வெற்றி மாறன் படம்... தயாரித்து நடிக்கும் தனுஷ்.. இன்று ஷூட்டிங் தொடங்கியது!

சென்னை: பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறனும் தனுஷும் இணையும் புதுப் படம் தொடங்கியது.

இந்தப் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

பொல்லாதவன் படத்தில்தான் தனுஷும் வெற்றி மாறனும் முதலில் இணைந்தனர். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது.

வெற்றி மாறன் படம்... தயாரித்து நடிக்கும் தனுஷ்.. இன்று ஷூட்டிங் தொடங்கியது!

அதைத் தொடர்ந்து ஆடுகளம் படத்தில் இருவரும் இணைந்தனர். அந்தப் படம் வெற்றி பெற்றதோடு, 6 தேசிய விருதுகளையும் அள்ளியது.

மீண்டும் இருவரும் இணையப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் அந்தப் படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.

இந்த நிலையில் இந்தப் படத்தை தனுஷே தனது சொந்தப் பட நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் வெற்றி மாறன்.

தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

இதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "ஆறு தேசிய விருதுகளை வென்ற வெற்றிக் கூட்டணி மீண்டும் களமிறங்குகிறது. இன்று தொடங்கும் அந்தப் படத்தை வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிப்பதில் பெருமையடைகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அஜீத்- கவுதம் மேனன் படத்தின் வசனகர்த்தா!

பாலிவுட்டில் சில இந்திப் படங்கள் இயக்கியுள்ள ஸ்ரீதர் ராகவன்தான் அஜீத்தின் அடுத்த படத்துக்கு வசனம் எழுதப் போகிறார்.

தம் மரோ தம்ஸ காக்கி போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர் ஸ்ரீதர் ராகவன். சென்னைக்காரர்தான். இந்தியில் சமீபத்தில் வந்த ஏஜென்ட் வினோத் உள்பட சில படங்களையும் இயக்கியுள்ளார்.

அஜீத்- கவுதம் மேனன் படத்தின் வசனகர்த்தா!

அஜீத் - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் வசனகர்த்தாவாக ஸ்ரீதரைத்தான் நியமித்துள்ளனர்.

இதனை உறுதி செய்த ஸ்ரீதர் ராகவன், "கவுதம் மேனன் இயக்கும் அஜீத் படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதுப் பணி மிக சுவாரஸ்யமாக உள்ளது. மிக அற்புதமான கூட்டணியில் இணைந்திருக்கிறேன்," என்று ட்விட் செய்துள்ளார்.

இந்தப் படம் ஒரு போலீஸ் கதை. ஏற்கெனவே இதுமாதிரி படங்களுக்கு எழுதிய அனுபவம் உள்ளவர் என்பதாலேயே ஸ்ரீதர் ராகவனை அழைத்தாராம் கவுதம் மேனன்.

 

இன்று மாலை முதல் நிமிர்ந்து நில் ரிலீஸ்!

பணப் பிரச்சினையால் நேற்று வெளியாகாமல் நின்ற நிமிர்ந்து நில் படம், இன்று மாலை முதல் அறிவிக்கப்பட்ட அனைத்து அரங்குகளிலும் வெளியாகிறது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி - அமலா பால் நடிப்பில் உருவான படம் நிமிர்ந்து நில்.

மார்ச் 7-முதல் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெளியாகவில்லை. பணப் பிரச்சினை காரணமாக படம் நேற்று நிறுத்தப்பட்டது.

இன்று மாலை முதல் நிமிர்ந்து நில் ரிலீஸ்!

இதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி தற்கொலை செய்து கொண்டதாக வேறு வதந்தி பரவியது. பின்னர் சமுத்திரக்கனியே இதனை மறுத்தார்.

இந்த நிலையில் படத்தின் பணப் பிரச்சினை செட்டில் செய்யப்பட்டதால், இன்று மாலைக் காட்சியிலிருந்து அறிவிக்கப்பட்ட அனைத்து அரங்குகளிலும் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஷீலா தீட்சித்துக்கு எதிராக விமர்சனம்- சிக்கலில் நடிகை ரீமா கல்லிங்கல்

கொச்சி: கேரள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஷீலா தீக்ஷித்தை விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை ரீமா கல்லிங்கல்.

மலையாளத்தில் முன்னணி நடிகையான ரீமா கல்லிங்கல், சமீபத்தில்தான் இயக்குநர் ஆஷிக் அபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஷீலா தீட்சித்துக்கு எதிராக விமர்சனம்- சிக்கலில் நடிகை ரீமா கல்லிங்கல்

கேரள கவர்னராக இருந்த நிகில்குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய கவர்னராக ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டு உள்ளார். அடுத்த வாரம் இவர் கேரள கவர்னராக பதவி ஏற்க உள்ளார். கேரளாவில் கவர்னர் பதவி ஏற்று தங்கி இருப்பதில் மகிழ்ச்சி அடைவேன் என்று ஷீலா தீக்ஷித் தெரிவித்துள்ளார்.

ஷீலாதீட்சித் டெல்லி முதல்வராக இருந்த போதுதான் அங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் ஏன் வெளியே போகிறார்கள்? அப்படி போவதால்தான் இதுபோல் பாலியல் வன்முறைகள் நடக்கிறது என்று ஷீலா தீட்சித் அப்போது பேசியதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. தற்போது கேரளாவுக்கு அவர் கவர்னராவதை விமர்சித்து ரீமா கல்லிங்கல் கருத்து தெரிவித்து உள்ளார்.

‘‘கேரள கவர்னராக பதவி ஏற்க ஷீலா தீட்சித் வருகிறார். இனி கேரள பெண்கள் யாரும் மாலை 6 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாது," என தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. காங்கிரஸ் கட்சியினர் இதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். மற்ற அரசியல் கட்சியினரும் ரீமாவின் கருத்து அதிகப்பிரசங்கித்தனமானது என்று கூறியுள்ளனர்.

ஷீலா தீட்சித்திடம் ரீமா கல்லிங்கல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸார் வலியுறுத்தி வருகின்றனர்.

 

டிவி நடிகை சனா கான் கார் விபத்தில் மரணம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை சனா கான் வெள்ளிக்கிழமை மாலை நேரிட்ட கார் விபத்தில் பலியானார்.

சனா கான் மற்றும் அவரது கணவர் பாபர் கான் காரில் கராச்சியில் இருந்து பாகிஸ்தானின் ஹைதராபாத் நகருக்கு சென்று கொண்டிருந்த போது சாலையில் கவிழ்ந்து கார் விபத்துக்குள்ளானது. இதில், சனா கான் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர், படுகாயமடைந்து மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டிவி நடிகை சனா கான் கார் விபத்தில் மரணம்

இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் தான் திருமணமானது என்பது குறிப்பிடத்தக்கது.

டிவி நடிகை சனா கான் கார் விபத்தில் மரணம்
 

தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நான் கோழையல்ல... - இயக்குநர் சமுத்திரக் கனி

சென்னை: சின்னப் பிரச்சினைக்காக தற்கொலை செய்யும் அளவுக்கு நான் கோழையல்ல என்று இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி, அமலா பால், ராகினி மற்றும் பலர் நடிக்க சமுத்திரக்கனி இயக்கி இருக்கும் படம் 'நிமிர்ந்து நில்'. வாசன் விஷுவல்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.

'நிமிர்ந்து நில்' திரைப்படம், பிப்ரவரி 7ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால் திட்டமிட்டப்படி படம் வெளியாகவில்லை. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதிப் பிரச்சினையால் படம் வெளியாகாமல் இருக்கிறது.

தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நான் கோழையல்ல... - இயக்குநர் சமுத்திரக் கனி

இந்நிலையில் திடீரென சமுத்திரக்கனி தற்கொலை முயற்சி என்று தகவல் காட்டுத்தீப் போல பரவியது. உடனே சமுத்திரக்கனியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

"நான் நல்லாத்தான் இருக்கேன். என்னோட அடுத்த பட பணிகளுக்காக சென்னையை விட்டு வெளியே வந்தேன். அதற்குள் இப்படி ஒரு செய்தியை பரவி இருக்கிறது. படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருந்தது உண்மைதான். ஆனால், அதற்கு பயந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிற அளவிற்கு நான் கோழை அல்ல.

சினிமாவில் நிறைய பிரச்சினைகளை பார்த்தவன் நான். எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் ஒடி ஒளிந்து கொள்ளும் ஆள் நானில்லை. அப்பிரச்சினையை எதிர்கொள்ளும் தைரியம் உடையவன் நான்.

'நிமிர்ந்து நில்' திரைப்படம் அனைத்து தடங்கல்களையும் தாண்டி வெற்றிகரமாக வெளிவரும்," என்றார்.

 

மில்க் நடிகைக்கு நேரமே சரி இல்லை

சென்னை: நடப்பவற்றை எல்லாம் பார்த்தால் மில்க் நடிகைக்கு நேரமே சரி இல்லை போன்று.

பறவை படம் மூலம் பிரபலமானவர் மில்க் நடிகை. அப்படியே மெல்ல மெல்ல வளர்ந்து தளபதி ஜோடியாக லீடர் படத்தில் நடித்தார். லீடர் படம் ஹிட்டாகும் கோலிவுட்டில் நாம் பெரிய நடிகை ஆகலாம் என்று மில்க் நடிகை நம்பிக் கொண்டிருந்தார்.

ஆனால் லீடர் படம் ஊத்திக் கொண்டதால் அவரது நம்பிக்கை வீணாகப் போனது. இதையடுத்து அவர் கனி இயக்குனரின் படத்தில் நடித்தார். அந்த படத்தில் தனக்கு கனமான கதாபாத்திரம் என்றும், படம் ரிலீஸான பிறகு தனது மார்க்கெட் கூடிவிடும் என்றும் நடிகை நம்பிக்கையுடன் இருந்தார்.

இந்நிலையில் ஹீரோ சம்பள பாக்கி கேட்டு பிரச்சனை செய்ததால் படம் இன்று ரிலீஸாகவில்லை. இதனால் நடிகையின் எதிர்பார்ப்பு மீண்டும் வீணாகிப் போகியுள்ளது.

நடப்பவை எல்லாம் பார்க்கையில் நடிகைக்கு நேரமே சரி இல்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.