கட்டினா உள்ளூர் மாப்பிள்ளையைத் தான் கட்டுவேன்: த்ரிஷா

Trisha Rejects 2 Grooms   

சென்னை: த்ரிஷா தனது அம்மா பார்த்த 2 மாப்பிள்ளைகளுக்கு நோ சொல்லிவிட்டாராம்.

திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார் த்ரிஷா. ஆனால் இன்னமும் பட வாய்ப்புகள் குறைவில்லை. இந்நிலையில் த்ரிஷாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார் அவரது அம்மா உமா. மகளுக்காக மும்முரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்.

இந்நிலையில் அம்மா பார்த்த 2 மாப்பிள்ளைகளை நிராகரித்துவிட்டாராம் த்ரிஷா. ஏன் த்ரிஷா, என்னாச்சு என்று கேட்டால், அவர்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கின்றனர். வெளிநாடு என்பதால் தான் முடியாது என்று கூறிவிட்டேன். எனக்கு உள்ளூர் மாப்பிள்ளை தான் வேண்டும் என்றார்.

த்ரிஷாவுக்கு இந்த ஆண்டே திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது. அவர் படங்களில் பிசியாக இருப்பதால் இந்த ஆண்டு திருமணம் நடப்பது கஷ்டம் என்று கூறப்படுகிறது.

த்ரிஷா கல்யாணம் செய்யப்போகும் அந்த சென்னைக்காரர் யாரோ?

 

ஹன்சிகாவுக்கு பிடித்த நம்மூர் இட்லி, சாம்பார்

Hasika Loves Tn Idli Sambar   

சென்னை: ஹன்சிகாவுக்கு பிடித்த உணவு என்றால் அது இட்லி, சாம்பார் தானாம்.

மங்களூரில் பிறந்து மும்பையில் வளர்ந்தவர் ஹன்சிகா. சிங்கம் 2, பிரியாணி, வாலு, வேட்டை மன்னன் என்று 4 படங்களில் நடித்து வருகிறார். அவர் சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்த தீயா வேலை செய்யணும் குமாரு பட வேலைகள் முடிந்துவிட்டன. இப்படி ஓவர் பிசியாக இருக்கும் ஹன்சிகா பல தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக உள்ளார்.

சின்ன குஷ்பு என்று அழைக்கப்படும் அவருக்கு பிடித்த உணவு என்றால் அது நம்மூர் இட்லி, சாம்பார் தானாம். என்ன ஹன்சிகா குஷ்பு இட்லி பிடிக்குமா?

கொஞ்சம் பூசினாற் போல இருந்த ஹன்சிகா தற்போது மெலிந்து காணப்படுகிறார். ஒரு வேளை இட்லி டயட்டில் இருக்கிறாரோ?

 

சிலுக்கூர் பாலாஜி கோவிலில் 108 முறை பிரதக்ஷனம் செய்த ஸ்ருதி

Shruti Visits Chilukur Balaji Temple

ஹைதராபாத்: ஸ்ருதி ஹாசன் ஆந்திராவில் உள்ள சிலுக்கூர் பாலாஜி கோவிலில் 108 முறை பிரதக்ஷனம் செய்துள்ளார்.

ஸ்ருதி ஹாசனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. அவர் அவ்வப்போது கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதி ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகே இருக்கும் சிலுக்கூர் பாலாஜி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர் கோவிலில் 108 முறை பிரதக்ஷனம் செய்துள்ளார்.

ஏதாவது வேண்டுதல் நிறைவேறினால் கடவுளுக்கு நன்றி சொல்லும் வகையில் சிலுக்கூர் பாலாஜி கோவிலில் பிரதக்ஷனம் செய்வார்கள். அப்படி என்றால் ஸ்ருதியுடைய வேண்டுதல் ஏதாவது நிறைவேறி இருக்க வேண்டும்.

ஸ்ருதி தற்போது 3 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிசியாக இருப்பதால் அப்பா கமலின் படத்தில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

 

வேலூர் பெண்ணை மணக்கும் சிம்பு?

Simbu Marry Vellore Girl

சென்னை: சிம்புவுக்கு வேலூரில் பெண் பார்த்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

சிம்பு வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் காதல் ஜோடியாக வலம் வந்து பிரிந்துவிட்டனர். அதன் பிறகு நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தார். சிம்பு அந்த முன்னணி நடிகையை காதலிக்கிறார், இந்த நடிகையை காதலிக்கிறார் என்று அவ்வப்போது செய்திகள் வரும்.

இந்நிலையில் சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க டி.ராஜேந்தர் முடிவு செய்தார். பெண் பார்க்கும் படலமும் வேகமாக நடந்து வருகிறது. சிம்புவுக்கு வேலூரில் ஒரு பெண்ணை பார்த்தார்களாம். பெண் பிடித்துப் போக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பெண் ஓகே ஆனால் இந்த ஆண்டே திருமணம் தானாம்.

சிம்பு முகத்தில் இப்பொழுதே புதுமாப்பிள்ளை களை வந்துவிட்டது என்று கூறப்படுகிறது.