நடிக்க வந்தாச்சுன்னா... சாயா 'பலே' பதில்!

|


நடிப்பதற்கென்று வந்து விட்டால் சின்னத்திரை, பெரிய திரை என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. நமக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளதா என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் 'மன்மத ராணி' சாயா சிங்.

திருடா திருடி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை திருட வந்தவர் சாயா சிங். மன்மத ராசா பாட்டுக்கு இவர் போட்ட ஆட்டம் இன்னும் ரசிகர்களின் மன மேடையிலிருந்து அகலவில்லை. இப்படிப்பட்ட சாயா சிங்குக்கு தொடர்ந்து தமிழில் நல்ல வாய்ப்புகள் வரவில்லை. குத்துப் பாட்டுக்கும் கூட ஆடிப் பார்த்து விட்டார் சாயா சிங்.

இந்த நிலையில் இப்போது சின்னத் திரைக்கு வந்து விட்டார் சாயா. நாகம்மா என்ற டிவி சீரியலில் சாயா சிங் நடித்து வருகிறார். அதுவும் டபுள் ஆக்ட் வேறு. இதுகுறித்து அவரிடம் கேட்டால், நடிக்க வந்து விட்டால், நடிப்பதற்கான ஸ்கோப்பை மட்டுமே நான் பார்ப்பேன். சின்னத் திரை, பெரிய திரை என்ற வித்தியாசம் எல்லாம் எனக்குக் கிடையாது.

மற்றபடி, சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் நான் டிவிக்கு வரவில்லை. இப்போதும் கூட எனக்கு சினிமா வாய்ப்புகள் வரத்தான் செய்கின்றன. ஆனால் எனக்குப் பிடித்த கேரக்டர் கிடைத்தால்தானே நடிக்க முடியும் என்றார் சாயா சிங்.

கீழே விழுந்தாலும் 'சாயா'த பெண் 'சிங்'கம்தான் சாயா!
 

Post a Comment