சென்னை: சிவத்த பொண்ணு நடிகை தன்னை வைத்து படம் எடுத்த இயக்குனர் ஒருவரை வறுத்தெடுத்துள்ளாராம்.
கோலிவுட், டோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தவர் சிவத்த பொண்ணு நடிகை. ஆனால் தற்போது அம்மணியின் மார்க்கெட் டல்லடித்துவிட்டது. அவர் தமிழில் ஒரு படத்திலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த 2 படங்களைத் தவிர அவருக்கு வேறு படம் இல்லை. இந்நிலையில் அவர் தன்னை வைத்து படம் எடுத்த இயக்குனர்களை அணுகி வாய்ப்பு கேட்டு வருகிறாராம். நாம் எல்லாம் அப்படியா பழகி இருக்கிறோம், உங்களின் அடுத்த படத்தில் என்னை ஹீரோயினாக போடுங்கள் என்று கூறி வருகிறாராம்.
இந்நிலையில் சிவத்த பொண்ணை வைத்து தமிழில் வெற்றிப் படம் கொடுத்த ஒரு இயக்குனர் தற்போது ஹெட் நடிகரை இயக்க உள்ளார். அந்த படத்தில் தன்னையே ஹீரோயின் ஆக்கும்படி நடிகை இயக்குனரிடம் தெரிவித்துள்ளார்.
நாம் ஏற்கனவே சேர்ந்து பணியாற்றிய படம் ஹிட்டாகியுள்ளது. அதனால் இந்த படமும் ஹிட்டாகும் என்று கூறி இயக்குனரை வறுத்தெடுத்துள்ளாராம்.
அந்த இயக்குனரோ சிவத்த பொண்ணுவிடம் டோஸ் வாங்கிய பிறகு வாரிசு நடிகையை ஹீரோயினாக்கிவிட்டார்.