சென்னை: சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினியை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து அவரது உடல் நிலை குறித்து அதிர்ச்சி தரும் வதந்திகள் பரவி வருகின்றன.
ரஜினிகாந்தை திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மத்திய அமைச்சர் ஜிகே வாசனும் ரஜினியை மருத்துவமனையில் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்திருந்த மோடியும் நாயுடுவும் விழா முடிந்ததும் மருத்துவமனைக்குச் சென்று ரஜினியை சந்தித்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ரஜினி சுறுசுறுப்பாக உள்ளதால் 4 அல்லது 5 நாளில் வீடு திரும்புவார். வெளிநாடு சென்று சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை என்றார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து அவரது உடல் நிலை குறித்து அதிர்ச்சி தரும் வதந்திகள் பரவி வருகின்றன.
ரஜினிகாந்தை திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மத்திய அமைச்சர் ஜிகே வாசனும் ரஜினியை மருத்துவமனையில் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்திருந்த மோடியும் நாயுடுவும் விழா முடிந்ததும் மருத்துவமனைக்குச் சென்று ரஜினியை சந்தித்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ரஜினி சுறுசுறுப்பாக உள்ளதால் 4 அல்லது 5 நாளில் வீடு திரும்புவார். வெளிநாடு சென்று சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை என்றார்.
Post a Comment