மூலம் வெளிநாட்டு உரிமையை வாங்கியவர்களுக்கு நஷ்டமே கிடைத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

 

கணவர் பிறந்த நாளில் விவாகரத்து என செய்தி பரப்புவதா? - குமுறும் ரம்பா

Rambha Denies Divorce Rumours

சென்னை: என் கணவருடன் விவாகரத்து என்று தப்புத் தப்பாய் தகவல் பரப்புகிறார்கள். நான்குமணி நேரத்துக்கு முன்புதான் என்னிடம் சொல்லிவிட்டு ஆபீஸ் போனார். அதற்குள் விவாகரத்து என்கிறார்களே.., என்றார் நடிகை ரம்பா.

பிரபல நடிகை ரம்பாவும் கனடா தொழிலதிபர் இந்திரனுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இப்போது இருவருக்கும் ஒன்றரை வயதில் லாவண்யா என்ற மகள் இருக்கிறாள்.

கணவர் இந்திரன், மகள் லாண்யாவுடன் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் வசித்து வருகிறார் ரம்பா.

இந்த நிலையில், ரம்பா, தனது கணவர் இந்திரனை விவாகரத்து செய்துகொண்டதாக இணையதளங்களில் தகவல் பரவியது.

தகவல் அறிந்ததும் பதறிய ரம்பா அளித்துள்ள விளக்கம்:

நான், என் கணவர் இந்திரன், மகள் லாண்யாவுடன் கனடாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்று எனது கணவர் இந்திரனுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் நான், என் கணவர் இந்திரனை விவாகரத்து செய்துவிட்டதாக இணையதளம் மூலம் வதந்தியை பரப்பியிருக்கிறார்கள்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இப்படியெல்லாம் விளையாடக்கூடாது. எனது கணவர் நான்கு மணி நேரத்துக்கு முன்புதான் வீட்டிலலிருந்து அவருடைய அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார். நான்கு மணி நேரத்துக்குள் நாங்கள் விவாகரத்து செய்து கொண்டதாக பொய்யான தகவலை பரப்பியிருக்கிறார்கள்.

இதுபற்றி நான், என் கணவரிடம் ஆதங்கத்துடன் பேசியபோது, அவர் எனக்கு தைரியம் சொன்னார். 'இது போன்ற வதந்திகளையெல்லாம் கண்டு கொள்ளாதே, அலட்சியப்படுத்திவிடு' என்று கூறினார். எனக்கு நல்ல மனைவியும், அழகான குழந்தையும், செழிப்பான வியாபாரமும் இருக்கிறது. இதை விட ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும் என்று அவர் கேட்கிறார்.

நான் பயந்த சுபாமுள்ள பெண் அல்ல. வதந்திகளை பார்த்து கவலைப்படமாட்டேன். இருப்பினும், தமிழ்நாட்டில் உள்ள என் நலம் விரும்பிகளுக்காகவும், ரசிகர்களுக்காகவும் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்," என்று கூறியுள்ளார்.

 

இந்திய சினிமாவில் முதல்முறையாக கேம்ஸ், காமிக்ஸ் வடிவிலும் வெளியாகும் கோச்சடையான்

Kochadaiyaan Game Cds Comic Books Be Released Soon

சென்னை: இந்திய சினிமாவில் முதல் முறையாக புரொஃபஷனல் கேம்ஸ் மற்றும் முழுமையான காமிக்ஸ் வடிவிலும் வெளியாகிறது ரஜினியின் கோச்சடையான் திரைப்படம். இதற்காக சர்வதேச நிறுவனங்களுடன் தயாரிப்பாளர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

இத்தகவலை படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளிமனோகர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "கோச்சடையான் ஆரம்பித்த நாளிலிருந்தே, இந்தப் படத்தின் தீமை மையமாக வைத்து கேம்ஸ் சிடிக்கள் வெளியிட வேண்டும் என்பதும் எங்கள் இலக்காக உள்ளது. இந்த யோசனையைச் சொன்னவரும் சௌந்தர்யாதான். பக்கா கேம்ஸ் சிடி வெளியிட இதைவிட பொருத்தமான படம் இருக்கிறதா என்ன?

இன்னொன்று இந்திய சினிமாவில் முதல்முறையாக ஹாலிவுட்டுக்கு நிகராக கேம்ஸ் சிடி வெளியாகும் படம் இதுவே. இதற்கு முன் ஓரிரு படங்களுக்கு வந்திருந்தாலும் அவை பெயரளவுக்குதான் இருந்தன.

புரொபஷனலாக கேம்ஸ் சிடி வெளியாகவிருப்பது கோச்சடையானுக்குத்தான். சர்வதேச அளவில் ஜாம்பவானாக உள்ள நிறுவனங்கள் தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசிக் கொண்டுள்ளனர்.

அடுத்து கோச்சடையான் படத்தை அப்படியே காமிக்ஸ் புத்தமாகக் கொண்டுவரும் திட்டம். பலர் எங்களை அணுகி இதற்கான உரிமையைக் கேட்டுள்ளனர். இந்தியாவின் மிகச் சிறந்த காமிக் பப்ளிஷர்கள் கோச்சடையான் காமிக்ஸ் வெளியிட ஆர்வம் காட்டுகின்றனர்," என்றார்.