குறும்படங்களை ஊக்குவிக்க பிரத்யேக யூடியூப் சேனல்: ஐஸ்வர்யா தனுஷ் அறிவிப்பு

சென்னை: குறும்பட இயக்குநர்களுக்கு உதவும்வகையில், யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்க உள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

இதுகுறித்து அவர் தரப்பு வெளியிட்ட அறிக்கை: டென் என்டர்டெயின்மென்ட் பேனர் பெயரில், யூடியூப் சேனல் துவக்கி, குறும்படங்களை அதில் வெளியிட முடிவு செய்துள்ளோம். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில், தயாரிக்கப்படும் குறும்படங்கள் இதில் வெளியிடப்படும். முதல்முறையாக டென் என்டர்டெயின்மென்ட்தான் இப்படி ஒரு முன் முயற்சியை எடுத்துள்ளது.

Aishwaryaa Dhanush to launch Youtube channel for short filmmakers

முதலில் தென் மாநில மொழி படங்களை வெளியிட்ட பிறகு படிப்படியாக பிற மொழி குறுமொழி படங்களும் யூடியூப்பில் வெளியிடப்படும். திறமையாளர்களை உலகத்திற்கு வெளிக்காட்ட இம்முயற்சி எடுக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சகோதர நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் டிஜிட்டர் கூட்டாளியான டிவோ ஆகியவற்றின் சமூக வலைத்தள ஆதிக்கத்தை இந்த குறும்பட விளம்பரத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்பட உள்ளது.

 

குத்துப்பாட்டில் பட்டையை கிளப்பிய சின்மயி... அதிரி புதிரி ஹிட்

சென்னை: பாலிவுட் உலகில் பட்டையை கிளப்பி வருகிறது ‘மேரா நாம் மேரி' என்ற குத்துப்பாட்டு. கரீனா கபூரின் நடனத்திற்கு கவர்ச்சிகரமான குரல் கொடுத்திருக்கிறார் நம் ஊர் சின்மயி.

அக்‌ஷய்குமார் நடிப்பில் வரும் ஆகஸ்ட் பதினைந்துக்கு ரிலீஸ் ஆகப்போகும் ‘பிரதர்ஸ்' படத்தின் டீசராக இந்த பாட்டு இணையத்தில் வெளியாகி, சில நாட்களிலேயே லட்சக்கணக்கனோர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

Not used to singing item numbers: Chinmayi Sripada

கரீனாவின் தீயான கவர்ச்சி நடனத்திற்கு வலு சேர்க்கிறது சின்மயியின் போதைக் குரல். பதினைந்து ஆண்டுகளாகப் பாடிவரும் சின்மயி ஏற்கனவே குரு படத்தில் மையா... மையா... என்று பாடி பாலிவுட், கோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்தார். மென்மையான பாடல்களுக்கு சொந்தக்காரியான சின்மயி, தற்போது மீண்டும் குத்துப்பாடல் மூலம் பாலிவுட் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

பாலிவுட்டில் இதுவரை எத்தனையோ பாடல்களை அவர் பாடியிருந்தாலும், இந்த பாட்டு பெற்றிருக்கும் அதிரிபுதிரி ஹிட் அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கரீனாவின் ஆட்டம் பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறது என்கிறார் சின்மயி.

ஐட்டம் சாங்குக்கு ஆடப்போகும் நடிகைகள் அத்தனை பேரும் இனிமேல் சின்மயி வாய்ஸுக்குத்தான் ஆடுவேன் என்று கண்டிஷன் போடுமளவுக்கு வட இந்தியா முழுக்க வைரலாகி இருக்கிறதாம்.

குரு, சென்னை எக்ஸ்பிரஸ், டூ ஸ்டேட்ஸ், என பல படங்களில் பாடியிருந்தாலும் இந்த பாடல் செம ஹிட் அடித்துள்ளது இதற்குக் காரணம் இசையமைப்பாளர் கொடுத்த பயிற்சிதான் என்று கூறியுள்ளார் சின்மயி.

 

ஆவிகுமார் விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.0/5

நடிகர்கள்: உதயா, கனிகா திவாரி, நாசர், ஜெகன், மனோபாலா

ஒளிப்பதிவு: ராஜேஷ் கே நாராயணன்

இசை: விஜய் ஆன்டனி - ஸ்ரீகாந்த் தேவா

தயாரிப்பு: ஸ்ரீதர் நாராயணன், சிவ சரவணன்

இயக்கம்: காண்டீபன் கே

இந்த பேய்ப் பட சீஸனில் வந்திருக்கும் இன்னுமொரு படம் ஆவிகுமார். பேய்ப் படம் என்பதற்காக இஷ்டத்துக்கும் ரீல் சுத்தாமல், பார்க்கும்படி எடுத்திருக்கிறார்கள்.

ஆவிகளுடன் பேசும் மீடியமான உதயாவை, ஒரு முறை மலேசிய தொலைக்காட்சி ஒன்றில் போலீஸ் அதிகாரி நாசர் நேர்காணல் நடத்துகிறார். அப்போது ஒரு டாக்டர் கொலையில் கொலையாளி யார் என்ற கேள்விக்கு உதயா சொல்லும் பதிலும் நாசர் சொல்வதும் முரண்படுகிறது. ஆனால் தான் சொன்னதே சரி என்பதில் உறுதியாக இருக்கிறார் உதயா. அதை நிரூபிப்பதாகவும் கூற, ஒரு போலீசை அனுப்பி உதயாவை பின் தொடர வைக்கிறார் நாசர்.

Aavikumar review

இந்த நேரத்தில் உதயா தங்கியிருக்கும் வீட்டின் மேல்மாடியில் ஒரு அழகான பெண். அவளைப் பார்த்ததுமே அவள் ஆவி என்பதைப் புரிந்து கொள்ளும் உதயா அதை அவளிடம் சொல்ல, அவளோ தான் நிஜப் பெண் என வாதிடுகிறாள். ஒரு நாள் உண்மை அவளுக்கும் புரிகிறது. அப்படியானால் அவள் உடல் எங்கே? இதைக் கண்டுபிடிக்க முயல்கிறார் உதயா. அப்போது ஆவிக்கும் உதயாவுக்கும் காதல் வருகிறது.

ஆவியின் உடலை உதயா கண்டுபிடித்தாரா? காதல் என்ன ஆனது? கொலைகாரனைக் கண்டுபிடித்தாரா? என்பது திரையில் பார்க்க வேண்டியவை.

கதையின் நாயகனாக வந்து கவர்கிறார் உதயா. கதைக்கும் காட்சி அமைப்புக்கும் என்ன தேவையோ அந்த அளவு அடக்கமாக நடித்திருக்கிறார். காதலியின் ஆவியையும் உடலையும் சேர்த்து வைக்க அவர் போராடும் காட்சிகளில் கதைக்குள்ளே முழுமையாக போய்விடுகிறோம்.

Aavikumar review

கனிகா திவாரிதான் பேய். ஆனால் அழகான பேய். நல்ல நடிப்பையும் தந்திருக்கிறார்.

நாசர் பாத்திரம் குறிப்பிட்டுச் சொல்லும்படி உள்ளது. படத்துக்கு பெரிய திருஷ்டி ஜெகன். அரைவேக்காட்டுத்தனமாக உள்ளன ஜோக் என்ற பெயரில் அவர் அடிக்கும் கமெண்டுகள்.

முனீஸ்காந்த் - தேவதர்ஷினி, மனோபாலா காமெடி ரசிக்க வைக்கிறது.

Aavikumar review

ராஜேஷ் கே நாராயணன் ஒளிப்பதிவு மலேசியாவை சுற்றிப் பார்த்த உணர்வைத் தருகிறது. பிரமாதம். ஆனால் இசை, பாடல்களை அப்படிச் சொல்ல முடியவில்லை.

எடுத்துக் கொண்ட கதை மற்றும் களம் புதிது மட்டுமல்ல, ரசிக்கும்படியாகவும் இருப்பதுதான் ஆவிகுமாரின் ப்ளஸ். ஆனால் காமெடியிலும், சில பாத்திரங்களைக் கையாள்வதிலும் தனி கவனம் செலுத்தியிருந்தால் இந்தப் படம் வேறு ரேஞ்சுக்குப் போயிருக்கும். ஆனால் ஆவிகுமாரை ரசிக்க இந்த மைனஸ்கள் பெரிய தடையல்ல!

 

புலி இசை வெளியீடு... மாமல்லபுரத்தில் நடத்தத் திட்டம்?

விஜய் நடித்துள்ள புலி படத்தின் இசை வெளியீட்டு மாமல்லபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புலி படத்தின் டீசர் வெளியாகி 60 லட்சம் பேரும் மேல் பார்த்து ரசித்துள்ளனர்.

Puli audio launch at Mamallapuram

இப்போது படத்தில் விஜய்யும் ஸ்ருதிஹாஸனும் பாடிய பாடலின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏன்டீ ஏன்டீ பாடல் இப்போதே பிரபலமாகிவிட்டது.

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டை வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

மாமல்லபுரத்தில் உள்ள உல்லாச விடுதியொன்றில் வைத்து இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார்கள். திரையுலகினர் திரளாகக் கலந்து கொள்ளப் போகிறார்கள்.

 

4ம் திருமணத்திற்குத் தயாரான மிஷன் இம்பாசிபிள் நாயகன்

லாஸ் ஏஞ்செல்ஸ்: மிஷன் இம்பாசிபிள் உலகம் முழுவதும் கோடிக்கனக்கான ரசிகர்களை ஈர்த்த இந்தப் படத்தின் 5 ம் பாகமான ரப் நேஷன் விரைவில் வெளியாக இருக்கிறது. ஆனால் படம் வெளிவருவதை விடவும் பரபரப்பான விஷயம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

இந்த செய்தியைக் கேள்விப் படுபவர்கள் அனைவருமே அப்படியா? இருக்கலாம் போன்ற அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி வருகின்றனர், விஷயம் இதுதான் மிஷன் இம்பாசிபிள் படத்தின் நாயகனான டாம் குரூஸ் தற்போது 4ம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம்.

'Rogue Nation' Actor Tom Cruise Now Ready For 4th Marriage?

53 வயதான டாம் குரூஸ் தனது 3 வது மனைவியை கடந்த 2012 ம் ஆண்டில் விவாகரத்து செய்தார், அதன் பிறகு தன்னுடைய படங்களின் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

தனது மனைவியை விவாகரத்து செய்த பின் தொடர்ந்து படங்களில் நடித்த டாம் குரூஸ் வேலைப்பளுவில் சிக்கித் தவித்திருக்கிறார், இவருக்கு உதவி செய்யும் பொருட்டு கடந்த ஆண்டு டாம் குரூசின் உதவியாளராகச் சேர்ந்தவர் எமிலி தாமஸ் (22).

உதவியாளராகச் சேர்ந்த எமிலி ஒரு கட்டத்தில் தோழியாகி விட இந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம் டாம் குரூஸ். எமிலியும் இதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

வரும் டிசம்பர் மாத இறுதியில் இவர்கள் இருவரின் திருமணமும் நடக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. டாம் குரூசின் வயது 53 என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மனைவியுடன் 3 வருடம், 2வது மனைவியுடன் 6 வருடம், 3வது மனைவியுடன் 12 ஆண்டுகள் என வாழ்ந்தவர் குரூஸ்.

 

திட்டமிட்டுப் படமெடுத்தால் நஷ்டம் வராது!- எஸ்பி முத்துராமன்

திட்டமிட்டுப் படமெடுத்தால் நஷ்டம் வராது என்றார் ரஜினி, கமலை வைத்து அதிகப் படங்கள் தந்த எஸ்பி முத்துராமன்.

கிருமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "இந்தக் 'கிருமி' படத்தைத் தயாரித்து இருக்கும் ரஜினி ஜெயராமன் என்னை கண்டிப்பாக வர வேண்டும் என்று அழைத்தார்.

SP Muthuraman's secret of success

அவர் சூப்பர் ஸ்டாருடன் நீண்ட காலம் உதவியாளராக இருந்தவர். நான் ரஜினியை வைத்து இயக்கிய 25 படங்களில் 20 படங்களில் ரஜினிக்கு உதவியாளராக இருந்தவர் இந்த ஜெயராமன் தான். நானும் சூப்பர் ஸ்டாரை வைத்து படங்கள் இயக்கியவன் என்கிற முறையில் அவரை உரிமையோடு வாழ்த்துகிறேன். அவர் சரியாக சம்பளம் கொடுத்ததாக எல்லாரும் கூறினார்கள். அப்போது எனக்கு ஏ.விஎம், நாகிரெட்டி,ஜெமினி எஸ்.எஸ்.வாசன், மாடர்ன்தியேட்டர்ஸ் சுந்தரம் என எல்லாரும் நினைவுக்கு வந்தார்கள். அந்த நேர்மையான தயாரிப்பாளர்கள் வரிசையில் ஜெயராமனும் சேர வாழ்த்துகிறேன்.

இங்கே சார்லி நன்றாகப் பேசினார். ஒருகாலத்தில் அவர் பாலசந்தரிடம் பேசவே பயந்து கொண்டு இருந்ததைப் பார்த்திருக்கிறேன். இப்போது தைரியமாகப் பேசுகிறார். வளர்ந்து இருக்கிறார்.

இங்கே இருக்கிற நடிகை வனிதா மிகவும் தைரியசாலி. ஒரு முறை என் படத்தின் படப்பிடிப்பு ஒன்று குற்றாலம் மலையில் நடந்தது. அதில் நடிக்கும் ஒய். ஜி. மகேந்திரன் மலையில் மேலே போகப் பயந்தார். எப்படிப் போவது என்று அவர் பயந்த போது வயதான ஒருவர் லட்சுமி நாராயணன் என்பவரை மேலே போக வைத்தேன். அவரை மேலே கொண்டு சேர்த்தது யார் தெரியுமா? இந்த வனிதாதான். அப்புறம்தான் ஒய்.ஜி.மகேந்திரன் மலையில் ஏறினார். அந்த அளவுக்கு மிகவும் துணிச்சலான நடிகை இந்த வனிதா.

படப்பிடிப்பின் போது மட்டும் ன் எங்கள் குழுவினர் பரபரப்பாக இயங்குவார்கள் படப்பிடிப்பு எல்லாம் முடிந்ததும் நண்பர்களைப் போல மாறி விடுவோம்.

நான் எழுபது படங்கள் இயக்கி இருக்கிறேன். சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து 25 படங்கள், கமலை வைத்து 10 படங்கள், நடிகர் திலகத்தை வைத்து 3 படங்கள் இயக்கியிருக்கிறேன்.

இவை எப்படி முடிந்தன... அந்தப் படங்கள் எல்லாம் எஸ்.பி முத்துராமன் என்கிற தனிப்பட்ட நபரின் வெற்றியல்ல, சாதனையல்ல. எல்லாமே எஸ் பி.எம். என்கிற படக்குழுவின் வெற்றி. இவை எப்படி முடிந்தது? நன்கு திட்டமிட்டு எடுத்ததால்தான் முடிந்தது. திட்டமிட்டு படமெடுத்தால் நஷ்டம் வராது, வெற்றி நிச்சயம். இதை எல்லாருக்கும் சொல்லிக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் கதை 'காக்கா முட்டை' மணிகண்டனின் கதை என்றார்கள். அவர் நமது பெருமையை உயர்த்தும்படி படம் எடுத்து இன்று பாராட்டைப் பெற்று வருகிறார். அவரது கதையை இயக்கியுள்ள அனுசரணையும் என்னையும் மிஞ்சி வாழ்க என வாழ்த்துகிறேன்," என்றார்.

 

விஜய்யின் புலி பாடலை இளையராஜாவுக்கு சமர்ப்பித்த தேவிஸ்ரீபிரசாத்!

விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் புதிய படமான புலியின் முதல் பாடலை இளையராஜாவுக்கு சமர்ப்பிப்பதாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்தார்.

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சிம்பு தேவன் இயக்கியிருக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

Devi Sri Prasad dedicates Puli song to Ilaiyaraaja

படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏண்டி ஏண்டி' என்னும் பாடலை விஜய்யும், ஸ்ருதிஹாசனும் பாடி இருந்தார்கள். இந்த பாடலின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசரில் தேவிஸ்ரீ பிரசாத் இந்த பாடல் குறித்து பேசுகையில், "என்னுடைய இசையில் விஜய்யும், ஸ்ருதிஹாசனும் ‘ஏண்டி ஏண்டி' என்னும் பாடலை பாடியிருக்கிறார்கள்.

மிகவும் மெலோடியான இந்த பாடல் அருமையாக வந்திருக்கிறது. நான் தீவிர கிட்டார் பிரியன். கிட்டார் இசையில் மிகவும் ரொமான்டிக்கான பாடலை உருவாக்கியிருக்கிறேன். இந்த பாடலை இசைஞானி இளையராஜாவுக்கு சமர்பிக்கிறேன். இந்த பாடல் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

பாகுபலி இரண்டாம் பாகம்: இதுவரை வெளிவராத சில புதிய தகவல்கள்!

பாகுபலி படத்தை இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி ஆரம்பிக்கும்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் எண்ணமே இல்லை.

படத்தை எடுத்து முடித்துப் பார்த்தபோது கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு மேல் போவது தெரிந்ததும்தான் இதனை இரண்டு பாகமாக்க முடிவெடுத்து கடந்த ஆண்டு அறிவித்தனர்.

Baahubal 2 new updates

இந்த முதல் பாகத்திலேயே வரவேண்டிய பல சுவாரஸ்யமான பகுதிகளை, கிட்டத்தட்ட 40 சதவீத காட்சிகளை இரண்டாம் பாகத்துக்காக எடுத்து வைத்துவிட்டுத்தான் முதல் பாகத்தை வெளியிட்டனர். படமும் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுவிட்டது.

இப்போது பாகுபலியின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளை ராஜமவுலி ஆரம்பிக்கவிருக்கிறார்.

இந்த இரண்டாம் பாகத்திலும் ஒரு பிரமாண்ட போரைக் காட்டப் போகிறார்கள். அது முதல் பாகத்தில் பார்த்ததைவிட மிக வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறாராம் ராஜமவுலி. முதல் பாகத்தில் காலகேயர்கள் என்ற முரட்டுப் படையுடன் மோதினார்கள் பிரபாஸும் ராணாவும்.

இந்த இரண்டாம் பாகத்தில் வேறு ஒரு படையுடன் மோதல். அதில் மன்னன் மகேந்திர பாகுபலி கொல்லப்படுதல் போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன.

மேலும் இந்த இரண்டாம் பாகத்தில் முழுக்க அனுஷ்காவின் ஆதிக்கம்தான் அதிகமிருக்கும் என ராஜமவுலியே தெரிவித்திருக்கிறார். தமன்னாவும் வருவார், ஆனால் சில காட்சிகள்தான் அவர் இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

இரண்டாம் பாக படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்குகிறது. அனுஷ்கா, ராணா, தமன்னா ஆகியோர் அவரவர் படங்களை முடித்து வர அவகாசம் தரவே இரண்டாம் பாகத்தை செப்டம்பரில் ஆரம்பிக்கிறார் ராஜமவுலி.