தெலுங்கில் சிரஞ்சீவி தொடங்கவிருக்கும் புதிய 24 மணி நேர செய்திச் சேனலுக்கு அனுமதி வழங்கிவிட்டது மத்திய அரசு என செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் காங்கிரஸில் இணைந்துள்ள பிரஜா ராஜ்யம் தலைவர் சிரஞ்சீவி தெலுங்கில் 24 மணி நேர செய்தி சேனலை தொடங்குகிறார்.
இந்த சேனலுக்கு ‘பவர் நியூஸ்’ என்று பெயரிட்டுள்ளார். சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22-ல் தன் ஒளிபரப்பைத் தொடங்குகிறது பவர் நியூஸ்.
இந்த தொலைக்காட்சிக்கான அனுமதியை மத்திய அரசு சமீபத்தில் சிரஞ்சீவியின் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
“நடுநிலையான செய்தி சேனல் ஒன்றை தொடங்க வேண்டும் என்பது என் லட்சியங்களில் ஒன்று. அது கிட்டத்தட்ட கைகூடி வந்துவிட்டது. நல்ல செய்தி சேனலுக்கு உதாரணமாக பவர் நியூஸ் திகழும்’ என ஒரு சமீபத்தில் சினிமா விழாவில் சிரஞ்சீவி பேசியது குறிப்பிடத்தக்கது.
Post a Comment