தனுஷை விருந்துக்கு அழைத்த ரன்பீர் கபூர்

Ranbir Opens His Doors Dhanush

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் தனுஷ் இப்போது பாலிவுட், டோலிவுட், என அனைத்து திரை உலக ஹீரோக்களும் விரும்பும் நடிகராகி வருகிறார். பாலிவுட்டைச் சேர்ந்த ரன்பீர் கபூர் தனது வீட்டிற்கு வருமாறு தனுஷ்சிற்கு அழைப்பு விடுத்துள்ளதுதான் இப்போதைய ஹாட் டாபிக் ஆக உள்ளது.

ஆள் ஒல்லியாக இருந்தாலும் கதாபாத்திரங்களை உள்வாங்கி நடிக்கும் தனுஷ், எந்த மாதிரி கேரக்டர் என்றாலும் அதுவாகவே தன்னை மாற்றிக்கொள்வார். இதனாலேயே இளம் வயதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார்.

இதுவே தனுஷை சிறந்த நடிகர் என்று ஆளாலுக்கு புகழ்ந்து தள்ளும் நிலைமை கோலிவுட்டில் உருவாகியிருக்கிறது. விருது வழங்கும் விழாவில் விஜய் பேசிய போது தன்னைவிட சிறந்த நடிகர் தனுஷ் என்று புகழ்ந்தார். இப்போது பல நடிகர்கள் தனுசுடன் நட்பு பாராட்டி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ள தனுஷ் அங்கும் தன்னுடைய நடிப்பை நிரூபித்துள்ளார். இப்போதைய கதாநாயகிகள் மட்டுமல்லாது முன்னாள் கனவுக் கன்னிகள் கூட டுவிட்டரில் பாராட்டி எழுதும் அளவிற்கு அங்கு இடம் பிடித்துவிட்டார்.

இந்த நிலையில் தனுஷ் உடன் போனில் பேசிய ரன்பீர் கபூர், அவருடைய ராஞ்சனா படம் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டாராம். அதோடு நிற்காமல் பந்த்ரா பகுதியில் உள்ள தனது வீடான கிருஷ்ணாராஜ்க்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தனுஷ் தமிழ்நாட்டு நடிகர் மட்டுமல்ல அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாப்பிள்ளையும் கூட அந்த புகழோடு மட்டுமல்லாது தனக்கென்று தனி இடத்தை போகும் இடமெங்கும் தக்க வைத்துக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தயாரிப்பாளர் ஏஎல்எஸ் நாச்சியப்பன் மகன் திருமண வரவேற்பு - முதல்வர் நேரில் வாழ்த்து

சென்னை: இந்தியப் பசுமைத் தீர்பாய்யத்தின் தென்மண்டல நீதிபதி சொக்கலிங்கம் சகோதரரும் படத் தயாரிப்பாளருமான ஏ.எல்.எஸ்.நாச்சியப்பன் மகன் முத்து கணேஷ் - லலித் கலா அகாடமியின் தென்மண்டல இயக்குனர் பழனியப்பன் மகள் நித்தியா திருமண வரவேற்பில் நேரில் வந்து வாழ்த்தினார் முதல்வர் ஜெயலலிதா.

முத்துகணேஷ் - நித்யா திருமணத்தில் குன்றக்குடி அடிகளார், கோவிலூர் ஆதினகர்த்தர், உயர் போலீஸ் அதிகாரிகள், சிவகங்கை மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு திரையரங்க சங்கத்தலைவர் அண்ணாமலை, தொழில் அதிபர்கள், மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

jayalalithaa wishes producer nachiyappan son marriage

மணமக்களை வாழ்த்தி நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் கவிஞர் அரு.சோமநாதன், முனைவர் ஆறு அழகப்பன், அசத்தப் போவது யாரு தேவகோட்டை ராமநாதன் மற்றும் பலர் பேசினார்கள்.

அந்த 7 நாட்கள், ஆகாய கங்கை, நேரம் நல்லாருக்கு, ராஜா மகாராஜா படங்களைத் தயாரித்து வெளியிட்டவர் ஏஎல் நாச்சியப்பன். பட அதிபர் ஏஎல் சீனிவாசனின் செயலாளராக நீண்ட நாள் பணியாற்றியவர்.

 

தில்லு முல்லு ரீமேக்.. ரஜினி வாழ்த்தினார்! - சிவா

Rajini Blesses Thillu Mullu Remake   

சென்னை: தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்வது குறித்து சந்தோஷப்பட்ட ரஜினி, எங்களை வாழ்த்தினார், என்றார் படத்தின் ஹீரோ மிர்ச்சி சிவா.

கே பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படம் 1981-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தற்போது மிர்ச்சி சிவா நடிக்க ரீமேக் ஆகிறது. பத்ரி இயக்குகிறார்.

சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடந்த தில்லு முல்லு பட பிரஸ்மீட்டில் சிவா பேசுகையில், "ரஜினியின் தில்லு முல்லு பட ரீமேக்கில் அவர் கேரக்டரில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. படம் திருப்தியாக வந்துள்ளது. தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்ய முடிவானதும் ரஜினியை நேரில் சந்திக்க விரும்பினோம். ஒரு நாள் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அரைமணி நேரத்தில் ராகவேந்திரா மண்டபத்துக்கு வரச் சொன்னார். காரில் சென்றால் தாமதமாகும் என கருதி பைக்கிலேயே போய்விட்டோம்.

நாங்கள் அப்படி வந்ததைக் கேட்டு... 'ஏன் ஏன் இப்படி?' என்று கேட்ட ரஜினி, பின்னர் தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்வதை கேட்டு சந்தோஷப்பட்டார்.

படம் நல்லா வரும்னுதான் தோணுது என்றார். 'சரி.. என்னென்ன பாடல்களை யூஸ் பண்ணப் போறீங்க?" என்று கேட்டார். `தில்லு முல்லு தில்லு முல்லு' மற்றும் `ராகங்கள் பதினாறு உருவான வரலாறு' பாடல்களை பயன்படுத்தப் போவதாகக் கூறியதும், "சூப்பர்... எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு ராகங்கள் பதினாறு.." என்று கூறி வாழ்த்தினார்.

இந்தப் படம் பெரிய அளவில் வரும் என்பதற்கு இதைவிட வேறென்ன வேண்டும்," என்றார்.

 

உலக சுற்றுச்சூழல் தினம் - மரக் கன்று நட்டார் விஜய்

சென்னை: உலக சுகதாதார தினத்தை முன்னிட்டு, சென்னையில் மரக் கன்று நட்டார் நடிகர் விஜய்.

ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

சென்னையில் நேற்று பூமித் தாயைக் காப்போம் என்ற தலைப்பில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்பமானது. ஒரு ஆண்டு நடக்கும் இந்த பிரச்சாரத்தின் முதன் நாளான நேற்று அதனை மரக் கன்று நட்டு தொடங்கி வைத்தார் நடிகர் விஜய். இதன் பிரான்ட் அம்பாசடராகவும் விஜய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

vijay plants sapling on world environment day

ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் நடத்தப்படும் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எக்ஸ்னோராவின் இளைஞர் பிரிவு வி கோ க்ரீன் எனும் பெயரில் சுற்றுச்சூழல் நிகழ்ச்சியை ஜூலை 3 முதல் 9-ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. மாணவர்கள் உள்பட 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்.

 

ஜூன் 8ல் நடக்க இருந்த நடிகர் விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவி விழா ரத்து

Vijay Birth Day Welfare Function Cancelled

சென்னை: நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி சென்னையில் சனிக்கிழமையன்று நடைபெற இருந்த ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாளாகும். இதனையொட்டி அவரது ரசிகர்கள் சென்னையில் நாளை மறுதினம் பிரம்மாண்டமான விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

விழாவுக்காக மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்தன. விஜய்யின் கட்-அவுட்களையும் ரோட்ரோங்களின் ரசிகர்கள் அமைத்து வந்தனர்.

இவ்விழாவில் விஜய் பங்கேற்று 3 ஆயிரத்து 900 ஆயிரம் ஏழைகளுக்கு நல உதவிகள், ஏழை மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, கம்ப்யூட்டர்கள், ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள் போன்றவற்றை வழங்குவதாக இருந்தது.

இவ்விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பஸ், வேன்களில் சென்னை புறப்பட தயாரானார்கள். இந்த நிலையில் இன்று இவ்விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து பேசிய அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த், 8-ந்தேதி நடக்கவிருந்த விஜய் ரூ.1 கோடி நலத்திட்ட பணிகள் வழங்கும் விழா ரத்தாகியுள்ளது. எனவே வெளியூர்களில் இருந்து ரசிகர்கள் யாரும் சென்னை வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

பாரதிராஜாவின் முதல் ஹீரோயின் யார் தெரியுமா... மேடம் ஜெயலலிதாதான்!

Jayalalithaa Was Bharathirajaa First Heroine

எனது முதல் ஹீரோயின் ஸ்ரீதேவி இல்லை... இப்போது முதல்வராக உள்ள மேடம் ஜெயலலிதாதான், என்று கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

விகடன் மேடையில் இந்தவாரம் வாசகர் ஒருவரின் கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.

பதினாறு வயதினிலே படத்துக்கு முன்பே, ஆர் செல்வராஜும் தானும் சொந்த வீடு என்ற கதையை உருவாக்கியதாகவும், அதனை ஜெயலலிதாவிடம் ஒரு மணி நேரம் சொல்லி 28 நாட்கள் கால்ஷீட் வாங்கியதாகவும், ஆனால் அன்றைய பெரிய இயக்குநர் ஒருவர் ஜெயலலிதாவிடம் போட்டுக் கொடுத்ததால் அவரை இயக்கும் வாய்ப்பு போய்விட்டதாகவும் அந்த பதிலில் தெரிவித்துள்ளார் பாரதி ராஜா.

"அதே கதையைத்தான் ரொம்ப வருஷம் கழிச்சு 'புதுமைப் பெண்'ங்கிற பேர்ல ஏவி.எம். தயாரிச்சாங்க. ஜெயலலிதா மேடம் நடிக்க இருந்த 'புதுமைப் பெண்' கேரக்டர்ல ரேவதி நடிச்சிருந்தாங்க.

ஸோ, நான் ஹீரோயினா ஃபிக்ஸ் பண்ண முதல் ஆர்ட்டிஸ்ட் ஜெயலலிதா. அப்புறம் இந்த மாதிரி எந்தப் பஞ்சாயத்தும் வரக் கூடாதுன்னுதான் '16 வயதினிலே' படத்துல புதுப் பொண்ணா ஸ்ரீதேவியை அறிமுகப்படுத்தினேன்!,'' என்று குறிப்பிட்டுள்ளார் பாரதிராஜா.

 

'கஜினியால் வந்த குழப்பம்... நான் உயிரோடதான் இருக்கேன்!' - நயன்தாரா

Why Nayanthara S Name Pulled Jiah Khan   

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஜியா கானை நயன்தாரா என்று தவறாகக் கருதி, சமூக இணையதளங்களில் தகவல் பரவியதால் நயன்தாரா குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதற்குக் காரணம், இருவரும் கஜினி படத்தில் நடித்திருப்பதுதான். நயன்தாரா கஜினி படத்தில் சூர்யா ஜோடியாக நடித்திருந்தார்.

அந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட போது, நயன்தாரா வேடத்தில் நடித்தவர் ஜியா கான்.

ஜியாகான் இறந்ததும் ஆந்திராவில் உள்ள தெலுங்கு டி.வி. சேனல்கள் கஜினி படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா கேரக்டரில் நடித்தவர் என்று செய்தி வெளியிட்டனர்.

செய்தி வாசிப்பாளர்களும் டி.வி.யில் இதைத்தான் வாசித்தார்கள். ஆனால் அவசரத்தில் பலரும் கஜினியில் நடித்த நயன்தாரா என்று கருதி, ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் பரப்பினார்கள்.

இதனால் கேரளாவில் உள்ள நயன்தாரா குடும்பத்தினரிடம் பலரும் துக்கம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்களாம். இதில் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், நயன்தாராவை அவசரமாகத் தொடர்பு கொண்டனர்.

நயன்தாரா கேரக்டரில் இந்தி கஜினியில் நடித்தவர் தற்கொலை என்பதை தவறாக புரிந்துள்ளனர் என்று நயனுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் பின்னர்தான் தெரியவந்தது. நயன்தாரா பேஸ்புக், ட்விட்டரில் வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

தனக்கு போன் செய்து விசாரித்தவர்களிடம், எல்லாம் கஜினியால் வந்த குழப்பம்... நான் உயிரோடதான் இருக்கேன். கவலைப்படாதீங்க, என்றாராம்.

 

ஜியா கான் மரணம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது: அமிதாப் பச்சன்

Amitabh Bachchan Greatly Upset With Jiah Khan Suicide

மும்பை: தனக்கு ஜோடியாக நடித்த ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை வெகுவாக பாதித்துள்ளது.

ஜியா கான் தனது 18வது வயதில் 64 வயது அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக ராம் கோபால் வர்மாவின் நிஷப்த் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இப்படி ஒரு வெயிட்டான ரோலா என்று திரையுலகம் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தது. ஆனால் அவர் பட வாய்ப்புகள் இன்றி, சொந்த வாழ்விலும் காதலில் தோல்வி அடைந்து இறுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 25 வயதில் தனது வாழ்வை முடித்துக் கொண்டார்.

இந்நிலையில் நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமிதாப் பச்சன் ஜியா கான் மரணம் குறித்து கூறுகையில்,

எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இது குறித்து பேசவே கஷ்டமாக உள்ளது. சில நேரங்களில் சிலர் வருத்தப்படுவதும், மன உளைச்சலுக்கு ஆளாவதும் உண்டு. கனவுகளுடன் வருகிறார்கள், அது நிறைவேறவில்லை என்றால் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இது போன்று உங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வது நல்லது இல்லை. ஜியா கான் மரணம் என்னை வெகுவாக பாதித்துள்ளது என்றார்.

 

ரஜினியை விட 100 மடங்கு எளிமையானவர் அவர் மகள் ஐஸ்வர்யா! - தனுஷ்

Aishwarya Is 100 Times Simple Than Rajini Says Dhanush

ரஜினி சாரை விட 100 மடங்கு எளிமையானவர் அவர் மகள் ஐஸ்வர்யா என்று தன் மனைவியைப் பற்றி கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.

வெளியில் அதிகமாகப் பேசுவதைத் தவிர்க்கும் தனுஷ், முதல் முறையாக மிக நீண்ட பேட்டியை அளித்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் தனிப்பட்ட விஷயங்களைக் கூட அதில் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் தனுஷ்.

தனது மனைவி ஐஸ்வர்யா பற்றி அவர் கூறுகையில், "காதல் கொண்டேன் படத்தின் ப்ரிமியர் ஷோவின்போதுதான் ஐஸ்வர்யாவைச் சந்தித்தேன். இடைவேளையின் போது ஒருவருக்கொருவர் ஹாய் சொல்லிக் கொண்டோம். பின்னர் தியேட்டர் உரிமையாளர் என்னை ஐஸ்வர்யாவுக்கும் சௌந்தர்யாவுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் ஒரு நாள் ஐஸ்வர்யா எனக்கு ஒரு வாழ்த்தும் பூச்செண்டும் அனுப்பி வைத்திருந்தார். தொடர்பில் இருங்கள் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். நான் அதை சீரியஸாக எடுத்துக் கொண்டேன். இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த தொடர்பு எங்கள் திருமணத்தில் முடிந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக மட்டும் நான் ஐஸ்வர்யாவைப் பார்க்கவில்லை. அவரது எளிமை எனக்குப் பிடிக்கும். நீங்கள் அவரது தந்தை (ரஜினி) எளிமையானவர் என்று நினைத்தால், ஐஸ்வர்யாவை ஒரு முறை சந்தியுங்கள். அவர் ரஜினி சாரைவிட 100 மடங்கு எளிமையானவர் என்பது புரியும். எல்லோரையும் அவர் ஒரே மாதிரி நடத்துவார். எளிதில் நட்பாகிவிடுவார். அதேபோல அவரது சிக்கலான மனநிலையும் எனக்குப் பிடிக்கும். என் மகன்களுக்கு அவர் அருமையான தாய். மிகச் சிறப்பாக அவர்களை வளர்த்து வருகிறார்," என்றார்.

 

கர்ப்பப் பையையும் எடுக்கிறார் ஏஞ்செலீனா ஜூலி!

லாஸ் ஏஞ்செலஸ் தனது இரு மார்பகங்களையும் அகற்றி விட்ட ஹாலிவுட் நடிகை ஏஞ்செலீனா ஜூலி அடுத்து தனது கர்ப்பப் பையையும் அகற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் தனது இரு மார்பகங்களையும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி பரபரப்பை ஏற்படுத்தினார் 37 வயதான ஜூலி.

மார்பக புற்றுநோய் தாக்குதலிலிருந்து தப்பிக்க துணிகரமாக இந்த அறுவைச் சிகிச்சையை அவர் செய்து கொண்டார். இந்த நிலையில்அடுத்து மேலும் ஒரு மேஜர் ஆபரேஷனுக்கு அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

angelina jolie have ovaries removed

அவருக்கு கர்ப்பப் பையில் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனராம். அதாவது 50 சதவீத வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனராம். இதையடுத்து பேசாமல் கர்ப்பப் பையை எடுத்து விடலாம் என்ற எண்ணத்திற்கு வந்துள்ளாராம் ஜூலி.

இந்த தகவலை பீப்பிள் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. கர்ப்பப் பையை எடுத்துவிட்டால் தனக்கு புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்பே இல்லாமல் தடுத்து விட முடியும் என அவர் கருதுகிறாராம்.

ஜூலியின் மனதில் என்ன இருக்கிறது என்பது அவரே வெளியில் சொன்னால்தான் தெரியும்....

 

இளையராஜா என் ரத்தத்தில் கலந்திருக்கிறார்! - தனுஷ்

Ilayarajaa Is My Time Favourite Composer Says Dhanush

இசைஞானி இளையராஜாதான் என் வாழ்க்கையில் எல்லாம். அவர் என் ரத்தத்தில் இருக்கிறார், என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

ஒளிவு மறைவின்றி பேசுவதில் இன்றைய இளம் நடிகர்களில் முதலிடம் தனுஷுக்குதான். மனதிலிருப்பதை பெரும்பாலும் அப்படியே கொட்டிவிடுவார்.

சமீபத்தில் அவரிடம், 'நீங்கள் மரியான் மற்றும் ராஞ்ஜஹனா (அம்பிகாபதி) படங்களில் ஏ ஆர் ரஹ்மானுடன் இணைந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்?,' என்று கேட்டிருந்தனர்.

அதற்கு தனுஷ் அளித்த பதில், அவர் இளையராஜாவுக்கு எத்தனை பெரிய ரசிகர் என்பதை உணர வைத்துள்ளது.

தனுஷ் அளித்த பதில்:

"இளையராஜாதான் எனக்கு ரொம்பப் பிடித்த இசையமைப்பாளர். அவர் இசைதான் எனக்கு தாலாட்டு. அவர் இசைதான் எனக்கு சாப்பாடு. இவர் இசைதான் என் இளமைப் பருவம். அவர் இசைதான் என் முதல் காதல். என் தோல்விகளிலும் அவர் இசைதான் துணை நின்றது... அவர் இசைதான் என் முதல் முத்தம்.. அவர் இசைதான் என் முதல் காதல் தோல்வி... அவர் இசைதான் என் வெற்றி... அவர் என் ரத்தத்தில் கலந்திருக்கிறார்!!"

-யப்பா... இதுக்குமேல சொல்றதுக்கு ஒண்ணுமில்ல.. தனுஷ் நீங்க கிரேட்!

 

தோல்வியால் துவளாத தமன்னா.. தொடர்ந்து 3 இந்திப் படங்களில் ஒப்பந்தம்

Tamanna Gets 3 Offers Hindi   

முதல் படம் ஹிம்மத்வாலா படுதோல்வியைத் தழுவியதால், இந்தியில் இனி தமன்னா அவ்வளவுதான் என்று கூறப்பட்டது.

ஆனால், அவருக்கு அதிர்ஷ்டம் தொடர்கிறது. தொடர்ந்து மூன்று இந்திப் படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக ஹிம்மத்வாலா இயக்கிய சஜித் கானின் அடுத்த படத்திலும் தமன்னாவே ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிம்மத்வாலா தோல்வியால் வருத்தத்தில் இருந்த தமன்னாவுக்கு தெலுங்கில் வெளிவந்த ‘தடகா' பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

இந்த மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் விதத்தில் தொடர்ந்து இந்தி வாய்ப்புகள் அவரைத் தேடி வந்துள்ளன.

சஜித் கான் அடுத்து இயக்கப் போகும் ஹிந்திப் படத்தில் இஷா குப்தா, சோனம் சௌஹான் ஆகியோருடன் மூன்றாவது நாயகியாக தமன்னா நடிக்கிறார்.

வரும் செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகிறது.

அடுத்து அக்ஷய் குமார் ஜோடியாக ‘ஹம்ஷகல்' என்ற படத்திலும் தமன்னா நடிக்கப் போகிறார். இத்துடன் இன்னும் ஒரு படத்துக்கும் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தமிழில் அஜீத் ஜோடியாக நடித்து வரும் தமன்னாவுக்கு, தெலுங்கில் நான்கு படங்கள் கைவசம் உள்ளன.