9-ம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பரிகொடுத்த ஷாருக்!

|


பாலிவுட் பாதுஷா ஷாருக்கான் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கையில் ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பறிகொடுத்தாராம்!.

இன்று பாலிவுட்டில் கிங் ஆக இருக்கும் ஷாருக் கான் துவக்கத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் தான் நடித்தார். கடந்த 1988-ம் ஆண்டு பாவ்ஜி என்ற சீரியலில் நடித்தார். அடுத்ததாக அவர் நடித்த சர்க்கஸ் என்ற தொடர் தான் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதையடுத்து தான் அவர் பெரிய திரைக்கு வந்தார். அதன் பிறகு நடந்தது நமக்கெல்லாம் நன்றாகத் தெரியுமே.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த ஷாருக் கான் ஒரு பள்ளியில் நாடகம் நடத்தச் சென்றார். அப்போது அந்தப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவியைப் பார்த்தும் பிடித்துவிட்டது. முதலில் நட்பாகப் பழகிய ஷாருக்கும் அந்த மாணவியும் பின்னர் காதலிக்கத் துவங்கினர்.

இந்த விஷயம் அந்த மாணவியின் வீட்டுக்குத் தெரிய அவர் பெற்றோர் தையா, தக்கா என்று குதித்தார்கள். பொறுத்துப் பார்த்த ஷாருக் கான் சில வருடங்கள் கழித்து அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது தெரிகிறதா அந்த மாணவி யார் என்று? அவர்தான் ஷாருக்கானின் மனைவி கௌரி தான்.

ஷாருக் ஒரு முஸ்லிம் என்பதால் தான் கௌரியின் பெற்றோர் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஷாருக், கௌரியின் காதல் மதங்களைத் தாண்டி வெற்றி பெற்றது.

தனது காதலையும், அது வெற்றி பெற்ற விதத்தையும் ஷாருக் கானே சொல்லி சிலாகித்துள்ளார்.

 

Post a Comment