சென்னை: ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு.
இதுகுறித்து குஷ்பு கூறுகையில், ஒரு பெண்ணாக, ஒரு தாயாக கடும் நெருக்கடியான சூழலை சந்தித்துப் போராடி வருகிறார் கனிமொழி. இதேபோன்ற சூழ்நிலையை நானும் சந்தித்துள்ளேன். கனிமொழி மிகுந்த மன உறுதி படைத்தவர். அவரும் இந்த சூழலைத் தாண்டி வருவார்.
நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார். ஒரு பெண்ணாக இந்த சமயத்தில் நான் கனிமொழிக்கு ஆதரவாக உள்ளேன் என்றார் குஷ்பு.
உண்மையில் கனிமொழியை விட மோசமான சூழலை சந்தித்தவர் இந்த குஷ்பு. தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து விமர்சித்துப் பேசி தமிழக மக்களின் ஒட்டுமொத்த கொந்தளிப்பை சம்பாதித்தவர். அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டன.
பின்னர் இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு காங்கிரஸில் அவர் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தீர்ப்பு குஷ்புவுக்கு சாதகமாக வந்த அடுத்த நாளே அவர் அதிரடியாக திமுகவில் வந்து இணைந்து கொண்டார். அப்போது தலைமை நீதிபதியாக இருந்தவர் தற்போது சொத்துக் குவிப்பு உள்ளிட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளவரான கே.ஜி.பாலகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து குஷ்பு கூறுகையில், ஒரு பெண்ணாக, ஒரு தாயாக கடும் நெருக்கடியான சூழலை சந்தித்துப் போராடி வருகிறார் கனிமொழி. இதேபோன்ற சூழ்நிலையை நானும் சந்தித்துள்ளேன். கனிமொழி மிகுந்த மன உறுதி படைத்தவர். அவரும் இந்த சூழலைத் தாண்டி வருவார்.
நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார். ஒரு பெண்ணாக இந்த சமயத்தில் நான் கனிமொழிக்கு ஆதரவாக உள்ளேன் என்றார் குஷ்பு.
உண்மையில் கனிமொழியை விட மோசமான சூழலை சந்தித்தவர் இந்த குஷ்பு. தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து விமர்சித்துப் பேசி தமிழக மக்களின் ஒட்டுமொத்த கொந்தளிப்பை சம்பாதித்தவர். அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டன.
பின்னர் இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு காங்கிரஸில் அவர் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தீர்ப்பு குஷ்புவுக்கு சாதகமாக வந்த அடுத்த நாளே அவர் அதிரடியாக திமுகவில் வந்து இணைந்து கொண்டார். அப்போது தலைமை நீதிபதியாக இருந்தவர் தற்போது சொத்துக் குவிப்பு உள்ளிட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளவரான கே.ஜி.பாலகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment