நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து விசாரித்தார் முதல்வர் ஜெயலலிதா

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து விசாரித்தார் முதல்வர் ஜெயலலிதா

5/20/2011 12:10:38 PM

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து பல்வேறு தலைவர்கள், விஜபிகள், நடிகர்கள் நேரிலும் தொலைபேசியிலும் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது மனைவி லதாவிடம் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த தொலைபேசியில் விசாரித்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.




 

திடீர் உடல் நலக்குறைவு: நடிகர் செந்தில் ஆஸ்பத்திரியில் அனுமதி

Tags: nbsp

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திடீர் உடல் நலக்குறைவு: நடிகர் செந்தில் ஆஸ்பத்திரியில் அனுமதி

5/20/2011 12:28:05 PM

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழகமெங்கும் ஒரு மாதம் பிரசாரம் செய்தார்.   நேற்று முன்தினம் செந்திலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூல நோயால் அவதிப்பட்டார். உடனடியாக அவரை அமிஞ்சிகரையில் உள்ள பில்ரோத் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர் கண்ணன் தலைமையிலான குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். செந்திலுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தற்போது குணமாகி வருவதாகவும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.




 

ரெடி!

Tags:

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
ரெடி!

5/20/2011 12:20:08 PM

தப்பித்தவறி கூட எந்த மாக்காணும் கேள்வி கேட்டுவிடக் கூடாதல்லவா? பல மொழி, பல இன மக்கள் வாழும் நம் நாட்டில் எப்படி அனைவரும் ஒரே ரசனையுடன் ஒற்றுமையாக வாழ்வார்கள் என்ற மில்லியன் டாலர் வினாவை வினவி விடக் கூடாதல்லவா? அதற்குத்தான் இந்த 'ரெடி'மேட் பதில். ஆனால், பாருங்கள். மூன்றாண்டுகளுக்கு முன் ஆந்திரக் கரையோரமுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் மல்லாக்க படுத்தபடி ஒரு கதையை கோபி மோகன் உருவாக்கியபோது, இந்திய தேச ஒற்றுமைக்கே அத்தாரிட்டியாக அக்கதை விளங்கப் போகிறது என சத்தியமாக எண்ணவில்லை. இயக்குநர் சீனு வைத்யலாவின் வலக் கை, இடக் கை என சகல கைகளாகவும் இவர் விளங்குவதால், இவரது கதை சுபயோக சுப முகூர்த்தத்தில் ராம் - ஜெனிலியா நடிக்க 'ரெடி' படமாக உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு என்ன நடந்தது என்று கதாசிரியர் கோபி மோகனுக்கே புரியவில்லை. ஆனால், வங்கிக் கணக்கு மட்டும் மூன்று போக விளைச்சலை இன்றுவரை தந்துக் கொண்டிருக்கிறது.

பொதுவாக தெலுங்கில் சதமடித்த படங்களை கமா, ஃபுல்ஸ்டாப் மாறாமல் கன்னடத்தில் ரீமேக் செய்வார்கள். அப்படித்தான் 'ரெடி' படமும் புனித் ராஜ்குமார் - ப்ரியாமணி நடிக்க 'ராம்' ஆக உருமாறியது. பம்பர் வெற்றியை ருசித்தது. அப்போது கூட கோபி மோகன், இது எப்போதும்போல் நடக்கும் ஒரு நிகழ்வுதான் என்பதுபோல் அமைதியாகத்தான் இருந்தார். ஆனால், அதேகதை 'உத்தமபுத்திரன்' ஆக தனுஷ் - ஜெனிலியா நடிக்க தமிழில் அவதாரம் எடுத்து வசூலை அள்ளியபோது, ஆடித்தான் போனார். விளையாட்டாக தான் உருவாக்கிய கதை, ஒவ்வொரு மொழி மைதானத்திலும் கரகோஷத்துக்கு மத்தியில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்க்கப் பார்க்க கோபி மோகனுக்கு பரவசமாக இருந்தது. அந்த சந்தோஷம், அதே கதை, இந்தியில் 'ரெடி' என்னும் பெயரில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டபோது உச்சத்தை அடைந்தது.

இப்படி புல்லாகி, புழுவாகி, பறவையாகி, பாம்பாகி, பல் மிருகமாகி... இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த ரசனைக்கு உதாரணமாகத் திகழும் 'ரெடி'யின் கதை, சுவாரசியமானது. காதலர்களுக்கு உதவுவதற்காகவே பிறவி எடுத்திருக்கும் கதாநாயகன், தவறுதலாக முகம் தெரியாத ஒரு பெண்ணை திருமண மண்டபத்திலிருந்து கடத்துகிறான். தன் சொத்தை அபகரிப்பதற்காக திட்டமிட்டு ரவுடிக்கு திருமணம் செய்து வைக்க முயலும் இரு மாமன்களிடமிருந்தும் தப்பிக்க, இந்த வாய்ப்பை அந்தப் பெண் பயன்படுத்திக் கொள்கிறாள். பிறகுதான் நாயகனுக்கு, தான் தவறுதலாக வேறொரு பெண்ணை கடத்திவிட்டோம் என்பது புரிகிறது. மெல்ல மெல்ல அந்தப் பெண்ணுக்கும், நாயகனுக்கும் காதல் மலர்கிறது. அந்தப் பெண்ணின் மாமன்களை திருத்த நாயகனின் குடும்பமே களத்தில் இறங்குகிறது. மாமன்களின் ஆசியுடன் அப்பெண்ணை நாயகன் மணந்தானா என்பது க்ளைமாக்ஸ்.

வயிறு புண்ணாகும் அளவுக்கு இக்கதையை காமெடி காக்டெயிலில் பரிமாறி இருப்பதுதான் இதன் ப்ளஸ். இந்தியில் தயாராகும் இப்படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்திருக்கிறார். 'தபங்' படத்துக்கு பின் மோஸ்ட் 'வாண்டட்' ஆக இருக்கும் சல்மானின் மார்க்கெட்டை இப்படம் இன்னும் பலப் படிகள் உயர்த்தும் என்கிறார்கள். நாயகியாக நடித்திருப்பவர், 'நம்மூர்' அசின்.
இயக்கியிருப்பவர், அனீஸ் பாஸ்மி. இந்திப் படவுலகின் காமெடி கிங் என கொண்டாடப்படும் அனீஸ், மூலக் கதையிலிருக்கும் நகைச்சுவையை விட, கூடுதலாக காமெடியை கலந்திருக்கிறாராம். இசை, ப்ரீத்தம் என்றாலும் 'ஆர்யா 2' தெலுங்கு படத்தில் இடம் பெற்ற 'ரிங்கா ரிங்கா...' பாடலை கொஞ்சம் டிங்கரிங் செய்து 'தின்கா சிக்கா...' என மாற்றியிருக்கிறார்கள். உண்மைதான். இந்திய ரசனைக்கு எடுத்துக்காட்டு இந்த 'ரெடி'மேட் பதில்தான்.




 

சின்ன ஹீரோவுக்கு நோ கால்ஷீட் : அமலா பால்

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சின்ன ஹீரோவுக்கு நோ கால்ஷீட் : அமலா பால்

5/20/2011 12:37:22 PM

அமலா பால் கூறியது: தமிழில் 'தெய்வத் திருமகள்Õ படத்தில் நல்ல கேரக்டர். அடுத்து லிங்குசாமியின் 'வேட்டை', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படங்களில் நடிக்கிறேன். நடிப்பை வெளிப்படுத்தும் வேடம், கிளாமர் வேடம் இரண்டிலும் நடிக்கிறேன். 'சின்ன ஹீரோக்கள் படங்களுக்கு கால்ஷீட் தருவதில்லையாÕ என்கிறார்கள். இப்போதைக்கு பெரிய பேனர், பெரிய நடிகர்களுடன் நிறைய படங்கள் வருகிறது. சின்ன ஹீரோக்கள் நடிக்கும் பட கதைகள் சரியில்லாதபோது அப்படங்களை தவிர்த்து விடுகிறேன். கால்ஷீட் இருக்கிறது என்பதற்காக கதையில்லாத படங்களை ஒப்புக்கொண்டு அதில் முடங்க விருப்பமில்லை. மலையாளத்தில் பிருத்விராஜுடன் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இப்போதைக்கு தமிழ், மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். பிற மொழியிலிருந்து வாய்ப்புகள் வந்தாலும் அது என்னை அடையாளம் காட்டும் படமாக இருக்க வேண்டும். நடிப்பில் கவனம் செலுத்தும் அதே வேளையில் படிப்பிலும் கவனம் செலுத்துகிறேன். இப்போது பி.ஏ. ஆங்கிலம் 2ம் ஆண்டு படிக்கிறேன். ஷூட்டிங் பிஸியிலும் படிப்புக்கு நேரம் ஒதுக்கி இருக்கிறேன்.




 

நான் செய்தது சட்டப்படி குற்றமல்ல - எஸ்ஏ சந்திரசேகரன்

Tags:


சென்னை: தயாரிப்பாளர் சங்க தலைவராக நான் பொறுப்பேற்றது சட்டப்படி சரிதான் என இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரன் விளக்கமளிதக்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவராக எஸ்.ஏ. சந்திரசேகரன் பதவி ஏற்றது 'சட்டப்படி குற்றம்' என்று கூறி அதிருப்தி கோஷ்டியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாளை அவர்கள் அவசரக் கூட்டம் நடத்துகிறார்கள்.

தலைவர் பதவி ஏற்றது ஏன் என்பது குறித்து எஸ்.ஏ. சந்திரசேகரன் இன்று விளக்க அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:

நமது சங்கத்தின் தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து சட்டப்படி நடத்தப்பட்டது. இந்த அமைப்பின் பதவி காலம் 2012 ஜூலை வரை இருக்கிறது. ஆனாலும் சங்கத்தின் செயல்பாடுகளில் முந்தைய ஆளும் கட்சியின் ஆதிக்கமும் சில டி.வி. சேனல்களின் ஆதிக்கமும் இருந்தது என்பதையும் அதற்கு இசைந்து கொடுக்கவேண்டிய நிர்பந்தத்தில் சங்கத்தில் சிலர் இருந்தார்கள் என்பதையும் நான் மறுக்கவில்லை.

பல கூட்டங்களில் இதை எதிர்த்து வாதாடியும் பயன் கிடைக்காததால் சங்க செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்தேன். நான் எதிர்ப்பு தெரிவித்ததால் என் மகன் விஜய் படங்களுக்கு பல இடையூறு ஏற்பட்டதும் அதை நான் தனியாக இருந்து போராடியதும் அனைவரும் அறிந்தது.

சங்கத் தலைவர் ராமநாராயணனும், செயலாளர் சிவசக்தி பாண்டியனும் பொறுப்புகளில் இருந்து தற்போது தானாக விலகி விட்டனர். இதனால் விதிப்படி தற்காலிக தலைவராக செயற்குழு என்னை தேர்வு செய்துள்ளது.

சங்கத்தின் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும். அதில் அரசியல் சார்பற்ற தயாரிப்பாளர்கள் சிலரை வெளியில் இருந்து முக்கியமான நிர்வாக பதவிகளுக்கு பரிந்துரை செய்தால் சங்கம் வலுப்பெறும்.

அதன் பிறகு இழந்த உரிமைகளை அரசிடம் கேட்டுப் பெறலாம். பொதுக்குழு ஒப்புக் கொள்ளாவிட்டால் முழு நிர்வாகமும் விலகி மறு தேர்தலுக்கு ஏற்பாடு செய்யலாம். அதை விடுத்து எல்லோரையும் ராஜினாமா செய்ய சொல்வது நீதிபதி முன்பு நடந்த தேர்தலை புறக்கணிப்பது போன்றதாகும்.

எனவே சங்க உறுப்பினர்கள் பொதுக்குழு நடப்பது வரை பொறுத்துக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
 

விஜயகாந்த்தை சந்தித்து நடிகர் பிரசன்னா வாழ்த்து

Tags:


சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கவுள்ள தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்தை சந்தித்து, நடிகர் பிரசன்னா வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

விஜயகாந்த்தை இன்று அவரது வீட்டில் வைத்து சந்தித்தார் பிரசன்னா. அவருக்கு பொன்னாடை போர்த்தி தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் தமிழ்த்திரைப்படத் துறை தொடர்பாக இருவரும் ஆலோசித்தனர். நடிகர் சங்கத் தலைவராக இரு்நதபோது விஜயகாந்த், திரைப்படத் துறைக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டினார் பிரசன்னா.

திரைப்படத் துறையின் எதிர்கால உயர்வுக்கு தன்னால் ஆனதைச் செய்வேன் என்று அப்போது பிரசன்னாவிடம் விஜயகாந்த் உறுதியளித்தார்.
 

அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா?

Tags:


யாருமே எதிர்பார்க்கவில்லை ஆடுகளம் படத்திற்குப் போய் இத்தனை விருதுகள் குவியும் என்று. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த நடனம் என கையில் கிடைத்த விருகளையெல்லாம் எடுத்துக் கொடுத்து தேசிய விருதுகளையே பெரும் கேலிக்கூத்தாக்கியுள்ளது 58வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக் கமிட்டி.

சத்தியமாக இந்த விருதுகளை ஆடுகளம் குழுவினரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திரைக்கு வந்த வேகத்திலேயே தியேட்டர்களை விட்டு வெளியேறிய படம் ஆடுகளம். மக்களால் சுத்தமாக ரசிக்கப்படாத ஒரு படம். வெறும் விளம்பரத்தை மட்டுமே வைத்து ஓட்டிப் பார்க்க முயன்ற சன் பிக்சர்கஸ் தயாரித்த படம் இது.

படம் தரக்குறைவானது என்று கூற முடியாவிட்டாலும் கூட விருதுகளுக்குரிய தகுதிகள், அதுவும் இத்தனை விருதுகளை அள்ளும் அளவுக்கு இந்த படம் உள்ளதா என்பதுதான் அத்தனை பேரின் மனதிலும் ஓடும் கேள்விகள்.

காரணம், இந்த ஆண்டு பல நல்ல படங்களைக் கண்டது தமிழ்த் திரையுலகம். நந்தலாலா, அங்காடித் தெரு, மைனா, விண்ணைத் தாண்டி வருவாயா, மதசாரப்பட்டனம், களவாணி என இந்த வரிசை நீண்டது.

களவாணி படத்தில் நடித்த விமலின் நடிப்பை இயக்குநர் கே.பாலச்சந்தர் இப்படி விமர்சித்திருந்தார் - இயல்பான, எதார்த்தமான நடிப்பு, அருமையான நடிகர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ளார்.

அங்காடித் தெரு படத்தைப் பார்த்து கலங்காத, பதறாத மனங்களே கிடையாது. பிரகாசமான வெளிச்சத்திற்கு மத்தியில் இருட்டு வாழ்க்கை வாழ்ந்து வரும் அப்பாவி இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து போட்டு, மனங்களை உலுக்கியெடுத்த அருமையான படம்.

இப்படி ஒரு கதையை தமிழ் சினிமாக்காரர்கள் ஏன் இத்தனை காலமாக மக்களுக்குக் கொடுக்கவே இல்லை என்று அத்தனை பேரும் அதிசயித்துப் போன படம் அங்காடித் தெரு. அபாரமான நடிப்பு, அருமையான திரைக்கதை, இயல்பான இசை, இயற்கையான நடிப்பு என படம் முழுக்க சிறப்புகள்தான் அதிகம்.

அதேபோல இசைக்காக பேசப்பட்ட படம் நந்தலாலா. அதன் கதை, வேறு ஒரு இடத்திலிருந்து உருவி எடுக்கப்பட்டது என்றாலும் கூட படத்தின் பி்ன்னணி இசை மிகப் பிரமாதமாக இருந்ததாக அத்தனை பேராலும் பேசப்பட்ட படம் நந்தலாலா. இசைஞானி இளையராஜா என்ற ஒரே ஒரு மனிதரின் அபாரமான இசைதான் இந்தப் படத்தை தூக்கிப் பிடித்து நிறுத்தியது என்று கூறலாம். இந்த இசைக்கு விருது தரப்படவில்லை.

பிறகு மைனா. இந்தப் படத்தைப் பாராட்டாத வாய்களே இல்லை. கமல்ஹாசன் படத்தின் ரிலீஸுக்கு முன்பே கூறி விட்டார். தமிழ் சினிமா இனி நன்றாக இருக்கும், நான் நிம்மதியாக தூங்குவேன் என்று கூறி விட்டார். படம் வெளியான பின்னர் அதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தோ, இந்தப் படத்தில் நான் நடிக்காமல் விட்டு விட்டேனே என்று ஆதங்கப்பட்டார். படத்தைப் பார்த்த அத்தனை பேரும் பாராட்டிய விஷயம், இயல்பான கதை, அருமையான திரைக்கதை, அபாரமான நடிப்பு, அழகான இசை ஆகியவற்றைத்தான்.

இதேபோல ஒரு சாதாரண கதையை மிக மிக அழகாக, கவிதை போல வடித்திருந்தார் இளம் இயக்குநர் விஜய் தனது மதராசபட்டணம் படத்தில். இப்படத்தின் கதையும் சரி, அதில் நடித்த எமி ஜாக்சனும் சரி, இசையும் சரி எல்லாமே பிரமாதம். இந்தப் படத்தைப் பற்றி பல பக்கங்கள் கொண்ட மிக நீண்ட விமர்சனத்தை எழுதி சிலாகித்திருந்தார் கே.பாலச்சந்தர். உலகின் மிகச் சிறந்த இயக்குநர் வரிசையில் விஜய் அமருவார் என்றும் புகழாரம் சூட்டியிருந்தார். விஜய்யின் இயக்கம் அவ்வளவு அபாரமானதாக இருந்தது.

இப்படி எத்தனையோ படங்கள், சிறப்பான படங்கள், அபாரமான படங்கள், சிறந்த நடிப்பு, இசை, இயக்கம், திரைக்கதை என வந்திருந்தும் இந்தப் படங்களுக்கு ஒரு விருது கூட தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் வியப்பாக உள்ளது. சிறப்புக் குறிப்பில் கூட இந்தப் படங்களில் ஒன்று கூட இடம் பெறவில்லை. அதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.

உட்கார்ந்து யோசித்தாலும், படுத்தபடி யோசித்தாலும் கூட ஆடுகளத்திற்கு இத்தனை விருதுகள் எப்படி கிடைத்தன என்பதற்கு சத்தியமாக விடை தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரியுதா?
 

'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து

Tags:


திமுக ஆட்சியில் அட்ரா அட்ரா என்று கருணாநிதிக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருந்த சிரிப்பு நடிகர் விவேக், மாறி வீசும் காற்று காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்தி கூறி வாய் நிறைந்த சிரிப்புடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

திமுக ஆட்சியின்போது விவேக் அடித்த ஜால்ராவைப் போல வேறு யாருமே அடித்திருக்க முடியாது. குறிப்பாக கருணாநிதிக்கு திரையுலகினர் ஒன்று கூடி நடத்திய பாராட்டு விழாக்களில் அவர் கருணாநிதியை அப்படிப் புகழ்ந்தார். ஜெயலலிதாவை கிண்டலடிக்கவும் அவர் தவறியதில்லை.

மேலும், பத்திரிக்கையாளர்களை, திரையுலகினர் கூட்டம் நடத்தி குண்டக்க மண்டக்க பேசியபோதும், கருணாநிதி அரசு இருந்த தைரியத்தில் வாய் வலிக்கும் அளவுக்கு தாறுமாறாக அசிங்கமாகப் பேசியவரும் விவேக்.

அப்படிப்பட்ட விவேக் இப்போது காற்று திசை மாறி வீசத் தொடங்கியிருப்பதால் அவரும் பாதை மாறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கவுள்ளதற்காக பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

விஜயகாந்த் கஷ்டப்பட்டு அரசியல் நடத்தியபோதெல்லாம் அவர் இருக்கும் திசையில் தலை வைத்துக் கூடப் படுக்காதவர் இந்த விவேக். ஆனால் இன்று முக்கியப் பொறுப்பில் விஜயகாந்த் நுழைந்துள்ள நிலையில் ஐஸ் வைக்கும் வகையில் அவரைப் பார்த்து பொன்னாடை போர்த்தியுள்ளார் விவேக்.
 

திரைப்படமாகிறது ரேகா வாழ்க்கை

Tags:


பிரபல பாலிவுட் நடிகை ரேகாவின் வாழ்க்கையை இயக்குனர் அனில் ஷர்மாவின் தம்பி கபில் ஷர்மா படமாக எடுக்கவிருக்கிறார்.

பாலிவுட் நடிகை ரேகாவின் வாழ்க்கையில் உள்ள இரகசியங்கள் எல்லாம் தற்போது வெளிவரப்போகிறது. இந்த படத்தில் ரேகா கதாபாத்திரத்தில் பிபாஷா பாசு, ஸ்ரீதேவி அல்லது ராணி முகர்ஜியை நடிக்க வைக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து இயக்குனருக்கு பழக்கமான ஒருவர் கூறியதாவது,

ரேகாவின் வாழ்க்கை ரகசியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படம். இதற்கான திரைக்கதையை கபில் எழுதியுள்ளார். அவர் சினிமாத் துறை சார்ந்த படம் ஒன்றை எடுக்க விரும்புகிறார் என்றார்.

ரேகா வாழ்க்கையில் அமிதாப் பச்சன், கிரண் குமார், வினோத் மெஹ்ரா மற்றும் ஜெயா பச்சனுக்கும் பங்கு உள்ளது. இவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் ஆவர்.

இது குறித்து கபில் ஷர்மா கூறியதாவது,

ஒரு காலத்தில் சினிமாவில் நம்பர் ஒன் கதாநாயகியாக இருந்த ரேகாவின் வாழக்கையை திரைப்படமாக எடுக்கிறேன். பாலிவுட் பின்னணியில் எடுக்கப்படும் இந்த படத்தின் பெயர் சிதாரே. இதில் 7 முதல் 8 முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கும். அதற்கான நடிகர்களை நான் இன்னும் தேர்வு செய்யவில்லை.

ரேகாவின் சினிமா வாழ்க்கை, உறவுகள், வாழ்வின் ஏற்றத் தாழ்வு ஆகியவற்றை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்றார்.
 

செந்தில் உடல்நிலை பாதிப்பு

Tags:


மூல நோயல் அவதிப்படும் நடிகர் செந்திலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருதிறது.

பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் மூல நோயால் அவதிப்பட்டார்.

உடனடியாக அவரை அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர் கண்ணன் தலைமையிலான குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

செந்திலுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தற்போது குணமாகி வருவதாகவும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
 

கலாநிதி மாறனுக்கு விவேக் பாராட்டு

Tags: nbsp


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கலாநிதி மாறனுக்கு விவேக் பாராட்டு

5/20/2011 11:40:34 AM

நடிகர் விவேக் கூறியதாவது: சன் பிக்சர்ஸின் 'எந்திரன்', 'ஆடுகளம்' படங்களுக்கு இத்தனை விருதுகள் கிடைத்திருப்பது பெருமையான விஷயம். 'ஆடுகளம்' 6 விருது பெற்றிருப்பது பெருமையான விஷயம். இதில் நடித்த தனுஷ், அப்படியே மதுரை இளைஞனாக மாறியிருந்தார். மதுரை மண்ணின் வாழ்க்கையை எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் வெற்றிமாறன் இயக்கினார். அதற்கான பரிசுதான் இந்த தேசிய விருது. ஆடுகளம் ஆர்ட் பிலிம் போல தோன்றும் கமர்ஷியல் படம். இந்த கதையை படமாக்குவது பெரிய ரிஸ்க். நிறைய துணிச்சல் வேண்டும்.  

ஆடுகளம் அப்படி என்றால் 'எந்திரன்' அப்படியே தலைகீழ். அந்த பிரமாண்டம் இந்தியாவே இதுவரை பார்க்காதது. இத்தனை கோடிகளை கொட்டி படமெடுக்க மகா துணிச்சல் வேண்டும்.
இப்படி முற்றிலும் வெவ்வேறான கதைக்களத்தை சேர்ந்த இரண்டு படங்களையும் கொடுத்து தமிழுக்கு 8 தேசிய விருதுகள் கிடைக்க காரணமான கலாநிதி மாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எந்திரனுக்காக ரொம்பவும் உழைத்த ரஜினிக்கும்  ஒரு விருது கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

 

தேசிய விருதை ரஜினி சாருக்கு அர்ப்பணிக்கிறேன்: தனுஷ்!

Tags: nbsp


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தேசிய விருதை ரஜினி சாருக்கு அர்ப்பணிக்கிறேன்: தனுஷ்!

5/20/2011 11:41:37 AM

சன் பிக்சர்சின் 'ஆடுகளம்' படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடனம், சிறந்த எடிட்டிங் உட்பட 6 விருதுகள் கிடைத்தன. தேசிய விருது பெற்றது குறித்து நடிகர் தனுஷ் பெருமிதத்துடன் கூறியதாவது: 'ஆடுகளம்' படத்தை, தேசிய விருதுக்கு அனுப்பினது தெரிந்து மகிழ்ச்சி  அடைந்தேன். விருது கிடைத்தது அறிந்து  சந்தோஷத்துக்கு அளவே இல்லை. தேசிய விருது ஜூரிகளுக்கு நன்றி. ஏனென்றால் வட இந்தியாவில் தனுஷ் என்பவனை யாருக்குமே தெரியாது. அதற்கு பிறகு அம்மா, அப்பாவுக்கு நன்றி சொல்லிக்கிறேன். எனக்கு சேர்கிற எல்லாத்துக்கும் அவங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த அண்ணன் செல்வராகவனுக்கும் இந்த விருதில் பங்கு இருக்கிறது. முதல் நாளில் இருந்தே விருது கிடைக்கும் என்று சொல்லி வந்த என் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் நன்றி. படத்தை பெரிய அளவுல மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சாருக்கு கட்டாயம் நன்றி சொல்லணும். இந்த விருதை ரஜினி சாருக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்.

 

என் அம்மா கனவு நனவாகி இருக்கிறது : வெற்றிமாறன்

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

என் அம்மா கனவு நனவாகி இருக்கிறது : வெற்றிமாறன்

5/20/2011 11:41:02 AM

வெற்றிமாறன் கூறியது: இந்த விருதை எதிர்பார்க்கவில்லை. என் அம்மா மேகலா எப்போதும் நான் டெல்லியில் விருது வாங்க வேண்டும் என்று சொல்பவர். அவர் கனவு நனவாகியிருக்கிறது. ஷூட்டிங் முழுக்க மதுரையில் நடந்தது. மனைவிக்கு குழந்தை பிறந்தபோதுகூட சென்று பார்க்க முடியவில்லை. அந்த வேதனைகளை தாங்கிகிட்ட மனைவிக்கு நன்றி. இது வழக்கமான படம் இல்லை. ஆனாலும் என் மேல நம்பிக்கை வச்சு, முழு ஆதரவு கொடுத்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். படத்தை மாஸ் கிட்ட கொண்டு சேர்த்தது அவர்தான்.

 

6வது முறையாக விருது பெறும் வைரமுத்து

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

6வது முறையாக விருது பெறும் வைரமுத்து

5/20/2011 11:38:05 AM

தேசிய விருதை 6முறையாக, கவிஞர் வைரமுத்து வாங்குகிறார். முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களுக்காக தேசிய விருது பெற்றிருந்தார். அவர் கூறியது: பொதுவாக நான் பாட்டு எழுதிய பிறகுதான் படம் எடுப்பார்கள். ஆனால், 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் தற்போது தேசிய விருது கிடைத்திருக்கும் 'கள்ளிக்காட்டில் பொறந்த தாயே' பாடல் படம் எடுத்த பிறகு எழுதிய பாடல். இதுவரை நடுத்தர மற்றும் மேட்டுக்குடி தாய்களை பற்றிய பாடல்களே திரைப்படத்தில் வந்திருக்கிறது. முதன் முறையாக உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த, புழுதி மண்ணை சேர்ந்த ஒரு தாயின் பாடலாக இது எழுதப்பட்டது. தான் படிக்காமல் உழைத்து தன் பிள்ளைகளை படிக்க வைத்த, படிக்க வைத்துக் கொண்டிருக்கிற தாய்மார்களுக்கு இந்த விருதை சமர்ப்பணம் செய்கிறேன்.

 

எதிர்பாராத விருது இது : சரண்யா

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

எதிர்பாராத விருது இது : சரண்யா

5/20/2011 10:54:26 AM

சரண்யா கூறுகிறார்: 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தை பார்த்துவிட்டு எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று முதலில் சொன்னது மீடியாதான். அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது எதிர்பார்க்காத விருது. என்னை நம்பி இப்படியொரு கேரக்டரை கொடுத்த இயக்குனர் சீனு ராமசாமிக்கு நன்றி.

 

ஒளியேற்றியது மைனா : தம்பி ராமய்யா

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒளியேற்றியது மைனா : தம்பி ராமய்யா

5/20/2011 10:43:30 AM

தம்பி ராமய்யா கூறியது: 'சினிமாவில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்த எனக்கு 'மைனா' ஒளியேற்றி வைத்தது. இயக்குனர் பிரபு சாலமனுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். மேலும் நன்றாக நடிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை இந்த விருது தந்திருக்கிறது. வயது முதிர்ந்த எனது தாய்க்கும், ஒரு வெற்றி பெற மாட்டாரா என ஏங்கிய என் மனைவிக்கும் இந்த விருது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அவர்கள் சந்தோஷம்தான் எனது சந்தோஷமும்'

 

மக்களின் வாழ்க்கையை அப்படியே எடுத்ததற்கு கிடைத்த வெற்றி

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மக்களின் வாழ்க்கையை அப்படியே எடுத்ததற்கு கிடைத்த வெற்றி

5/20/2011 10:34:59 AM

இயக்குனர் சீனு ராமசாமி கூறியது: 'தென்மேற்கு பருவக்காற்று' ஒரு நிலத்தின் கதை. சரியான நில பின்னணியோடு அந்த மக்களின் வாழ்க்கையை எந்தவித சமரசமும் இல்லாமல் நேர்மையாக பதிவு செய்ததற்காக கிடைத்த பரிசாக இதை கருதுகிறேன். என்னை சிறு இயக்குனர் என்று நினைக்காமல் தாய் கேரக்டரை உள்வாங்கி நடித்த சரண்யா, படத்தை முதலில் பார்த்து கண்ணீர்விட்டு பாடல் எழுதிய வைரமுத்து, துணிச்சலோடு தயாரித்த சிபு ஜசக் ஆகியோர்தான் இந்த விருதுக்கு காரணம்.

 

டயாலிஸிஸ் காரணமாக ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம்! - மருத்துவர்கள் அறிவிப்பு

Tags:


சென்னை: டயாலிஸிஸ் காரணமாக ரஜினி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

ரஜினியின் உடல்நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடந்த 13-ந் தேதி ரஜினிகாந்த் குடல் மற்றும் இரைப்பை பிரச்சினையால், உடல்நலம் இன்றி ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை முழுவதுமாக டாக்டர் குழுவினர் பரிசோதனை செய்து, என்ன பிரச்சினை என்பதை தெரிந்து கொண்டனர்.

அவருக்கு நீர்ச்சத்து அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்பட்டது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.

முக்கியமானதாக கருதப்படும் ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உள்ளிட்டவை சரியான அளவு உள்ளன. அவர் உடல்நிலை சரியாகி இன்னும் 2 நாட்களில் தனி அறைக்கு திரும்புவார் என்று மிகவும் திடமாக நம்புகிறோம்.

உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்

எந்த நோய் வந்தாலும், அதற்கான காரணத்தை கண்டுபிடித்து அதை சரிசெய்தால் நோய் குணமாகிவிடும். அதைப் போலத்தான் ரஜினிக்கும் நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடிந்தது. அவர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை பயன் உள்ளதாக இருக்கிறது.

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'தலைவரை ஒருமுறை காட்டுங்கள்....'

ரஜினிகாந்த் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள், நேற்று ராமச்சந்திரா மருத்துவமனை முன்பு குவிந்தனர். அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறைய பேர் குவிக்கப்பட்டனர்.

அனுமதி சீட்டு வைத்திருந்த பார்வையாளர்கள் மட்டுமே ஆஸ்பத்திரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை உள்ளே விடவில்லை. ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அறிய, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களும் நிறைய பேர் அங்கு குவிந்தனர். இதனால், மருத்துவமனை வளாகமே நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

தேவையில்லாத வதந்தி

ஆஸ்பத்திரி வளாகத்தில் நின்ற ரசிகர்கள் சிலர், ரஜினி நலம்பெற வேண்டி, அச்சடிக்கப்பட்டிருந்த துண்டு பிரசுரங்களை கூட்டத்தில் உள்ளவர்களிடம் வழங்கினார். இதுகுறித்து, ரசிகர் ஒருவர் கூறும்போது, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றாக குணமடைய வேண்டும். தேவையில்லாத வதந்தியை சிலர் பரப்புகிறார்கள். அவர் நன்றாக குணமடைந்து வந்து, மீண்டும் 'ராணா' படத்தில் நடிப்பார்'' என்றார்.

சில ரசிகர்கள் கூறும்போது, "எங்கள் தலைவரின் உண்மையான உடல்நிலை குறித்து யாருமே சரியாக சொல்வது இல்லை. இதனால், குழப்பமாக உள்ளது," என்றனர்.
 

ரஜினி நலம் பெற சோனியா காந்தி வாழ்த்து!

Tags:


சென்னை : ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த், விரைவில் குணம் அடைய வாழ்த்து தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பூங்கொத்து அனுப்பி வைத்துள்ளார்.

இத்தகவலை காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.

சோனியா காந்தியின் வாழ்த்துக்காக அவருக்கு ரஜினிகாந்தின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளதாகவும் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.

இதற்கிடையே ரஜினி நலம் பெற, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி அவரை நேரில் சந்திக்க முயன்று வருகின்றனர். பலர் மருத்துவமனைக்குச் சென்று லதா ரஜினிகாந்திடம் பூச்செண்டு கொடுத்து திரும்புகிறார்கள்.
 

தேசிய விருதை சூப்பர் ஸ்டாருக்கு சமர்ப்பிக்கிறேன் ! - நடிகர் தனுஷ்

Tags:


சென்னை: ஆடுகளம் படத்துக்காக கிடைத்த தேசிய விருதினை தனது மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சமர்ப்பிப்பதாக தனுஷ் கூறியுள்ளார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த இரு வாரங்களாக ரஜினி சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தற்போது ராமச்சந்திரா மருத்துவமனையில் அவருக்கு சிறப்பு மருத்துவர் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

இந்நிலையில் ரஜினி நடித்த எந்திரன் படத்திற்கு 2 தேசிய விருதுகளும், ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தனது ட்விட்டரில் தனுஷ் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

"இந்த தேசிய விருதை ரசிகர்கள் சார்பாக என் மாமனார் ரஜினிக்கு சமர்ப்பணம் செய்கிறேன். அவர் விரைந்து நலம் பெற்று வரவே இந்த சமர்ப்பணம். அவர் குணமாகி வந்த பிறகுதான் தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவேன். இந்த விருதுக்காக என்னை வாழ்த்திய கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்!"
 

சன் பிக்சர்ஸ் எந்திரன், ஆடுகளம் படங்கள் 8 தேசிய விருதுகளை குவித்தன!

Tags: nbsp


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சன் பிக்சர்ஸ் எந்திரன், ஆடுகளம் படங்கள் 8 தேசிய விருதுகளை குவித்தன!

5/19/2011 4:03:17 PM

சன் பிக்சர்ஸ் தயாரித்த  எந்திரன், ஆடுகளம் படங்கள் 8 தேசிய விருதுகளை குவித்தன. மொத்தம் அறிவிக்கப்பட்ட 36  விருதுகளில் 13ஐ தமிழ்ப்படங்கள் தட்டிச்சென்றன. 58வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, 'எந்திரன்' படத்துக்கு 2 விருதுகளும் சன் பிக்சர்சின் 'ஆடுகளம்' படத்துக்கு 6 விருதுகளும் கிடைத்தன.  சிறந்த நடிகர் விருதை மலையாள நடிகர் சலீம் குமாருடன் (ஆதாமின்டே மகன் அபு) இணைந்து தனுஷும், சிறந்த இயக்கம், திரைக்கதைக்கான விருதை வெற்றிமாறனும் பெற்றுள்ளனர்.

சன் பிக்சர்ஸின் முதல் தயாரிப்பான 'எந்திரன்' உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்திய சினிமாவில் இதுவரை யாரும் தயாரிக்காத அளவுக்கு சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்திருந்தனர். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தப் படம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
மெகா ஹிட்டான இந்தப் படத்துக்கு, ஸ்பெஷல் எபெக்ட்ஸ், தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அவ்விருதுகளை முறையே ஸ்ரீனிவாஸ் மோகன், சாபு சிரில் பெறுகின்றனர்.

சன் பிக்சர்சின் 'ஆடுகளம்' படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடனம், சிறந்த எடிட்டிங் உட்பட 6 விருதுகள் கிடைத்தன. ஆடுகளம் படத்தில்  நடித்த கவிஞர் ஜெயபாலன், ஜூரி விருதை பெற்றார். தமிழில் சிறந்த படமாக, 'தென்மேற்கு பருவக்காற்று' தேர்வு பெற்றுள்ளது. சரண்யா, வைரமுத்து ஆகியோரும் விருது பெற்றுள்ளனர். தேசிய விருதுகளில் கணிசமான விருதுகளை தமிழ்ப்படங்கள் பெற்றது மட்டுமின்றி, மலையாளத்துக்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன. இதன்மூலம்  தென் இந்திய  படங்களே இம்முறை அதிகமான விருதுகளை தட்டிச்சென்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா இதுவரை தொடாத புதிய சிகரம்

தமிழ் திரைப் படங்களுக்கு இவ்வளவு அதிகமான தேசிய விருதுகள் இதுவரை கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமுள்ள 36 விருதுகளில் 13 விருதுகள் தமிழ் படங்களுக்கு கிடைத்துள்ளது இதுவே முதல்முறை. அதில் 8 விருதுகள் சன் பிக்சர்ஸ் படங்களுக்கு கிடைத்திருக்கிறது.  தமிழ் படங்களுக்கு இத்தனை தேசிய விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கு பல்வேறு திரைத்துறை பிரமுகர்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

விருது பெற்றவர்கள் விவரம்

சிறந்த படம்        :    ஆதாமின்டே மகன் அபு (மலையாளம்)
சிறந்த நடிகர்        :    தனுஷ் (ஆடுகளம்), சலீம் குமார் (ஆதாமின்டே மகன் அபு)
சிறந்த இயக்குனர்    :    வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த திரைக்கதை    :    வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த நடன அமைப்பு    :    தினேஷ் (ஒத்த சொல்லால… ஆடுகளம்).
சிறந்த எடிட்டிங்    :    கிஷோர் (ஆடுகளம்)
சிறந்த பொழுதுபோக்கு படம்    :    தபங் (இந்தி)
சமூக பிரச்னை பற்றிய படம்    :    சாம்பியன்ஸ்(மராட்டி).
ஒளிப்பதிவு        :    மது அம்பாட் (ஆதாமின்டே மகன் அபு).
சிறந்த நடிகை        :    சரண்யா பொன்வண்ணன் (தென்மேற்கு பருவக்காற்று), மித்தாலி (பபு பஞ்ச் பாச்சா, மராட்டி).
சிறந்த குணசித்திர நடிகர்    :    தம்பி ராமய்யா (மைனா).
சிறந்த பாடலாசிரியர்    :    வைரமுத்து (கள்ளிக்காட்டில் பொறந்த தாயே, தென்மேற்கு பருவக்காற்று).
துணை நடிகை        :    சுகுமாரி (நம்ம கிராமம்).
தயாரிப்பு வடிவமைப்பு    :    சாபுசிரில் (எந்திரன்)
ஸ்பெஷல் எபெக்ட்ஸ்    :    ஸ்ரீனிவாஸ் மோகன் (எந்திரன்).
சிறந்த குழந்தைகள் படம்    :    ஹெச்சேகாலு (கன்னடம்).
இசைஅமைப்பாளர்    :    விஷால் பரத்வாஜ் (இஷ்க்யா), ஐசக் தாமஸ் (ஆதாமின்டே மகன் அபு).
ஜூரி  விருது         :    வ.ஐ.ச. ஜெயபாலன் (ஆடுகளம்).