ஷூட்டிங்கில் அழுத சிவகார்த்திகேயன்: சமாதானப்படுத்திய இயக்குனர்

Siva Karthikeyan Cries At Kbkr Sets

சென்னை: கேடி பில்லா கில்லாடி ரங்கா ஷூட்டிங்கில் சிவ கார்த்திகேயன் அழுதுவிட்டாராம். இயக்குனர் அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தியுள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவ கார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, சூரி உள்ளிட்டோர் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து வருகின்றனர். படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்கிறார் மனோஜ் குமார். அண்மையில் ஷூட்டிங் திருச்சியில் நடந்தது.

அப்போது மனோஜ் குமார் தான் சிறு வயதில் பட்ட கஷ்டங்களை தனது மகனிடம் உணர்ச்சி பொங்க கூறுவது போலவும் அதை சின்சியராகக் கேட்டுவிட்டு சிவகார்த்திகேயன் சிரித்துக் கொண்டே ஓடுவது போன்றும் காட்சியமைக்கப்பட்டது. அந்த காட்சி படமாக்கப்பட்டபோது மனோஜ் குமார் சொல்வதைக் கேட்ட சிவகார்த்திகேயன் சிரிப்பதற்கு பதிலாக அழுதுவிட்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இயக்குனர் அவரிடம் என்னாச்சு என்று கேட்க, இல்லை மனோஜ் குமார் உணர்ச்சி பொங்க பேசியதைக் கேட்டதும் தனது அப்பா ஞாபகம் வந்துவிட்டது என்றாராம். அப்புறம் அவரை சமாதானப்படுத்தி சில மணி நேரம் கழித்து அந்த காட்சியை படமாக்கியுள்ளனர்.

 

இனி எந்த படத்திலும் பிகினியில் நடிக்க மாட்டேன்: நயன்தாரா

I Ll Never Ever Act Bikini Scene Nayan   

சென்னை: இனி எந்த படத்திலும் பிகினி காட்சியில் நடிக்கப் போவதில்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் நயன்தாரா பிகினியில் வருகிறார். படம் வெளியாகும்போது அவரது நடிப்பைவிட கவர்ச்சி தான் திரையில் அதிகமாகத் தெரியும் என்று எல்லாம் பேச்சு கிளம்பியது.

இது குறித்து நயன்தாராவிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,

அஜீத் படத்தில் மீண்டும் பிகினியில் வருகிறேன் என்ற செய்தியில் உண்மையில்லை. அந்த படத்தில் நான் ஓவராக கவர்ச்சியில் வருவதாகக் கூறுவதும் பொய். அப்படத்துக்கு பிகினி காட்சியே தேவையில்லை. இனி எந்த படத்திலும் பிகினி காட்சியில் நடிக்க மாட்டேன் என்றார்.

முன்னதாக நயன்தாரா அஜீத் நடித்த பில்லா படத்தில் பிகினி காட்சியில் வந்து மேக்சிமம் கவர்ச்சி காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சித்தார்த்தை டேட் செய்யும் சமந்தா?

Samantha Dating Siddharth

சென்னை: சமந்தா நடிகர் சித்தார்த்தை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.

சமந்தா சித்தார்த்துடன் சேர்ந்து ஜபர்தஸ்த் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா சித்தார்த்தை டேட் செய்வதாக தெலுங்கு திரையுலகில் பேச்சாகக் கிடக்கிறது. அவர்கள் இருவரும் சேர்ந்து அமெிரிக்காவில் விடுமுறையைக் கழித்ததையடுத்து தான் இந்த காதல் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

பத்தாக்குறைக்கு எனக்கு பாய் பிரண்ட் இருக்கிறார் என்று சமந்தா அண்மையில் கூறினார். இது போதாதா காதல் கிசுகிசு பரவ. ஆனால் சமந்தாவிடம் கேட்டால் நடிகைகளுக்கே உரிய பாணியில் சீச்சீ நான் சித்தார்த்தை காதலிக்கவில்லை. நாங்கள் நல்ல நண்பர்கள் என்று மலுப்பலான பதிலை அளித்துள்ளார்.

அவர்களுக்குள் நெருக்கம் இருக்கிறதாம் ஆனால் அது காதல் இல்லையாம். மேலும் தனது காதல் வாழ்க்கை தனது தனிப்பட்ட விஷயம் அதை அவ்வாறே வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் சமந்தா கூறியுள்ளார். இது போன்ற வதந்திகளுக்கெல்லாம் விளக்கம் அளிப்பது தேவையில்லாதது என்றும் தெரிவித்துள்ளார்.

சித்தார்த் முன்னதாக ஸ்ருதி ஹாசனை காதலித்து வந்தார். மும்பையில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பிரிந்துவிட்டனர்.

 

கமல் ஒரு பைத்தியம், சினிமா பைத்தியம்: பாலு மகேந்திரா

Kamal Is Mad Says Balu Mahendra

சென்னை: கமல் ஹாசன் ஒரு பைத்தியம் என்று இயக்குனர் பாலு மகேந்திரா தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை இயக்குனர் பாலு மகேந்திராவுக்கு போட்டுக் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்த பாலு மகேந்திரா கூறுகையில்,

கமல் தன்னையே அர்ப்பணித்து, ஆய்வு செய்து, கடுமையாக உழைத்து படத்தை எடுத்திருப்பதைப் பார்த்தால் அவனுக்கு பைத்தியம் தான் பிடித்திருக்க வேண்டும். கமலுக்கு பைத்தியம் சினிமா மீது பைத்தியம். இந்த பைத்தியம் இருக்கும் வரை கமலை யாரும் அசைத்துக் கொள்ள முடியாது. விஸ்வரூபத்தை பார்த்த பிறகு கமல் ஒரு தமிழன், என் நண்பன், என்னைப் போன்றே சினிமாவை நேசிப்பவன் என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது. கமலை உலக நாயகன் என்று அழைக்காமல் உலக இயக்குனர் என்றே அழைக்க வேண்டும்.

விஸ்வரூபம் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. விஸ்வரூபம் சந்தித்த பிரச்சனைகளால் ரசகிரக்ளின் ஆர்வம் அதிகரித்துள்ளது என்றே தான் கூற வேண்டும். கமலின் கடின உழைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 

ஐஸ்வர்யா பிறந்தநாளுக்கு தனுஷ் என்ன செய்தார்?

All Is Well Between Aishwarya Dhanush

சென்னை: தனது பிறந்தநாள் சிறப்பாக இருந்ததற்கு காரணமான தனது காதல் கணவருக்கு ஐஸ்வர்யா தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

3 படத்திற்குப் பிறகு ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்பட்டது. 3 பட ஷூட்டிங்கின்போது தனுஷும், ஸ்ருதியும் ஓவர் நெருக்கமானதே வீட்டில் புகைச்சல் வரக் காரணம் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதையெல்லாம் பொய் என்று சொல்வது போன்று உள்ளது ஐஸ்வர்யாவின் ட்வீட்.

ஐஸ்வர்யா கடந்த 1ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாள் என்றால் கணவர் என்ன சர்பிரைஸ் தருவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த அவருக்கு அந்த நாளை இனிய நாளாக்கியுள்ளார் தனுஷ். ஆம், மனைவியின் பிறந்தநாளை அவரோடு கங்கைக் கரையில் கொண்டாடியுள்ளார். இதன் மூலம் அவர்களுக்கு இடையே உள்ள காதல் அழியவில்லை என்று தெரிகிறது.

ஐஸ்வர்யாவின் ட்வீட்: எனது பிறந்தநாளை கங்கைக் கரையில் கொண்டாட வைத்த காதல் கணவருக்கு நன்றி.

சூப்பர் ஸ்டாரும் இந்த ட்வீட்டைப் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார்.

 

பாரதிராஜா பட ஆடியோ வெளியீட்டுக்கு வீடியோ மூலம் ரஜினி 'வாய்ஸ்'!

Rajini S Special Video Treat Madurai Fans

சென்னை: இன்று மாலை மதுரையில் நடக்கும் அன்னக்கொடியும், கொடிவீரனும் இசை வெளியீட்டு விழாவுக்கு வர முடியாத ரஜினிகாந்த் வீடியோ மூலம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவிருக்கிறார்.

பாரதிராஜா இயக்கியுள்ள அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 4 மணிக்கு மதுரையில் நடக்கிறது. இந்த விழாவில் தனது முதல் படமான 16 வயதினிலே-வில் இணைந்து நடித்த ரஜினிகாந்த், கமல் ஹாசன் மற்றும் ஸ்ரீதேவியை கலந்து கொள்ள வைக்க பாரதிராஜா முயற்சி செய்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அது சாத்தியமாகவில்லை.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வருவதாகக் கூறிய ரஜினியால் தற்போது வர முடியவில்லையாம். இருப்பினும் தான் விழாவுக்கு வருவேன் என்ற எதிர்பார்ப்பில் வரும் தனது ரசிகர்களை அவர் ஏமாற்ற விரும்பவில்லை. இதனால் வீடியோவில் பேசி அதை அனுப்பி வைத்துள்ளார். நிகழ்ச்சியின்போது அந்த வீடியோ ரசிகர்களுக்கு போட்டுக் காட்டப்படும்.

இந்த விழாவில் இசைஞானி இளையராஜா, இயக்குநர்கள் பாலு மகேந்திரா, மணிரத்தினம், வடிவேலு, சத்யராஜ், சரத் குமார், ராதிகா, ராதா, கௌதம் மேனன், சேரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

 

ஆர்யாவின் செல்லம் யார் தெரியுமா?

Arya S New Best Friend

சென்னை: ஆர்யா ஒரு குட்டிப் பெண்ணை பெஸ்ட் பிரண்டாக்கியுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள படம் இரண்டாம் உலகம். முதல் மனைவி சோனியா அகர்வாலைப் பிரிந்த செல்வராகவன் கீதாஞ்சலியை திருமணம் செய்தார். அந்த தம்பதிக்கு தற்போது ஒரு வயதில் லீலாவதி என்ற மகள் உள்ளார்.

கோலிவிட்டில் பிளே பாய் என்று பெயரெடுத்துள்ள ஆர்யாவின் வாழ்க்கையில் தற்போது ஒரு புதிய குட்டிப் பெண் நுழைந்துள்ளார். மேலும் அவர் தான் தற்போது ஆர்யாவுக்கு பெஸ்ட் பிரண்டாம். இது குறித்து அறிந்தால் ஆர்யாவின் தோழி நயன்தாராவுக்கு நிச்சயம் பொறாமையோ, கோபமோ வராது. மாறாக அவரும் அந்த புதிய வரவை நேசிக்கத் துவங்கினாலும் ஆச்சரியமில்லை.

சரி, சரி அது யார் என்று சொல்லிவிடுகிறோம். ஆர்யாவின் பெஸ்ட் பிரண்ட் வேறு யாருமில்லை செல்வராகவனின் செல்ல மகள் தான். அந்த குட்டிப் பாப்பைவைத் தான் பிரண்டாக்கியுள்ளார் ஆர்யா.